Sunday, June 4, 2017



அதிகரிப்பு!
மின்னணு பண பரிவர்த்தனை...கை கொடுக்கும் ஆதார்;இன்டர்நெட்


புதுடில்லி, மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மின்னணு முறை யிலான பணப் பரிவர்த்தனை பெருமளவு உயர்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தவிர, மொத்தம், 100 கோடி பேருக்கு, 'ஆதார்' எண் வழங்கப்பட்டதும், சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தை கணிசமாக குறைத்ததும், மின்னணு பணப் பரிவர்த்தனை உயர்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.





கடந்த, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது உட்பட, பல்வேறு அறிவிப்புகளை, மத்திய அரசு வெளியிட்டது.

இதையடுத்து, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,க ளுக்கு நேரடியாக சென்று பணம் எடுப்பதில் சிக்கல் நிலவியது; மக்கள், மணிக்கணக்கில் வங்கிகளில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வது வேகமெடுத்தது. செல்லாத ரூபாய்

நோட்டு அறிவிப்பு வெளியான, 2016 நவ., முதல், மின்னணு பணப் பரிவர்த்தனை கணிச மான அளவு அதிகரித்துள்ளது. இதை, உலகளவில், இன்டர்நெட் பயன்பாடு குறித்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. சமீபத் தில் வெளியான, அந்த புள்ளி விபரங்கள் படி, செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், இந்தியாவில், இன்டர்நெட் இணைப்புகள் எண்ணிக்கை, 35.5 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகை யில், இது, 28 சதவீதம் அதிகம். இதில், மொபைல் போன் இன்டர்நெட் பயன்பாடு, 80 சதவீதம் உயர்ந்துள்ளது.

தேசிய பணப் பரிவர்த்தனை அமைப்பு மூலம் நடந்த நேரடி பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு, 2,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 'இ - வாலட்' மூலம், 21.5 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந் துள்ளன; முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் இது, 350 சதவீதம் அதிகமாகும். மின்னணு பணப் பரி வர்த்தனை அதிகரித்துள்ளதற்கு, அதிகளவில், ஆதார் எண் வழங்கப் பட்டதும் காரணமாக கூறப்படு கிறது. ஆதார் எண்ணுடன் இணைந்த, 'மொபைல் ஆப்' வழியாக, மின்னணு பணப் பரிமாற்றம் அதிகரிக்க, இது ஏதுவாகி உள்ளது.

2,500 கோடி பரிவர்த்தனை

கடந்த, 2016 - -17ம் நிதியாண்டில், மொத்தம், 300 கோடி டிஜிட்டல்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன; நடப்பு நிதியாண்டில், 2,500 கோடி டிஜிட்டல்
பரிவர்த்தனைகள் நடந்துள்ளன
*மொபைல் போனில் உள்ள, 'ஆப்'கள் மற்றும் 'இ - வாலட்' மூலம், தினமும், 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடக்கிறது
* அரசு சார்பில் உருவாக்கப்பட்ட, 'பீம் ஆப்' 2 கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது
* 'டெபிட் கார்டு' மூலம், 2015 - 16ம் நிதியாண் டில், 1.58 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை கள் நடந்துள்ளன; நடப்பு நிதியாண்டில், 3.3 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது
* செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும் கணிசமாக உயர்ந்துள்ளது* 'ஆன்லைன்' ரயில் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு போன்றவையும் அதிகரித் துள்ளன.

கட்டணம் குறைப்பு

சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'பைல் இன்டர்நெட்' பயன்பாட்டிற்கான கட்ட ணத்தை, சமீபகாலமாக கணிசமாக குறைத்தன. இதன் காரணமாக, மொபைல் போன் பயன்படுத் தும் பலர், மின்னணு பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாகின. குறிப்பாக, 'மொபைல் ஆப்' மூலம் பணப் பரிமாற்றம் செய்வது கணிசமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

MBBS/BDS application portal to reopen

MBBS/BDS application portal to reopen  TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...