Tuesday, August 8, 2017

பணி நேரம் முடிந்ததாக பாதியில் கிளம்பிய பைலட்டுகள்


பதிவு செய்த நாள்07ஆக
2017
22:04


சென்னை: கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, மோச மான வானிலை நிலவியதால், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. 

அந்த விமானத்தின், பைலட் மற்றும் ஊழியர் கள், தங்கள் பணிநேரம் முடிந்துவிட்டதாக அறிவித்து, விமானத்தை இயக்காமல் சென்றதால், அந்த விமான பயணியர் பெரும் அவதிக்குஉள்ளாகினர்.

சவுதி அரேபியா தலைநகர், ரியாத்தில் இருந்து, 292 பேருடன், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, கேரள மாநிலம், கொச்சி சென்று கொண்டிருந்தது. 

கொச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், விமானம், சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது. இரவு, 8:00 மணிக்கு, கொச்சி விமான நிலையத்தில் வானிலை சீரானது. ஆனால், விமான பைலட் மற்றும் ஊழியர்கள், தங்கள் பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, விமானத்தை இயக்க மறுத்து விட்டனர். இதனால் விமானம் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. பயணியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; விமான நிறுவனத்தினர், பயணியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நேற்று காலை, 8:20 மணிக்கு, மற்றொரு, 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், ஜெட்டாவில் இருந்து, சென்னை வந்தது. கொச்சி விமானத்தை இயக்குமாறு, சவுதி ஏர்லைன்ஸ் விமான பைலட்டுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது; அவர்களும் சம்மதித்தனர்.இதையடுத்து, 16 மணி நேரம் தாமதமாக, பயணியர், கொச்சி சென்றடைந்தனர்.

No comments:

Post a Comment

Air India cancels flights to New York and Newark

Air India cancels flights to New York and Newark Press Trust of India New Delhi  25.01.2026 Air India has cancelled its flights to New York ...