Tuesday, May 16, 2017

WannaCry fails to paralyse India


May 16 2017 : The Times of India (Chennai)

`WannaCry' fails to paralyse India

TIMES NEWS NETWORK

Banks, Firms On High Alert; Business As Usual, ATMs Unaffected
Barring sporadic inci dents in a few states, most institutions and industries across the country continue to remain insulated from the effect of the WannaCry ransomware cyberattack that has affected computers in approximately 100 countries worldwide. Banks, government departments and corporate houses have issued messages of caution and reinforced their online security. However, business was unaffected as markets and offices opened on Monday after a weekend during which ripple effects of the malware spread across the globe.
For now, RBI has asked banks to operationalise their ATM networks only after software updates are installed.

The social network was abuzz with talk that ATMs in many places were not functional. However, bankers said this was likely because the machines had run out of cash. “In any case, since demonetisation, the flow of cash at ATMs is not what it used to be,“ said businessman Ashit Desai in Mumbai.

Corporate houses urged employees to back up their data and refrain from opening unfamiliar file attachments. “We are also urging all Windows users to install software upgrades and firewalls,“ said the I-T head of a media group.

FMCG companies Marico and Godrej Industries issued advisories to employees, asking them to guard against the malware. A Mar ico spokesperson said, “While we have not been impacted, we have proactively issued an advisory to employees and distributors.“

The broking and mutual fund industries remained insulated from any loss from the malware attack, said top officials from the two industries.

“All exchange operations went on normally . There were no reports of any specific case of attack from the brokerage industry . Trading volumes were also normal,“ said Ashishkumar Chau han, MD & CEO, BSE.

Yet, the problem may be more complex--and prolonged--than originally believed. US government officials as well as experts warned on Sunday that the effects of the malicious software could linger because “this code was cobbled together from many places and sources“. There are fears its new variant could affect computers around the globe as days wear on. Reports of new cases surfaced from Japan, South Korea and Taiwan over the weekend.

Among cities in which sporadic attacks were reported are Ahmedabad, Vadodara, Chennai and Kolkata. Dhananjay Dwivedi, secretary in Gujarat government, said there were 120 incidents across Gujarat.“However, there is no harm on government functioning,“ he added.

In Kerala, computers in panchayat offices in Wayanad and Pathanamthitta districts were affected. “The staff who came to office on Monday found Microsoft Word and MS Office files locked and inaccessible,“ said Thariyode panchayat president Reena Sunil. Police have registered a case under Section 43 of IT Act on the basis of complaint from the panchayat secretary .

Meanwhile, the Oragadam factory of alliance partners Renault & Nissan restarted production on Monday after a disruption on Saturday . A Nissan spokesperson said in a statement, “Like many organisations around the world some Nissan entities were targeted by the ransomware attack. Our teams have been responding accordingly and there was no major impact on our business. Normal production operations are underway at our RNAIPL plant in Chennai“ The attack had impacted production across two shifts or nearly 900 cars on Saturday . With production resuming only around noon on Monday , the loss due to production increased to 1,200 vehicles.

For the full report, log on to http:www.timesofindia.com

Monday, May 15, 2017

பான் அட்டை, ஆதார் எண்ணில் தவறுகளை களைய புதிய வசதி: வருமான வரித்துறை அறிமுகம்




பான் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளில் தவறான விவரங்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக சரிசெய்து கொள்ளும் வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைத்து கொள்ளும் வசதியை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக இரண்டு இணையதள ஹைப்பர்லிங்கை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒன்றில் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டுமென்றாலும் அல் லது புதிய பான் எண்ணுக்கு விண்ணபிக்க வேண்டுமென்றாலும் இந்த இணைப்பை பயன்படுத்த லாம்.

ஆதார் அட்டையில் பெயர் அல்லது மற்ற விவரங்கள் தவறாக இருந்தால் சரிசெய்து கொள்வதற்கு இரண்டாவது இணைப்பை பயன்படுத்தலாம். ஆதார் அட்டையில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஸ்கேன் செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே 1.22 கோடி பேர் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 25 கோடி மக்கள் இந்தியாவில் பான் எண் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 111 கோடி பேர் இந்தியாவில் ஆதார் அட்டை வைத்துள்ளனர். வரித்துறை தகவலின்படி 6 கோடி பேர் தற்போது வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர்.

நிதி மசோதா 2017-18ன் படி வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டது. மேலும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை கடந்த வாரம் வரித்துறை அறிமுகம் செய்தது.

ஆதார் எண், பான் எண் ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் இருக்க வேண்டும். ஒரே மாதிரியான விவரங்கள் உள்ளனவா என்பதை தனிநபர் அடையாள ஆணைய விவரங்களோடு சரிபார்க்கப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பது முடிவடையும். ஒருவேளை விவரங்கள் பொருந்த வில்லையென்றால் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தேர்வு செய்து அதை மொபைல் மூலம் உறுதி செய்துகொள்ள முடியும்.

மெட்ரோ ரயிலில் ஒரு வாரத்திற்கு 40% கட்டண சலுகை! 




சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே எட்டு கி.மீ தொலைவிலான சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையை மே 14-ம் தேதி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த ரயில் சேவையில் காற்றோட்டத்திற்கும், சூரிய ஒளி படுவதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகளைப் பாதுகாக்கப் பல்வேறு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. துவக்கநாள் அன்று இந்த ரயிலில் பொதுமக்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ரயிலில் மே-15-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு 40 சதவீதம் டிக்கெட் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டணச் சலுகை சரியாக ஒரு வாரத்துக்கு அமலில் இருக்கும் எனவும் பொதுமக்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் ஏற்கெனவே புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

அரசின் மெத்தனமும், ஊழியர்கள் போராட்டமும்! - அவதியுறும் மக்கள்! 

VIKATAN

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கடந்த மார்ச் 7, மே 4-ம் தேதிகளில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி மே 15-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். ஆனால், முன்கூட்டியே பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
மே 14-ம் தேதி காலை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. போக்குவரத்து ஊழியர்கள் பணிமனைகளை முடக்கினர். அதன்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்தை தோல்வியில் முடிந்ததையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். '20 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் தொழிலாளர்களின் வைப்புத் தொகையை உடனே கேட்பது நியாமல்ல.போக்குவரத்து ஊழியர்கள் வேண்டுமென்றே நொண்டிச் சாக்கு கூறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே 750 கோடி ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 500 கோடி ரூபாய் தருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைப் புரிந்து கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவே இவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.' என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பயணிகள் அவதி
போக்குவரத்து ஊழியர்கள் முன்கூட்டியே தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்குச் செல்லமுடியாமல் பயணிகள் காத்திருந்தனர். வாரயிறுதி விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் பணிபுரியும் ஊர்களுக்குச் செல்ல பேருந்து இல்லாமல் தவித்தனர். ஆம்னி பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

மாற்று ஏற்பாடுகள்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசுப் பேருந்துகள் புறப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பயணிகளின் சிரமம் கருதி ஆம்னி பேருந்து போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் அவதியுறாமல் தடுக்கும் முன்னேற்பாடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பேருந்துகளை இயக்குவதைத் தடுப்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆம்னி பேருந்துகள் அதிகமான கட்டணம் வசூலித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்று அமைச்சர் தெரிவித்தார். அதன்பிறகு, அண்ணாநகர் பணிமனை உள்ளிட்ட இடங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

மாநகரப் பேருந்துகள் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஓய்வுபெற்ற ஊழியர்களை வைத்துப் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். பஸ் ஸ்டிரைக்கை முன்னிட்டு இன்று (மே 15) முடிந்த அளவு பஸ்களை இயக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டக்டர் பேட்ஜ் மற்றும் லைசென்ஸ் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாளரை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2000 தனியார் பேருந்துகளை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஏன் கொந்தளிக்கிறார்கள் ஊழியர்கள்?
 
இதேபோல, 2014 டிசம்பரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திய தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் இடைக்கால நிவாரணத்தைச் சட்டமன்றத்தில் அறிவித்தது அரசு. அதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்ட வேலைநிறுத்தத்தால் பலரும் பாதிக்கப்பட்டனர். அப்போதும் தற்காலிக உத்திகளை மட்டுமே கையாண்டது அரசு. பிரச்னை இத்தனை சிக்கலாக முற்றியதற்கு அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கே காரணமாக இருந்துள்ளது என்பதுதான் வேதனை. இந்த வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

Dailyhunt

Madras HC variable apart, Anna University convocation work on

By Ashmita Gupta  |  Express News Service  |   Published: 15th May 2017 03:20 AM  |  
 
Anna University Building, Guindy. | (File | EPS)
CHENNAI: Degree certificates are being printed. So are the invitation cards, as Anna University authorities have decided to go ahead with the convocation on May 19, even as the key post of Vice-Chancellor (V-C) is vacant.

However, a section of faculty members is sceptical whether the function will be held as scheduled, with the Madras High Court set to hear a petition against it just two days prior to that.
Speaking to Express on condition of anonymity, a faculty member said the university has started printing the certificates. “After Governor Ch Vidyasagar Rao, who is the Chancellor of the university, gave consent to hold the convocation on May 19, the announcement was made on the university website, inviting students for registration. They have also started preparing drafts of  the invitation,” he said.

According to university officials, degree would be conferred on PhD students, gold medallists and toppers in various courses and branches from all the affiliated colleges. Students have been given time till Monday evening to register for the convocation. “As of now, 700 students have registered. There are 1,500 PhD holders both from university departments and affiliated colleges,” said an official.

However, a section of the faculty pointed out that holding the ceremony depended on the outcome of the court case.
The Anna University Teachers’ Association (AUTA) had filed the petition against holding the convocation before the post of V-C was filled up.

Faculty and students have been raising concerns about not having the V-C’s signature on the degree certificate, which, in academic circles, especially the elite institutions abroad, is considered a serious drawback for the student.

The petition was filed on May 10, following which the court issued notice to the higher education department seeking reply. “In the meanwhile, a public advertisement was issued on May 11, and a 50-member committee was formed to organise the convocation - all without informing the court,” alleged S Chandramohan, secretary, AUTA.


Backing him, another professor requesting anonymity noted how the university had spent Rs 79 lakh for the last convocation. “As the matter is pending before the court, they should not go ahead with preparat
ory work. Otherwise, all that money would go waste if the court stays the convocation,” he added.

Though there were reports that T V Geetha, director of academic courses, who is the senior-most faculty member in the varsity, would be made the officiating V-C,   sources within the faculty said there has not been any move in this regard.

Meanwhile, students from the Revolutionary Students Federation and other organisations have announced protests from Monday to Thursday to stop the convocation in the absence of V-C.
ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு இன்று 'ரிசல்ட்?'

பதிவு செய்த நாள் 14 மே2017 22:45

சென்னை: ஐ.சி.எஸ்.இ., என்ற இந்திய இடைநிலை சான்றிதழ் படிப்பில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2,015 பள்ளிகள், நாடு முழுவதும் செயல்படுகின்றன. இந்த ஆண்டு, 2.50 லட்சம் பேர், பொதுத் தேர்வை எழுதினர். அவர்களில், 74 ஆயிரத்து, 544 பேர், 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவை, www.cisce.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை மாநகர பஸ்களுக்கான தற்காலிக பணி

பதிவு செய்த நாள் 15 மே2017 00:41



சென்னை: பஸ் ஸ்டிரைக்கை முன்னிட்டு இன்று (மே15) முடிந்தளவு பஸ்களை இயக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக டிரைவர் மற்றும் கண்டெக்டர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் மற்றும் கண்டெக்டர் பேட்ஜ் மற்றும் லைசென்ஸ் உள்ளவர்கள் உடனடியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாளரை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று சிறப்பு ரயில்கள்

பதிவு செய்த நாள் 14 மே 2017 22:56

சென்னை: பயணிகளுக்கு உதவ, சிறப்பு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, காலை, 8:10 மணி; செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு, காலை, 9:25 மணி, மதியம், 1:15 மணி; மாலை, 5:15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, காலை, 11:15 மணி, மாலை, 3:08 மணிக்கும்; தாம்பரத்திற்கு இரவு, 7:30 மணிக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை - வேளச்சேரி இடையே வழக்கமான ரயில்களுடன், 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல், மூர் மார்க்கெட் புறநகர் மின்சார ரயில் நிலையம் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்தும், ஆவடி, திருவள்ளூர் எண்ணுார், பொன்னேரிக்கும், 17 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில், 52 ஆயிரத்து, 650 பேர் கூடுதலாக பயணம் செய்யலாம்.
இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு

பதிவு செய்த நாள் 14 மே
2017
22:45

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின. இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை மறுநாள் முதல், மாணவர்கள், தங்கள் பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் பெறலாம். மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது.மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, 12ல் துவங்கியது; இன்று கடைசி நாள். பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.காம்., - பி.எஸ்சி., படிக்க கடும் போட்டி : கலை, அறிவியலுக்கு 6 லட்சம் பேர் முயற்சி

பதிவு செய்த நாள் 14 மே2017 22:43

பிளஸ் 2வில், தேர்வானவர்கள் மத்தியில், இன்ஜி., மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவில், அறிவியல் அல்லாத வணிகவியல், வரலாறு, தொழிற்கல்வி போன்ற பாடப்பிரிவுகளில், 3 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், குறைந்தபட்சம், 20 ஆயிரம் தொழிற்கல்வி மாணவர்கள், இன்ஜி., வேளாண் மற்றும் கால்நடை படிப்பில் சேருவர். அவர்களை தவிர, மற்ற அனைவரும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் தான் சேர வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல், கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற, 5.94 லட்சம் பேரில், இன்ஜி., மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில், அதிகபட்சம், மூன்று லட்சம் மாணவர்களே சேர முடியும்.அதனால், அவர்களில் மீதமுள்ள, மூன்று லட்சம் மாணவர்களையும், கலை, அறிவியல் பிரிவு மாணவர்களையும் சேர்த்து, ஆறு லட்சம் பேர் கலை, அறிவியல், கல்லுாரிகளில் சேர முயற்சிக்கின்றனர்.

ஆனால், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் கல்லுாரிகளில், நான்கு லட்சம் இடங்களே உள்ளன. எனவே, மீதமுள்ள இரண்டு லட்சம் பேரில், ஒரு தரப்பினருக்கு, நிகர்நிலை பல்கலைகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளிலும், தனியார் கல்லுாரிகளிலும், இடங்களை பெற, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த ஆண்டு கணிதம், அறிவியல் இல்லாமல், கலை மற்றும் வணிகவியலில் மட்டுமே, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், 40 ஆயிரம் பேர் வரை, பி.காம்., படிப்புக்கு போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல், இன்ஜி., படிப்புக்கு நிகராக, கலை, அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும், 1,000க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், இன்ஜினியரிங்கில் கடினமாக படிக்க வேண்டும் என்பதால், பெரும்பாலும் கலை, அறிவியல் கல்லுாரிகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மாணவர் மாற்று சான்றிதழ் 'டிஜிட்டல்' மயமாகிறது

பதிவு செய்த நாள் 14 மே2017 22:15

பிளஸ் 2 தேர்வில், 'ரேங்கிங்' முறை ரத்து நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, அனைத்து பள்ளிகளிலும், இனி மாற்று சான்றிதழை, 'டிஜிட்டல்' ஆவணமாக மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அனைத்தும், டிஜிட்டல் மயமாக உள்ளது.
மாணவர்கள், ஒரு பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்றால், அவர்கள் சேரும் பள்ளிக்கே, ஆன்லைனில் மாற்று சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சான்றிதழின் உண்மைத்தன்மையை, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல், மணிக்கணக்கில், சான்றிதழ்களை தேட வேண்டியதும் இல்லை. சான்றிதழ்கள் காணாமல் போகும் பிரச்னைக்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த விபரங்களும், அந்த பள்ளிகளில், டிஜிட்டல் மயமாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

2,000 தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை: விஜய பாஸ்கர்

பதிவு செய்த நாள் 15 மே2017 05:51



சென்னை: ‛2,000 தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்படும். 2000 தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க தமிழக முதல்வர் உதவி அளித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வேகமாக பரவும் கம்ப்யூட்டர் வைரஸ்

புதுடில்லி:உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை தாக்கி செய லிழக்கச் செய்து வரும், வான்னாக்ரை' வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவத் துவங்கி இருப்ப தாக, கம்ப்யூட்டர் அவசரநிலை பாதுகாப்பு குழு எச்சரித்துள்ளது.



அமெரிக்காவின், என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் சர்வர் கம்ப்யூட்டர்களை, மென்பொருள் திருடர்கள், சாதுர்யமாக தாக்கி, அந்த கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப்பட்டி ருந்த, 'மால்வேர்' எனப்படும், மென்பொருள் வைரஸ்களை களவாடி உள்ளனர்.

ஆந்திராவிலும் பாதிப்பு:'வான்னாக்ரை' எனப்


பெயரிடப்பட்டுள்ள இந்த கொடிய வைரஸ், பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உட்பட, 100க்கும் மேற் பட்ட நாடுகளில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர் களில்,பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ஆந்திராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த மான கம்ப்யூட்டர்களும், இந்த வைரஸால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்கு தல் நடப்பதை தடுக்கவும், 'சைபர் கிரைம்' எனப் படும், இணையக் குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க வும், உருவாக்கப்பட்ட, சி.இ.ஆர்.டி.இன் எனப்படும், கம்ப்யூட்டர் அவசரநிலை பாதுகாப்பு குழு, வைரஸ் குறித்த புதிய எச்சரிக்கையை, நேற்று விடுத்தது; அதில்கூறப்பட்டுள்ளதாவது:

'வான்னாக்ரை' எனப் பெயரிடப்பட்டுள்ள, புதிய வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. 'விண்டோஸ்' எனப்படும், இயங்குதளத்தை கொண்டு செயல்படும் கம்ப்யூட்டர்களில், எஸ்.எம்.பி., எனப்படும், சர்வர் கம்ப்யூட்டர் தகவல் தடுப்பு முறையில் உள்ள

குறைபாடுகளை பயன் படுத்தி, இந்த வைரஸ் பரவத் துவங்குகிறது.

தடுப்பு நடவடிக்கை:

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்படும் கம்ப்யூட்டரில், 'பேட்ச் சஸ்' எனப்படும், மென்பொருள் தொகு ப்பை நிறுவலாம். வைரஸ் பாதிப்பு தடுப்பு மென் பொருளை நிறுவும் நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளலாம்.இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
May 15 2017 : The Times of India (Chennai)
Northern districts fare poorly in board exam
Coimbatore


Absenteeism One Of The Main Causes 
 
Despite efforts to ensure 100% pass percentage in government schools in the board exams, northern districts have not been able to improve their figures over the years. In fact, in the Class 12 state board results announced on Friday , three out of the seven northern educational districts did not have even a single government school with 100% pass percentage.
 
Educationists and government school teachers told TOI that teacher shortage, lack of parental guidance and high absenteeism, both among teachers and students, are to be blamed.
The statistics provided by the directorate of government examinations show that three districts had no government schools with 100% pass rate, while the number of schools with 100% pass percentage in the remaining districts was in single digits. Moreover, the overall pass percentage was also poor among these districts.However, the number of students in government schools were high in these districts (six out of seven had more than 10,000 students).

A government school teacher from Vellore said that most students from government schools do not live with their parents. “It is the lack of parental guidance that is one of the problems among students here. Most of them live with their grandparents or relatives,“ said the teacher. “In the absence of their parents, students tend to bunk school or not show interest in education,“ the teacher added.
Absenteeism is high among students in the northern districts. A Tamil teacher from Tiruvannamalai cited an example of a student from his school who did not attend classes for even a single day last year, but was allowed to sit for the exam. “He failed,“ said the teacher. “Until a few years ago, the state govern ment was particular about attendance of at least 75-80%.Now, the officials are not concerned about the students' attendance,“ said the Tamil teacher.

It is not just students who absent themselves from school. “Teachers too bunk.Many government school teachers in rural areas do not come to duty regularly ,“ said general secretary of Tamil Nadu State Platform for Common Schools, P B Prince Gajendra Babu. “The district officials of the school education department should ensure that the teachers attend school regularly , which will help improve the performance of the students,“ he said.

On the other hand, there is shortage of teachers too.According to the state's school education department, the teacher to student ratio at the higher secondary level should be 1:40. “But, in Cuddalore district, government schools have 1:60 teacher-student ratio on average,“ said a government school teacher in Cuddalore. In Tiruvannamalai, a government school has only one Tamil teacher for 800 higher secondary students. “The state government should take steps to fill vacant posts in government schools and also stop deputing them for government work,“ said Gajendra Babu. The school education department too is planning to take steps to improve the performance of government schools. “We will hold a meeting shortly to decide on our plans for the northern districts,“ the principal secretary for the school education department T Udhayachandran had told TOI.
`State govt is putting pressure on employees'


A majority of MTC buses in the city and intercity buses operated by state transport corporations will stay off the road on Monday as transport trade unions have announced plans to go ahead with an indefinite strike after talks with TN government failed on Sunday .
 
Preparations for the strike began soon after word spread that talks had failed. Drivers and conductors of MTC buses drove their vehicles to the depots and employees wrote `strike' on the windshields of the parked buses. Commuters did not feel the impact because it was a holiday.

Only 30% of long distance buses operated from Koyambedu. Similarly , more than 50% of the buses stayed off the road from Sunday afternoon at Trichy , Coimbatore, Madurai and Thanjavur. Labour Progressive Federation all India treasurer K Natarajan said the second round of talks held on Sunday also failed due to the adamant attitude of the government. Natarajan said, “We expect ma jority of the workers to join the strike from tomorrow. A total of 22,000 transport corporation vehicles are operated in the state of which only 10% will be plying.“

However, transport minister M R Vijaya Bhaskar said the AIADMKbacked union will not be part of the strike. Natarajan said the government was putting pressure on them by deploying police in many depots.

“By posting police the government is provoking the employees,“ he said.
CITU state president A Soundararajan said the strike started early in some parts of the state due to preemptive action by the government.“In many places including Namakkal, leaders of the action committee of (transport corporation) trade unions were arrested,“ he said.
The government said it was fully prepared to prevent the strike from affecting the public. The police have mobilised thousands of police personnel across the state to handle emergencies. In Chennai, there will be more than 15,000 police personnel at work and the strength will go up to one lakh across the state.

In a meeting conducted by the Chennai police commissioner Karan Singha on Saturday evening with officials of transport and revenue departments, it was decided to deploy additional police strength at CMBT and Pallavan House. All bus terminals will have the presence of revenue and transport department officials. Recovery vehicles will be kept ready and alternate drivers have been put on work to operate buses that are halted midway .
Omni buses assn to help counter stir
Chennai:
TIMES NEWS NETWORK 
 


The strike may not have much of an impact on intercity travel as TN Omni Bus Owners Association has decided to help the government with spare buses if needed on Monday . The association's president A Afzal said, “We have decided to provide spare buses with the private operators. More than 2,000 buses including the omni buses and the stage carriages will be operated on behalf of the government from Monday .“

About increase of fares due to non-operation of government buses, Afzal said already the association decided and informed the members not to hike the fares due to the strike.
However, there was not much rush at the omni bus terminus in Koyambedu though a majority of government buses did not run.

Omni buses plying from Koyambedu to other districts are set to be in demand on Monday .On Sunday , a small stream of passengers tricked down from the CMBT to take omni buses as the number of state transport corporation buses in operation was slashed by 70% on Sunday evening. K Gopal, employed with one of the private bus operators, said, “The number of passengers has not increased by much tonight (Sunday). We expect the number of passengers taking omni buses to go up on Monday .“



May 15 2017 : The Times of India (Chennai)
 
70% buses off roads day before strike
Chennai:
TIMES NEWS NETWORK 
 


Trade Unions Begin Prior Arrangements To Observe Bandh
Only about 30% of the buses in the city plied on Sunday evening as trade unions belonging to the eight state transport corporations began making prior arrangements to observe the statewide strike on Monday. Police surrounded the Pallavan House (headquarters of Metropolitan Transport Corporation) after talks between transport unions and transport minister M R Vijayabhaskar failed again on Sunday . The strike has been called by trade unions affiliated to opposition political parties including DMK, CPI and CPI(M). Bus drivers and conductors belonging to the ruling AIADMK backed Anna Thozhirsanga Peravai (ATP) were working on Sunday night.An ATP member, however, said, “The demands raised are just and common to all of us.“

The footfalls at the Chennai Mofussil Bus Terminus in Koyambedu reduced drastically on Sunday . The fleet of State Express Transport Corporation (SETC) buses that travel to other districts reduced by 60-70%, as was the case at city bus depots including the busy T Nagar depot. At CMBT, passengers who boarded bu ses were usually those with prebooked tickets.

R Gunasekaran, who boarded a bus to Trichy with his wife at 8pm, said, “I was aware of the strike announced by the transport unions. I booked my ticket online on Saturday evening itself.“ At T Nagar, passengers were left stranded as several buses were cancelled. Shoppers leaving T Nagar on Sunday evening had to find other modes of transport to get back home. R Vidhya, who was stranded at the T Nagar bus terminus with shopping bags, said, “I have been waiting for more than 30 minutes. The bus to Mogappair has been cancelled.“

Another passenger K Arul had to take a connecting bus as the direct bus had been cancelled. Arul said, “I was not aware that the strike would get underway on Sunday itself. Instead of boarding the M7 bus, I had to take the 5B bus to Mylapore to find a connecting bus from there to Thiruvanmiyur.“

தலையங்கம் ரெயில்வேயில் சலுகைகளும், பாஸ்களும்

பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும், ரெயில்வே துறையை முதுகெலும்பாக மாற்றுவது எனது கனவு என்றார்.

மே 15, 03:00 AM

பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை பேசும்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும், ரெயில்வே துறையை முதுகெலும்பாக மாற்றுவது எனது கனவு என்றார். அந்தவகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மக்களின் அன்றாட வாழ்வில் ரெயில்வேயின் பங்கு மிகமுக்கியமானதாகும். இந்திய ரெயில்வேயில் 12,617 ரெயில்கள் தினமும் 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, 7,172 ரெயில் நிலையங்கள் வழியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. பயணிகள் ரெயில்கள் மட்டுமல்லாமல், 7,421 சரக்கு ரெயில்களும் தினமும் 30 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

பயணிகள் ரெயிலை பொறுத்தமட்டில், பயணிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணம், அவர்களுக்கான செலவை ஈடுகட்டும்வகையில் இல்லை. அந்தளவுக்கு ரெயில்வே கட்டணம் குறைவாக இருக்கிறது என்று ஒரு காரணத்தை சொன்னாலும், ரெயில்வேயில் ஏராளமான சலுகைகள், இலவசங்கள் இருக்கின்றன. ரெயில்வேயில் பணியாற்றுபவர்கள், ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்லாமல், இலவச பாஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் பெரிய பட்டியலாகவே இருக்கிறது.
ஒருபுறம் இலவச பாஸ்கள், மறுபுறம் கட்டண சலுகைகள் என்று ரெயில் பயணிகள் பெரும்பாலானோர் இலவச பாஸ்களையும், இலவச கட்டண சலுகைகளையும் வைத்துக்கொண்டுதான் பயணிக்கிறார்கள். தற்போது ரெயில்வேயை பொறுத்தமட்டில், ரெயில்களை இயக்குவதற்கான நஷ்டம் ரூ.34 ஆயிரம் கோடி அளவுக்கு இருப்பதால், கட்டண சலுகைகள் கொடுக்கும் பல்வேறு இனங்களில் தற்போது வழங்கும் சலுகைகளை குறைக்கவும், அதுபோல யாருக்காக கட்டண சலுகைகளை வழங்குகிறார்களோ, அவர்களுக்கான துறையே அந்த சலுகை தொகையை வழங்கவேண்டும் என்று கோரவும் முடிவெடுத்துள்ளது. இந்த முயற்சியின் ஒருபகுதியாக 53 கட்டண சலுகைகளில் இவ்வாறு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்போது வழங்கும் ரூ.1,600 கோடி மதிப்பிலான செலவில் பெரும்பகுதியை குறைக்கத்திட்டமிட்டுள்ளது.

தற்போது ரெயில்வேயில் அனைத்து வகுப்புகளிலும் அடிப்படை கட்டணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 30 சதவீத கட்டணச்சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயணிகள் டிக்கெட் கட்டணம் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் செலவில், 57 காசுகள்தான் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மீதி 43 காசுகள் அரசாங்கம்தான் உதவித்தொகையாக வழங்கவேண்டியதிருக்கிறது. இதுபோல, புறநகர் ரெயில்களில் ஒரு ரூபாய் செலவில், 37 காசுகள்தான் கட்டணம் மூலமாக வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில், மூத்த குடிமக்களுக்கான சலுகையை 60 வயதிலிருந்து 70 வயதாக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ரெயில்வே துறை லாபகரமாக இயங்கவேண்டுமென்றால், இதுபோன்ற திட்டங்கள் வரவேற்புக்குரியவைத்தான். ஆனால், தேவையானவர்களுக்கு குறிப்பாக உடல் ஊனமுற்றோர், போர் விதவைகள் போன்ற சில இனங்களில் கண்டிப்பாக கட்டணச்சலுகைகள் வழங்கவேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. அந்தவகையில், அந்த துறைகள் அந்த செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், பொதுவாக சலுகைகளில் கவனம் காட்டும் ரெயில்வே துறை, இலவச பாஸ்களிலும் தனது கவனத்தை செலுத்தவேண்டும். மொத்தத்தில், இலவச பாஸ்களை அடியோடு ஒழித்துவிடலாம். ரெயில்வே துறையினருக்கும், ஓய்வுபெற்றவர்களுக்கும் சலுகைகள், இலவச பாஸ்கள் வழங்கவேண்டுமென்றால், ஓரளவுக்கு அவர்களுக்கு அதற்குரிய அலவன்சுகளை வழங்கலாம். இவ்வாறு வழங்கும் இலவச பாஸ்கள் மற்றும் சலுகைகளை பெருமளவில் குறைத்தால், நிச்சயமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு ரிசர்வே‌ஷன் இல்லை, காத்திருப்போர் பட்டியலில் இருக்க சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் நிச்சயம் இருக்காது.






























































பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலையில் முடிகிறது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம்

அடுத்து நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
 பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலையில் முடிகிறது
ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜனதா தீவிரம்
 
 
புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்து நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பரிசீலனை தொடங்கியது

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்று வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை பரிசீலிக்கும் பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.

பா.ஜனதாவில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மற்றும் ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி மர்மு போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த மூவரில் ஒருவரை பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியாவுடன் சந்திப்பு

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இடது சாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதேபோல் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இந்த வாரத்தில் சோனியா காந்தி சந்தித்து பேசுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருமுனை போட்டி

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் என இரு முனை போட்டி மட்டுமே நிலவும்.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாராளுமன்ற, டெல்லி மேல்-சபை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள். மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளுக்கு மதிப்பு உண்டு.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் உத்தரபிரதேசத்திலும், ஜார்கண்டிலும் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. இதனால் பா.ஜனதாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் அதிக மதிப்பு கொண்ட ஓட்டுகள் கிடைக்கும்.

ஓட்டு மதிப்பு
தற்போது பாராளுமன்றத்தையும், டெல்லி மேல்-சபையையும் சேர்த்து மொத்தம் 776 எம்.பி.க்களும், அனைத்து மாநில சட்டசபைகளிலும் 4,120 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 422 ஓட்டுகளை ஒரு வேட்பாளர் பெற்று விட்டாலே அவர் ஜனாதிபதி ஆகி விடுவார்.

அந்த அடிப்படையில் பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 410 எம்.பி.க்கள் மற்றும் 1,691 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மூலம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 19 ஓட்டுகள் கிடைக்கும். எனவே கூடுதலாக 17 ஆயிரத்து 422 ஓட்டுகள் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு தேவை.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு

அண்மையில் ஆந்திர மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் தனது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று தெரிவித்தார். இதனால் அவருடைய கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுகளும் கூடுதலாக கிடைக்கும்.

இது தவிர, தமிழ்நாட்டில் 2 அணிகளாக உள்ள அ.தி.மு.க. மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் ஆகியவையும் பா.ஜனதா நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 6 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள ஓட்டுகளை பெறும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம் எதிர்க்கட்சிகள் பொதுவான வேட்பாளரை நிறுத்தினாலும் கூட 3 லட்சத்து 90 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு ராஜினாமா

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் மற்றும் கோவா முதல்-மந்திரி பதவியாக ஏற்றுக்கொண்ட மனோகர் பாரிக்கர் உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டும் மிகவும் மதிப்பு வாய்ந்தது என்பதால் இதுவரை இந்த மூவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்கள்.

மார்ச் மாத மத்தியில் மாநில முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி பதவிகளை ஏற்றுக்கொண்ட இவர்கள் அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

முதல் நாளில் ஏ.சி. ரெயிலில் ‘ஓசி’ பயணத்துக்கு அனுமதி: சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு ‘திகில்’ அனுபவம்

சென்னை மக்களுக்கு முதல் சுரங்க மெட்ரோ ரெயில் பயணம் ‘திகில்’ அனுபவமாக அமைந்தது. குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல் நாளில் இலவசமாக ரெயிலில் பயணம் செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 
 முதல் நாளில் ஏ.சி. ரெயிலில் ‘ஓசி’ பயணத்துக்கு அனுமதி:  சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு ‘திகில்’ அனுபவம்
 
 
சென்னை,

திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் ஓடப்போகிறது என்று அறிவிப்பு வெளியான போதே, பொதுமக்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. சுரங்கப்பாதையில் ரெயில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதால், சுரங்க ரெயில் போக்குவரத்து தொடங்கும் நாளை எதிர்பார்த்து பலர் காத்திருந்தனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. காலை 11 மணிக்கு திருமங்கலத்தில் இருந்து முதல் ரெயில் நேரு பூங்கா நோக்கி புறப்பட்டது. அதில், மெட்ரோ ரெயில் ஊழியர்களின் குடும்பத்தினரே அதிகம் இருந்தனர். தொடர்ந்து வந்த மெட்ரோ ரெயிலில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பயணம் செய்தனர்.

மூன்றாவதாக வந்த மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, திருமங்கலம் ரெயில் நிலையத்திற்கு பலர் குடும்பத்தோடு உற்சாகமாக வந்திருந்தனர். முதல் நாள் பயணம் என்பதால், இலவசமாகவே மெட்ரோ ரெயிலில் பயணிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மெட்ரோ ரெயிலில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

7 நிமிடத்தில் சென்றது


இலவச பயணத்தை கேள்விப்பட்டு, பலர் திருமங்கலம் ரெயில் நிலையத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். அதேபோல், தொடர்ந்துள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கும் பொதுமக்கள் வந்தனர். ஆனால், திருமங்கலத்தில் புறப்பட்ட மெட்ரோ ரெயில் நேராக நேரு பூங்கா ரெயில் நிலையம் சென்று தான் நின்றது. பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ரெயிலும் நேராக கோயம்பேடு சென்று தான் நின்றது. இதனால், வழியில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருமங்கலத்தில் புறப்பட்ட மெட்ரோ ரெயில் 7 நிமிடங்களில் நேரு பூங்காவை சென்றடைந்தது. சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலில் பயணித்த பொதுமக்களுக்கு இது திகில் அனுபவமாக அமைந்தது.

சுரங்கப்பாதை பயண அனுபவம் குறித்து, மெட்ரோ ரெயிலில் பயணித்த பொதுமக்கள் சிலர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கருத்து தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:–

கட்டணம் அதிகம்


காஞ்சீபுரத்தை சேர்ந்த லதா:–

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது இதுதான் முதன் முறை. இதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருக்கிறேன். சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது, நல்லதொரு அனுபவமாக இருந்தது. மகிழ்ச்சியான பயணமாக அமைந்தது. ஆனால் மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம்தான் அதிகமாக உள்ளது. இந்த கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும். அதிகமானவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த காயத்ரி:–

சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் எப்படி செல்கிறது? என்பதை பார்க்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக மிகவும் ஆவலாக இருந்தேன். இதற்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குடும்பத்தோடு வந்தோம். என்னுடைய கணவர் தர்மேந்திரன் பணியாற்றும் கம்பெனியில் தான், இதற்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டது. சுரங்கப்பாதை ரெயில் பயணம் மிகவும் அருமையாக இருந்தது.

மகிழ்ச்சி


திருவள்ளூர் மாவட்டம் கீழானூரை சேர்ந்த தியாகராஜன்:–

முதல் முறையாக குடும்பத்தோடு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தோம். குளுகுளு வசதி, குகைக்குள் செல்வது போன்ற திகிலான உணர்வுடன் மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆனால் மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணத்தை குறைத்தால் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள். ஆகவே கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நிர்மலா:–

மெட்ரோ ரெயிலில் ஏறியதும் தெரியவில்லை, இறங்கியதும் தெரியவில்லை. அவ்வளவு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. இதுபோன்ற ஒரு பயணத்தை நான் மேற்கொண்டது இல்லை. ஊட்டி மலை ரெயில் பயணத்தை நினைவுகூரும் வகையில் சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் பயணம் அமைந்தது.

திகிலாக இருந்தது


கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மற்றொரு பயணி வானதி:–

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் செல்லும் அழகே சிறப்புதான். சுரங்கப்பாதையின் உள்ளே செல்லும்போதும், அதில் இருந்து வெளியே வரும்போதும் பிரமிப்பாக உள்ளது. குடும்பத்தோடு வந்தோம். குழந்தைகளும் மெட்ரோ ரெயில் பயணத்தை குதூகலத்துடன் கொண்டாடினார்கள். மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

அண்ணாநகரை சேர்ந்த பிளஸ்–2 மாணவி பிரதிஷா:–

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் குடும்பத்தோடு சென்றோம். அதன்படி ரெயில் பயணம் மிகவும் திகிலானதாக இருந்தது. முழுவதும் குளுகுளு வசதிகளுடன் மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்கள் அனைத்து வசதிகளுடன் சிறப்பாக உள்ளது.

செல்போன் சிக்னல் இல்லை


அண்ணாநகரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஐஸ்வர்யா:–

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணம் மிகவும் நன்றாக இருந்தது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழகத்துக்கு இந்த சிறப்பான சேவை கிடைத்துள்ளது. செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் ரெயில் நிலையத்தில் உள்ளே இருந்துகொண்டு யாரையும் தொடர்புகொள்ளமுடியவில்லை. செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். பஸ் கட்டணம் போல் மெட்ரோ ரெயில் கட்டணத்தையும் குறைத்தால் அதிகமானோர் பயணம் செய்வார்கள்.

சைதாப்பேட்டையை சேர்ந்த 12 வயது சிறுமி மதுமித்ரா:–

சுரங்கப்பாதை மெட்ரோ ரெயிலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் என்னுடைய குடும்பத்தோடு பயணம் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மெட்ரோ ரெயில் சென்றபோது ஒரே இருட்டாக இருந்தது. ஆனாலும் அதை பார்த்து நான் பயப்படவில்லை. மீண்டும் ஒரு முறை பயணம் செய்யவேண்டும் என்று ஆசையை தூண்டுவதாக உள்ளது. பள்ளிக்கு சென்றதும், என்னுடைய தோழிகளுடன் மெட்ரோ ரெயில் பயண அனுபவம் குறித்து கூறுவேன்.

கொடுங்கையூரை சேர்ந்த ஆர்.எம்.ஹனீபா:–

சுரங்கப்பாதை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தது ஒரு புதிய அனுபவம். மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், சாதாரண மக்களால் பயணம் செய்யமுடியாத சூழல் உள்ளது. ஆகவே மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கு சலுகைகளையும் வழங்கவேண்டும். சென்னையை போன்று நெல்லை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த சேவை தொடங்க வேண்டும்.

அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி; தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13–வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர். 
 
சென்னை,

கோரிக்கைகளை வலியுறுத்தி 15–ந் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர். எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை சென்னை பல்லவன் சாலையில் நேற்று மதியம் நடந்தது. இதில் பங்கேற்ற அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட 47 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இறுதிகட்ட பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்க முதல்–அமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே தொ.மு.ச. தலைமையில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பல்லவன் இல்லத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களிடம் கேள்வி எழுப்பச்சென்ற நிருபர்களிடம், ‘‘ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையுடன் ரூ.500 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்க முடியும் என்றும், அதுவும் 3 மாதத்துக்கு பிறகு தான் சாத்தியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து நாங்கள் தனியாக பேசவேண்டியது உள்ளது. அதற்காகத்தான் செல்கிறோம். வந்து முடிவை சொல்கிறோம்’’ என்றனர்.

தோல்வியில் முடிந்தது
இதற்கிடையில் பல்லவன் சாலை பனிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் அந்த வழியாக சென்ற பஸ்களை நிறுத்தி கண்ணாடிகளின் மீது ‘நாமம்’ வரைந்தனர். 15–ந் தேதி (இன்று) முதல் பஸ்கள் ஓடாது என்று நோட்டீசும் ஒட்டினர். மேலும் பஸ்களின் டிரைவர்களை நோக்கி, ‘பயணிகளை இறக்கி விட்டு, ‘டெப்போ’வில் பஸ்சை நிறுத்துங்கள்’ என்று கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் தொ.மு.ச. அலுவலகத்தில் கூட்டம் முடிந்த பின்னர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலைநிறுத்தம் உறுதி
கோரிக்கைகள் நிறைவேறாமல் வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட முடியாது என்று அமைச்சரிடம் திட்டவட்டமாக கூறினோம். அரசு தரப்பில் இதற்கு எந்த பதிலும் வராததால் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.

அண்ணா தொழிற்சங்க பேரவை தொழிலாளர்களை வைத்து பஸ்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த 3 நாட்கள் தொடர்ந்து பஸ்களை இயக்குவோம் என்று டிரைவர்களிடம் கையெழுத்தும் வாங்கி வருகின்றனர். கையெழுத்து போடவில்லை என்றால் இடமாற்றம் செய்வோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொழிலாளர் விரோத நடவடிக்கை.

திட்டமிட்டபடி போராட்டம்


எப்படியும் பஸ்களை இயக்குவது என்று அரசு முடிவு எடுத்திருக்கிறது. அதனை நாங்கள் முறியடிப்போம். திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும். எந்த பஸ்சும் நாளை (இன்று) முதல் ஓடாது. திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி முதல் போராட்டம் தொடங்கும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பஸ்கள் ஓடாததால் பயணிகள் பாதிப்பு

இதனால் வேலைநிறுத்தம் முன்னதாகவே தொடங்கியது. வேலைநிறுத்த அறிவிப்பு உறுதியானதும் சென்னை நகரில் நேற்று மாலை முதல் பஸ்களின் இயக்கம் பாதியாக குறைந்தது. கோயம்பேடு, பிராட்வே, கிண்டி உள்பட பஸ் நிலையங்களில் உடனடியாக சேவை நிறுத்தப்பட்டது. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் அவற்றில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். வெளியூர் செல்லும் பஸ்களில் நேற்று முன்பதிவு செய்திருந்தோருக்காக மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று முதல் வெளியூர் பஸ்களும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.

இதேபோல் மற்ற ஊர்களிலும் நேற்று மாலை முதலே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடவில்லை.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘வேலை நிறுத்தம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் என்று தான் அறிவித்திருந்தார்கள். ஆனால் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் இப்போதே பஸ்களை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? போராட்டத்தில் ஈடுபடும் பஸ் தொழிலாளர்கள் பயணிகள் கஷ்டத்தை நினைக்கவில்லை. இது ஏற்கவே முடியாத ஒன்று’’ என்றனர்.

ஒரு லட்சம் போலீசார்
பஸ் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று மாலையில் இருந்தே ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்டனர்.

சென்னையில் 18 ஆயிரம் போலீசார் நேற்று மாலையில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் ஊர்க்காவல் படையினரும், ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர்.

சென்னையில் 32 பஸ் பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் நேற்று மாலையிலேயே பஸ்களை நிறுத்திவிட்டு ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இதனால் பஸ் பணிமனைகளிலும், பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

கைது நடவடிக்கை
பஸ் ஊழியர்கள் போராட்டத்தின்போது மறியல் செய்தல், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல், வேலை செய்யும் ஊழியர்களை தடுத்தல் போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்துப்பட்டு உள்ளது என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், பாதுகாப்போடு பஸ்களை இயக்க தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Sunday, May 14, 2017

சுரங்க மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயிலாம்! 




சென்னை: திருமங்கலம்- நேரு பூங்கா இடையே நாளை முதல் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை தொடங்கி கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ஆவது கட்டமாக திருமங்கலத்திலிருந்து நேரு பூங்கா வரை நாளை முதல் சுரங்க ரயில் இயக்கப்படுகிறது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.

 மது அருந்திவிட்டு பயணம்...

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு கேடு விளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
போஸ்டர் ஒட்ட கூடாது

மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம் விதிக்கப்படும்.
தண்டவாளங்களில் நடந்தால்...

மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் பெறப்படும்.
நோ மார்க்கெட்டிங்

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


source: oneindia.com
Dailyhunt

தெய்வமகள் காயத்ரி கொலை.... அண்ணியாருக்கு அஞ்சலி செலுத்திய டுவிட்டர்வாசிகள்


சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் தனது அண்ணியார் காயத்ரியை பிரகாஷ் குத்தி கொலை செய்து மலையில் இருந்து உருட்டி விட்டு விட்டார். காயத்ரி இறந்து போனதாக நம்பி பிரகாஷ், குமார் போய் விட்டனர். ஆனால் காயத்ரி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா என்பது இயக்குநரின் கையில்தான் இருக்கிறது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் சீரியல் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் மிக முக்கியமான காட்சி இன்று ஒளிபரப்பானது. தன்னையும், தன் அண்ணனையும் கொல்ல வந்த கயாத்ரியை கொழுந்தன் பிரகாஷ் குத்தி கொலை செய்து விட்டான்.

காயத்ரி ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். நான் நினைத்தது போலவே சமூக வலைத்தள பக்கங்களில் காயத்ரிக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

என்ன... இரும்புப் பெண்மணி அண்ணியார் கொல்லப்பட்டாரா... ஐயகோ. அவருக்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
அண்ணியாரை கொன்னுட்டீங்களா? கேபிளை கட் பண்ணுங்கப்பா என்கின்றனர்.
source: one india

திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் மொபைல் போன் பயன்படுத்த முடியாது?

சென்னை : சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் ரயில் சேவை நாளை(மே14) துவங்கப்பட உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்யும் போது மொபைல் போன் பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
 
திருமங்கலம் - நேரு பூங்கா இடையேயான ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுரங்க மெட்ரோ ரயிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, செய்முறை மூலம் விளக்கியும் காட்டினர். இருப்பினும் மெட்ரோ ரயில், சுரங்க வழி பாதையில் செல்வதால், ரயில் பயணத்தின்போது மொபைல் போன் சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தற்போது உள்ள மொபைல் போனின் அத்தியாவசிய தேவையை அறிந்து விரைவில் சுரங்க ரயில் நிலையங்களில் மொபைல் போன் சிக்னல் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
Dailyhunt

முதுநிலை மருத்துவம்: நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப்பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 8 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. 756 முதுநிலை மருத்துவ இடங்கள் மற்றும் 19 முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 38 காலியிடங்கள் ஏற்பட்டன. தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் மாநில அரசே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அதற்கான பணிகளையும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு கவனித்து வருகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 8 தனியார் கல்லூரிகளுக்கு 2,680 பேர் கொண்ட பட்டியலும், 8 நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு 4,107 பேர் கொண்ட தகுதிப்பட்டியல் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt

related stories


அன்னையர் தினத்தை சிறப்பித்த 'கூகுள் டூடுல்'

உலக அன்னையர் தினத்தையொட்டி தாய்மையை போற்றும் "கூகுள் டூடுல்" இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் இஞ்சினின் முகப்பு பக்கமான டூடுலில், இன்று உலகம் முழுவதும் உள்ள அன்னையரை போற்றும் வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மாக்களின் தியாகத்தை கார்டூன் வாயிலாக கதையாக வெளிப்படுத்தி உள்ளது. ஒரு கள்ளிச்செடியின் கர்ப்பம் தொடங்கி, குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்ளிட்டவற்றை அழகான எளிமையான அனிமேஷன் மூலம் கதையாக வெளிப்படுத்தி உள்ளது.


Dailyhunt

'ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்

பாரிஸ்: பிரான்சில், வயது குறைந்த இளம் அதிபராக இம்மானுவேல் மக்ரோன், 39, தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, 63 வயது என்பதால், அந்நாட்டு மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர் இம்மானுவேல் மக்ரோன், அபார வெற்றி பெற்றார்.
 
வாழ்த்து இளம் வயதில் அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்ரோன், விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்ரோனின் மனைவி டிராகனஸ், 63. இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் கணவன் மக்ரோனை விட, 24 வயது மூத்தவரான டிராகனஸுக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு திருமணம் நடந்து அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்.பிரான்சில், இளம் வயது அதிபர் தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, அவரை விட, 24 வயது அதிகம் என்ற தகவல், தற்போது பிரான்சில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
 
பிரான்சில் இதுவரை பதவி வகித்த அதிபர்கள் யாருக்கும் இதுபோன்ற நிலை இல்லை.ஒரு சில அதிபர்கள், தங்களை விட, சில வயது அதிகம் உடையவர்களை திருமணம் செய்துள்ளனர். ஆனால், மக்ரோனை போன்று, 24 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த அதிபர்கள் இல்லை.இதுபற்றி, பிரான்ஸ் மட்டு மின்றி பல நாடுகளிலும், ஊடங்களில் செய்திகள் வந்தபடி உள்ளன. பிரான்ஸ் மக்களும், தங்கள் அதிபரை விட, அவரது மனைவிக்கு, அதிக வயது இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Dailyhunt

ரூ.2,000 கோடி முறைகேடு: சிக்கும் சோனியா மகள்

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' தொடர்பான, 2,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும், வருமான வரித்துறையின் வளையத்திற்குள் சிக்குகிறார்.மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்ட, 'நேஷனல் ஹெரால்டு' உள் ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்த, ஏ.ஜே. எல்., எனப்படும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம், நிதி நெருக்கடிக்கு ஆளானது.
 
 இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு,2008ல் காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாயை, வட்டி இல்லா கடனாக அளித்தது. அபகரிப்பு புகார் மேலும்,சோனியா, ராகுல் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம், 2010ல், ஏ.ஜே.எல்., நிறுவ னத்தை விலைக்கு வாங்கியது.இதை தொடர்ந்து, ஏ.ஜே.எல்., நிறுவனத்தின், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, சோனியாவும், ராகுலும் அபகரிக்க முயன்றதாக கூறி, பா.ஜ., மூத்த தலைவ ரான சுப்பிர மணியன் சாமி, டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 'நோட்டீஸ்' யங் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
 
இந்நிலையில், இந்த வழக்கில், சோனியாவின் மகள் பிரியங்காவும் சிக்குகி றார். இந்த விவகாரத்தில், முறைகேடு நடக்க உடந்தையாக இருந்ததாக கூறி, வரு மான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீசில், பிரியங்கா பெயரும் இடம் பெற்றுள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும் சிக்கியுள் ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Dailyhunt

தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள்...ஸ்டிரைக்?

தமிழகத்தில், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக, அமைச்சர், அதிகாரிகளுடன் நடந்த, பல சுற்றுப் பேச்சு தோல்வி யில் முடிந்ததால், மாநிலம் முழுவ தும், அரசு பஸ்கள் இயக்கம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில், 1.43 லட்சம் ஊழியர்கள்உள்ளனர். அவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2016 ஆக., மாதம் முடிந்தது. ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட அரசியல் குழப்பங்களால், 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு தாமதமானது. நீண்ட இழுபறிக்கு பின், மார்ச், 7ல், போக்குவரத்துத் துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி னர். இதுவரை, அமைச்சர் தலைமையில், மூன்று கட்டமாகவும், அதிகாரிகள் தலைமை யில், ஒரு கட்ட பேச்சும் நடத்தப்பட்டன. ஆனால், எந்த முன்னேற்ற மும் இல்லாமல், தோல்வி யில் முடிந்தன.ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகைக்காக, 750 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, அமைச்சர் அறிவித்திருந்தார். அதை ஏற்க, தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில், இறுதி கட்டமாக, சென்னை, தேனாம்பேட்டை யில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவல கத்தில், தொழிலாளர் நல, தனி துணை கமிஷனர், போக்குவரத்து அதிகாரிகள், தொழிற் சங்க நிர்வாகிகள் இடையே, முத்தரப்பு பேச்சு, இரு நாட்களாக நடந்தன; அதிலும், உடன்பாடு ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து, நாளை முதல், காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள னர். இதனால், அரசு பேருந்துபோக்குவரத்து சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க செயலர், சின்னசாமி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். பின் அவர், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், இன்று ஐந்தாவது கட்ட பேச்சு நடத்த உள்ளார்; அதில், அதிக நிதி ஒதுக்க உள்ளார்,'' என, தெரிவித்தார்.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து துறையில் உள்ள நிதி பற்றாக் குறையை சமாளிக்க வும், பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகை வழங்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அரசு, 750 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்குவதாக கூறுகி றது. இதனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது; ஊதிய ஒப்பந்தம் பேசவும் முடியாது. எனவே, திட்டமிட்டபடி, நாளை முதல், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.

இந்த சூழ லில், அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். நாளை பஸ் ஓடாது! அரசு போக்குவரத்து கழகஊழியர்சம்மேளனம் - சி.ஐ.டி.யு., துணைத் தலைவர்,அன்பழகன் கூறியதாவது:ஓய்வு பெற்ற, 64 ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய, 1,700 கோடி ரூபாயை ஒதுக்க வலியுறுத்தினோம். தற்போது, பணியில் உள்ளவர்களுக்கு, பஞ்சப் படி உயர்வு நிலுவைத் தொகை வழங்க, 300 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றோம்.

ஆனால், அரசின் சார்பில், 750 கோடி ரூபாய்க்கு மேல் தர இயலாது என்றனர். அதனால், 'ஸ்டிரைக்' தவிர, வேறு வழியில்லை. இதில், ஆளுங்கட்சி ஆதரவு, அண்ணா தொழிற் சங்கத்தில், நிர்வாக பொறுப்பில் உள்ளவர் களை தவிர, அனைத்து தொழிலாளர்களும் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. எனவே, நாளை முதல் பேருந்துகள் ஓடாது.இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.என்.டி.யு.சி., எதிர்ப்பு 'போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத் தத்தை தவிர்க்க வேண்டும்' என, காங்கிரஸ் ஆதரவு ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக ஐ.என்.டி. யு.சி., தலைவர், கோவிந்தராஜன், பொதுச் செயலர், வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கை:போக்குவரத்து துறை அமைச்சருடன் நடந்த பேச்சில், முதல் கட்டமாக, 750 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகம் ஏற்கனவே, மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வேலை நிறுத்தம் செய்வ தால், கடும் நிதி நெருக்கடி மற்றும் பொருளா தார வீழ்ச்சி ஏற்படும்.

எனவே, தற்போதைய வேலை நிறுத்தம் தேவையற்றது என, ஐ.என்.டி.யு.சி., கருதுகிறது. நஷ்டத்தை தவிர்க்க, வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
Dailyhunt

ரூ.10 கட்டணத்தில் திகிலூட்டும் சுரங்க ரயில் பயணம் - ஏழரை நிமிடத்தில் 7 ஸ்டேஷன்கள்

 
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு திகில் அனுபவமாக இருக்கும். திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும்.

முதற்கட்டமாக, 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 2 முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் பெற்று கொண்டு செல்லலாம். நமக்கு தேவையான பட்சத்தில், அதனை செல்போன் போன்று தேவையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

அதேபோல், கவுன்ட்டரில் ‘டோக்கன்’ வடிவிலான டிக்கெட் வாங்கி பயணம் செய்யலாம். உயர்மட்டப் பாதையில் இந்த 2 முறையும் டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சுரங்க ரயில் நிலையங்களில் ‘டோக்கன்’ வடிவிலான டிக்கெட் கிடைக்காது. நமக்கு தேவையான பயண அட்டையை பெற்று கொண்டு இருந்தால், மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சுரங்கத்தில் உள்ள 7 ரயில் நிலையங்களிலும் ரூ.10 கட்டணம் செலுத்தி பயண அட்டை பெற்று கொள்ளலாம்.



Dailyhunt

தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி? ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா? அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை !! 

courtesy: SSTA

நியூட்டன் அறிவியல் மன்றம்

MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!

1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த
அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.

2) இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி  அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள்  நீக்கப்படும்.


3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய  மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும்  குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC  மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

அதுபோல  50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

4) இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு  மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.

5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
 நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில்
தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்  பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.

6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்

பொதுப்பிரிவின்   QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)

PERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள்  பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்
பதியப்படும்.

8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள  இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.

10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய  85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை
பூர்த்தி செய்ய வேண்டும்.

அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
(domicile status: Tamilnadu)

ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்
பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.

11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.

12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.

13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது
45 சதம் ஆகும்.

14) இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே
அல்லாமல் வேறு எப்படியும் அல்ல.

பின்குறிப்பு-1: தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச்
சான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத்  தேவையில்லை

பின்குறிப்பு-2: பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE  சமர்பிக்க வேண்டும்  ......
வ.கோபாலகிருஷ்ணன், ப.ஆசிரியர்,நகராட்சி உயர்நிலைப் பள்ளி, குமரானந்தபுரம்\
 

Plus two exam news


 GH gets more facilities

Minister commissions equipment in Sivaganga hospital

Minister for Khadi and Village Industries Board G. Baskaran on Saturday inaugurated new facilities at the Government Medical College Hospital here.


Accompanied by Dr. P. Soundara Rajan, Dean of the hospital and RDO N. Sundaramurthy, the Minister inaugurated the facilities, including two reverse osmosis plants, established at a cost of Rs. 13.5 lakh with funds provided by local MP P. R. Senthilnathan under the constituency development fund.
 Secretariat employee commits suicide

A 35-year-old government official committed suicide at his residence in Arputham Nagar, West Tambaram, on Friday night.

Police said the victim, Deepan Chakravarthy, was an assistant section officer in the agriculture department at the Secretariat.

He was living with his mother Vanita, wife Sudha (30) and two children.
After reaching home on Friday evening, Chakravarthy locked himself in his room till 8.30 p.m.
His mother and wife repeatedly knocked on the door but he did not respond.
They called their neighbours who broke down the door and found Chakravarthy hanging from the ceiling fan. A case has been filed.

Those in distress can call 104 or 044-24640050 orhelp@snehaindia.org

 Porur flyover likely to be opened in two weeks

Deepa H. Ramakrishnan

475m facility was built over 7 years at a cost of Rs. 54 crore

After seven years of work that went on in fits and starts, the Highways Department is giving the finishing touches to the Rs. 54 crore flyover at the Porur junction on Mount Poonamallee Road. It is expected to be ready in two weeks.

Work on the 475 metre long and 17.2 metre wide flyover that began in 2010 had to be put on hold when huge underground water mains came in the way. Though construction resumed in 2015, it progressed slowly due to the lack of permission for traffic diversion and work had to be carried out during late nights only.

Soil conditions
Many residents expressed relief at the work finally coming to an end. Settu, an autorickshaw driver in Devi Nagar, recalled that the project had to be put on hold due to the presence of water mains and the soil condition.

“On some days, it takes more than 45 minutes for us to travel from Sri Ramachandra Hospital to the other side of the flyover. Once the flyover is completed, it will be used by vehicles of school, colleges and IT companies, leading to a reduction in congestion,” he said, adding that Arcot Road too should be widened to allow free movement of traffic.


Traffic snarls are common on the road that leads to Sriperumbudur and beyond. Pedestrians too struggle to cross the road. “It takes up to 15 minutes before you can finally cross the road. A subway beneath the flyover and pedestrian crossings on the sides where it lands would help pedestrians,” said S. Sanathkumar, who works in a power tools repair shop on Mount Poonamallee Road.
A bus stop on the Poonamallee side is just at the point where the flyover lands. It has to be shifted to prevent traffic jams on the service lane, Mr. Sanathkumar added.

Sources in the Highways Department said the priority now is to complete the flyover.
“We had to deal with a huge bunch of telecom cables last month and that delayed the construction. Painting, electrification and laying of BT topping will be taken up soon,” an official said.

Groundwater table dips by nearly 2m

 Survey shows water levels are at a depth of 6-10m beneath the ground in key localities

While the city’s wait for a good spell of summer showers continues, the groundwater table is witnessing a steady dip. In April, the water table declined by nearly two metres in various parts of the city when compared to same period last year.
According to a survey on water levels conducted by Rain Centre, a city-based voluntary organisation, the water table has dropped up to six metres below ground level in Nesapakkam, West Mambalam and Triplicane and beyond 10 metres in localities such as Mylapore and Adyar.
The varying water table in the localities across the city indicates the level of extraction of groundwater and the decline also depends on the soil condition in each area, Metrowater officials say.
For instance, Anna Nagar has had only a marginal dip in the water table in April.
The survey covered many areas in southern and central Chennai along the Adyar and Cooum rivers by monitoring water levels in 90 open wells identified per sq. km.
The rapid incease in the number of borewells has also added to the stress on groundwater.

Mathangi Narayanan, a resident of Okkiampet, said: “Last year, we had water in our open well because of bountiful rainfall in 2015 and good recharge through rainwater harvesting. But this summer, I am worried about the decreasing water level in the well probably due to overdrawal in the neighbourhood.”
Rain Centre director Sekar Raghavan said the dip in the water table in April was not alarming. “This could probably be due to the volume of water supply by Metrowater till last month. Moreover, this also indicates that people are not extracting from the shallow aquifer that is available in open wells and are instead digging deeper by sinking borewells and exhausting resources in deep aquifers,” he said.
Sustaining resources
Residents must alternate between tapping groundwater in open wells and deep borewells to sustain resources throughout the year. The cost for digging a 3.25 feet dia and 25 ft. deep open well is estimated to be Rs. 60,000 and that of 4.25 feet dia will cost Rs. 85,000, he said.

NEWS TODAY 23.12.2025