Saturday, August 3, 2019

ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம்

Added : ஆக 03, 2019 02:07


ஸ்ரீவில்லிபுத்துார்:ஆண்டாள் கோயிலில் நாளை (ஆக.4 ) ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது.

ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதிஉலா நடந்தது. இன்று மதுரை அழகர்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோயில் பரிவட்டங்கள் கொண்டுவரபட்டு ஆண்டாளுக்கு சூட்டப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் நாளை(ஆக.4) நடக்கிறது. அன்றுஅதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. காலை 8:05 மணிக்கு தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடாக மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கோயிலுக்கு வந்துள்ளனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Six global universities to launch international campuses in India

Six global universities to launch international campuses in India  TIMES NEWS NETWORK  20.04.2026  TIMES OF INDIA LUCKNOW As India steps up ...