Saturday, August 3, 2019

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம்

Added : ஆக 03, 2019 01:39

சென்னை:லோக்சபா பொதுத் தேர்தலில் பணியாற்றிய, வருவாய் துறை ஊழியர்களுக்கு, மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்களாக, உதவி தேர்தல் அலுவலர்களாக பணிபுரிந்த, மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் தாசில்தார், மண்டல தாசில்தார், தாசில்தார் போன்றோருக்கு, அவர்களின், ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது, 33 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், எது குறைவோ, அந்தத் தொகை வழங்கப்படும்.

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு போன்றவற்றில் இருந்த, கோட்டாட்சியர், தாசில்தார், மாநகராட்சி கமிஷனர், நகராட்சி கமிஷனர் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது, 24 ஆயிரத்து, 500 ரூபாய்; இதில் எது குறைவோ, அது வழங்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு, அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம் அல்லது, 17 ஆயிரத்து, 500 ரூபாய்; எது குறைவோ, அது வழங்கப்படும். கம்ப்யூட்டர் பணியாளர்களுக்கு, 17 ஆயிரத்து, 500 ரூபாய்; தேர்தல் தகவல் ஆப்பரேட்டர்களுக்கு, 7,000 ரூபாய், பிரிவு எழுத்தர்களுக்கு, 5,000 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இத்தொகையை வழங்க, எவ்வளவு நிதி தேவை என்ற விபரத்தை, 10ம் தேதிக்குள் அனுப்பும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, கடிதம் அனுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment

Six global universities to launch international campuses in India

Six global universities to launch international campuses in India  TIMES NEWS NETWORK  20.04.2026  TIMES OF INDIA LUCKNOW As India steps up ...