Thursday, August 10, 2017


ஸ்ரீவில்லிபுத்தூரில் பரவும் காய்ச்சல் : உஷாராகுமா சுகாதாரத்துறை

பதிவு செய்த நாள்09ஆக
2017
23:54


ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இந்நகரில் கோவிந்தன் நகர் காலனி, ரைட்டன்பட்டி, அசோக்நகர் பகுதிகளை சேர்ந்த சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, டெங்கு அறிகுறியாக காணப்பட்டது. இதையடுத்து சிவகாசி தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

நகரில் நிலவும் சுகாதாரக்கேடு ஒருபுறம் இருந்தாலும், 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் குடிநீர் சப்ளையால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைக்கும் தண்ணீரில், சில நாட்களிலேயே ஒருவித வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுத்து, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்
என்பது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கிடையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும். பிளாஸ்டிக் டிரம்களை நன்றாக சுத்தம் செய்து, அதில் தண்ணீரை சேமித்து மூடி வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி
உள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...