Sunday, May 14, 2017

தெய்வமகள் காயத்ரி கொலை.... அண்ணியாருக்கு அஞ்சலி செலுத்திய டுவிட்டர்வாசிகள்


சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் தனது அண்ணியார் காயத்ரியை பிரகாஷ் குத்தி கொலை செய்து மலையில் இருந்து உருட்டி விட்டு விட்டார். காயத்ரி இறந்து போனதாக நம்பி பிரகாஷ், குமார் போய் விட்டனர். ஆனால் காயத்ரி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா என்பது இயக்குநரின் கையில்தான் இருக்கிறது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் சீரியல் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் மிக முக்கியமான காட்சி இன்று ஒளிபரப்பானது. தன்னையும், தன் அண்ணனையும் கொல்ல வந்த கயாத்ரியை கொழுந்தன் பிரகாஷ் குத்தி கொலை செய்து விட்டான்.

காயத்ரி ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். நான் நினைத்தது போலவே சமூக வலைத்தள பக்கங்களில் காயத்ரிக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

என்ன... இரும்புப் பெண்மணி அண்ணியார் கொல்லப்பட்டாரா... ஐயகோ. அவருக்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
அண்ணியாரை கொன்னுட்டீங்களா? கேபிளை கட் பண்ணுங்கப்பா என்கின்றனர்.
source: one india

No comments:

Post a Comment

NEWS TODAY 21.07.2026