Wednesday, February 19, 2020

சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு சிகிச்சை

Added : பிப் 18, 2020 23:24

தஞ்சாவூர் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய மன்னார்குடி இளைஞருக்கு காய்ச்சல் இருந்ததால் 'கொரோனா' வைரஸா என்ற சந்தேகத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.திருவாரூர் மன்னார்குடியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் மன்னார்குடி திரும்பிய அவருக்கு தொண்டை வலி காய்ச்சல் இருந்தது. அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின் கொரோனா பாதிப்பா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் 'கொரோனா' பாதிப்பு ஏதுமில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...