Wednesday, April 19, 2017



தினகரன் மீது எப்.ஐ.ஆர்., - 10 அம்சங்கள்

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று தினகரன் சிக்கியது எப்படி என்பது குறித்து, டில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆரில் விரிவாக கூறப்பட்டுள்ளது.




இது தொடர்பாக டில்லி குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ெஷகாவாத் பதிவு செய்துள்ள எப்.ஐஆர்., ரில் கூறப்பட்டுள்ள முக்கிய, 10 அம்சங்கள் வருமாறு:

1.புதுடில்லி, சாணக்கியாபுரியில் உள்ள என் அலுவலகத்தில் 15.4.17 அன்று இரவு, 11:30 மணிக்கு நான் இருந்த போது, ரகசிய தகவல் வந்தது. பெங்களுரை சேர்ந்த சுகேஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் அவரது கூட்டாளியும், டில்லியில் உள்ள ஹயாத் ரிஜென்சி என்ற ஓட்டலில் 263 என்ற எண் கொண்ட அறையில் தங்கி இருக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் சசிகலா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருபவர் அவர். அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றனர் என தகவல் கிடைத்தது.
2. இரட்லை இலை சின்னம் தொடர்பான

விசாரணை, 17.4.17 அன்று நடக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தில் தனக்கு ஆட்கள் உள்ளனர். சசிகலா அணிக்கு ஆதரவாக உத்தரவு பெற்று தர தன்னால் முடியும் என சுகேஷ் கூறியுள்ளார். இதற்கு, அவருக்கு 50 கோடி ரூபாய் தர பேரம் பேசப்பட்டுள்ளது. சுகேஷ் ஏற்கனவே, பல மோசடி வழக்குகளில் தொடர்பு உடையவர். 

3.சுகேஷ், மெர்சிடெஸ் பென்ஸ் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். அந்த காரின்முன் பக்க மற்றும் பின் பக்க பதிவு எண் பலகையில், பார்மென்ட் உறுப்பினர் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். அவர் தங்கி உள்ள ஓட்டல் அறையில் சோதனை மேற்கொண்டால்,ஏராளமான அளவில் பணம் கிடைக்கும் என ரகசிய தகவல் கிடைத்தது.

4. இந்த ரகசிய தகவல் குறித்து, துணை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த தகவலின் நம்பகதன்மையை உறுதி செய்த பின், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பிறகு, நான் உள்ளிட்ட போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்றோம்.

5. அந்த வழியாக சென்ற சிலரை அழைத்து, விஷயத்தை கூறி, சோதனை நடக்கும் போது சாட்சியாக இருக்கும்படி அழைத்தோம். ஆனால், அவர்கள் தங்களின் அடையாளத்தை கூறாமல் அங்கு இருந்து சென்று விட்டனர்.
6. அதன் பின்னர் நானும், போலீசாரும் ஓட்டல் வரவேற்பு பகுதிக்கு சென்று சுகேஷ் தங்கி இருப்பது, 263வது அறையில் என்பதை உறுதி செய்து கொண்டோம். ஓட்டல் ஊழியர்களை அழைத்து கொண்டு அந்த அறைக்குசென்றோம். அந்த அறையில் இருந்த ஒருவர் கதவை திறந்து எங்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் தான் சுகேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை மடக்கி விசாரிக்க தொடங்கினோம்.
7.தன்னிடம் பணம் ஏதும் இல்லை; சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என அவர் மறுத்து பேசினார். பின்னர் அந்த அறையில் சோதனை

மேற்கொண்ட போது ஒரு பையில், கத்தை கத்தையாக புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு 1.30 கோடி ரூபாய். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து சுகேஷ் சரியாக பதில் அளிக்கவில்லை.
8. எனவே, இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைப்பற்றபட்ட பணம் மற்றும் சுகேஷ் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வந்து விசாரித்த போதும், பணம் குறித்து சுகேஷ் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.
9. அவரிடம் இருந்த கார், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரும், தினகரனும் சேர்ந்து, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையை சட்டவிரோதமாக தீர்க்க, சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
10. சுகேஷ் மீது, சென்னை பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பல மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளன.

இவ்வாறு டில்லி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
பூமிக்குள் புதையும் சாயக்கழிவால் புற்றுநோய் அபாயம் பெருந்துயரத்தில் பெருந்துறை மக்கள்

பதிவு செய்த நாள்19ஏப்
2017
01:06


'பத்து வருஷத்துக்கு முன்னாடி, பொன்னு விளையுற பூமிங்க இது.இன்னைக்கு நிலத்தடி நீர், மண் வளம் இப்படி பலவற்றையும் பலி கொடுத்துட்டு,நிக்குறோம்ங்க. கடைசியா மனித உயிர்களையும் காவு வாங்கிக்கிட்டு இருக்குறது தாங்க,எங்க வேதனையின் உச்சகட்டம்' என்கின்றனர் விவசாயிகள்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, 'சிப்காட்' தொழிற்பேட்டையை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் ஒவ்வொருவர் நிலைமையும், இப்படித்தான் இருக்கிறது. சாயம், தோல் கழிவுகளை நீர்நிலைகளிலும், பூமிக்குள்ளும் கலப்பதால், 'தமிழகத்தில் புற்றுநோயின் தலைநகரமாக' ஈரோடு மாறி வருகிறது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையான, 'சிப்காட்' அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு, 2,500 ஏக்கர். இங்கு, 300க்கும் மேற்பட்ட தோல், சாய, டயர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

உயர் நீதிமன்றம் இதுபோன்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும், சாய, தோல் கழிவுநீரை சுத்திகரித்து, முற்றிலும் நச்சுத்தன்மையற்றதாக மாற்றிய பின்னரே நிலத்தில் விட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு தொழிற்சாலையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததாக தெரியவில்லை.

அப்படியே அமைத்திருந்தாலும், அவை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இதில் ஒரு சில தொழிற்சாலைகள், ஒரு படி மேல் போய் சாய, தோல் கழிவுகளை, 'போர்வெல்'கள் அமைத்து பூமிக்குள் நேரடியாக விடுகின்றன.

விளைவு, சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 15 கி.மீ.,க்கு எந்த ஒரு விவசாயமும் இல்லை. சாய, தோல்கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிப்காட் அருகிலுள்ள ஓடையகாட்டூர் குளத்தில் விட்டதால், 18 ஏக்கர் பரப்புள்ள குளத்தில், 5 அடி உயரத்துக்கு, நச்சுத்தன்மையுடைய திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.

குளத்துக்கு அருகில், 80 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விடுவதாக தொழிற்சாலைகள் தெரிவித்தாலும், உண்மையில் அந்த இடம் மேடான பகுதி என்பதால், கழிவுநீர் அனைத்தும் குளத்துக்கே வந்து விடுகின்றன.சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், போர்வெல் மூலம் பூமிக்குள் விடப்படுவதால் நீர் மாசடைகிறது. இதனால், சிப்காட்டிலிருந்து, 1 கி.மீ., சுற்றளவில் உள்ள விவசாய கிணறுகளில் நீர் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலைஉள்ளது.

சாய, தோல் கழிவுநீரால் சிப்காட்டை சுற்றியுள்ள வரப்பாளையம், வாய்பாடி, கூத்தப்பாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி, ஈஞ்சூர், பாலத்தொழுவு, வரகாட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், பலர் உயிர் இழந்திருப்பதாகவும் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரோட்டை சேர்ந்த தனியார் மருத்துவமனை சார்பில், இங்கு புற்றுநோய் குறித்த ஆய்வு முகாம் நடந்தது. முகாமில், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில், 400 பெண்களிடம் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையில், 14 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர, வயிறு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம்.

பெயர் வெளியிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், 'புற்றுநோய் ஏற்பட உணவு பழக்கவழக்கம், புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகிய ஐந்து காரணங்கள் பொதுவானவை. ஈரோடு மாவட்டத்தில் ஆறாவது காரணியாக தண்ணீரால், புற்றுநோய் ஏற்படுகிறது.

'தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல், குளங்கள், ஆறு, போர்வெல்களில் விடப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடுகிறது. மனிதர்கள் குடிக்கும் நீரில், கரைந்திருக்கும் உப்பின் அளவு, டோட்டல் டிசால்வ்டு சால்ட் - டி.டி.எஸ்., 600 வரைஇருக்கலாம்.

'கடந்த, ஆறு ஆண்டுகளில், ஈரோட்டின் நீர் நிலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது, 15 ஆயிரம் டி.டி.எஸ்., என்றளவில் உள்ளது. தவிர, கால்சியம், காரீயம், மெத்திலின், போரேட், போரோட் சல்பான், ஈத்தேன், என்டோசல்பான் சல்பேட் என, பல வேதிப்பொருட்கள், 30 முதல், 100 மடங்கு அதிகம் உள்ளன. இவை, புற்றுநோய் உட்பட பல கொடிய நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை' என்றார்.

'புற்றுநோய்க்கு தண்ணீர் மட்டும் காரணமல்ல


'ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன்: 'சிப்காட்'டை பொறுத்தவரை, தற்போது நிலைமை சரிசெய்யப்பட்டு வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் முறையில், கண்காணிக்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. போர்வெல் முறையில் சாயக்கழிவுகளை பூமிக்குள் செலுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக மாற்ற, அதற்கான சிறப்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. புற்றுநோய் பாதிப்புக்கு தண்ணீர் மாசு மட்டும் காரணமல்ல. பல்வேறு காரணிகள் உள்ளன. சுத்திகரிக்காமல் சாயக்கழிவுகளை வெளியில் விடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

'கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு'

பெருந்துறை, 'சிப்காட் டெக்ஸ்டைல் புராஸசர்ஸ் அசோசியேஷன்' தலைவர் சந்திரசேகரன்: பல தொழிற்சாலைகள் இணைந்து சுத்திகரிப்பு மையங்களை ஏற்படுத்தி, கழிவுநீரை முறையாக சுத்தப்படுத்திய பின்னரே வெளியில் விடுகிறோம். 14 நிறுவனங்கள் இணைந்து சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தின. அதில், எட்டு நிறுவனங்கள் நஷ்டத்தால் மூடப்பட்டன.

மீதமுள்ள, ஆறு நிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வருகின்றன. மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தொடர் ஆய்வுகளும் நடத்தப்படுகிறது. எங்களது நடவடிக்கைகள் ஆன்லைன் முறையில் ஒவ்வொரு நிமிடமும் பதிவு செய்யப்படுகிறது. ஒரு சிலர் பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர்.

விஜயகுமார், வரப்பாளையம்: ஓடையகாட்டூர் குளத்தில் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளின் சாய, தோல் கழிவுநீர் மட்டுமே தேங்குகிறது. சிப்காட்டில் உள்ள எந்த ஒரு தொழிற்சாலையும் கழிவுநீரை முறையாக சுத்தம் செய்வதில்லை. நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் மாசுபட்டுள்ளது. தண்ணீரில் கரைந்துள்ள உப்பின் அளவை கணக்கிட முயன்றபோது, கருவியே செயலிழந்து போகும் அளவுக்கு பாதிப்பு உள்ளது.

பெரியசாமி, வரப்பாளையம்: சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளால், காற்று, நீர் உள்ளிட்ட அனைத்தும் மாசு அடைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள டயர் நிறுவனம் ஒன்று, இரவில் டயர்களை எரித்து அதிலிருந்து கம்பிகளை பிரித்தெடுக்கிறது. பல நிறுவனங்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.

சுசீலா, வெட்டுக்காட்டுவலசு: தொழிற்சாலைகளின் சாயக்கழிவு நீரால், கிணற்று நீர் சிவப்பு நிறத்தில் நச்சுத்தன்மை அடைந்துள்ளது. இத்தண்ணீரை கால்நடைகள் குடித்ததால், மாடுகள் மலட்டுத் தன்மை அடைந்துள்ளன. இத்தண்ணீரில் சில மணி நேரம் நின்றால், இரவில் துாக்கம் வருவதில்லை; உடல் வலி அதிகளவில் ஏற்படுகிறது.

முத்துகுமாரசாமி, கவுண்டனுார்: கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை இப்பகுதியில்   விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது. சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்துள்ளது. கால்நடைகளுக்கான தீவனம் கூட கிடைப்பதில்லை.

செந்தில்குமார், கூத்தம்பாளையம்: சிப்காட்டில் உள்ள சாயப்பட்டறை கழிவுகளால் இப்பகுதி முழுவதும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம் சாயக்கழிவுநீரை பூமிக்குள் விடுவதால், அது கிணற்று நீரில் கலந்து விடுகிறது. நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பிற தொழில்கள் எதுவும் இல்லை.
பரமக்குடியில் 2 நிமிடம் ரயில்கள் நிற்கும்

பதிவு செய்த நாள்19ஏப்
2017  00:09  

மதுரை: பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ஏப்., 21 முதல் சில ரயில்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வண்டி எண் 06035 எர்ணாகுளம் -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஏப்.,24 முதல் இரவு 2:10 மணிக்கு பரமக்குடியில் நின்று செல்லும். ராமேஸ்வரம் -- எர்ணாகுளம் (06036) ஏப்.,24 முதல் இரவு 11:23க்கு நின்று செல்லும். கோவை - -ராமேஸ்வரம் (06062) வாரந்திர ரயில் ஏப்.,21 முதல் மாலை 4:25 மணிக்கு நின்று செல்லும். ராமேஸ்வரம் - -கோவை (06061) வாரந்திர ரயில் ஏப்.,22 முதல் காலை 9:28 மணிக்கு நின்று செல்லும்.
3 ஆண்டுகளில் 40 பேர் பலி: புற்றுநோய் வேட்டையாடும் கிராமம்

பதிவு செய்த நாள்19ஏப்
2017
00:08




திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் அய்யனார்ஊத்து கிராமத்தில் 3 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு புற்றுநோய்களால் இறந்துள்ளதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நோய் குறித்து சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட ஆய்வு கிடப்பில் உள்ளது.

கயத்தாறு அருகே உள்ளது அய்யனார் ஊத்து. 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் நான்கு ஆண்டுகளாக அதிக அளவில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு ஒருவருக்கு நோய் பாதிப்பு உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பெண்கள். பலருக்கும் ரத்த புற்றுநோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கிராமத்தினர் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி கலெக்டருக்கும், முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மனு அனுப்பினர்.கோவில்பட்டி சுகாதார துணை இயக்குனர் போஸ்கோராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு ஆய்வு செய்தனர். தண்ணீரில் பிரச்னை இருக்கலாம் என நான்கைந்து இடங்களில் குடிநீரில் மாதிரியை சோதனைக்கு எடுத்துச்சென்றனர். சோதனை முடிவு குறித்து அறிவிக்கவோ, மேற்கொண்டு சிகிச்சையளிக்கவோ இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜாவிடம் கேட்டபோது, ''அந்த கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறந்திருக்கின்றனர். இதுகுறித்த மேல்நடவடிக்கையை நெல்லை மருத்துவக்கல்லுாரி புற்றுநோய் மையத்தினரோ, சுகாதாரத்துறை உயர்அதிகாரிகளோதான் செய்ய முடியும்,'' என்றார்.

கிராமத்தில் கோரைப்புல்லில் பாய் தயாரிக்கும் கம்பெனிகள் சில உள்ளன. அங்கிருந்து வெளியேறும் சாயக்கழிவுகளால் இந்த பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. மேலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அந்த வழியாக செல்கிறது. இருப்பினும் அய்யனார் ஊத்து கிராமத்தில் ஆழ்குழாய் நீரைத்தான் குடிநீருக்கு பயன்படுத்துகின்றனர். அந்த நீரில் குழாயில் வரும் தண்ணீரில் புழுக்கள் நெளிந்தபடி வருகிறது.

நான்கு மாதங்களுக்கு முன், மனைவி பாத்துபீவியை புற்றுநோய்க்கு பறிகொடுத்தவர் கான்சா மைதீன், 47. அவர் கூறுகையில், ''நான் வெளிநாட்டில் வேலைபார்த்துவந்தேன். என் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. நெல்லை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சென்னை புற்றுநோய் மையம் என இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தோம். இருப்பினும் மனைவி இறந்துவிட்டார். கான்சா மைதீனின் தம்பி அண்மையில் விபத்தில் இறந்துவிட்டார்.

இதனால் இரு குடும்பங்களிலும் குழந்தைகள் உள்ள சூழலில் தற்போது நிர்க்கதியான நிலை. அய்யனார் ஊத்துக்கு அருகில் மானங்காத்தான், மேலஇலந்தைகுளம் என பல்வேறு கிராமங்கள் உள்ளன.

அங்கெல்லாம் இத்தகைய பாதிப்பு இல்லை. புற்றுநோய் பாதிப்பில் ஒரே வீட்டில் கணவன், மனைவி, தாய், மகள் எனவும் இறந்துள்ளனர். இவர்களில் அனேகம் பேர் சென்னை புற்றுநோய் மையம், திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய புற்றுநோய் மையம் போன்றவற்றிற்கு அலைந்தபடியே உள்ளனர். நோய் பாதித்த பலரும் வீட்டை விட்டே வெளியே வர மறுக்கின்றனர். சிலர் தங்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்பதால் சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் இணைந்து இக்கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தினால் மட்டுமே
இந்த ஒட்டுமொத்த கிராமத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தெரியவரும்.
ரயில்களில் மீண்டும் 'லெட்டர் பாக்ஸ்' : ஒரே நாளில் தபால் பட்டுவாடா

பதிவு செய்த நாள்18ஏப்  2017   23:57

கடிதங்களை அதிவிரைவில் பட்டுவாடா செய்ய, ரயில்களில், 'லெட்டர் பாக்ஸ்' அமைக்கும் திட்டத்தை மீண்டும் தபால் துறை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் தொலைதுார கடிதப் போக்குவரத்து, புத்தகங்கள், ஆவணங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனுப்பும் பதிவு தபால்கள், மணியார்டர்கள், இதர பார்சல்களை, தபால் துறையின் ரயில்வே மெயில் சர்வீஸ் எனும், ஆர்.எம்.எஸ்., பிரிவு, ரயில் போக்குவரத்து வழியாக நடத்தி வருகிறது. இதற்கென பிரத்யேக பெட்டிகளும் ரயில்கள் தோறும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடிதங்கள், போஸ்ட் கார்டுகளை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய ரயில்களில், 'லெட்டர் பாக்ஸ்' பொருத்தும் திட்டத்தை தபால்துறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்மூலம், இதர தபால் பெட்டிகளில் கடிதங்களை போடுவோர், அடுத்த நாள் சென்று சேரும் வரை காத்திருக்க அவசியமில்லை. ரயில்களில் உள்ள லெட்டர் பாக்சில் போட்டாலே, குறிப்பிட்ட முகவரிக்கு அதிவிரைவில் அனுப்பப்பட்டு விடும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் ரயில்களில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில், மேட்டுப்பாளையம் - சென்னை செல்லும், நீலகிரி எக்ஸ்பிரஸ்; எர்ணாகுளம் - நாகூர் செல்லும், டீ கார்டன் எக்ஸ்பிரஸ்; நாகர்கோவில் - பெங்களூரு செல்லும், ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்களில், 'லெட்டர் பாக்ஸ்'கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை கோட்ட தலைமை தபால் அதிகாரி, சுப்ரமணியம் கூறியதாவது:மாலை, 5:30 மணிக்கு மேல், கடிதம் அனுப்ப விரும்புவோருக்கு இந்த, 'லெட்டர் பாக்ஸ்' மிகவும் கைக்கொடுக்கும். அந்தந்த ஜங்ஷன்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் பார்த்து, தபால்களை போட்டால் போதும். நள்ளிரவில் போடப்படும் தபால்கள் கூட, காலையில் பட்டுவாடா செய்யப்படும்.

மேலும் இதில், போஸ்ட் கார்டு, கடிதங்கள், அழைப்பிதழ், வாழ்த்து அட்டைகள் மட்டுமே அனுப்ப இயலும்; இதர பதிவு, விரைவு தபால்கள் அனுப்ப இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.


அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.



அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிமேலும் சசிகலா குடும்பத்தின் பின்னால் சென்றால், அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதை உணரத் துவங்கினர்.அதன் பிறகே, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் வெளியேற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.

'நிபந்தனையை கைவிட மாட்டோம்!'

பெரியகுளத்தில், நேற்று பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்.,- - ஜெ., ஆகியோர், குடும்ப அரசியலை ஒருபோதும் ஏற்றதில்லை.

தன் அண்ணன் அரசியலுக்கு வருவதை கூட, எம்.ஜி.ஆர்., விரும்பவில்லை. 2011ல் சசிகலாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரும், கட்சியி லிருந்து நீக்கப்பட்டனர். நான்கு மாதத்திற்கு பின், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சியில் சேர்ந்தார். ஜெ., இறக்கும் வரை, நீக்கப்பட்ட சசிகுடும்பத்தினரை, கட்சியில் உறுப்பினராக்க வில்லை.
கட்சி பொதுச்செயலரை, தொண்டர்கள், நிர்வாகிகள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, நியமன முறையில், சசிகலா, பொதுச்செயலரானது செல்லாது. அவரால் நியமிக்கபட்ட துணைப் பொதுச்செயலர், தினகரன் நியமனமும் செல்லாது. சசிகலா குடும்பம் இல்லாமல், எம்.ஜி.ஆர்., - ஜெ., கொள்கைக்கு உடன்பட்டு பேச்சு நடத்தினால், இணைவதற்கு தயாராக உள்ளோம்.

கட்சியில் இணைந்தாலும், நாங்கள் முன்பே தெரிவித்தது போல, ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள், மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொண்டு வர வேண்டும்.
தேர்தல் கமிஷனில், குறுக்கு வழியில் சின்னத்தை பெற, புரோக்கர் மூலம் தினகரன் பணம் கொடுத்துள்ளதை, மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

3 மாதங்களுக்கு முன்ஒலித்த முதல் குரல்!

சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு குரல் எழுப்பிய, 90வது நாளில், அவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படுவதாக, அமைச்சர்கள்
அறிவித்துள்ளனர்.

ஜெ., மறைவுக்கு பின், ஜன., 18ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். ஜெ., மறைவில் உள்ள சந்தேகம் தீர, நீதி விசாரணை நடத்த வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தார்.
அவர் எதிர்ப்பு குரல் கொடுத்து, நேற்றுடன், 90 நாட்கள் நிறைவு பெற்றது. நேற்றைய தினம், சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்.

விரைவில் பொதுக்குழு!

அறிவித்தபடி, சசிகலா, தினகரனை, கட்சியில் இருந்து நீக்கவும், புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யவும், அ.தி.மு.க., பொதுக்குழு, விரைவில் கூட்டப்படுகிறது. முதல்வர் பழனிசாமி வீட்டில், நேற்றிரவு நடந்த ஆலோசனையில், இந்த முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.
இரு அணிகள் இணைப்புக்கு பின், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுகலை மருத்துவ படிப்பு விதிகளை பின்பற்ற உத்தரவு

பதிவு செய்த நாள்19ஏப்
2017
00:16


சென்னை: முதுகலை மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிமுறையை பின்பற்றும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு டாக்டராக பணியாற்றும், ராஜேஷ் வில்சன் என்பவர், தாக்கல் செய்த மனு:
முதுகலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், 874 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். மலை பகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருவதால், 30 சதவீத மதிப்பெண்கள் பெற, எனக்கு தகுதி உள்ளது. 'நீட்' மதிப்பெண் மற்றும் 30 சதவீத மதிப்பெண்ணையும் சேர்த்தால், மொத்த மதிப்பெண், 1,500க்கு, 1,136 மதிப்பெண் வர வேண்டும்.
எனவே, அரசு டாக்டர்களுக்கான, மாநில அரசின், 50 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், மாணவர்கள் சேர்க்கைக்கான வரிசை பட்டியலை தயாரிக்கும் போது, 'நீட்' மதிப்பெண்ணுடன், 30 சதவீத மதிப்பெண்ணையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பான, மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றவும், தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு:
முதுகலை மருத்துவம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான விளக்க குறிப்பேடு, மார்ச் 27ல், மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஜனாதிபதி அளிக்கும் ஒப்புதலை பொறுத்து, இது அமையும்.
ஆனால், இதுவரை, ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த
விளக்க குறிப்பேடு, மனுதாரரை கட்டுப்படுத்தாது.
முதுகலை மருத்துவ படிப்புக்கான, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை புறக்கணிக்க, தமிழக அரசு முயல்கிறது. மத்திய அரசின் ஒப்புதலுடன் தான், இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த விதிமுறைகளுக்கு முரணாக, மாநில அரசு, சட்டம் இயற்ற முடியாது. எனவே, பணியில் இருக்கும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களை, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்க்க வேண்டும்.
அதன் படி, முதுகலை மருத்துவ கல்விக்கான விதிமுறைகளை, மாநில மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் தேர்வுக் குழு பின்பற்ற வேண்டும். மனுதாரர் பெற்ற, 30 சதவீத மதிப்பெண்களை, 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் சேர்த்து, வரிசைப் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, April 18, 2017

வருமான வரித்துறை அறிக்கை

தமிழக அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடிச் சோதனை, அரசியல் சுனாமியாகி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.இது தொடர்பான ரகசிய அறிக்கையை, டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர் சென்னை வருமான வரி அதிகாரிகள். 7,000 பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கை, தமிழக அரசியலை ஒரு வழி செய்துவிடும் என்கின்றனர், இதை படித்து பார்த்தஅதிகாரிகள்.'ஆளும் கட்சியின் வீழ்ச்சி, இந்த அறிக்கையிலிருந்து துவங்கி விட்டது' என்கின்றனர், 

அதிகாரிகள். தமிழக அரசியல்வாதிகள் கொள்ளை அடித்த பணம் தொடர்பான முழு விபரங்களும் விலாவாரியாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. சேகர் ரெட்டி கைதான பின், அவருக்கு யார் யாருடன்தொடர்பு இருந்தது, அவருக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் யார் என சில மாதங்களாக சத்தமில்லாமல் விசாரித்து வந்தது, வருமான வரித்துறை.அதன் விளைவு தான் அமைச்சர் வீட்டில் நடந்த சோதனை. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு கலைக்கப்பட்டுவிடும் என செய்திகள் அடிபடுவதைப் பற்றி கேட்ட போது, அதெல்லாம் வதந்தி; தமிழக அரசைக் கலைப்பதைப் பற்றி, டில்லியில் யாரும்நினைக்கவே இல்லையாம்.இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது சட்ட ரீதியாக முடியாத காரியம். ஆனால், இந்த அறிக்கை, விரைவில் மீடியாக்களுக்கு கசிய விடப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, பழனிசாமி அரசு மீது, மக்கள் கடுப்பில்உள்ள நிலையில், இந்த அறிக்கையின் முக்கியவிபரங்கள் வெளியானால் நிலைமை மோசமாகும். அமைச்சர்களுக்கு எதிராக கோர்ட்டை, சிலர் அணுக வாய்ப்புள்ளது. எது எப்படியோ; வருமான வரி சோதனைக்கு பின், தமிழக அரசுக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

ரெய்டின் பின்னணி!

வருமான வரித்துறையின் சோதனையின் பின்னணியில் இருப்பது மத்திய அரசும், பா.ஜ.,வும் என, தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.ஆனால், சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் அனைத்தும்,'அரசியல்வாதிகள் எப்படியெல்லாம், யார் யாரையெல்லாம் ஏமாற்றி பணம் சுருட்டினர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது' என, விஷயம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். 

அதே சமயம் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு, பா.ஜ., தலைமையும்காரணம் என்றும் பேசப்படுகிறது.இதற்கு ஒரு, 'ப்ளாஷ் பேக்' சொல்லப்படுகிறது.- ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அனைத்து அரசியல்வாதிகளும் வந்து, பார்த்துச் சென்றனர். பா.ஜ., தலைவர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் மருத்துவமனைக்கு வந்தனர். ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு போக முயன்றனர்.ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த இருவரையும், டாக்டர்கள் சந்தித்து, 'மேடம் நன்றாக இருக்கிறார்' என்றனர்; சசிகலா, இவர்களை வந்து சந்திக்கவே இல்லையாம். இந்த விவகாரத்தை அமித் ஷா மறக்கவே இல்லை. 'அவரைத்தான் பார்க்க முடியவில்லை; கண்ணாடி வழியாக பார்க்க, அனுமதிக்கலாமே; குறைந்தபட்சம், சசிகலா எங்களை வந்து மரியாதை நிமித்தமாக பார்த்திருக்கலாம்; அதை கூட அந்த பெண்மணி செய்யவில்லை; மரியாதை தெரியாத ஆளாக இருக்கிறாரே' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் இன்று வரை சொல்லி வருகின்றனர்,அமித் ஷாவும், ஜெட்லியும்.

பன்னீருக்கு மோடி ஆலோசனை:

சமீபத்தில், அ.தி.மு.க.,வின் இரண்டு கோஷ்டிகளும் பிரதமரைச் சந்தித்தன. சசி தரப்பிலிருந்து தம்பிதுரையும், பன்னீர் தரப்பிலிருந்து, மைத்ரேயனும், மோடியை டில்லியில் சந்தித்தனர். அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது குறித்து, தம்பிதுரை பேசியதாக கூறப்படுகிறது. பன்னீர் தரப்பிலிருந்து பேசும் போது, அவர்களது கோஷ்டிக்கு மத்தியஅரசு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டது.'தேர்தல் ரத்து பெரியஅடியாயிற்றே' என்ற மோடி, 'பன்னீர், சென்னையிலேயே உட்கார்ந்திருந்தால் எந்த பலனும் கிடைக்காது; ஊர் ஊராக சென்று, மக்களைசந்திக்கச்சொல்லுங்கள்' என, மைத்ரேயனிடம்,'அட்வைஸ்' கொடுத்தாராம் மோடி.தமிழகத்தின் பல இடங்களில் கூட்டம் போடுவது, கிராமங்களில் மக்களைச் சந்திப்பது என அதிரடியாக, பன்னீர் பணியாற்ற வேண்டும்; இதை, நான் கூறியதாக, அவரிடம் சொல்லுங்கள்' என்றாராம். சசிகலா கோஷ்டிக்கு எதிராக மத்திய அரசு இருந்தாலும்; ஜனாதிபதி தேர்தலில், அவர்கள், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பரா என்ற சந்தேகம், பா.ஜ., தலைவர் களுக்கு உள்ளது.இவர்களின் ஆதரவைப் பெற, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மூலம் முயற்சி செய்து வருகிறது, பா.ஜ., மேலிடம்.
இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் ஏன்?

பதிவு செய்த நாள்17ஏப்  2017   23:12

மாணவர் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தாமதமாகி  உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், உயர் கல்வித்துறை கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுவர். அண்ணா பல்கலை குழுவினர், கவுன்சிலிங்கை நடத்துவர். ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 10க்கு மேல், விண்ணப்ப பதிவு துவங்கி, மே மாதம் முடியும். கடந்த ஆண்டு, ஏப்., 15ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது. இந்த ஆண்டு, ஏப்., 18ல் துவங்க, மாணவர் சேர்க்கை கமிட்டி முடிவு செய்திருந்தது. 

ஆனால், கவுன்சிலிங் அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டு உள்ளது. அதன் பின்னணியில், சில தனியார் கல்லுாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல இன்ஜி., கல்லுாரிகள், 'அட்வான்ஸ்' பெற்று, இடங்களை, 'புக்கிங்' செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பல்கலை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவும், கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டால், தனியார் கல்லுாரிகளில் நிர்வாக இடங்கள் ஒதுக்கீடு நின்றுவிடும். முதல் தர கல்லுாரிகளுக்கு, எந்த சிக்கலும் இல்லை.

போதிய உள்கட்டமைப்பும், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு வசதியும் இல்லாத கல்லுாரி களுக்கு, கவுன்சிலிங்கில், 'சீட்' நிரம்புவதே கடினம். எனவே, தற்போதே மாணவர்களிடம் பேசி, புக்கிங் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினர் நடத்தும் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் வசதிக்காக, கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் செய்யப்படுவதாக தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Medical Council of India


Visit to Governor chamber



திருமங்கலம் - நேரு பூங்கா இடையே ஏப். 21-இல் மெட்ரோ ரயில் சேவை?

By ஆர்.ஜி.ஜெகதீஷ்  |   Published on : 18th April 2017 04:56 AM  |     
metro-rail
சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான 7.6 கி.மீ. தூரத்துக்கான சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை வரும் 21- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012-ஆம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.
திருமங்கலம் தொடங்கி நேரு பூங்கா வரையிலும் சுரங்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு மேற்காண்டது.
இந்த இரண்டு நாள் ஆய்வில் திருப்தி ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு ஆணையர் பொது மக்கள் போக்குவரத்துக்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சென்னையின் முதல் சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவையான திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான பயணிகள் சேவை வரும் வெள்ளிக்கிழமை(ஏப்ரல் 21) தொடங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மாநில அரசிடம் தேதி கேட்பு: மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் சான்று பெற்ற பின்பு, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான தேதியை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிப்பிட்டு அனுப்பிய தேதிக்கு மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு மாநில அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலைக் குறைக்க....: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு ரூ 20 ஆயிரம் கோடி செலவில் இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் பாதை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், சின்னமலை முதல் - விமான நிலையம் வரை, ஆலந்தூர் - பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை பணிகள் நிறைவடைந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலேயே சவாலாக இருந்தது நேரு பூங்கா - எழும்பூர் இடையிலான சுரங்கப் பாதை மட்டுமே. இந்தப் பகுதியில் அதிகமான பாறைகள் இருந்ததால் கடினமான சேதங்களை டனல் போரிங் இயந்திரம் சந்தித்தது. கிட்டத்தட்ட 2012-ஆம் ஆண்டில் சுரங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016-ஆம் ஆண்டுதான் முடிவுற்றன.
இந்தியாவிலேயே அதிகம்: இந்தியாவின் பல்வேறு மாநகரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் உயர்நிலை பாலத்தில்தான் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னையில் மட்டும் சுமார் 25 கி.மீ. தூரம் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டன. சாலைக்குக் கீழே சுமார் 20 மீட்டர் ஆழத்தில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டருக்கு கீழே சுரங்கம் தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்தச் சுரங்க ரயில் பாதை அமைகிறது.
மேலும், 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப் பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் தொலைவு வரை சுரங்கம் தோண்டப்பட்டது.

    இவர்களே ஒளிரும் இந்தியாவின் உதாரண புருஷர்கள்!

    By ஹரிணி  |   Published on : 17th April 2017 04:39 PM  |   
    better_india1

    மலை மலையாகக் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்ற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம். இதோ மகாராஷ்டிராவில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருக்கிறது அதற்கான வழி! இங்கே அந்தப் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தண்ணீரை தேக்கி வைத்திருக்கிறார்கள். அதெப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா? பருவ மழைக்காலங்களில் வல்னியில் இருக்கும் 30 குளங்கள் மற்றும் ஏரிகளில் தேக்கப்படும் தண்ணீரானாது, எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து விடலாம் எனும் நிலை தான் இங்கு நீடிக்கிறது. ஏனெனில் கோடை காலத்தில் இந்த கிராமத்தின் வறண்ட மண் வெகு சீக்கிரத்தில் தேக்கப்பட்ட தண்ணீரை உறிஞ்சி விடுகிறது. அதைத் தடுக்க என்ன செய்வது என்று யோசித்த கிராம மக்கள் கண்டறிந்த உபாயம் தான் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்துவது என்பது.
    என்ன குழப்பமாக இருக்கிறது. குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. அதாவது ரேப்பர்கள் மற்றும் பாலீதீன் கவர்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சுத்தப் படுத்தப் பட்டு ஒன்றாக்கி மிகப்பெரிய தார்பாய்கள் போன்ற பெரிய பெரிய ஷீட்டுகளாக தைக்கப்படுகின்றன. இந்த ஜெயண்ட் சைஸ் பாலிதீன் ஷீட்டுகள் இப்போது குளங்களின் அடிப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சப் படுவதை தவிர்க்கும் வண்ணம் மேலே கவர் செய்யப்படுகிறது. அவை காற்றுக்கு அகன்று பறக்காமல் இருக்க 1 அடி நீளத்திற்கு மணல் கொட்டப்பட்டு அந்த ஷீட்டுகளின் பறக்காத தன்மை உறுதி செய்யப்படுகிறது. இப்போது இந்த ஷீட்டுகள் தேக்கப்பட்ட தண்ணீரை நிலம் உறிஞ்சாமல் தடுக்கிறது. டிசம்பருக்கு முன்பே குளங்களும், ஏரிகளும் வறண்டு போவதைத் தடுக்க இதைத் தவிர வேறென்ன தான் செய்வது? இப்போது பிளாஸ்டிக் ஷீட்டுகளின் உதவியால் தேக்கப்பட்ட தண்ணீரால் மே மாதம் வரை கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
    வல்னி கிராம மக்களின் இந்த சீரிய முயற்சியை வீடியோ வடிவில் காண...


    இப்படித்தான் இந்த கிராம மக்கள் தங்களது தண்ணீர் தேவையைச் சமாளிக்கிறார்கள்... இல்லையில்லை சமாளிக்கிறார்கள் என்பதை விட சாதிக்கிறார்கள் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். 
    ஆம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கதையாக குப்பைகளை அகற்றுவதையும், தண்ணீர் சேமிப்பையும் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக கையாண்டு தங்களது பிரச்னையை எளிதாகத் தீர்த்துக் கொண்டுள்ளார்கள் இந்த மக்கள். இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளான கிராம மக்களை எப்படிப் பாராட்டினாளும் தகும். நாம் வேண்டுமானால் அவர்களுக்கு உதாரண புருஷர்கள் என்ற பட்டம் தந்து விடலாம். சரி தானே?! பொருத்தமாக இருக்கும்.
    இந்தக் கிராமம் மகாராஷ்டிராவில் நாக்பூருக்கு அருகில் இருக்கிறது.

    20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்: வேலூர் 110 டிகிரி; சென்னை 108 டிகிரி

    By DIN  |   Published on : 18th April 2017 04:58 AM
    summer
    வெயிலில் இருந்து தப்ப சென்னை அண்ணாசாலையில் ஸ்கூட்டரில் செல்லும் தாயின் துப்பட்டாவுக்குள் அடைக்கலம் புகுந்த பள்ளி மாணவி.
    தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    இதுதொடர்பான எச்சரிக்கையை குறிப்பிட்ட 20 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதவிர தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ஜி.லதாவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைக் குறிப்பிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளார்.
    தமிழகத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடற்காற்று நுழைந்ததால் கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வந்தது.
    மழை பதிவு: அதிக வெப்பத்தின் காரணமாக உருவாகும் இடிமேகங்களால் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடி, திருப்பத்தூர் மூலனூரில் 30 மி.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சேலம் மாவட்டம் ஏற்காடில் 20 மி.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 10 மீ.மீ. மழை பெய்துள்ளது.
    20 மாவட்டங்களில் அனல் காற்று: தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வடதமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் தவிர புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வெளியே வரவேண்டாம்: பகலில் அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். நண்பகலில் தேவையற்ற பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம். மேலும் பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளன.
    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது: மேற்கு திசையில் ஆந்திரத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்துக்குள் நுழைவதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். வடதமிழகத்தைச் சேர்ந்த 20 மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் அதிகரிக்கும் நிலை அனல் காற்று என்று குறிப்பிடப்படுகிறது.
    வறண்ட காற்று வீசுவதால், கடற்காற்று நிலத்துக்குள் நுழைவதிலும் தாமதம் ஏற்படும். இதனால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்டவற்றிலும் வெயில் அதிகரிக்கும். ஆனால் வடதமிழகத்தைக் காட்டிலும் தென்தமிழகத்தில் 2 அல்லது 3 டிகிரி வெப்பம் குறைவாகக் காணப்படும். கோடை மழைக்கு எங்கும் வாய்ப்பு இல்லை என்றார்.
    13 இடங்களில் சதம்: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி பதிவானது. புதுச்சேரியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    திங்கள்கிழமை பதிவான வெயில் (ஃபாரன்ஹீட்டில்)
    வேலூர் 110
    சென்னை 108
    மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி 107
    பரங்கிப்பேட்டை,
    திருப்பத்தூர் 106
    தருமபுரி,கரூர் பரமத்தி,
    சேலம் 105
    புதுச்சேரி, நாகப்பட்டினம் 103
    கடலூர் 102
    தொண்டி 100
    காரைக்கால், கோவை 99

    18 மாவட்டங்களில்அனல் காற்று வீசும் !!

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் புதனன்று அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும்
    கூறியுள்ளது. மேலும், பகலில் தேவையின்றி வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனிடை‌யே, 18 மாவட்டங்களிலும் பள்ளிகளில் திறந்தவெளியில் பாடம் நடத்த கூடாது என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா... இனி கவலை வேண்டாம்!!!
    வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஆம்...ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பி தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.

    உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வாட்ஸ் அப்  வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது மெசேஜ் அன் சென்ட் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.அண்மையில் ஜிப், போட்டோ, வீடியோ போன்றவற்றை ஸ்டேட்டஸில் வைக்கும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப்.

     தற்போது மெசேஜ் அனுப்புவதிலும், எழுத்துக்களின் அளவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அன் சென்ட் மற்றும் எடிட்செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெசேஜ்அனுப்பும் பொது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகபடுத்தபடவுள்ளது.

    தற்போது சோதனையில் உள்ள இந்தபதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்.

    Monday, April 17, 2017

    IRCTC TOUR


    Now, get Tatkal tickets in 50 seconds

    By B Anbuselvan | Express News Service | Published: 17th April 2017 04:11 AM |

    Indian Railways . | EPS

    VELLORE: Tatkal in Hindi stands for immediate. If you can do an operation just in 50 seconds, it would qualify for immediate, wouldn’t it? That’s how fast you can book a Tatkal railway ticket if you have the Rail Connect app on your phone, the Paytm eWallet and high-speed Internet. The facility has been available since April 9. The flip side is this: if you are not tech-savvy, chances are you may not get a Tatkal ticket. Since the volume of Tatkal tickets available is low, early birds could eat up all the berths once they get to know the app-way is this simple.

    Though Rail Connect was launched on January 7, it was 10 days later that the first ticket was booked, that too for AC class. The railways has now quietly enabled commuters to use the app to book tickets for sleeper class as well. Previously, online Tatkal booking timings were between 10 am and 10.30 am for AC and from 11 am to 11.30 am for sleeper class. The restriction was meant to facilitate passengers who would prefer to do it the old-fashioned way, standing before booking counters for tickets. That cap is now off, so you can book your Tatkal ticket any time online.
    “Booking Tatkal tickets is now possible in 50 seconds as you don’t have to fill any payment details if your app is pre-loaded with funds,” said IRCTC and Southern Railway sources.

    Even as commuters can now book Tatkal railway tickets if they have the Rail Connect app on their smartphones, technology continues to draw flak. A railways passengers’ association alleged that the move would put the elderly and patients in hardship. It demanded a cap on tickets issued through the app.

    “At a time when Tatkal tickets are in high demand and getting sold in a few minutes across India, the move is unwarranted and will only benefit smartphone and Internet companies,” says P Edward Jeni, secretary of the Kanyakumari district railway users’ association.
    The app is also meant to help the railways cut cost. A railway source on condition of anonymity told Express that the staff at the booking counters would be scaled down over the next five years.

    பட்டச் சான்றிதழ்களில் தந்தையின் பெயரை கட்டாயமாக்க வேண்டாம்: மேனகா காந்தி

    By DIN  |   Published on : 16th April 2017 11:30 PM  |   
    Menakagandhi
    Ads by Kiosked
    மாணவர்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு மத்திய மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
    இதுதொடர்பாக, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
    கணவரைப் பிரிந்து வாழும் தாய்மார்கள் சிலர் என்னை அணுகி, தங்களது பிள்ளைகளின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களை, தந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக முறையிட்டனர்.
    மணமுறிவு ஏற்படுவதும், கணவன் - மனைவி பிரிந்து வாழ்வதும் சகஜமாகிவிட்ட இக்காலத்தில், அதற்கேற்ப விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
    கணவரைப் பிரிந்து வாழும் தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்று அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    இதற்கு முன்பு, கணவரைப் பிரிந்து வாழும் பிரியங்கா குப்தா என்பவர், அமைச்சர் மேனகா காந்திக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் கடந்த ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
    அதில், தனது மகளின் கடவுச் சீட்டில் தனது கணவரின் பெயரைக் குறிப்பிடாத வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
    அதையடுத்து, கடவுச் சீட்டுப் பெற விண்ணப்பிக்கும்போது, தாய், தந்தை ஆகிய இருவரின் பெயர் தேவையில்லை; ஒருவர் பெயர் மட்டுமே போதுமானது என்றும், திருமணமாகி கணவரைப் பிரிந்து வசிப்பவர்கள், திருமணச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

    இணையவசதி இல்லாதவர்களுக்காக ‘நீட்’ மாதிரி தேர்வு வினாத்தாள்களை இலவசமாக அனுப்புகிறது ‘லிம்ரா': பெயர், முகவரியை எஸ்எம்எஸ் அனுப்பவேண்டும்.




    இணையவசதி பெற இயலாத மாணவ, மாணவிகளுக்கு நீட் மாடல் தேர்வுக்கான முழுமையான வினாத்தாள்கள் அவர்களது வீட்டுக்கே கூரியர் மூலம் இலவசமாக அனுப்பப்படும் என்று ‘லிம்ரா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஞாயிறுதோறும் ‘நீட்’ மாதிரி வினாத்தாள், சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இயற்பியல் பாட மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டது. அடுத்த வினாத்தாள் எந்தப் பாடத்தில் தரப்படும் என பல மாணவர்கள் தொடர்ந்து ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர்.ஏப்ரல் 16-ம் தேதி (இன்று) வேதியியல் பாட வினாத்தாள், அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) உயிரியல் பாட வினாத்தாள் வெளியிடப்படுகின்றன.

    வினாத்தாளுடன், அந்தப் பாடங்களில் முக்கிய பாடப் பிரிவுகள் குறித்த டிப்ஸும் வழங்கப்படுகின்றன. இந்தப் பாடப் பிரிவுகளில், எந்தப் பகுதியில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதற்கு பதில் எழுதி அதிகபட்ச மதிப்பெண்கள் வாங்குவது குறித்த குறிப்புகளும் தரப்படுகின்றன.இந்த வினாத்தாள்கள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைநடத்துவதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. ‘லிம்ரா’ நிறுவனத்தின் இணையதளத்தில் (www.neetlive.in) 15-க்கும் மேற்பட்ட முழுமையான வினாத்தாள்கள் தரப்பட்டுள்ளன.

    இணையவசதி பெற இயலாத மாணவ, மாணவிகளுக்கு நீட் மாடல் தேர்வுக்கான முழுமையான வினாத்தாள்களை அவர்களது வீட்டுக்கே கூரியர் மூலம் எந்தவிதக் கட்டணமும் இன்றி ‘லிம்ரா’ நிறுவனம் அனுப்புகிறது. இதற்கு மாணவர்கள் தங்கள் பெயர், தெளிவான முகவரியை பின்கோடு எண்ணுடன் தங்களது செல்போனில் டைப் செய்து 9952922333/ 9444614353 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பும் அனைவருக்கும் மாடல் தேர்வுவினாத்தாள்கள் அனுப்பப் படும் என்று ‘லிம்ரா' நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஏர்டெல் அதிரடி: ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா அறிவிப்பு !!

    ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகையை தொடர்ந்து ஏர்டெல் புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.244க்கு 70 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவின் டண் டணா டண் சலுகைக்கு போட்டியளிக்கும் விதமாக பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும், இதற்கான
    அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதி செய்யும் வகையில் ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

    ஏர்டெல் புதிய அறிவிப்புகளின் படி மூன்று சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.244, ரூ.399 மற்றும் ரூ.345 விலையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    புதிய ஏர்டெல் சலுகைகளின் கீழ் ரூ.244 விலையில் தினமும் 1 ஜிபி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஏர்டெல் சிம் வைத்திருப்போருக்கு மட்டும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் ஏர்டெல் - ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.

    வாரம் முழுக்க 1200 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும் நிலையில், இதற்கு பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 0.10 என்ற கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் ரூ.399 திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போன்று தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனினும் விலை அதிகம் என்பதால் முந்தைய திட்டத்தில் வழங்கப்படுவதை விட வாய்ஸ் கால் நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்கு 3000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.244 திட்டத்தை போன்று ஏர்டெல் - ஏர்டெல் எண்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைுப்புகள் தினமும் 300 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இறுதியில் ரூ.345 திட்டத்தில் முந்தைய திட்டங்களை விட கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவும் மற்ற சலுகைகள் ரூ.399-இல் வழங்கப்படுவதை போன்றே வழங்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் ஆப் கொண்டு லாக்-இன் செய்து ஏர்டெல் தளத்தில் ரூ.244 மற்றும் ரூ.399 திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    Helmet sale goes up in city

    Objective is to bring down number of fatalities in road accidents, say police

    Following the recent action of Madurai City police to intensify checks on motorists for violation of the rule mandating wearing of helmets, roadside helmet shops have sprouted in many parts of the city, indicating a considerable increase in the sale of the head gear.
    Though the rule for compulsory wearing of helmets was enforced on July 1, 2015, following an order by the Madras High Court, the city police had decided to intensify the enforcement since April 1 as many were found to be flouring the rule.
    The police had cited that almost half the fatalities in road accidents in the city in recent times were of those who did not wear a helmet. The objective was not to penalise motorcyclists but to ensure their safety and bring down the number of fatalities in road accidents.
    Consequently, as the checks intensified, shops set up along the road near Madurai Corporation building, Mattuthavani bus stand, North Veli Street, Race Course Road, New Natham Road and other places are witnessing brisk sales. Though more people have begun to comply with the rule, a police official, however, said some people had been opting for cheap helmets that did not comply with safety regulations. Buyers of helmets sold on the roadside must verify whether they had genuine ISI certification, he said.

    வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

    DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...