Friday, June 2, 2017

ஜூன் 02, 03:00 AM
தலையங்கம்
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர்



ஆங்கிலத்தில், ‘‘ஆல் ரோட்ஸ் லீட் டூ ரோம்’’ என்பார்கள். அதாவது எல்லாவழிகளும் ரோமாபுரியை நோக்கியே என்பதுதான் அதன்பொருள். அதுபோலவே, அனைத்துக்கட்சிகளின் பார்வையும் இப்போது ஜனாதிபதி தேர்தலை நோக்கியே இருக்கிறது. ஜூலை மாதம் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சுதந்திர இந்தியாவின் 13–வது ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்காளத்தில் இருந்து முதல்முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது பதவிகாலம் ஜூலை மாதம் 25–ந்தேதியோடு முடிவடைகிறது. எனவே, 14–வது ஜனாதிபதி அதற்குமுன்பு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். ஜனாதிபதி தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமான தேர்தல் ஆகும். ஜனாதிபதியை எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள். இதில், ஓட்டுபோடும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை எலக்ட்டோரல் காலேஜ் அல்லது தேர்வுக்குழு என்பார்கள்.

நாட்டில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்களும், 776 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள். இதில், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். இதுபோல, ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், 1971–ம்ஆண்டு கணக்கெடுப்பின்படி, அந்த மாநிலத்தின் மக்கள்தொகையை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையால் வகுத்து, மீண்டும் அதனை ஆயிரத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணிக்கையே எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பாகும். தற்போது ஜனாதிபதி தேர்தலில் மொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில், ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 லட்சத்து 37 ஆயிரத்து 614 ஓட்டுகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 230 ஓட்டுகளும் இருக்கிறது. அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சி, இந்திய லோக்தள கட்சி ஆகிய கட்சிகளுக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 38 ஓட்டு மதிப்பு இருக்கின்றன. இதில், பெரும்பாலான கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கே ஓட்டுபோடும் என்பதால் நிச்சயமாக பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் சோனியா காந்தி தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றாக உட்கார்ந்து அவர்கள் ஆதரவோடு ஒரு வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து இருக்கிறார்கள். இந்தநிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறியிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது. அனேகமாக 3 வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு இருக்கிறது என்று அரசியல் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருதரப்புமே யாரை மனதில் வைத்திருக்கிறார்கள் என்பது ரகசியமாக இருக்கிறது. இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி. இதில் பா.ஜ.க. வேட்பாளர், எதிர்க்கட்சி வேட்பாளர் என்று நிறுத்தி தேர்தல் நடத்தி, யார் வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று பார்க்காமல், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த உணர்வோடு போட்டியின்றி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற பெயரை இந்தியா பெறவேண்டும் என்பதே எல்லா மக்களின் ஆசையாகும். அந்தவகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்க ஆளுங்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உட்கார்ந்து முடிவெடுத்து தேர்தலை தவிர்க்கவேண்டும். ஜனாதிபதி என்பவர், அவர் பதவி ஏற்றவுடன் எந்த கட்சியையும் சாராதவர் என்பதால், இந்த தேர்தலுக்கு கட்சி சாயம் பூசாமல் எல்லோரும் ஒன்றாக கைகோர்த்து 14–வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

Thursday, June 1, 2017

"நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் சாப்பாடு!'' - பழம்பெரும் நடிகை கீதா கண்ணீர்

எம்.குமரேசன்

வயதானவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடும் அவலநிலை தற்போது அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதுபோல, முதியோர் இல்லங்களும் திறக்கப்பட்டுவருகின்றன. சாதாரண மனிதரிலிருந்து பிரபலங்கள் வரை இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. பழம்பெரும் இந்தி நடிகையான கீதா கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



இவர் நடித்த படங்களில் மீனாகுமாரியுடன் நடித்த 'பகீஷா ' மற்றும் 'ரஷ்ய சுல்தான் ' படங்கள் பிரசித்திப்பெற்றவை. வயது முதிர்ந்த நிலையில், தன் மகனுடன் வசித்துவந்தார் கீதா. கடந்த ஏப்ரல் மாதம் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்ததால், மயக்க நிலையில் இருந்தார். உடனே மும்பை கிர்காவ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள், அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்; கீதாவின் மகன் ராஜாவிடம் முன்பணம் செலுத்துமாறு கூறினர். தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும், தனது தாய்க்கு உடனடியாக சிகிச்சை செய்யுமாறும் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்துவருகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்ற ராஜா, மீண்டும் மருத்துமனைக்குத் திரும்பவே இல்லை. தாயைக் கைவிட்டு ஓடிவிட்டார். மருத்துவர்கள், அவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டபோது பதிலே இல்லை. எனினும் கீதாவைப் பற்றி அறிந்த மருத்துவர்கள், அவருக்குச் சிகிச்சை அளித்து அவரைக் காப்பாற்றினர்.

மருத்துவமனை நிர்வாகம், ராஜா வீட்டுக்கு ஆள் அனுப்பியது. கீதாவை மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த நாளே, தான் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பை ராஜா காலி செய்துவிட்டதாகவும், மூன்று மாத வாடகை பாக்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. மருத்துவமனையில் நினைவு திரும்பியவரிடம் சிகிச்கைக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. அதைச் செலுத்திவிட்டு வீட்டுக்குப் போகும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கீதாவோ, 'என்னிடம் பணம் இல்லை' என்று கதறி அழுதுள்ளார். நடிகை கீதாவின் நிலைமையைப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.



செய்தியைக் கேள்விபட்ட சென்சார் போர்டு உறுப்பினர் அசாக் பண்டிட், தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று கீதாவைச் சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவச் செலவு ஒன்றரை லட்சம் ரூபாயைச் செலுத்தினர். இதுகுறித்து சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் கூறுகையில், ''தற்போதைய நிலையில் அவரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். 'பில் ' செலுத்துவது பெரிய விஷயம் அல்ல. அவரை யாரிடம் ஒப்படைப்பது என்பதுதான் எனக்குப் பெரிய கவலை'' என்றார் வேதனையுடன்.

இதற்கிடையே முதியோர் இல்லம் ஒன்று அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது. கீதா கபூருக்கு, ராஜா என்கிற மகனும், பூஜா என்கிற மகளும் இருக்கின்றனர். மகனுடன் வசித்துவந்த கீதாவுக்கு, நான்கு நாள்களுக்கு ஒருமுறை ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால்தான் அவருக்கு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ``என்னை முதியோர் இல்லத்தில் சேர, மகன் வற்புறுத்தினான். நான் மறுத்தேன். பெற்ற தாய் என்றுகூட பார்க்காமல் தினமும் அடித்து உதைத்தான். சாப்பாடுகூட தரவில்லை. அதனால்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டது'' என்றார் கண்ணீர் மல்க.

மருத்துவமனை நிர்வாகம், கீதாவின் மகளைத் தொடர்பு கொண்டபோது, 'ராங் நம்பர்' எனக் கூறி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். போலீஸார், கீதாவின் குடும்பத்தினரைத் தேடிவருகின்றனர்.
சென்னையில் அதிகரிக்கும் வெறி நாய்கள்..! என்ன காரணம்?

ந.பா.சேதுராமன்





மனிதனுடன் மிகவும் ஒன்றிப்பழகி விடுகிற ஜீவன்களில் நாய்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. படுக்கையறை வரை நாய்களை அனுமதிப்பதோடு, ஒரே போர்வையில் அவை நுழைந்து கொள்வதற்கும் சம்மதிப்போர் எண்ணிக்கை அண்மைக்காலமாக பெருகிக்கொண்டு வருகிறது. இதனால், நாய்களின் உடல்மீது ஊறும் சிறுபூச்சிகள், அட்டைபோல் ஒட்டிக்கொள்ளும் ரத்த உண்ணிகள் அதே போர்வையில் தங்கி மனித உடலில் 'நாய்சொறி'யை ஏற்படுத்தும் என்பதை உணர மறுப்பதில்தான் ஆபத்து ஆரம்பிக்கிறது. இந்த 'சொறி நோய்' நாய்களுக்கு ஆரம்பத் தாக்கம்தான். அவை நாளடைவில் அவற்றுக்கு மெல்ல, மெல்ல 'வெறி நோயாக' மாற்றம் பெறுகிறது. நாய்களுக்கு வெறிநோய் ஏற்படுவதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது, கண்ட இடங்களிலும் வீசிச்செல்லும் கறிக்கோழி கழிவுகளை நாய்கள் தின்பதுதான். மனிதர்களின் தேவைக்காக, பிராய்லர்வகைக் கோழிகளை ஒரே மாதத்தில் மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை வளர்ச்சியடையச் செய்து, விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற வளர்ச்சியை இயற்கையாக வீடுகளில் வளர்க்கப்படும் 'நாட்டுக்கோழிகள்' பெறமுடியாது. செயற்கையான வளர்ச்சிக்காக, பிராய்லர் கோழிகளுக்கு ஊசி போடப்படுவதுடன் ரசாயன மருந்துகளும் செலுத்தப்படுகிறது. இவை, மனித உடலுக்குப் பொருந்தாத விஷயங்கள் என்பதால், இந்தவகைக் கோழிகளை உண்பதால் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது. தவிர, கோழிகளின் கழிவுகள், குறிப்பாக அவற்றின்இரைப்பைக்கு பக்கத்தில் உள்ள பித்தப்பையில் இருக்கும் நச்சுத்தன்மை, மனித உடலில் அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கடைகளில் கறிக்கோழிகளை வெட்டும்போது முதலில் பிரித்தெடுப்பது, அவற்றின் பித்தப்பைகளைத்தான். ஏனெனில், பித்தப்பையில் உள்ள நச்சு கசியுமானால், மொத்த கோழிக்கறியிலும் கசப்புத்தன்மை ஏறி, முழுவதும் நஞ்சாக மாறிவிடும். எனவே, தெரு நாய்கள் கோழிக்கழிவுகளைச் சாப்பிடும்போது, நஞ்சுப்பையையும் சேர்த்தே உண்ணும் நிலை உள்ளது.

தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறித்தன்மைக்கு கோழிகளின் 'பித்தப்பை' கழிவே முக்கியக் காரணமாக அமைகின்றன என்பதை சூழலியலாளர்கள் பலமுறை சுட்டிக்காட்டியபோதிலும், கோழி இறைச்சி வணிகர்கள் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், சென்னை கொடுங்கையூரிலும், பெருங்குடியிலும் மலைபோன்று குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து வெளியேறும் விஷவாயுக்கு இந்தக் கோழிக்கழிவுகளே முக்கியக் காரணமாகின்றன. குப்பைகளில் இருந்து கசியும் விஷ வாயுவை அப்பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் சுவாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.



'ரேபிஸ்' எனப்படும் வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான வெறிநாய், மனிதனைக் கடித்து விட்டால், அதன் கடிவாயிலிருந்து புறப்படும் கிருமியானது, மனிதர்களின் மூளைக்குள் எளிதில் நுழைந்து நரம்பு மண்டலத்தில் தொடங்கி, உடலின் பல பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளான நாய் கடிக்கக்கூடத் தேவையில்லை; நக்கினாலே போதும். மனிதனுக்கு மரணவாயில் தொடங்கிவிடும். ரேபிஸ் கிருமி தாக்கப்பட்டால், தொண்டையில் வலி, குமட்டல், வாந்தி, மயக்கம், அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நாளடைவில் இத்தாக்குதல், மனிதர்களைப் படுக்கையில் விழவைத்து விடும். பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தாகக்கூட முடிந்து விடும். மேலும் வெறிநாய்க் கடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களுக்கு அருகில்கூட காண்பிக்க மாட்டார்கள். உடனடியாக எரித்துவிட வலியுறுத்துவார்கள். அப்போதுதான், அந்தக் கிருமித்தொற்று அழியும் என்பதால் இந்த நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.

உலகெங்கிலும் வெறிநாய்க்கடிக்கு உயிரிழப்போரில், 45 சதவீதத்தினர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியரே. வெறிநாய்க்கடி குறித்த விழிப்புஉணர்வு இல்லாமலேயே மக்களின் அன்றாட வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. வெறிநாய்க்கடிக்கு போடப்படும் ஊசி மருந்துகளின் விலை மிகவும் அதிகம். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாயாகும். வெறிநாய்க் கடிக்கு ஆளானவர்களின் தொப்புளைச்சுற்றி 16 ஊசிகள் போட வேண்டும் என்ற நிலைமாறி, தற்போது ஐந்து ஊசிகளை இடைவெளி விட்டு போட்டால் போதும் என்றளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெறிநாய்க்கடிக்கு அதிகவிலை கொடுத்து ஊசிபோடும் அளவுக்கு ஏழை மக்களின் பொருளாதாரநிலை இல்லை. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட ஒருநாளில்தான் வெறிநாய்க் கடி ஊசி போடப்படும் நிலையில், வாரத்தில் எந்த நாளில் ஊசி போடுகிறார்களோ அதுவரை, கடிபட்ட நபர் காத்திருக்க நேரிடுகிறது. அதிலும், போதுமான அளவு ஊசி மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே. வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, எந்த விலங்குகளையும் பிடிக்கவோ கொல்லவோ முடியாது. தெருநாய்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் அமைப்புகள், வெறிநாய்கள் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் சொல்வதில்லை.

அளவுக்கு அதிகமாக நாக்கினை வெளியே தள்ளியபடி, எச்சில் ஒழுக ஓடிக் கொண்டிருக்குமானால், அது வெறிபிடித்த நாய் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெறிநாயை மற்ற நாய்கள் விரட்டாது; கடிக்காது; தூரமாக நின்று குரைப்பதுடன் மற்ற நாய்களை 'அருகில் போகாதே' என்று எச்சரிக்கை செய்யும். நோய் தாக்கிய நாயானது, ஒரு இடத்தில் நிற்காமல்,, படுக்கவும் முடியாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதனில் ஆரம்பித்து, ஆடு, மாடு, கோழி, பூனை என எதிர்ப்படும் அனைத்தையும் கடிக்கும். வெறிநாய்க்கடிக்கு ஆளாகும் மனிதர்களில் சிலருக்கு அதன் பாதிப்பு உடனே தெரியும். வேறு சிலருக்கு பத்துநாள்கள் வரை ஆகக்கூடும். பொதுவாகவே நாய்க்கடித்து விட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வெறிநாய்க்கடியால் உயிரிழப்போரில் பெருமளவு சதவிகிதத்தினர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று உலக சுகாதார நிறுவன தகவல் தெரிவிக்கிறது. இந்தப் பிரச்னையை பொறுப்பில் இருப்பவர்கள், சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து போகக்கூடாது என்பதே நமது வேண்டுகோள்!

தி.நகரில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து: தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏன்?- தீயணைப்பு வீரர்கள் விளக்கம்

ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக வைக்கப்பட்ட டீசல் பேரல்களும், சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர்களும் சேர்ந்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தின் கிளையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின.

அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருந்ததால் பிற்பகல் வரை வெளியில் நின்றவாரே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் பொக்லைன் இயந்திரமும், துளையிடும் பெரிய இயந்திரமும் வரவழைக்கப்பட்டு, கட்டிடத்தில் ஆங்காங்கே துளைகள் இடப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் 150 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதில் தாமதம் ஏன்?

10 மணி நேரம் கடந்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். இதற்கு என்ன காரணம் என்று தீயணைப்பு வீரர்களே பதில் அளித்தனர்.

''கட்டிடத்தின் கீழ் தளத்தில் ஜெனரேட்டர்கள் உள்ளன. ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக பெரிய பேரல்களில் டீசல் வைத்துள்ளனர். இதேப்போல 7-வது தளத்தில் உள்ள சமையல் அறையில் காஸ் சிலிண்டர்களும் இருந்துள்ளன. தீயில் டீசல் பேரல்களும், சிலிண்டர்களும் சேர்ந்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், கடை முழுவதும் ஆடைகள் இருந்ததால் அவை எளிதில் தீ பிடித்து எரிகின்றன'' என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 85% தீ கட்டுக்குள் வந்தது: தீயணைப்புத் துறை துணை இயக்குநர்


தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் | படம்: க.ஸ்ரீபரத்.

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 85% தீ கட்டுக்குள் வந்தது என்று தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனக் கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால், இதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீ பிடித்த கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய கரும்புகை, அந்த பகுதி முழுவதும் சூழ்ந்தது. இதனால் பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 150 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் உதவியுடன் 50 லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 10 நிமிடத்துக்கு ஒரு லாரி வீதம் தண்ணீர் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சி கூறுகையில், ''தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் 85% தீ கட்டுக்குள் வந்தது. முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை ஓரளவு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். 7-வது தளத்தில் அதிகளவில் தீ எரிந்து வருவதால் அதனை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 16 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்'' என்றார்.
Unregistered dental professional nominated, cancelled : Nomination against DCI instruction
Source: The Sangai Express
Imphal, May 03 2017: A dental professional not registered with the Manipur State Dental Registration Tribunal was found nominated to the Dental Council of India (DCI) .

After the matter was taken to Court, the nomination was cancelled but the case has not been disposed by the Court.

Head of Department, Orthodontics, Professor Dr Revathi P of Sibar Institute of Dental Sciences, Andhra Pradesh who is not a local dental professional was fraudulently nominated to the DCI by the State Health Department.

According to DCI's instructions, two, local dental professionals should be nominated as its members for a term of five years, informed a source.

However, an order issued by the Principal Secretary (Health and Family Welfare) on August 6, 2013 paved way for nomination of Sibar Institute of Dental Sciences Vice-Principal Dr B Venkat Ramana Reddy and Dr Revathi P as DCI members of Manipur.

Apart from being non-locals, both Dr B Venkat Ramana Reddy and Dr Revathi P were not registered with the Manipur State Dental Registration Tribunal.

Pointing out their ineligibility, complaints were lodged.

Subsequently, Head of Department, Conservative Dentistry, RIMS Dr T Nabachandra was nominated in place of Dr B Venkat Ramana Reddy along with Dr Revathi P as DCI members by an order issued on November 6, 2013 .

Challenging the nomination of Dr Revathi P, Head of Department, Dentistry, JNIMS Prof M Angouba filed a writ petition at the High Court of Manipur and Advocate Babita Thoudam is appearing on his behalf.

Even as the petition is pending at the Court, an order issued by the Commissioner (Health and Family Welfare) on April 19 this year replaced Dr Revathi P by Prof M Angouba as the second DCI member from the State, added the source.
SC appointed OC slams MCI for violating its direction in

A Supreme Court-appointed panel today accused the Medical Council of India (MCI) of negating its aim to ensure "transparency" in assessment of medical colleges by not complying with its direction in selecting the inspectors for assessing the institutions.
The Oversight Committee (OC), formed by the apex court to oversee the functioning of the country's medical education regulator MCI, reaction came following reports that it had legalised more than 3,000 admissions in 26 medical colleges last year, ignoring the recommendation of its own inspectors, who found the institutes lacking in basic facilities.
It said that the assessors were not appointed by them but by the MCI, which was given a list of about 497 inspectors from reputed national institutes, who were to be selected using "random number".
The OC said that it was upto the MCI to ensure that none of the inspectors or assessors conducted more than three assessments each in one year.
While three assessors were to be selected from the committee's approved list and one from the MCI database, the co-ordinator was to be selected from the OC approved list.
"An examination by the OC revealed that in eight instances there was no assessor (out of 4) from the OC approved list, while in five cases, there was only one assessor from the OC approved list.
"In 16 instances, there were two assessors (out of 4) from the OC approved list. There was, therefore, non- compliance with the OC directives on the above count, in 29 out of 33 assessments," the OC, headed by Justice R M Lodha said in a statement.
The guidelines of OC, it said, also required that MCI to ensure that the convenor should always be from the OC approved list.
"This was not followed by MCI in 25 out of 33 assessments," the statement said.
MCI officials, including its president J Mehta, however could not be contacted for comments.
The OC said that it had instructed MCI to restrict the number of assessments conducted by assessors to not more than three each in one year to ensure "transparency and objectivity" in the crucial area of assessments by the MCI.
Despite this, it said, the MCI entrusted assessments ranging between 20 at the minimum to 68 at the maximum to 37 assessors in the period January 1, 2015 to January 31, 2017.
It claimed that 11 assessors were entrusted by the MCI with inspections in each case ranging between 40 at the minimum and 68 at the maximum, which "negated" the intention of OC to ensure objectivity and transparency in assessments of medical colleges.
"The system followed by MCI in violation of the instruction of OC raises questions on the efficacy of using 'random number' in the selection of assessors," it said.
The OC said that 32 institutions have been recommended for disapproval by the MCI which has been endorsed by the health ministry but majority of these 32 institutions have represented to the Ministry and the OC, against the way the inspections had been carried out by the MCI.
"The behaviour and conduct of assessment was more like harassment than assessment. Some of the assessments have been carried out close to the government holiday. In some cases, the copy of assessment report was denied to the college," the OC statement said, reproducing the representations.
(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

விதியை நோவதல்லால்...

By ஆசிரியர்  |   Published on : 01st June 2017 01:45 AM  | 
சென்னை தியாகராய நகரில் உள்ள 'சென்னை சில்க்ஸ்' துணிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அந்த ஏழு மாடிக் கட்டடம் எரிந்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்திற்குக் காரணம் சதித் திட்டம் எதுவும் இல்லை என்பது ஆறுதல். உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது அதைவிட ஆறுதல்.
சென்னை தியாகராய நகரில் இதுபோன்ற தீவிபத்து ஏற்படுவது புதிது ஒன்றுமல்ல. இதற்கு முன்னால் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸிலும் ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸிலும் தீ  விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கு பிறகாவது அரசும் மாநகராட்சி நிர்வாகமும் விழித்துக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறதா என்று பார்த்தால் அப்படியொரு முனைப்பு காணப்பட்டதாகவே தெரியவில்லை.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடையின் கீழ்த்தளத்திலிருந்து கரும்புகை வெளியேறியது. பொதுமக்கள் இதை காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்றபோது அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குக் காரணம் கடையின் முன்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருந்ததே.
குளிர்பதன வசதியுடன் கூடிய அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் நான்கு பகுதிகளும் கான்கிரீட்டால் அடைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவி எல்லா தளங்களும் புகை மண்டலமாக மாறிவிட்டிருந்தன. புகை வெளியேற வழியில்லாததால் ஏற்பட்ட வெப்பத்தால் கட்டடத்திற்குள் இருந்த கண்ணாடிகள், டைல்ஸ் ஆகியவை வெடித்துச் சிதறின. இதனால் தீயணைப்புப் படை வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவிக்க நேரிட்டது. புகையை வெளியேற்றி வெப்பத்தைக் குறைக்கக் கட்டடத்தின் பின்புற சுவர், பக்கவாட்டு சுவர், முன்புறம் இருந்த கண்ணாடிகள், அதன் உட்புறத்திலிருந்த கான்கிரீட் சுவர் ஆகியவை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டன. தீயை அணைக்கும் பணி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடைக்கு இந்த நிலைமை என்றால் ரங்கநாதன் தெருவில் அமைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல வணிக வளாகங்களில் இதுபோன்ற தீவிபத்து ஏற்பட்டால் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் ரங்கநாதன் தெருவில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் அங்கிருக்கும் வணிக வளாகங்களுக்கு செல்லும்போது இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகளைப் பற்றி நாம் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
தவறுகள் நடக்கும்போது அதை எதிர்கொள்வது மட்டுமல்ல ஒரு நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், தவறு செய்பவர்களை தண்டிப்பதும்தான் நல்ல நிர்வாகமாக இருக்க முடியும். கட்டடங்களுக்கு விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கும் நோக்கமே பாதுகாப்பும் சீரான திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சியும்தான். வணிக வளாகங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் விதிமுறைகளை மீறி கட்டப்படும்போது ஒரு சிறிய நில அதிர்ச்சியோ, கட்டுமானத்தில் குறைபாடோ, தீவிபத்தோ மிகப்பெரிய விபத்தில் முடிந்து உயிர்ச்சேதத்திற்கும் பொருள் சேதத்திற்கும் வழிகோலும் என்பதால்தான் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
ஒரு சாலையின் அகலத்தைக் கணக்கில் கொண்டுதான் அதில் கட்டடங்கள் அமைய வேண்டும். குறுகலான சென்னை ரங்கநாதன் தெருவில் வணிக வளாகங்களை அனுமதித்ததால்தான் சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து நேர்ந்தபோது அந்த தெருவில் தீயணைப்பு படையினரால் சுலபமாக உள்ளே நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டது. அதேபோல சென்னை சில்க்ஸ் துணிக்கடை அமைந்திருக்கும் பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு தெருவோரக் கடைகளின் ஆக்கிரமிப்புகள் இருந்ததால்தான் சுலபமாக தீயணைப்பு படை வீரர்கள் செயல்பட முடியாமல் தவித்தனர்.
இதற்கெல்லாம் காரணம் சரவணா ஸ்டோர்ஸோ, சென்னை சில்க்ஸ் நிறுவனமோ அல்ல. மாநகராட்சி நிர்வாகம், அந்த நிறுவனங்கள் விதிகளை மீறாமல் வணிகவளாகத்தை எழுப்புவதை உறுதிப்படுத்தாமல் இருந்ததும், தெருவெல்லாம் ஆக்கிரமிப்புகளை தங்குதடையின்றி அனுமதித்ததும்தான் தவறுக்கு காரணம்.
சென்னை பெருநகரில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் அனுமதி பெறாமலும் வரம்பு மீறியும் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 150 வணிக வளாகங்களும் அடங்கும். இப்படி விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் இடிப்பதை விட்டுவிட்டு விதிமுறை மீறல்களுக்குப் பெயருக்கு ஒரு அபராதம் விதித்து விதிவிலக்கு அளிக்கும் விநோதம்தான் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் செய்யப்பட்ட விதிமுறை மீறல்களை மன்னிப்பது என்றும், தவறுகளை சிறிய கட்டணம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரசே முடிவெடுக்குமானால் தொடர்ந்து விதிமீறல் கட்டடங்கள் எழுப்பப்படுவதில் வியப்பு என்ன இருக்கிறது?
தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் மூன்று மாடிக்கு அதிகமாக உள்ள வளாகங்கள் தடை செய்யப்படுவதும், சென்னை உஸ்மான் சாலை, ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுவதும், அந்தப் பகுதிகளில் தெருவோர ஆக்கிரமிப்புகளும் கடைகளும் அகற்றப்படுவதும் உடனடியாக செயல்படுத்தப்படாமல் போனால் அடுத்த விபத்துக்கு நாம் தயாராகிறோம் என்பது பொருள். மிக அதிகமான உயிர் பலி கொடுத்துதான் நாம் பாடம் படிப்போம் என்றால் அதைவிட முட்டாள்தனம் எதுவும் இருக்க முடியாது!

கட்டுடையும் பிம்பங்கள்!

By பெ. சிதம்பரநாதன்  |   Published on : 01st June 2017 01:44 AM  |
chidabaranathan
Ads by Kiosked
சாதாரண மனிதன் சந்தர்ப்பவசத்தால் அசாதாரணமான மனிதனாக மாறுகிறான். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்குச் சிறைத் தண்டனை வழங்கிய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது உண்மை. அந்த அதிருப்தியாளர்களில் ஓர் அதிருப்தியாளர் மட்டும் வித்தியாசமானார். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் துப்பாக்கி எடுத்தார். ரயில் பெட்டிக்குள் உட்கார்ந்திருக்கிற ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றார்.
யார் சுட்டார் என்று திரும்பிப் பார்க்கும் முன்பே, சுட்டவர் தன்னையும் சுட்டுக் கொண்டு மாண்டார். அவர் 20 வயது இளைஞன் வாஞ்சிநாதன்.
இதை உடனுக்குடன் அறிந்த நெல்லை மக்கள், ஐயோ... ஆஷ் துரையைக் கொன்றுவிட்டானே என்று அதிர்ச்சியடையவில்லை. அடடா, இவன் தற்கொலை செய்து கொண்டானே என்றுதான் அதிர்ச்சியடைந்தார்கள்.
இந்தச் சம்பவத்தின் மூலமாக ஒன்று புரிகிறது. ஒரு சராசரி மனிதன் அசராசரி ஆகின்றான். ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமானவன் ஆகின்றான். சமூக தளத்தில் இவ்வாறு இப்படி வீசிய அலைதான் ஆஷ் துரை வழங்கிய தண்டனைக்கு எதிர்வினையாகியது. இந்த எதிர்வினைதான் வெகுஜன அபிப்ராயம்.
எதிர்வினை ஏற்படுத்தாத ஒரு சமூகம், அநேகமாகப் பிரக்ஞையற்றுப் போன சமூகம்தான். அந்த மக்களை நடமாடும் பிணங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
சமுதாய வளர்ச்சியில் மனிதன் ஒவ்வொரு மைல் கல்லாகத் தாண்டித் தாண்டித் தன் தொடர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறான். மொழி அவனுக்குக் கிடைத்த ஒரு மிக உன்னதமானப் பரிசு.
அதேபோல, காட்டுமிராண்டியாகத் தொடங்கிய அவன் வாழ்க்கையில் கால மைல் கற்கள் பலவற்றைக் கடந்து கடந்து, அவன் உருவாக்கிய ரத்த உறவுகள் மேம்பாடு பெற்று நாகரிகமடைந்தன. விலங்குகளுக்கு மத்தியில் அந்த மேம்பாடு இல்லை. ஈன்ற குட்டியே தாயைப் புணர்கின்ற ஆதி வாழ்க்கையே தொடர்கிறது.
ஆனால், மனிதனைப் பிராணியியல் வல்லுநர்கள் என்னதான் விலங்காகப் பிரித்து இனம் காட்டினாலும், இந்த மனித விலங்கு மட்டுமே அந்த மூல விலங்குகளிலிருந்து மாறுபட்டுத் தாயை தரிசிக்கின்றவனானான். சகோதரியைத் தனது சல்லாபத்துக்கு உள்ளாக்காமல் விட்டு விலகினான்.
மேம்பாடு பெற்ற இந்த நாகரிக உறவை ஒரு தேசம் இன்னொரு தேசத்திற்குக் கற்றுத் தரவில்லை. எல்லா தேசங்களிலும் இந்த உறவு இயற்கையாகவே வளர்ந்துள்ளது. இந்த மலர்ச்சியைத்தான் மனித நாகரிகத்தின் மகோன்னதம் என்கிறோம். பறவை, விலங்குகளுக்கு மத்தியில் இந்த நாகரிகத்தைப் பார்க்க முடியாது. மொழியாலும் ரத்த பாலியல் உறவாலும் உன்னதமடைந்த இந்த மனிதனுக்குள் ஏதோ இன்னொன்றும் உள்ளது. எரிமலை அக்னிக் குழம்பைக் கக்குவதைப் போல, இவனும் வெளியிடுகிறான். அந்த வெளியீடுதான் சமூகத்தின் தீய நிகழ்வுகளுக்கு இவன் காட்டுகிற எதிர்வினையாகும்.
எதிர்வினையைப் போலவே உடன்பாட்டு வினையும் உண்டு. அந்த உடன்பாட்டு வினையில் இவனுடைய உள்மனம் எதை நல்லதென்று காட்டுகிறதோ, அதை ஆமோதிக்கிறான். அங்கீகரிக்கிறான். அதன் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணிக்கிறான்.
அடிமைப்பட்ட இந்திய தேசத்தின் விடுதலைக்காகத் தொடங்கிய போர், ஆரம்ப நிலையில் மிகப் பலவீனமாகத்தான் தொடங்கியது. காந்திஜியின் பின்னால் உப்பு சத்தியாகிரகத்திற்கு வரிசையாக வந்தவர்கள் சொற்ப எண்ணிக்கையாளர்கள்தான்.
காலம் அவரை மக்கள் மத்தியில் பிரகாசப்படுத்திக் காட்டிய பிறகு, வெள்ளையனே வெளியேறு என்று அவர் எழுப்பிய அந்தத் தேசிய முழக்கத்தைக் கேட்டு, காந்திஜியின் பின்னால் அணிவகுத்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை.
வெகுஜன அபிப்ராயம் என்ற மக்கள் கருத்துக்கு அத்தகைய மகத்தான சக்தி இருப்பதை அகிம்சை வழியில் பலமுறை பிரிட்டிஷாருக்குப் புலப்படுத்திக் காட்டியவர் காந்திஜி.
ஆயுதப் பிரயோகத்தால் பெறக்கூடிய அதே வெற்றியை ஆயுதப் பிரயோகம் இல்லாமலும் பெற முடியும் என்பதை காந்திஜி நிரூபித்தார். இதற்கு அவர் பெற்ற சக்தி, வெகுஜன அபிப்ராயம் என்ற மக்கள் கருத்தோட்டம்தான்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் இதைச் சாதித்தார். சுதந்திரத்திற்குப் பின்புள்ள இந்தியாவில் ஜனநாயகம் என்ற பெயரில் இதை நாம் வடிவமைத்திருக்கிறோம்.
ஜனநாயகம் என்பது எதிர்வினையினால்தான் எழுச்சி பெறுகிறது. அந்த எதிர்வினை, குறைந்தபட்ச சேதத்தில் விரும்பத்தக்க மாற்றத்தை விரோதியும் ஒப்புக்கொள்ளும் வகையில் ஏற்படுத்தித் தரும் ஒரு மாயவித்தையாகும்.
அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்தார். அப்போது பிற அரசியல் தலைவர்களின் தொலைபேசிப் பேச்சுகளை இவர் வாட்டர் கேட் என்ற இடத்தில் ஒட்டுக் கேட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது தாக்கலானது. அமெரிக்க நீதிமன்றம் விசாரணை செய்தது.
இறுதியாகத் தீர்ப்பளிக்கும் தேதியில், குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்த நிக்ஸனைப் பார்த்து, ஒட்டுக் கேட்கப்பட்டது உண்மை என்று நீங்கள் ஒப்புக் கொண்டால், நீங்கள் உண்மை பேசுகிற அதிபராகிவிடுகிறீர்கள். அதன் பலன் உங்களுக்கு உண்டு.
ஒட்டுக் கேட்கவில்லை என்று சாதித்தால், அதற்கான தஸ்தாவேஜ்கள், வாதங்கள், பிரதிவாதங்கள் அனைத்தின்படி முடிவு செய்யப்பட்ட தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு இங்கே தயாராக இருக்கிறது. நீங்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.
நிமிட நேரங்கள் கழித்து நிக்ஸன், நான் ஒட்டுக் கேட்கவில்லை என்றே கூறினார். இப்படிப் பொய் சொன்ன குற்றத்திற்காகவே அவர் பதவி இழந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அதிசயமான மற்றொன்று நிகழ்ந்தது. நியூயார்க்கில் அதிபரின் வெள்ளை மாளிகையைக் காலி செய்துவிட்டு, சற்றுத் தொலைவில் உள்ள சொகுசு வசதிகள் நிறைந்த ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தில் குடிபெயர்வதற்காக நிக்ஸன் செல்கிறார்.
அக்குடியிருப்புக்கு அவர் வருகைக்கு முன்பே, அந்த அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் அனைவரும் ஒன்று திரண்டு கீழ்த்தளத்தில் ஒரு தகவல் பலகையோடு அமர்ந்திருந்தார்கள். அந்தத் தகவல் பலகையில், முன்னாள் அதிபர் நிக்ஸன் இங்கு குடியிருக்க வருவாரேயானால், நாங்கள் அனைவரும் எங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறி விடுவோம் என்பதுதான்.
இதை அறிந்த நிக்ஸன் அந்த அடுக்குமாடிக் கட்டடத்திற்குக் குடிபெயரவில்லை. இதுதான் எதிர்வினை என்ற வெகுஜன அபிப்ராயம். இந்த வெகுஜன அபிப்ராயம் மக்களுக்குள் எப்போதும் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். அது விழித்துவிட்டால் அசுர பலம் பெறும். சூறைக் காற்றைப் போலச் சுழன்று அடித்துப் புரட்டிப் போடும்.
இந்த எதிர்வினை எந்த தேசத்தில் வீரியத்தோடு இருக்கிறதோ, அந்த தேசத்தில் எந்த அரசியல் தலைவனும் தீமைகளை மர்மமாகவும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் இந்த எதிர்வினை என்கிற வெகுஜன அபிப்ராயம் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு 2000 தொலைத்தொடர்பு ஊழல் குற்றச்சாட்டு மூலம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்துவிட்டது.
எத்தனை சாதுர்யமாக அந்த வழக்கிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாகியிருந்தாலும், மக்களுடைய மனவோட்டத்தில் அவர்களின் குற்றம் நிழலாடுகிறது. காரணம், இந்த மண்ணுக்கு அந்த உணர்வு இதிகாசக் காலத்திலிருந்து வந்துள்ளதை விபீஷணனின் கதை நமக்கு விளக்குகிறது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர், விபீஷணனை ஆழ்வார் என்று வழிபடுகிறார். ராமபிரான் அவனை இலங்கையின் அரசனாக்கினான். இவர்கள் இருவரும் போல அல்லாமல், இந்தச் சமுதாயம் விபீஷணனுக்குத் தந்த மெளனத் தீர்ப்பு அவன் ஒரு சகோதரத் துரோகி என்பதுதான்.
அதனால்தான் அவன் பெயரை சமூகம் யாருக்கும் சூட்டுவதில்லை. இராவணன், சுக்ரீவன், வாலி பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஆனால், விபீஷணன் பெயரை யாரும் வைத்துக் கொள்வதில்லை. இதுதான் வெகுஜனத் தீர்ப்பின் வெற்றி.
இந்த வெகுஜன அபிப்ராயத்தை ஒரு சூத்திரமாக தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் பிரயோகித்துப் பார்த்தால், காட்சிப்படுத்தப்பட்ட பிம்பங்கள் கட்டுடைகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியின் திருவுருவப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை அம்மா திட்டங்கள் என்று அழைக்கக் கூடாது. சட்டப்பேரவை வளாகத்தில் அவருடைய திருவுருவப் படம் வைக்கக் கூடாது என்ற குரல்கள் அசரீரிகளாக அல்ல } சரியான முக விலாசங்களோடு ஒலிக்கின்றன.
வெகுஜன அபிப்ராயம் என்பது எரிமலையின் அக்னிக் குழம்பாக ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் வந்தால், அத்தீக்குழம்பு பெரிய வீச்சில் வெளிப்படும்.
ஒருவேளை இந்த எரிமலை வெடிக் காமல் போகுமானால், அடுத்து நிகழ்வது எல்லாவற்றையும் கலைத்துப்போடும் அசம்பாவிதமாகவும் இருக்கலாம் என்பதே வரலாறு காட்டும் படிப்பினைகள்.

Numerous warnings fall on deaf ears

By Ram M Sundaram  |  Express News Service  |   Published: 01st June 2017 01:21 AM  |  

CHENNAI: Narrow streets that make it difficult to take fire tenders inside, lack of minimum setback space, absence of separate fire service stairways, accommodating kitchen and storage facilities on the upper floors — almost every single factor that exacerbated the fire was known to authorities, who, however, failed to take action to rectify the fatal drawbacks.
Following a petition by local residents, the Madras High Court had in 2015 directed the Tamil Nadu Fire and Rescue Services (TNFRS) to inspect multi-storey buildings in the area. The report that the force submitted — which incidentally included Chennai Silks, the building that stood burning for hours on Wednesday — had revealed serious concerns that made T Nagar a tinderbox waiting for a trigger.
According to Chennai Metropolitan Development Authority (CMDA) rules, width of access roads for multi-storey buildings from a public road should be 12-18 metres. However, the width of such access roads to commercial buildings, especially ones at Ranganathan Street and Usman Road were narrow, reported the fire service.
For instance, entrances to Usman Road on either side of the flyover near Chennai Silks are only 3.7m and 4.9m wide, making the entry of fire tenders and other emergency vehicles very difficult. The TNFRS assessment was proven right, when firemen struggled to bring in aerial ladder platforms.
Also, the report pointed out that none of the 150 buildings that were inspected met setback requirement of 7m around the building for access to fire vehicles. Most did not have separate fire service staircases, and in the case of those which had, the path was obstructed with heavy good storage, making quick evacuation impossible.
Despite death of three employees in an accident in one of these commercial establishments, upper stories of buildings were continued to be used as kitchens, dining halls and storage rooms, which cramped the escape route without ventilation and low roofing. The inspection team found that Very Early Warning Smoke Detection Apparatus was dysfunctional in most buildings.

Chennai Silks fire: Experts blame failure to enforce Section 113-C rules


By C Shivakumar  |  Express News Service  |   Published: 01st June 2017 06:07 AM  |  

CHENNAI: The fire at Chennai Silks in T Nagar could have been averted if the State government had implemented rules under Section 113-C of the Town and Country Planning Act, 1971 to regularise or grant amnesty to illegal buildings built before July 2007, according to Madras High Court-appointed Monitoring Committee member MG Devasahayam. “If the rules had been implemented, the building would have been sealed under the provisions,” he said.
The rules for Section 113-C have been framed by Chennai Metropolitan Development Authority (CMDA) in consultation with the monitoring committee, following orders of Madras High Court after it struck down earlier rules.
It is learned that 25 buildings, including the Chennai Silks building, on Usman Road in T Nagar, which are unauthorised, will fail relaxations that have been provided under Section 113-C, as none of them have complied with fire safety norms, according to CMDA sources.
The entire T Nagar area was a residential zone, and a section of traders in T Nagar have sought reclassification of area, where large-scale illegal constructions are situated, to commercial zone and pass a special Government Order to legalise buildings.
Interestingly, Usman Road is part of the T Nagar Smart City. Around 1,717 acres of the area was selected for development under area-based development, a component of smart city, with an estimated outlay of `878 crore.
Chennai Silks was facing demolition in 2006
The Chennai Silks building was facing demolition in 2006 after a SC order, according to information available with Express. The demolition was carried out stage-by- stage, but demolished portions were re-built by the owner.
It was in 2007 that an ordinance was passed by the State government, which gave a lifeline to unauthorised buildings wherein punitive actions against all unauthorised developments were suspended. This ordinance was passed by a State government committee, headed by Supreme Court judge S Mohan, to look into all aspects of development.
Just when unauthorised developments were to face the axe again, the Government came up with Section 113-C, and later formed a committee under Justice Rajeshwaran, after Madras High Court struck down rules of regularising illegal buildings while upholding the amendment to the act.

நீட் தேர்வின் தாக்கத்தால் எம்பிபிஎஸ் படிக்க பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்த தமிழக மாணவர்களை ‘நீட்’ தேர்வு கவலையடையச் செய்துள்ளது.
‘நீட்’ தேர்வால் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவு வதால் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளவர்கள் பிலிப் பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ள னர்.இது தொடர்பாக லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவன இயக்குநர் முகமது கனி கூறியதாவது:சீனா, ரஷ்யா பல்கலைக்கழகங்களில் ஓராண்டுக்கு அந்த மொழிகளை கற்க வேண்டியிருப்பதாலும், கடுங்குளிர் காரணமாகவும் நம் நாட்டைப் போன்ற சீதோஷ்ண நிலை, ஆங்கில வழிக்கல்வி, அமெரிக்க மருத்துவப் படிப்பை தரும் பிலிப்பைன்ஸ் நாட்டு மருத்துவக் கல்லூரிகளை நம் மாணவர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.பிலிப்பைன்ஸில் இயங்கும் தவோ மருத்துவக் கல்லூரி, லைசியம் நார்த் வெஸ்டர்ன் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு லிம்ரா நிறுவனம் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக விளங்கு கிறது. நம் மாணவர்கள் 600 பேரை லிம்ரா இங்கு சேர்த்து மருத்துவம் பயிலச் செய்துள்ளது.

தவோ மற்றும் லைசியம் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி, தேர்வு, விடுதி கட்டணம், பயணம், இதர செலவுகள் உட்பட முறையே ரூ.32 லட்சம் மற்றும் ரூ.28 லட்சம் வரை செலவாகும். கல்விக் கட்டணத்தை தவணையிலும் செலுத்தலாம்.லிம்ரா மூலம் அங்கு கல்வி கற்க செல்பவர்களுக்கு உதவுவதற்காக தவோ நகரில் ஓர் அலுவலகம் லிம்ரா சார்பில் இயக்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்பியவுடன் எழுத வேண்டிய எம்.சி.ஐ. தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா மாணவர்கள் 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும்போதே பெறலாம்.

இந்த கல்வியாண்டில் லிம்ரா மூலமாக பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள எம்.சி.ஐ. பயிற்சி வகுப்புகளை லிம்ரா இலவசமாக வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு: லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ். சென்டர், மைலாப்பூர், சென்னை-4. தொலைபேசி: 9445483333/ 9445783333/9444615363.

இன்ஜினியரிங் படிக்க தமிழக மாணவர்களுக்கு...ஆர்வமில்லை!

இன்ஜினியரிங் படிப்பதில், தமிழக மாணவர் களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற் பதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. அதில், இரண்டு லட்சம் இடங்களுக்கு, 1.50 லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட, 30 ஆயிரம் பேர் குறை வாக பதிவு செய்துள்ளனர்; அதே நேரத்தில், கலை, அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க் கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, மே, 1 முதல், 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, நேற்று முடிந்தது. இதில், 1.50 லட்சம் பேர், கவுன்சிலிங் கில் பங்கேற்க முன்வந்துள்ளனர். கடந்த ஆண்டு, 1.84 லட்சம் பேர் பதிவு செய்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 30 ஆயிரம்
பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், மாணவர்களிடம் இன்ஜி., படிக்கும் ஆர்வம் குறைந்திருப்பது தெரிய வந்துள் ளது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் வேலை வாய்ப்பு குறைந்துள் ளது தான் இதற்கு காரணம். ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பில் இறங்கி உள்ளன.


அப்படியே வேலை கிடைத்தாலும், பி.பி.ஓ., என்ற வெளிநாட்டு நிறுவனங்களுக் கான, 'அவுட் சோர் சிங்' பணியாகத் தான் இருக்கிறது. அவற்றிலும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, பல ஆண்டுகளுக்கு பணியில் நீடிக்கும் வாய்ப்பும், சம்பள உயர்வும் கிடைக்கிறது.

மற்றவர்களுக்கு, பணியில் சேர்ந்து, சில ஆண்டுகள் ஆகிவிட்டால், சம்பளம் குறைக்கப் படுவதுடன்,'லே ஆப்' முறையில் வெளி
யேற் றப்படுகின்றனர். அதனால், இன்ஜி., படிப் பில்ஆர்வம் குறைந்து,வணிகம், பொருளியல் மற்றும் ஆசிரியர் பணிக்கான கலை, அறிவி யல் படிப்புகளில், மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்திலும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திலும், வணிகவியல் பிரிவில்,அதிக மாணவர்கள் படித்ததும், இன்ஜி., மாணவர் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் என,கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஒதுக்கீட்டில் ஆர்வம்

கடந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 97 ஆயிரம் இன்ஜி., இடங்கள், காலியாக இருந்தன. இந்த ஆண்டு, காலியிடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை எட்டும் என தெரிகிறது.

கவுன்சிலிங் கில், தாங்கள் விரும்பும் கல்லுாரி யில், விரும் பும் பாடப்பிரிவு கிடைக்காது என்பதால், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட் டில், நேரடியாக, 'அட்மிஷன்' பெற்றுள்ளனர். பல இன்ஜி., கல்லுாரிகள், நன்கொடையை குறைத்துக் கொண்டதும், இதற்கு முக்கிய காரணம்.

PG medical admission deadlock continues

Colleges defiant even as Bedi says show-cause notices will be issued to those rejecting the fee fixed by SC-appointed panel

Even as Lieutenant Governor Kiran Bedi warned of serving show-cause notices to self-financing colleges failing to abide by the fee structure, defiant managements refused to admit student at what they claim as “unviable” fees that threatened the survival of self-financing institutions for postgraduate medical courses.
Entangled in this tussle is the fate of thousands of students.
Since morning, Ms. Bedi camped at the Centralised Admission Committee (Centac) office persuading the students to take the seats available under the government quota. In case the managements refused to accept the fees prescribed by the committee, the government would serve show-cause notices to bring them around, she said.
On the last day, the counselling began at around 10 a.m. and went on till 1 p.m. Around 63 candidates turned up for counselling for about 71 seats and about 26 students selected their seats till 11.30 a.m. The remaining 45 seats will be surrendered to the All India quota, said a Centac official.
The Lieutenant Governor told presspersons that all the seats under the government quota that were due to local students should be filled with candidates from the Union Territory. In case, there was still vacancy, these seats should be surrendered to the Government of India which would reallocate the seats to government quota.
MCI, DGHS informed
The managements could never come in the picture and the seats could not go to management quota. She said that she had informed the president of the Medical Council of India and the Director-General of Health Services of the whole selection process and the list of candidates had been placed before them. The present mess would not be allowed to continue and Centac would be revamped.
As far as the fee was concerned, it had been finalised by the Fee Committee appointed by the Supreme Court. A similar approach would be adopted in respect of admission of students in MBBS in private colleges this academic year, Ms. Bedi added.
However, the college managements were sticking to their guns and refusing to conduct admissions at the fee structure fixed by the government.
On Wednesday, candidates selected through Centac gathered in front of the colleges till late evening waiting for admission as the administration threatened that it would take way the seats if the fees demanded by them was not paid.
A candidate who had selected MD in Dermatology said that the management of a private college remained defiant even after assurances were made by the Health Minister Malladi Krishna Rao.
The management had refused to accept anything less than Rs. 38 lakh for a seat. When the Lt. Governor visited the college, the management initially agreed to admit the students selected under Centac. But once she left, they refused to admit around 30 students who had selected the college unless they paid the full fees.
On the last day of counselling, the candidates selected through Centac were advised by Ms. Bedi to select the seats under government quota and remit the fees prescribed by the fee committee.
Students confused
However, a number of students who turned up for counselling and were selected under the government quota were at a loss since they were not able to decide whether to pay the full fee demanded by the management or the fee prescribed by the fee committee.
A candidate from Andhra Pradesh who had selected MS in Orthopaedics during the counselling held on Tuesday and received the provisional allotment letter was shocked to find that there was no vacancy on Wednesday. “I had remitted Rs. 17 lakh for the course in a self-financing college and received the allotment letter. But the officials now claim that there was no vacancy,” he said.
TODAY'S PAPER

HC fiat on NRI quota for PG medical, dental seats

Bangalore


Stating that all admissions made to postgraduate medical courses under the NRI/management quota in all the medical and dental colleges in the State for the academic year 2017–18 are subject to court’s order, the High Court of Karnataka has made it clear that any vacant seat under the quota shall be filled up only through the common counselling authority.
மினிமம் பேலன்ஸ் கணக்கிடுவது எப்படி?ஓர் அலசல் !!

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது* அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

⛱ முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த *சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே* இதற்குக் காரணம்.
அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், *ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும்.* வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது *30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகை*யாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு..
.
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, *மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது.* அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, *ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை* என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, *மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.*

இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் *சில சலுகைகள் வழங்கப்படுகிறது.*

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் *எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது.* அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...