Tuesday, April 18, 2017

18 மாவட்டங்களில்அனல் காற்று வீசும் !!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் புதனன்று அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும்
கூறியுள்ளது. மேலும், பகலில் தேவையின்றி வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனிடை‌யே, 18 மாவட்டங்களிலும் பள்ளிகளில் திறந்தவெளியில் பாடம் நடத்த கூடாது என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...