Sunday, June 18, 2017


சென்னை அருகே ரூ.71 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மலேசியர் உள்பட 10 பேர் கைது

By DIN | Published on : 18th June 2017 04:41 AM

சென்னை அருகே செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்து மலேசியர் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள சோப்பு பவுடர் தயாரிக்கும் நிறுவனத்தில் போதைப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து அந்த ஆலையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை செய்தனர். அங்கு பல கோடி மதிப்புள்ள மெதம்பேட்டமைன், பெசுடோபெட்டரைன், ஹெராயின் ஆகியவை தயாரித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, பெயரளவுக்கு அங்கு சோப்பு பவுடர் தயாரித்து வந்ததும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.71 கோடி மதிப்புள்ள 11 கிலோ மெதம்பேட்டமைன், 56 கிலோ பெசுடோபெட்டரைன், 90 கிலோ ஹெராயின் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கிருந்த ஒரு மலேசியர் உள்பட 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சர்வதேசக் கும்பலுடன் தொடர்பு: கைது செய்யப்பட்டவர்கள், போதைப் பொருள்கள் தயாரிப்பதற்காக இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மூலப் பொருள்களை சென்னைக்குக் கடத்தி வந்துள்ளனர். சென்னையில் ஒரு கிட்டங்கியில் அந்த மூலப் பொருள்களை பதுக்கி வைத்துக் கொண்டு, தேவைக்கு ஏற்றாற்போல செங்குன்றம் ஆலைக்கு அவ்வப்போது கொண்டு வந்துள்ளனர்.

தேவையான இயந்திரங்களை நிர்மாணித்து அவற்றின் மூலம் போதைப் பொருள் தயாரித்து உள்ளனர். வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தும் நபர் மூலம், இங்கு தயாரிக்கப்பட்ட போதைப் பொருள்களை துறைமுகம், விமானம் வழியாக மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தி வந்துள்ளனர்.

இங்குள்ள போதைப் பொருள் தயாரிக்கும் கும்பலுக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்ட நபரை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருள் தயாரித்த அந்த ஆலைக்கும்,மூலப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கிட்டங்கிக்கும் சீல் வைக்கப்பட்டது. சென்னையில் அண்மைக்காலமாக நடைபெற்ற சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களில்,இப்போது கைப்பற்றப்பட்டதே அதிக மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

































சென்னை சில்க்ஸ் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த ‘லாக்கர்’! - இடிப்பு பின்னணி சொல்லும் ஒப்பந்ததாரர்
எஸ்.மகேஷ்




“சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ள நான்கு தூண்களை இடித்து, கட்டடத்தின் ஒரு பகுதியை முழுமையாக தரைமட்டமாக்கினோம்” என்று கட்டட இடிப்பு ஒப்பந்ததாரர் பீர்முகமது தெரிவித்தார்.


சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த 31 ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கே பல மணி நேரமானது. மணிக்கணக்கில் எரிந்த தீயால் கட்டடத்தின் முன்பகுதி இடிந்துவிழுந்தது. இதனால் கட்டடம், உறுதித்தன்மையை இழந்தது. உடனடியாக அதை இடித்து தரைமட்டமாக்க அரசு முடிவு செய்தது. தொடர்ந்து கட்டடத்தை இடிக்கும் பணியை சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பர்வீன் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் பீர்முகமது தலைமையில் கட்டடம் இடிக்கும் பணிகள் நடந்தன. கடந்த 10 ஆம் தேதி, திடீரென கட்டடத்தின் முன்பகுதி இடித்து விழுந்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த சரத்குமார் பலியானார். இதனால் கட்டடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.



இதையடுத்து, முன்எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் கட்டடம் இடிக்கும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. காலை 10 மணியளவில் கட்டடத்தின் ஒரு பகுதி சீட்டுக்கட்டுக்களைப் போல சரிந்தது. எந்தவித வெடிப்பொருள்களும் பயன்படுத்தாமல் கட்டடத்தை இடிக்கும் பணி குறித்து ஒப்பந்ததாரர் பீர்முகமதுவிடம் கேட்டோம்.

"சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியை எங்களிடம் அரசு ஒப்படைத்தது. நாங்கள் இந்தக் கட்டடத்தை இடிப்பதற்கு முன்பு முழுமையாக ஆய்வு செய்தோம். கட்டடத்தை இடிக்கப் பயன்படுத்தும் இயந்திரங்களை சமதளமாக நிறுத்தும் பணிகளைத் தொடங்கினோம். இதன்பின்னர், ஜா கட்டர், வால்வோ ஐரீஸ் போன்ற இயந்திரங்கள் மூலம் கட்டடத்தை இடிக்கத் தொடங்கினோம். கடந்த 10 ஆம் தேதி, எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சரத்குமார் என்பவர் பலியாகினார். இதனால் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம். 'கட்டடத்தை வெடி வைக்காமல் இயந்திரத்தின் வழியாக சரிந்து விழ வைக்கலாம்' என்று முடிவு செய்தோம். இதற்காக வால்வோ ஜரீஸ் 460 என்ற ராட்சத இயந்திரம் மூலம் 25 அடி தொலைவிலிருந்து கட்டடத்தை இடித்தோம். அந்த வாகனத்தின் ஆபரேட்டர் கார்த்திக் மட்டுமே அங்கு இருந்தார். நாங்கள் எதிர்பார்த்தபடியே கட்டடம் சீட்டு கட்டுப்போல சரிந்து விழுந்தது.



காலை 10.10 மணிக்குள் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விட்டது. கட்டடம் சரியத் தொடங்கியதும் அங்கிருந்து வாகனத்தை அகற்றிவிட்டோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மீதமுள்ள கட்டடத்தின் இன்னொரு பகுதியை இன்றே இடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. சென்னை சில்க்ஸ் கட்டடடத்தை முழுமையாக இடித்த பிறகு கட்டட இடிபாடுகளை முப்பது நாள்களுக்குள் அகற்ற திட்டமிட்டு இருக்கிறோம்" என்று விரிவாக தெரிவித்தார்.

'கட்டடத்தை இடிக்கும்போது என்ன நடந்தது?' என்று ஒப்பந்ததாரர் பீர்முகமதுவிடம் கேட்டோம். " ஒரு சில நிமிடங்களிலேயே கட்டடத்தின் ஒரு பகுதி முழுமையாக கீழே விழுந்துவிட்டது. அந்தப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. மூச்சுத் திணறலைத் தவிர்க்க ஆக்ஸிஜன் சிலிண்டரை தயாராக வைத்திருந்தோம். இதுதவிர ஆம்புலன்ஸ், டாக்டர்கள், முதலுதவி கருவிகளும் அங்கு இருந்தன. கட்டடம் இடிந்து விழுந்தபோது 'டமார்' என்று சத்தம் கேட்டது. அந்த இடத்தைப் பார்த்தபோது ‘லாக்கர்’ ஒன்று கீழே விழுந்துகிடந்தது. அது, ஆறாவது மாடியிலிருந்தாகச் சொல்கிறார்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.

கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஆபரேட்டர் கார்த்திக்கிடம் பேசினோம். "சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க வால்வோ ஐரீஸ் 460 என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தினோம். முதலில், கட்டடத்தை மேலிருந்து இடிக்க முடிவு செய்திருந்தோம். அப்போது, நான்காவது மாடியில் உள்ள நான்கு தூண்களும் பலவீனமாக இருந்தன. அதுபோல கட்டடத்தின் சில தூண்களும் பலவீனமாக இருந்தது தெரிந்தது.



உடனடியாக நான்காவது மாடியில் உள்ள தூண்களைப் பலவீனப்படுத்தியதோடு, மேலிருந்து கட்டடத்துக்கு அழுத்தம் கொடுத்தேன். இந்த நடவடிக்கையை அடுத்து, கட்டடம் அப்படியே சரிந்துவிட்டது. ஏற்கெனவே, எங்களுக்கு மும்பை, கொல்கத்தா, குஜராத், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம், சென்னை எம்.ஆர்.சி.நகர் என பல இடங்களில் உயரமான கட்டடங்களை இடித்த அனுபவம் இருக்கின்றன. மீதமுள்ள கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன" என்றார்.

'கார்கூந்தல்தான் எங்கள் அடையாளமா?' மொட்டை அடித்து கேள்வி எழுப்பும் ’மனிதிகள்'

ஷோபனா எம்.ஆர்



நம்மில் எத்தனை பெண்களுக்கு மொட்டை அடித்துக்கொள்ளும் தைரியம் இருக்கிறது? அப்படி ஓர் எண்ணமே பெரும்பாலான பெண்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால், பெண்களின் ’கூந்தல்’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, இங்கு நடக்கும் அரசியலும் ஆணாதிக்கமும் ஏராளம். இந்த சமூகத்தில், நீளமான முடியுடைய பெண் அடக்கமான பெண்ணாக பார்க்கப்படுகிறாள். ஆனால், தங்களின் செளகரியத்துக்கு ஏற்றவாறு, குட்டையான முடியோ அல்லது கிராப் வைத்துக்கொள்ளும் பெண்களை ஏதோ கட்டுக்குள் அடங்காத பெண்ணாகத்தான் பார்க்கிறது இந்த சமூகம். இந்தப் பார்வையை மாற்றும் ஒரு முயற்சியாக, ’மனிதி’ அமைப்பு பெண்கள் ‘முடி வெட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி’ ஒன்றை இன்று சென்னையில் நடத்தியது. மிக எளிமையான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.


இது குறித்து, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதா பேசுகையில், “மனிதி அமைப்பு ஆரம்பித்து கிட்டதட்ட ஒன்றரையாண்டு ஆகிறது. இதுவரை, நாங்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து, வாட்ஸ்அப் மூலமாகவும், சந்திப்புகள் மூலமாகவும் விவாதித்திருக்கிறோம். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கெல்லாம் ஏதோ ஓர் அடிப்படை இருக்கிறது. இந்த அடிப்படைகளை உடைத்தால்தான், இந்த சமூக சிக்கல்களிலிருந்து பெண்களை வெளியில் கொண்டு வர முடியும். அதற்கான ஒரு முன்னெடுப்பாகவே, இந்த முடி வெட்டும் நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். இதைப்பற்றி நாங்கள் முகநூலில் பதிவிட்டோம். அதற்கு இதனால் என்ன புரட்சி நடந்துவிடப்போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். நாங்களும் இங்கு புரட்சி நடத்தவில்லை. பெண்கள் முடி வெட்டிக்கொள்வதற்குக்கூட எத்தனை பேரிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது? அப்போது அவர்களுக்கான சுதந்திரம் இங்கு எங்கே இருக்கிறது? இதற்கெல்லாம் விடை தேடும் முயற்சிதான் இந்த நிகழ்வு” என்று கூறுகிறார் சுதா.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மூலம் சேகரிக்கப்படும் முடியை, வரும் 26ஆம் தேதி, சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் தானம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சமந்தா என்பவர் கூறுகையில் , “என் அப்பா புற்றுநோயால இறந்தாரு. அவரோட இறப்புக்குப் பிறகு, எங்க அம்மாவுக்கு சடங்கு என்ற பேர்ல செஞ்ச கொடுமைகளை நான் கண்ணால பார்த்திருக்கிறேன். இந்த இரண்டு சம்பவங்களையும்தான், என்னை ‘மனிதி’யோட இணைச்சது. இங்க முடி வெட்டிக்கொள்ள வரும்போதுகூட, என் கணவருக்கும், மாமியாருக்கும் எங்க போறேன், எதுக்கு போறேன்னு பதில் சொல்லிட்டுத்தான் வரவேண்டியிருக்கு. இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில பங்கேற்பது மூலமா எனக்குள்ள பெரிய தன்னம்பிக்கை பிறக்குது’, என்று கூறுகிறார்.

மேலும், இந்த அமைப்பின் மற்றோரு ஒருங்கிணைப்பாளரான சாரதா பேசுகையில், ”நான் தபால் துறையில வேலை பார்க்குறேன். சின்ன வயசுல இருந்தே, பெண் என்பவள் நீளமான முடி வைச்சிக்கணும், பாவாடை சட்டைதான் போடணும், அதற்கடுத்து தாவணி போடணும், அப்புறம் சேலை உடுத்தணும் - இப்படியே என்னை வளர்த்தாங்க. மனிதி அமைப்பை பற்றி கேள்விப்பட்டு, அதுல இணைந்தேன். அப்போதான் பெரியார் குறித்தும், இந்த சமூக கட்டமைப்பு பெண்களை எப்படி காலங்காலமாக அடிமைப்படுத்தி வைச்சுக்கிறதுனு கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். இதோ..இங்க மொட்டை அடிச்சிட்டு, என் சுதந்திரத்தை நான் வெளிப்படுத்துறேன்”, என்று கூறி முடிக்கிறார்.

பெண்களின் உரிமைக்காக போராடும் இந்த ‘மனிதிகளின்’ நற்செயல்கள் தொரட்டும்!
960 பணியிடங்களுக்கு 6 லட்சம் பேர் போட்டி : தொடங்கியது சிவில் சர்வீஸ் தேர்வு!

இரா. குருபிரசாத்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை யு.பி.எஸ்.சி நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டது. மொத்தம் உள்ள 980 காலிப் பணியிடங்களுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 லட்சத்துக்கு 30 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





அதன்படி, நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல் நிலை எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது. 74 நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது. மொத்தம், இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. காலை முதல் தாள் தேர்வும், மதியம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது.

இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வின் போது செல்போன், கால்குலேட்டர், ப்ளுடூத் போன்றவற்றை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.
vikatan.com

ஒரு ஆணை எப்போதெல்லாம் பெண்களுக்குப் பிடிக்கும்? - 10 பாயிண்ட் லவ் செக் லிஸ்ட்!
ஹேண்ட்ஸமா, உயரமா, அம்சமா, வெயிட் வாலட் பார்ட்டிதான் பெண்களுக்குப் பிடிச்ச ஹீரோ மெட்டீரியல்னு நெனச்சீங்கன்னா, கண்டிப்பா நீங்க இன்னும் டைனோசர் காலத்துலயே இருக்கீங்கனு அர்த்தம். இப்போ பொண்ணுங்களாம் ரொம்ப தெளிவு. அவங்களை இன்ஸ்பையர் பண்ண, நச்சுனு நாலு நல்ல கேரக்டர் இருந்தாலே போதும். அது உங்ககிட்ட இருக்கா? செக் பண்ணிப் பார்த்துக்கங்க...



1. "மேடம் நீங்கதான அன்னிக்கு..."னு பாக்குற எல்லா பொண்ணுகிட்டயும் விழுந்தடிச்சு பேச நினைக்கும் ஆண்களைவிட, அவசியத்திற்காக மட்டுமே பேச ஆரம்பித்து, அதன் பிறகு அது நட்புரீதியாக வளரும் ரிலேஷன்ஷிப்பை மட்டுமே இப்போ பொண்ணுங்க ரசிக்கிறாங்க...அனுமதிக்கிறாங்க.


2. ஒரு பொண்ணு அவளோட பர்சனல் பக்கங்களை உங்களுக்குப் படிச்சுக் காட்ட ஆரம்பிக்குற அளவுக்கு அவளுக்கு உண்மையாவும் நம்பிக்கையாவும் இருக்குற ஆளா நீங்க ? அப்ப உங்களுக்கு பாஸ் மார்க்!



3. ஒரு பக்கம் துறுதுறு பையனா இருந்தாலும், தன்னோட எதிர்காலத்துக்கான பக்கா பிளான் வைச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ரசிச்சு வாழுற ஸ்மார்ட் பையனுக்கு டிமாண்ட் ஜாஸ்தி.

4. "எங்க இருக்க இப்ப நீ?", "என்ன பண்ற?"னுலாம் அடிக்கடி விசாரிச்சு உங்க ஸ்டேட்டசை தெரிஞ்சுக்கறதுக்குள்ள பொண்னுங்க டயர்டாகிடுவாங்க. அதனால, உங்க காதலி/மனைவி கேட்குமுன்பே வாட்ஸ்அப்ல உங்க ஸ்டேடஸ் தட்டி விட்டீங்கன்னா, அவங்களோட எவர்க்ரீன் ஹீரோ நீங்கதான்.




5. "நீ செம்ம அழகு டீ", "உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்ல"ன்னு சின்னச் சின்னதா பொய் சொல்லிட்டே இருந்தாதான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்னு, எப்பவோ பிளாக் அண்ட் ஒயிட் படத்துல கேட்ட வசனத்தை இன்னமும் ஃபாலோ பண்ற பாய்ஸைவிட, "நீதான்டி எனக்கேத்த அழகி"னு நிதர்சனம் பேசுற பசங்கதான் பொண்ணுங்க சாய்ஸ்.

6. ஹீரோ மாதிரி ட்ரெஸ், சூப்பர் பைக்னு சுத்திட்டிருக்கும் ஷோ-ஆஃப் பசங்களைவிட கொஞ்சம் நீட்டா, கேஸுவல் லுக்ல உலாத்துற பசங்கதான் பெண்களின் 'சைட்டு'!




7. "நான் இப்படி.. அப்படி" என வெத்து கெத்து காட்டுவதைவிட அமைதியாக தன் வேலைகளை கவனித்து அதன் மூலம் அதிகமா பேசப்படும் ஆண்கள்தான் பெண்களின் ஃபேவரிட்.

8. வீக் எண்ட் அவுட்டிங் அல்லது மீட்டிங் ஸ்பாட்டை நீங்களே முடிவு செய்யாம, உங்க பார்ட்னரிடம் கேட்டோ அல்லது கலந்தாலோசித்தோ முடிவெடுத்தால், உங்க அவுட்டிங் 'அவுட்' ஆகாம இருக்கும்.




9. "என்ன பண்ற? எதுக்கு பண்ற? எங்க போற? எதுக்கு போற?"னு எல்லா விஷயத்துலயும் குறுக்கிட்டு, "நான் ஆண்.. நீ பொம்பளை"னு கேள்வி கேட்டு அட்வைஸ் பண்ணிட்டே இருந்தா, இந்தக் கால பொண்ணுங்க அவங்களை சும்மா வெச்சு செஞ்சிடுவாங்க... பீ கேர்ஃபுல்!

10. சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் சல்மான், துல்கரைத் தாண்டி பொறுப்பான குடும்பத் தலைவராக இருக்கும் 'தல' அஜித்துக்குதான் பெண் ரசிகர்கள் அதிகம் பாஸ். ஸோ... ஹோம்லியா இருக்குற பையன்தான் செலெக்டட்... 'ஹோம்லி பொண்ணுதான் வேணும்னு சொல்ற பையன்லாம் ரிஜெக்டட்!

- இந்துலேகா.சி
பணம் பத்திரம்..! தெரியாத நம்பர்ல இருந்து வரும் மெசேஜ், அழைப்புக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க!

சோ.கார்த்திகேயன்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு ஒரே ஒரு செல்போன் கோபுரம்தான் உள்ளது. அங்கிருந்து தினமும் மும்பைக்கு மூன்றாயிரம் மோசடி வங்கி அழைப்புகள் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலிருந்தும்... ஏன் வெளிநாடுகளிலிருந்தும்கூட ஃபேக் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்துவது என்பது உண்மையில் முடியாத காரியம். ஏனெனில், இந்த டிஜிட்டல் உலகில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பணத்தை பிடுங்கலாம். இதையே ஒரு தொழிலாக பலரும் செய்கிறார்கள். ஆகையால், நாம்தான் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.







வெளிநாட்டிலிருந்து லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ அல்லது பணம் வந்துள்ளதாகவோ உறுதியளிக்கும் போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவற்றை எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள்.

உங்களின் மொபைல் நம்பருக்கு வரும் OTP எண், உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு அட்டையின் பின் பகுதியில் இருக்கும் மூன்றெழுத்து CVV எண், உங்கள் ஏடிஎம் PIN நம்பரை யாருக்கும், எப்போதும் சொல்லாதீர்கள். இந்த எண்ணை ரகசியமாக வைத்திருங்கள். இதைப்போல உங்களுடைய இணையதள வங்கிச் சேவையின் User ID, Password விவரங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். இவற்றைக் கேட்பவர், தான் ஒரு வங்கி அல்லது கடன் அட்டை கம்பெனி அதிகாரி எனக் கூறிக்கொண்டாலும் இந்தத் தகவல்களை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். உங்களுக்கு யாரும் இலவசமாகப் பணம் கொடுப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)-ன் கீழ் தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் போலியாக வரும் அழைப்புகளை ஏற்று எந்த வகையிலும் பணம் அனுப்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கி, தனிநபர் வங்கிக்கணக்குகளைப் பராமரிப்பதில்லை. அது வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் கேட்பதுமில்லை.

தனிப்பட்டவர்களுக்கு லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ, வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாகவோ, உங்களுக்கு ரிசர்வ் வங்கி தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்புவதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்போல போலியாகக் கொடுக்கப்படும் பெயர்களை நம்பாதீர்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் ரிசர்வ் வங்கி முத்திரையுடன் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வமான மற்றும் உண்மையான இணையதளம் என்பது www.rbi.org.in மட்டுமே.

போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மட்டுமல்லை, நம்முடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு காந்தப்பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களைச் சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்துகொள்ளும் மோசடி செயல்கள் உள்பட பல மோசடி செயல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள், வேறு ஒரு கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கோ பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வகையான மோசடிகள் நேற்று, இன்று என்றில்லை... பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன. உஷாராக இருங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை உடனடியாக அணுகுங்கள்.
வீதிக்கு வந்த அதிகார மோதல்... சவால் போட்டி நடத்தும் ஆளுநர், முதல்வர்!

ஜெ.முருகன்

புதுச்சேரியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது கட்சி மேலிடம். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடக் கூட அவருக்கு நேரம் கொடுக்காமல் கிரண்பேடியை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமித்தது மத்திய பா.ஜ.க அரசு. இரு தரப்பினருக்கும் அன்று தொடங்கிய அதிகார மோதல் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ முதுநிலை சீட் விவகாரத்தில், கிரண்பேடியும் நாராயணசாமியும் மாறி மாறி சவால் விட்டு வருகின்றனர்.




இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரத்தைக் குறைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டினார் முதல்வர் நாராயணசாமி. மேலும் புதுச்சேரியில் ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லா விட்டால் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு சென்று விடலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நாராயணசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாட்ஸ்-அப் மூலம் காரசார அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் கிரண்பேடி.


”துணைநிலை ஆளுனரின் அதிகாரங்களைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்திகளுக்கு எனது சிறிய பதில் இது. ஆளுநராக நான் செய்யும் ஒவ்வொரு பணியும் என் பொறுப்புகளுக்கு உட்பட்டவை என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால்தான், நான் ஒரு ஆளுநராகவும், நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன். துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென்றால் ஏன் நிதி ஒப்புதல்கள், இடமாற்றங்கள், கேபினட் முடிவுகளுக்கு ஒப்புதல், கொள்கை ஒப்புதல்கள் ஆகியவற்றிற்கான கோப்புகளை என்னிடத்தில் கொண்டு வருவதன் அவசியம் என்ன? நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுச்சேரியில் முழுநேரம் செயல்படும் ஆளுநராக நான் இருக்கிறேன்.



யூனியன் பிரதேசத்தில் 24 மணி நேரமும் பணியில் கவனம் செலுத்துபவர்தான் ஆளுநர். மக்கள் கவலையை கேட்பதற்காகவும், கவனம் செலுத்தப்பட வேண்டிய இடங்களை பார்வையிடவும், கவனமாக கோப்புகளை பரிசோதித்து நுட்பமாக கவனிப்பதும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிக்கைகளைக் கேட்டு செயல்படுத்துவதும், ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு முதலிய சேவைகளுக்காகத்தான் ஆளுநர் அலுவலகம் திறக்கப்பட்டது. இது எனது பொறுப்பின் முன்னோட்டத்திற்கு உட்பட்டது. அதிகாரிகள் மற்றும் மக்களை ஊக்குவிப்பதற்காகவும் மக்களுக்கு தூண்டுதலளிக்கவும் இத்தகவலை தெரிவிக்கிறேன்.

என்னுடைய பொறுப்புகளின் இதுவும் ஒரு பகுதி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் காலை நேர ஆய்வுகளுக்கு என்னுடன் சேர்ந்து செயல்புரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதிலும் அதற்கு ஒத்துழைக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இது அவர்களின் முடிவு என்றால் வார இறுதியில் காலை நேர ஆய்வுகளில் நான் கடந்த விவரங்களின் தொகுப்புகளை வெளியிடுவதும் என் முடிவு. புதுச்சேரியின் மேம்பாட்டிற்காக என் வார இறுதி நாட்களில் நான் பணி செய்வதால் புதுவையின் வளர்ச்சிகளைக் கண் கூடாக பார்ப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.

ராஜ் நிவாஸை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் நான் இங்கு இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சரியான நிதி நிர்வாகத்தை உறுதிப்படுத்துவேன். இது என் கடமை மற்றும் பொறுப்பும் கூட. என் நோக்கத்தையும், ஆர்வத்தையும் புரிந்து கொள்ளப்படாததை குறித்து மிகவும் வருந்துகிறேன். நான் கவலைப்படுவதற்கான ஒரே காரணம் இதுவே. எனக்கு அளிக்கப்பட்ட நிர்வாக பொறுப்புகளை உணர்ந்து என் கடைசி நாள் வரை பொறுப்புடன் செயல்படுவேன்” என்று பேசுகிறது கிரண்பேடியின் செய்தியறிக்கை.
பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் என்ன?

BHUVANESHWARI K

பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருப்பதால், நம் தலையில் கிரீடம் வைப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம். உண்மையில் சடாரி என்பது, கிரீடம் போன்ற ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும். இதன் பின்னணியில் வைகுண்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அமைந்திருக்கிறது. முதலில், அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக ராமாயண காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.




தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஶ்ரீராமன். அவருடன் கணவனைப் பிரிய மனமில்லாத சீதையும், அண்ணனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாகக் கருதிய லட்சுமணனும் உடன் சென்றனர். தம்மை நாடி வருவோரின் பாவங்களைத் தீர்க்கும் கங்கை நதியின் கரையை அடைந்த ராமபிரானை வரவேற்ற குகன், தன்னுடைய பரிவாரங்களுடன் அங்கே இருக்கிறான்.

என்றுமே மனதைச் சமநிலையில் வைத்திருக்கும் ராமபிரானின் உள்ளத்தில் அன்று குழப்பமே மிஞ்சி நின்றது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படிச் சமாளிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் அது. தர்மசங்கடத்துக்குக் காரணமாக அமைந்தது, பரதனின் வரவும், கண்ணீர் பெருக அவன் நின்ற நிலையும்.

தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான். அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்தான்.

'எண்ணில் கோடி இராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' என்று கோசலையின் வாயிலாகக் கம்பன் பெருமைப்படுத்திய பரதன், ராமபிரான் திரும்பி வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார். அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான்.



'ராமபிரான் அவதார புருஷராக இருந்தாலும்கூட, தேவர்களுக்கு நிகரான சூரியகுல அரசர்கள் அமர்ந்து ஆட்சிசெய்த சிம்மாசனத்தில், பாதுகைகளையா வைப்பது? ராமபிரானின் வேறு ஏதேனும் ஒரு பொருளைப் பெற்று வைத்திருக்கலாமே? மேலும், பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்?' என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் அமைந்ததும், வைகுண்டத்தில் நடைபெற்றதுமான ஒரு சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம்கொள்வதற்காகச் சென்றார். எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார்.

அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. `பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்?’, `பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன்’ என்றெல்லாம் கூறின. இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின.

எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், 'பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர். நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை' என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. 'கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது' என்று கூறின.

இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. இதைக் கேட்ட பகவான் புன்னகைத்தவாறே, 'அனைத்தும் நாம் அறிவோம். எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும்' என்று கூறினார்.



இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஶ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் - ஏழை; உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி 'சடாரி' வைக்கப்படுகிறது.
நம்ப வைத்து ஏமாற்றிய அரசு'! ஆவேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள்

ஜெ.சரவணன்

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொன்ன அரசு அதற்கு மாறாக அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டிருப்பதாக ஊழியர்கள் கொதித்துள்ளனர்.



ஊதியம், அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுத்தல் உட்பட மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் 14, 15, 16 தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர் அமைச்சர்கள் போக்குவரத்து துறை சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தனர். அதன் பிறகே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் சொன்ன எதையும் நிறைவேற்றாமல் வேலைநிறுத்தம் செய்ததற்காகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சேலம், கோவை மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், எஸ்இடிசியில் பணியாற்றும் 500க்கும் மேலான ஊழியர்கள் மீது ஆப்சென்ட், விடுப்பு மறுப்பது மற்றும் பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

இதனால் போக்குவரத்து ஊழியர்கள் கடும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் கூட்டலில் மெகா தவறு: மாணவர்கள் அதிர்ச்சி!

இரா. குருபிரசாத்

நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் கூட்டலில், மிகப்பெரிய பிழை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.





தேர்வு முடிவுகள் வெளியானதும், சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். முக்கியமாக, மும்பையைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்ற பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தார். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் எடுத்தார். மறு கூட்டல் முடிவில், அவர் கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது. இது போல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்துள்ளது.


குறிப்பாக, மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து, போடப்பட்ட மதிப்பெண்ணுக்கு 400 சதவிகிதம் இடைவெளி உள்ளதாக கூறப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, மதிப்பெண் கூட்டுதலில் பிழை ஏற்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிரச்சியடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமரிடம் முறையிட பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Central Government Holiday List 2018 – Public Holidays and Restricted Holidays

Central Government Holiday List 2018 – Closed Holidays and Restricted Holidays to be observed in Central Government offices during the year 2018Department of Personnel and Training OM on Central Government Holiday List 2018

F.No.12/3/2017-JCA-2

Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel and Training)
Establishment (JCA-2) Section
North Block, New Delhi
Dated the 14th June. 2017

OFFICE MEMORANDUMSubject: Holidays to be observed in Central Government offices during year 2018- reg.

It has been decided that the holidays as specified in the Annexure —I to this O.M. will be observed in the Administrative Offices of the Central Government located at Delhi/New Delhi during the year 2018. In addition, each employee will also be allowed to avail himself / herself of any two holidays to be chosen by him/her out of the list or Restricted Holidays in Annexure — II.

2.Central Government Administrative Offices located outside Delhi / New Delhi shall observe the following holidays compulsorily in addition to three holidays as per para 3.1 below:
1. REPUBLIC DAY
2. INDEPENDENCE DAY
3. MAHATMA GANDHI’S BIRTHDAY
4. BUDDHA PURNIMA
5. CHRISTMAS DAY
6. DUSSEHRA (VIJAY DASHMI)
7. DIWALI IDEEPAVALI)
8. GOOD FRIDAY
9. GURU NANAK’S BIRTHDAY
10. IDU’L FITR
11. IDU’L ZUHA
12. MAHAVIR JAYANTI
13. MUHARRAM
14. PROPHET MOHAMMAD’S BIRTHDAY (ID-E-MILAD)
3.1. In addition to the above 14 Compulsory holidays mentioned in para 2, three holidays shall be decided from the list indicated below by the Central Government Employees Welfare Coordination Committee in the State Capitals, if necessary, in consultation with Coordination Committees at other places in the State. The final list applicable uniformly to Central Government offices within the concerned State shall be notified accordingly and no change can be carried out thereafter. It is also clarified that no change is permissible in regard to festivals and dates as indicated.
1. AN ADDITIONAL DAY FOR DUSSEHRA
2. HOLI
3. JANAMASHTAMI (VAISHNAVI)
4. RAM NAVAMI
5. MAHA SHIVRATRI
6. GANESH CHATURTHI / VINAYAK CHATURTHI
7. MAKAR SAKARANTI
8. RATH YATRA
9. ONAN
10. PONGAL
11. SRI PANCHAML / BASANT PANCH.AMI
12. VISHU/ VAISAKHI / VAISAKHADI / BHAG BKHU / MASHADI UGADI / CENTRA SUKLADI / CHETI CHAND / GUDL PADAVA 1st NAVRATRA /NAURAJ/CHHATH POOJA/KARVA CHAUTH.

3.2 No substitute holiday should be allowed if any of the festival holidays initially declared subsequently happens to fall on a weekly off or any other non-working day or in the event of more than one festivals falling on the same day.

4. The list of Restricted Holidays appended to this O.M. is meant for Central Government Offices located in Delhi / New Delhi. The Coordination Committees at the State Capitals may draw up separate list of Restricted Holidays keeping in view the occasions of local importance but the 9 occasions left over, after choosing the 3 variable holidays in para 3.1 above, are to be included in the list of restricted holidays.

5.1 For offices in Delhi / New Delhi, any change in the date of holidays in respect of Idu’l Fitr, Idu’l Zuha, Muharram and Id-e-Milad, if necessary, depending upon sighting of the Moon, would be declared by the Ministry of Personnel, Public Grievances and Pensions after ascertaining the position from the Govt. of NCT of Delhi (DCP, Special Branch, Delhi Police).

5.2 For offices outside Delhi / New Delhi, the Central Government Employees Welfare Coordination Committees at the State Capitals are authorised to change the date of holiday, if necessary, based on the decision of the concerned State Governments / Union Territories, in respect of Idu’l Fitr, Idu’l Zuha, Muharram and Id-e-Milad.

5.3 It may happen that the change of date of the above occasions has to be declared at a very short notice. In such a situation, announcement could be made through P.I.B /T.V. /A.I.R. / Newspapers and the Heads of Department / Offices of the Central Government may take action according to such an announcement without waiting for a formal order, about the change of date.

6. During 2018, Diwali (Deepavali) falls on Thursday , October 19, 2017 (Ashvina 28). In certain States, the practice is to celebrate the occasion a day in advance, i.e., on “Narakachaturdasi Day”. In view of this, there is no objection if holiday on account of Deepavali is observed on- “Naraka Chaturdasi Day (in place of Deepavali Day) for the Central Government Offices in a State if in that State that day alone is declared as a compulsory holiday for Diwali for the offices of the State Government.

7. Central Government Organisations which include industrial, commercial and trading establishments would observe upto 16 holidays in a year including three national holidays viz. Republic Day, Independence Day and Mahatma Gandhi’s birthday, as compulsory holidays. The remaining holidays / occasions may be determined by such establishments / organisations themselves for the year 2018, subject to para 3.2 above.

8. Union Territory Administrations shall decide the list of holidays in terms of Instructions issued in this regard by the Ministry of Home Affairs.

9. In respect of Indian Missions abroad, the number of holidays may be notified in accordance with the instructions contained in this Department’s O.M. No.12/5/2002-JCA dated 17th December, 2002. In other words, they will have the option to select 16(Sixteen) holidays of their own only after including in the list, three National Holidays and Idu’l Fitr, in the list of compulsory holidays with the Idu’l Fitr falling on day of weekly off(Saturday).

10. In respect of Banks, the holidays shall be regulated in terms of the extant instructions issued by the Department of Financial Services, Ministry of Finance.

11. Hindi version will follow.

(D.K.Sengupta)
Deputy Secretary (JCA)
ANNEXURE-ILIST OF HOLIDAYS DURING THE YEAR 2018 FOR ADMINISTRATIVE OFFICES OF CENTRAL GOVERNMENT LOCATED AT DELHI / NEW DELHI

S.No. Holiday Date Saka Date Day

1939 SAKA ERA

1. Republic Day January 26 Magha 06 Friday
2. Maha Shivaratri February 14 Magha 25 Wednesday
3. Holi March 02 Phalguna 11 Friday
1940 Saka Era
4. Mahavir Jayanti March 29 Chaitra 08 Thursday
5. Good Friday March 30 Chaitra 09 Friday
6. Buddha Purnima April 30 Vaisakha 10 Monday
7. Idu’l Fitr June 16 Jyaishtha 26 Saturday
8. Independence day August 15 Sravana 24 Wednesday
9. Id-ul-Zuha (Bakrid) August 22 Sarvana 31 Wednesday
10. Janmashtami September 03 Bhadra 12 Monday
11. Muharram September 21 Bhadra 30 Friday
12. Mahatma Gandhi’s Birthday October 02 Asvina 10 Tuesday
13. Dussehra October 19 Asvina 27 Friday
14. Diwali (Deepavali) November 07 Kartika 16 Wednesday
15. Milad-un-Nabi or Id-e-Milad (Birthday of Prophet Mohammad) November 21 Kartika 30 Wednesday
16. Guru Nanak’s Birthday November 23 Agrahayana 02 Friday
17. Christmas Day December 25 Pausha 04 Tuesday

ANNEXURE-ILIST OF RESTRICTED HOLIDAYS DURING THE YEAR 2018 FOR ADMINISTRATIVE OFFICES OF CENTRAL GOVERNMENT LOCATED AT DELHI, NEW DELHI

S.No Holiday Date Saka Date Day
SAKA ERA 1939
1. New Year’s Day January 01 Pausha 11 Monday
3. Makar Sankranti January 14 Pausha 24 Sunday
4. Pongal January 14 Pausha 24 Sunday
5. Basant Panchami / Sri Panchami January 22 Magha 02 Monday
6. Guru Ravidas ‘s Birthday January 31 Magha 11 Wednesday
7. Swami Dayananda February 10 Magha 21 Saturday
8. Shivaji Jayanti February 19 Magha 30 Monday
9. Holika Dahan/Dolyatra March 01 Phalguna 10 Thursday
10. Chaitra Sukladi/Gudi March 18 Phalguna 27 Sunday
SAKA ERA 1940
11. Ram Navami March 25 Chaitra 04 Sunday
12. Easter Sunday April 01 Chaitra 11 Sunday
13. Hazarat Ali’s Birthday April 01 Chaitra 11 Sunday
14. Vaisakhi/Vishu/Mesadi April 14 Chaitra 24 Saturday
15. Vaisakhadi(Bengal) / Bahag Bihu (Assam) April 15 Chaitra 25 Sunday
16 Guru Rabindranath’s birthday May 09 Vaisakha 19 Wednesday
17. Jamat-Ul-Vida June 15 Jyaishtha 25 Friday
18. Rath Yatra July 14 Ashadha 23 Saturday
19. Parsi New Year’s day /Nauraj August 17 Sravana 26 Friday
20. Onam or Thiru Onam Day August 25 Bhadra 03 Saturday
21. Raksha Bandhan August 26 Bhadra 04 Sunday
22. wnayaka Chaturthi/ Ganesh Chaturthi September 13 Bhadra 22 Thursday
23. Dussehra (Maha Saptami) (Additional) October 16 Asvina 24 Tuesday
24. Dussehra (Maha Ashtami) (Additional) October 17 Asvina 25 Wednesday
25. Dussehra (Maha Navmi) October 18 Asvina 26 Thursday
26. Maharishi Valmiki’s Birthday October 24 Kartika 02 Wednesday
27. Karaka Chaturthi (Karva Chouth) October 27 Kartika 05 Saturday
28. Deepavali (South India) November 06 Kartika 15 Tuesday
29. Naraka Chaturdasi November 06 Kartika 15 Tuesday
30. Govardhan Puja November 08 Kartika 17 Thursday
31. Bhai Duj November 09 Kartika 18 Friday
82. Pratihar Sashthi or Surya
Sashthi (Chhat Puja) November 13 Kartika 22 Tuesday
33. Guru Teg Bahadur’s
Martyrdom Day November 24 Agrahayana 03 Saturday
34. Christmas Eve December 24 Pausha 03 Monday
Court order on PG NEET keeps junior docs on toes
Chennai:
TIMES NEWS NETWORK


After two weeks of attending classes in postgraduate courses, many in-service candidates aren't sure if they would be allowed to continue studies or asked to get back to the government hospitals they have been working with.The Madras high court has directed the state government to rework the merit list by Monday after it found that the previous list offered up to 30% of NEET marks for inservice candidates. When the selection committee attached to the directorate of medical education conducted counselling for 1,066 PG degree and diploma seats in 13 government medical colleges, only 67 seats went to non-service candidates. The court on Monday nullified admissions given to students from primary health centres and hospitals that are not in diffi cult or rural areas -the list A, B and C centres as mentioned in the prospectus.
The order brought joy to many non-service candidates, who have been complaining that the government's incentive scheme offered undue advantage to all their staff. “If reservation was for a select group of students, it would not have cause so much problem. The government gave it to all their staff except those working in cities,“ said Dr N Vivek, a PG aspirant. While many private candidates are now poring through the rank list to see where they would be placed and the course they would land up with, government doctors fear that 80% of the seats will be taken by non-service candidates if the state reworks the list.
Several in-service candidates told TOI that they were considering quitting govern ment job until they finish their postgraduate course. “I don't know if my job at the public health centre is still open. If I am posted in another rural PHC I will not have adequate clinical exposure and there will be no coaching centres nearby to help me crack NEET on merit,“ said a student from Stanley Medical College.
The state health department said they will move the Supreme Court to ensure government doctors get preference. “A lot of doctors work in rural and difficult areas because of the incentives for PG seats offered by the state,“ said J Radhakrishnan. “In or der to be fair, we reserved 50% of the seats for the service candidates where incentives were given. The court struck that down. If we stop incentives, it will weaken our healthcare system,“ he said.
Moreover, it will be difficult for the state to redo the admission as deadline for admissions ended on May 31.“Any alterations will lead to confusion. Seats in many private colleges and university will fall vacant. We will have to repeat counselling for those seats too. More than anything else, it can delay our UG admissions and ramifications of that will be huge,“ he said.
Number of intl flights from city stalls
Chennai:
TIMES NEWS NETWORK


Airport 3rd In Passenger Capacity
Chennai airport ranks third in terms of total number of international passengers handled when compared to other metro airports, but direct flights to international destinations from the airport have stagnated.Capacity constraints prevent the airport from allowing more flights at night. Bengalu ru has direct flights to San Francisco, Frankfurt, Paris and Mauritius in addition to the short haul flights to South East Asian destinations and the Middle East, while Chennai has direct flights only to Frankfurt and London besides flights to Dubai, Singapore, Kuala Lumpur and Bangkok. The connec tions to Europe are very less though demand is high. This has reflected in tourist arrivals as well. The airport's share in the total foreign tourist arrivals has dipped by 1.3% in this May compared to May last year.
Statistics compiled by mini stry of tourism using data from bureau of immigration show that of the total tourists who visited India, 7.75% of the travellers used Chennai as a gateway in May 2017 while the airport's share was 9.03% of the total arrivals in the corresponding period last year. Air traffic statistics for April shows that the airport handled the maximum number of international travellers after Delhi and Mumbai. Chennai airport's only European connection is with Frankfurt and there are no direct flights to the US. The airport has constraints in handling more international flights because the new international arrival hall is yet to be opened.
“We may have capacity constraints but have not rejected any request for international flights. There are more flights to the Middle East and South East Asia because of demand. Each airport caters to flyers to different regions, a large number of travellers fly to Europe from Bengaluru while the demand is high for countries in the far east from Hyderabad,“ a senior official of AAI said.
CBSE shocker: Big errors in totalling
New Delhi:


Questions Over Up To 400% Difference In Original & Corrected Marks
Sonali, a Delhi student, was horrified to learn, on May 29, that she had scored a mere 68 in mathematics in her Class XII exam. With 99 in economics, 95 in accountancy and 96 in business studies, the maths marks just didn't add up. Samiksha Sharma's dream of making it to a North Campus college of Delhi University was almost shattered when she scored 42 in mathematics, after scoring well in English, Business Studies and Fine Arts. It was only after the two applied to the Central Board of Secondary Education (CBSE) for verification -retotaling of marks -that Samiksha's 42 more than doubled to 90. As for Sonali, her maths score went from 68 to a respectable 95.These are not stray cases.Documents accessed by TOI revealed how Mohammad Affan, a Mumbai student who scored 80% and above in all subjects, scored 50 in mathematics. Post verification, his marks were revised to 90. Another Economics student who was `failed' with 9 marks finally ended up with 45, after verification.
TOI mailed and texted a questionnaire to CBSE's chairperson and spokesperson on Saturday but there was no official response, until the filing of this report. However, a senior CBSE official admitted that the number of applications for verification of marks has been unprecedented, although he didn't reveal the exact number. This raises two important questions. First, what is wrong with the totaling process and how fair is it for the CBSE to do away with re-evaluation altogether? It currently only allows verification while reevaluation is possible only after a court order.
Ashok Pandey , chairman of National Progressive Schools' Conference, an association of over 200 leading private schools in the country , strongly favoured a relook a the CBSE decision to scrap re-evaluation. “It is in the best interest of the students.CBSE, being the premier school education board in the country , should definitely take a lead in doing enough to bring in transparency ,“ said Pandey .
Sonali, whose marks increased by 27 (from 68 to 95) post verification, pointed out that unlike her, students who were not very confident or scared didn't even bother going for the verification process. “ As I wanted to pursue Economics (Honours), I had no option but to go for verification. However, many others didn't apply out of fear or thought that nothing will happen out of this exercise,“ said Sonali. A senior official with the CBSE exam branch, while agreeing that there were mistakes in the process, said that the difference could be due to various reasons -mistakes in totaling of marks, incorrect transfer of marks to the title page (the front of the answer books) and detachment of supplementary answer books.
மொபைல் எண் மாற்றம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பதிவு செய்த நாள்18ஜூன்2017 01:52

சென்னை:வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல், வேறு நபருக்கு மொபைல் போன் எண்ணை மாற்றிய, ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ். இவரது மொபைல் போனில், தேவையற்ற குறுஞ்செய்திகள் வந்ததால், ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக, போலீசில் புகார் கொடுத்தார். எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக, 'சிம்' கார்டு மற்றும் மொபைல் போனை பெற்றுச் சென்றனர். பின், நீதிமன்றத்தில், அவற்றை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், மொபைல் போன் எண்ணை வேறு நபருக்கு, ஏர்டெல் நிறுவனம் மாற்றியது. அதனால், தன்னிடம் ஒப்புதல் பெறாமல், வேறு நபருக்கு எண்ணை மாற்றியதால், ஏர்டெல் நிறுவனத்துக்கு எதிராக, சுரேஷ் வழக்கு தொடுத்தார்.

ஏர்டெல் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'ப்ரீபெய்டு திட்டத்தின் கீழ், இணைப்பு பெற்றுள்ளார். தொடர்ந்து, 90 நாட்கள், 'சிம்' கார்டு பயன்படுத்தவில்லை என்றால், சேவை துண்டிக்கப்பட்டு விடும். பின், அந்த எண் வேறு வாடிக்கையாளருக்கு ஒதுக்கப்படும். இதில், விதிமீறல் எதுவும் இல்லை' என, கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த, நீதிபதி ஜெயமங்களம், 'வேறு வாடிக்கையாளருக்கு, எண் ஒதுக்கப்பட்ட பின், நீதிமன்றத்தை அணுகி உள்ளார். போலீசிடம், மொபைல் போனை ஒப்படைத்ததற்கான ஆதாரங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. வழக்கை நிரூபிக்க, மனுதாரர் தவறி விட்டார். எனவே, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார்.
எய்ம்ஸ்' மருத்துவமனை கோரி தஞ்சையில் மனித சங்கிலி

பதிவு செய்த நாள்17ஜூன்2017 22:27

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் இருந்து புதுக்குடி வரை, 4 கி.மீ.,க்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட, 2,000த்துக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

நாகை - கூடலுார் மற்றும் பெரம்பலுார் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை மத்தியில் செங்கிப்பட்டி அமைந்துள்ளது.மேலும், திருச்சி, தஞ்சை இரண்டு விமான நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோரும் பரிந்துரை செய்துள்ளனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
வலியுறுத்தினர்.



கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகுமா?

பதிவு செய்த நாள்17ஜூன்2017 20:06

இன்ஜி., கல்லுாரிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடாமல், அண்ணா பல்கலை தாமதம் செய்துள்ளது.

இன்ஜி., மற்றும் பி.ஆர்க்., கல்லுாரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்படும்.

இந்நிலையில், கவுன்சிலிங் தாமதத்தாலும், விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்குமா என்ற சந்தேகம் காரணமாகவும், பல மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களால், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு காரணம், இந்த ஆண்டு, இன்னும் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடவில்லை. இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியும், பல்கலை தேர்வுத் துறையும் இணைந்து, இந்த பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால், பல்கலை தரப்பில் கால தாமதம் செய்வதாக, புகார் எழுந்துள்ளது. அதனால், சரியான கல்லுாரிகளை தேர்வு செய்ய முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

- நமது நிருபர் -
ஆடை முதல் மொபைல் வரை எல்லாமே ஆபர்தான்! ஜிஎஸ்டி நெருங்க நெருங்க கொட்டுது சலுகை மழை

2017-06-17@ 00:39:58




புதுடெல்லி: ஜிஎஸ்டியை எதிர்கொள்ள தயாரான வணிகர்கள், இந்த மாதத்துக்குள் தங்களிடம் உள்ள பொருட்களை அதிக தள்ளுபடிக்கு விற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதி்ப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாடு முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டிக்கு பிறகு சில பொருட்கள் விலை கூடுகின்றன. சில விலை குறைகின்றன. ஜிஎஸ்டியால் விலை கூடும் பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. அதேசமயம் இருக்கின்றன ஸ்டாக்குகளை விற்றுத் தீர்ப்பதிலும் வர்த்தகர்கள் மும்முரம் காட்டுகின்றனர். ஆன்லைன் விற்பனை, ஷோரூம்கள் என அனைத்து இடங்களிலும் சலுகை மழை கொட்டுகிறது.

வீட்டு உபயோக பொருட்களுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது. டிவி, பிரிட்ஜ், ஏ.சி, வாஷிங்மெஷின் ஆகியவற்றின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இவற்றுக்கு 15 முதல் 20 சதவீதம் வரைதான் சலுகை இருக்கும். அதுவும், முக்கிய பண்டிகை விழாக்காலங்களில்தான் கிடைக்கும். தற்போது ஜிஎஸ்டியால் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது யோகம். சில வர்த்தகர்கள் டிவியுடன் 2 மாத டிடிஎச் இணைப்பை சலுகையாக தருகின்றனர். இதுபோல் சில டிவி நிறுவனங்கள் வாரண்டியை கூடுதல் காலத்துக்கு அளிக்கின்றன. கம்ப்ரசர் பொருத்தப்பட்ட பொருட்களான ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றுக்கு சராசரியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றனர். ஆன்லைன் நிறுவனங்கள் தள்ளுபடியுடன் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளனர். சில நிறுவனங்கள் ரூ.20,000 வரை கேஷ்பேக் அளிப்பதாக தெரிவித்துள்ளன.

கார்களுக்கு ரகத்துக்கு ஏற்ப ரூ.15,000 முதல் ரூ.2.5 லட்சம் வரை சலுகை கிடைக்கிறது. இதுதவிர, இலவச காப்பீடு சலுகையையும் சில டீலர்கள் அளித்துள்ளனர். ஜிஎஸ்டிக்கு பிறகு சொகுசு கார் விலை குறையும் என்றாலும், ஸ்டாக்குகளை தீர்க்க சலுகைகளை ஏராளமாக வழங்கியுள்ளனர். மொபைல் போன்களுக்கும் அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் தொடங்கி பல ஸ்மார்ட்போன் பிராண்ட்களுக்கு கேஷ்பேக் சலுகையுடன் 50 சதவீதம் வரையிலும் தள்ளுபடிகளை ஆன்லைன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு 15 சதவீத கேஷ்பேக், சில போன்களுக்கு 5,000 முதல் 20,000 வரை கேஷ்பேக் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் மானிடர்களுக்கு 35 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. சில வர்த்தக நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு கூட ரூ.2,000 வரை சலுகை அறிவித்துள்ளன.
ஆடைகளும் தள்ளுபடி ஆபர்களில் இருந்து தப்பவில்லை. தீபாவளிக்கு முன்னதாகவே இந்த சலுகைகள் ஜிஎஸ்டி புண்ணியத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளன.

வழக்கமான தள்ளுபடியை விட கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி, குறிப்பிட்ட அனைத்து ஆடை வகைகளுக்கும் 40% தள்ளுபடி, சில உயர்ரக ஆடை வகைகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி என ஷோரூம் வைத்துள்ள ஜவுளி வியாபாரிகள் மட்டுமின்றி பிரபல ஆடை நிறுவனங்களும் சலுகை அறிவித்துள்ளன. இதுகுறித்து வர்த்தகர்கள் கூறியதாவது: ஜிஎஸ்டியில் சில பொருட்களுக்கு வரி உயர்கிறது. சில விலை குறைகிறது. இருப்பினும். புதிய வரி விதிப்பு வரும்போது, ஸ்டாக்குகளுக்கு வரி கிரெடிட் 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. நிறைய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பழைய ஸ்டாக்குகளை விற்று தீர்த்துவிட்டால் இதற்கு அவசியமில்லை. அதோடு, புதிய வரி விதிப்பு அமலாகும்போது சரக்குகளும் புதிதாக இருக்கும். வரி கிரெடிட்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்காது. எனவேதான் தீபாவளி வரை ஸ்டாக் வைக்காமல் விற்று தீர்க்கிறோம்.

தற்போது எவ்வளவு விற்றாலும் ஜூலையில் விற்பனை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். பல நூறு கோடிக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்கள் இந்த மாதத்துக்குள் விற்பது எப்படி என திண்டாடுகின்றனர். இவர்கள்தான் அளவற்ற சலுகைகளை வாரி இறைத்துள்ளனர். நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் சலுகைகளை அளிக்க முன்வந்துள்ளன என்றனர். எப்படியோ, ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகுதான் சில பொருட்களின் விலை எந்த அளவு மாற்றம் இருக்கிறது என்பதை காண முடியும். ஆனால் அதற்கு முன்பாகவே நடைமுறை சிக்கல்களை தவிர்க்க பழைய ஸ்டாக்குகளை வியாபாரிகள் தீர்க்க முன்வந்ததால் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
சீன மொபைல்களுக்கு போட்டியாக மலிவு விலையில் பழைய மாடல் ஐபோன்களை களமிறக்கும் ஆப்பிள்

2017-06-18@ 00:59:30




புதுடெல்லி: இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்கும் வகையில், சீன நிறுவன மலிவு போன்களுக்கு போட்டியாக, பழைய ஐபோன் மாடல்களை குறைந்த விலையில் களமிறக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக சந்தைகளில் கடந்த ஆண்டில் முதல் முறையாக விற்பனை சரிவை சந்தித்த ஆப்பிள் நிறுவனத்துக்கு, இந்திய சந்தைதான் கை கொடுத்தது. இதனால் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் பலனாக, பெங்களூருவில் தனது துவக்க நிலை மாடலான ஐபோன் எஸ்இ-யை தயாரித்து வருகிறது. இது விரைவில் சந்தைக்கு வர உள்ளது. ஆனால், ஐபோனின் ஆரம்ப விலையை விட குறைவாக சீன ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இந்திய நிறுவன மொபைல்களைவிட இவை அதிகமாக விற்பனையாகின்றன. குறைந்த விலையிலேயே அதிக திரை அளவு, கூடுதல் ரேம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றின் விற்பனை உயர்வுக்கு சாதகமாக அமைந்துள்ளன. எனவே, ஐபோன் மோகம் இந்தியர்களிடையே இருந்தாலும் இவற்றை வாங்க தயங்கும் அளவுக்கு விலை மிக அதிகம்.

இந்த நிலையை மாற்ற, பழைய மாடல் போன்களை மீண்டும் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது ஆப்பிள். பழைய பயன்படுத்திய ஐபோன்களில் கோளாறுகளை நீக்கி இந்தியாவில் சந்தைப்படுத்த அரசு அனுமதிக்கவில்லை. எனவே இந்த புதிய முறை கைகொடுக்கும் என ஆப்பிள் நம்புகிறது. இதன்படி பழைய மாடலான ஆப்பிள் 5எஸ் ரூ.20,400க்கே (சுமார் ரூ.300 டாலர்) கிடைக்கிறது. ஆப்பிள் எஸ்இ அமெரிக்காவில் 400 டாலருக்கு கிடைக்கிறது. ஆன்லைன் இணையதளம் ஒன்றில் இந்த மாடல் கடந்த மாத அதிரடி தள்ளுபடி விற்பனையில் ரூ.15,999க்கு கிடைத்தது.
கடந்த ஆண்டில் 26 லட்சம் ஐபோன்கள் இந்தியாவுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் பழைய மாடல் போன்கள் 55 சதவீதம். ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தை பொறுத்தவரை துவக்கநிலை மாடலாக ஐபோன் 6 மற்றும் எஸ்இ ஆகியவைதான் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் ஐபோன் 5எஸ் மாடல் ஆப்பிள் போன் விற்பனை செய்யும் ஏஜென்ட்கள், நிறுவனங்களின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிப்புக்கு கைகொடுத்ததே 5எஸ் மாடல்தான். இப்போதுகூட குறைந்த விலைக்கு கிடைப்பதும் இதுதான். எனவே இதே மாடலை களம் இறக்குவதன் மூலம் சீன நிறுவனங்களுக்கு போட்டியாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டுகிறது. சீனாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடங்கி விட்டது.

இதனால் அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஒரு சந்தையில் கால் பதிக்க வேண்டிய அவசர, அவசியம் இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், எத்தனை மலிவு விலை ஆன்டிராய்டு போன்கள் வந்தாலும் ஐபோன் மோகத்தில் உள்ள இந்திய சந்தையை குறி வைத்துள்ளது.
அமெரிக்காவில் உபயோகித்த பழைய ஐபோன்களை இந்தியாவில் விற்க ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம் திட்டம் வகுத்திருந்தது. இதற்கு இந்தியா அனுமதி அளிக்கவில்லை. இதற்கு மாற்றாக தற்போது புதிய உத்தியை கையாண்டு, இந்தியாவில் ஸ்திரமாக காலூன்றவும், மலிவு விலையில் போன்களை உற்பத்தி செய்யும் சீன மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு சவாலாக திகழ ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சேலம் ரயில்வே ஸ்டேஷனில் சிக்னலும் போடல... கார்டும் ஏறல... பறந்தது ஆலப்புழா எக்ஸ்பிரஸ்

2017-06-18@ 02:31:24




* நடுவழியில் 1 மணி நேரம் நிறுத்தம்
* டிரைவர்களிடம் அதிரடி விசாரணை

சேலம்: சேலத்தில் ரயில் இன்ஜின் டிரைவருக்கு சிக்னல் கொடுக்கும் கார்டு ஏறுவதற்கு முன், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விதியை மீறி ரயிலை எடுத்துச் சென்ற டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22640) நேற்று வழக்கம்போல் அதிகாலை 1.20 மணிக்கு சேலத்திற்கு வந்தது. அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் நின்றபடி பச்சை விளக்கை காட்டி சிக்னல் கொடுக்கும் கார்டு மது என்பவர், கீழே இறங்கி அருகில் பார்சல் அனுப்பும் பெட்டியை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதிகளவில் பார்சல்கள் இறக்கி, ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென ரயில் புறப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் கார்டு மதுவால் தனக்குரிய பெட்டியில் ஏற முடியவில்லை. உடனே, நான் சிக்னல் கொடுப்பதற்கு முன் எப்படி ரயிலை எடுத்துச் செல்லலாம்? என வாக்கி டாக்கியில் பேசியுள்ளார். அதையும் இன்ஜினில் இருந்து இரு டிரைவர்களும் கவனிக்கவில்லை. இதனால், ரயில் சேலத்தை கடந்து தின்னப்பட்டியை நோக்கிச் சென்றது. இதையடுத்து நிலைய மேலாளருக்கு கார்டு மது தகவல் கொடுத்தார். உடனடியாக தின்னப்பட்டி ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து, ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். வேகமாக சென்று கொண்டிருந்த ரயில், நடுவழியில் திடீரென ஒரு ஸ்டேஷனில் நின்றதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அந்த பகுதியில், ரயில்களை நிறுத்தி பயணிகளிடம் நகைபறிப்பு சம்பவம் நடந்தது என்பதால் பெண்கள் பீதி அடைந்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பின், தின்னப்பட்டிக்கு கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. அந்த ரயிலில் வந்திறங்கிய கார்டு மது, ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பச்சை விளக்கை காட்டி சிக்னல் கொடுத்தார். இதையடுத்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இச்சம்பவம் பற்றி, சேலம் ரயில்வே கோட்ட போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் புறப்பட, கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு பச்சை விளக்கை எரியச் செய்து சிக்னல் கொடுப்பதோடு, வாக்கி டாக்கியிலும் புறப்படலாம் என தகவல் கொடுக்க வேண்டும். இத்தகவலை பெற்ற பின்னர் தான், இன்ஜின் டிரைவர்கள் ரயிலை எடுக்க வேண்டும். ஆனால், ரயிலில் கார்டு ஏறாத நிலையில், சிக்னல் ஏதும் பெறாமல் தன்னிச்சையாக டிரைவர்கள் ரயிலை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் டிரைவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோளில் சுமந்தார்...தோழனாய் மாறினார்!

பதிவு செய்த நாள்18ஜூன்2017 02:16




பெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்றாலும், அதே நேரத்தில் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் தந்தை.

தந்தையின் உழைப்புக்கு பிள்ளைகள் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 18) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

உற்ற தோழன்

தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக்கொள்பவர் தந்தை. சில தந்தைகள் தன் குழந்தைக்கு நண்பனை போல இருப்பர். 'அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல்வரிகள் தாய்,
தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும்.

எப்படி வந்தது

அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தான், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவரது தாய், தனது 6வது பிரசவத்தின் போது மரணமடைந்தார்.

தாயின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் 6 குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு துாண்டியது. இதன்படி 1910ல் அமெரிக்காவில் முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

1966ல் அங்கீகரிக்கப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
2 கருணை மனுக்கள் நிராகரிப்பு ஓய்வுக்கு முன் ஜனாதிபதி பிரணாப் அதிரடி

பதிவு செய்த நாள்17ஜூன்2017 22:50


புதுடில்லி:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம், ஓய்வு பெறவுள்ள நிலையில், இரண்டு கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.

முந்தைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தான் ஓய்வு பெறுவதற்கு முன், 30 கருணை மனுக்களை ஏற்று, மன்னிப்பு வழங்கினார். அதற்கு மாறாக, தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 30 கருணை மனுக்களை, தொடர்ச்சியாக நிராகரித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி, அடுத்த மாதம், 24ல் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், கடந்த மாதம், அவரிடம் இரண்டு கருணை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இரண்டு மனுதாரர்களும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததால், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

இவற்றில் ஒன்று, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில், கம்ப்யூட்டர் மென்பொருள் நிபுணரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த, டாக்சி டிரைவரின் மனு. மற்றொன்று, 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த கொடூரனின் மனு.
இவை இரண்டையும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதாக, ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, அரசியலமைப்பு சட்டம், 72வது பிரிவின்படி, ரத்து செய்ய, நிறுத்தி வைக்க, தண்டனையை குறைத்து வழங்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல் !!

தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண் இணைக்காத 1 லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காஸ் மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறையை மத்திய அரசு அறிமுகம்
செய்தது. இதற்கு அனைவருக்கும் வங்கிக்கணக்கை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. இதுதவிர மத்திய அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலை உறுதி திட்டம், உணவு மானியம், பள்ளிகளில் இலவச மதிய உணவு, விவசாயிகள் பயிர்க்காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சமையல் காஸ் பெறுதல், அரசின் மானிய உதவிகளை பெறுதல், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான மத்திய அரசின் பீம் ஆப்பில் வங்கிக் கணக்கை இணைத்து பணம் அனுப்புதல் போன்றவை ஆதார் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், அடையாளச்சான்று, முகவரிச்சான்று என எண்ணற்ற வகையில் ஆதார் பயன்பாடு உள்ளது. ஜூலை 1க்கு பிறகு புதிய பான் கார்டு விண்ணப்பிக்கவும், ஆதார் வைத்திருப்பவர்கள் பான் அட்டையுடன் இணைத்து ரிட்டர்ன் தாக்கல் செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்ட பயன்கள் உரியவருக்கு சென்று சேர வேண்டும், போலி பயனாளிகளை ஒழிக்க வேண்டும், மானியச்சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ஆதாரை கட்டாயப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

இதே வரிசையில், ஓய்வூதியர்கள் ஆதார் மூலம் உயிர்ச்சான்று சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமாண் இணையதளம் மூலம் அல்லது பொது சேவை மையங்களில் சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத்துக்கு செல்லாமலேயே இருந்த இடத்தில் இருந்தே எளிதாக உயிர்ச்சான்று சமர்ப்பிக்க ஜீவன் பிரமாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் அரசு ஓய்வூதிய தாரர்கள் மட்டுமின்றி, பிஎப் ஓய்வூதியம் பெறுவோரும் ஆதாரை இணைக்க வேண்டும். பி.எப் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெறும் தகுதி படைத்தவர்கள். இதில், ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயமாகிறது. ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர் ஆதார் எண் மற்றும் தங்களது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழினை (டிஜிட்டல் ஜீவன் பிரமாண் பத்திரம்) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இதுவரை உயிர்வாழ் சான்றிதழை அதற்குரிய படிவத்தில் வங்கியில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்களும் இந்த ஆதார் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அங்கு ஆதார் எண் மற்றும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம்.

ஏப்ரல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டபோது அந்தந்த பி.எப் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையங்களில் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் ஆதார் எண் இணைக்க தவறியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேருக்கு ேம மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக அருகில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு சென்று உயிர்வாழ் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் 19 அமைச்சகங்களின் 92 திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு முதல் வங்கி கணக்கு வரை ஆதார் முக்கியமாகி விட்டது.

ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு ரத்தாகும்

காஸ் மானியம் உட்பட பல்வேறு மானியங்கள் பெற ஆதார் வேண்டும்.

பிஎப் பென்ஷனுக்கு ஆதார் எண் இணைக்க அவகாசம் முடிந்து விட்டது.

ஆதார் இணைக்காவிட்டால் பென்ஷன் நின்று விடும் ஆபத்து உள்ளது.
நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு???
'நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.

உச்சநீதி மன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலானதால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், 'நீட் தேர்வு குறித்த வழக்குகளை விசாரிக்க வேண்டாம்' என, உயர்நீதிமன்றங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; அத்துடன், தேர்வு முடிவை வெளியிடவும், சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுறுத்தியது.

இதனால், 'நீட்' தேர்வுக்கான, 29 வகை வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, கருத்து கோரப்பட்டுள்ளது. விடைகளை இறுதி செய்யும் பணி, நேற்று முன்தினம்துவங்கியது. அடுத்து, மதிப்பெண் கள் பட்டியலிடப்பட்டு, ஜூன், 26ல், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகிறது.
'அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. 

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள், இத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், விரைவில் வர உள்ளன.

'நீட்' தேர்வில், மத்திய பாடத்திட்ட மாணவர்கள், 'ரேங்க்' பட்டியலில் அதிகளவில் முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக, தமிழக அரசு கருதுகிறது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடும். எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட நிபுணர்களுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பாணை, இரண்டு நாட்களில் வெளியாகும்'
50 கி.மீ.,க்கு ஒரு பாஸ்போர்ட் ஆபீஸ் நீண்ட தூரம் அலைய வேண்டிய தேவையில்லை!!

பாஸ்போர்ட்டுகள் வாங்குவதை எளிமைப்படுத்தும் வகையில்,149 புதிய, போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங் களை, வெளியுறவுத்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறியதாவது:

நாட்டில் பெரும்பாலானோர், பாஸ்போர்ட்பெறுவதற்கு, நீண்ட துாரம் செல்லும் நிலைஉள்ளது. இதற்கு தீர்வாக, 50 கி.மீ., சுற்றளவுக்குள், பாஸ் போர்ட் சேவை மையங்களை துவக்க திட்ட மிடப் பட்டு உள்ளது.இதன்படி,முதற்கட்டமாக,86 போஸ்ட் ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவக்கப் பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, மேலும், 149 பாஸ்போர்ட் சேவை மையங்கள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இவை, போஸ்ட் ஆபீஸ்களில் செயல்படும். பொது மக்கள் எவரும், பாஸ்போர்ட் வாங்க, 50 கி.மீ., துாரத் துக்கு அதிகமாக செல்ல வேண்டிய நிலை இருக்கக் கூடாது என இலக்கு நிர்ணயித்து நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாம் கட்டமாக, மேலும் அதிகளவில் பாஸ் போர்ட் சேவை மையங்கள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.வெளிநாடுகளில் உள்ள,18 - 30 வயதுடைய இந்தியர்கள், நம் நாட்டைப் பற்றிதெரிந்து கொள்ளும் வகையில், 'இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பெயரில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 2004 முதல்,இதுவரை, 1,293 பேர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, தங்கள் மூதாதையர் ஊர்களுக்கு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன்-18) எவ்வளவு?

பதிவு செய்த நாள்
ஜூன் 17,2017 20:32



பெட்ரோல், டீசல் விலை ஞாயிறன்று எவ்வளவு?

புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

பெட்ரோல்,டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 34 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.67.42 காசுகளுக்ம்கும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ.57.03 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று (ஜூன் 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
மாநில செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 18, 2017, 04:30 AM

சென்னை,

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை பட்டியலை ரத்து செய்ய ஐகோர்ட்டு விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக அரசு தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரிலே அவசர சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும். இதில் திரளான மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாநில செய்திகள்

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 18, 2017, 05:15 AM

சென்னை,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென் ஆந்திர கடலோர பகுதி முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
மாநில செய்திகள்

ரெயில்களில் பயணம் செய்வதற்கான தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குகிறது
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அக்டோபர் 16-ந்தேதி ரெயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

ஜூன் 18, 2017, 04:30 AM
சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட விரும்பும் பலரும் குறித்த நேரத்தில் செல்வதற்காக பஸ் பயணத்தை விட ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

தற்போது ரெயிலில் பயணம் செய்ய 120 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அக்டோபர் மாதம் 18-ந்தேதி புதன்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால் கிடைக்கும் விடுமுறைக்கு ஏற்ப தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னதாக, அதாவது அக்டோபர் 16-ந்தேதி திங்கட்கிழமை சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம். அதேபோல் அக்டோபர் 17-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 18-ந்தேதி பயணம் செய்பவர்கள் 20-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம்.

Saturday, June 17, 2017


அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல' !!

அரசு அதிகாரிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் பணி நியமன விவகாரம் தொடர்பான வழக்கு குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் சிலர்
நேரில் ஆஜராக வேண்டுமென்று அந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிஆர்பிஎஃப் உயரதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. அப்போது, அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வர முடியாத நிலையில் இருந்தனர். ஆனால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்' என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அரசு அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு உயரதிகாரியாவது குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அதே நேரத்தில், இந்த வழக்குக்காக சிஆர்பிஎஃப் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Slippery justice Karnan leaves West Bengal police team frustrated

By M Sathish  |  Express News Service  |   Published: 15th June 2017 05:44 AM  |  

Justice Karnan (File | EPS)
CHENNAI: They have chased thieves, robbers, terrorists, politicians and other garden variety criminals all through their careers. However, as the team of officers from West Bengal realise now, catching a judge is a different game altogether.
It has been over a month since the team, led by a director general rank officer, came to Chennai in search of High Court judge justice C S Karnan, since retired, following orders from the Supreme Court. He was last seen in public on May 9 when he met the press in Chennai after landing here from Kolkata that morning.
The five-member team came the next morning, and went to the government guest house at Chepauk where justice Karnan was reportedly staying. But by the time the team reached there, he had left by another vehicle at around 9.45 am. Since then, it has been a tough five weeks, that too, at the peak of the cruel Chennai summer for the Bengal team, with no perceivable end in sight.
“Tracking him, we have covered seven locations in south India, including his native place in Tamil Nadu, Andhra Pradesh and Puducherry Union territory. Once we followed a source information to find a place in Tada, Nellore. But by the time we reached there, he had moved from the place,” an officer of the team told Express.
Flustered by their inability to track him, the officers said it was different from tracking an ordinary suspect. For instance, the first measure that any police official would take while tracking the whereabouts of a person is to trace those close to him.
“However, in this case, his colleagues are senior jurists occupying various high courts in the country. Even if he is at one of their residences, we will not be able to just go in and search the house,” said the officer.
The team comprises DGP, ADGP, DIG and DC, among others, and one of them speaks Tamil.
Claiming that they were extending all possible support to the Bengal team, a senior officer with the Chennai City Police said that a team of five officials, led by an additional deputy commissioner, have been deputed to assist them.
Tirupati SP R Jayalakshmi added that the district police had not received any communication from the West Bengal police team on this case. “If they seek support, we will definitely assist them,” she told Express.

NEWS TODAY 23.12.2025