Saturday, June 19, 2021

கிரிமினல் நடவடிக்கைக்கு ஆளாவோர் ஓய்வூதியம்: மத்திய அரசு புது உத்தரவு


கிரிமினல் நடவடிக்கைக்கு ஆளாவோர் ஓய்வூதியம்: மத்திய அரசு புது உத்தரவு

Added : ஜூன் 19, 2021 02:01

குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி கொலை குற்றத்துக்காக, தண்டனை பெறும் பட்சத்தில், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில், அரசுப் பணியில் இருக்கும் கணவன் அல்லது மனைவி யாரேனும் இறந்தால், அவரதுஓய்வூதியம் இருவரில் ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கம்.கொலை குற்றம்சில சமயங்களில், சொத்து அபகரிப்பு, கணவரது அல்லது மனைவியின் அரசு வேலையை பெறுதல் போன்ற தவறான நோக்கத்தில், கணவன், மனைவி என இருவரில் ஒருவர், மற்றொருவரை கொலை செய்வதும் அல்லது கொலைக்கு உடந்தையாக இருக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இவ்வாறு, கொலை குற்றத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டவருக்கும், வழக்கு விசாரணை நடக்கும் சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும், முன்பு ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப் பட்டது.இதனால், இச்சம்பவத்தில் தொடர்பு இல்லாத இறந்தவரின் வயதான பெற்றோர், வாரிசுகள் என குடும்ப உறுப்பினர்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய தாரர்கள் நலத்துறை, அனைத்து அமைச்சகம் மற்றும் அரசு துறைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:கொலை குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்யும் பட்சத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியத்தை அவருக்கு வழங்க வேண்டும்.

ஒருவேளை தண்டனை விதிக்கப்பட்டதால், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கலாம்.அரசு பணியாளர்வாரிசுகள், 'மைனர்' ஆக இருந்தால் காப்பாளரை நியமித்து ஓய்வூதியம் பெற்று, குழந்தைகளுக்கு வழங்கலாம். ஆனால், காப்பாளர் இக்கொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கக் கூடாது.அரசு பணியாளர் இறந்த தேதியில் இருந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய நிலுவையை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.கு

ற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் விடுதலை செய்யும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்தி, விடுதலை ஆனவருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...