Friday, February 14, 2020

மாணவிக்கு தொல்லைபேராசிரியர் மீது புகார்

Added : பிப் 13, 2020 22:39

திருச்சி: ஆய்வு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பாரதிதாசன் பல்கலை உதவி பேராசிரியரிடம் விசாரணை நடக்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலையின், 'பயோ இன்பர்மேட்டிக்ஸ்' துறையில் உள்ள உதவி பேராசிரியர் ஒருவர், அதே துறையில், பி.எச்டி., படிக்கும் மாணவிக்கு கைடாக இருந்துள்ளார். சில மாதங்களாக, அந்த மாணவிக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.உதவி பேராசிரியரின் தொல்லை அதிகமாகவே, நான்கு நாட்களுக்கு முன், ஆதாரங்களுடன், பல்கலை துணைவேந்தர் மணிசங்கரிடம் மாணவி புகார் அளித்தார். அதிர்ச்சி அடைந்த துணைவேந்தர், அது குறித்து விசாரிக்க, குழு அமைத்தார். குழுவினர், உதவி பேராசிரியர், புகார் அளித்த மாணவி மற்றும் அந்த துறையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணை முடிந்து,

அதன் அறிக்கையை, துணைவேந்தரிடம் ஒப்படைத்துள்ளனர். 'அறிக்கை அடிப்படையில், விரைவில் உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில், உதவி பேராசிரியருக்கு ஆதரவாக, துணைவேந்தரிடம் சிலர் பேசி வருவதாகவும், பி.எச்டி., மாணவி புகாரில் உண்மை இல்லை எனக் கூறி, உதவி பேராசிரியரை காப்பாற்ற முயற்சிகள் நடப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...