Monday, February 3, 2020

ஓய்வு  பெற்றவரிடம் ரூ.1.50 கோடி மோசடி

Added : பிப் 03, 2020 00:09

விருதுநகர்: விருதுநகரில் ஓய்வு அரசு ஊழியரிடம் தனியார் வங்கி ஊழியர்கள், ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்த நீரரு மகன் லிங்கம்72. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர் ராஜபாளையத்தில் உள்ள போர்ட் சிட்டி பெனிபிட் பண்ட் லிமிடெட் எனும் தனியார் வங்கியில் 2013ல் ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்தை டெபாசிட் செய்துள்ளார்.

2019ல் தனது வங்கி பணத்தின் இருப்பு குறித்து தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அவரது வங்கி கணக்கில் ரூ.112 மட்டும் இருந்ததாக கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த லிங்கம் மேலாளர் சீனிவாசனிடம் சென்று கேட்ட போது சரிவர பதில் கூறவில்லை. அவர் வங்கியின் தலைமை அலுவலகத்தில் சென்று கேட்ட போது அங்குள்ள அதிகாரிகள் நவம்பர் மாதத்திற்குள் பணம் தருவதாக கூறினர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் விருதுநகர் மாவட்ட குற்ற பிரிவு போலீசில புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வங்கி மேலாளர் சீனிவாசன் , அவரது மகன் சுதர்சன் மற்றும் தலைமை அலுவலக ஊழியர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...