Friday, August 11, 2017


7,620 Indians in foreign prisons; highest in Saudi

TNN | Aug 11, 2017, 12:35 AM IST

Chennai: As many as 7,620 Indian nationals are lodged in foreign jails, with the highest number incarcerated in Saudi Arabia.



In response to a question raised in the Lok Sabha on Wednesday, minister of state for external affrairs M J Akbar said due to strong privacy laws prevailing in many countries, local authorities do not share information on prisoners unless the person concerned consents to the disclosure of such information.



Of the 7,620 prisoners lodged in 86 jails, at least 50 are women, shows data available with the government. Most of these women are in prisons in south-east Asia, neighbouring Sri Lanka, China and Nepal, the Gulf countries, the US and UK.



The Gulf states account for 56% of all Indian prisoners in foreign jails. The prisons in Saudi Arabia have the highest number of Indian nationals, with 2,084 of them confined on charges of financial fraud, burglary and bribery. A number of them have also been arrested for drinking and selling alcohol in the country. It is illegal to produce, import or consume alcohol in Saudi Arabia.



In countries in south-east Asia - Thailand, Malaysia, Singapore and Indonesia - most of the 500 immured Indian nationals were charged with offences related to drug and human trafficking and immigration and visa violation.

In Pakistan, according to a list handed over by the government to the India envoy in Islamabad, at least 546 Indian nationals, including nearly 500 fishermen, are in Pakistani jails.



Fishermen in the southern parts of India have also entered troubled waters landing them behind bars in alien soil. In Sri Lanka, of the 43 Indian nationals in jails, 31 are from Tamil Nadu, six from Puducherry and four from Kerala and Maharashtra. Their names were linked to offences of visa fraud and drug trafficking. Tamil Nadu prisoners were also tracked in Bangladesh, Bhutan, Brunei, Ethiopia.



In Australia and Canada, countries that see high migration from India, 115 prisoners are Indian nationals. Most of their offences relate to murder, sexual assault, money laundering and road accidents.



Most European countries like Germany, Italy, Greece and France did not furnish details of Indian nationals in their prisons.



The minister said since the enactment of the repatriation of Prisoners Act, 2003, 170 applications for repatriation have been received and 61 Indian prisoners have been repatriated from foreign prisons.



So far, India has signed treaties with 30 countries, under which Indian prisoners have been brought back. Besides this, India has also ratified the Inter American Convention by virtue of which India can receive and send requests to member countries for release of prisoners.

Private hospital nurses ask for better pay, work conditions

 | Updated: Aug 11, 2017, 12:37 AM IST

Chennai: From certificates being snatched away to living in cramped quarters on a paltry income, the life of a nurse in a private hospital here is a far cry from his or her peers abroad. Over the years, many have emigrated, a few are on their way out. Others continue helping heal in the shadow of their tribulations.

Some of these nurses were present in a meeting held in the city on Thursday to share their ordeal. "Some of us here work for as less as Rs 3,000 a month," said V Baby Shalini, Secretary of Nurses Joint Action Committee, which represents 1,000 nurses in the state.



The average salary for a government staff nurse in Tamil Nadu is Rs 33,045, said Shalini. There are around 2.05 lakh nurses in Tamil Nadu, of which 60% work in the private sector.



In January 2016, the Supreme Court asked the Union health ministry to set up a committee to study the pay and working conditions of nurses in private hospitals. The committee recommended that the salary given to nurses in private hospitals should not be less than Rs 20,000 a month.



The Centre later wrote to the health secretaries of all states to formulate a legislation or guidelines to implement the recommendations of the committee. "But a year on, nothing has been done," said K Boominathan, president of Nurses Joint Action Committee. "All we are asking is to be paid on par with nurses in the government sector," he said, adding that the workforce also needed a monitoring body to enforce this.



Nurses present at the meeting also said many had of their peers also face difficulties in finding a job as private hospitals are increasingly recruiting poorly qualified staff so they could be paid lesser. "Or they start their own nursing schools and recruit only from there," said Boominathan. Nurses also complained of facing harassment by private hospitals and being forced to work overtime. "We need a conducive place to work, a safe place to stay and a stable future. The government needs to set up a mechanism for this," said Shalini.

Kumbakonam school fire: Convicts to walk free

TNN | Updated: Aug 11, 2017, 07:43 AM IST



Madras High Court

CHENNAI: It is freedom for all the convicts in the July 16, 2004 Kumbakonam school fire accident, in which 94 childrenwere charred to death.

On Thursday, the Madras high court acquitted seven people who had been sentenced to serve varying degrees of jail terms, and then ordered the release of the prime accused founder of Sri Krishna Matriculation School Pulavar Palaniswamy saying the sentence he had already served during the investigation, trial and post-conviction would be sufficient. A sum of Rs 51.65 lakh fine imposed on him was reduced to Rs 1.16 lakh by the HC.

In the case of school cook Vasanthi, who had appealed against her five-year jail term, the sentence was modified as one of period already undergone. On July 30, 2014, the Thanjavur district and sessions court acquitted 11 of the 21 accused, and convicted 10, including Palaniswamy and his wife Saraswathi. Charges against Saraswathi abated, as she died during the pendency of the case.

The verdict, running to more than 250 pages, was delivered by a division bench of Justice M Sathyanarayanan and Justice VM Velumani on Thursday.

கும்பகோணம் தீ விபத்து: இருவருக்கு மட்டுமே தண்டனை


பதிவு செய்த நாள்10ஆக
2017
23:54


சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனர் மற்றும் சமையலர் குற்றவாளி என, தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மட்டும் மாற்றம் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை, 16ல் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள், தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, கும்பகோணம் போலீசார், 24 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்விசாரித்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, அப்போதைய, முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கப் பள்ளி இயக்குனர் கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கும்பகோணம் நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி உட்பட, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.பள்ளி நிறுவனர் பழனி சாமிக்கு, ஆயுள் தண்டனை, 51.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

நிறுவனரின் மனைவியும், தாளாளருமான சரஸ்வதி, கிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட கல்வி அலுவலர்பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின், நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு, தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், கட்டட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு, இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து, 10 பேரும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். விடுதலையை எதிர்த்து, தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. 'அப்பீல்' மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பள்ளி நிறுவனர் பழனிசாமி, சமையலர் வசந்தி ஆகியோர், குற்றவாளி என்பதை, இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, சிறையில் அனுபவித்த நாட்கள் போதுமானது; பழனிசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, 1.16 லட்சம் ரூபாயாக மாற்றம் செய்யப்படுகிறது. பள்ளி தாளாளர் சரஸ்வதி இறந்து விட்டதால், அவரது மேல்முறையீட்டு மனு விலக்கப்படுகிறது.

மற்ற ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. 11 பேர் விடுதலையை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

'அப்பீல்' செய்வோம்: சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அறிந்து, குழந்தைகளை இழந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளை இழந்த, பெற்றோர் நலச்சங்க செயலர், இன்பராஜ் - கிறிஸ்டி தம்பதி கூறியதாவது: எங்களின், இரு மகன்கள் தீயில் கருகி இறந்தனர். சம்பவம் நடந்து, 10 ஆண்டு களுக்கு பின், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டது. தற்போது, இவர்களை விடுதலை செய்தது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண வழக்கு போல, நீதிமன்றம் இதை கருதி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்களே மேல்முறையீடு செய்வோம்.

மகேஷ் - சாந்தி தம்பதி: எங்களது மகள், தீயிலிருந்து தப்பினாலும், மகன் இறந்துவிட்டான். தற்போது, நீதிமன்றம் வழங்கியதீர்ப்பால், நிலைகுலைந்து போய் உள்ளோம். அவர்கள் வெளியே வந்துவிட்டால், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு துணிச்சல் வந்துவிடும். எனவே,தமிழக அரசு, மேல் முறையீடு செய்ய வேண்டும்.
சுமையாக விரும்பாமல் தம்பதி தற்கொலை
பதிவு செய்த நாள்10ஆக
2017
23:56


அவிநாசி: வசதியிருந்தும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாத முதிய தம்பதி, விஷம் குடித்து இறந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கணபதியப்பன், 90; மனைவி வள்ளியம்மாள், 86. இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மகன்களில் ஒருவர், ஊட்டியிலும், ஒருவர், திருப்பூரிலும், குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஆட்டோ உரிமையாளரான, இளைய மகன் குமாரசாமியுடன், கணபதியப்பன், வள்ளியம்மாள் இருவரும், சீனிவாசபுரம் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், வள்ளியம்மாள் தவறி விழுந்து, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கணபதியப்பனும், நீண்ட நாளாக மூட்டு வலியால், நடக்க சிரமப்பட்டு வந்தார். குமாரசாமி, பெற்றோருக்கு காலை காபி, டிபன் கொடுத்து செல்வது வழக்கம்.

நேற்று காலை, அவர், காபியுடன் பெற்றோரை எழுப்ப சென்ற போது, இருவரும், மயங்கி கிடந்தனர். அருகே காலி விஷ பாட்டில் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலனசில், இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்; பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வயதான காலத்தில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாமல், வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்னையில் விசாரணை

பதிவு செய்த நாள்10ஆக
2017
22:49


வேலுார்: வேலுார் மாநகராட்சி கமிஷனர் குமாரின் லஞ்ச முறைகேடுகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளை, சென்னைக்கு அழைத்து, நகராட்சி இயக்குனரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் குமார், 54. நேற்று முன்தினம், கான்ட்ராக்டர் பாலாஜியிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி, 10.44 லட்சம் ரூபாய், 26 சவரன் நகை, பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

நீதிபதி உத்தரவு : குமாரை, 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அவரை ஜாமினில் எடுக்க, குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போது, வேலுார் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாலசுப்பிரமணியன் மற்றும் சில அதிகாரிகள், நேற்று காலை, சென்னை சென்றனர். அவர்களிடம், நகராட்சிகள் இயக்குனரக அதிகாரிகள், குமார் ஊழல்கள் குறித்தும், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 கோடி
அதேபோல், வேலுார் மாநகராட்சியில் வேலை செய்யும் கான்ட்ராக்டர்கள் சிலரும், விசாரணைக்கு சென்னை சென்றுள்ளனர். குமார், 40 சதவீதம் வரை கமிஷன் வாங்கி, 10 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள், குமாரின் ஊழல்கள் குறித்து முழுமையாக விசாரிக்க, 10 பேர் குழுவை நியமித்துள்ளனர். அந்த குழு, வேலுாரில் விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையில், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குமார், நேற்று மதியம், மட்டன் பிரியாணி, சிக்கன், 65 கேட்டு தகராறு செய்துள்ளார்.
குமார் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருடன் கூட்டணி அமைத்து, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பலர், கலக்கத்தில் உள்ளனர்.
வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை

பதிவு செய்த நாள்11ஆக
2017
05:55



சென்னை: வங்கிகள், நாளை(ஆக., 12) முதல் நான்கு நாட்கள் செயல்படாது.
வங்கிகளுக்கு வழக்கமாக, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். அதனால், வங்கிகள் நாளை செயல்படாது. நாளை மறுநாள், ஞாயிறு விடுமுறை. அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை; செவ்வாய் அன்று, சுதந்திர தினம் என்பதால், வங்கிகள், நாளை முதல், 15 வரை, நான்கு நாட்களுக்கு செயல்படாது.

மருத்துவ கவுன்சிலிங் இன்று ரிசல்ட்
பதிவு செய்த நாள்10ஆக
2017
23:56


சென்னை: அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கின் இரண்டாம் கட்ட முடிவுகள், இன்று வெளியாகின்றன. மத்திய மற்றும் தனியார் பல்கலைகளில், இரண்டாம் கட்ட, மருத்துவ கவுன்சிலிங், ஆக., 5 - 8 வரை நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியாகின்றன. 

இந்த கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், கல்லுாரிகளில் சேர, இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த அவகாசம், 19 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும், 21 முதல், இறுதிச்சுற்றுகவுன்சிலிங் நடக்கிறது.

திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில்
பதிவு செய்த நாள்10ஆக
2017
22:27


சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுடன், இன்று சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 11:45க்கு புறப்பட்டு, நாளை பகல், 12:40 மணிக்கு, திருநெல்வேலி சென்றடையும். செங் கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார் மற்றும் கோவில்பட்டியில் நின்று செல்லும்.
டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்து, மாத்திரை வழங்க தடை

பதிவு செய்த நாள்10ஆக
2017
21:52



சேலம்: ''டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்று, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலர், செல்வம் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய நகரங்களில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 33 ஆயிரம் மருந்து கடைகளிலும், காய்ச்சலுக்காக மருந்து, மாத்திரைகளை கேட்டு வரும் நோயாளிகளுக்கு, தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால், ஒரு வேளைக்கு மட்டும் மாத்திரைகள் வழங்கப்படும்.
காய்ச்சலின் தன்மையை கருதி, நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற, தேவையான அறிவுரைகளை எங்களின் சங்க உறுப்பினர்கள் வழங்குவர். நகர, கிராம பகுதியில் உள்ள மக்கள், சுய மருத்துவ சிகிச்சையை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, குறிப்பிட்ட பகுதிகளில், காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருப்பின், அது குறித்து சுகாதாரத் துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கி உள்ளோம்.

டெங்கு காய்ச்சல் பரவுவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம்.
டாக்டர்களின் பரிந்துரைசீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

பதிவு செய்த நாள்11ஆக
2017
12:41




புதுடில்லி: நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது. 

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. மாநில பாட திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் என மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது. சமநிலை முறை வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. வேறுபாட்டை அதிகபடுத்தும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

Thursday, August 10, 2017

tambaram pedestrain subway not user friendly


கடைகள், வீடுகளில் புகுந்த அரசு பஸ்

பதிவு செய்த நாள்10ஆக
2017
08:44


சென்னை : சென்னை பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடி பகுதியில் அரசு பஸ், 2 கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து விபத்து ஏற்பட்டது. தி.நகரில் இருந்து ஸ்ரீபெரும்புத்தூர் நோக்கி சென்ற தடம் எண் 544 கொண்ட பஸ் விபரத்திற்குள்ளானது. 

விபத்தில் படுகாயம் அடைந்த ஐயப்பன் என்பவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் மற்றும் கன்டெக்டரிடம் பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் மருத்துவ படிப்பு 12ல் துவங்குது கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்09ஆக
2017
20:38


சென்னை: 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், 12ம் தேதி துவங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்.,க்கு, 1,215 இடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில், 192 இடங்கள் உள்ளன. இதற்காக நடந்த, 'நீட்' தேர்வில், 6,709 பேர் தகுதி பெற்றுள்ளனர். மாநிலத்திற்கென இருந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களுக்கும், மத்திய அரசே, கவுன்சிலிங் நடத்துகிறது. 12ம் தேதி, ஆன்லைன் முறையில் துவங்கும் கவுன்சிலிங் குறித்த முழு அட்டவணை, பின்னர் அறிவிக்கப்படும் என, மத்திய அரசின், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.mcc.nic.in, http://mohfw.nic.in ஆகிய இணையதளங்களை தொடர்ந்து பார்வையிட, மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சேலத்தில் 100 பேருக்கு டெங்கு அறிகுறி


பதிவு செய்த நாள்09ஆக
2017
11:55




சேலம் : சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 100 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் இதுவரை 557 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Foreign funds: RGUHS gets notice for not filing returns


DH News Service, New Delhi, Jul 11 2017, 1:07 IST

Nehru Memorial Museum and Library, Indira Gandhi National Open University (IGNOU) and Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) in Karnataka are among 5,922 NGOs and institutions that could lose their licence to receive foreign funds as they have not filed annual returns for three or more than three years.

Show-cause notices were issued to these NGOs and institutions last Saturday, asking why they have not filed their annual income and expenditure records despite repeated notices.

Under the Foreign Contribution Regulation Act (FCRA), the licence would be cancelled if the institutions do not file their annual income and expenditure records.

The Delhi College of Engineering, currently known as Delhi Technological University, Young Men's Christian Association and Punjabi University, Patiala are also in the list besides over a dozen from Karnataka.

Some of the NGOs and institutions that find their name in the list include Karnataka Chinmaya Trust, Karnataka Rural Development Service Centre, Karnataka Holy Cross Sister's Society, Voluntary Health Association of Karnataka, Karnataka Navodaya Ashram and Andhra Karnataka Dalita Varga Sangha.

Others are Society for Service to Voluntary Agencies of Karnataka, Karnataka Development Projects, The Karnataka Network For People Living With HIV/AIDS, Karnataka Rural Employment Generating Association, Karnataka Labour Education Trust, Northern Karnataka Rural Development Society, Uttara Karnataka Rajya Nirgatika Mahileyaru Mattu, Devadasiyara Samaja Seva Sangh, University Women’s Association Of Bangalore, Mysore Educational Social and Cultural Organisation and Mysore Diocesan Education Society among others.

The Ministry of Home Affairs said as a one-time measure, all NGOs were given an opportunity for one month to file their missing annual returns by June 14 without paying any penalty.

Email and SMS alerts were also sent to them regularly for one month beginning mid-May.

“However, in spite of sufficient and adequate notice, it has been observed that 5,922 associations have not uploaded their annual returns for three or more than three years within the stipulated time given in the notice,” the circular said.


Salary revised for Tasmac employees

CHENNAI

CHENNAI,AUGUST 10, 2017 00:00 IST

The Tamil Nadu State Marketing Corporation Limited (Tasmac) has decided to revise the monthly consolidated pay of employees working at its retail vending shops at a board meeting that was held recently. Supervisors will now be paid Rs. 9,500 per month, while salesmen will be paid Rs. 7,500 per month. Currently, Supervisors earn Rs. 7,500 per month and salesmen get Rs. 5,600 per month. The salary of assistant salesmen has been increased to Rs. 6,500 per month from Rs. 4,200 a month.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் படப்பை ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்

By DIN | Published on : 10th August 2017 03:33 AM



கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள படப்பை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்.


படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட படப்பை பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டடம் ஏதும் இல்லாததால் பயன்படுத்த முடியாது என கைவிடப்பட்ட பழைய தச்சுக் கூடத்தில் தாற்காலிகமாக செயல்பட தொடங்கியது.

போதுமான இடவசதி இல்லாத இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் படப்பை, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில், படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ரூ. 60 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இப்பணி முடிவடைந்து சுமார் 6 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போதும் பழைய கட்டிடத்திலேயே இடநெருக்கடியுடன் படப்பை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே புதிய கட்டடத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.







நெருங்காமலும் நீங்காமலும்


By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 10th August 2017 02:33 AM | - |

இன்று தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி வருகின்றன. இதில் தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி இவற்றின் பங்கு மகத்தானது.

உலகின் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் துல்லியமாக அறிய ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன என்றாலும், இவை குடும்ப வாழ்வையும், தனி மனித வாழ்வையும் சீரழித்து வருகின்றன.

முன்பெல்லாம் செய்திகளை தண்டோரா போட்டு அறிவித்தார்கள். பின்னர் வானொலி வந்தது. பிறகு அரசு தொலைக்காட்சி வந்தது. அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகள், கைப்பேசிகள் வந்து உலகச் செய்திகளை உடனுக்குடன் விரல் நுனியில் கொண்டு வந்து விட்டன.

இணையம் வழியாக சமூக வலைதளங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறி விட்டன. உலகத்தின் நிகழ்வுகளை வீட்டில் அமர்ந்தவாறே காண இணைய பயன்பாடு பெரிதும் உதவுகிறது. உலகம் சுருங்கிவிட்டது.

குறிப்பாக, முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்ற வலைதளங்கள் இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சமூக வலைதளங்களினால் குற்றங்கள் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது.

பொழுது போக்கிற்கான பல சமூக வலைதளங்கள் மக்களின் நேரக்கொல்லிகளாக மாறி விட்டன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலை மாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை இன்று உருவெடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் சுறுசுறுப்பாக இருந்த மக்களை வீட்டிற்குள்ளே கட்டிப் போட்டு சோம்பேறிகளாக்கி விட்டன. ஒரு மனிதன் நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டுமானால் அவன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு மணிநேரமாவது தூங்க வேண்டும் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆனால், இந்த சமூக ஊடகங்கள் பலரின் தூக்கத்தை கெடுத்து உடல் நலத்தை பாதித்துவிடுகிறது.

அறிதிறன்பேசி எனப்படும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் மூன்று மணி நேரம் தூங்குவது என்பதே அரிதாக உள்ளது.

இவர்கள் இரவு 10 மணிக்கு மேல் முகநூலில் வீடியோ பதிவுகளையும், வதந்திகளையும், அவதூறு செய்திகளையும் அனுப்பி அதில் எவ்வளவு லைக்ஸ் எனப்படும் விருப்பம் வந்துள்ளது, எவ்வளவு பேர் இந்த வதந்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்கள் என்பதை இரவு முழுவதும் பார்த்து காலம் போவதே தெரியாமல் பணத்தையும், நேரத்தைதையும் வீணடிக்கிறார்கள்.

டாக்டர் அப்துல் கலாம், இன்றைய இளைஞர்களிடம் கனவுக் காணுங்கள் என்றார். ஆனால், இவர்களுக்கு தூக்கம் வந்தால் தானே கனவு காண்பதற்கு.
இன்றைய இளைஞர்கள் ஒருவித பதற்றம், பய உணர்ச்சி, யாரைக் கண்டாலும் எரிச்சல், பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவது, கோபப்படுவது, எதிலும் ஆர்வமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, கவனக்குறைவு, மறதி போன்றவைகளால் துன்பப்படுகிறார்கள்.

எப்போதும் சமூக வலைதளங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும், பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

விருப்பமானவர்களிடமிருந்து தகவல் வரவில்லையென்றால், மேலும் துயரமடைந்து ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், தூக்கம் வராத வியாதிக்கு உட்படுவார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், கண் எரிச்சல், கண் அழற்சி, கண் பொங்குதல், கண்களைச் சுற்றி கருப்பு நிறத் திட்டுகள் ஏற்பட்டு, அவர்கள் உடல் நலத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அறிதிறன்பேசிகளின் பயன்பாடுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நோமோபோபியா (Nomophobia) என்று அழைக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகர்வோர்களாக மாற்றி விட்டன.
கலை, அறிவியல், விளையாட்டு என்பது இன்று வசதிபடைத்தவர்களுக்கும், சாதிக்க துடிப்பவர்களுக்குமே என்றாகி விட்டது.

இதனால் பல இளைஞர்கள் அறிதிறன்பேசியிலும், கணினியிலும் விரலசைவுகளினால் விளையாடி, தங்களின் காலத்தை வீணடித்துக் கொள்கிறார்கள். சாதனை படைத்தவர்கள் இவ்வாறு நேரத்தை வீணடிப்பதில்லை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பெண்கள் மனதை சீரழித்து வருகிறது. இந்த நெடுந்தொடர்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் உண்மையென நம்பி, அந்த கொடூர கதாபாத்திரமாக தங்களையும் மாற்றி தங்களின் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கிறார்கள்.

பெரும்பாலான தொலைக்காட்சிகள் தங்களது நெடுந்தொடர்களில் பெண்களுக்கு எதிரான விஷயங்களை காட்டிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுப்படுத்துகிறேன் என்று பல தீய நட்புகளைத்தான் வளர்க்கும்.

இதனால், நமக்கும், சமூகத்திற்கும் எந்த பலனும் இல்லை என்பதை உணர வேண்டும். இந்த தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி, போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்வில் அமைதி நிலவும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கி விடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருக்க வேண்டும்.


நுழைவுத் தேர்வு நுண்ணறிவுத் தேர்வல்ல!

By சா. பன்னீர்செல்வம் | Published on : 10th August 2017 02:32 AM |



மருத்துவம் பொறியியல் முதலிய தொழிற் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் போட்டியாளரை வடிக்கட்டுதற்கும் பலதரப்பினர்க்குச் சமவாய்ப்பு அளிப்பதற்குமாக நேர்முகத் தேர்வு என்பதே சென்ற நூற்றாண்டின் நடைமுறையாக இருந்தது.

நேர்முகத் தேர்வென்பது ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட மனப்பான்மை, பொது அறிவு சிந்தனைத்திறன் என்பவற்றை அவரவரின் குடும்பம் மற்றும் சமூகப் பின்னணி எனும் அடிப்படையில் வெவ்வேறு கேள்விகளால் கண்டறியப்படுவதாக இருந்தது.

ஆனாலும், நேர்முகத் தேர்வு ஊழல் மயமாகிவிட்டதெனும் காரணத்தின் பேரில் அதற்கு மாற்றாக, தொழில் முறைப் படிப்புகளுக்கெனத் தனியான நுழைவுத் தேர்வு எனும் முறை தமிழக அளவில் 1984-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த எதிர்ப்பின் காரணமாக 2005-இல் கைவிடப்பட்டது.

அதே சமயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் முறைக் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நுழைவுத்தேர்வு முறை தொடக்கம் முதல் இன்றளவும் நீடிக்கின்றது. இந்த நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் முறைக்கல்லூரிகளுக்கும் அனைத்திந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பதை காங்கிரசுக் கூட்டணி அரசு கடந்த 2010-இல் அறிமுகப்படுத்தியது.

அது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை 2013-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி செய்த மறு சீராய்வு மனுவின் விளைவாக 2016-இல், நுழைவுத் தேர்வு சரியே என்பது உச்சநீதிமன்றத்தின் மறுதீர்ப்பாயிற்று. மறு சீராய்வு மனுவுக்கும், மறுபடியும் மாற்றுத் தீர்ப்புக்கும், மத்திய அரசு தானாகவே திட்டத்தைக் கைவிடுதற்கும் வாய்ப்பிருப்பதால் நுழைவுத் தேர்வு விவாதம் தொடர்தல் அவசியமாகிறது.

முதலாவது, பள்ளியிறுதித் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஒரே மாநிலத்தில் மாநில அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., நவோதயா பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என வெவ்வேறு பாடத்திட்டத்துடன் நடைபெறும், பள்ளிகளாகின்றன.

வெவ்வேறு பாடத்திட்டத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. என்னும் குறிப்பிட்ட பாடத்திட்டப் படியான தேர்வென்பது எள்ளளவும் நேர்மையற்ற செயலாகிறது.

நுழைவுத் தேர்வு என்பதென்ன? பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்ணும் பெற்ற மாணவர்கள் மீண்டும் அனைத்திந்திய அளவிலான ஒரு பொதுத்தேர்வு எழுதுதல். பள்ளிப் பொதுத்தேர்வு எழுத்து முறைத்தேர்வு.

அதாவது வினாவுக்குரிய விடையைத் தான் படித்த பாடத்திலிருந்து சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்து எழுதுதல். நுழைவுத் தேர்வாவது, வினாவுக்கெனக் கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் எது சரியான விடையென்பதை டிக் செய்தல். இது எப்படிக் குறிப்பிட்ட தொழில் படிப்புக்குரிய தகுதியைத் தெரிவு செய்தலாகிறது?
குறிப்பிட்ட தொழிற் படிப்புக்குத் தகுதியாளரைத் தேர்வு செய்ய என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்ட தொழிற்படிப்பிற்கும், அதன் வழிக்குறிப்பிட்ட பணிக்கும் தேவையான குணநலன்கள், தனித்திறன்கள் என்னென்ன எனப்பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.

அவை ஒவ்வொரு மாணவனிடமும், எந்தளவு அமைந்திருக்கின்றன என்பதைக் கண்டறியும் முறையில், ஒவ்வொரு வினாவுக்கும் அவரவர் மனப்பான்மை, சிந்தனைத்திறன் என்பவற்றிற்கேற்ப ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையாக விடையளிக்கும் முறையிலேயே வினாக்கள் அமைய வேண்டும்.

நேர்முகத் தேர்வின் போது முதலில் மாணவனின் வாழ்வியல் பின்னணி தொடர்பான கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவரவர் சூழலுக்கேற்பக் கேள்விகளை எழுப்புவார்கள். அதுதான் சரியான தேர்வுமுறை.
நேர்முகத் தேர்வில் மாணவன் கூறும் விடையை அவனது வாழ்வியற் சூழலொடு பொருத்தி அதன் வழி விடையின் தகுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்போல நுழைவுத் தேர்வில் மாணவர்களின் வெவ்வேறு விடைகளின் தகுதிப்பாட்டைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. எனவே, அனைவரும் ஒரே வகையான விடையளிக்கும் நுழைவுத் தேர்வின் வழி மாணவனின் தகுதியை மதிப்பிடுதல் உண்மையிலிருந்து முற்றிலும் விலகுவதாகிறது.
பொது நுழைவுத் தேர்வு நுண்ணறிவுத் தேர்வு என்கிறார்கள். என்ன நுண்ணறிவு? எழுத்து முறைத்தேர்வில் வினாவுக்குரிய விடையைத் தான் படித்த பாடத்திலிருந்து சற்று நிதானமாகச் சிந்தித்து எழுதுகிறான். நுழைவுத் தேர்வில் அதே வினாவுக்கு அதே விடையை கொடுக்கப்பட்ட பட்டியலில் நொடிப்பொழுதில் இனங்கண்டு டிக் செய்கிறான்.

ஆக நுண்ணறிவுத் தேர்வு என்பது ஏற்கெனவே படித்ததை நொடிப் பொழுதில் நினைவிற்கொணரும் நினைவுத்திறன் வெளிப்பாடன்றிச் சுய சிந்தனைத்திறன் வெளிப்பாடென்பதற்கு என்ன இருக்கிறது? எவ்வளவு கெட்டிக்கார மாணவனாயினும் நுழைவுத் தேர்வுக்கெனத் தனிப்பயிற்சி பெறாமல் நுழைவுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுதல் இயலாதென்பது வெளிப்படை.

ஆக, பயிற்சி வகுப்புக்களில் வினா - விடையாக அளிக்கப்படும் பயிற்சியை நினைவிறுத்தி நுழைவுத் தேர்வில் சரியான விடையை நொடிப் பொழுதில் டிக் செய்தல் பழக்கப்படுத்தப்படியே சுற்றுகிற செக்கு மாட்டுத் திறமையன்றிச் சுய அறிவுத் திறனாகாது.

பயிற்சி வகுப்புகளில் இடம் பெறாது நுழைவுத் தேர்வில் இடம் பெறும் வினாக்களுக்கு எத்தனை விழுக்காட்டினர் சரியான விடைகளை டிக் செய்வர்?
தில்லி-எய்ம்சு, புதுச்சேரி - சிப்மர், சண்டிகர் - பி.ஜி.அய், இராணுவக்கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே நுழைவுத் தேர்வின் வழி இடம் பிடித்து, அங்கே தரப்படும் பயிற்சி முடித்துப் பட்டம் பெற்று, அந்த மருத்துவமனைகளிலும், பிற மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்கள் அவ்வளவு பேர்களிடமும் வரும் அவ்வளவு நோயாளிகளும் முழுமையாகக் குணமடைகிறார்களா?

நுழைவுத் தேர்வென்பது ஒரு வடிக்கட்டல் முறை - அவ்வளவுதான். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் என்பதே வடிக்கட்டலன்றி வேறல்லவே? மீண்டுமொரு வடிக்கட்டல் என்பது அரைத்த மாவையே அரைக்கின்ற வெட்டித்தனமல்லவா?

இவையெல்லாவற்றிற்கும் மேலாகப் பொது நுழைவுத்தேர்வு என்பதன் உள்வயணத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது, சுதந்திர இந்தியா சுயாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அமையும் என்று அன்றை தேசியத் தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினையைக் காரணங்காட்டி இந்திய அரசியலமைப்பை, வலுவான மத்திய அரசுக்குட்பட்ட மாநில அரசுகள் என்னும் முறையில் அமைத்து விட்டார்கள்.
ஒரு விலக்காக, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. மனித வாழ்வியலின் அடிப்படையாகின்ற கல்வியை மத்திய அரசின் வரம்புக்குட்படுத்தும் முயற்சியாக, நெருக்கடிநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்று பொதுப் பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி.
இன்று கல்வி என்பதை பழையபடி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரும்பான்மையான மக்களின் மொழியும், மதமும் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவில் பள்ளிக்கல்வி முற்றிலும் மாநில அரசின் பொறுப்பாகவும், அதிலும் தொடக்கக்கல்வி உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகவும் அமைகின்றன. பலமொழியினங்களைக் கொண்ட இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மத்திய அரசின் குறுக்கீடு முற்றிலும் தவறானது.

எனவே ஒரு மாநிலத்தில் அந்த மாநில அரசின் வரம்புக்குட்பட்ட பாடத்திட்டப்படியான பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும். சி.பி.எஸ்.இ. - இ.பி.எஸ்.இ. - ஓ.பி.எஸ்.இ. என ஒரே ஊரில் நான்கு விதமான பள்ளிகள் ஆகவே ஆகாது.

மாநிலப் பாடத்திட்டப் படியான தனியார் பள்ளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, மாநில அரசுத் தொழிற்கல்லூரிகளிலும், மத்திய அரசுத் தொழிற்கல்லூரிகளிலும் மாநில அரசின் ஒதுக்கீடாகும் இடங்கள் மாநில அரசுப் பாடத்திட்டப்படியான பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்படியே நிரப்பப்பட வேண்டும்.
இரு வகையான கல்லூரிகளிலும் மத்திய அரசு ஒதுக்கீடாகும் இடங்களை அந்தந்த மாநில அரசுப்பள்ளியிறுதித் தேர்வுத்தரவரிசைப் பட்டியலில் முதல் வரிசை மாணவர்களுக்கு வழங்கலாம். அல்லது அந்த இடங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம். எல்லா இடங்களுக்கும் மத்திய நுழைவுத் தேர்வென்பது எக்காரணங்கொண்டும் எவ்வகையாகவும் ஏற்கத்தக்கதல்ல.

தற்போது இழுபறியாகும் நுழைவுத் தேர்வுச் சிக்கலுக்கு என்னவழி? மாநிலப் பாடத்திட்டப்படிப் படித்து நுழைவுத் தேர்வெழுதியோரின் விழுக்காட்டிற்கேற்ப அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்தல் இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கும் இட ஒதுக்கீடு எனும் கோட்பாட்டின் அடிப்படையை மறுப்பதாகி, இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் அல்லவா?
அண்மையில் 'தினமணி' தலையங்கத்தில் குறிப்பிட்டவாறு, நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் கூட்டி அவற்றின் சராசரி அடிப்படையில் அனுமதித்தலே தற்போதைய இழுபறிச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும்!

நீட்' தேர்வு விலக்கு விவகாரம்: விசாரித்து அறிக்கை அளிக்க மத்திய அமைச்சர்களின் மூவர் குழு

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) விலக்கு விவகாரம்
குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அமைச்சர்கள் அடங்கிய மூவர் குழுவை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் ('நீட்') இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட ப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இந்நிலையில், நீட் தேர்வுகள் முடிகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் 'நீட்' தேர்வால் பாதிப்புக்கு உள்ளாவதாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட ஐந்து துறைகளின் அமைச்சர்கள் இருமுறை தில்லியில் முகாமிட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தினர். மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை அமைச்சர்களை அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தில்லி வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். எனினும், இந்த விவகாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதமானது.

இந்நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்மொழிவை மத்திய உள்துறையிடம் தமிழக அரசு அளித்தது. இதைத் தொடர்ந்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கரும், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையும் நேரில் சந்தித்து பேசினர்.

இச்சூழலில், இந்த விவகாரத்தில் உள்ள சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங், மத்திய வர்த்தகத் தொழில் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓரிரு தினங்களில் தங்களது அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருப்பதால், அவருக்கு தமிழகத்தின் கல்விச்சூழல், கிராமப்புற மாணவர்களின் நிலைமை ஆகியவை குறித்து நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஏறக்குறைய முடிந்து விட்டது.

இந்நிலையில், தமிழகம் மட்டும் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா மற்றும் தாற்காலிக விலக்குப் பெறும் அவசரச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பதால் அது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!




ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜியோ.

அதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிபரிசாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது கூடுதல் தகவல்.

திட்டம் விவரம் :இந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.

1 gbps வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை பெரும் என்பதில்எந்த மாற்றமும் இருக்காது.இந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இதே நிலை நீடித்தால் அரசு ஸ்தம்பிக்கும்': எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்!
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடுஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது...

"சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் இயக்கங்களும் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமுல்படுத்திடவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக, கடந்த மாதம் 18-ம் தேதி மாவட்ட தலைநகரில் ஆரப்பாட்டம் நடத்தினோம், அதன் பின் கடந்த 5-ம் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னை புற நகரில் காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் மீறி சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு கூடி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

ஆர்ப்பாட்டம் முடிந்துள்ள நிலையில் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேசாமல் மௌனம் காப்பது என்பது எங்களை அரசே போராட்டக்களத்திற்கு தள்ளுகிறது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் காலம் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், அக்குழுவிடமிருந்து அறிக்கையை பெறாமல் மீண்டும் நவம்பர் வரை கால நீட்டிப்பு செய்திருப்பது எங்களது போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தும் செயலாகும்.போராடும் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டக்களத்திற்கே வராத ஆளும் அரசுகளின் ஏவலாளியாக செயல்படும் அமைப்புகளோடு தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது போராட்டக் களத்தில் கோபாவேசத்தோடு போராடிய ஆசிரியர் அரசு ஊழியர்களை கோபப்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையென்றால் திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் செப்டம்பர் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் நூறு சதவிகிதம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். இவ்வேலை நிறுத்தத்தின் மூலம் தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பிக்கும்' என அவர் எச்சரித்தார்.

Posted by kalviseithi.net
ஏர் இந்தியா விமானம் டெக்ரானில் தரையிறக்கம்
2017-08-10@ 00:10:15


புதுடெல்லி: பிராங்பர்டிலிருந்து டெல்லிக்கு 249 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அதன் முன்பகுதி ஜன்னலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அவசர அவசரமாக டெக்ரானில் தரையிறக்கப்பட்டது.ஏர் இந்தியா விமானம் பிராங்பர்டிலிருந்து நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, விமானத்தின் முன்பகுதி ஜன்னலில் விரிசல் இருந்ததை விமானி கவனித்தார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விமானத்தை உடனே டெக்ரானில் தரையிறக்கினார். காலை 6.20 மணிக்கு 249 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மும்பையிலிருந்து மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு, பயணிகள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். செல்லப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரவும் காய்ச்சல் : உஷாராகுமா சுகாதாரத்துறை

பதிவு செய்த நாள்09ஆக
2017
23:54


ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இந்நகரில் கோவிந்தன் நகர் காலனி, ரைட்டன்பட்டி, அசோக்நகர் பகுதிகளை சேர்ந்த சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, டெங்கு அறிகுறியாக காணப்பட்டது. இதையடுத்து சிவகாசி தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

நகரில் நிலவும் சுகாதாரக்கேடு ஒருபுறம் இருந்தாலும், 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் குடிநீர் சப்ளையால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைக்கும் தண்ணீரில், சில நாட்களிலேயே ஒருவித வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுத்து, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்
என்பது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கிடையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும். பிளாஸ்டிக் டிரம்களை நன்றாக சுத்தம் செய்து, அதில் தண்ணீரை சேமித்து மூடி வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி
உள்ளது.
தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை
பதிவு செய்த நாள்09ஆக
2017
19:20




தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஆக.,9) பிற்பகலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. 

மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம், மேலூர், கல்லம்பட்டி , தும்பைபட்டி, வெள்ளலூர் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.




இன்ஜி., கவுன்சிலிங் நாளை(ஆக.,11) நிறைவு

பதிவு செய்த நாள்10ஆக
2017
05:45




சென்னை: இன்ஜி., பொது கவுன்சிலிங் நாளை(ஆக.,11) முடிகிறது. நேற்று வரை, 79 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. 

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல், பொது கவுன்சிலிங் துவங்கியது. இதில் விண்ணப்பித்த, 1.35 லட்சம் பேரில், தினமும், 5,000 முதல், 8,000 பேர் வரை அழைக்கப்பட்டு, அவர்களுக்கு, கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 17 நாட்களாக நடத்தப்பட்டு வரும் கவுன்சிலிங், நாளை முடிகிறது.
நேற்று வரை கவுன்சிலிங் மூலம், 79 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 96 ஆயிரத்து, 141 இடங்கள் காலியாக உள்ளன. இன்றும், நாளையும், அதிகபட்சம், 8,000 இடங்கள் நிரம்பும். கவுன்சிலிங்கின் முடிவில், 88 ஆயிரம் இடங்கள் காலியாகும் என, தெரிகிறது.




Advertisement
80 நாட்டினர் கத்தாருக்கு விசா இல்லாமல் செல்லலாம்

பதிவு செய்த நாள்  09ஆக
2017
22:37




துபாய்:விசா இல்லாமல் 80 நாடுகளை சேர்ந்தவர்கள் கர்த்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளன.கத்தாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்தனர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு வர இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகை தரும் பயணிகளின் நாட்டைப் பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறை 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மாறுபடுகிறது.

கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம் கூறுகையில், “80 நாடுகளை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார்.

கடந்த நவம்பர் 2016ல் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது. இப்போது விசா தொடர்பான முடிவு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி செயல்பாட்டிற் வருகிறது.
மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை: கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரும்பாலான கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 09, 2017, 03:30 AM


சிவகங்கை,

தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் வறட்சி தாக்கம் அதிகமாக இருந்தது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை என மாவட்டம் முழுவதும் எங்கும் பெண்கள் குடங்களுடன் தண்ணீருக்காக அலைந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம்(ஜூலை) பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக மாவட்டத்தில் இளையான்குடி தவிர மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் ஓரளவு உயர்ந்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை, சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது.
தலையங்கம்

திறமையின் அடிப்படையில் கேள்விகள்


தமிழ்நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக என்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரிசையில் சேர்ந்து விடுகிறார்கள்.

ஆகஸ்ட் 10 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக என்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரிசையில் சேர்ந்து விடுகிறார்கள். தமிழக அரசு பணிகளுக்கான அனைத்து தேர்வு களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத்தான் நடந்து வருகிறது. ஒவ்வொரு வேலைதேடும் இளைஞரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தில் எப்போது அரசு பணிக்காக தேர்வு நடத்துவார்கள்? அதற்கான விளம்பரம் எப்போது வரும்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்கும் விளம்பரம் வரும்போது எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறதோ, அதைவிட பல நூறு மடங்கு விண்ணப்பதாரர்கள் களத்தில் இறங்குவார்கள். அந்த வகையில், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் உதவி யாளர்களாக பணிபுரிவதற்கான குரூப்–2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது.

பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பதவிகள், தலைமைச் செயலகம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சர் பதவி உள்பட ஏராளமான துறைகளில் உதவியாளர் பணிக்காக ஆயிரத்து 953 பணி இடங்களுக்கு, 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த பணிகளுக்கு பட்டப்படிப்புதான் அடிப்படை கல்வித் தகுதி. எனவே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, இந்த தேர்வுகள் நடந்தன. உதவியாளர் வேலை என்பது மிக முக்கியமான வேலை. ஆனால் இந்த வேலைக்கு கேட்கப்பட்ட கேள்விகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. பொது தமிழ் பகுதியில் உள்ள கேள்விகளில், பல கேள்விகள் எல்லோ ராலும் பேசப்பட்டன. எடுத்துக்காட்டாக 1–ம் வகுப்பில்

கேட்கப்படும் கேள்விகள்போல பொருத்துக என்று தலைப்பிட்டு ஒரு பக்கம் காகம், குதிரை, சிங்கம், குயில் போடப்பட்டிருந்தது. அதை பொருத்தவேண்டிய வார்த்தை களாக அதன் பக்கத்திலேயே கூவும், கரையும், கனைக்கும், முழங்கும் என்று போடப்பட்டிருந்தது.

9–ம் வகுப்பு பாடப்புத்தகம் 3–ம் பருவம், பக்கம் 82–ல் உள்ள கீழ்க்காணும் தொடரில் உள்ள சரியான தேர்வை செய்க. யானையின் கண் சிறியது, யானையின் கண்கள் சிறியது, யானையின் கண்கள் சிறியன, யானையின் கண் சிறியன என்று கேட்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக ளெல்லாம் சிறுகுழந்தைகள் பதில் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், பார்த்தவுடன் சரியான பதில்களை தேர்வு செய்யும் உடனடி பொது கண்ணோட்டம் இருக்கிறதா என்பதை முடிவு செய்யும். மேலும் ஒருசில கேள்விகள் எல்லோராலும் எழுத முடியாத நிலையில் கடினமாக இருந்தது. தமிழ் இலக்கியம் படித்தவர்களால் மட்டுமே அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும். ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வினாக்கள் சில இலக்கணப் பிழையுடன் இருந்தன. கணக்கு பகுதியில், கணக்கு பாடத்தை முக்கியமாக கொண்டு படித்தவர்களால் மட்டுமே பதில் அளிக்க முடியும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் உள்ள முக்கிய பிரச்சினைகள் எதைப்பற்றியும் கேட்க வில்லை. இப்படி பொதுத்தேர்வில் கேள்விகளை கேட்கும் போது அந்த பணிக்கு பொருத்தமான கேள்விகள், அந்த பணியில் சேர்ந்தால் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளை கேட்டு தேர்வு செய்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் வேண்டுவதெல்லாம் தேர்வு தாள்களை திருத்துவதில், மதிப்பிடுவதில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது. எங்கள் திறமையின் அடிப்படையில்தான் தேர்வு நடக்க வேண்டுமே தவிர வேறு எந்தவித புகார் களுக்கும், சந்தேகத்துக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் தேர்வு எழுதியவர்களின் எதிர்பார்ப்பாகும்.
மாவட்ட செய்திகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு


சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

ஆகஸ்ட் 10, 2017, 07:45 AM
சேலம்,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத் திரியை பார்வையிட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களிடம் ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும், உடல்நிலைக்குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேர மருத்துவர் கிடையாது. அதனால் இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் சேலம், ஓமலூர், மேட்டூர் மற்றும் எடப்பாடி ஆகிய அரசு மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. அதனால் ஜலகண் டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டு மென கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை பெற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக இரவு நேர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரியை பார்வையிட்ட போது அவருடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மேட்டூர் தாசில்தார் செந்தில் குமார், சங்ககிரி எம்.எல்.ஏ. ராஜா, ஓமலூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், ஜலகண்டாபுரம் கூட்டுறவு வங்கித்தலைவர் மாதையன், எடப்பாடி ஒன்றியச் செயலாளர் மாதேஸ் வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி பகுதியில் சுகாதாரத்துறை மூலம் நடைபெறும் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வு முகாம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இம்முகாமில் கலந்து கொள்ள அமைச்சர் விஜய பாஸ்கர் வந்தார்.
அவருடன் திட்ட இயக்குனர் அருள்ஜோதிஅரசன், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரை முருகன், தாசில்தார் சண்முக வள்ளி மற்றும் பலர் வந்தனர். பின்னர் சுகாதார விழிப்புணர்வு குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் சுகாதார அதிகாரிகள் மருத்து வர்களிடம் கேட்டறிந்து பேரணியை தொடங்கி வைத்தார். அமைச்சர் எடப் பாடி அரசு ஆஸ்பத்திரி வரை நடந்து சென்றார். அப்போது சாலை ஓரத்தில் உள்ள வீடுகள், கடைகள் சுகாதாரமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்த நோயாளி களை பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அம்மா சஞ்சீவினி மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் அமைச்சர் விஜய பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் எடுத்து கூறி, துண்டுபிரசுரங்கள் கொடுத்தார்.

Wednesday, August 9, 2017


Beware! Bigg Boss may not have small impact on kids

DECCAN CHRONICLE. | A RAGU RAMAN
PublishedAug 9, 2017, 6:26 am IST


Children should be educated on reality shows, says expert.

Some teachers have taken the initiative to make students aware of the popular reality show, which could possibly affect the emotional well- being of adolescents.


Chennai: Though no formal survey is yet to be conducted on the impact of Bigg Boss show, teachers are saying that students studying from classes 6 to 12 are watching the show.

Some teachers have taken the initiative to make students aware of the popular reality show, which could possibly affect the emotional well- being of adolescents.

Students write what they like and not in Bigg Boss show on the blackboard in a school at Madurai. (Photo: DC)

“When I heard about the controversy on invocation to Goddess Tamil (Tamil Thai Vazhthu) I wanted to check whether students are watching the show. To my surprise, of 45 students in class 9 more than 30 students said they are watching the show along with their parents,” said R.Shiva, a teacher from Madurai College Higher Secondary School.

“Unlike television serials where the students know it's just a fiction, in this programme they believe everything is true and can be disturbed by the events happening in the show,” he said.

He tried to bring some awareness by conducting a discussion on it. At discussion, many students said they did not like the occupants constantly talking ill of others and the groupism in the show. Among the positives, they mentioned cooking, emotions expressed and the house in which the occupants reside. Interestingly, the students did not like the show host and the big star Kamal Haasan

A teacher from the school in Elephant Gate said, “Many students in our school are watching the programme. Our students are predominantly from in and around slum areas and it's their timepass."

“Since our students are having a hard time as kids, this programme cannot create any major impact on them,” he said.

A professor from the Quaid-e-Millath Government College for Women said, “My son is studying class 12. We don't watch the television in our house. But, he insists on watching the programme during dinner.”

Educationist P.B. Prince Gajendrababu said, “Teachers should educate children and parents on watching television programmes. They should use the social science classes to create awareness on reality shows and television serials.”
Dr Viruthagirinathan, clinical neuropsychologist, said, "The Bigg Boss programme is not advisable for children and adolescent children who may not have the emotional and social maturity.”

“Adults can understand the emotional issues involved in the programme. But, the children may not understand it and there are chances that it may affect them in long term,” he said.

Doctors oppose CCTVs in classrooms, biometric attendance

By Express News Service | Published: 09th August 2017 01:10 AM |





The biometric security system which will be used from Wednesday at Government Kilpauk Medical College and Hospital’s Neonatal Intensive Care Unit | Romani Agarwal

MADURAI: The Tamil Nadu Government Doctors Association (TNGDA) has opposed the installation of CCTV cameras inside classrooms at medical colleges, and has decided to move the court against the decision of the Medical Council of India (MCI).

Amending the Minimum Standard Requirement for 50/100/150/200/250 MBBS Admissions Annually Regulations, 1999, the MCI had issued a gazette notification in January stating the Council will install biometric fingerprint attendance for capturing faculty attendance and that every medical college will have Close Circuit Televisions (CCTV) to provide live streaming of both classroom teaching and patient care.

Since there were complaints that the System Integrator (SI), appointed by the Council to implement new regulations as per notification, was not being attended to properly by the medical colleges, the MCI sent a circular to the deans of all the medical colleges in India mentioning that if the representatives of SI are turned away without any valid reason, the college would have to pay the additional visiting charges (`80,000 per visit) besides attracting breach of provisions of the regulation.

Ahead of the visit of SI to conduct a survey for implementing the new regulations at the Madurai Government Medical College on August 16, the TNGDA opposed the installation of CCTV cameras in the classrooms in all the medical colleges in Tamil Nadu. “Tracking faculties using cameras is a violation of human rights, and this will affect the privacy of both teachers and students. We will move the court against the new regulations of the MCI,” said Dr K Senthil, president of the Association.

Blaming the biometric attendance system, Senthil said, “Faculties are refused their vacation, allocated to them, based on the biometric attendance. Unlike faculties in Engineering or Arts and Science colleges, we have to teach students and treat the patients round the clock. Hence, emphasising that they work without a break is unfair. This will also be taken to court.”

தி இந்து: தலையங்கம்:: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும்
கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை

எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.

மனிதர்களைத் தொடர்ந்து மாடுகளுக்கும் "ஆதார்!!!

மனிதர்களுக்கு தனி நபர் அடையாள   அட்டை (ஆதார்) வழங்குவதைப் போலவே மாடுகளுக்கும் தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

பொறியியல் கலந்தாய்வு : 50%இடங்கள் நிரம்பவில்லை!



பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் 50%
இடங்கள் காலியாகவே உள்ளன.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 1 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட்டாலும் தற்போது செயல்பட்டு வரும் 527 கல்லூரிகளில் 1.89 லட்சம் இடங்களுக்கு, 1,41,077 பேர் விண்ணப்பித்தனர்.

இவர்களில் கடந்த ஜூலை-23 ஆம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வுக்கு 1,08,690 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 70,741 பேர் மட்டுமே தங்களுக்கான இடங்களைத் தேர்வுசெய்துள்ளனர். முக்கியமாக, 37,468 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இதனால், 1,04, 715 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் 50% பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டக் கலந்தாய்வு வரும் 11-ம் தேதியுடன் முடிகிறது. துணைக் கலந்தாய்வுக்காக ஆகஸ்ட் 16 அன்று விண்ணப்பிக்கலாம். துணைக் கலந்தாய்வு நாள் (ஏற்கனவே வராமல் போனவர்களுக்கு) ஆகஸ்ட் 17ஆம் தேதியும், ஆதிதிராவிட இனத்தவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18ஆம் தேதியும் நடத்தப்படும். ஆகஸ்ட் 18ஆம் தேதியோடு கலந்தாய்வு முடிவதால் செப்டம்பர் 1ஆம் தேதியன்று கல்லூரிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மேல்முறையீடு வழக்கு: ஆகஸ்டு 10ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்!

 ,நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதி மன்றம். தமிழக அரசின் 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. 

அதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என கூறினார்.நீட் தேர்வு குறித்து மத்திய அரசும் சிபிஎஸ்இயும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து, மாநில மொழியில் நீட் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர் என்றும் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை ஆகஸ்ட் 10ம்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வு தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தும், அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வில் இருந்து, தமிழக மாணவர்கள் விலக்குபெறும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அந்த அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை மீண்டும் தாமதமாகி வருகிறது.

நீட் அவசர சட்டத்துக்கு தமிழக அரசு ஆலோசனை பெறவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுவக்கீல் 'பகீர்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை கேட்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லியிலேயே முகாமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரையும் தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்பட்டது.ஆனால் நீட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது.

ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என குண்டை தூக்கிப் போட்டார்.இதனால் நீட் அவசர சட்டம் பற்றி தமிழக மக்களுக்கு பொய்யான தகவலை தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.இந்த நீட் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

State govt has no power to decide on citizenship, MCI tells high court

DH News Service, Bengaluru, Jul 7 2017, 1:26 IST




The Medical Council of India (MCI) on Thursday informed the High Court of Karnataka that the state government does not have the powers to decide on the citizenship-related issues with regard to including Overseas Citizens of India (OCI) students under the NRI quota for medical admissions.

The state government, in the previous hearing, had said that OCIs have already been included under the definition of Persons of Indian Origin (PIO) and NRIs.

Advocate N Khetty, representing MCI, submitted to the court that there is a 2009 notification by the Union government which allows even a foreign national to fly to India and write the medical entrance exam and get a medical seat. But the NRI quota, which has been created through a Supreme Court direction, does not come under the statute. Hence, OCIs cannot be included under the NRI quota. These submissions were made with regard to a batch of petitions filed by OCI students who have challenged Rule 5 of the Karnataka Selection of Candidates for Admission to Government Seats in Professional Educational Institutions Rules, 2006.

The rule restrains OCIs from applying for government seats. It states: ‘No candidate is eligible for admission to government seats unless he is a citizen of India’.

SC asks Centre if OCIs eligible to get K'taka govt seats

DH News Service, New Delhi, Jul 30 2017, 1:22 IST

Supreme Court has asked the Union government to explain if Overseas Citizens of India (OCI), who have cleared NEET 2017, are entitled to admission on government seats in MBBS/BDS courses in medical colleges in Karnataka.

A bench of Justices Dipak Misra and A M Khanwilkar granted time till Monday to Additional Solicitor General P S Narasimha to take instructions on the issue.

A group of candidates, who are OCI card-holders and have passed NEET, approached the Supreme Court, challenging the Karnataka high court's judgement of July 7.

The high court had held that such candidates were not eligible to be considered under the category of government seats in view of a clear bar under government rules. The Union government's rules stated that no candidate would be eligible for admission to government seats unless he is a citizen of India.

It had rejected the candidates' plea that the rule was arbitrary and violative of Article 14 (equality) of the Constitution.

The OCI card-holders under Section 7A of the Citizenship Act, 1955 are entitled to be treated on par with Non-Resident Indians, the high court had held. It directed for considering their admission in various categories, other than government seats, if they were eligible under the rules.

The Karnataka government has also maintained that these candidates were eligible for admission only under the NRI quota. According to rules framed by the state government, only Indian citizens were eligible to apply for government seats, it said.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...