Saturday, August 3, 2019

மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் கட்டணும்

Added : ஆக 03, 2019 01:24





சென்னை:'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டால், 1 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இடங்கள் பெற்ற மாணவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், இன்றைக்குள் இடத்தை திரும்ப ஒப்படைக்கலாம்.நாளை மற்றும் நாளை மறுநாள், படிப்பை கைவிடுவதென்றால், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும், 6ம் தேதிக்கு மேல், படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

அதேபோல், பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் பெற்றவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், நாளைக்குள் படிப்பை கைவிடலாம்.வரும், 5, 6ம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால், 1 லட்சம் ரூபாய்; 7ம் தேதிக்கு மேல் படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Six global universities to launch international campuses in India

Six global universities to launch international campuses in India  TIMES NEWS NETWORK  20.04.2026  TIMES OF INDIA LUCKNOW As India steps up ...