Thursday, June 29, 2017

'பான்' கார்டுக்கு ஆதார் கட்டாயம் :ஜூலை 1 முதல் அமலுக்கு வருது

புதுடில்லி: வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், 'பான்' கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய பான் கார்டுக்கு, ஆதார் எண் குறிப்பிடுவதை, ஜூலை, 1 முதல் கட்டாயமாக்கும் முறையான அறிவிப்பை, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

பார்லியில் நிறைவேற்றம் : வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்கும், ஆதார் எண்ணை குறிப் பிட வேண்டும். வரும், ஜூலை, 1 முதல் இது கட்டா யமாக்கப்படுகிறது. இதற்காக,

வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பார்லி மென்ட்டில் நிறைவேறியது.

இதற்கிடையே, இதை எதிர்த்து பல்வேறு வழக்கு கள், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன. 'ஏற்கனவே ஆதார் உள்ளவர்கள், தங்கள் பான் கார்டுடன், அதை இணைக்க வேண்டும். ஆதார் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2.07 கோடி பேர் : அதைத் தொடர்ந்து, ஆதாரை கட்டாயமாக்கும் வகையில், வருமான வரிச் சட்டத் தில் கொண்டு வரப்பட்ட திருத்தம், வரும், ஜூலை, 1 முதல் நடைமுறைக்குவருவதாக, சி.பி.டி.டி.,




எனப்படும் நேரடி வரி வாரியம் நேற்று அறிவிப்பு வெளி இட்டு உள்ளது.மத்திய அரசின் கணக்கின்படி, நாடு முழுவதும், 111 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப் பட்டுள்ளது. 25 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். இதுவரை, 2.07 கோடி பேர், தங்கள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...