Saturday, August 3, 2019

பண்டிகை கால முன்பணம் உயர்வு

Added : ஆக 03, 2019 00:50

சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை கால முன்பணம், 5,000 ரூபாயை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

'ஒரு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள், அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில், அக்கறை கொண்டது, ஜெயலலிதா அரசு.அந்த அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது பண்டிகை கால முன் பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 10 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, பண்டிகை முன்பணமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Six global universities to launch international campuses in India

Six global universities to launch international campuses in India  TIMES NEWS NETWORK  20.04.2026  TIMES OF INDIA LUCKNOW As India steps up ...