Saturday, May 27, 2017

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்



தமிழக சட்டசபையில், மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மே 27, 2017, 05:15 AM

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணமடைந்தார்.

அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி டெல்லிக்குச்சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார்.

பிரமாண்ட விழா

மேலும், இதற்காக தனி விழாவை தமிழக அரசு பிரமாண்டமான அளவில் நடத்த இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

இந்த விழா சட்டசபையில் நடைபெற உள்ளது. விழா நடக்கும் நாள் பற்றி தற்போது அரசு ஆலோசித்து வருகிறது. அதுபோல சட்டசபையில் எந்த இடத்தில் ஜெயலலிதாவின் படத்தை மாட்டுவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வரை படங்கள்

தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மா காந்தி உள்பட பல பிரமுகர்களின் படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வரைபடங்களாகும். அதுபோல ஜெயலலிதாவின் படமும் வரையப்படும் என்றும், கவின் கலைக் கல்லூரி மூலம் அவரது படத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

யார் படத்தை யார் திறந்தார்?

தமிழக சட்டசபையில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை 24.7.1948 அன்று கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரியார் திறந்துவைத்தார். சி.ராஜகோபாலாச்சாரியாரின் படத்தை 23.8.1948 அன்று பிரதமர் நேரு திறந்துவைத்தார்.

திருவள்ளுவரின் படத்தை துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் 22.3.1964 அன்று திறந்துவைத்தார். அண்ணாவின் படத்தை 10.2.1969 அன்று பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார். காமராஜரின் உருவப்படத்தை 18.8.1977 அன்று ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

எம்.ஜி.ஆர். படம்

தந்தை பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப் படங்களை 9.8.1980 அன்று கேரளா கவர்னர் ஜோதி வெங்கடாச்சலம் திறந்துவைத்தார். எம்.ஜி. ஆரின் படத்தை 31.1.1992 அன்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி எம்.ஜி.ஆரின் படத்தை ஜெயலலிதா திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

அவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் படமும் தமிழக சட்டசபையில் ஜூன் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவர்களில் அண்ணாவின் உருவப்படம் மட்டும் ராஜாஜி மண்டபத்தில் நடந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டது. மற்ற தலைவர்களின் படங்கள் அனைத்தும் சட்டசபையில் நடந்த விழாவில் திறந்து வைக்கப்பட்டன.
'ஜெ., படம் வைத்தால் வீரப்பன் படம் வைப்போம்'


பதிவு செய்த நாள்27மே2017 00:07




ஈரோடு : ''நீதிமன்றத்தால் குற்றவாளி என, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, சட்டசபையில் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.

அவமானம்:

ஈரோட்டில் அவர் கூறியதாவது: சட்டசபையில், ஜெ., படம் வைக்கப்பட உள்ளதாகவும், அதை திறக்க பிரதமரை அழைத்ததாகவும், முதல்வர் பழனிசாமி கூறுகிறார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவரின் படத்தை, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றோர் படங்களுடன் வைப்பது, அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

ஏற்க முடியாது:

அவ்வாறு, ஜெ., படம் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம். எம்.ஜி.ஆர்., சமாதி அருகே, ஜெ., உடல் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் மணி மண்டபம் கட்ட உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறுகின்றனர். இது, மிகப்பெரிய தவறு. கடற்கரை, அரசு இடம். அங்கு அரசு நிதி ஒதுக்கி, மணி மண்டபம் கட்டுவது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய செய்திகள்
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது



சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.

மே 27, 2017, 04:30 AM

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12–ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9–ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29–ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிந்த நிலையில் எப்போது முடிவு வெளியாகும் என்று மாணவ–மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி தேர்வு முடிவு வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவை www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Friday, May 26, 2017

Taxi Driver guesture

வாடகை கார் ஓட்டுநரின் மனிதாபிமானம்: முகநூலில் குவிகிறது பாராட்டு மழை

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காவ்யா ராவ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

நேற்று முன்தினம் இரவு 62 வயதான எனது அப்பாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக என்னால் அலுவல கத்தில் இருந்து வர முடியாததால், அங்கிருந்தவாறே வாடகை கார் புக் செய்தேன். சுமார் 35 வயதுடைய சுனில் என்ற ஓட்டுநர் உடனடியாக வீட்டுக்கு சென்று அப்பாவையும் அம்மாவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பள்ளம் மேட்டில் விடாமல் மிக நேர்த்தியாக காரை ஓட்டியுள்ளார். உரிய நேரத்தில் மருத்துவ மனையை அடைந்ததும், “6 கிமீ தூரத்துக்கு ரூ.140 கட்டணம்” என எனது அலைபேசிக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து உடனடியாக அம்மாவை தொடர்புகொண்டு கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து ஓட்டுநருக்கு ரூ.150 தருமாறு கூறினேன்.

எனது அம்மா ரூ.150 கொடுத்த போது, அதை ஓட்டுநர் சுனில் ஏற்க மறுத்துவிட்டார். மேலும், “மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சவாரிக்கு வாடகை வாங்குவதில்லை. நோயாளி களுக்கு உதவுவது நம்முடைய கடமை” எனக் கூறியுள்ளார். எனது அப்பாவும் அம்மாவும் பல முறை வற்புறுத்திய போதும் அவர் கட்டணத்தை வாங்கவில்லை. குறைந்தபட்சம் பெட்ரோலுக் கான தொகையையாவது வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதையும் அவர் ஏற்க வில்லை.

இந்த சம்பவத்தை கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பார்ப்பதற்கு ஏழை போல இருந்த ஓட்டுநரின் மனிதா பிமானமும் பெருந்தன்மையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இத்தகைய நல்ல மனிதர்களால் தான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

காவ்யா ராவின் இந்த முகநூல் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. இதைப் பதிவிட்ட 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரி வித்துள்ள நிலையில், 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பகிர்ந் துள்ளனர்.

IT employees


ஐடி ஊழியர் பணி நீக்கங்கள் கவலை அளிக்கின்றன:

இன்போசிஸ் நாராயண மூர்த்தி

செலவைக் குறைக்கும் விதமாக ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது கவலை அளிப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த நாராயண மூர்த்தி, இது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஐடி நிறுவனங்களில் என்ன நடக்கிறது?

மார்ச் 2018-க்குள் ஒரு லட்சம் ஐடி பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1,000-க் கும் மேற்பட்ட துணைத்தலைவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களின் வருகை, இயந்திரங்களின் பயன்பாடு, அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் செலவு குறைப்பு ஆகியவை வேலை இழப்புகளுக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் 37 லட்சம் நபர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்த சில ஆண்டுகளில் பயனற்றவர்களாக மாறுவர்கள் என மெக்கென்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

காக்னிசென்ட் நிறுவனத்தில் உயரதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. துணைத்தலைவர் பதவியில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 6 முதல் 9 மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களைக் குறைப்பதுதான் அவர்களின் இலக்கு. இந்த திட்டத்தின் மூலம் 1,000 நபர்களை வெளியேற்ற நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களில் தோராயமாக 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்னும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

விப்ரோ நிறுவனத்தின் மனிதவள பிரிவு அதிகாரி, ''15 ஆண்டு அனுபவ மிக்கவர்களால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது. இரு ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணியாளர் சரியில்லை'' என நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The Hindu Tamil

நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை விற்கவும், வாங்கவும் தடை: மத்திய அரசு அறிவிப்பு

விலங்கு நலவாரியத்தின் ஆலோசனைகளின் படி இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் தடை| படம்.| சுஷில் குமார் வர்மா.

விலங்கு நலவாரியத்தின் ஆலோசனைகளின் படி இறைச்சிக்காக மாடுகளை வாங்கவும் விற்கவும் தடை| படம்.| சுஷில் குமார் வர்மா.

கால்நடை சந்தைகளில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மற்ற கால்நடை விற்பனைக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தயாரிக்கப்பட்டன. அவற்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே கடந்த வாரம் காலமாவதற்கு முன் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத் திருத்தங்களின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடைகள் விற்பனைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து 8 பக்க அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில், பசு, எருதுகளை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்கக் கூடாது. விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான், சந்தைகளில் கால்நடைகளை விற்க முடியும். விவசாய பயன்பாட்டுக்கு மட்டும்தான் விற்கவும் வாங்கவும் முடியும். பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடைகள் விற்பனைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

மேலும் நாட்டின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கி.மீ. தூரத்துக்குள் கால்நடை சந்தைகளை அமைக்கக் கூடாது. அதேபோல் மாநில எல்லையில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்கு கால்நடை சந்தை அமைக்க கூடாது. மாநிலங்களுக்கு வெளியில் கால்நடைகளை கொண்டு செல்வதாய் இருந்தால், மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்கள், அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். அத்துடன் கால்நடைகளின் அடையாளங்கள், உரிமையாளரின் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

சந்தைகளில் கால்நடைகளின் நலத்தை உறுதி செய்ய வேண்டும். கன்றுகள், தகுதியில்லாத கால்நடைகளை விற்கக் கூடாது. வாகனங்களில் கால்நடைகள் அடைபடாமல் எல்லா வசதிகளுடனும் ஏற்றி செல்லப்படுகிறது என்பதற்கு கால்நடைத் துறை ஆய்வாளரிடம் காட்டாயம் சான்று பெற வேண்டும். விற்பனைக்கு தகுதி இல்லாத கால்நடைகளுக்கு முத்திரை குத்தும் அதிகாரம் ஆய்வாளருக்கு உள்ளது. இனிமேல் மாவட்ட கால்நடை சந்தை கமிட்டியிடம் அனுமதி பெறாமல் கால்நடை சந்தைகளை நடத்தக் கூடாது.

இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் இறைச்சித் தொழிலுக்குப் பாதிப்பு:

இந்த கட்டுப்பாடுகள் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளை பாதிக்கும். அத்துடன் நாட்டின் இறைச்சி தொழிற்கூடங்களுக்கு இறைச்சி வருகை ஸ்தம்பித்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் வியாபாரிகள், பசு பாதுகாவலர்கள் குழுவினரால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் அவர்களை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர்.

மேலும் வயதான கால்நடைகளையும், பால் தராத பசுக்களையும் விற்பதன் மூலம் மட்டுமே ஏழை விவசாயிகள் வருவாய் பெறுகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் அவர்களையும் பெரிதாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் மூலம் கால்நடைகளை விற்க வேண்டுமானால், அதற்கான ஆவணங்களை தயாரிக்க வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பாலும் விவசாயிகள், ஏழைகள், படிக்காதவர்கள்தான் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆவணங்கள் தயாரிப்பது பெரும் சிக்கலாக இருக்கும். கால்நடைகளை சந்தைகளில் விற்பவர், வாங்குபவர் இருவரும் தங்களுடைய நிலத்தின் உரிமை பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாளச் சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கால்நடைகளை வாங்கிய பின் அவற்றுக்கான ஆவணங்களின் 5 நகல்களை எடுத்து உள்ளூர் வருவாய் அலுவலர், கால்நடை மருத்துவர், கால்நடை சந்தைகளை நிர்வகித்து வரும் கமிட்டி ஆகியவற்றிடம் சமர்ப்பிக்க வேண்டும். விற்பவர், வாங்குபவர் தலா ஒரு நகலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு இறைச்சி வர்த்தகம் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இறைச்சி வர்த்தகத்தில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலைகளில் ஆந்திரா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் தங்களது எல்லைப் பகுதிகளில்தான் பெரும்பாலும் கால்நடை சந்தைகளை நடத்துகின்றன. அப்போதுதான் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கால்நடைகளை வாங்குவார்கள். ஆனால், புதிய கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘‘இந்தக் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இதற்கு மேல் அங்கீகாரம் பெற்ற ஒரு சில இறைச்சி கூடங்களுக்குதான் விலங்குகள் கிடைக்கும் ’’ என்று அகில இந்திய இறைச்சி ஏற்றுமதி சங்கத்தின் டைரக்டர் ஜெனரல் எஸ்என்.சபர்வால் கூறியுள்ளார்.

Tasmac

May 26, 2017 08:00 IST Updated: May 26, 2017 08:02 IST

தமிழக தாய்மார்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்?

டி.எல்.சஞ்சீவிகுமார்

ஒருவழியாக மதுக்கடைகளுக்கான மாற்று இடங்களை அடையாளம் கண்டுவருகிறது டாஸ்மாக் நிர்வாகம். ஊருக்கு வெளியே சுடுகாட்டிலும் சுடுகாட்டை ஒட்டிய பகுதி யிலும் கடையை அமைக்கிறார்கள். காட்பாடி கரசமங்கலம் அருகே சுடுகாட்டை ஒட்டி மதுக்கடை வைக்கப் பட்டிருக்கிறது. வேலூர் கணியம்பாடி சுடுகாட்டிலும் மதுக்கடை வைத்திருக்கி றார்கள். மேற்கண்டவை உதாரணங்கள் மட்டுமே. ஊருக்கு நான்கு கடை களாவது சுடுகாட்டை ஒட்டி வைக்கப் பட்டிருக்கின்றன. இனி குடியால் சாகும் குடிநோயாளிகளை அடக்கம் செய்ய சிரமப்பட்டு தூக்கிச் செல்லத் தேவையில்லை. மதுக்கடைகளை இடம் மாற்றும் விவகாரத்தில் தமிழகம் கிட்டத் தட்ட போர்க்களம் போல காட்சியளிக் கிறது. குறிப்பாக, பெண்கள் மதுக்கடை களை ஆவேசமாக அடித்து நொறுக்குகி றார்கள். மதுக்கடைகள் தொடர்பான போராட்டங்களில் முன்பு எப்போதும் இல்லாத வகையிலான எதிர்ப்புடன் திரண்டு நிற்கிறார்கள் மக்கள். ஆனாலும், மக்களின் உணர்வுகள் அரசால் மதிக்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஆய்வுக் கூட்டம் நடந்ததா?

“நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர், தீர்ப்பு வெளியான நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். பின்பு 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.” - நெடுஞ் சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற உத்தரவின் ஆறாவது வழி காட்டுதல் இது. தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்து மேற்கண்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். தீர்ப்பு வெளியாகி ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை.

என்ன செய்கிறது காவல் துறை?

திருப்பூரில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து மதுக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சமீபத்தில் வேலூர் அருகே அழிஞ்சிகுப்பத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். காட்பாடி அருகே அருப்புமேட்டில் நடந்த போராட்டத்தில் 30 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சிங்காநல்லூரில் நெடுஞ்சாலையில் மூடிய கடையின் பின்பக்க கதவை திறந்து வைத்து மது விற்றார்கள். அந்த கடையும் சூறையாடப்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு மிக அருகில் இருக்கிறது டாஸ்மாக் மதுக்கடை. அந்தக் கடையை அகற்றக் கோரி தினமும் போராடுகிறார்கள் மக்கள். அவர்களையும் காவல் துறை மிரட்டுவதாக புகார்கள் உள்ளன. இப்படி நிறைய உதாரணங்கள்.

இதுவரை நடந்த போராட்டங்கள், தொடரப்பட்ட வழக்குகள், மூடப்பட்ட கடைகள் குறித்து அரசு தரப்பிடம் உயர் நீதிமன்றம் புள்ளிவிவரங்களை கேட்டுள்ளது. ஆனால், போராட்டங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் அரசு தரப்பில் அதனை தாக்கல் செய்ய தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இதுவரை போராட்டங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் 41 மதுக் கடைகள் மூடப்பட்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 1000-க்கும் அதிகமான போராட்டங்கள் நடந்திருக்கலாம். சுமார் 300 இடங்களில் மதுக்கடைகள் மீது மக்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். சுமார் 700 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இவ்வளவையும் மீறிதான் வீதிக்கு வருகிறார்கள் மக்கள்.

ஏன் போராடுகிறார்கள் தாய்மார்கள்?

மதுவுக்கு எதிராக போராடும் தாய் மார்களில் பெரும்பாலோனார் தந்தை, கணவர், மகன், மருமகன், பேரன் என தனது உறவுகளில் எவரோ ஒருவர் வகையிலாவது குடிநோய் தொடர்பாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வீதிக்கு வந்து போராடுவது அந்தத் தாய்மார்கள்தான்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவிளாங் கோடு அருகே வசிக்கும் 80 வயதைத் தாண்டிய கன்னியம்மாள், திண்ணையில் அலங்கோலமாக படுத்துக்கிடக்கும் இளைஞனை பார்த்து நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார்.

“குடியால் என் புருஷனும் செத்துட் டான், மகனும் செத்துட்டான், மருமகனும் செத்துட்டான், இதோ பேரனும் குடிக்கு அடிமையாகிட்டான்...” என்று கதறுகிறார். திருநெல்வேலி ராதாபுரத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு வயது 24. ஐந்தரை மாதம் கர்ப்பம். இரு மாதங்களுக்கு முன்பு குடியால் கணவர் இறந்துவிட்டார்.

தமிழகத்தில் குறைந்தது சுமார் இரண்டரை கோடி குடிநோயாளிகள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் 40, 50 வயதைத் தாண்டியவர்களே குடி நோயால் இறந்தார்கள்.

இன்று 20, 30 வயதுகளை தாண்டி யிராத இளைஞர்களும் முற்றிய குடிநோயால் இறக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களே இன்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

திருப்பூரில் அடிவாங்கிய ஈஸ்வரியா கட்டும், வேலூரில் கொத்தாக முடியை பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட தாய் மார்களாகட்டும் ஒவ்வொருவரின் பின்புலத்திலும் மதுவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு சோகம் இருக்கும். அதுவே அவர்களை வீதிக்கு அழைத்து வந்திருக்கிறது. தமிழக அரசின் வேலை போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, புதிதாக மதுக்கடைகளை திறப்பதை நிறுத்துவதேயாகும். அதுவே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 4


76. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர்.

77. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.

78. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

79. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார். 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.

80. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல்.

81. பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

82. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

83. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ்.

84. மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.

85. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், “நான் பாடல் எழுதுகிறேன். ஆனால், என்னுடைய வரிகளுக்கு உயிர் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்தவர் டி.எம்.எஸ்-தான்!” என்று மனமுவந்து பாராட்டியுள்ளார் கவியரசு கண்ணதாசன்.

86. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ்.

87. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.

88. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார்.

89. டி.எம்.எஸ்ஸின் 88-வது பிறந்த நாளை மலேசிய ரசிகர்கள் பிரமாண்டமாகக் கொண்டாட விரும்பியதால், அதில் கலந்துகொள்ள மலேசியா சென்றார் டி.எம்.எஸ். அங்கேயே தயாராகிக்கொண்டு இருந்த ஒரு தமிழ்ப்படத்தில், இவரைப் பாட வைக்க விரும்பினார் மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸ். உடனே ஒப்புக்கொண்டு, கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்தார் டி.எம்.எஸ்.

90. டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர்டூப்பர் ஹிட்! 1952-ம் ஆண்டு, ஏவி.எம்-மின் ‘செல்லப்பிள்ளை’ படத்தில், சுதர்சனம் இசையில்தான் இவர்கள் இருவரும் முதன்முதலாக இணைந்து பாடினர்.

91. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார்.

92. கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, கலைஞர் எழுதிய ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்னும் பாடலின் ஆரம்ப வரிகளை டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

93. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை.

94. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.

95. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி.

96. டி.எம்.எஸ்ஸின் குரு - காரைக்குடி ராஜாமணி ஐயங்கார். டி.எம்.எஸ்ஸின் அபிமான பாடகர்கள் - மதுரை மணி ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம்.

97. இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.எம்.எஸ்ஸை அழைத்துச் சென்று எம்.கே.தியாகராஜ பாகவதரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பாகவதர், “நான் சிறையில் இருந்த இரண்டரை வருஷ காலமும் சினிமா சங்கீதத்தின் மவுசு குறையாமல் இருந்ததற்கு இந்தத் தம்பிதான் காரணம் என்று அறிந்தேன். இந்தத் தம்பியை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று உளப்பூர்வமாகப் பாராட்டினார்.

98. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான்.

99. இந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதியன்று (24.3.2013) டி.எம்.எஸ்ஸுக்கு 90 வயது பூர்த்தியாகி, 91-வயது தொடங்கியது. இதை கேரளாவில் பெரிய விழாவாக எடுத்து டி.எம்.எஸ்ஸுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அளித்துக் கௌரவித்தார் பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.

100. “எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர்னு எல்லாருக்கும் அவங்கவங்க குரல்ல பின்னணி பாடறீங்களே… எனக்குன்னும் தனியா ஒரு குரல் வெச்சிருக்க மாட்டீங்களா என்ன? எனக்குப் பின்னணி பாடுங்களேன்!” என்று ஆசையோடு கேட்டு, டி.எம்.எஸ்ஸின் பின்னணிக் குரலுக்கு வாயசைத்துப் பாடுவதற்காகவே ’ரத்தத்திலகம்’ படத்தில் கல்லூரி புரொபசராக தோன்றிப் பாடி நடித்தார் கவியரசு கண்ணதாசன். அந்தப் பாடல்… ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!’ அந்தப் பாடலில் இடம்பெறும் ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை… எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்கிற கடைசி வரிகள் அந்தக் கவியரசருக்கு மட்டுமல்ல; இந்தப் பாட்டரசருக்கும் கச்சிதமாகப் பொருந்தும்!
“நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!” - பகுதி 3


51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.

52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ். அதேபோல், தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டும் எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ்.

53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர்.

54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!

55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை.

56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.

58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ்.

59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.

60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

61. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!

62. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார். தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

63. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி.

64. "ராஜ்கபூருக்கு முகேஷ் அமைந்தது போல், டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்!" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

65. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை.

66. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார்.


67. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். என்பது ஓர் ஆச்சரியம்! சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார் டி.எம்.எஸ்.

68. இவரை "சௌந்தர்" என்று அழைப்பார் எம்.ஜி.ஆர். "வாங்க டி.எம்.எஸ்!" என்பார் சிவாஜி. (டி.எம்.எஸ் இல்லாத நேரங்களில் மற்றவர்களிடம் சிவாஜி, "என்ன, பாகவதர் வந்து பாடிட்டுப் போயிட்டாரா?" என்று டி.எம்.எஸ். பற்றி விசாரிப்பதுண்டு. கேலியாக அல்ல; டி.எம்.எஸ்ஸை பாகவதருக்குச் சமமாக மதித்ததால்!) வெறுமே "சார்" என்று மரியாதையாக அழைப்பார் ரஜினி. கே.வி.மகாதேவனுக்கு டி.எம்.எஸ். "மாப்ளே..!". இயக்குநர் பி.ஆர்.பந்துலு டி.எம்.எஸ்ஸை "வாங்க ஹீரோ!" என்பார்.

69. ஜேசுதாஸின் 'தெய்வம் தந்த வீடு...', பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...' ஆகிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒருமுறை சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ். டி.எம்.எஸ்ஸுக்குப் பிடித்த பாடகர் அமரர் மலேசியா வாசுதேவன்.

70. மதுரையில் அரச மரத்துப் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கோயில் விழாவில், ரொம்ப பிஸியாக இருந்த காலத்திலும், தனக்கு எத்தனை நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, மதுரை சென்று அந்த விழாவில் கலந்துகொண்டு, கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். டி.எம்.எஸ்.

71. ஆரம்ப காலத்தில் டி.எம்.எஸ்ஸின் வீட்டில் குடியிருந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, பல கச்சேரிகளில் தனக்கு வயலின் வாசிக்க வைத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

72. டி.எம்.எஸ் பாடிய பாடல்களிலேயே, அவரின் துணைவியாருக்கு மிகவும் பிடித்த பாடல்... ‘உள்ளம் உருகுதய்யா முருகா...’

73. டி.எம்.எஸ்ஸின் ஒரு மகன், பதினான்கு வயதில் உடல் நிலை கெட்டு, மரணம் அடைந்ததுதான் டி.எம்.எஸ்ஸின் மனத்தை ரணமாக்கிய நிகழ்ச்சி. மரணத் தறுவாயில் அந்தப் பிள்ளை, தன் தந்தையை முருகன் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபடியே உயிர் துறந்தான்.

74. டி.எம்.எஸ் கச்சேரிகளில் அவருக்கு கீ-போர்டு வாசித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா; கிட்டார் வாசித்திருக்கிறார் கங்கை அமரன்.

75. ‘நீராரும் கடலுடுத்த...’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜனகண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தி!

NEWS TODAY 21.12.2025