Thursday, August 10, 2017

ஏர் இந்தியா விமானம் டெக்ரானில் தரையிறக்கம்
2017-08-10@ 00:10:15


புதுடெல்லி: பிராங்பர்டிலிருந்து டெல்லிக்கு 249 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அதன் முன்பகுதி ஜன்னலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அவசர அவசரமாக டெக்ரானில் தரையிறக்கப்பட்டது.ஏர் இந்தியா விமானம் பிராங்பர்டிலிருந்து நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, விமானத்தின் முன்பகுதி ஜன்னலில் விரிசல் இருந்ததை விமானி கவனித்தார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விமானத்தை உடனே டெக்ரானில் தரையிறக்கினார். காலை 6.20 மணிக்கு 249 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மும்பையிலிருந்து மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு, பயணிகள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

செல்வத்துப் பயனே ஈதல்!

 செல்வத்துப் பயனே ஈதல்! DINAMANI  10.12.2025  "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி. ஆனாலும், தாங்கள் தே...