Friday, February 14, 2020

எம்.ஜி.ஆரிடம் ஒரே முறை தான் பேசினேன்'

Added : பிப் 13, 2020 22:52

சென்னை: ''முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம், நான் ஒரே முறை தான் பேசினேன்,'' என, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய கே.மகாலிங்கம் எழுதிய, 'சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்' என்ற நுாலை, சென்னையில் வெளியிட்டு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:அ.தி.மு.க.,வின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரிடம், 15 ஆண்டுகள் உதவியாளராக, கே.மகாலிங்கம் பணியாற்றியுள்ளார். ஆனால், 1982ல் நடந்த இடைத்தேர்தலில், பெரியகுளம் தொகுதி பிரசாரத்துக்காக எம்.ஜி.ஆர் வந்தார். அப்போது, கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. எங்கள் ஊரில் நிற்காமல், அவர் சென்று விட்டார். உடனே, நான் டூவீலரில் விரட்டிச் சென்று, எம்.ஜி.ஆரின் காருக்கு முன் நிறுத்தினேன். என்னை சூழ்ந்த பாதுாகாப்பு அதிகாரிகள், என் முகவரி கேட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்கி வேறு காருக்கு மாறிய எம்.ஜி.ஆர்., என்னை பற்றி விசாரித்தார்.'நான் பெரியகுளம் தொகுதியின், 18வது வார்டு செயலர்' என்றேன். உடனே அவர். 'போய் தேர்தல் வேலையை பார்க்காமல், இங்கே எனக்குப் பின்னால் ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறாய்; போய் வேலையைப் பார்' என்றார். அந்த ஒரு முறை தான், அவருடன் பேசும் பாக்கியம் கிடைத்தது.

இங்கு, எம்.ஜி.ஆருடன் பழகியோர், அந்த அனுபவங்களை பகிர்ந்தனர். அது, எனக்கு புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தது. இது, கட்சிக்கும், ஆட்சிக்கும் உதவும். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், அ.தி.மு.க., அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே, பொன்னையன், முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., நடராஜ், தமிழக அரசின் முன்னாள் துணைச் செயலர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...