Wednesday, July 5, 2017

Another chance to swap old notes likely in 15 days
New Delhi:


The Supreme Court on Tuesday sought to prevail on the Centre to open a fresh window for exchange of scrapped `500 and `1,000 notes for persons who missed the December 30 deadline if they could establish that the money was theirs and they had a genuine reason for not changing it. The court was a step away from ensuring an exchange opportunity when the Centre sought two weeks to respond to the suggestion. The court's previous inquiries had so far failed to move the Centre.

The government, through solicitor general Ranjit Kumar, relied on data about misuse of exchange of old currency provisions to explain its reluctance to heed the court's hints, even though PM Narendra Modi had on November 8 said those with genuine difficulties could expect a window after the year-end deadline.

But the court's argument that genuine cases should not be punished by turning hard earned money into trash saw the SG seeking time. “It will not be a general window but on a case to case basis. Give me two weeks, I will take instructions from the government,“ he said.

Scores of petitions were filed in the SC accusing the government of reneging on the promise and seeking relief to exchange scrapped currency notes. The SC had weeded out a majority of them, terming reasons for failure to meet the December 31 deadline as “cock and bull story“. However, 10 petitions survived the SC's stringent scrutiny and on Tuesday , the court sought Kumar's response. When the SG reiterated the Centre's consistent stand, a bench of Chief Justice J S Khehar and Justice D Y Chandrachud said, “It is our duty to caution you. If a person is alone and suffered grave illness during the November 9 to December 30 period, it becomes absolutely impossible for him to deposit his old currency notes. If he can prove that it is his hard earned money and not somebody else's, he would surely require the window you had promised.

“We ourselves (the bench) have rejected many petitions as we found their reasons not genuine. But those with genuine difficulty must have a chance to convince the authorities. If you do not agree to open a window, then we will say it is open for such persons who can prove genuineness of their money and difficulty to deposit within December 30 deadline to seek relief from the government. He should have an opportunity to explain and replace the old money . You cannot turn his genuine money into trash.“

The bench said the government must sort this out. “We have seen cases where a person has lost his genuine money for no fault of his. The government cannot trash aperson's genuine money . You (the government) cannot render a person's genuine money go waste like this,“ it said. On March 21, the SC had told the government, “You must understand that these people are in dire straits. If they cannot establish the genuineness of the delay in depositing the scrapped currency , they would be liable for prosecution. The PM's speech as well as the notification that followed immediately after had promised to provide a window to people in such difficulty . But the ordinance did not provide any window except for NRIs and those Indians who were travelling abroad at that time. These people hoped that they will get another chance but the ordinance issued on the last day of deadline on December 31 suddenly closed that window. Everyone heard the PM and believed that the PM's words cannot be taken back.“
Non-univs can't run distance courses, says UGC
Mumbai:\


In a watershed decision, the University Grants Commission (UGC) has stated that only universities can offer distance learning programmes in India. With the earlier decision of the Distance Education Council overturned, standalone institutes can no longer continue to run programmes via distance mode.
 
Across the country dozens of B-schools are raking in crores by offering diploma management courses via distance education. They will all have to cease operations as the UGC will not extend their recognition. The decision was notified in the last week of June in a UGC gazette notification: The mini mum standards of instructions for the grant of first degree through non-formal distance education in the faculties of Arts, Humanities, Fine Arts, Music, Social Science, Commerce and Science.
 
The decision was taken after a committee headed by Prof N R Madhav Menon submitted its recommendations to regulate distance education in India.

“Certificates or diplomas or post-graduate diplomas awarded by the standalone in stitutions, which also have been approved by the Commission based on the policies of the then Distance Education Council, of the Indira Gandhi National Open University , for running open and distance learning programmes till the academic session as specified in recognition letters already issued at the level of the Commission, shall remain valid programmes in the field of open and distance learning mode of education and once the recognition period to these standalone institutions ceases, such institutions cannot offer open and distance learning programmes,“ the notification read.

These institutes can continue offering distance education courses if they are converted to university or deemed to be university, “failing which, the Commission shall not accord any approval to the open and distance learning programmes of standalone institutions.

“Standalone institutes were free from university regulation. As they offered diploma courses, they did not fall under the ambit of the AICTE (All India Council for Technical Education) too.Many institutes hence started offering distance education courses and made a lot of money . Soon, there was management in hospital administration, forest management, agriculture and plantation management, etc.,“ said a former director of the Institute of Open and Distance Learning, Mumbai University. In Maharashtra, the UGC's diktat will affect about a dozen institutes.
Rectify flaws, or 23 PG seats will be illegal, MCI tells Chandigarh’s GMCH 

In its letter to the hospital, MCI says inspection conducted in may brought out deficiencies in functioning of 9 departments and also other issues related with the institute were highlighted punjab Updated: Jul 04, 2017 15:43 IST

Tanbir Dhaliwal
Hindustan Times, Chandigarh



Government Medical College and Hospital, Sector 32 Chandigarh(HT File)

The Medical Council of India (MCI) has raised objections over 23 postgraduate (MD/MS) seats across 9 departments of the Government Medical College and Hospital, Sector 32 Chandigarh.

The institute has been asked to file compliance report within four weeks and deposit Rs 1 lakh per department. In case the college fails to satisfy these conditions, all admissions made against these increased seats will be considered illegal.

The seats in question are three MD seats of general medicine, three MS seats of general surgery, two MD seats in pulmonary medicine, two MD seats of psychiatry,five MD seats of orthopaedics, two MD seats of dermatology, four MD seats of anaesthesia and two MD seats of anatomy and ENT department.

These are the seats that were increased by the MCI in 2014. In May 2017, when the first batch appeared for final examination, the MCI team again conducted inspection needed for the final approval. However, the team found several loopholes in the various requirements asked for and raised objections.

Only in the anatomy department the inspection was done for renewal of seats but the objections were raised there too.

‘Submit compliance report, deposit Rs 1 lakh’

The MCI has issued letters to all the departments and have asked them to rectify the deficiencies within 4 weeks from the date of dispatch (June 15) of the letter and submit the compliance report. Almost every department has been asked to submit a demand draft of Rs 1 lakh for further consideration in the matter.

“In case no compliance is received within this period or compliance is found unsatisfactory, it will result in stoppage of admission. Admissions done against these seats after the first batch appeared in the examination, till their recognition will be irregular or illegal. These are not in accordance with MCI regulations and will not be recognised,” mentions the MCI report.

An institute professor said, “In case the college authorities fail to satisfy MCI’s conditions, then the degrees of all students, which were admitted against these increased seats since 2014, will be unrecognised by the MCI.”

Objections raised by MCI

Multiple positions held by the then director principal Dr Atul Sachdev and current director principal (additional) Dr AK Janmeja.

GMCH-32 officials said Dr Sachdev had given additional charge of head of department, general medicine, to another doctor. However, Dr AK Janmeja, who is holding an additional charge of director principal, is also heading two departments – pulmonary medicine and gynaecology.

Dr AK Janmeja, director principal (additional), GMCH-32, said, “We are making a detailed compliance report and are positive that the seats will get recognition from MCI. It seems there is some miscommunication between MCI and college authorities.”

NMMTA urges MCI not to bar M.Sc & PhD holders from certifying medical test reports

Our Bureau, Mumbai
Tuesday, July 04, 2017, 17:45 Hrs  [IST]
National M.Sc Medical Teachers' Association (NMMTA) has urged Medical Council of India (MCI) to withdraw notification
 barring M.Sc & PhD holders from certifying medical test reports.

The MCI has written to National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) regarding eligibility of candidates to sign diagnostic laboratory reports.

Earlier, the NABL had sought clarification from MCI whether the M.Sc with PhD candidates who as a matter of fact are not registered with MCI are eligible to sign medical laboratory reports; can persons holding MBBS degree registered with MCI/State Medical Council sign the medical test reports?; can PhD (medical microbiology, medical biochemistry, life sciences, applied biology, cytogenetics, biotechnology) in relevant discipline be allowed to sign medical test reports? If not, can the same be allowed if they are co-authorised with a person registered with MCI/State Medical Council?.

Currently, the document 112 of NABL provides authorized signatory roles for Medical M.Sc degree holders, in the disciplines of microbiology and biochemistry. Ostensibly, under the pressure from non-clinical doctors, NABL was pressurized to exclude non-doctors from this role. In its part, NABL chose to seek the opinion from the MCI. After a delay of nearly three years, MCI replied that all lab reports should be signed/countersigned by persons registered with MCI/State Medical Council.

This is in stark contrast to its previous stand. In 2005, the members of the Adhoc Committee appointed by the Supreme Court and members of the Executive Committee of the MCI had approved the decision of the Ethics Committee that M.Sc. (Medical Biochemistry) with or without Ph.D is entitled to independently or solely sign a Medical Biochemistry report in a clinical laboratory. In a bizarre U-turn, the Executive Committee of the MCI has claimed that it did not approve the recommendations of the Ethics Committee.

"It is very unethical of the MCI to overrule the recommendations of the Ethics Committee", said Dr. Sridhar Rao, President of National M.Sc Medical Teachers' Association (NMMTA). The MCI has claimed that organizations like hospitals and nursing homes are beyond the jurisdiction of MCI. "How can diagnostic laboratories attached to hospitals and nursing homes fall under MCI's jurisdiction", quipped Dr. Rao.

"Worldwide biomedical scientists are held in high esteem and allowed to sign reports", added Dr. Rao.

Arjun Maitra, secretary, NMMTA said “Even though the MCI's letter was in the context of the NABL accredited laboratories only, it is having far-reaching and unintended effects. It is being widely misconstrued as MCI's order to all diagnostic laboratories. This letter is also being misused to evict biomedical scientists from laboratories attached to medical colleges. With no clarification coming from the MCI, India's biomedical scientists are obviously alarmed with the fear of losing livelihood and dignity. "We are being disallowed to practice in the area we were trained in".

"There is a huge misconception and lack of awareness about the nature of medical M.Sc degree. Like MD degrees, clinical diagnostic laboratory testing and interpretation is an integral part of the medical M.Sc courses in Biochemistry and Microbiology," he added.

"Services in the diagnostic laboratory should not be misinterpreted as the practice of medicine", he stated. "Doctors with MBBS degree only can interpret basic laboratory tests whereas special tests need understanding at a postgraduate level, such as those with MD or medical M.Sc degree" said Maitra.

As a representation of biomedical scientists engaged in healthcare, NMMTA is planning to meet the Prime Minister and the health Minister to convince them the importance of biomedical scientists in the diagnostic laboratories.

NMMTA is a registered association of persons possessing medical M.Sc degrees in the subjects of anatomy, biochemistry, physiology, pharmacology or microbiology obtained under the faculty of medicine from MCI-recognized medical colleges.

Now, only doctors can sign diagnostic reports

| | Jul 4, 2017, 09.37 PM IST
 
NEW DELHI: Only persons holding an MBBS degree and registered with the Medical Council of India (MCI) or with the state medical councils can now sign diagnostic reports, as per a new order issued by MCI. The move is aimed at regulating quality and standard of reports generated by diagnostic chains, which are fast mushrooming across the country.

"It was decided by the Executive Committee that 'All lab reports to be signed/countersigned by persons registered with MCI /State Medical Council,'" the Council said.

According to the Council, PhD scholars in different medical streams such as medical microbiology or medical biochemistry, professional medical lab technicians are not authorised to sign medical test reports issued by laboratories.

The decision was taken in a recent meeting of the MCI executive council following recommendations by its ethics committee.

While reputed and established diagnostic laboratories, mainly in metros, often get reports signed and countersigned by persons with MBBS degree, smaller laboratories particularly in tier II and III cities or in rural areas use lab technicians and PhD scholars to sign test reports.

Diagnostics industry in India is pegged at Rs 37,000 crore annually, growing at around 17%. There are over 100,000 diagnostic laboratories across the country, whereas 80-90% of the market is dominated by unorganised players, with only 1% of them accredited.

Though appreciating the MCI's move, experts say this alone is not enough to ensure quality and standard or care as MCI does not have the power to regulate diagnostic chains, particularly those not run by doctors registered with it.

"MCI orders cannot control mushrooming of labs run by non MBBS as they do not come under its purview. Need of the hour is to have a regulatory body which can monitor lab standards, quality and make a code of conduct. MCI should also direct all registered practitioners not to accept any test report signed by non doctor," said Dr Gurinder Grewal, former president of Punjab Medical Council.

There is no specific law regulating the diagnostics industry — neither for pricing nor quality. While some big players depend on voluntary accreditation from organisations like National Accreditation Board for Testing (NABL) and Calibration Laboratories and the College of American Pathologists (CAP) for quality, the smaller ones operate more like 'mom-and-pop' shops in the absence of regulatory norms.

The MCI decision comes in the wake of the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) seeking clarification from the Council on the issue as many labs use professional laboratory technicians to get reports verified.
இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சிட்லப்பாக்கம் குப்பைக் கிடங்கு

2017-07-05@ 01:52:27



* தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
* புகை மண்டலத்தால் மக்கள் திணறல்

தாம்பரம்: சிட்லப்பாக்கத்தில் இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் விடிய விடிய புகை மூட்டம் கிளம்பியதால் பரபரப்பு நிலவியது. சென்னை சிட்லப்பாக்கம், 2வது பிரதான சாலையில் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. குப்பை கிடங்கின் அருகில் பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், அரசு பள்ளிகள், சிட்லப்பாக்கம் பெரிய ஏரி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பை கிடங்கில் சிட்லப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முதல் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வரை என அனைத்து பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள பெரிய ஏரியும் மாசடைந்து வருகிறது. சுற்றுப்புற நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. இதுதவிர குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதால் இப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச கோளாறு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்துஎரிய தொடங்கியது. பின்னர் மளமளவென தீ குப்பைக்கிடங்கு முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் என அனைவருக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு வாகனங்களால் அணைக்க முடியாததால் மேலும் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், நேற்று காலையிலும் குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டிருந்ததால் வாகனஓட்டிகள் அந்த பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

அடிக்கடி எரியும் மர்மம் என்ன?

சிட்லபாக்கம் குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரியும் மர்மம் பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிட்லபாக்கம் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இது, மர்மமாக இருக்கிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமூகவிரோதிகள்தான் இந்த செயலை செய்து வருகிறார்கள் என்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த குப்பை கிடங்கில் அதிக அளவில் சேரும் குப்பையை யாருக்கும் தெரியாமல் பேரூராட்சி நிர்வாகமே தொடர்ந்து அடிக்கடி தீவைத்து எரித்து விடுவதாக சந்தேகம் எழுகிறது. இதுபோன்று அவர்கள் தொடர்ந்து செய்து வருவதால் சுற்றுப்புற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்’’ என்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மக்களுக்காக இயக்கிய மாநகர பஸ் திடீர் நிறுத்தம் 
 
2017-07-05@ 01:53:39

சென்னை: சென்னை புறநகர் பகுதி மக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பிள்ளைபாக்கம், கொளத்தூர், நாவலூர், மலைப்பட்டு, சேத்துபட்டு, மணிமங்கலம், கரசங்கால், முடிச்சூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் வழியாக குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், மணிமங்கலம், சேத்துபட்டு, மலைப்பட்டு, கொளத்தூர், பிள்ளைபாக்கம் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாநகர பஸ்கள் (தஎ 583சி, 583 டி) இயக்கபட்டன.

இந்நிலையில் (தஎ 583 சி) ஒரு பஸ் நேற்று முன்தினம் முதல் இயக்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இயக்கப்பட்ட (தஎ 583 சி) மாநகர பஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் எவ்வித முன் அறிவிப்பின்றி, நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

வசூல் குறைவாக உள்ளதாக காரணம் காட்டி பஸ் சேவையை நிறுத்தி உள்ளனர். கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு செல்லவே மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. பல பகுதிகளில் இதைவிட குறைவாக வசூல் ஆகிறது. வளர்ச்சி அடைந்து வரும் எங்கள் பகுதியில் இயக்கபட்டு வந்த பஸ் சேவையை திடீர் என்று நிறுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே நிறுத்தப்பட்ட (தஎ 583 சி) மாநகர பஸ்சை மீண்டும் இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
வெளிநாட்டவர், என்ஆர்ஐகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 360 நாட்களாக நீட்டிப்பு


2017-07-04@ 00:51:57


புதுடெல்லி: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் தற்போது 120 நாட்களாக இருந்த முன்பதிவு காலம் தற்போது 360 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏறக்குறைய ஓராண்டு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டவர்கள் ராஜ்தானி, சதாப்தி, கதிமான், தேஜாஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்யலாம். சாதாரண வகுப்பு மற்றும் மூன்றடுக்கு ஏசி வகுப்புகளில் இவர்கள் முன்பதிவு செய்ய அனுமதி கிடைாது.

இதுபோல் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்க சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இதிலும் இவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. வெளிநாட்டவரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பல மாதங்கள் முன்பே தங்கள் விடுமுறை பயணம் அல்லது சுற்றுலாவுக்கு திட்டமிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டே முன்பதிவு கால அவகாசம் இவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. டிராவல் ஏஜென்ட்கள் துணையின்றி ஆன்லைனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உதவியுடன் இவர்களே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விசா, பாஸ்போர்ட், சர்வதேச மொபைல் எண் ஆகிய விவரங்களையும் முன்பதிவின்போது இவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்களுக்கு சேவை கட்டணமாக தலா ரூ.200 வசூலி–்க்கப்படும். ரத்து செய்ய ரூ.50 கழித்தது போக எஞ்சிய தொகைக்கு ஏற்கெனவே உள்ள ரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த பயணிகளுக்காக மொபைல் ஆப்சை ரயில்வே வெளியிட உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, தங்கும் அறை, டாக்சி, போர்ட்டர், உணவு ஆர்டர் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் என்றார்.

ரயில் பயணத்தில் பாடாய்படுத்தும் தடக், தடக் சத்தத்துக்கு விரைவில் ‘குட்பை’

2017-07-04@ 21:07:42
 

வேலூர்: இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி 160 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ரயில் சேவை முதன் முதலாக மும்பை-தானே இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்தியாவில் புல்லட் ரயில்களும், அதிவேக ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்களை தற்போதுள்ள தண்டவாளங்களை கொண்டு இயக்க முடியாது. தற்போதுள்ள ஒவ்வொரு தண்டவாளத்தின் நீளம் 13 மீட்டர் கொண்டது. காரணம் ஒரு ரயில் பெட்டியின் நீளம் 13 மீட்டர். எனவே தண்டவாளங்களும் 13 மீட்டருக்கு ஒரு துண்டு என பொருத்தப்பட்டது. இதனால் ரயில்கள் தண்டவாளங்களில் செல்லும்போது ‘தடக், தடக்’ என்ற சத்தம் வரும். இனி இந்த சத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டவாளங்கள் அனைத்தும் கோரக்பூரில் உள்ள செய்ல் கம்பெனி மூலம் தயாரிக்கப்படுகிறது. அங்கு 26 அடி நீளம் கொண்ட தண்டவாளமாக உருவாக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தண்டவாளங்கள் 26 அடி நீளம் கொண்டதாகவே ெபாருத்தப்படும். அதனால் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும்போது தடக், தடக் சத்தம் அதிகம் வராது. இந்த பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு ரயில்வே பிரிவிலும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பயணிகள் இரைச்சலை அனுபவிக்காமல் பயணிக்கலாம்.
'நீட்' தேர்வுக்கு எதிரான மனு 'டிஸ்மிஸ்' : தமிழக உள் ஒதுக்கீடுக்கும் சிக்கல்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:02

சென்னை: தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் உத்தரவிட்டு உள்ளன.

தமிழகத்தில், 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது.

இந்நிலையில், 'நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வு மதிப்பெண்ணின்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்' என, ஒரு மாணவரின் தந்தை, முருகவேல் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'விசாரணைக்கு தகுதி யற்ற வழக்கு' என, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று தள்ளுபடி செய்தது.

இதனிடையே, மருத்துவ சேர்க்கையில் தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, ௮௫ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, சி.பி.எஸ்.இ.,யில் படித்த மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு, வரும், ௭க்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ரூ.570 கோடி யாருக்கு சொந்தம்:
ஐகோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை


சென்னை: மூன்று கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த, சி.பி.ஐ., யின் விசாரணை அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சீலிட்ட உறையில், அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதால், அதன் விபரங்கள் தெரியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருப்பூர் மாவட்டத்தில், மூன்று கன்டெய்னர் லாரி களை, தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். அதில், 570 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. கோவையில் இருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு, பணத்தை கொண்டு செல்வதாக தெரிவிக் கப்பட்டது.

மனுதாக்கல்:

வாகனங்களின்ஆவணங்கள்,

அதில் வந்தவர்கள் அளித்த தகவல்கள், முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யது.கன்டெய்னர் லாரிகளில் பணம் பிடிபட்ட விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி., யான, டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை, நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். 'ஆரம்பகட்ட விசாரணையை, சி.பி.ஐ., நடத்த வேண்டும்; விசாரணையில் முகாந்திரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண் டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்

.உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. சீலிட்ட உறையில், சி.பி.ஐ.,யின் அறிக்கை, உயர் நீதிமன்ற பதிவுத்



துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 மாதம்:

இது குறித்து, சி.பி.ஐ., தரப்பில் கேட்ட போது, 'மூன்று மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்ற பதிவுத்துறையில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டு விட்டது; சீலிடப்பட்ட உறையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.
செல்லாத நோட்டு 'டிபாசிட்' செய்ய மீண்டும் வாய்ப்பு அளிக்க உத்தரவு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:19

புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, தவிர்க்க முடியாத காரணத்தால், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யத் தவறியவர்களுக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கான திட்டத்தை பரிசீலித்து சமர்ப்பிக்க, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று, இரண்டு வார அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ல், மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டு கள் வெளியிடப்பட்டன.செல்லாத நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள, அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், செல்லாத நோட்டு களை, வங்கிகளில் டிபாசிட் செய்ய முடியாத பலர், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், சொலிசிட்டார் ஜெனரல், ரஞ்சித் குமார் ஆஜரானார்.விசாரணையின் போது, 'எவ்வித தவறும் இல்லாமல், பணத்தை இழக்கக் கூடிய சந்தர்ப்பம் சிலருக்கு ஏற்படலாம். இதுபோன்ற நபர்கள், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை, டிபாசிட் செய்வதற்கு தடை விதித்ததற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம். 'அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கான திட்டத்தை, இரு வாரத்தில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
1,224 டாக்டர்கள், 1,010 நர்ஸ்கள் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:28

சென்னை: ''தமிழகத்தில், 1,224 டாக்டர்கள், 1,010 செவிலியர்கள் உட்பட, 4,717 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக, 1,224 டாக்டர்கள், 600 சிறப்பு உதவி டாக்டர்கள், 1,010 செவிலியர்கள், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைகளில், 137 உதவி மருத்துவ அலுவலர்கள்.

மேலும், 33௩ மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வக உதவியாளர்கள், ௧௭௯ இதய வரைபட டெக்னிசியன்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழி ஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 26 கோடி ரூபாயில், 'டிஜிட்டல்' நுாலகம் அமைக்கப்படும். காசநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், 141.14 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். மேலும், '108' ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, ஐந்து கோடி ரூபாயில், 50 வாகனங்கள் வாங்கப்படும்.
அனைத்து, மாவட்டங்களிலும், 5.12 கோடி ரூபாயில், நவீன கண் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில், மருத்துவத் துறையில் முதன்முறையாக, 24 மணி நேர பேரிடர் மேலாண்மை மையம், 2.1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

வேலுார், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மனநல சிறப்புப் பிரிவுகள், 3.34 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

சிகலா, சிறை,தண்டனை,ரத்தாக,வாய்ப்பில்லை
 DINAMALAR

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தள்ளுபடியாகும் என்பதால், அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை.



அவர் நான்காண்டு, 'உள்ளே' இருப்பது உறுதி யாகும் என,சட்ட நிபுணர்கள் கருத்து தெரி வித்து உள்ளனர். அவர் வெளியே வந்தால், கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் என்ப தால், அ.தி.மு.க.,வினரும் பீதியுடன், தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில்,ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சிறையில் அடைப்பு:

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்ட னையை உறுதி செய்து, பிப்., 14ல் உத்தர விட்ட னர். ஜெ., மறைந்து விட்டதால், அவருக்கு எதிரான அப்பீல் வழக்கு கைவிடப்பட்டது.சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.கர்நாடக அரசுசார்பில், ஜெ.,க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, அவரது சொத்து களை விற்று வசூலிக்க வேண்டும் என, தாக்கல் செய்யப் பட்ட மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,சிறைத்தண்டனையை எதிர்த்து, சசிகலா சார்பில், சீராய்வு மனு, உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், எங்களை தண்டிப்பதற்கு, நாங்கள் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல. அந்த சட்டமானது, அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்; எங்க ளுக்கு பொருந்தாது. 'எனவே, இந்த வழக்கில், எங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள,

நான்கு ஆண்டுகள் சிறை தண்ட னையை ரத்து செய்து, எங்களை விடுவிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இம்மனு மீதான விசாரணை, நாளை நடக்கிறது. இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா, நிராகரிக்கப் படுமா; விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும்,

சசிகலாவிடுவிக்கப்படுவாரா என, கேள்விகள் எழுந்துள்ளன.

எதிர்பார்ப்பு:

'மனு நிராகரிக்கப்படவே வாய்ப்பு .அதிகம். விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும், இறுதி யில் தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்பு அதிகம்' என, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த தீர்ப்பை, அ.தி.மு.க., வினர் பீதியுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

ஏனெனில், சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி, அவரை சந்திக்கச் செல்லவில்லை. அவரால், அ.தி.மு.க., துணை பொதுச் செயல ராக நியமிக்கப்பட்ட, தினகரன் ஒதுக்கிவைக்கப் பட்டு உள்ளார்.இந்த சூழலில், சசிகலா வந் தால், மீண்டும் கட்சிக்குள் குழப்பமும், ஆட்சிக்கு சிக்கலும் ஏற்படும். அவரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டால், முதல்வர் பழனிசாமி அணியினர், துணிந்து தனித்து செயல்படத் துவங்குவர்.

எனவே, நாளைய தீர்ப்பை, அவர்கள் ஆவ லோடு எதிர்பார்க்கின்றனர். அவர் விடுதலை யானால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கட்டுப் பாட்டிற்குள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை யில், அவரது விடுதலையை, சசிகலா குடும்பத் தினரும், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும் எதிர்பார்க்கின்றனர்.சீராய்வு மனு தீர்ப்பை, பன்னீர் அணியினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

- நமது நிருபர் -
செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:49

ஊட்டி : பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை' துவக்க அஞ்சல் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கை:பெண் குழந்தைகளின் நலனையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி, அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக 'செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்' துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் படி, பெண் குழந்தைகள் பிறந்த நாளில் இருந்து, 10 வயது அடையும் வரை இக்கணக்குகளை துவக்கலாம்; குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச முதலீடாக, 1.50 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும், 100 ரூபாய் மடங்குகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். கணக்கு துவங்கியதில் இருந்து, 14 வருடங்கள் பணம் செலுத்தலாம். விருப்பத்தின் பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது. மேலும், பெண் குழந்தைகளின், 18 வயதில் இருந்து, 50 சதவீதம் வைப்பு தொகையினை குழந்தைகளின் உயர் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் கணக்கில் இருந்து பெற்று கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின், கணக்கு முதிர்வு பெறும் திருமணம் முடிந்த பின்பும் கணக்கை எவ்வித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.மேற்படி 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டத்தில்' தங்களின் பெண் குழந்தைகளையும் சேர்த்து, குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக.19 முதல் 31 வரை ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:46

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர்., ஸ்டேடியத்தில் ஆக., 19 முதல் 31 வரை கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது.கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த கல்வி, உடல் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், தொழில்நுட்பம் தேர்வாளர், செவிலியர் உதவியாளர், குமாஸ்தா, ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் சிப்பாய் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் பகுதிகளை சேர்ந்த ஏற்கனவே ஹவில்தார் பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம்.

விண்ணப்பங்களை www.joinindianarmy.nic.in இணையதளத்தில் ஜூலை 5 முதல் ஆக., 3 வரை விண்ணப்பிக்கலாம். ஆக., 3க்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். முகாமிற்கு வரும்போது இந்த அனுமதி சீட்டை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மதுரை முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகத்தை 0452 --230 8216 ல் தொடர்பு கொள்ளலாம்.
விரைவு தபால் சேவை: 18 சதவீத ஜி.எஸ்.டி.,

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:20

கோவை: தபால் போக்குவரத்து மற்றும் பார்சல் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தபால் துறை அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்பீடு போஸ்ட், எக்ஸ்பிரஸ் பார்சல், பிசினஸ் பார்சல், கேஷ் ஆன் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் போஸ்ட், பிசினஸ் போஸ்ட், பில் மெயில் சர்வீஸ், டைரக்ட் போஸ்ட், மீடியா போஸ்ட் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், 18 சதவீத வரியை, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

கோவை முதுநிலை, தலைமை தபால் அதிகாரி சக்திவேல் முருகன் கூறியதாவது:

முன்பு, ஒரு ஸ்பீடு போஸ்ட் அனுப்ப, கட்டணம், 35 ரூபாய், சேவை வரி, ஐந்து ரூபாய் சேர்த்து, 40 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, 18 சதவீத, ஜி.எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், சேவை வரி, ஆறு ரூபாய் சேர்த்து, 41 ரூபாய் வசூலிக்கப்படும். அதே சமயம், தபால் துறையின் முக்கிய சேவைகளான, பதிவு தபால், பார்சல், இ - மணியார்டர், இ - போஸ்ட் மற்றும் சாதாரண மணியார்டர் சேவைக்கு இவ்வரி பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து விபரங்களும் 'கரெக்ட்' : இ - சேவையில் 'ஸ்மார்ட்' கார்டு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:03

அனைத்து விபரங்களும் சரியாக வழங்கியும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைக்காதவர்கள், அதை, அரசு இ - சேவை மையங்களில் பெற்று கொள்ளும் வசதியை, உணவு துறை துவக்க உள்ளது. தமிழகத்தில், 'ஆதார்' விபரங்களின் அடிப்படையில், உணவு வழங்கல் துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. பலரின் ஆதார் அட்டையில் பிழைகள் இருந்ததுடன், குடும்ப தலைவரின் புகைப்படமும் தெளிவாக இல்லை. இதனால், பிழை திருத்தங்களை சரிசெய்யும் பணிகள், ரேஷன் கடைகளில் நடந்து வருகின்றன. அதில், சரியான விபரங்களை வழங்கிய பலருக்கு, இதுவரை, ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிழை திருத்தம் உள்ள கார்டுதாரர்களின் பட்டியல், ரேஷன் ஊழியர்களிடம் வழங்கப்பட்டன. அவர்கள், சம்பந்தப்பட்ட நபரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, திருத்த பணிகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும், பலர் சரியான விபரங்களை வழங்காமல் அலட்சியமாக உள்ளனர்.
தற்போது, 1.10 கோடி பேருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது. பிழை திருத்த பணி முடிந்ததும், எஞ்சிய அனைவருக்கும், இம்மாத இறுதிக்குள் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அனைத்து விபரங்களும் சரியாக வழங்கியவர்கள், தங்களுக்கு உடனே ஸ்மார்ட் கார்டு தேவைப்பட்டால், அரசு இ - சேவை மையங்களில், 30 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்காக, அங்கு கேட்கப்படும் கேள்விக்கு சரியான விபரங்களை, கார்டுதாரர்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு, ரேஷன் கடையில், அந்த கார்டு வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
மெட்ரோ ரயில் பயணியர் காரிலும் பயணிக்க வசதி


பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:03

பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம், 'ஓலா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயணியர், ஓலா காரிலும் செல்லலாம்.

சென்னை மெட்ரோ ரயிலில், பயணியர் போக்குவரத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயணியர், ரயில் நிலையத்தில் இருந்து அலுவலகம் சென்று வர, ஏற்கனவே சைக்கிள் வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது, கார் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, சின்னமலை, கிண்டி, அசோக்நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், நேரு பூங்கா, ஆலந்துார், பரங்கிமலை ரயில் நிலையங்களில், ஓலா கார் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரயிலில் இருந்து இறங்கும் பயணியர், இம்மையத்தில் உடனடியாக முன்பதிவு செய்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு, தாமதமின்றி செல்லலாம். இதனால், மெட்ரோ ரயிலில் பயணிப்போர்எண்ணிக்கை அதிகரிக்கும் என, மெட்ரோ ரயில் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -
மயிலின் 1 மணி நேர 'ஆட்டம்' : விருத்தாசலம் அருகே அதிசயம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:09



விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, தினசரி, காலையில் ஒரு மணி நேரம், மயில் தோகை விரித்து ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி பகுதியில், அதிக மயில்கள் சுற்றித் திரிகின்றன. இவை, அங்குள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்து தானியங்களை உண்கின்றன. இந்த கூட்டத்தில் உள்ள, ஒரு மயில், தினசரி, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, குடியிருப்புகளுக்கு நடுவே, தோகை விரித்து ஆடுவதை வழக்கமாக கொண்டுஉள்ளது.மழை மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடும்.

ஆனால், விருத்தாசலம் அருகே, அதிசய மயில், தினசரி ஒரு மணி நேரம் ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். மக்கள் கும்பலாக திரண்டு நின்று பார்த்தாலும், அந்த மயில் பறந்து செல்லாமல், வழக்கமான ஆட்டத்தை முடித்து விட்டே செல்கிறது.
மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
02:47



சென்னை: மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர் விடுதி சமையல் பணிக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் போட்டி

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:10

மைசூரு: கர்நாடகாவில், அரசு மாணவர் விடுதிகளில், சமையல் உதவியாளர்கள் பணிகளுக்கு, இன்ஜினியர்கள், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மைசூரு மாவட்டத்தின் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதிகளில், 58 சமையல்காரர்கள், 92 உதவியாளர்கள் பணியிடங்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் விடுதிகளில், 32 உணவு தயாரிப்பவர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டிருந்தது. உணவு தயாரிப்பவர்கள், உதவியாளர்களுக்கான தேர்வில், 134 பேர் பங்கேற்றனர்; இதில், 70 பேர், பட்டதாரிகள்; 50 பேர், முதுகலை பட்டதாரிகள், நான்கு இன்ஜினியரிங் பட்ட தாரிகளும் விண்ணப்பித்து இருந்தனர். இன்ஜினியரிங் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவரும் விண்ணப்பித்து இருந்தார். சமையல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மைசூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இதில் புளியோதரை, சேமியா பாயசம், உப்புமா, கேழ்வரகு களி, சப்பாத்தி என ஏதாவது ஒன்றை, அரை மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்; சுவையானதாக இருக்க வேண்டும். பல்வேறு ஓட்டல்களிலிருந்து வந்துள்ள, சமையல் வல்லுனர்கள், சுவையாக சமைத்தவர்களை, பணிக்கு தேர்வு செய்வர்.
அலட்சியம்:இளையான்குடியில் தார் ரோடு எல்லாம் மண் ரோடானது: பல ஆண்டுகளாக பராமரிக்காததால் மக்கள் பரிதவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:37

இளையான்குடி:இளையான்குடி தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில், தார் ரோடு மறைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால், மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிக ஊராட்சிகளை கொண்ட ஒன்றியம் இளையான்குடி ஒன்றியம். மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்திருப்பதால், இந்த ஒன்றியத்தை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற புகார் உள்ளது.பல கிராமப்புறங்களில் ரோடு இருந்த அடையாளமே தெரியாமல், குண்டும் குழியுமாக ஒற்றையடி பாதை போல மாறி வருகிறது. ஓட்டு கேட்டு கூட பல அரசியல்வாதிகள் கிராமப்புற பகுதிகளுக்கு வருவதில்லை. சுதந்திரத்திற்கு முன் போட்ட சாலைகள் போல பல சாலைகள் பழுதடைந்துள்ளன. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது.
இளையான்குடி தாலுகாவில்ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 566 கி.மீ., சாலையும், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 276 கி.மீ., துாரமுள்ள சாலைகளும் உள்ளன. இளையான்குடி கண்ணமங்கலம் ரோட்டில்இருந்து விளங்குளம் செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து பல வருடங்களாகியும், இன்று வரை சாலைப்பணி மேற்கொள்ளப்படவில்லை.திருவேங்கடத்தில் இருந்து தாயமங்கலம் செல்லும் பாதை யில் தரைப்பாலம் சிதைவடைந்து போக்குவரத்திற்கே, பயனற்றதாக உள்ளது.

வடக்கு கீரனுாரில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். கரும்புக்கூட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக கனரக வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கிராமப்புற சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றன.

இதனால், விபத்து மற்றும் பிரசவ காலங்களில் நோயாளிகளை சரக்கு வாகனங்களில் அழைத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் அரசு பஸ்கள் சரிவர செல்வதில்லை. சரக்கு வாகனங்களை நம்பியே உள்ளனர். இதனால் கிராமப்புற மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து கரும்புக்கூட்டம் சண்முகம் கூறுகையில் : இளையான்குடி தாலுகா தனி சட்டமன்ற தொகுதியாக இருந்த வரை சாலை வசதி, குடிநீர் வசதி குறித்து எம்.எல்.ஏ.,விடம் மனு மட்டுமாவது கொடுத்து வந்தோம். தற்போது, மனு கொடுக்க கூட 30 கி.மீ., தள்ளி உள்ள மானாமதுரை செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு அங்கு செல்ல நினைத்தாலும், எம்.எல்.ஏ., எப்போது இருப்பார் என்றே தெரியவில்லை, என்றார்.எனவே, இளையான்குடி தாலுகாவில் கிராமப்புற சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
30 நாட்களுக்குள் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
02:42



புதுடில்லி: திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அவ்வாறு திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, உரிய காரணம் இல்லாத நிலையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணத்தைப் பதிவு செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள வெவ்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆதார் தகவல் பதிய வருவோரை
திருப்பி அனுப்புவது ஊழல் குற்றம்'

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்ய வருவோரிடம், தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களை கூறி, அவர்களை திருப்பி அனுப்புவது, ஊழலாக கருதப்படும்' என, 'ஆதார்' அடையாள அட்டை ஆணையம் எச்சரித்துள்ளது.






யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக, நாடு முழுவதும், 25 ஆயிரம் பதிவு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த மையங்கள் அனைத்தும், விரைவில், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலக கட்டடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.

அடையாள அட்டை பெற வருவோர் பற்றிய தகவல்களை, ஆதார் ஆணைய இணையதளத்தில், கணினியைகையாளும் ஊழியர் பதிவேற்றம் செய்வார். ஆதார் அட்டைக்கான தகவல்களை பதிவு செய்ய வருவோரை, தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட, எந்த காரணத்தை கூறியும் திருப்பி அனுப்ப கூடாது; அவ்வாறு அனுப்புவது, ஊழல் நடவடிக்கையாக கருதப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'நாடு முழுவதும், ஆதார் தகவல் பதிவு மையங் களில் உள்ள ஊழியர்கள், யாரையும் திருப்பி அனுப் பக் கூடாது' என, எங்கள் கள அலுவலகங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டுஉள்ளனர். யாராவது திருப்பி அனுப் பப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கும்படி, மக்களை கேட்டுக் கொள்கிறோம்.விதிகளை மீறும் ஆதார் தகவல் பதிவு மையங்களுக்கு, முதன்முறை, 10 ஆயிரம் ரூபாயும், அதன்பின் நடக்கும்

தவறுகளுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்யும் மையங்கள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் படும்.

தொலைபேசி மூலம், ஆதார் எண், ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ் வேர்டு' கேட்டு, தொலைபேசி மூலம் அழைப்பு வருவதாக புகார்கள் வருகின்றன. இத்தகைய மோசடி நபர்களிடம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் தம்பதி




ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் தம்பதியினர் தங்களின் பிள்ளைகளை பராமரிக்க அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஜூலை 04, 2017, 04:00 AM


தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுருளிச்சாமி (வயது 54). இவர் கட்டிட கட்டுமான கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து இருந்தனர். கலெக்டர் வெங்கடாசலத்திடம் அந்த தம்பதியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

நானும், எனது கணவரும் ரத்த உறவு முறையில் திருமணம் செய்தவர்கள். எனது அத்தை மகனை தான் திருமணம் செய்துள்ளேன். எங்களுக்கு ராஜ்குமார் (20), சூர்யா (18) என்ற மகன்களும், ராதிகா (16) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

முதல் மகனுக்கு 2 வயதிலும், 2–வது மகனுக்கு 6 வயதிலும், மகளுக்கு 1½ வயதிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இவர்களை பராமரிக்க மிகுந்த சிரமம் அடைகிறோம். எங்கள் வீட்டில் தண்ணீர் குழாய் கிடையாது. நீண்ட தூரம் சென்று தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். தண்ணீர் பிடிக்க செல்லும் போது எனது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகின்றனர். வீட்டுக்குள் வைத்து பூட்டினால், வீட்டுக்குள் எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றனர். இதனால், இவர்களை பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வாழும் வீடும் பழைய வீடு. மண் தரையில் தான் உள்ளது. எங்களுக்கு அரசு இலவச வீடு கட்டிக் கொடுத்து, வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள கடன் உதவி வழங்கினால் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்துக் கொண்டே வாழ்வாதாரமும் தேடிக்கொள்ள முடியும். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Monday, July 3, 2017

AirIndia

தனியார்மயமாகும் ஏர் இந்தியா: எதிர்க்கும் ஊழியர்கள் சங்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசின் முடிவுக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிறுவனங்களில் முதன்மையான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம், தொடர் நஷ்டத்தில் சிக்கித் தவித்துவருகிறது. கடன் சுமை தாளாமல், தன் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு நடவடிக்கையிலும் ஏர் இந்தியா நிறுவனம் இறங்கியது. இந்தச் சம்பளக் குறைப்பு நடவடிக்கையால் அதிர்ச்சிக்குள்ளான நிறுவன ஊழியர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தலையீட்டால் போராட்டங்கள் கைவிடப்பட்டு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டு, ஊழியர்கள் பணியாற்றத் தொடங்கினர்.

இந்த நிலையில், சிறிது காலத்துக்குப் பின் சம்பளம் தருவதையே ஏர் இந்தியா நிறுவனம் மறந்துவிட்டது. ஊழியர்களும் போராட்டம் நடத்தியே களைப்படைந்த வேளையில், மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்தது.

இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் இம்முடிவுக்கு முதலில் ஊழியர்கள் ஆதரவு அளிப்பர் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை முற்றிலும் மறுக்கிறது ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம். தனியார் வசம் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைக்கப்படக் கூடாது என ஊழியர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென்றும் ஊழியர்களின் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Dailyhunt

Swiss Bank Deposit

சுவிஸ் வங்கியில் அதிகப் பணம்... 88-வது இடத்தில் இந்தியா!

சுவிஸ் வங்கிகளில், அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 88-வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் அதிகப் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள், பிரான்ஸ், பனாமாஸ், ஜெர்மனி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 61-வது இடத்தில் இருந்த நம் இந்தியா, தற்போது 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவே, இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதனால், சுவிட்சர்லாந்து அரசும் தன் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை அளிக்கவும் ஒப்புக்கொண்டது. மேலும், மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண மதிப்பு குறையத் தொடங்கியது. தங்களின் கணக்கிலிருந்த பணத்தை அவர்கள் ஏற்கெனவே பெருமளவில் எடுத்துவிட்டபடியால், சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்களின் மொத்த பணத்தில், இந்தியர்களின் பணம் 0.04 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இதன்படி, அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் 4,500 கோடி ரூபாய் உள்ளது என 2016-ம் ஆண்டு இறுதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அது, ''ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளை ஒப்பிடும்போது, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறைவான தொகையையே டெபாசிட் செய்துள்ளனர்'' என்கிறது.

2007 முதல் 2013 வரையான காலகட்டத்தில், முதல் 50 இடங்களுக்குள் இருந்த இந்தியா, அதிகபட்சமாக 2004-ம் ஆண்டில் 37-வது இடத்தில் இருந்தது என்பதும் அதேசமயத்தில், 2015-ம் ஆண்டு 75-வது இடத்திலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவைவிட சுவிஸ் வங்கிகளில் அதிகப் பணம் வைத்திருக்கும் பாகிஸ்தானியர்கள், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தில் உள்ளனர். நம்முடைய மற்ற அண்டை நாடுகளான சீனா 25-வது இடத்திலும்,வங்கதேசம் 89-வது இடத்திலும், நேபாளம், இலங்கை 150, 151-வது இடங்களிலும் உள்ளன. பூடான் 282-வது இடத்தில் உள்ளது. 

Dailyhunt

Police transfer

கடமையைச் செய்ததற்காகப் பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

னது பணியை நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் செய்ததற்காக மக்களிடம் பாராட்டுப் பெற்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் மாவட்டத்தில், சயன்னா பகுதியைச் சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர். போலீஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன் வாகனப் போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு அபராதம் விதித்ததோடு, வழக்கும் பதிவுசெய்தார். ஒருகட்டத்தில், அந்த வாகன ஓட்டி, அபராத்தைச் செலுத்தாமல், பெண் போலீஸ் அதிகாரியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால், கைது செய்யப்பட்ட அந்த வாகன ஓட்டிக்கு ஆதரவாகத் திரண்ட பி.ஜே.பி-யினர் சிரேஷ்ட தாகூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பி.ஜே.பி அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம்செய்துள்ளது. அதில், சிரேஷ்ட தாகூரும் ஒருவர். இதுகுறித்து அவர், "இது வழக்கமான இடமாற்றமா அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பதுகுறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய பேட்ஜைச் சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து அதிக தொலைவான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும், இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இங்கே, கடமையைச் செய்தவருக்கு இடமாற்றம் என்றால், தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரிக்கு, பதவியுடன் கூடிய இடமாற்றம்?

Dailyhunt

Sabarimala

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயிலில் இருந்த தங்கக் கொடிமரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, புதிய கொடிமரத்தை, கடந்த மாதம் 25-ம் தேதி, சபரிமலையில் பிரதிஷ்டை செய்துவைத்தனர். அதன்பின், ஆராட்டுத் திருவிழாவுக்காக புதிய தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, 10 நாள்கள் திருவிழாவும் நடந்துவருகிறது.

புதிய தங்கக் கொடிமரத்தைத் தரிசிப்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துவருகின்றனர். தற்போது, கேரளாவில் தென் மேற்குப் பருவமழை கடுமையாகப் பெய்துவருகிறது. சபரிமலையிலும் கனமழை பெய்ந்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள், பம்பை ஆற்றில் குளிக்க போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கிவிடாதபடி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

தற்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழக பக்தர்கள் பெருமளவு சபரிமலையில் குவிந்துள்ளனர். அவர்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி அய்யப்பனையும் புதிய தங்கக்கொடி மரத்தையும் தரிசிக்க காத்துக்கிடக்கின்றனர். சபரிமலையின் சீசன் காலங்களான மகரவிளக்கு, மண்டல விளக்குப் பூஜை போன்று இப்போதும் கணிசமான பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போலீஸார் அதிக அளவு பாதுகாப்புப் பணியில் உள்ளனர். வழக்கமாக, சபரிமலை கோயில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இப்போது 11 மணிக்கு அடைக்கப்படுகிறது. நேற்று மாலை, சபரிமலையில் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. பூஜையின்போது, சுவாமி அய்யப்பன் யானையின் மீது பவனியாக எடுத்து வரப்பட்டார். அதை சபரிமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

Dailyhunt

NEWS TODAY 23.12.2025