Monday, November 18, 2019

`மந்திரம்கூட சொல்லமாட்டீங்களா?'- தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கிய சிதம்பரம் தீட்சிதர்!

ஜி.சதாசிவம்எஸ்.தேவராஜன்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி மனைவி லதா(51). இவர் காட்டுமன்னார்கோயில் அடுத்த ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை தனது மகன் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குருணி விநாயகர்கோயிலுக்கு அர்சனை செய்ய வந்துள்ளார்.

போலீசார் விசாரணைஎஸ்.தேவராஜன்

அப்பொழுது கோயிலில் பணியில் இருந்த தீட்சிதர் தர்ஷிணியிடம் பூஜை பொருட்களை கொடுத்துள்ளார், ஆனால் லதா தனது மகன் பெயரை கூறுவதற்குள் தீட்சிதர் உள்ளே சென்று வெறும் தேங்காயை மட்டும் உடைத்து அர்சனை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வெளியே வந்த தீட்சிதர் தர்ஷிணியிடம் ராசி, நட்சத்திரம், பெயர் என எதையும் கேட்காமல் எப்படி அர்சனை செய்தீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு தீட்சிதர் ஏன் நீ வந்து உள்ளே செய்யேன் எனக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் லதாஎஸ்.தேவராஜன்

இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த தீட்சிதர், லதாவை தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் லதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததால் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த பக்தர்கள் தீட்சிதரை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் காயமடைந்த லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீட்சிதரை தேடி வருகின்றனர்.

போலீசார் விசாரணைஎஸ்.தேவராஜன்

கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் சிதம்பரதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...