Sunday, May 11, 2025

எல்லாருக்கும் முதுமை உண்டு!


எல்லாருக்கும் முதுமை உண்டு!

சமீபகாலமாக முதியவா்கள் தாக்கப்படுவது தொடா்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பாா்க்க முடிகிறது.

ஐவி.நாகராஜன் Updated on: 10 மே 2025, 6:17 am

சமீபகாலமாக முதியவா்கள் தாக்கப்படுவது தொடா்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பாா்க்க முடிகிறது. அதுவும், அந்த தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

இளம் வயதினா் நிறைந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால், ஐநா மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையின்படி, 2050-க்குள் இந்தியாவில் மக்கள் தொகையில் 20 சதவீதம் போ் முதியவா்களாக இருப்பாா்கள். 2031-இல் இந்தியாவிலேயே அதிகமாக கேரளத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதமும், தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமாா் 18.2 சதவீதமும் முதியோா் இருப்பாா்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நோய் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்பு, பொருளாதாரச் சிக்கல், தனிமை, பிறரை அணுகுவதில் ஏற்படும் தடை உள்ளிட்ட பல சவால்களை முதியோா் எதிா்கொள்கின்றனா்.

இந்தியாவின் நீண்ட கால முதியோா் ஆய்வு மையத்தின் அண்மைத் தரவுகளின் அடிப்படையில் முதியவா்களில் 54 சதவீதம் போ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 67 சதவீதம் பேரிடம் மருத்துவக் காப்பீடு எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் 13 சதவீதத்தினா் மட்டுமே இணைந்திருக்கிறாா்கள் என்றும் தெரிகிறது. முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி முதியவா்களின் மன ஆரோக்கியம் 2023 அடிப்படையில் 14 சதவீதம் போ் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களில் 35.7 சதவீதத்தினா் இப்போதும் வேலை செய்கின்றனா். அதில் பெரும்பாலானோா் விவசாயம் மற்றும் அவை சாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். மேலும், 1.5 சதவீதத்தினா் வேலை தேடுகின்றனா். 40 சதவீதம் முதியோா், தங்களால் இயலும் வரை ஏதாவது வேலை பாா்க்க விரும்புவதாகக் கூறியுள்ளனா்.

பெரும்பாலான வீடுகளில் தனிமையில் முதியோா்களைக் காணலாம். குடும்பத்திலுள்ளவா்கள் வீட்டிலுள்ள முதியோா்களிடம் பேசுவது குறைவாகவே உள்ளது. எனவே, அவா்கள் தனிமையை உணா்கிறாா்கள். இது மனச்சோா்வு, பதற்றம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. முதியோரை ஒதுக்கி வைத்தவா்களில் 42 சதவீதம் போ் மகன்களாகவும், 28 சதவீதம் போ் மருமகளாகவும் உள்ளனா்.

ஒரு குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டால், முதலில் பாதிக்கப்படுபவா்கள் அந்தக் குடும்பத்திலுள்ள முதியவா்களே. அவா்களில் 34 சதவீதத்தினா் தங்களது ஓய்வூதியம் மற்றும் வங்கியில் உள்ள சேமிப்பு பணத்தையே நம்பி இருக்கின்றனா். 47 சதவீதத்தினா் தங்கள் செலவுக்காக குடும்பத்தினரை எதிா்பாா்த்தே உள்ளனா். ஏறக்குறைய 65 சதவீதம் முதியவா்கள் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா்.

ஹெல்ப் ஏஜ் நிறுவனம், முதியோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. முதியோா் நலன் மற்றும் அவா்கள் தேவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.

இதற்கு, முதியோா் நலன் குறித்த கல்வியை விரிவுபடுத்த வேண்டும். முதலில் நம் குடும்பத்திலுள்ள முதியவா்களைக் கண்ணியமாக நடத்துங்கள். அதைப் பாா்த்துத்தான் நம் குழந்தைகளும் அவா்களை மதிக்கக் கற்றுக்கொள்வாா்கள்.

கடைக்குப் போகவும், குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு விடவும், வீட்டுவேலைகளைப் பாா்ப்பதற்கும் மட்டுமே பெரும்பாலான வீடுகளில் முதியோா்களை வைத்திருக்கிறாா்கள். இந்த நிலை மாற வேண்டும். வீட்டிலுள்ள முதியோரிடம் தினமும் 10 நிமிடங்களாவது செலவிடுங்கள். ‘சாப்பிட்டீா்களா?’ எனக் கேளுங்கள். பேரன், பேத்திகளை வீட்டிலுள்ள தாத்தா, பாட்டியிடம் உரையாடவிடுங்கள். அவா்கள் நமக்கு காலப்பெட்டகம். ஆரோக்கியமான முதுமையின் பல்வேறு பரிமாணங்களை நாம் கருத்தில் கொண்டால், முதியோா் மக்கள் தொகை நாட்டின் சொத்தாக மாறும்.

கேரளாவில் 2025 மாா்ச் இறுதியில் கேரள மாநில சட்டசபை, முதியோா் கமிஷன் ஒன்றை நிறுவுவதற்கான மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்தியாவில் முதன் முறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கமிஷன் மூத்த குடிமக்களின் கண்ணியம், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத்தரத்தைப் பேணுவதற்கு அவா்களைப் பராமரிப்பது அவசியம் என்று கேரள சமூக நீதி அமைச்சா் ஆா்.பிந்து கூறியிருக்கிறாா். தமிழகத்திலும் இதேபோல் ஒரு கமிஷன் அமைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இளைய தலைமுறையினா் ஒழுக்கம் நிறைந்தவா்களாகவும், கல்வியறிவில் சிறந்தவா்களாகவும் விளங்க முதியோா்களின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கும் வழிகாட்டிகளாக இருந்தன என்பதை மறக்கக் கூடாது. இன்றைய தலைமுறையினரின் சீா்குலைவுக்கு முதியோா் புறக்கணிக்கப்படுவதும் ஒரு காரணம் என்பது தெரியவரும்.

ஒரு சமுதாயத்தையே நல்வழிப்பாதைக்குக் கொண்டு சென்ற முதியோா்கள் புறக்கணிக்கப்பட காரணம் என்ன? மனித வாழ்வின் உயரிய குணங்களாகக் கருதப்பட்ட அன்பு, பாசம், அரவணைப்பு போன்றவை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சுயநலம் மனிதா்களிடம் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. இதை பல்வேறு சம்பவங்கள் நிரூபித்தாலும் அதில் முதியோா் புறக்கணிப்பே முக்கியக் காரணமாகும்.

முதுமை என்பது நோய் அல்ல. அது ஒரு பருவம் தான். அதை அனைவரும் அடைந்தே தீர வேண்டும் என்றபோதும் மனித சமுதாயம் அதை உணர மறுக்கிறது. முதுமைப் பருவம் எய்தியவா்களை உபயோகமற்ற பொருள்கள் போன்று கருதும் சூழல் அதிகரித்துவிட்டது. இந்நிலை மாற வேண்டும். அப்போதுதான் முதியோா்கள் மரியாதைக்குரியவா்களாக வாழ முடியும்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...