Sunday, June 4, 2017

Tahsildar


Last updated : 04:13 (04/06/2017)

Vikatan

அவமானம், பணிச்சுமை ! ஆர்.கே.நகரில் இறந்துபோன பெரம்பூர் தாசில்தார் !

 ந.பா.சேதுராமன்

 மீ.நிவேதன்

சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில், கடந்த 31-ம் தேதி   பெரம்பூர்  தாசில்தார்  இறந்து போனார்... தண்டையார் பேட்டையில் முதியோர் ஓய்வூதியம் வழங்கும்  சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் பொறுப்பையும்  கவனித்து வந்தவர் மதன்பிரபு.

'இரண்டு நிர்வாகத்தையும் ஒருசேர பார்த்து வந்ததால்தான்    முப்பத்தியெட்டு வயது மதன்பிரபுவின் , வாழ்க்கை   மாரடைப்பில் முடிந்திருக்கிறது' என்று   வருவாய்த்துறை அலுவலர்கள் கொதிக்கின்றனர்.  'பணிச்சுமை, உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே  மதன்பிரபு உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு, மாநில அளவில் போராட்ட வடிவமாக மாறியுள்ளது. சென்னை வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை பூர்வீகமாகக் கொண்ட மதன்பிரபுவுக்கு  மனைவி, ஐந்து வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் என்று   மிகவும் சிறிய குடும்பம். கடந்த  31-ம்தேதி அதிகாலை இரண்டரை மணிக்கு தண்டையார் பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மதன்பிரபு வீட்டுக்கு வந்திருக்கிறார். மீண்டும் காலை 8-மணிக்கு  அதே அலுவலகத்துக்கு  அவசரமாக வரவழைக்கப் பட்டிருக்கிறார். மதன்பிரபுவிடம் நூற்றுக் கணக்கான பைல்கள் கொடுக்கப் பட்டிருக்கிறது.  பெரும்பாலும் அவைகள் முதியோர் ஓய்வூதியம் தொடர்பான பைல்கள். அவசரகதியில் அவைகளை சரிபார்த்துக்  கொடுத்து விட்டு  அங்கிருந்து பெரம்பூர் தாசில்தார் பணிக்கும் திரும்பி ஓடவேண்டிய நிலை. ஆனால் காலை 11 மணிக்குள் தண்டையார்பேட்டைஅலுவலகத்திலேயே  மதன்பிரபுவின் மூச்சு நின்றிருக்கிறது.  

மதன்பிரபுவின் இறுதி ஊர்வலத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் மற்றும், தமிழ்மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பலர் பங்கேற்றனர்.   சங்க நிர்வாகிகளான சி.கே.குமரன், கே.குமரன், வி.சுந்தரராஜன், கே.சி.ராம்குமார் ஆகியோர், "மதன்பிரபுவின்  மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கும் வரையில் நாங்கள் போராட முடிவு செய்துள்ளோம். பெரம்பூருக்கு மாற்றப்பட்ட  பின்னரும் மதன்பிரபுவிடம்  தண்டையார் பேட்டை தாலுகா அலுவலக பணியை சேர்த்து கவனிக்கும்படி கொடுத்துள்ளனர்.  அடுத்தடுத்த  நெருக்கடி, ஆளுங்கட்சி பிரமுகர்கள்  அடிக்கடி போன் லைனில் வந்து கொடுத்த டார்ச்சரே, அவர் மரணத்துக்கு காரணம். 'என்னை மிகவும் அவமானப் படுத்துகிறார்கள்'  என்றெல்லாம் எங்களிடம்  மதன்பிரபு சொல்லி வருந்தியிருக்கிறார். 

மதன்பிரபுவுக்கு ஏற்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்படி நாங்கள்,  சங்கம் மூலமாகவே வருவாய்த் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை மனு கொடுத்து விட்டோம். அவர்கள்  இதன்மீது  எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. வருவாய்த்துறையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுமே  மதன்பிரபுவை வாட்டி எடுத்து விட்டார்கள்.    பலமுறை வருவாய்த்துறை மந்திரி ஆர்.பி.உதயகுமாருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அவரிடமிருந்து  எந்த பதிலும் வரவில்லை" என்றனர். நாமும் மந்திரியைத் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தோம், அதுவும் நடக்கவில்லை... இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில்தான்  சத்யபிரசாத் என்ற தாசில்தார் தற்கொலைக்கு முயன்றார்... இப்போது மதன்பிரபு செத்தே போயிருக்கிறார்.  மொத்தத்தில் இங்கே உயிரோடு வாழ்வதில் அத்தனை சிரமம் போலிருக்கிறது...
 

Hans India

Kurnool Collector Sridhar comes under scrutiny after not saluting National Flag

Kurnool Collector Sridhar has come under scrutiny during the Telangana Formation Day celebrations held in Kurnool on Friday.

While the National Flag was being hoisted, the Kurnool Collector remained standstill and didnt salute the Flag even though Minister Jupally, Two MLAs and SP were beside him saluting the tricolor.

The collector had done this before as he didn't salute the National Flag even during Republic Day celebrations this year.

However, he explained the reason behind saying that it is not mandatory for a Collector to salute the National Flag as per Rule Book given to them during IAS Training.

Speaking further, Mr Sridhar said that the IPS and police officers wearing uniforms have to salute compulsorily.

Dailyhunt

97 year old appears for MA exam

97-year-old appears for MA exam in Patna

Patna: It was a sunny day and Raj Kumar Vaishya had trouble walking. But determined to get a postgraduate degree, the 97-year-old sat for a three-hour MA exam, along with students younger than his grandchildren.

Vaishya, who graduated in 1938, was appearing for his final year MA (economics) examination at Nalanda Open University (NOU), Patna. The exams began on Thursday and will continue till next week.

He wrote in English and used nearly two dozen sheets, an NOU official said.

"He sat for three hours like every other student, most of them younger than his grandchildren.

It surprised us all, including other examinees," the official said.

Early this year, Vaishya was recognised by the Limca Book of Records as the oldest man to apply for a postgraduate degree.

A rare man, Raj Kumar Vaishya has set an example for millions of people who use age as an excuse to give up on their dreams. "I have decided to prove that even at 97 years, one can fulfil their dreams and achieve anything. I am an example," Vaishya told IANS here.

Vaishya said: "I am also trying to send a message to the youth that defeat should never be accepted. I want to tell them not to get upset and depressed. 'Mauka aur awsar har wakt rehta hai, kewal khud pe vishwas hona chahiyea' (There will be always be opportunities for those who believe in themselves)," Vaishya said in mix of Hindi and Urdu.

He was frank in admitting that it is not easy to follow the routine of a student at his age. "It is really difficult for me to wake up early to prepare for the exams. My first exam was on June 1."

Talking about his routine, Vaishya said he has devoted hours every day to studying and worked hard to prepare for the exams. "If I clear MA this year, my long cherished dream will be fulfilled. I hope I pass with a good percentage like in my first year MA exam."

Vaishya enrolled for the course in 2015. He said he has no plans to pursue a PhD.

NOU officials said the 97-year-old had not requested for any special facility for the exam.

Vaishya, who retired from a private firm in Jharkhand in 1980 after having worked there for over three decades, recalled that he wanted to study economics to understand the problems being facing by the people, and the society as a whole, in the country. "The idea is not to get a degree but to study economics. There are many PhD students who have superfluous knowledge."

Born on April 1, 1920, in Bareilly, he did his graduation from Agra University in 1938 and got a degree in law in 1940.

"I failed to pursue a postgraduate programme at the time due to family responsibilities," he said.

A vegetarian and a lover of simple traditional Indian food, Vaishya said he never consumed fried food and always ate in moderation.

"As one approaches old age, one should pick up a hobby. I regularly read books, newspapers, magazines and watch television serials, including popular historical TV serials like Jodhaa Akbar, Razia Sultan and Maharana Pratap," says Vaishya.

A confident and upbeat Vaishya says he can read without glasses and write in both Hindi and English. "I only take the help of a walker after I fractured my back a few years ago," he says.

The perennially happy Vaishya lives with his son Santosh Kumar in Rajendra Nagar Colony, a posh society in Patna. He has been living here for almost a decade after his wife died.

Before this, he lived with his wife in Bareilly in Uttar Pradesh. He shifted to Patna because there was no one to look after him.

Dailyhunt

Jun 04 2017 : The Times of India (Chennai)
Follow norms for posting doctors: HC
Chennai
TIMES NEWS NETWORK


Trashing the Tamil Nadu government's bid to conduct transfer-counselling for government doctors who are still to complete post-graduate medical courses and whose results are expected next month, the Madras high court has said they should be the last category to be considered for counselling, after regular medical officers selected through TNPSC and medical services recruitment board.Though the government has a GO dated November 20, 2007 specifying the sequence as per which transfer-counselling should be conducted, the present government, by a circular dated May 24, 2017, sought to allow PG medical students who are yet to complete their PG degree to participate in the transfer posting and counseling.
Assailing the order, secretary of Service Doctors Welfare Association, G Suresh, filed a writ petition. The 2007 GO was reiterated by another GO issued in 2017. However, the May 24, 2017 GO seeks to override both the earlier orders unnecessarily , said the petition, adding that PG students who are yet to complete the course could not occupy the posts allotted to them, if they fail in the final examination.
Concurring with the submissions, Justice T Raja directed the government to follow the earlier guidelines for transfer and promotion and made it clear that only thereafter the PG students who would get their results in July or thereafter should be allowed to take part in counselling.
Now, PG medical students in government service will be allowed to take part in counselling only after medical officers appointed by TNPSC, those appointed temporarily but later cleared the special qualifying examination of TNPSC and medical officers selected by Medical Service Recruitment Board.



Jun 04 2017 : The Times of India (Chennai)
NEET must be scrapped, TN govt to tell Madras HC

Chennai:


The Tamil Nadu government plans to tell the Madras high court that National Eligibility cum Entrance Test-2017 (NEET) for MBBSBDS admissions be scrapped. The court has already stayed all proceedings, including declaration of results, and the case is scheduled to come up for hearing on June 7.Officials told TOI that there was no uniform question paper for all languages and there was a conflict of interest as CBSE was asked to set the paper for students from all boards. “Since there was nothing uniform about the examination, the very purpose of a common entrance is defeated. Students writing in some languages had it easier than the others. Also, when CBSE has its own board why is it asked to set the question paper?
Won't there be bias,“ asked a senior official.
On May 24, the Madurai bench of the Madras high court stayed till June 7 all proceedings on NEET after some students sought its cancellation, claiming it was not fair to students writing in different languages.The bench asked respondents, including the state health and family welfare secretary, to file their counters on June 7.
“We have been opposing common entrance since the beginning although the Union health ministry and MCI have been pushing for it. As we expected, NEET was unfair to some students,“ the official said.
After NEET, based on a Supreme Court order, was made the sole criterion for medical and dental admissions in the state, health minister C Vijaya Baskar on January 31 moved two Bills, seeking to exclude TN from it.
While the state had to admit students to PG courses based on NEET-PG marks, chief minister Edappadi K Palaniswami and senior ministers have been lobbying with Union ministers J P Nadda and Prakash Javadekar to exempt TN from the test by getting presidential assent for the state legislation. “We are still hopeful we will be allowed to use Class XII marks for MBBS admissions to state-run colleges,“ said Vijaya Baskar.
CBSE has already said the stay is likely to delay the result, leaving thousands of students and parents worried.
Jun 04 2017 : The Times of India (Chennai)
1.2L students apply for engg counselling
Chennai:
TIMES NEWS NETWORK


With an 82% dip in the registration for counselling in the past five years, the Tamil Nadu Engineering Admission (TNEA) wrapped up its application process on Saturday with seemingly fewer students than ever taking up the state engineering counselling this year.According to TNEA officials, about 1.26 lakh students registered for the counselling which will be conducted by Anna University on July 1. Counselling for special quota students is on June 23. The numbers have fallen from 1.84 lakh registrations last year and are a distant low from the peak of 2.28 lakh in 2012. The fall is being touted as a signal for the steady decline in inter est for the state's counselling process.
However, on Saturday, a few parents and students were spotted on the Anna University campus clarifying last-minute doubts as the deadline for the applications neared. Ramu S, an applicant, said save a minor lastminute glitch with the university's website, the application process went by smoothly. “It was inaccessible for 20 to 30 minutes. But after a while I filled up my form,“ he said.
The applications will now be processed by TNEA officials. Students will be selected from the applicant-pool based on merit (Class XII marks) and will be called for the single-window counselling for seat allotment in colleges affiliated to Anna University.





Jun 04 2017 : The Times of India (Chennai)
9% students fail in CBSE Class X
New Delhi:
TNN


The Central Board of Secondary Education declared the results of the Class X board exams on Saturday , announcing a pass percentage of 90.95%, a significant drop of 5.26% from last year.However, the figures released by the board, which show significant discrepancies in number of candidates and success percentages, had not been clarified till night. The 16.59 lakh candidates had to wait till late evening to access their results, with the central board claiming glitches in the online system due to the “magnitude of the data“.
The 2017 dual exam process had 8.12 lakh students opting to sit for the board exams, while 7.77 lakh chose the schoolbased exams, though the bo ard claimed a higher 16.6 lakh total appearance. According to CBSE, 93.4% of the boys cleared the hurdle against 92.5% of girl students. The pass percentage of differently abled students was 89.4%. Thiruvananthapuram region recorded the highest pass percentage of 99.85%, repeating its success of last year. It was followed by Chennai at 99.62% and Allahabad at 98.23%. The pass percentage for Delhi dropped steeply to 78.1% from 91.76% last year.
This year was the last board-and-school-based dual exam process after the Continuous and Comprehensive Evaluation (CCE) scheme came into being in 2009 and evaluation became the responsibility of schools. The first dual exam system was held in 2011.
The Class X exam will revert to being an exclusively board-based system from next year. This year's pass percentage was almost the same (89.04%) as the pre-CCE days of 2010.
Among Kendriya Vidyalayas, Jawahar Navodya Vidyalayas and private schools, KVS logged the highest pass percentage of 99.73% (not including the results as yet undeclared of 74 students), followed by JNV with 99.66%. Private schools returned a 97.43% figure this year. KVS not only outscored its peers in pass percentage institution-wise, but it also put up an impressive show with 14,897 of its 96,652 students toting up the highest cumulative grade point average (CGPA) of 10.
While the overall number of students scoring a CGPA of 10 crossed two lakh, 25,000 more students sitting for the board exams hit the grade than those appearing for the school exams, proving incorrect the claims that it is easier to get high marks in the school system than in the board-based exam. Among girls, 17,775 more than last year earned the perfect score, while 19,872 more boys achieved a similar level.
Chaos ruled on result day on Saturday as thousands of students were made to wait till late evening to end their suspense.Bhubaneswar region, like on May 28 when the Class XII results were announced, suffered the worst. An “underprivi leged“ CBSE released the results in a staggered manner, unlike in previous years when it opted for a simultaneous announcement of the results for all regions. At 6.10 pm, CBSE spokesperson said, “Schools in all regions have received results. The data being huge, the rest will also be uploaded soon.“
However, many schools across the country complained that they were unable to access the results.
Kendriya Vidyalaya Sangathan officials slammed CBSE after it did not declare the results of nearly 100 of its students.
“While announcing the data to the media, while including the names of these students in the `appeared' list, their results were not included in the pass percentage calculations. This was similar to the Class XII result announcement, when nearly 1,000 students were left out,“ said a senior KVS official.
சினிமா செய்திகள்

பதிவு செய்த நாள்03ஜூன்2017 22:32




60 வயது இயக்குனர் 30 வயது நடிகை டும்டும்...

'நாளைய மனிதன்', 'அதிசய மனிதன்', 'கடவுள்', 'புரட்சிக்காரன்', 'காதல் அரங்கம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன். இவர், சென்னை நுங்கம்பாக்கம் லீமேஜிக் லேட்டீரின் பிரிவியூ தியேட்டரில் நேற்று (ஜூன் 3-ம் தேதி) தன்னை விட சுமார் 30 வயது குறைந்த நடிகை ஷெர்லி தாஸை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். வேலுபிரபாகரன் இயக்கத்தில் 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தின், பத்திரிகையாளர் காட்சிக்கு வந்த இருவரும் இப்படியொரு திருமணத்தை நடத்தினர். ஷெர்லி, வேலுபிரபாகரனின் 'காதல் அரங்கம்' படத்தில் நடித்தவர்.
'வேலு பிரபாகரனின் உண்மை பேசும் தன்மை மற்றும் நேர்மையால் ஈர்க்கப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்கிறேன். சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொள்ள போகிறேன்...' என ஷெர்லியும், 'திருமணத்திற்கு வயது முக்கியமல்ல' என வேலுபிரபாகரனும் கூறியுள்ளனர்.
டிஜிட்டிலில் வருகிறான் 'ஆளவந்தான்'

கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் நடிப்பில் அப்போதே 20 கோடி ரூபாய் செலவில் உருவான படம். தயாரிப்பாளர் தாணு தயாரித்தார். கமலுடன், ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், கிட்டி இவர்களுடன் தெலுங்கு மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் நடித்திருந்தார்கள்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படம் அப்போது பெரிய வெற்றி பெறவில்லை. அப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பாளர் தாணு முடிவு செய்திருக்கிறார். படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். 'ஆளவந்தான்' படத்தின் நீளம் கருதி அப்போது பெரிய பட்ஜெட்டில் உருவான சில சண்டை காட்சிகள் வெட்டப்பட்டன. அந்த காட்சிகளையும் இணைத்து படத்தை வெளியிடுகிறார்.

'காலா'வில் அம்பேத்கராக மம்முட்டி?
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'காலா' படம் பற்றி தினம் ஒரு தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இந்தப்படத்தில் மலையாள 'மெகா ஸ்டார்' மம்முட்டி, அம்பேத்கராக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர்தான் மம்முட்டி. அதனாலேயே மம்முட்டியை இந்தப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. 'காலா' படத்தை தயாரிக்கும் தனுஷ், மம்முட்டியிடம் இதுதொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மம்முட்டி இப்படத்தில் நடித்தால், 'தளபதி' படத்துக்கு பின் 26 வருடங்கள் கழித்து ரஜினியும் மம்முட்டியும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஏற்படும்.-----------
ஆங்கில படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்04ஜூன்2017 02:01

செங்கல்பட்டு;காஞ்சிபுரம் திரையரங்குகளில், 'பே வாட்ச்' ஆங்கில படம் பார்க்க, சிறுவர்களை அனுமதிக்க கூடாது என, திரையரங்கு உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், 2ம் தேதி, 'பே வாட்ச்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. 

இந்த படத்தை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர்,'பே வாட்ச்' ஆங்கில படத்தை பார்க்க, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்க கூடாது என, உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், திரையரங்குகளில் சிறுவர்களைஅனுமதிக்க கூடாது என, உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல காவல்துறை தலைவர், திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், செங்கல்பட்டு, படாளம் ஆகிய இடங்களில் இயங்கி வரும், திரையரங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று, நடைபெற்றது.
அதில், தங்கள் திரையரங்கில், 'பே வாட்ச்' என்ற ஆங்கில படம் திரையிடும் பட்சத்தில், 18 வயதிற்கு உட்பட்டவர்களை அனுமதிக்க கூடாது. திரை அரங்கு முகப்பு வாயிலில், 18 வயதிற்குட்பட்டோர், இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது என, விளம்பர பதாகை அமைக்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.இதே போன்று, வண்டலுார் காவல் துணை கண்காணிப்பாளர் முகிலன் தலைமையில், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அவர்களுக்கும், இதே அறிவுரை வழங்கப்பட்டது.மாவட்ட எஸ்.பி., அறிவுறுத்தல்காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட, அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் குறித்தும், இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், திரையரங்குகளின், வெளியே நோட்டீஸ் ஒட்ட மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி உத்தரவிட்டுள்ளார். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் வழங்ககூடாது என்றும், திரையரங்க மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
டாக்டர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்: அரசு விதிமுறைப்படி நடத்த உத்தரவு
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 21:06

சென்னை, :'இடமாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங்கில், கடைசி கட்டமாக, முதுகலை மருத்துவ மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலஉத்தரவிட்டுள்ளது.

'சர்வீஸ்' டாக்டர்கள் நலச் சங்கத்தின் செயலர், ஜி.சுரேஷ் தாக்கல் செய்த மனு:அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களின் இடமாறுதலுக்கான கவுன்சிலிங் குறித்து, 2007ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. பின், கவுன்சிலிங் வரிசையை, 2017 ஜனவரி யில், அரசு அறிவித்தது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட டாக்டர்கள், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கு, முதல் கட்டமாக, கவுன்சிலிங்கில் வாய்ப்பு அளிக்கப்படும். அதை தொடர்ந்து, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள, அரசு டாக்டர்கள் பரிசீலிக்கப்படுவர்.

மருத்துவக் கல்வி இயக்குனர், 2017 மே, 24ல், ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். வரிசைப்படி கவுன்சிலிங் நடக்கும் தேதிகள், அதில் அறிவிக்கப்பட்டன. பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு முன்னதாக, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்கள், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, இந்த சுற்றறிக்கை வழி வகுக்கிறது.
இது, 2007 அரசாணை மற்றும், 2017 ஜனவரி உத்தரவை மீறுவதாக உள்ளது. எனவே, மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். 2007 மற்றும், 2017 ஜனவரி உத்தரவுகளின் அடிப்படையில், கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன், ''முதுகலை மருத்துவ மாணவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், ஓராண்டு வரை காலியாக இருக்கும். 2007 மற்றும், 2017 ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, முன்னுரிமை அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
அரசு, 2007 நவம்பர் மற்றும், 2017 ஜனவரியில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான வழிமுறைகள், கீழ்கண்ட முறையில் பின்பற்றப்பட வேண்டும்.

* அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மருத்துவ அதிகாரிகளாக, தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய சிறப்பு தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் நடத்தும், போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்று, நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள்
* மேற்கூறியவர்களுக்கு அடுத்த படியாக மட்டுமே, முதுகலை மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களை, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி ராஜா தள்ளிவைத்துள்ளார்.
கவுன்சிலிங் ரத்து

அரசு டாக்டர்களின் பணி இடமாறுதல் கவுன்சிலிங், மே, 29 முதல் நடந்து வருகிறது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முறைகேடுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. அதனால், ஜூன், 2 முதல், 7ம் தேதி வரை, நடைபெற இருந்த இடமாறுதல் கவுன்சிலிங்கை, மருத்துவ கல்வி இயக்ககம் ரத்து செய்துள்ளது.
பயணியிடம் ரூ.20 லட்சம் 'அபேஸ்' ஹவாலா பணமா என விசாரணை
பதிவு செய்த நாள்04ஜூன் 3 2017 01:31




கடலுார், கடலுாரில், பஸ் பயணியிடம், 20 லட்சம் ரூபாயை பறித்து, பதுக்கி வைத்திருந்த போலீசார் சிக்கினர். இது, ஹவாலா பணமா என, விசாரணை நடக்கிறது.

கடலுார் மாவட்ட எல்லையான ஆல்பேட்டை சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து, கடலுார் வந்த அரசு பஸ்சை நிறுத்தி, சோதனையிட்டனர். பயணி ஒருவர், லெதர் பேக்குடன் இருந்தார். அவரை கீழே இறக்கி, விசாரித்தனர்.

அவரது பேக்கில், 50 லட்சம் ரூபாய் இருந்தது. விசாரணைக்கு பின், அந்நபரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி, கடலுார் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் இறக்கி அனுப்பியுள்ளனர்.
அந்த பயணி, தன் நண்பர்கள் மூலமாக, போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதில், தான் 50 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாகவும், போலீசார், 20 லட்சம் ரூபாயை பறித்து, 30 லட்சத்துடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, சோதனை சாவடிக்கு அருகில் உள்ள புதரில் இருந்து, லெதர் பேக் ஒன்றை கண்
டெடுத்தனர். அதில், 2,000 ரூபாய் நோட்டுகள், ஐந்து கட்டு, 500 ரூபாய் நோட்டுகள், 20 கட்டு என, மொத்தம், 20 லட்சம் ரூபாய் இருந்தது.

போலீசார் 'சஸ்பெண்ட்'

ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த, மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏட்டுகள் ரவிக்குமார் செல்வராஜ், ஆயுதப்படை போலீஸ்காரர் அந்தோணிசாமிநாதன் ஆகிய மூவரிடமும், எஸ்.பி., விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின், மூவரும், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பஸ் பயணி கொண்டு வந்தது, ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.


கதிர் வீச்சை தடுக்கும் புதிய ஆடை மதுரை டாக்டர் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்ஜூன் 03,2017 23:20



மதுரை, எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: எக்ஸ்ரே மையங்களுக்கு நோயாளிகளுடன் வருவோர் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் கதிர்வீச்சை தடுக்கும் 'லெட் ஏப்ரான்' எனும் ஆடையை பயன்படுத்துகின்றனர். இதற்கான மாற்று ஆடையை கண்டு பிடித்துள்ளேன்.பிஸ்முத், ஆன்டிமோனி, பேரியம் சல்பேட், பாலிமர் ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரித்தேன். இது 'லெட் ஏப்ரான்' ஆடையை விட 25 சதவீதம் கதிர்வீச்சை தடுக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. விலை குறைவு. 3 கிலோ எடை கொண்டது. மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

மடித்து வைக்க, மறு சுழற்சி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. ஐந்து ஆண்டு ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசு இது.இந்த ஆடையை உருவாக்க 75 ஆயிரம் ரூபாய் செலவானது. இந்திய அளவில் லெட் ஏப்ரானுக்கு முதல் மாற்று ஆடை என்ற பெருமை பெற்றுள்ளது. ஆடை ஒன்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கலாம். மொத்தமாக தயாரிக்கும்போது செலவு குறையும். இக்கண்டுபிடிப்பை அங்கீகரித்து ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனை விருது வழங்கியது, என்றார்.

இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெற ஏ.இ.ஆர்.பி. (அட்டாமிக் எனர்ஜி ரெகுலேஷன் போர்டு) பரிந்துரைக்காக அனுப்பப்படும் என டீன் வைரமுத்து ராஜூ தெரிவித்தார்.
41 வயதில் பிளஸ் 2வில் முதலிடம் பீஹாரில் மோசடி நபர் கைது

பதிவு செய்த நாள்03ஜூன்2017 23:07




பாட்னா, பீஹாரில், தன் வயதை மறைத்து, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, 41 வயது நபரை போலீசார் கைது செய்தனர். அவரை தேர்வு எழுத அனுமதித்த, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து
வருகின்றனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பி.எஸ்.இ.பி., எனப்படும், பீஹார் பள்ளி தேர்வுகள் வாரியம் நடத்திய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வில், கலைப் பிரிவில், கணேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கணேஷ் குமாரின் வயது, 41 என்றும், 1990ல், ஏற்கனவே, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அவர், 2015ல் மீண்டும் ஒரு முறை, 10ம் வகுப்பு தேர்வெழுதி, அதன்பின், இந்த ஆண்டு நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, கணேஷ் குமாரின், நிஜப் பெயர், கணேஷ் ராம். 1975ல், தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த இவர், 1990ல், 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று  உள்ளார்.

அதன் பின், தன் பெயரை, கணேஷ் குமார் என குறிப்பிட்டு, பீஹாரை சேர்ந்த தனியார் பள்ளி மூலம், 2015ல், 10ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்.
அதன் பின், வேறொரு பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த கணேஷ், சமீபத்தில் நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றுள்ளார்.
ஏற்கனவே, 10ம் வகுப்பு படித்ததை மறைத்து, இரண்டாவது முறை தேர்வெழுதியது; வயதை மறைத்து பிளஸ் 2 தேர்வு எழுதியது; போலி பெயர் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில், அவர் மீது போலீசில் புகார் அளித்தோம். அதன்படி, போலீசார் கணேஷை கைது செய்தனர்.

கணேஷ் குமாரின் சான்றிதழ்கள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவருக்கு சேர்க்கை வழங்கிய இரு பள்ளிகளுக்கு எதிராக புகார் அளித்துள்ளோம். அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு, பீஹாரில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி, செய்தியாளர் சந்திப்பின் போது, பாடதிட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு கூட பதில் கூற முடியாமல் திணறினார். 

அந்த மாணவியிடம் நடந்த விசாரணையில், அவர் மோசடி செய்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவியின் சாதனை செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் மருத்துவமனைகளில் ரூ.1.60 லட்சத்திற்கு வேலை

பதிவு செய்த நாள்03ஜூன்2017 22:04

மதுரை, குவைத் எண்ணெய் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் ஜூன் 8க்குள் விண்ணப்பிக்கலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளதாவது: மருத்துவமனை நிர்வாக பிரிவில் டிப்ளமோ மற்றும் ஐந்தாண்டு பணி அனுபவமுள்ள இருபாலரும் மேற்பார்வையாளர்கள், இளநிலை பட்டத்துடன் டிப்ளமோ கம்ப்யூட்டர் தேர்ச்சியுடன் ஐந்தாண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப உதவியாளர்கள், ஓராண்டு பணி அனுபவமுள்ள ஜி.என்.எம்., ஏ.என்.எம்., தேர்ச்சி பெற்றவர்கள் பெண் செவிலியர்கள், பெண் மொழி பெயர்ப்பு கிளினிக்கல் உதவியாளர்கள், அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர்கள் ஆகிய பணிகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் ஜூன் 14 முதல் 24 வரை நடக்கிறது.
மேற்பார்வையார் பணிக்கு 1.60 லட்சம், தொழில்நுட்ப உதவியாளருக்கு 95 ஆயிரம், வார்டு பிரிவு பணியாளருக்கு 74 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தகுதி மற்றும் அனுபவமுள்ளவர்கள் www.omcmanpower.com வலைதளத்தில் உள்ள 'சாம்பல் ரிசுயூம்' என்ற தலைப்பினை கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து omckoc2017@gmail.com என்ற இமெயிலுக்கு ஜூன் 8க்குள் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 044-2250 5886ல் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு பிழைகளை திருத்த ஏற்பாடு
பதிவு செய்த நாள்03ஜூன்2017 19:24

'ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள பிழைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவற்றை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
'ஸ்மார்ட்' கார்டில் உள்ள, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள், மத்திய அரசின், 'ஆதார்' அட்டையில் இருந்து எடுக்கப்பட்டவை. ஸ்மார்ட் கார்டில் உள்ள விபரங்களை, தமிழில் வழங்குமாறு, அரசு தெரிவித்தது.
பழைய முகவரியில் இருந்த பலர், தற்போது புதிய முகவரியில் வசிப்பதாக தெரிகிறது. 

எனவே, முகவரி தவறாக இருந்தால், யாரும் கவலை அடைய தேவையில்லை. கார்டுதாரர், எந்த கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், தங்கள் கார்டை பதிவு செய்தாரோ, அதே கடையில் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம். அந்த கடையில் தான், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
ஸ்மார்ட் கார்டு தரும்போது, முகவரி, பிழை இருந்தால், பொது வினியோகத் திட்டத்தின் இணையதளத்தில் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது நிருபர் -
பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 18:58

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட
உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு
உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
-நமது நிருபர் -


அதிகரிப்பு!
மின்னணு பண பரிவர்த்தனை...கை கொடுக்கும் ஆதார்;இன்டர்நெட்


புதுடில்லி, மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மின்னணு முறை யிலான பணப் பரிவர்த்தனை பெருமளவு உயர்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தவிர, மொத்தம், 100 கோடி பேருக்கு, 'ஆதார்' எண் வழங்கப்பட்டதும், சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தை கணிசமாக குறைத்ததும், மின்னணு பணப் பரிவர்த்தனை உயர்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.





கடந்த, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது உட்பட, பல்வேறு அறிவிப்புகளை, மத்திய அரசு வெளியிட்டது.

இதையடுத்து, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,க ளுக்கு நேரடியாக சென்று பணம் எடுப்பதில் சிக்கல் நிலவியது; மக்கள், மணிக்கணக்கில் வங்கிகளில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வது வேகமெடுத்தது. செல்லாத ரூபாய்

நோட்டு அறிவிப்பு வெளியான, 2016 நவ., முதல், மின்னணு பணப் பரிவர்த்தனை கணிச மான அளவு அதிகரித்துள்ளது. இதை, உலகளவில், இன்டர்நெட் பயன்பாடு குறித்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. சமீபத் தில் வெளியான, அந்த புள்ளி விபரங்கள் படி, செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், இந்தியாவில், இன்டர்நெட் இணைப்புகள் எண்ணிக்கை, 35.5 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகை யில், இது, 28 சதவீதம் அதிகம். இதில், மொபைல் போன் இன்டர்நெட் பயன்பாடு, 80 சதவீதம் உயர்ந்துள்ளது.

தேசிய பணப் பரிவர்த்தனை அமைப்பு மூலம் நடந்த நேரடி பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு, 2,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 'இ - வாலட்' மூலம், 21.5 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந் துள்ளன; முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் இது, 350 சதவீதம் அதிகமாகும். மின்னணு பணப் பரி வர்த்தனை அதிகரித்துள்ளதற்கு, அதிகளவில், ஆதார் எண் வழங்கப் பட்டதும் காரணமாக கூறப்படு கிறது. ஆதார் எண்ணுடன் இணைந்த, 'மொபைல் ஆப்' வழியாக, மின்னணு பணப் பரிமாற்றம் அதிகரிக்க, இது ஏதுவாகி உள்ளது.

2,500 கோடி பரிவர்த்தனை

கடந்த, 2016 - -17ம் நிதியாண்டில், மொத்தம், 300 கோடி டிஜிட்டல்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன; நடப்பு நிதியாண்டில், 2,500 கோடி டிஜிட்டல்
பரிவர்த்தனைகள் நடந்துள்ளன
*மொபைல் போனில் உள்ள, 'ஆப்'கள் மற்றும் 'இ - வாலட்' மூலம், தினமும், 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடக்கிறது
* அரசு சார்பில் உருவாக்கப்பட்ட, 'பீம் ஆப்' 2 கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது
* 'டெபிட் கார்டு' மூலம், 2015 - 16ம் நிதியாண் டில், 1.58 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை கள் நடந்துள்ளன; நடப்பு நிதியாண்டில், 3.3 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது
* செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும் கணிசமாக உயர்ந்துள்ளது* 'ஆன்லைன்' ரயில் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு போன்றவையும் அதிகரித் துள்ளன.

கட்டணம் குறைப்பு

சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'பைல் இன்டர்நெட்' பயன்பாட்டிற்கான கட்ட ணத்தை, சமீபகாலமாக கணிசமாக குறைத்தன. இதன் காரணமாக, மொபைல் போன் பயன்படுத் தும் பலர், மின்னணு பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாகின. குறிப்பாக, 'மொபைல் ஆப்' மூலம் பணப் பரிமாற்றம் செய்வது கணிசமாக உயர்ந்துள்ளது.
மாநில செய்திகள்
சென்னையில் கோலாகலம் 94-வது பிறந்த நாள்-சட்டப்பேரவை வைர விழாவையொட்டி கருணாநிதிக்கு புகழாரம்



தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா, 94-வது பிறந்த நாள் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜூன் 04, 2017, 05:45 AM
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், அவரது 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனை வரையும் வரவேற்றார்.

கருணாநிதிக்கு புகழாரம்

சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

விழாவில், பேசிய தலைவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டி புகழாரம் சூட்டி பேசினார்கள்.

பங்கேற்ற தலைவர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைவர்கள் அனைவரும் கைகளை பற்றிக்கொண்டு உயர்த்திக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

ராகுல்காந்தி

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, “கருணாநிதி மேலும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்றும், நல்ல உடல்நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். கருணாநிதி கோடானு கோடி தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பலம். அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு காரணம், மக்கள் மீது அவர் வைத்திருக்கும் நேசமும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நேசமும் தான். கருணாநிதி பேசும்போது, அது அவர் குரலாக மட்டும் அல்லாமல், தமிழக மக்களின் குரலாகவும் இருக்கிறது” என்றார்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, “கருணாநிதி 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இதுவரை யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஒருமுறைகூட தோற்காத தலைவராக அவர் இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இருக்காது” என்றார்.

பாரத ரத்னா விருது

புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுக்கொண்டு இருப்பவர் கருணாநிதி. தமிழ் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியவர். கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படக்கூடிய தலைவராக கருணாநிதி இருக்கிறார். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் எம்.பி. பேசும்போது, “மம்தா பானர்ஜியின் கொள்கையும், கருணாநிதியின் கொள்கையை எதிரொலிக்கிறது. தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதுபோல, வங்காளத்தில் பெங்காலி இருக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்” என்றார்.

இந்திய அரசியலில் முக்கியமானவர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும்போது, “கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். 60 ஆண்டு காலம் சட்டசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர். அரசியல், சினிமா, பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவர். சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆவதை தடுத்தவர் கருணாநிதி” என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி பேசும்போது, “தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், அமைச்சராகவும் பல்வேறு நிலைகளில் 60 ஆண்டுகள் திறம்பட பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர் கருணாநிதி. அதுமட்டுமல்லாமல் பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். அவருடைய 94-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பேசும்போது, “எனது குடும்பத்தினரின் ஈடுபாடு, கருணாநிதியின் குடும்பத்தினருடன் 3 தலைமுறையாக உண்டு. எனக்கு ஒரு தேர்தலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். ஆனால், 60 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாகவும், முதல்-அமைச்சராகவும் கருணாநிதி இருந்துள்ளார். யாராலும் அசைக்க முடியாத இந்த சாதனையை இந்திய அளவில் செய்துள்ளார். அவரைப் போன்ற தலைவரும், தி.மு.க. போன்ற கட்சியும், தற்போது இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு தேவையாக உள்ளது” என்றார்.

நோபல் பரிசு கிடைக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசும்போது, “கருணாநிதி தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் பன்முக ஆளுமை கொண்ட தலைவர். கருணாநிதி உடல்நலம் பெற்று அவருடைய பேனா மீண்டும் எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் நல்ல ஆரோக்கியம் பெற்று மீண்டும் செயல்பட வேண்டும்” என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் பேசும்போது, “கருணாநிதிக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முன்னதாக பாரத ரத்னா விருதை மத்திய அரசு உடனடியாக வழங்கி, இதுவரை தமிழகத்துக்கு செய்து வந்த துரோகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் பேசும்போது, “இந்தியாவே இந்த விழாவில் இணைந்துள்ளது. தேசிய நலனுக்காக குரல் கொடுத்த மாபெரும் தலைவர் கருணாநிதி. வருகின்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும். தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும்” என்றார்.

இறுதியாக, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் தலைவர்கள், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், டி.கே.ரங்கராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயாளர் ஈஸ்வரன், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இலக்கிய அணி புரவலர் இந்திரகுமாரி, மகளிரணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அபுபக்கர், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் எம்.பி. ஜெயதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Saturday, June 3, 2017

அன்புக்கு இன்னொரு பெயர் அப்துல் ரகுமான்! #RIP
RAJASEKARAN K

தமிழ்மகன்

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அந்த இளைஞன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். சற்று தயங்கி வந்து, ‘‘நீங்கள் தமிழ்மகன் சார் தானே?’’ என்றான்.

எனக்கும் போன பிறவியில் பார்த்த மாதிரி புகைபோல நினைவுக்கு வந்தது... ‘‘நீங்..?’’ நீ என்பதா, நீங்கள் என்பதா?

‘‘மேகநாதன் சார்.’’

அப்படி ஒரு பெயரை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. அந்தப் பெயரைச் சொன்னால் எனக்கு சட்டென நினைவுவரும் என்ற நம்பிக்கையில் அவர் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘‘இந்திரஜித் சார்!’’

‘‘அட நீயா?’’

‘‘ஆமா சார். பெயரை மாத்திக்கிட்டேன்.’’

அவன் பெயர் இந்திரஜித். அவனுக்கு மேகநாதன் எனச் செல்லப் பெயர் வைத்தது கவிக்கோ அப்துல் ரகுமான்.





கலாநிதி மாறன் அனைத்துப் பக்கங்களும் வண்ணத்தில் என்ற அறிவிப்போடு ‘தமிழன்’ நாளிதழ் தொடங்கினார். இது நடந்தது 1991-ம் ஆண்டில்.

அந்த நாளிதழின் இணைப்பிதழாக மூன்று இதழ்கள் உருவாகின. அதற்குச் சிறப்பாசிரியராக அப்துல் ரகுமான் இருந்தார். அந்த மூன்று இதழ்களைக் கவனிக்கும் பொறுப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் சுகுமாரன் ஆகியோரோடு நானும் இருந்தேன். அங்கு அலுவலக உதவியாளராக இருந்தவர்தான் இந்திரஜித்.

சொன்ன வேலையைச் சரியாகச் செய்யாதவர். விளையாட்டுத்தனமானவர். ஒருமுறை அப்துல்ரகுமான், அவரிடம் சிகரெட் வாங்கிவரச் சொன்னார். அவர் சொன்ன பிராண்டுக்குப் பதில் வேறு ஒன்றை வாங்கிவந்தார் இந்திரஜித். அடுத்த முறை சரியாகச் சொல்லி அனுப்பினார். மீண்டும் வேறு ஒரு சிகரெட்டை வாங்கிவந்தார். கலைஞர் வருவதற்குள் ஒரு சிகரெட் பிடித்துவிட்டுத் தயாராகலாம் என்ற பதற்றம் கவிஞருக்கு. உதவியாளரோ, மூன்றாவது முறையும் தவறாக வாங்கிவந்தார். கோபத்தில் கவிஞர், ‘‘அறிவு உனக்குக் குறைவாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டார். முட்டாள் என்று சொல்லவில்லை.

உதவியாளரோ, அவர் திட்டினார் என்பதையே உணர்ந்தார் இல்லை. எங்களுக்கும்தான் தெரியவில்லை. ஆனால், கவிஞர் அன்று வெகுநேரம் யோசனையில் ஆழ்ந்தவராக இருந்தார். அவரை அழைத்து, ‘‘ஒரு தடவை சொன்னா மனசுல உள் வாங்கிக்கணும். அதனால்தான் உன்னைத் திட்டிட்டேன்’’ என்றார். வழக்கமான சிரிப்போடு, ‘‘எப்ப சார்?’’ என்றான் இந்திரஜித். கவிஞருக்கு அப்போதுதான் மனசே லேசானது.

கவிஞர் அப்துல் ரகுமானோடு சுமார் ஆறு மாதங்கள் பழகினேன். பண்பான மனிதர். உலக இலக்கியங்கள் குறித்து நிறைய பேசுவார். கண்ணதாசனோடு தனக்கிருந்த நட்பு, கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய உழைப்பு என நிறைய...



கோபப்பட்டுப் பார்த்ததில்லை. அதாவது, அவருடைய வார்த்தைகளிலிருந்து அதைக் கண்டுபிடிப்பது கடினம். இரண்டு மூன்று நாள்கள் வரிசையாகத் தாமதமாக வந்தேன். ‘‘சீக்கிரமா வந்தாத்தான் நல்லது’’ என்று மட்டும் சொன்னார். ‘குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி’ அது.

இந்திரஜித், தன் பெயரை மேகநாதன் என மாற்றிக்கொண்டதும் மொழிப்பற்றினால் அல்ல; அவருடைய அன்புக்காகத்தான்!

அப்துல் ரகுமான் கவிதைகள் சிலவற்றை இங்கே நினைவுகூர்வோம்.

தேர்தல்

புறத்திணை சுயம்வர மண்டபத்தில்

போலி நளன்களின் கூட்டம்.

கையில் மாலையுடன்

குருட்டு தமயந்தி.


சிலப்பதிகாரம்

பால் நகையாள்

வெண்முத்துப் பல்நகையாள்

கண்ணகியாள் கால் நகையால்

வாய்நகைபோய்க்

கழுத்து நகை இழந்த கதை!

காதல்!

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
எம்.ஜி.ஆர் வழி அல்ல; என்.டி.ஆர் வழி!' -தீவிர ஆலோசனையில் ரஜினிகாந்த்
ஆ.விஜயானந்த்




' நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எப்போது?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. " ஆகஸ்ட் மாதத்துக்குள் அவர் உறுதியாகக் கட்சியைத் தொடங்குவார். கடந்த சில நாள்களாக அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்' என்கின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி பதில் கூறுவதும் பின்னர் அந்த அறிவிப்பு நீர்த்துப் போவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. அதேபோல், கடந்த மாதம் ரசிகர்களை நேரில் வரவழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டவர், ' சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என அதிரடியைக் கிளப்பினார். அடுத்து வந்த சில நாட்களில் இயக்குநர் ரஞ்சித்தின் 'காலா' படத்தில் ரஜினி நடிக்கும் தகவல்கள் வெளியானது. தற்போது காலா படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கிறார். அங்கிருந்தபடியே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். " அரசியல் பயணத்தைத் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. அதற்கான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து வருகிறார். தற்போதுள்ள மாநில அரசு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை தனக்கு சாதகமானதாகப் பார்க்கிறார். தற்போது ரசிகர் மன்றங்களை கிராமம்தோறும் வலுப்படுத்தும் வேலைகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார். மன்றத்தின் விதிகளுக்கு முரணாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். காலா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அரசியல் பணிகளில் வேகமாக இறங்குவார்" என விவரித்த ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் சில விஷயங்களைப் பட்டியிலிட்டார்.

" ரசிகர்களுடன் சந்திப்பு முடிவடைந்த நாளில் இருந்தே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி. ஓரிரு நாட்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர் ஒருவரிடம், நாடாளுமன்றத் தேர்தல், மக்கள் செல்வாக்கு உள்பட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். விவாதத்தில் ரஜினி பேசும்போது, ' அரசியலுக்கு வருவது பெரிதல்ல. மக்களின் பெரும்பான்மை ஆதரவைத்தான் எதிர்பார்க்கிறேன். 50 சதவீதத்துக்கும் மேல் மக்கள் ஆதரவு கிடைத்தால், தலைமைப் பதவியை ஏற்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். அதற்கும் குறைவான ஆதரவு கிடைத்தால், என்னுடைய கட்சியின் சார்பில் மற்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் முன்னிறுத்துவேன். எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய நேரத்தில் 30 சதவீதம் வரையில் ஆதரவைப் பெற்றார். இந்த அளவு ஆதரவைவிட, என்.டி.ராமாராவைப் போல் 50 சதவீத ஆதரவை எதிர்பார்க்கிறேன். அப்படிக் கிடைத்தால், ஆட்சி பொறுப்பில் அமரவும் தயாராக இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ரஜினியிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், ' தேர்தலில் போட்டியிட விரும்பினால், எதிர் எதிர் சமூகங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளில் போட்டியிடுங்கள். அப்போதுதான் இரண்டு சமூகத்தினரின் வாக்குகளும் சம அளவில் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக, வடக்கே குடியாத்தத்தில் வன்னியர்களும் அட்டவணை சமூகத்து மக்களுக்கு சம எண்ணிக்கையில் உள்ளனர். இங்கே நீங்கள் போட்டியிடும்போது பொதுவான தலைவராக உருவெடுக்க முடியும். கூடவே, தெற்கில் ராஜபாளையம் அல்லது சிவகாசி போன்று ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்யலாம். இரண்டு வெவ்வெறு தொகுதிகளில் ஒரேநேரத்தில் போட்டியிடும்போது, மாநிலம் முழுவதும் உங்கள் ரசிகர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்ப்பார்கள். உங்கள் படம் வெளியாகும்போது, என்ன உற்சாகத்தில் இருக்கிறார்களோ, அதே உற்சாகத்தை தேர்தல் பணிகளில் காட்டுவார்கள்' என விவரித்துவிட்டு, ' நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும்போது, சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் சரியானதாக இருக்கும். இதே நிலைப்பாட்டைத்தான் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் பல நேரங்களில் எடுத்துள்ளனர்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரஜினி. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அரசியல் பிரவேசம் குறித்த உறுதியான தகவல் வெளியாகும்" என்றார் விரிவாக.

" தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யாத பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் ரஜினியின் பார்வையாக இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய கால்தடம் வலுவாக பதிய வேண்டும் என ஆசைப்படுகிறார். யாரையும் பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. பாசிட்டிவ் அரசியல் பற்றித்தான் தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார். ' என்னை எதிரியாக நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். நான் யாருக்கும் எதிரி அல்ல' என்பதுதான் அவருடைய தாரக மந்திரம். மற்றவர்கள் தன்னை எதிரியாக நினைப்பதையே மூலதனமாகப் பார்க்கிறார். 'அனைத்து சமூகத்து மக்களுக்கும் பொதுவான தலைவராகக் காட்டிக் கொள்வதற்கும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த செயல்களைச் செய்வதற்கும் இது சரியான தருணம்' என நினைக்கிறார். அதற்கு வெள்ளோட்டமாக, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்கிறார்" என்கிறார் ரஜினியை அண்மையில் சந்தித்த அரசியல் பிரமுகர் ஒருவர்.

'எந்தவொரு செயலிலும் தீவிரம் காட்டுவதற்கு முன்பு ஆழ்ந்து யோசிப்பவர்கள், அதனை செயல்படுத்துவதிலும் தாமதம் செய்வார்கள்' என்பார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது. ' இந்தமுறை ரசிகர்களை அவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

இவர்களும் இந்தியர்கள்தான்!

By ஆசிரியர்  |   Published on : 03rd June 2017 01:29 AM  |   
யுனெஸ்கோ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, இந்தியாவிற்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வேலைவாய்ப்புத் தேடிக் குடியேறி இருப்பவர்களின் எண்ணிக்கை, இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிப் போகிறவர்களின் எண்ணிக்கையைவிட இது பல மடங்கு அதிகம். இப்படி வேலை தேடி இடம்பெயர்பவர்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தையே இயக்கி வருகிறார்கள்.
தங்கள் சொந்த ஊரிலிருந்து வேறு ஊர்களுக்கு வேலைவாய்ப்புத் தேடி இடம் பெயர்கிறவர்களில் பெரும்பாலோர், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்கள். படித்து, நிரந்தர வேலை கிடைத்து இடம்பெயர்பவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை. ஆனால், அதிகம் படிக்காத தினக்கூலி வேலைகளிலும், விவசாய, கட்டடப் பணி உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபடுகிற இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
இப்படி இடம்பெயர்ந்தவர்கள் அரசின் சமூகநலத் திட்டங்களில் பயனாளிகளாக இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, இடம்பெயர்ந்த பெண்கள், குழந்தைகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். அவர்கள் எல்லாவிதக் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும், குறைவான கூலி கூடத் தரப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும்தான் உண்மை நிலை.
இன்றைய சூழலில், இந்தியாவிலுள்ள எந்தவொரு நகரமும், இடம்பெயர்ந்து வந்திருக்கும் வெளியூர் தொழிலாளிகளின் உதவியில்லாமல் இயங்க முடியாது. அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி, உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர், குடியிருப்புக் காவலாளிகள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பு உழைக்கும் வர்க்கத்தினரும் இடம்பெயர்ந்து வெளியூர்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்திருப்பவர்கள்தான். இவர்களது உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நகர்ப்புற வாசிகள், தங்கள் சொந்த ஊரை விட்டு வயிற்றுப் பிழைப்புக்காகப் பட்டணம் வந்திருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து சற்றேனும் கவலைப்படுகிறார்களா என்றால் இல்லை.
இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களிலும் இதுதான் நிலைமை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் சென்னையில், அதுவும்கூட கூவம், அடையாறு கரையோரங்களிலும், கடற்கரைப் பகுதியிலும் மட்டும்தான் குடிசைப் பகுதிகள் இருந்த நிலைமை மாறி, தமிழகத்தில் தாலூகா தலைநகர்வரை குடிசைப் பகுதிகள் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
குடிசைப் பகுதிகள் காளான்களாகத் தோன்றுவது போதாதென்று, நகர்ப்புறங்களில் தெருவோரம் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், அவர்களது உழைப்பையும் சேவையையும் பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் தெருவோரம் வசிப்பவர்களும், குடிசைப்புறவாசிகளும் நகரத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுப்பதாகவும் கருதும் நகர்ப்புறவாசிகளின் இரட்டை முகம் குறித்து வேதனைதான் பட முடிகிறது.
இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வேலைத் தேடி வருபவர்களைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, அவர்கள் அடிப்படை வசதிகளுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதுகுறித்து 60 ஆண்டுகளுக்கு முன்னால் 'சுயராஜ்யா' இதழில் ராஜாஜி விரிவாக எழுதியிருக்கும் கட்டுரை, இன்றளவுக்கும் பொருத்தமானதாக இருப்பது, அந்த மூதறிஞரின் தீர்க்கதரிசனத்தை எடுத்துரைக்கிறது.
இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வருபவர்களைவிட, அதிகமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். கல்வி கற்கும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்றாலும், கூலி வேலை, கட்டட வேலையில் ஈடுபட்டிருப்பவர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குவது நடைமுறை சாத்தியமாகவில்லை. தினந்தோறும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் ஓர் கட்டடத் தொழிலாளர் மரணம் அடைகிறார். அப்படி இருக்கும்போது, கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் குழந்தைகளின் கதி என்ன என்பது குறித்து சிந்திக்கத் தோன்றுகிறது. விபத்துகளில் அந்தக் குழந்தைகள் சிக்காமல் தப்பினாலும், சிமெண்ட், மணல், செங்கல் துகள்களால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. நடமாடும் மருத்துவமனைகள், குழந்தைகள் பாதுகாப்பு, தங்குமிடம், கல்வி வசதி போன்றவை எல்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் பயனளித்திருப்பதாகத் தெரியவில்லை.
சட்டப்படி பெரிய கட்டடப் பணிகளில் 50 பெண்களுக்கு மேல் பணியாற்றினால் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதில்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில்கூட அவர்களை அனுமதிக்க முடியாது. காரணம், இடம்பெயர்ந்து, முகவரி இல்லாமல் இருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை, பருவமழையும் பொய்த்து, ஆறுகளும் வறண்டு கிடக்கும் நிலையில், கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டிருக்கிறது. இவர்களது பிரச்னைகளை விசாரித்து அறிந்து, தீர்வு காண்பதற்காகவே தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையை சரியான முறையில் அணுகாமல் போனால், வருங்காலத்தில் சமூக விரோதிகளை உருவாக்குவதற்கு நாம் வழிகோலுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

குறைந்துவரும் பொறியியல் கனவு

By ஐ.வி. நாகராஜன்  |   Published on : 03rd June 2017 01:26 AM  |   
ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தின் கனவாக பொறியியல் படிப்பு இருந்தது. பொறியியல் படிப்பு மீதான மக்களின் மோகத்தால் மழையில் முளைத்த காளான்கள் போல் நாடு முழுவதும், குறிப்பாக, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் வேகமாக பரவின. ஆனால் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்பதுதான் வேதனை.
பல பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பாடம் நடத்துவதற்கு தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பற்றாக்குறை. இதன் விளைவாக பொறியியல் பட்டதாரிகளின் 70 சதவீதம் பேர் தொழில் திறன் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த அளவிற்குத் தான் பொறியியல் கல்லூரிகளின் தரம் இருக்கிறது. அதேபோல் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளை புறக்கணிக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் பொறியியல் படித்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்து அறிவியல், கலை மற்றும் வணிகவியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 527.
இதில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 481. இதில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை ஓரு லட்சத்து 56 ஆயிரத்து 867. இதனால் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 614 இடங்கள் காலியாக இருந்தன.
குறிப்பாக தமிழகத்தில் இருந்த 148 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது போல பொறியியல் படிப்பு முடித் து தமிழ்நாட்டில் மட்டும் 70 சதவீதம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
இந்திய அளவில் தமிழகம் தான் இதில் முதலிடம் வகிக்கிறது என்பது பெரும் வேதனை. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். கலை, அறிவியல் பட்டதாரிகள் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் பேர் இந்த படிப்பை முடித்து விட்டு வெளியில் வருகின்றனர். இவர்களை தொடர்ந்து 1.5 லட்சம் பேர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வெளியில் வருகின்றனர்.
அவர்களுக்கு அரசு தரப்பில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக பொறியியல் படித்த மாணவர்களுக்கு பொதுப்பணித்துறையில் 700, நெடுஞ்சாலைத் துறையில் 972, மின் வாரியத்தில் 1650 பொறியாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இப்போதைய நிலையில் காலியாக உள்ளன.
அந்த பணியிடங்களை நிரப்பவும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்த நாளுக்கு முந்தைய நாள் வரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 377 பொறியியல் பட்டதாரிகள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தமிழக வேலைவாய்ப்பு அலுவலக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான வேலை பெற முடியாதது மட்டுமின்றி, பி.இ. படித்தும் சாதாரண வேலையில் ரூ.5,000 சம்பளத்திற்கு பணியாற்றும் கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் இன்னும் பல லட்சம் பேருக்கு இப்படி வேலை பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இவர்களுக்கான வேலைவாய்ப்பை உடனடியாக உருவாக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைய தாராளமய சூழலில் கார்பரேட் நிறுவனங்கள் மின்னனு, மின்னியல், ஆட்டோ மொபைல் போன்ற பல துறைகளிலும் இந்தியா கால் பதித்து வருகிறது. இவற்றில் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை பயிற்சி என்ற அளவிலேயே தந்து அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றன.
இவ்வாறு பயிற்சியாளராக சேரும் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு உள்ளேயே தள்ளப்படுகின்றனர். இத்தகைய நிலை சென்னை, பெங்களூரு, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் சர்வ சாதரணமாக நடைபெறுகிறது. இதன்மூலம் தொழிலாளர் நல சட்டங்களையும், இந்திய அரசியல் நடைமுறைகளையும், மிக சாமார்த்தியமாக அந்த நிறுவங்கள் மீறுகின்றன.
அதே நேரத்தில் மிகப்பெரிய சலுகைகளை மத்திய மாநில அரசுகள் மூலம் பெற்று நமது பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு அள்ளி செல்கின்றன.
நடப்பு கல்வியாண்டில் (2017 - 18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் வரை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும் பொறியியல் இடங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 527-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 510-ஆக குறைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை இல்லாததால் பொறியியல் கல்லூரிகள் பல இழுத்து மூடப்பட்டு வருகிறது. பல கல்லூரிகள் விற்பனைக்கும் தயாராய் உள்ளன. போதிய மாணவர் கோரிக்கை இல்லாத கல்லூரிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
அரசு ஆக்கப்பூர்வமாக யோசித்தால் திறன் வாய்ந்த கல்வியாளர்களையும் அற்புதமான கல்விச்சாலைகளையும் உருவாக்க முடிவும். அதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வருமா?

முற்றுப்பெற்றது ஒரு சகாப்தம்!

By முனைவர் ஜெ. ஹாஜாகனி  |   Published on : 03rd June 2017 01:28 AM 
Haja
Ads by Kiosked
உலகம் வியக்கும் வகையில் தமிழை உச்ச உயரத்திற்கு உயர்த்திய ஆளுமைகள் காலந்தோறும் இருந்துள்ளனர். நம் காலத்து ஆளுமையில் அத்தகையத் தகுதியை மிகுதியாய் பெற்று திகழ்ந்த மேதை கவிக்கோ அப்துல் ரகுமான் என்றால் மிகையில்லை.

வாழ்வின் ஒவ்வொரு கணமும் கவித்துவம் ததும்ப, தத்துவச் சுடர் வீசி நிறைவாழ்வு வாழ்ந்த அவர், நேற்று (மே 2, 2017) தன் சுவாசிப்பையும் வாசிப்பையும் நிறுத்தி பிரியா விடை பெற்றுள்ளார்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், 9.11.1937 அன்று உயிரெழுத்தால் உதித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை ஹதியும், பாட்டனார் அஷ்ரஃபும் மிகச் சிறந்த உருதுக் கவிஞர்கள். தான் பயின்ற மதுரை தியாகராசர் கல்லூரியை தனது இரண்டாம் கருப்பை என்பார் கவிக்கோ.
கவித்துவம் இவரது பால்யத்திலேயே பரிணமித்துள்ளது. பள்ளி மாணவனாக 14 வயதில் இவர் எழுதிய 'காதல் கொண்டேன்' என்ற கவிதை 'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகியுள்ளது. இவருக்குள் ஊற்றாய்ச் சுரந்த கவியுணர்வைக் காட்டாற்று வெள்ளமாய்க் கட்டுடைத்து பிரவகிக்கச் செய்தது ரமலான் மாதத்து சஹர் (வைகறைக்கு முந்தைய) பொழுது பாடல்களே.
நோன்பு நோற்பதற்காக மக்களை துயிலெழுப்பி, உணவுண்ணச் செய்வதற்காக, மதுரை சந்தைப் பேட்டையில் பாடும் சிறுவர் குழாமுக்குத் தலைமை ஏற்று, தந்தையும் பாட்டனும் எழுதித் தந்தப் பாடல்
களைத் தெருக்களில் பாடிச்சென்றபோது, கவியுணர்வும் பெரும் தாக்கத்தோடு வளர்ந்ததாக 'கவிதை என் பிதுரார்ஜிதம்' (1994) என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அதே ரமலான் மாதத்தில், கவிக்கோ தன் மூச்செழுத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது வருத்தம் தோய்ந்த பொருத்தம் ஆகும்.
'நான் கவிதை சமைப்பதற்காக படைக்கப்பட்டேன். காலம் என்னை அப்படித்தான் உருவாக்கியது. அட்சயப் பாத்திரம்போல இளம்வயதிலிருந்தே நான் கவிதைகளைப் பிச்சையாகப் பெற்றேன். கவிதைகளையே பரிமாறினேன். கவிதைக்குப் புறம்பான எதுவும் என்னில் கலந்துவிடாமல் சூழல் என்னைப் பத்திரமாகக் காப்பாற்றியது' என்று குறிப்பிடும் கவிக்கோ, தமிழிலக்கிய உலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வியக்கத் தக்கதாகும்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால் வீதி' தமிழில் மீமெய்மையியல் (sur-realism)  கோட்பாட்டின் முதல் பரிசோதனை முயற்சியாகும்.
இத்தொகுப்பு ஏற்படுத்திய அதிர்வும், அதன் விளக்கமாக இவர் எழுதிய 'மரணம் முற்றுப்புள்ளி அல்ல' என்ற கட்டுரைத் தொகுப்பும் புதுமைத் திறத்தால் புல்லரிப்பு தருபவை. 'சையத் அப்துல் ரகுமான் எழுத்துலகிலும், பேச்சுலகிலும் இணையற்றவராய் திகழும் திறன் பெற்றவர்' என்று இவரை மாணவப் பருவத்தில் வாழ்த்தி எழுதியுள்ளார் செந்தமிழ் மாமணி சி. இலக்குவனார். அ.கி. பரந்தாமனார், ஒளவை சு. துரைசாமியார் உள்ளிட்ட பேரறிஞர்களிடம் பிரியத் தமிழ் பெற்று அதைப் பிரியாத வரங்கொண்டார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
தமிழ்க் கவிதைக்கு முதல் சாகித்ய அகாதெமி விருது, இவரது 'ஆலாபனை' தொகுப்புக்காக, 1999-இல் கிடைத்தது.
கவிஞராய், எழுத்தாளராய், பேராசிரியராய், தத்துவ ஞானியாய், அரசியல் விமர்சகராய், புதிய தலைமுறையின் வழிகாட்டியாய், பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்துள்ள பங்களிப்புகள் ஏராளம். கவிதையின் வடிவத்திலும், கவியரங்க வடிவத்திலும் ரசனைக்குரிய மாற்றங்களைச் செய்தார்.
ஜப்பானிய ஹைகூ வடிவக் கவிதையை தமிழில் அறிமுகம் செய்து வெகுஜன இதழ்களில் கட்டுரை எழுதி, ஏராளமானோரை ஹைகூ எழுதவும் வைத்தார்.
அரபியிலும், பாரசீகம் மற்றும் உருது மொழியிலும் புகழ்பெற்ற 'கஸல்' என்னும் கவிதை வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். 'நஜ்ம்' என்ற இசைப்பா வடிவையும், 'இரு சீர் ஓர் அடி' என்ற புதிய கவி வடிவத்தையும் தமிழுக்குத் தந்தார்.
'புதுக்கவிதையில் குறியீடு' என்ற புதிய தளத்தில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் பிற மொழிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புகழ்பெற்றுத் திகழும் கவிதைகள், இலக்கிய இயக்கங்கள் குறித்து எழுதி, உலகச் சாளரத்தைத் தமிழர்க்குத் திறந்து வைத்தார்.
1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்ட இந்திய ஒப்பிலக்கியம் (Competitive Indian Literature)  என்ற தொகுப்பில் தமிழ் நவீன கவிதை இலக்கியம் குறித்து, Tamil Modern Policy  என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் அறிமுகப்படுத்தும் அற்புதப் பணியை ஆழமாகவும், அழகாகவும் செய்தவர் கவிக்கோ.
தொலைக்காட்சியில் இவர் நடத்திய 'கவிராத்திரி' நிகழ்வு புதுமையுள்ளம் கொண்ட கவிஞர்களை, இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது.
கவியரங்கங்கள் அவருக்கு மகுடம் சூட்டின. கவியரங்கக் கவிதைகளுக்கு அவர் சிம்மாசனம் தந்தார். கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கங்கள் அனைத்திலும் பங்கேற்ற ஒரே கவிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'வெற்றி பல பெற்று நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்'

என்று கலைஞர் கருணாநிதி இவரைப் பற்றி பாடிய கவிதை பிரசித்தமானது. கலைஞர் கருணாநிதி மண்ணுக்கு வந்த ஜூன் 3-ஆம் தேதியன்று அவரின் காதலரான கவிக்கோ மண்ணுக்குள் போவது சோகம் ததும்பும் முரண்.
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் முப்பதாண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய காலத்தில், இளைய உள்ளங்களில் இலக்கிய வேளாண்மையை முழு வீச்சோடு செய்துள்ளார்.
'அம்மி கொத்த சிற்பி எதற்கு' என்று கேட்டு திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதை மறுத்தவர். திரையுலக மாமேதைகளின் பெரும் மதிப்பைப் பெற்றவர்.
'அந்தி ஏன் சிவக்கிறது', 'சுடுகாட்டில் ஒரு தொட்டில்' 'இலவசத்திற்கு ஒரு விலை' என வித்தியாசமான தலைப்புகளை மாணவர்களுக்குத் தந்து, செம்மையாக எழுத வைத்து அவற்றை நூலாக்கி வெளிவரச் செய்தவர்.
மீரா, இன்குலாப், மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், சிலம்பொலியார் உள்ளிட்ட இலக்கிய உள்ளங்களோடான இவரது அனுபவங்களைக் கேட்கும்போது, இளம் தலைமுறைக்கு புலன்களெல்லாம் பூப்பூக்கும்.
தமிழ்கூறு நல்லுலகமெங்கும் தலைமீது வைத்துக் கொண்டாடப்பட்ட காலத்திலும், கல்லூரி பேராசிரியராக, அப்போதைய வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி நிர்வாகம் அவருக்குத் தந்த வலிமிகு அனுபவங்களை, அவருடனான கடைசி சந்திப்பில் என்னிடம் விரிவாகக் கூறினார்.
அவர் பொழிந்த பாசமும், ஊட்டிய அறிவும், உணர்வும், உள்ளம் கலங்கும் நேரத்திலெல்லாம் உந்துசக்திகளாகி உதவியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் யுகபாரதி, இசாக் ஆகியோருடன் அவரை நலம் விசாரிக்கப் போனேன். சிறுநீரகக் கட்டிக்கு சிகிச்சை பெற்ற வலிக்கு மத்தியிலும், தான் குறிப்பெடுத்து வைத்திருந்த மிகப் பழைய ஏட்டைத் தேடிப் பிடித்து எடுத்து வந்து, மலையாளக் கவிஞர் வயலார் உள்ளிட்டோரின் வசீகரக் கவிதைகளை வாசித்துக காட்டினார்.
அவரது உடல்நிலை குறித்து ஓரிரு வரிகளே சொன்னார். அன்றைய உரையாடல் முழுவதும், இலக்கியத்தாலும், சமூக அக்கறையாலும் கனத்தது.
அபாரமான ரசனை உடையவர் அப்துல் ரகுமான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, குடிக்கும் தேநீர், கேட்கும் இசை, பூசும் மணம் அனைத்திலும் அவரிடம் ரசனை ததும்பும்.
கீழக்கரையில் ஒரு நிகழ்ச்சிக்காக அவருடன் பயணம். அதிகாலையில், தொழுது விட்டு மீண்டும் தொடர் வண்டியில் தூக்கத்தைத் தொடர்ந்தபோது, கவிக்கோ எழுப்பினார். வாருங்கள் என்றார். உடன் சென்றேன், ரயில் பெட்டியின் கதவைத் திறந்து, வயல்வெளிகளின் மீது கூட்டங் கூட்டமாய்க் கொக்குகள் பறப்பதைக் காட்டினார்.
'யான் பெற்ற இன்பம் பெறுக யாவரும்' என்பது அவரது நல்லுள்ளம்.
தனது கவித் தோன்றல்களை ஒரு தாய்க்கோழி போல அரவணைத்தவர் அவர்.
'இலக்கியங்களின் மூலம் இந்திய இணைப்பு' என்ற மிகப் பெரிய நூலில்,
தமிழ்க் கவிஞர்களின் பிரதிநிதியாக கவிக்கோ அப்துல் ரகுமானிடம் பேட்டி கண்டிருப்பார் எழுத்தாளர் சிவசங்கரி.
'நூலகங்களில் பல மணி நேரம் செலவிட்டு பல நூற்களைப் படிக்க முடியாதவர்கள், அப்துல் ரகுமானிடம் உரையாடினால் அந்த அறிவையும், அனுபவத்தையும் பெறலாம் என்று குறிப்பிட்டிருப்பார்.
உரையாடலை அவர் நிறுத்தியிருக்கலாம். அவர் எழுத்துகளோ, நம்மிடம் உரையாடிக் கொண்டேயிருக்கும்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...