Saturday, August 3, 2019

திருவாரூர் தேரில் இருந்து விழுந்த அர்ச்சகர் படுகாயம்

Added : ஆக 03, 2019 02:11

திருவாரூர்:தியாகராஜர் கோவில் ஆடிப்பூர உற்சவ, தேரோட்டத்தின்போது, தேரில் இருந்து தவறி விழுந்த அர்ச்சகர் படுகாயமடைந்தார்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடிப்பூர உற்சவ விழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு, கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, நிலையில் இருந்து புறப்பட்ட தேர், நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து, இரவு, 8:30 மணிக்கு நிலைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரில் ஏறி, அம்பாளை தரிசனம் செய்தனர். 

அப்போது, தேரில் அர்ச்சகர் முரளி, 56, அம்பாளுக்கு தீபாராதனை காட்டினார்.பின், தேரில் இருந்து சுவாமியை இறக்குவதற்கு முன், தீபாராதனை காட்டும்போது, கால் தடுமாறி, தேரிலிருந்து விழுந்தார்.படுகாயம் அடைந்த முரளி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment

Six global universities to launch international campuses in India

Six global universities to launch international campuses in India  TIMES NEWS NETWORK  20.04.2026  TIMES OF INDIA LUCKNOW As India steps up ...