Saturday, May 27, 2017

சேத்தியாத்தோப்பில் 'டாஸ்மாக்' கடைக்கு தீ

பதிவு செய்த நாள்27மே2017 00:16

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் புதிதாக திறக்கப்பட்ட, 'டாஸ்மாக்' கடைக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மூடப்பட்டன. இதையடுத்து, சேத்தியாத்தோப்பிலிருந்த டாஸ்மாக் கடை, தனியாருக்கு சொந்தமான வயல்வெளியில், தற்காலிகமாக ஷெட் அமைக்கப்பட்டு, கடந்த வாரத்திற்கு முன் திறக்கப்பட்டது. இந்த வயல்வெளி டாஸ்மாக் கடையில், பகல் நேரங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது. இரவில், மது பாட்டில்களை எடுத்து சென்று, பாதுகாப்பான இடத்தில் வைப்பது வழக்கம். இந்நிலையில், வயல்வெளியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை, நேற்று முன்தினம் நள்ளிரவில், மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். இதில், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், கடைக்குள் இருந்த அட்டை பெட்டிகள் எரிந்து சேதமாயின.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...