Wednesday, August 9, 2017


SC lets 10 OCIs attend MBBS/BDS counselling in all categories


DH News Service, New Delhi, Aug 3 2017, 1:29 IST

Their admission subject to final outcome of case: Apex Court



The court put the special leave petition filed by the candidates for consideration on November 7 to adjudicate on the principle to be adopted by states for admission of OCI cardholders. Representational Image. DH photo.

The Supreme Court on Wednesday allowed 10 Overseas Citizens of India (OCIs) to participate in counselling to be organised by Karnataka on August 17 for admission to MBBS/BDS seats in all categories.

A three-judge bench presided over by Justice Dipak Misra passed an interim order, providing relief to candidates who challenged the High Court’s order of July 7. The HC had declared OCI card-holders who cleared NEET- 2017 eligible for admission to various categories other than government seats. The court took into consideration the policy adopted by Delhi, Maharashtra, Kerala, Andhra Pradesh, Telangana and other states for granting them permission.

“It is directed that the petitioners, who are ten in number, are permitted to participate in the second counseling which is going to be held on August 17. We are sure the State of Karnataka shall not deviate to follow the order in letter and spirit,” the bench, also comprising Justices Amitava Roy and A M Khanwilkar, said in its order.

“No High Court shall entertain any prayer of any candidate who had not approached the court,” the bench added.

Additional Solicitor General P S Narasimha, appearing for the union government, said the Centre had ended the discrimination between NRIs, OCIs and Persons of Indian Origin (PIOs). Once the candidates belonging to these categories cleared NEET, they were entitled for admission to only 15% seats in all-India quota, he said.

Narasimha, however, said the states were free to formulate their own rules in terms of the seats in other categories, including government seats.

Senior advocate Basava Prabhu Patil, representing Karnataka, said OCI candidates cannot be granted admission in government seats. Out of 10 petitioners, only nine are OCI cardholders. They have already participated in counselling and have been allotted seats. Seven of them had already accepted the seats, he said. “If these candidates are allowed admission in government seats, it would create chaos. The only difference for them is in terms of fees,” he said.

Senior advocate Rajeev Dhawan, representing the petitioners, submitted that OCI candidates must have access to all category of seats. He said the petitioners participated in the previous counselling as they did not have any choice.

The court put the special leave petition filed by the candidates for consideration on November 7 to adjudicate on the principle to be adopted by states for admission of OCI cardholders.

In the instant case, the court said the petitioners have to satisfy the eligibility criteria for participation in counselling. It, however, clarified no other candidates from OCI category would be granted the benefit of the order. The court said the admission of the 10 candidates would be subject to final outcome of the case.

Woman donates land for PHC


M. Rahamathunisha handing over the land deed to Pudukottai Collector S. Ganesh.Special Arrangements  

Officials in Pudukottai district were unable to acquire land for building

A Muslim woman’s gesture in donating her land for construction of a primary health centre at Melathaniyam village in the district has earned her appreciation.
M. Rahamathunisha, a resident of Melathaniyam in Pudukottai district, voluntarily came forward to donate her land measuring 74 cents at a time when the official machinery was unable to acquire a site for construction of the primary health centre. Since January 28, the health centre had been functioning at Melathaniyam in a community hall. Although funds to the tune of Rs. 60 lakh was allocated for the construction of a building, officials were unable to get the required land. On learning about their predicament, Ms. Rahmathunisha came forward and donated her land worth Rs. 1 crore.
She met Collector S. Ganesh and handed over the document. Appreciating the gesture, the Collector said the construction work would start soon.

Ready to include Urdu in NEET from 2018-19 session: Centre tells SC



At present, the test for admission into medical courses is being conducted in ten languages


The Supreme Court today considered the submission of the Centre that it was willing to include Urdu as a language in the NEET, the common entrance test for admission into medical courses, from academic session 2018-19 onwards.

A bench, headed by Justices Dipak Misra, noted the submission made by Solicitor General Ranjit Kumar, appearing for the Centre, that it was not opposed to conducting the National Eligibility cum Entrance Test (NEET) in Urdu medium also from 2018.

"The exam for this academic session is already over. We can't put the clock back...The appeal is disposed of," the bench, also comprising Justice A M Khanwilkar, said.

The solicitor general had on March 31 told the apex court that a students' body seeking conduct of the NEET in the Urdu language had accused the Centre of being "communal".

The submission was made while referring to an affidavit filed by the Students Islamic Organisation of India (SIO) through its national secretary Thouseef Ahamad.

The Centre had told the court it was not feasible to introduce Urdu as one of the mediums for the NEET from the current academic year.

At present, the test is being conducted in ten languages — Hindi, English, Gujarati, Marathi, Oriya, Bengali, Assamese, Telegu, Tamil and Kannada languages.

The court had earlier sought the response of the Centre, the Medical Council of India, the Dental Council Of India, and the Central Board of Secondary Education on the plea for making Urdu as a medium for the NEET 2017.

Inspired by Singapore zoo


MYSURU,AUGUST 09, 2017 00:00 IST


The open-sky amphitheatre at the Mysuru zoo has been inspired by the one in Singapore zoo.

About Rs. 2.3 crore has been spent on the construction of the amphitheatre, located next to Tandi Sadak, close to the service gate on M.G. Road.

Artwork on wild animals on both sides of the entrance aimed at spreading the message of wildlife conservation welcomes the visitors. What is appealing about this zoo’s amphitheatre is that it has a natural canopy — tall trees providing shade to the entire venue — which has a built up area of around 1,100 sq. m.

Ravikumar, a Mysuru-based architect, has designed the facility built to host a variety of events. The amphitheatre will be the new venue for all the zoo’s activities such as youth club events, wildlife-centric programmes, conservation education activities, screening of wildlife-based films, and in–house events.

Fly to Salem, Puducherry from Chennai


B Aravind KumarSunitha Sekar

CHENNAI,AUGUST 09, 2017 00:00 IST


Flights to Neyveli to begin in October; approval awaited for operations to Hosur which has a private airfield

From September, flying from Chennai to Puducherry and Salem will be possible as the Regional Connectivity Scheme (RCS) of the Civil Aviation Ministry takes off.

Both the Centre and State governments have big plans regarding the scheme. “It will revolutionise air travel as more and more people prefer to fly,” says P.W.C. Davidar, IAS, additional chief secretary, Transport Department, Government of Tamil Nadu.

Operations will first begin on the Chennai-Puducherry route, followed up by the Chennai-Salem route. “Already, the bids for Salem and Neyveli airports have been finalised. Hosur has got huge potential. It is a private airfield and the approval is awaited,” he says.

According to officials of Airports Authority of India (AAI), there are some obstructions in the approach at the Neyveli airport’s airstrip and a study has been conducted for the same.

“We plan to commence operations to Neyveli by the end of October at least,” an official says.

There will be special fares on these routes for at least half the seats (RCS fare). These seats will be priced at Rs. 2,500, AAI officials say.

Budgetary provision

The cabinet committee on economic affairs has given a budgetary provision of Rs. 4,500 crore for the RCS scheme to be implemented across the country. Also, AAI plans to invest Rs. 17,500 crore for capacity enhancement and upgrading infrastructure at various existing airports.

For instance, at Thoothukudi, the State has given 366 acres for the extension of the runway.

Also, AAI will expand both Tiruchi and Madurai airports in the coming months.

Under the RCS scheme, the State government will provide minimum land, if required, free of cost and free from all encumbrances for development of RCS airports. The VAT would be 1% or less on ATF (Aviation Turbine Fuel) at RCS airports located within the State for a period of 10 years.

Security provided by police personnel and fire and rescue services personnel will be offered free of cost by the State.

Electricity, water and other utility services will be offered at concessional rates, State government officials say.

Under the scheme, the airline could seek VGF (viability gap fund) in case there is a gap in cost of operations and revenues. According to sources, the approximate VGF commitment per annum has been worked out to be Rs. 211 lakh for Salem and Rs. 31 lakh for Neyveli.

While the tenure of the scheme would be 10 years, VGF support would be only for three years. The bid for Salem airport has been bagged by Turbo Megha (Trujet)-ATR78 and 36 RCS seats will be available on this route.

At Neyveli, the successful bidder is Air Odisha, which will operate 18-seaters in which nine seats will be available at RCS fares.

For Hosur, the VGF has been worked out to be Rs. 51 lakh but the bid has not been yet opened, sources say. RCS operations through helicopters are permitted only for remote/specified areas, officials say.

The scheme will will revolutionise air travel as more and more people prefer to fly

P.W.C. Davidar

Transport Secretary

One year later, no arrests in Salem-Chennai train heist case

Siddharth Prabhakar| TNN | Updated: Aug 8, 2017, 11:52 PM IST


Chennai: Exactly a year ago, railway authorities at Chennai Egmore station discovered that Rs 5.8 crore of soiled currency was stolen from a high-security coach of the Salem-Chennai Express through a hole sawed on the roof. Till date, no arrests have been made in the case, which was as daring as it is mystifying.

The train left Salem on the night of August 8, 2016 and reached Chennai the next morning. When railway and bank officials opened the sealed coach at Egmore station around 11am, they found that three boxes were broken and the notes missing. The case was transferred from Government Railway Police (GRP) to CB-CID.

Ironically, majority of the cash stolen was the old Rs 500 notes, which were demonetised in November by the Centre. One year on, there are still unanswered questions. It was theorised that the hole was sawed while the train was moving through the non-electrified Salem-Vridhachalam section. However, the possibility of the hole being sawed in the Salem or Chennai yard was also investigated.

The role of railway employees was not ruled out. CB-CID had questioned many employees with regard to the case. Sources in the department said the role of an inter-state robbery gang which specialises in theft of luggage has been zeroed in by the investigators. There is a strong Tamil Nadu link to the case, sources said.

"It was a well-planned and executed; not a one-off instance," a source said.

Special teams had visited at least five states including West Bengal, Kerala and Bihar in search of clues. Banks in various states were asked to keep a look-out, in case the soiled currencies were exchanged.

Tamil Nadu loses Rs 4 lakh a day as 520 buses lie idle, unable to pay accident relief

TNN | Aug 9, 2017, 05:26 AM IST

Representative image

CHENNAI: Nearly 520 buses owned by state transport corporations (STCs) are lying idle at different locations, as they have all been impounded by courts for having failed to pay compensation to road accident victims. This has resulted in an operational loss of Rs 4 lakh a day for the corporations.

In the past six years since 2010, more than 40,000 road accidents involving state-owned buses were reported in TN, killing a total of 9,971people.

Due to court orders on motor accident claims proceedings, the transport managements owed Rs 200 crore to relatives of road accident victims, according to government records accessed by TOI.

Additional chief secretary to government PWC Davidar said they had paid Rs 90.55 crore to transport managements, out of the total pending Rs 292 crore. Acknowledging the gravity of the situation, additional chief secretary to government PWC Davidar said they had paid Rs 90.55 crore to transport managements, out of the total pending amount of `292 crore.Government was in the process of clearing the remaining dues soon, he added.

Interestingly, none of the 22,000odd buses owned by STUs (except AC buses) have insurance policy to cover third party risks, said accident cases specialist and advocate V S Suresh."Karnataka has proper insurance for all its state-run buses," he said, adding that at least sums ranging from Rs 5 to 10 could be collected from passengers using long distance services, just as some private buses do.

An investigating officer (accident claim section) with government-owned United India Insurance Company Limited, however, said paying the annual premium of `30,000-40,000 could be a challenge to cash-strapped STUs in Tamil Nadu. Also, accident claims would be released by insurance firms only if norms pertaining to seating capacity are met. "In most cases, state-owned buses are found overloaded at the time of the accident."

The buses impounded by courts for defaulting payment of compensation were initially parked in the respective court premises. "As spare parts of these vehicles were stolen during the nights, the vehicles were later shifted to nearby STU depots where they are now rotting," said K Arumugam Nainar of the CITU.

"The state government has not been able to meet the increase in passenger demand, as they have not added augment the number of new buses.Under the circumstances, buses getting impounded have worsened the situation," said K Anbazhgan of Nethaji Transport Union. Transport managements, including Metropolitan Transport Corporation (MTC), have begun to stop services on routes where the daily ticket collection was rated low, he said.


The plight of relatives of accident victims too keeps mounting every passing year. Besides running from pillar to post, they are made to fight legal battles at their own expenses to win a compensation they deserve.

Wins in initial rounds of litigations do not guarantee any compensation immediately. "Local authorities invariably go for an appeal in case of death claims," said advocate Suresh, adding that it was a ploy to avoid or at least delay payment of compensation to victims or their kin. A TNSTC (Villupuram) official said they had powers to release only up to `5 lakhs, and that if compensation package was more than this sum they had to get the Board nod, comprising higher officials from multiple government agencies.

In order to overcome this hiccup, the state government setup a corpus fund for speedy and out-of-court settlements. Accordingly, Rs 70 crore was released for years 2010-17. But, since the incidence of road accidents involving state-run buses are very high, the fund sanctioned by the state transport department would never be sufficient, say experts.

At one stage, a total of 4,771 buses in the state were lying impounded due to non-settlement of dues, prompting the comptroller of auditor-general (CAG) to submit a damning report last year.
'டெங்கு' சிகிச்சை சித்தாவிற்கு தடை
பதிவு செய்த நாள்08ஆக
2017
21:24


'டெங்கு காய்ச்சலுக்கு, சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கக் கூடாது' என அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை உட்பட பல மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இக்காய்ச்சலுக்கு, அரசு சித்த மருத்துவமனைகளில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதித்து, சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 'அரசு சித்த மருத்துவமனைகளில் டெங்கு, சிக் குன்- குனியாவிற்கு நிலவேம்பு கஷாயம், சித்த மருந்துகள் மட்டுமே வழங்க வேண்டும். உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க கூடாது. அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு தான் அனுப்ப வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

- நமது நிருபர் -
'டியூஷன் பீசு'க்கும் ஜி.எஸ்.டி., : பெற்றோர் அதிர்ச்சி
பதிவு செய்த நாள்08ஆக
2017
21:25


டியூஷன் பீஸ்களுக்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்யப்படுவது, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான டியூஷன் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வணிக ரீதியிலானவை என கூறி, 18 சதவீத, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இது, பெற்றோரை பெரிதும் பாதிக்கும். ஒரு மாணவர், 10 ஆயிரம் ரூபாய் டியூஷன் பீஸ் கட்டுகிறார் என்றால், அவர் வரியாக, 1,800 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். தற்போது வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வு என்றாலும், 'நீட்' போன்ற மேற்படிப்புக்கான போட்டித் தேர்வு என்றாலும், பயிற்சி மையங்களைத் தான் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே, கல்விக்கான இந்த வரி விதிப்பை ரத்து செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது கூடுதல் சுமையாக அமையும். எனவே,டியூஷன் மையங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ஊழலை கண்டித்து ராஜினாமா : கொதித்தெழுந்த அரசு ஊழியர்
பதிவு செய்த நாள்09ஆக
2017
00:01


மூணாறு: சர்வே மற்றும் நில ஆவணங்கள் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, அதில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்தார். கேரளா, இடுக்கி மாவட்டம் ராஜாக்காட்டில் உள்ள சர்வே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிரேடு சர்வேயராக பணியாற்றியவர் அனஸ்,37. மாநில தேர்வாணைய போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு தேர்வானார். இவர் சர்வே மற்றும் நில ஆணவங்கள் துறையில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறி, தனது பணியை ராஜினாமா செய்தார்.அதற்கான கடிதத்தை சர்வே உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

தொடுபுழாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:2011 மார்ச் 13ல் அரசு பணியில் சேர்ந்த நான், தேவிகுளம் தாலுகா அலுவலகத்திலும், ராஜாக்காடு சர்வே கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பணியாற்றினேன். இங்கு சாதாரண விஷயத்திற்கு கூட, மக்களை பிழிந்து எடுக்கும் வகையில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியபோது, அதிகாரிகள் லஞ்சம் பெற்றதை நேரடியாக பார்த்துள்ளேன். அதனை எதிர்க்க முயன்று பலமுறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சிறிய விஷயங்களுக்குக்கூட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். பத்திரப் பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் பெறப்படுகின்றது. அதற்கு ஆதாரங்கள் உள்ளன.
உயர் அதிகாரி ஒருவர் என்னை பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டதால், விடுமுறை கோரி விண்ணப்பித்த கடிதம் மறைக்கப்பட்டு, ஆறு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. ஊழல் அதிகரித்த இத்துறையில் மனசாட்சி உள்ளவர்கள் பணி செய்ய முடியாது.ஆகவே எனது பணியை ராஜினாமா செய்தேன். அடுத்து சமூக நல பணிகளை செய்ய முடிவு செய்துள்ளேன், என்றார்.

இடுக்கி சர்வே துறை உதவி இயக்குனர் ராஜன் கூறியதாவது,'அனஸின் ராஜினாமா கடிதம் கிடைத்தது. அது சர்வே இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கூறிய குற்றச்சாட்டு குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை,' என, தெரிவித்தார்.
கன்னடம் தெரியாவிட்டால் வங்கியில் வேலையில்லை!
பதிவு செய்த நாள்08ஆக
2017
20:23


பெங்களூரு: 'கன்னட மொழி பேசாத வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை கற்க வேண்டும்; இல்லாவிட்டால், பணியை இழக்க நேரிடும்' என, கன்னட மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'தேசிய, கிராமப்புற மற்றும் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும், கன்னட மொழி பேசாத ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள், கன்னட மொழியை அடிப்படையில் இருந்து கற்க வேண்டும்' என, கர்நாடக அரசின் கீழ் இயங்கும், கன்னட மேம்பாட்டு ஆணையம், வங்கிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, வங்கிகளின் மண்டல மேலாளர்களுக்கு, கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர், எஸ்.ஜி.சித்தராமையா எழுதியுள்ள கடிதம்: வங்கிகளில் பணிபுரிவோர், கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பல வங்கிகள், கன்னட மொழியில் பரிவர்த்தனை செய்ய ஆர்வம் காட்டவில்லை. மும்மொழி திட்ட அடிப்படையில், வங்கிகள் செயல்பட வேண்டும். வங்கி ஊழியர்கள், ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்காவிட்டால், பணி நியமன விதிகளின் கீழ், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் ,நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் மழை
பதிவு செய்த நாள்
ஆக 08,2017 21:22



ராமநாதபுரம்: ராமநாதபுரம், நெல்லை, தஞ்சை,கரூர் மாவட்டங்களில் மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் அபிராமம், பேரையூர், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மழை:

நெல்லை மாவட்டத்தில் மூன்றடைப்பு , நாங்குநேரி பகுதிகளிலும் மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில்கன மழை பெய்தது.

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது.
வங்கி 'லாக்கர்' பாதுகாப்பு; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பதிவு செய்த நாள்09ஆக
2017
08:11




புதுடில்லி : ''வாடிக்கையாளர்களின், 'லாக்கர்' பாதுகாப்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என, அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது,'' என, மத்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: வங்கி லாக்கர்களில் இருந்து, களவு போகும் வாடிக்கையாளர்களின் பொருட்களுக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பான அறிக்கை எதையும், நிதிச் சேவைகள் துறை வெளியிடவில்லை. எனினும், 'லாக்கர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது, வங்கிகளின் பொறுப்பு; அதில் அலட்சியம் காட்டினால், வாடிக்கையாளர்களின் இழப்பீடு கோரிக்கைக்கு பதில் சொல்ல நேரும்' என, அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பி உள்ளது.

லாக்கர் சேவை வழங்குவதில், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட, 20 வங்கிகள் கூட்டாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த புகாரை, சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் பதிவு செய்து விசாரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்
வரதட்சணை வழக்கில் தீவிர விசாரணை




ஆகஸ்ட் 09 2017, 03:00 AM

சமுதாயத்தில் களையப்படவேண்டிய ஒன்று ‘வரதட்சணை கொடுமை’ என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆண்டாண்டு காலமாக பல சமுதாய சீர்திருத்த தலைவர்கள் இந்த கருத்தைத்தான் வலியுறுத்திக்கொண்டு வருகிறார்கள். தந்தை பெரியார் இதில் மிகத்தீவிரமாக இருந்தார். எவ்வளவோ தலைவர்கள் இதற்காக முயற்சி எடுத்தும் வரதட்சணை என்ற களையை இன்னமும் முழுமையாக அகற்றமுடியவில்லை. எவ்வளவுதான் நற்குணங்கள் இருந்தாலும், படித்திருந்தாலும் திருமணம் என்று வந்துவிட்டால், மாப்பிள்ளை வீட்டார் உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகைகள் போடுகிறீர்கள், எவ்வளவு ரொக்கம் தருவீர்கள், என்ன சொத்து எழுதிவைப்பீர்கள் என்பதுபோன்ற பல பேரங்களை பேசுவது சமுதாயத்தில் ஏழை முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து மட்டங்களிலும் இன்னும் நிலவிவருகிறது. திருமணம் முடிந்தபிறகு கேட்ட வரதட்சணையை தரவில்லை என்ற ஆத்திரத்தில் பல மணப்பெண்கள் அடித்து விரட்டப்படுகின்றனர், துன்புறுத்தப்படுகின்றனர், கொல்லப்படுகிறார்கள், தற்கொலை செய்யும் அளவுக்கும் தூண்டப்படுகின்றனர். இத்தகைய கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.

ஆனால், இப்போதெல்லாம் வரதட்சணை கொடுமை என்று ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டால், உடனடியாக இந்திய தண்டணைச் சட்டம் 498ஏ–ஐ பயன்படுத்தி, அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியார், கணவனுடன் உடன் பிறந்தோர், ஏன் சில நேரங்களில் தாத்தா, பாட்டி மற்றும் மைனர் குழந்தைகள் எல்லோரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் நிலைமை இருக்கிறது. எல்லோருமே தவறு செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒருசில நேரங்களில் இந்த வரதட்சணைக் கொடுமை என்ற ஆயுதத்தை தவறாக பயன்படுத்துவதால், ஒருசில பெண்கள் தங்கள் கணவனையும், மாமனாரையும், மாமியாரையும், வேறு சில குடும்ப பிரச்சினைகளுக்காக பழிவாங்கவேண்டும் என்ற நோக்கில் தவறாக புகார் கொடுத்துவிடுவதால், அப்பாவிகளான கணவனின் குடும்பத்தினரும் சிறையில் வாடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவரையில், போலீஸ் நிலையத்தின் வாசலுக்குச் சென்றிருக்காதவர்கள், ஜெயில்வாசல் என்னவென்றே தெரியாதவர்கள், இந்த புகாரில் ஜெயிலில் அடைக்கப்பட்டு மிகுந்த மனஉளைச்சலும், சொல்லொணத் துயரத்தையும் அடைகின்றனர். தொடர்ந்து நீண்டநெடுங்காலமாக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறி இறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற ஒரு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர், இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு சிறையில் அடைப்பது மனித உரிமை மீறலாகும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்கள், அதிகாரிகளின் மனைவிகள், சட்டப்பூர்வமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பநல குழுவை மாவட்ட சட்டபணி ஆணைக்குழு அமைக்க வேண்டும். ஏதாவது வரதட்சணை புகார்கள் வந்தால் ஒருமாதத்திற்குள் இந்தக்குழு விசாரித்து, அந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா?, இல்லையா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்யக்கூடாது. அந்த புகாரில் முகாந்திரம் இருந்தால்தான் போலீஸ் அதிகாரிகள் புலன் விசாரணை செய்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். உண்மையிலேயே இந்த தீர்ப்பு வரவேற்கத்தகுந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய குடும்பநல குழுக்களை தமிழக அரசு அமைத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வரதட்சணை கொடுமை புகார் செய்யப்பட்டால், உடனடியாக இந்த குழுவுக்கு அனுப்புவதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்கவேண்டும். நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படவேண்டும். ஆனால், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.
மாநில செய்திகள்
நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் குறுந்தகடு வழங்கப்படும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஆகஸ்ட் 09, 2017, 05:30 AM

சென்னை,

நீட் தேர்வு பயிற்சிக்காக 54 ஆயிரம் கேள்விகளுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

சென்னை அருங்காட்சியகம், தொல்லியல் துறை மற்றும் சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியதாவது:-

பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். பிறமாநிலங்களை ஒப்பிடும்போது மத்திய அரசின் நீட் தேர்வை எழுதுவதற்கு வசதிபடைத்த மாணவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவு செய்து பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையை போக்குவதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் 54 ஆயிரம் கேள்விகள் உரிய புகைப்படத்துடன் 30 மணி நேரம் ஓடக்கூடிய குறுந்தகடு (சி.டி.) வழங்க உள்ளோம்.

தொல்லியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகளவில் நிதி ஒதுக்க முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். கீழடியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு குடியிருந்திருக்கின்றனர். ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைக்க அரசு ரூ.1 கோடி வழங்கியதுடன், மத்திய அரசுக்கு 2 ஏக்கர் நிலமும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் 3 வகையான சீருடை வழங்க உள்ளோம். 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையும், 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு என 3 பிரிவாக சீருடை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாணவர்களின் கல்வி முறை மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கொண்டுவரப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்-டாப் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் பள்ளிக்கல்வி துறை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறது. 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மதுரையில் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. மக்களின் மனநிலையை பொறுத்தவரை 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவர வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள இடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் ஆசிரியரை நியமிக்கும்படி கூறியுள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு ஆயிரக்கணக்கான பேர் தடையில்லா சான்று பெற்றுச் சென்றுள்ளனர். நான் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறேன். எனவே மற்றவர்கள் கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

உதயசந்திரன் இடமாற்றம்?

பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்படப்போவதாக அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

Tuesday, August 8, 2017


11 லட்சம் பான் கார்டுகளை முடக்கிய அரசு: உங்கள் பான் அட்டையின் நிலை தெரிய வேண்டுமா?




மத்திய அரசு சுமார் 11 லட்சம் பான் அட்டைகளை முடக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர்சந்தோஷ் குமார் காங்வார் வெளியிட்டுள்ளார்.

ஒரு நபரின் பெயரிலேயே பலபான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மத்திய அரசு முடக்கியுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், "பான் கார்டு என்பது வரி விதிப்பில் மிக முக்கியமான ஒன்றாகவும், ஒரு நபர் மேற்கொள்ளும் அனைத்து நிதி பரிவர்த்தனைகளை ஒருங்கிணைப்பதாகவும் உள்ளது. ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு ஒதுக்கீடு என்பது வழிகாட்டி கொள்கை. ஆனால், ஒரே நபருக்கு ஏராளமான பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜூலை 27-ம் தேதி கணக்கீட்டின் படி, உயிருடன் இல்லாத நபர்அல்லது பொய்யான அடையாளம்கொண்டவர்களின் பெயர்களில் 1,566 பேருக்குப் போலி பான் கார்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதுபோல, ஒட்டுமொத்தமாக 11,44,211 பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன" என்றார். மேலும், உங்கள் ஆதார் அட்டை செயல்பாட்டில்தான் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள மத்திய அரசு வசதி செய்துள்ளது.

உங்கள் ஆதார் அட்டை குறித்து அறிந்துகொள்ள, முதலில்,

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/KnowYourPanLinkGS.html

என்ற Link-ஐ Click செய்யுங்கள். அடுத்ததாகத்திறக்கும் வலைப்பக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைத்(உங்கள் பெயர், துணைப்பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை) தகுந்த இடங்களில் நிரப்பவும். இதன்பின்னர் உங்களுக்குக் கிடைக்கும் ஓ.டி.பி-யை பதிவு செய்தால், உங்களின் பான் அட்டை குறித்த அத்தனை நிலவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

Posted by kalviseithi.net

HC query on cut in prisoners’ salary

Notices issued on a PIL petition filed by Madurai-based activist K.R. Raja

The Madras High Court Bench here on Monday wanted to know from the State Government why convicts lodged in prisons were not being paid as per the Minimum Wages Act, 1948, and whether it was justified in deducting 50% of the wages earned by them through hard labour towards expenses incurred by the State for their upkeep.
Justices K.K. Sasidharan and G.R. Swaminathan issued notices to the Home Secretary as well as the Additional Director General of Police (Prisons) after passing a detailed order in which they recalled that the Supreme Court had on December 23, 1996 held that a substantial amount of prisoners’ wages could not be deducted for their upkeep.
The order was passed on a public interest litigation petition filed by Madurai-based activist K.R. Raja who urged the court to declare as illegal Rule 481 of the Tamil Nadu Prison Rules, 1983, in so far as it required deduction of 50% prisoners’ salary towards their upkeep and 20% towards payment of compensation to victims of crime.
Puducherry paid more
Arguing the case on behalf of the petitioner, his counsel R. Alagumani claimed that skilled, semi-skilled and unskilled prisoners in the State were paid just Rs. 100, Rs. 80 and Rs. 60 a day respectively though the Union Territory of Puducherry was paying them at the rate of Rs. 180, Rs. 160 and Rs. 150 a day for the same kind of jobs.
In his affidavit, the petitioner had stated that most of the convicts languishing in the State prisons were those who had murdered their spouses in a spurt of anger and therefore it was essential to pay them a reasonable amount of money so that their children, living without their parents, could be taken care of and educated well. He also claimed that while replying to an application under the Right to Information Act, 2005, the Superintendent of Palayamkottai Central Prison in Tirunelveli had stated that Rs. 66.83 lakh was collected from the prisoners’ salaries between 2000 and 2013, and the amount was kept idle without being distributed to the victims of crime.

Rousing reception given to Shraddha Sethu express

The express halts briefly at Kumbakonam station

Train travellers accorded a rousing reception to the new express service Shraddha Sethu Express that halted briefly in Kumbakonam station on Monday during its inaugural run between Rameswaram and Faizabad.
Faizabad MP Lallu Singh had made an appeal to the Railway Ministry for a new train service connecting two important Ramayan centres Ayodhya and Rameswaram. The Thajavur District Train Travellers Association appealed to Mr. Singh to seek the service linking Kumbakonam, also called Dakshin Ayodhya.
The pleas got fructified and Prime Minister Narendra Modi flagged off the inaugural service from Rameswaram on July 27. But to the surprise of the Association members the train halted only in Thanjavur and the members took the issue up with Mayiladuthurai MP R.K. Bharathi Mohan who petitioned the Ministry for a halt at Kumbakonam.
Consequently, the first regular trip of the Shraddha Sethu Express arrived at Kumbakonam Station at 7.50 a.m. on Monday.
Mr. Bharathi Mohan, Thanjavur MLA M. Rengasamy, Association vice-president A. Giri, secretary Dinesh Kumar, Papanasam Train Travellers Welfare Association president T. Saravanan, All Traders Association secretary V. Sathyanarayanan gathered at the Station to receive the train.
A twist of novelty was provided at the reception with the chief priest from the Dakshin Ayodhya Sri Ramaswamy temple Soundararaja Bhattar performed a small puja, offered the temple’s sacred garland and distributed temple prasadam to the crew and passengers. Loco pilots Arvind Sreekumar and Karthikeyan as also the train guard Balu were honoured on the occasion.
Later, the train left Kumbakonam for Faizabad. The train leave Rameswaram on Sundays to reach Kumbakonam on Monday to reach Ayodhya on Wednesday. On return, the service will leave Faizabad on Wednesdays to reach Kumbakonam on Saturdays to reach Rameswaram the same day.
×


Chennai – Mangalore West Coast Express, a few other trains to be delayed on August 8, 9

Siddharth Prabhakar| TNN | Aug 7, 2017, 09:12 PM IST

(

CHENNAI: Southern Railway has announced that a few trainswill be delayed on August 8 and 9 due to engineering work at Kavanur yard on the Katpadi - Jolarpettai section.

No 22637 Chennai Central - Mangalore Central West Coast Express will be regulated / delayed at Latteri and will reach Jolarpettai late by two hours and five minutes on August 8.

No 22637 Chennai Central - Mangalore Central West Coast Express will reach Jolarpettai late by two hours and five minutes on August 9.

No 12539 Yesvantpur - Lukcnow Express and No.22864 Yesvantpur - Howrah express will reach Renigunta late by 25 minutes on August 9.


No 17209 KSR Bengaluru - Kakinada Town Seshadri Express will reach Katpadi late by 25 minutes on August 9.

Suburban Train services

Southern Railway also announced changes in the pattern of suburban train services on the Chennai - Arakkonam section on August 8 and 9 due to engineering work at Tiruninravur yard.

No 43801 Chennai Beach - Arakkonam EMU local, scheduled to leave Chennai Beach at 1.20am on August 8 and 9, will run on the fast line between Pattabiram East Siding and Tiruvallur and will not stop at Pattabiram, Nemilichery, Tiruninravur, Veppampattu and Sevvapet Road railway stations.
சென்னை - கன்னியாகுமரி ரயில் பாதை : பெருங்குடி - கடலூர் ஆய்வுக்கு 'ஓகே!'
பதிவு செய்த நாள்07ஆக
2017
22:02


சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், முதல் கட்ட மாக, பெருங்குடி - கடலுார் இடையே ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் இருந்து, மாமல்லபுரம் வழியாக கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரையையொட்டி, புதிய அகல ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கடந்த, 2008-09ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், சென்னை பெருங்குடியில் இருந்து, மாமல்லபுரம், புதுச்சேரி, கடலுார் வரை, கிழக்கு கடற்கரையோரம், 178 கி.மீ., கிழக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 

இதற்கு, அபோது, 532 கோடி ரூபாய் செலாகும் என, தெரிவிக்கப்பட்டது. இப்பாதை குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்பாதை அமைக்கப்பட்டால், சென்னை எண்ணுார், புதுச்சேரி, கடலுார், காரைக்கால் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு நேரடியாக ரயில் பாதை அமைக்கவும், கடலோர மாவட்டங் களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதனால் இப்பாதை அமைக்க, ரயில்வே அமைச்சகத்திற்கும், வாரியத்துக்கும், கடற்கரையோர மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி, பெருங்குடியில் இருந்து, மாமல்ல புரம் வழியாக, கடலுார் திருப்பாதிரிபுலியூர் வரை, புதிய அகல ரயில் பாதை அமைக்க, மீண்டும் ஆய்வு செய்யவும், அடுத்த கட்டமாக, காரைக்குடியில் இருந்து, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், துாத்துக்குடி, திருச்செந்துார், கூடங்குளம், கன்னியாகுமரி வரை புதிய பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆய்வு செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய பாதை அமைக்கப்படும் போது, கடலுாரில் இருந்து, திருவாரூர் வரை, தற்போது, பயன்பாட்டில் உள்ள அகல ரயில் பாதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை, மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதை பணி முடிந்த பின், இப்பாதையை பயன்படுத்திக்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: இப்பாதைக்கு, தமிழக மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், தங்கள் பங்களிப்பை செய்யும் என்ற நோக்கில், இத்திட்டத்திற்கான, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக, சென்னை பெருங்குடியில் இருந்து, கடலுார் வரை, ௧௭௮ கி.மீ., புதிய பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து, இரண்டு மாதத்தில், ஆய்வு பணி துவங்கப்பட உள்ளது. இதையொட்டி, பெருங்குடி - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் இடையே, புதிய பாதைக்கு தேவையான நிலம் குறித்து, தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்வதற்கு, 60லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணி, அக்டோ பரில் துவங்கி, 2018 மார்ச்சுக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது .இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.


ராகு கோவில் உண்டியல் எரிந்து காணிக்கை பணம் சேதம்
பதிவு செய்த நாள்07ஆக
2017
19:55

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், உண்டியல் எரிந்து, காணிக்கை பணம் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களில் ஒன்றான, ராகு தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராகு காலத்தில், ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை, 27ல், ராகு பெயர்ச்சி நடந்தது. அன்று முதல், பரிகாரம் செய்யும் ராசிக்காரர்கள், தினமும் ராகு கால நேரத்தில், பரிகார பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர். கோவிலின் வெளி பிரகாரத்தில், கொடி மரம் அருகே, 6 அடி உயரத்தில், எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மழையும் பெய்ததால், தண்ணீரில் நனையாமல் இருக்க, உண்டியலை துாக்கி, கோவில் ஊழியர்கள் ஒதுக்குப்புறமாக வைத்தனர். மாலை, 6:00 மணியளவில், உண்டியலில் இருந்து, புகை வெளியேறியது. உடனடியாக, கோவில் ஊழியர்கள், உண்டியலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உண்டியலை திறந்து, காணிக்கையை எண்ணினர். அதில், 1,450 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்திருந்தன. மீதமிருந்த, 45 ஆயிரம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. 'உண்டியலில் யாராவது ஊதுபத்தியை சொருகி வைத்திருக்கலாம்; அவை எரிந்து உண்டியலுக்குள் விழுந்ததால், ரூபாய் எரிந்திருக்கலாம்' என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.



Advertisement
அமெரிக்காவில் மகன் 'பிசி' : எலும்புக்கூடான தாய்

பதிவு செய்த நாள்08ஆக
2017
00:18

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர், ரிதுராஜ் சஹானி, 43. மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கும் இவர், அங்குள்ள, பிரபல, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது, 68 வயது தாய், மும்பையில் அந்தேரியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், 10வது மாடியில் தனியாக வசித்து வந்தார். ரிதுராஜ், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இந்தியா வருவது வழக்கம். அதே போல், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தாயுடன் போனில் பேசி வந்தார். கடைசியாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், தாயுடன் போனில் பேசிய ரிதுராஜ், அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவில்லை. சமீபத்தில் நாடு திரும்பிய ரிதுராஜ், மும்பையில் வசிக்கும் தாயை காணச் சென்றார். நீண்ட நேரம், 'காலிங்பெல்' அடித்தும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கம் வீட்டாரின் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றார்.அங்கு, அவரது தாயின் எலும்புக்கூடு மட்டுமே, நாற்காலியில் அமர்ந்த நிலையில் இருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். சில மாதங்களாகவே, அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும், எலியோ, பூனையோ இறந்திருக்கலாம் என நினைத்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார், அதை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வருமான வரி தாக்கல் உயர்வுக்கு காரணம் என்ன
புதுடில்லி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 -17 நிதியாண்டில்வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.





'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புதான் இதற்கு காரணம்' என, மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஆக., 5ல் முடிந்தது. 

கணக்கு தாக்கல் தொடர்பாக, மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள செய்தி யில்கூறியுள்ளதாவது:

2.82 கோடி பேர்,

கடந்த, 2016 - 17 நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான, ஆக., 5வரை, 2.82 கோடி பேர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர். முந்தைய ஆண்டில், 2.26 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். இது, 25 சதவீதம் உயர்வு.தனிநபர் கணக்கு தாக்கலும், 25.3 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம், 2.79 கோடி தனிநபர், கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, கணக்கில் வராத ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் தங்கள் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆக.,9-ல் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

பதிவு செய்த நாள்07ஆக  
2017 20:05




சேலம்: சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வருகிற 9-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை மழைக்காலங்களில் குளமாகும் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்

2017-08-07@ 21:24:27




பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய பஸ் நிலையமானது சேலம் மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்ட பயணிகளாலும் அதிகம் அறியப்பட்ட ஒன்று. கடந்த 25 வருடங்களுக்கு முன் சேலம் பழைய பஸ் நிலையம் மட்டுமே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடுமையான போக்கு வரத்து நெரிசல் மற்றும் இடபற்றாக்குறை காரணமாக சேலம் மாநகராட்சியின் மூலம் அச்சுவான் ஏரி கையகப்படுத்தப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு சேலம் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 50 ஆயிரத் துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, ஓசூர் ஆகிய வெளிமாவட்ட பஸ்கள் முதல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பஸ்கள் வரை வந்து செல்கிறது. இதனால், பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் மத்திய பஸ் நிலையமானது தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஏரியாக இருந்து மாற்றப்பட்ட புதிய பஸ் நிலையம் 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மழைநீர் புகாத வண்ணம் தரைதளம் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் பஸ் நிலையம் வரும் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளினால் பயணிகள் நடப்பதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை.

மழைக்காலங்களில் பஸ் நிலையம் முழுவதையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேறு பஸ் பிடிக்க வெளியே வர முடிவதில்லை. சேலம் மாநகராட்சியால் பஸ் நிலையத்திற்கு இன்னும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் தரைதளம் அமைக்கப்படவில்லை. இதனால், சிறிதளவு மழை பெய்தாலும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் பஸ் ஸ்டாண்டு கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது. குளம்போல் தேங்கியுள்ள மழைநீரிலேயே பேருந்துகள் செல்லும்போது சேரும் சகதியுமாக தேங்கிய மழைநீரை பயணிகளின் மீது வாரி இறைத்து செல்கிறது.

மேலும், பஸ் நிலையத்தை சுற்றிய பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால், சிறுநீர் நாற்றம் அதிகளவில் வீசுகிறது. இதனால், வெளியூர் பயணிகள் மத்தியில் சிறுநீர் பஸ் நிலையம் என்ற பெயரை சேலம் பஸ் நிலையம் பெற்றுள்ளது. பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பஸ் நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

பயணிகள் நடைமேடைகளை ஆக்கிரமித்து பழ வியாபாரிகள் முதல் பலரும் கடைகளை வைத்துள்ளதால் நடைமேடைகளில் நடக்க முடியாமல் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்காலிகமாக கடை களை அகற்றும் வியாபாரிகள் அதிகாரிகள் சென்றவுடன் கடைகளை வைத்துக்கொள்கின்றனர். கடந்த ஒருமாதத்திற்கு முன் மாநகராட்சி பஸ் நிலையத்தில் ₹5 கோடி மதிப்பில் நடைமேடை அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை மாற்றி அமைத்து முதலில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகாலும், தரைதளமும் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.
காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

2017-08-08@ 01:02:24




* தனி அலுவலகம் கேட்டு அடம்பிடித்த வாலிபர்
* சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம் : சேலத்தில் அரசு ஜாயின்ட் செகரட்ரி எனக்கூறி, தனி அலுவலகம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, உயர் அதிகாரிகள் வைத்திருக்கும் அரசு முத்திரையுடன் கூடிய சொகுசு காரில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி வந்தார். முதல் மாடியில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அலுவலகத்திற்கு கையில் பூங்கொத்துடன் சென்றார். அவருடன் 55 வயது மதிக்கத்தக்க நபர், சால்வையுடன் நின்று கொண்டிருந்தார். நேர்முக உதவியாளர் விஜய்பாபுவிடம், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என, டிப்டாப் ஆசாமி அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து, அலுவலகத்தில் அமரவைத்த விஜய்பாபு, அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார். தொடர்ந்து, பேசிய டிப்டாப் ஆசாமி, தான் அரசுத்துறை இணை செயலர் எனவும், தனக்கு தனியாக அலுவலகம் ஒதுக்கித்தருமாறும் கேட்டார். மேலும், தான் இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான பைல்களையும் அளித்தார். ஆனால், விஜய்பாபுவிற்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, டிப்டாப் ஆசாமி கொண்டு வந்த பைல்களை படித்து பார்த்தார். அப்போது, அந்த பைல்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து ரகசியமாக சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஐஏஎஸ் அதிகாரி என கூறிய டிப்டாப் ஆசாமி, சேலம் கிச்சிப்பாளையம் நாராயணா நகர் 6வது தெருவைச் சேர்ந்த தர் (26) என்பது தெரியவந்தது. கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த தர், வீட்டின் அருகிலேயே தனியாக அலுவலகம் வைத்துள்ளார். தான் ஐஏஎஸ் படித்து முடித்துவிட்டதாகவும், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிக்கு சேர வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதனை நம்பியிருந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் ₹12 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை, ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று பணியில் ேசருவதாக கூறி புதிய கோட், சூட் அணிந்து டிப்டாப் ஆக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மேலும், இணை செயலராக போலியாக ஆவணமும் தயாரித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, அதிகாரியிடம் வசமாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தரை கைது செய்த போலீசார், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும், ஐஏஎஸ் எனக்கூறி ஏதேனும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்: போலி ஐஏஎஸ் அதிகாரி என நடித்து ைகது செய்யப்பட்ட தரை, நேற்றிரவு அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர். வீட்டின் முகப்பிலேயே, தமிழ்நாடு அரசு பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர் அலுவலகம், சேலம் என அரசு முத்திரையுடன் கூடிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே தரை அழைத்து சென்ற போலீசார், வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், விலை உயர்ந்த செல்போன் மற்றும் மூட்டை, மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

சந்திக்க மறுத்த கலெக்டர்

சேலத்தில், நேற்று மாலை ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி கைது செய்யப்பட்ட தர், கடந்த ஒருவாரமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து நோட்டமிட்டு சென்றுள்ளார். அவரது காரில் அரசு முத்திரை இருந்ததால், போலீசார் அந்த காரை மடக்கவில்லை. நேற்று, பூங்கொத்துடன் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கலெக்டர் சம்பத்தை சந்திக்க பலவழிகளில் முயற்சி செய்தார். ஆனால், கலெக்டர் அவரை சந்திக்க மறுத்துள்ளார். அங்கிருந்த உதவியாளர்கள் கலெக்டர் பிசியாக இருப்பதாக கூறினர் பின்னர், நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்திக்குமாறு அனுப்பி வைத்தனர்.

போலி பணி நியமன ஆணை

ஐஏஎஸ் எனக்கூறி, பலருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை தர் வழங்கியதாக கூறப்படுகிறது. நேற்று கூட, சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு டிரைவர் வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார். தொடர்ந்து, அவரையே தனது காருக்கும் டிரைவராக பணியமர்த்தியுள்ளார். நேற்று அந்த வாலிபர்தான், கலெக்டர் அலுவலகத்திற்கு தர் வந்த காரை ஓட்டி வந்துள்ளார். இதனால், இதுபோல வேறு யாருக்கும் போலி பணிநியமன ஆணைகளை தர் வழங்கியுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் போலி ஐ.ஏ.எஸ். கைது

2017-08-07@ 20:23:43

சேலம்: சேலம் ஆட்சியரின் தனி உதவியாளரிடம் ஐ.ஏ.எஸ். எனக்கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். ஆட்சியர் பி.ஏ.வை தொடர்பு கொண்ட ஸ்ரீதர் என்பவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். எனக்கூறியுள்ளார். தமிழக அரசின் கூடுதல் செயலாளரான தனக்கு அலுவலகம் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். ஸ்ரீதரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆட்சியரின் தனி உதவியாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 6 மாதங்களாக தனது காரில் தமிழக அரசின் முத்திரையை வைத்து ஸ்ரீதர் பயன்படுத்தியுள்ளார்.
பணி நேரம் முடிந்ததாக பாதியில் கிளம்பிய பைலட்டுகள்


பதிவு செய்த நாள்07ஆக
2017
22:04


சென்னை: கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, மோச மான வானிலை நிலவியதால், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. 

அந்த விமானத்தின், பைலட் மற்றும் ஊழியர் கள், தங்கள் பணிநேரம் முடிந்துவிட்டதாக அறிவித்து, விமானத்தை இயக்காமல் சென்றதால், அந்த விமான பயணியர் பெரும் அவதிக்குஉள்ளாகினர்.

சவுதி அரேபியா தலைநகர், ரியாத்தில் இருந்து, 292 பேருடன், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, கேரள மாநிலம், கொச்சி சென்று கொண்டிருந்தது. 

கொச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், விமானம், சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது. இரவு, 8:00 மணிக்கு, கொச்சி விமான நிலையத்தில் வானிலை சீரானது. ஆனால், விமான பைலட் மற்றும் ஊழியர்கள், தங்கள் பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, விமானத்தை இயக்க மறுத்து விட்டனர். இதனால் விமானம் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. பயணியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; விமான நிறுவனத்தினர், பயணியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நேற்று காலை, 8:20 மணிக்கு, மற்றொரு, 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், ஜெட்டாவில் இருந்து, சென்னை வந்தது. கொச்சி விமானத்தை இயக்குமாறு, சவுதி ஏர்லைன்ஸ் விமான பைலட்டுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது; அவர்களும் சம்மதித்தனர்.இதையடுத்து, 16 மணி நேரம் தாமதமாக, பயணியர், கொச்சி சென்றடைந்தனர்.

பல்கலை குறைதீர் கூட்டம்: 100 பேருக்கு உடனடி தீர்வு : துணைவேந்தர் முன் கதறி அழுத மாணவி

பதிவு செய்த நாள்07ஆக
2017
23:01




மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்முறையாக நடந்த மாணவர்களுக்கான குறைதீர் கூட்டத்தில், 100 பேருக்கு உடனடி சான்றிதழ்கள் அளித்து தீர்வு காணப்பட்டது.

இப்பல்கலையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்ததால், தொலைநிலை கல்வி மையங்களில் படித்த மாணவர் பலருக்கு மதிப்பெண் உட்பட பல்வேறு சான்றிதழ்கள்முறையாக வழங்குவதில் தேக்கம் ஏற்பட்டது. இதை தவிர்க்க மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடத்த துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டார்.இதன்படி முதல் கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. டில்லி, மும்பை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.பெரும்பாலும், 2013ல் இருந்து மதிப்பெண் சான்றிதழ், பட்டம் மற்றும் பட்டய சான்றிதழ், நேரடி மாணவர் சேர்க்கைசான்றிதழ் வழங்காதது, இணையான சான்றிதழ் பெற முடியாதது, கட்டண பிரச்னை, பெயர் திருத்தம் குறித்து 250 மனுக்கள் அளிக்கப்பட்டன. துறைகள் வாரியாக துணை பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தி 100 பேருக்கு உடனடியாக சான்றிதழ் அளிக்கப்பட்டன.

வாட்ஸ் ஆப்... பேஸ்புக்.... : செல்லத்துரை கூறுகையில்,"படித்தவர் வராதபட்சத்தில் அவரது உறவினர் வந்தாலும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் தேர்வு
எழுதியவர்களுக்கு அவர்கள் அசல் சான்றிதழ் சமர்ப்பித்தால் மதிப்பெண், டிகிரி சான்றிதழ் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்றவர் 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்'கில் தகவலை பதிவிட்டால், அடுத்த கூட்டத்தில் பலர் பயனடைய வாய்ப்புள்ளது," என்றார்.

இயக்குனர் கலைச்செல்வன், தேர்வாணையர் ஆண்டியப்பன், கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை, சீனியர் துணை பதிவாளர் முத்தையா, துணை பதிவாளர் நாகசுந்தரம், நிதி அதிகாரி சலீமா, துணை இயக்குனர்கள் இந்திராணி, இளையராஜா, முத்துக்குமார், பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பெயர் மாறிய டில்லி மாணவர்...

காரியாபட்டி ஜோதி என்ற மாணவி 2008ல் படித்த இளநிலை பட்டம் முடித்து டி.இ.டி., தேர்வு எழுத அதற்கான 'இணையான சான்றிதழ்' கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. இதனால் வேலைவாய்ப்பு பாதித்தது. பல்கலையே இதற்கு காரணம் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது, 'தனக்கு சான்றிதழே வேண்டாம்,' என கோபத்தில் தெரிவித்தார். அவரை துணைவேந்தர் சமாதானம் செய்து உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

டில்லி நித்தின், "தனக்கு வழங்கப்பட்ட எம்.சி.ஏ., சான்றிதழில் எனது பெயர் 'லித்தின்'," என இருப்பதாக தெரிவித்தார். அது உடனடியாக திருத்தம் செய்யப்பட்டது.

கோவை சமீர், தனது மனைவி பரீதா எம்.பில்., முடித்தும் 'வைவா'விற்கு அழைக்கப்படவில்லை என தெரிவித்தார். விசாரணையில் அவரது 'தீசிஸ்' மதிப்பீடு செய்யாதது தெரிய வந்தது. கையோடு அவர் கொண்டு வந்த மற்றொரு பிரதியை சமர்ப்பித்து, உடன் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.
தபால் நிலையத்தில் ரூ.50க்கு சேமிப்பு கணக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:46

திண்டுக்கல்:திண்டுக்கல் தபால்நிலைய முதன்மை கண்காணிப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது: தபால் நிலையத்தில் ரூ.50 செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம். பணம் எடுக்க கட்டுப்பாடுகள், கட்டணம் கிடையாது. குறைந்த வைப்பு தொகை ரூ.50, செக் புத்தகத்துடன் மினிமம் பேலன்ஸ் ரூ.500. எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும். புதிதாக கணக்கு துவங்க ரேஷன், ஆதார், பான்கார்டு போதும் என்றார்.



சூடு பிடிக்கும் ராமமோகன ராவ் வழக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:39


முன்னாள் தலைமை செயலர், ராம மோகன ராவின் மகனிடம், வருமான வரித்துறையினர், சில தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டதன் மூலம், ராவ் வழக்கு மீண்டும் சூடு பிடித்துஉள்ளது.

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் ஆகியவற்றை, வருமான வரித்துறையினர், 2016, டிசம்பரில் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.

அது தொடர்பாக, ராவ் மற்றும் விவேக்கிடம், வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் விவேக்கிடம் மீண்டும் விசாரணை நடந்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது: சேகர் ரெட்டி, ஒரு வாரத்திற்கு முன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம், விஜயபாஸ்கரின் மணல் குவாரி தொடர்பாகவும் விசாரணை நடந்தது. ரெட்டியை போல், சி.பி.ஐ., வழக்கில் கைதான, அவரது நண்பர்கள் ரத்தினம், ரவிச்சந்திரன் மற்றும் ராவின் மகன் விவேக் ஆகியோரிடம், சமீபத்தில் விசாரணை நடத்தி உள்ளோம். இந்த வழக்கின் விசாரணை, இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
மருத்துவ கவுன்சிலிங் எப்போது
பதிவு செய்த நாள்07ஆக
2017
22:21


நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - 

பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது. நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நர்சிங்., பி.பார்ம்., விண்ணப்பம்

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:20



சென்னை: மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.

தமிழகத்தில் பி.எஸ்சி., நர்சிங்; பி.பார்ம்., உள்ளிட்ட ஒன்பது மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு அரசு, தனியார் கல்லுாரிகளில் 12 ஆயிரம் இடங்களுக்கு மேல் உள்ளன. இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று முதல் துவங்கியது.

விண்ணப்ப படிவங்களை, 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் 23ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக., 24க்குள் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும்.'விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு, செப்., 6ல் தகுதி பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 கி.மீ., அப்பாலே டாஸ்மாக் : வழிகாட்டுகிறது புதுக்கோட்டை

பதிவு செய்த நாள்07ஆக
2017
19:53


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், டாஸ்மாக் கடையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், குடிமகன்கள், மதுகுடிக்க, ஊருக்கு வெளியே, 15 கி.மீ., செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால், இதை சாதித்துள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, 180 மதுக்கடைகளில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும், 15 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

90 கடைகள் மூடல் : 'நாடு முழுவதும், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி இயங்கி வரும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் பயனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்ட கடைகளில், 90 கடைகள் மூடப்பட்டன.
இதில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த, 15 கடைகளில், 14 கடைகள் அடக்கம். அரிமளம் சாலையில், அன்னச்சத்திரம் பகுதியில் மட்டும் ஒரு மதுக்கடை, நகராட்சிக்கு எல்லைப்பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதுகை நகரில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை, நகரைச் சுற்றியுள்ள, பல்வேறு ஊராட்சிகளில் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தீவிர முயற்சி செய்தது. பெண்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அவை பலன் அளிக்கவில்லை.

படையெடுப்பு : அன்னசத்திரம் பகுதியில், செயல்பட்ட ஒரே கடையை நோக்கி, நகரிலுள்ள குடிமகன்கள் படை எடுத்தனர். இதனால், அப்பகுதியே தினமும் திருவிழாக் கூட்டம் போல காட்சியளித்தது. குடிமகன்களால், பல்வேறு தொல்லைகளும் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

இதனால், அந்த கடையையும் மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் பயனாக, ஜூலை 31ல் கடை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடையை தொடர்ந்து நடத்த, டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. பெண்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியதால், புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வந்த ஒரு கடையும், 1ம் தேதியோடு மூடப்பட்டது. தற்போது புதுக்கோட்டை நகராட்சியில் மதுக்கடையே இல்லை.

கள்ள சந்தை : இதனால், புதுக்கோட்டை நகர குடிமகன்கள், மது குடிக்க, 15 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. இது குடிமகன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் அவ்வளவு துாரம் செல்ல வேண்டுமா என, மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், புதுக்கோட்டை நகரில், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பது அதிகரித்துள்ளது. பலர் வெளியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களுக்கு மத்திய அரசு புது சலுகை

பதிவு செய்த நாள்07ஆக
2017
21:33



புதுடில்லி: பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இதற்காக, அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையிலும், பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியதாவது: சிறுபான்மையினர் விவகார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


நீட்'தேர்வு விவகாரம் : சுருதி மாறும் தமிழக அரசு


''நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என, இந்த வாரத்திற்குள் முடிவு தெரிந்து விடும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன், கூறினார்.





மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்விலிருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்துவதற்காக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி டில்லி வந்து செல்கிறார்.

தனி ஆர்வம்

நேற்று, மீண்டும் அவர் டில்லி வந்தார்.வட மாநிலங்களில் பிரசித்தி பெற்ற, ரக் ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் எவரும், அலுவலகங்களுக்கு வரவில்லை. ஆனாலும், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை, காலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார்.
நீட் விவகாரம் தொடர்பாக, நிருபர்களுக்கு பேட்டியளிப்பதில், விஜயபாஸ்கரும், தம்பிதுரையும், எப்போதும் தனி ஆர்வம் காட்டுவது வழக்கம்.

மத்திய அமைச்சர்களை, இவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும், பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விலக்கு கிடைக்குமா

ஆனால், விஜயபாஸ்கர், நேற்று டில்லி வந்த தகவல் கூட, பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நீட் தொடர்பான அமைச்சரின் டில்லிபயணங்கள் குறித்த, ஊடகங்களின் விமர்சனங்களே, இதற்கு காரணம் என தெரிகிறது.இந்நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சரே, நேற்று டில்லியில் இருந்தும், வழக்கத்துக்கு மாறாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: நீட் விவகாரம் தொடர்பாக, 85 சதவீத ஒதுக்கீட்டை பெறுவதற்கான சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு நடவடிக்கைகள், தீவிரமாக நடக்கின்றன. எனவே, நீட் விவகாரத்தில், தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது, இந்த வாரத்துக்குள் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை, நீட் தொடர்பாக உறுதியாக போராடி வருவதாகவும், நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என, தமிழக அரசு கூறிவந்த நிலையில், தற்போது, மாநில அரசின் சுருதி மாறத் துவங்கியுள்ளது, கவனிக்கத்தக்கது.

கவுன்சிலிங் எப்போது?

நாடுமுழுவதும் உள்ள, அரசுமருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், முடிந்தது.

இந்நிலையில், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங், ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

அதேபோல், இந்தாண்டு, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது டில்லி நிருபர் -
ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு



ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆகஸ்ட் 07, 2017, 09:28 PM

சென்னை,


பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடு, கிடு உயர்வு



கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 08, 2017, 04:15 AM


சென்னை,

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 14–ந் தேதியும் (திங்கட்கிழமை), சுதந்திர தின விழா 15–ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், மேலும் 2 அரசு விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

இதனால் 11–ந் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களின் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் கட்டண உயர்வு தெள்ளத்தெளிவாக இடம் பெற்றுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.780 (ஏ.சி.) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலியால் 11–ந் தேதி முதல் 17–ந் தேதி வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.1,600 கட்டணம் என்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை கண்காணிப்பது போன்று தற்போதும் கண்காணிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.ஆம்னி பஸ்கள் விவரம் இன்றைய பயண கட்டணம் 11–ந் தேதி பயண கட்டணம்

ஏ.சி. வசதி– ரூ.780 – ரூ.1,600

படுக்கை ஏ.சி.வசதி – ரூ.920 – ரூ.1,600

அதிவேக சொகுசு ஏ.சி. வசதி– ரூ.900 – ரூ.1,900

பென்ஸ் படுக்கை ஏ.சி.வசதி– ரூ.1,100 – ரூ.1,900

(இந்த கட்டணம் விவரம் குறிப்பிட்ட தனியார் ஆம்னி பஸ் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது)
தலையங்கம்

இறப்பு சான்றிதழ் வாங்க ஆதார் அட்டை



ஆகஸ்ட் 08 2017, 03:00 AM



இந்தியா முழுமைக்கும் அனைத்து மக்களுக்கும் 12 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அரசு அனைத்து சேவைகளுக்கும் இப்போது ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாகிவிட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு போய்ச்சேர இந்த ஆதார் அட்டை நிச்சயமாக பெரும் பங்காற்றுகிறது. இப்போது ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் நடக்காது என்றநிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30–ந்தேதி கணக்குப்படி, இந்தியாவில் 83 சதவீதம் பேர்களுக்குமேல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் சற்று மந்தமாக இருப்பது தெரிந்தது. 85 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஆதார் அட்டை வழங்கப்பட்டநிலை இருந்தது. இப்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை வழங்கும்பணி விரைவில் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. ஆஸ்பத்திரியிலும், வீடுகளிலும் பிறந்த குழந்தைக்கு கருவிழியையும், விரல் ரேகைகளையும் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கிவிடுவதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை கண்டிப்பாக வேண்டும் என்றநிலை இருக்கும்நிலையில், இப்போது ஒருவர் இறந்த பிறகுகூட ஆதார் அட்டை தேவைப்படும் என்ற அவசியத்தை மத்திய அரசாங்கம் உருவாக்கிவிட்டது. சிலநேரம் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு இறப்பு சான்றிதழை வாங்கி, போலி வாரிசு சான்றிதழையும் வாங்கி அவரது சொத்துக்களை கபளிகரம் செய்யும் நிலைமை நாட்டில் பெருகிவருகிறது. இதைத்தடுக்க இறப்பு சான்றிதழ் கோரும் அவரது வாரிசுதாரர் தன்னுடைய ஆதார் எண் தன்னுடைய மனைவி அல்லது பெற்றோர் ஆதார் எண் மட்டுமல்லாமல், இறந்தவரின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இது அக்டோபர் 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு இது நிச்சயம் அவசியம் என்றும், இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆதார் மட்டும் போதும் என்றவகையில், மேலும் பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இறந்தவரின் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பம் செய்யும் போது, அவருக்கு ஆதார் அட்டை இல்லையென்றால் விண்ணப்பம் செய்கிறவர்கள் தங்களுக்கு தெரிந்தவரை இறந்தவருக்கு ஆதார் எண் இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இதில் ஏதாவது தவறு இழைக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதார் எண் இருந்து, விண்ணப்பம் செய்கிறவர்கள் அவருக்கு ஆதார் எண் இல்லையென்று தெரிவித்தது மோசடி அல்லது தவறு என்று தெரிந்தால் ஆதார் சட்டம் மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின்படி ஒரு குற்றமாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து பத்திரிகை தகவல் அலுவலகம் ‘டுவிட்டரில்’ இது கட்டாயமல்ல என்ற ஒரு தகவலை தெரிவித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கத்தகுந்த ஒரு முடிவு. ஆதார் அட்டை வாங்கியிருக்காதவர்களின் குடும்பங்களெல்லாம் என்ன செய்வார்கள்? எனவே தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் 100 சதவீதம் எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கிய பிறகும், பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியை எளிதாக்கிய பிறகுமே இதுபோல ஆதார் அட்டை கட்டாயம் என்று அனைத்து சேவைகளுக்கும் கொண்டு வரவேண்டும். அதுவரையில் ஆதார் எண்ணை குறிப்பிடுவது விருப்பத்தின் அடிப்படையில் என்று தான் இருக்கலாமே தவிர, அது இல்லாமல் முடியாது என்ற நிலைவேண்டாம்.
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு


ஆகஸ்ட் 08, 2017, 05:00 AM


தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–


புதுடெல்லி,

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும் என்று சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. இங்கு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எந்தவகை காய்ச்சலாக இருந்தாலும் இறப்பு ஏற்படாது. இறப்பு என்பது டெங்கு காய்ச்சலால் மட்டுமே ஏற்படாது. டெங்கு காய்ச்சலுடன் வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்கும். டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வளர்ந்த கொசுக்களை ஒழிக்க சுகாதாரத்துறையிடம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. இருந்தாலும் கொசுப்புழுக்கள், கொசு முட்டையை ஒழிப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.மருத்துவ கல்வி சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85 சதவீத இடஒதுக்கீட்டை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, நம்பர் ஆவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. நீட் தேர்வு விலக்குக்கான அவசர சட்டத்தை பொறுத்தவரை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த வாரத்துக்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும். இப்படியா? அல்லது அப்படியா? என்பது தெரிந்துவிடும்.

மாநில அரசின் இடங்களுக்குத்தான் நாம் விலக்கு கேட்கிறோம். நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கோ, தனியார் கல்லூரி இடங்களுக்கோ அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமே பொது நுழைவுத்தேர்வு இல்லாமல் இருந்தது. பிற மாநிலங்களில் ஏதோ ஒரு நுழைவுத்தேர்வு மருத்துவ படிப்புக்கு இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டுக்கு விலக்கு கேட்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...