Thursday, August 31, 2017

Bakrid holiday tomorrow

Dakshina Kannada district in-charge Minister B. Ramanath Rai has said that the government has declared holiday on Friday in Dakshina Kannada and Udupi districts since Bakrid will be celebrated on that day.
While the official holiday was on September 2, the State Cabinet has agreed to shift it to September 1 for the twin districts. Saturday will be a normal working day, he added.

HC stays GO on medical seat vacancy

‘Order affects 50% ceiling on quota’

A division bench of Hyderabad High Court comprising Justice V. Ramasubramanian and Justice T. Rajani on Wednesday stayed the operation of an AP Government Order which mandates filling of vacancy of medical seat by students from reserved category only if the vacancy arises due to decision of the students from reserved category to move to the seat which they got in open category.
The bench stayed GO Ms 550 para 5(2) while dealing with a case filed by Harshvardhan and others. The petitioners said that some reserved category students got good marks in NEET and were allotted seat falling in open category (non-reserved). The petitioners made it clear that they cannot complain as these students got good ranks in NEET. Later these students opted to move to another college in a different town and the seats which were allotted to them in the first round fell vacant. Now the issue is whether this seat can be filled by any student based on NEET rank or with students from reserved category only. The petitioners contended that this seat in open category must be thrown open to all. They complained that the GO says such seats be filled by only students from reserved category as they fell vacant as the students from reserved category chose other better options. The bench felt that due to the GO the 50 percent ceiling on reservations may be effected. The case is adjourned to September 18.

Now, medical seats in Karnataka at a discount

Vacancies under NRI/management quota go abegging

The year’s biggest clearance sale is under way. No, it’s not electronic items on Amazon or Flipkart, but medical seats under the NRI and management quota in Karnataka private colleges.
With Thursday being the last day to complete admissions in accordance with the deadline set by the Medical Council of India, these coveted seats, for which candidates would shell out anywhere between Rs. 22 lakh to Rs. 41.98 lakh per year, are now being sold at a hefty 40% discount.
Last year, they were sold for a maximum of Rs. 1.3 crore for the entire duration of the course (4.5 years). At the start of the 2017-18 admission season, they were priced at a maximum of Rs. 1.88 crore.
Common counselling
However, there were few takers, with as many as 676 of the total 773 seats in this category remaining vacant even after the mop-up round.
Officials believe this is a result of demonetisation. What’s more, this is the first time that management and NRI seats were allotted through a common counselling process by the Karnataka Examinations Authority, based on the National Eligibility-cum- Entrance Test (NEET) scores.
Compare this with other category seats: barring 20 spots, all the affordable seats in government medical colleges and government quota and private seats in private medical colleges that cost Rs. 16,700, Rs. 77,000 and Rs. 6.32 lakh respectively have been snapped up.
As per the orders of the Supreme Court, the vacant NRI and management quota seats were handed over to the respective institutions with a list of unallotted candidates in the order of merit in the ratio of 10 candidates for each vacancy.
In a hurry
M.R. Jayaram, president of the Karnataka Professional Colleges Foundation, said that managements were in a hurry to fill these seats by Thursday.
“Several seats are going abegging. We got them only late on Tuesday evening. So we have just about two days to ensure that they are filled. Despite the discounts, we are certain that all may not be filled,” Mr. Jayaram said.
However, parents and medical seat aspirants are crying foul as they feel that the college managements have already “fixed deals” prior to the admission process.
Parent upset
A parent of a candidate who failed to obtain a seat as she did not have a good NEET score said, “We did not pick a seat in a medical college and chose an engineering seat as the fees under the other quota was Rs. 42 lakh per annum. The same seats are now available for Rs. 30 lakh per annum. Had we known this earlier, we would have waited for this round.”
Medical Education Department officials said they would inquire into the matter and warned that colleges had to first exhaust the merit list given to them before admitting other candidates.

Bird hit grounds IndiGo passengers

Airline officials accused of not being cooperative

IndiGo passengers travelling by the 7.55 a.m. flight from Visakhapatnam to Bengaluru faced some problems after the flight suffered a bird hit and was grounded on Wednesday at Visakhapatnam airport.
“The flight crossed nearly one-third of the runway, when the pilot applied sudden brake. An in-flight announcement was made that there was a bird hit on the left side. The problem was checked and we were told that the flight would take off in about half-an-hour. But after some discussions, the airline officials decided that the flight was not airworthy,” said Balakrishna Rai of Manguluru, who has settled in Visakhapatnam, and was travelling with his family.
“We were asked to disembark and were told that we would be accommodated on another flight in the evening. I told them that I had a connecting flight to Manguluru at 12.30 p.m. Though the local representatives of IndiGo were understanding and helpful, they were helpless as their bosses seemed non-cooperative. Finally, the airline requisitioned a flight from Delhi and it departed at 3.45 p.m. We missed our connecting flight and I had to shell out Rs. 13,000 for the flight from Bengaluru to Manguluru,” he told The Hindu from Bengaluru on Wednesday evening.
Fully booked
All the 180 seats on the flight were booked and some of the passengers had connecting flights to various destinations from Bengaluru.
Many of the stranded passengers approached the IndiGo representatives at the airport and sought that they be accommodated on the IndiGo flight to Chennai.
While some passengers agreed to cancel their tickets, those who had connecting flights insisted on being accommodated on the flight to Chennai that was scheduled to depart at 10.30 a.m. and on an onward flight to Bengaluru as their tickets were already reserved on connecting flights, according to sources.
Stranded passengers said that a representative of the airline initially agreed to help them out. But after talking to his higher ups on the phone, he expressed helplessness.
He told them that they could be accommodated only on the evening flight to Bengaluru.
Helpless
Those who had connecting flights agreed to pay for the flight from Chennai to Bengaluru, but the airline representative expressed helplessness.
The airline failed to accommodate them on the Chennai flight though he had to catch a flight from Bengaluru in the afternoon, according to Srinivas of Vizag, who was going to London along with his family.
Attempts to reach the airline officials was futile, as there was no response on the phone.
Though the local representatives of IndiGo were understanding and helpful, they were helpless as their bosses seemed non-cooperative
Balakrishna Rai
A passenger
96 MBBS seats remain vacant in 3 private medical colleges in Puducherry

TNN | Aug 31, 2017, 00:13 IST

Puducherry: As many as 96 MBBS seats remained vacant in three private medical colleges and hospitals in Puducherry after the mop-up counselling conducted by the centralized admission committee (Centac).

Sri Manakula Vinayagar medical college and Sri Venkateswaraa medical college reported vacancy of 37 seats each, while 22 seats remained vacant in Pondicherry institute of medical sciences.

The committee allotted 247 seats under management quota (52 seats were converted from non-resident Indian quota) and 17 seats under NRI quota (including six seats in Indira Gandhi medical college and research institute, IGMC & RI). The committee reserved six seats(three in IGMC & RI and one each in Pims, SMVMC and SVMC). Four students surrendered their seats.

The committee received 148 demand drafts towards fees from the students and handed them over to the colleges concerned. It sought the colleges to submit the vacancy details so that it can send the merit list of students in the ratio of 1:10 to the colleges.
'அரசு ,மீது, நம்பிக்கை, ஓட்டெடுப்பை ,நடத்த, கவர்னர், மறுப்பு
நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட முடியாது' என,கவர்னர் வித்யாசாகர் ராவ், திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ஏமாற்றமடைந்த எதிர்க் கட்சிகள், இன்று டில்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளன.





முன்னாள் முதல்வர், ஜெ., இறப்புக்குப் பின், மூன்றணிகளாக இருந்த, அ.தி.மு.க., இப்போது, பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக உள்ளது. ஆட்சியைப் பிடிக்க, தினகரன், தீவிரமாக முயன்று வருகிறார்.

'முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என, தினகரன் அணியைச் சேர்ந்த, 19 எம்.எல். ஏ.,க்கள், சமீபத்தில், கவர்னரிடம் கடிதம் அளித்தனர்.அதையடுத்து, 'சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., காங்., முஸ்லிம் லீக் தலைவர்கள், கவர்னர் வித்யசாகர் ராவை சந்தித்து வலியுறுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை, ராஜ்பவனில், கவர்னர் வித்யாசாகர் ராவை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். 'சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு,

முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்' என்று அவர்களும், கவர்னரிடம் வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க, கவர்னர் மறுத்து விட்டதாக, அக்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

திருமாவளவன்: தினகரன் ஆதரவு, எம்.எல். ஏ.,க்கள், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத் தெரி வித்துள்ளனர். எனவே,'சட்டசபையை, உடனே கூட்ட வேண்டும்' என, வலியுறுத்தினோம்.

அதற்கு கவர்னர், 'தற்போதைய சூழலில், சட்டப்படி நடவடிக்கைஎடுக்க முடியாது. அ.தி. மு.க., இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. 19 எம்.எல்.ஏ.,க்களும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள னரே தவிர, கட்சித் தாவலில் ஈடுபடவில்லை. 'எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை நீக்குவதாக, கட்சி யும் அறிவிக்கவில்லை. எனவே அவர்களும், அ.தி.மு.க.,வினர் என்றே கருத வேண்டியது உள்ளது என்பதால், இதில் நான் தலையிட முடியாது' என, கூறி விட்டார்.

முத்தரசன்: இங்கே நடந்தது போல் ஒரு பிரச்னை, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி யில் நடந்திருந்தால், அங்குள்ள கவர்னர்கள், வேறு விதமாக கையாண்டிருப்பர். தமிழகத் தில், ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டி ருக்கிறது. இதை, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஜவாஹிருல்லா: 'இதில், நான் தலையிட முடியாது' என, கவர்னர் கூறினார். 'நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாங்கள் கூறினோம். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டியது, கவர்னரின் கடமை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவர்னரின் நடவடிக்கை, அ.தி.மு.க.,வுக்கு ,தண்டனை அளிப்பது போல் இருக்கும் என்றும் அவர்களுக்குள் பிளவு வலுப்படும் என்றும் கருதி இருந்த, எதிர்க்கட்சியினர், நேற்றைய அரசியல் நகர்வால், அதிருப்தி அடைந்தன. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், எம்.பி.,க்கள், இன்று டில்லி யில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து முறையிட முடிவு செய்து உள்ளனர்.

எம்.எல்.ஏ.,க்களுக்குபழனிசாமி திடீர் அழைப்பு!

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், முதல்வர் பழனிசாமி, திடீர் அழைப்பு விடுத்து உள்ளார்.அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனி சாமி, பன்னீர்செல்வம் அணிகள், ஒன்றாக இணைந்தன. இதற்கு, தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு, 21 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு அளித்துள்ளனர். குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், சசிகலா, தினகரன் இருவரையும், கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த கூட்டத்தில், எதிர்பார்த்த அளவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை; 80 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே பங்கேற்றனர். அதனால், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரையும் அழைத்து, அவர்களிடம் பேச, முதல்வர் திட்டமிட்டுள் ளார். அதற்காக, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் இன்று சென்னை வரும்படி தகவல் அனுப்பப் பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட அமைச்சர் முன் னிலையில், எம்.எல்.ஏ.,க்களிடம் ஆலோசனை நடத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், முதல்வர் முடிவுசெய்துள்ள தாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
அர்ச்சகர் இன்றி சன்னதிகள் மூடல் : ராமேஸ்வரம் பக்தர்கள் அதிருப்தி
பதிவு செய்த நாள்30ஆக
2017
21:10




ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அர்ச்சகர் இன்றி, பல சன்னதிகள் மூடிக் கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். புனித தலமான ராமேஸ்வரம் கோவிலில், அக்னி தீர்த்தம், 22 தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி, இக்கோவிலுக்கு தினமும் நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கோவிலில் அர்ச்சகர்கள், மணியம், காவலர் உள்ளிட்ட, 80 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது, 30 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், பல சன்னதிகளில் அர்ச்சகர் இன்றி நிரந்தரமாக மூடியே உள்ளது. மேலும், பள்ளி கொண்ட பெருமாள், காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி சன்னதி திறந்திருந்தாலும், உயர் அதிகாரிகள் வந்து சென்றதும், நடை மூடுவதற்கு முன், இச்சன்னதிகளை அர்ச்சகர்கள் மூடி செல்கின்றனர். 

இதே போல், கோவில் காவலர்கள், பாதுகாப்பில் ஈடுபடாமல் சொந்த அலுவல்களை கவனிப்பதாக புகார் உள்ளது. இதனால், தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர்.

ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்,''அர்ச்சகர், மணியம் உள்ளிட்ட, 32 பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலைய ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ''விரைவில், ஊழியர்கள்நியமித்து சன்னதிகள் திறந்து பூஜைகள் நடத்தப்படும். சன்னதியில் பணி நேரத்தில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பாலியல் பலாத்காரம் : ஆசிரியருக்கு சிறை
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:06

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேலஉரப்பனுார் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தவர் பவுன்ராஜ்,41. அப்பள்ளியில் படித்த ஒரு மாணவி, 2008ல் அங்குள்ள நுாலக அறையை சுத்தம் செய்தார். பவுன்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததில், அம்மாணவி கர்ப்பமுற்றார். பெண் குழந்தை பிறந்தது. திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பவுன்ராஜிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கோமதி ஜெயம் உத்தரவிட்டார்.
நோயால் இறந்த ஆடுகளின் இறைச்சி: 'ஆந்த்ராக்ஸ்' தாக்கும் அபாயம்
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:19

விருதுநகர்: நோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவதால், 'ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்கும் அபாயம் உள்ளது. செப்டம்பரில் ஆடுகளை பொதுவாக அடைப்பான் எனும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கும். இந்நோயால் இறந்த ஆட்டின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறையாமல் இருக்கும். இந்த ரத்தத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கும். காயம் ஏற்பட்ட மனிதர் களின் காயப்பகுதியில் உறையாத ரத்தம் தெரித்தால், அவர்களையும் கிருமி தாக்கும். மேலும், இந்நோயால் இறந்த ஆட்டுஇறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அதிகம்.
விருதுநகர் உட்பட சில மாவட்டங்களில் ஆடு வதைக்கூடம் செயல்படாமல் உள்ளன. பாதுகாப்பு, மருத்துவ சோதனை, கண்காணிப்பு போன்றவை இல்லாமல் நினைத்த இடத்தில் ஆடுகளை வெட்டி, இறைச்சி விற்பனை நடக்கிறது. இதில், நோயால் இறந்த ஆடுகளை விற்கும் அபாயம் இருப்பதால் அசைவ பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி யில் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அடைப்பான் நோய் பாதிப்பு இருந்தது. அதற்கான ஊசிகள் போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தாண்டு இப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரு மாதம் முன்னரே தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.அடைப்பான் நோய் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். கழுத்தில் கட்டி இருக்கும். மூக்கு, ஆசன வாயில் ரத்தம் வெளியேறும். இந்த ரத்தம் உறையாமலும் இருக்கும். இது போன்ற அறிகுறிகள் இருந்து, இறந்த ஆடுகளின் உடலை கால்நடை டாக்டர்கள் ஆலோசனைப்படி புதைக்க வேண்டும். இதுபோன்ற நோய் தாக்கி இறந்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்டால், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
ரேஷன் கார்டு வகை மாற்றம் : இணையதளத்தில் குழப்பம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:01


ரேஷன் கார்டுகள், வகை மாற்றம் செய்த நிலையில், பொது வினியோக திட்ட இணையதளத்தில், பழைய விபரங்களே இருப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத கார்டு என, பல வகைகளில், ரேஷன் கார்டுகள் இருந்தன. உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது, ரேஷன் கார்டுகள், 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை' என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப, வழக்கம் போல உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. ஆனால், பொது வினியோக திட்டத்தின் இணையதளத்தில், ரேஷன் கார்டுகளின் புதிய வகையை வெளியிடாமல், அரிசி, சர்க்கரை கார்டு என, பழைய விபரங்களே உள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு வகைகள், எதற்காக அந்த பெயர் வந்தது உள்ளிட்ட விபரங்கள், மென்பொருள் வடிவில் தயாராக உள்ளன. அவை, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிந்த பின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்' என்றார்.

- நமது நிருபர் -
மாணவருக்கு கல்வி கடன் தந்த வங்கிகள் : ஆபீசுக்கு போன் செய்து மிரட்டும் அவலம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:00

கல்விக் கடன் பெற்றவர்களின் அலுவலகத்திற்கு போன் செய்து, கடனை திருப்பிச் செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிப்பு முடிந்து, ஒன்றரை ஆண்டு வரை, தவணை செலுத்த அவகாசம் தரப்படுகிறது. பலருக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைப்பதில்லை.

சொற்ப ஊதியம் : சிலருக்கு வேலை கிடைத்தாலும், சொற்ப ஊதியம் தான் கிடைக்கிறது. அதனால், குறித்த காலத்தில், அவர்களால் கடன் தவணை செலுத்த முடிவதில்லை.

இதற்கிடையே, மாணவர்களிடம் கடனை வசூலிக்க, ஒரு தனியார் நிறுவனத்தை, பாரத ஸ்டேட் வங்கி நியமித்துள்ளது. அவர்கள், கந்து வட்டிக்காரர்கள் போல் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில், அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்து, கடனை செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது: அரியலுார், ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, சென்னையில், 2011 - 2014 வரை, எம்.சி.ஏ., படித்தேன். சில மாதங்களாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

தொல்லை : நான் பணிபுரியும் அலுவலக தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த, அந்த தனியார் நிறுவன ஊழியர்கள், என் அதிகாரிகளிடம், நான் கடன்பட்டிருப்பதை கூறி, தொல்லை தருகின்றனர்.சில தினங்களுக்கு முன், என் நிறுவன மேலாண் இயக்குனரின் மொபைல் போனில் பேசி, நான் கடன் வாங்கிய விபரத்தை கூறியுள்ளனர். 'அடுத்த முறை அழைப்பு வந்தால், வேலையை விட்டு நீக்கி விடுவோம்' என, அலுவலகத்தில் கூறிவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கடன் கேட்டு நச்சரித்த, கடன் வசூல் தனியார் நிறுவன அலுவலர், நெடுஞ்செழியன் கூறுகையில், ''அந்த இளைஞர், ஒரு தவணை கூட செலுத்தவில்லை. மொபைல் போனை எடுக்காததால், அலுவலகம் வழியாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என்றார்.

- நமது நிருபர் -
இணையதளத்தில்ஆவணங்கள் தொலைந்ததற்கான சான்று

பதிவு செய்த நாள்31ஆக
2017
00:18

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஆவணங்கள், வாகனங்கள் தொலைந்து போனால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்படும். அதற்கான சான்றுகளை இணையதளத்தில் புகார்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காவல்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புகார் கொடுத்தால், எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன் லைனில் புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் விபத்து வழக்குகளில், காப்பீடு நிறுவனங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில்இருந்து வழங்கப்படும் சான்றை பெற்றுத் தர வேண்டும். ஆவணங்கள் தொலைந்து போனால், ஆவணங்கள் தொலைந்தது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் மனு குறித்த ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் புகார்தாரர்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் காவல் துறையினரால் அமல்படுத்தப்படுகிறது.இதனால் புகார்தாரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியதில்லை.
57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
22:44

தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 728 பேர், அரசு வேலைவாய்ப்பு கேட்டு, பதிவு செய்துள்ளனர். 18 - 23 வயது வரையிலான பிரிவில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 681 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், 24 - 35 வயதுக்கு உட்பட்ட, 31 லட்சத்து, 6 ஆயிரத்து, 154 பேர்; 35 - 56 வயதுக்கு உட்பட்ட, 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 837 பேர், அரசு வேலை வாய்ப்பகங்களில், பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருக்கும், 84 லட்சத்து, 64 ஆயிரத்து, 136 பேரில், 5,736 பேர், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


எச்சரிக்கை!தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு பலத்த மழை...
3 நாள் கொட்டி தீர்க்கும் என ஆய்வு மையம் கணிப்பு

புதுடில்லி: தமிழகம், கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட, நாட்டின், 12 மாநிலங் களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் என, நாடு முழுவதும், 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப் பெருக்கு

பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு கள், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, இந்திய வானிமை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை தொடரும். சில இடங்க ளில், கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீர் நிலைகள்

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.மஹாராஷ்டிரா வின் பல பகுதிகள், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில், நேற்று, 19 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் மழை தொடரும் பட்சத்தில், இந்த மாநிலங் களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தமிழகம், கர்நாடகா உட்பட, 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, கன, மிக கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை!

ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எந்தெந்த ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது என்பது குறித்தும், ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்யும் கன மழையால், ம.பி., ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாயும், மாஹி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அந்த மாநிலங்களின் பல.

மாவட் டங்களில், கடும் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உள்ளது.சபர்மதி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குஜராத், ராஜஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தலாம்நர்மதை, தாபி நதியில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், ஏழு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளா கலாம்.

குஜராத்தின் வல்சாட், டாமன் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கோதாவரி, இந்திராவதி ஆறுகளில் மிதமான வெள்ளம் ஏற்படும்; இதன் மூலம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள, 10 மாவட் டங்கள் பாதிக்கப்படலாம்.

கிருஷ்ணா, துங்க பத்ரா ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், கோலாப்பூர், புனே, சோலாப்பூர் மாவட்டங் களுக்கும், கர்நாடகா வின், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக் கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கன மழையால், காவிரியாற்றில், வெள்ளப் பெருக்க ஏற்பட்டு, கர்நாடகாவின் காவிரி கரை யோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தலாம்.
தமிழகத்தின், பவானி ஆற்றில் மிதமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு, கன மழை பெய்தாலும், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப் பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெய்வது எங்கே?

ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங் களிலும்,டையூ,டாமன் யூனியன் பிரதேசங் களிலும்,இன்று முதல் கன, மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைப் பொழிவு, 3 நாட் களுக்கு தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.
மும்பையில் கனமழை எதிரொலி: விமானிகள் வராததால் விமான போக்குவரத்து பாதிப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
19:29




மும்பையில் பெய்து வரும் கனமழையால் விமானிகள் வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் விமானிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்து சேர முடியாத காரணத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் காலதாமதமாக சென்றன. தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 19 விமானங்களை இன்று (ஆக.,30) ரத்து செய்தது. சில சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.
எம்.பி.பி.எஸ் :பொது பிரிவு கலந்தாய்வு முடிவு

பதிவு செய்த நாள்30ஆக
2017
20:18


சென்னை: மருத்துபடிப்பிற்கான பொது பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 3,686 இடங்கள் நிரம்பியது. இது குறித்து கூறப்படுவதாவது: மொத்தம் உள்ள 3,686 இடங்களில் அரசு கல்லூரியில் 2, 650 இடங்களும் தனியார் கல்லூரியில் 808 இடங்களும் ஈஎஸ்ஐ கல்லூரியில் 72 இடங்களும் நிரம்பியது. பல் மருத்து பிரிவில் அரசு கல்லூரியில் 156 இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரியில் உள்ள 860 இடங்களில் 185 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளுவேல் விளையாட்டுக்கு இன்னொரு பலி: மதுரையில் மாணவர் தற்கொலை
பதிவு செய்த நாள்
ஆக 30,2017 21:48

திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.
இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார். 

வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று
எழுதியிருப்பதை கண்டறிந்தனர்.




இன்றைய இளைஞர்களின் உயிரை வாங்கும் 'புளூவேல்' 'கேம்'மை விக்கி தொடர்ந்து விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது. தாய் டெய்சியும் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருந்த விக்கி, தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஏற்கனவே சில மாநிலங்களில் இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மதுரையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனையான விஷயம். இந்த 'கேம்' குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் தான் உயிர் பலியை தடுக்க முடியும்

புளூவேல் - ரெட் அலர்ட்

'ஸ்மார்ட் போன்' குறித்து அதிகம் தெரியாத பெற்றோர்கள் 'புளூவேல்' கேம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த 50 நாள் 'சேலேன்ஜ் கேம்' ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. போனில் 'இன்ஸ்டால்' செய்ததும் விளையாடலாம்.

விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. 

ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த 'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும். 'கேம்'மில் டாஸ்க் செல்லும் 'மேப்' நீல திமிங்கலம் வடிவத்தில் இருப்பதால், இதற்கு 'புளூவேல்' என்று பெயர் வைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்களை 'ஹேக்' செய்யக் கூடிய நபர்களால் இந்த கேம் இயக்கப்படுவதால் தான், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இந்த 'கேம்'மை விளையாடாமல் தவிர்க்க வேண்டும்.
“மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்” கலெக்டர் ரோகிணி அறிவுரை


“டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்“ என்று கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார்.

ஆகஸ்ட் 30, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வந்தாலும், 15-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நர்சிங் விடுதி மாணவிகளுக்கும் சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு குணப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கலெக்டர் ரோகிணி ரா.பாஜிபாகரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்கள் உடன் வந்திருந்தவர்களிடம் மருத்துவமனையில் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். மேலும், அந்த குழந்தைகளின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அங்கு ஒரே படுக்கையில் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுவரும் 2 குழந்தைகளை எக்காரணம் கொண்டும் ஒரே படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதி பகுதிக்கு சென்று சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அதிக அளவில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவரும் நபர்கள் டீ கப்புகள், சிரட்டைகளை ஆங்காங்கே வீசி எறிந்து சென்றுள்ளதை கண்டார்.

உடனே கலெக்டர் ரோகிணி அவற்றை கையில் எடுத்து அப்புறப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் இதுபோன்ற பொருட்களை ஆங்காங்கே வீசக்கூடாது என அறிவுறுத்தினார். மேலும் வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்க கலெக்டர் ரோகிணி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், குப்பைகளால் நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக கூடுதல் பணியாளர்களை கொண்டு மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணியினை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சேலம் அரசு கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் டெங்கு குறித்து ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரிடம் எடுத்து கூறி சேலம் மாவட்டத்தை காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஒவ்வொரு மாணவியும் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், துணை இயக்குனர் (சுகாதாரம்) பூங்கொடி மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.
ரே‌ஷன் கடைகளில் நாளை முதல் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பொருட்கள் வினியோகம்


ரே‌ஷன் கடைகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஸ்மார்ட் கார்டு மூலமாக பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31, 2017, 04:15 AM

சென்னை,

தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமி‌ஷனர், அனைத்து மாவட்டம்(சென்னை நீங்கலாக) உணவு பொருட்கள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள்(ஸ்மார்ட் கார்டு) பெற்றவர்களுக்கு மின்னணு அட்டை மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல அலுவலகம் / வட்ட அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நியாயவிலை கடைகளுக்கு (ரே‌ஷன் கடைகள்) அனுப்பப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள மின்னணு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்.இதுவரையில் தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே 1–ந் தேதி (நாளை) முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும், மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டை மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மும்பையில் கனமழைக்கு 8 பேர் பலி வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது


மும்பையில் பெய்த கன மழைக்கு 8 பேர் பலியானார்கள். தற்போது வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது.

ஆகஸ்ட் 31, 2017, 05:00 AM
மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை கொட்டியது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் மும்பையில் 316 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதனால் நகரில் உள்ள எல்லா சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. தண்டவாளங்கள் மழைநீரில் மறைந்தன. எனவே ரெயில், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர். ரெயில், பஸ்களில் நடுவழியில் சிக்கிய மக்கள் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் அதிலேயே இருக்க வேண்டிய அவலமும் அரங்கேறின.

8 பேர் சாவு

மும்பையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், மரம் முறிந்து விழுந்தும் மொத்தம் 8 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. டாக்டர் உள்பட 13 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள்.

சாலைகள், தண்டவாளங்களில் தேங்கிய வெள்ளநீரை வடிய வைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியினர் நேற்று முன்தினம் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும் நேற்று அதிகாலை 2 மணிக்கு பிறகே கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஓரளவு சீராக தொடங்கியது. எனினும் நேற்று காலை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே இதை சமாளிக்க சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது

வெள்ளம் வடிந்து வருவதால் மத்திய ரெயில்வேயில் ரெயில் போக்குவரத்து நேற்று மதியத்திற்கு பிறகே தொடங்கியது. மேற்கு ரெயில்வேயில் காலை முதலே ரெயில் சேவை தொடங்கியது. பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து நேற்று மும்பையில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் வானிலை ஆய்வு மையம் மீண்டும் பலத்த மழை பெய்யும் என அறிவித்து இருந்ததால் நேற்று பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

பள்ளி, கல்லூரிகள் தவிர பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வாய்ப்பு இல்லை’ ராஜ்நாத்சிங் திட்டவட்டம்


தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் 31, 2017, 05:15 AM
புதுடெல்லி,


தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய மந்திரிகளை சந்தித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டாக்டர் மைத்ரேயன் எம்.பி. மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர், தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமான சந்திப்பு

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிதியை உடனே விடுவிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அமைச்சர்கள், நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தினர். தற்போது மரியாதை நிமித்தமாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்தோம்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக்கொண்டு, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை பெற போராடி வருகிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் பிரச்சினையாகிவிட்டது. மீண்டும் அதற்கு ஒரு நல்ல முடிவு காண நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சி கலைப்பு இல்லை

இதற்கிடையே மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்குடன் நடந்த சந்திப்பின்போது, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அமைச்சர்களிடம், ‘தமிழகத்தில் ஆட்சியை கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை’ என்று ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முகாந்திரம் இல்லை

மேலும், ‘அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் முதல்- அமைச்சர் மீது தான் நம்பிக்கை இல்லை என்று கூறி யிருக்கிறார்கள். முதல்- அமைச்சர் யார்? என்பதை எம்.எல்.ஏ.க்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் கவர்னர் எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சியின் உள் விவகாரங்களில் கவர்னர் தலையிட முடியாது. எனவே, ஆட்சியை கலைப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை‘ என்று அமைச்சர்களிடம் அவர் உறுதிபட தெரிவித்துள்ளதாக கூறப்படு கிறது.

‘நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அதற்காக சபாநாயகரை தான் சந்திக்க வேண்டும். கவர்னரையும், ஜனாதிபதியையும் ஏன் சந்திக்கிறார்கள்? என்று புரியவில்லை’ என்றும் ராஜ்நாத்சிங் கூறியதாக தெரிகிறது.

தலையங்கம்

வாகன ஓட்டிகளை இது பாதிக்கும்



பொதுவாக அரசு பிறப்பிக்கும் எந்தவித சட்டம் என்றாலும் சரி, எந்தவித உத்தரவு என்றாலும் சரி, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மக்கள் விரும்பத்தக்கதாகவும், எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

ஆகஸ்ட் 31 2017, 03:00 AM

பொதுவாக அரசு பிறப்பிக்கும் எந்தவித சட்டம் என்றாலும் சரி, எந்தவித உத்தரவு என்றாலும் சரி, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், மக்கள் விரும்பத்தக்கதாகவும், எந்தவித சிக்கலுமின்றி அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அத்தகைய உத்தரவுகளைத்தான் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக அரசின் போக்குவரத்துத்துறை நாளை முதல் அமலுக்கு கொண்டுவரும் ஒரு உத்தரவு, எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள பஸ், லாரி, டிராக்டர், கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற அனைத்து மோட்டார் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களும் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் என்று அழைக்கப்படும் டிரைவிங் லைசென்சின் ஒரிஜினலை வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு, நகலை மட்டும் வாகனத்தில் எப்போதும் வைத்திருப்பார்கள். வழியில் போக்குவரத்து அதிகாரியோ அல்லது போக்குவரத்து போலீசாரோ சோதனை நடத்தும் நேரத்தில் அந்த நகல் உரிமத்தை அவர்களிடம் காட்டுவார்கள்.

சிலநேரம் ஏதாவது விபத்துகள் நடந்தால் அல்லது போக்குவரத்து விதிமீறல் நடந்தால், அதிகாரிகள் அந்த வாகனத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, ‘ஒரிஜினல் லைசென்சை எடுத்துக்கொண்டு வா’ என்பார்கள். இந்த முறையில் இதுவரையில் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், திடீரென போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 22–ந்தேதி பத்திரிகை நிருபர்களிடம் ஒரு அறிவிப்பை அறிவித்தார். அதாவது, செப்டம்பர் 1–ந்தேதி முதல் எல்லோரும் ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும். அப்படி வைத்திருக்கவில்லை என்றால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரிஜினல் லைசென்சு கையில் வைத்திருக்காதவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனையோ, இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வழி இருக்கிறது. மத்திய மோட்டார் வாகன சட்டத்தில்கூட இப்படி ஒருபிரிவு இல்லை. மற்ற மாநிலங்களிலும் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே மத்திய அரசாங்கம் ‘டிஜிலாக்கர்’ முறை அதாவது, இணையதள பெட்டகம் முறைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன்மூலம் டிஜிலாக்கர் ‘ஆப்’ என்று கூறப்படும் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்துகொண்டு, அந்த டிஜிலாக்கரில் நமது டிரைவிங் லைசென்சை பதிவு செய்துகொள்ளலாம். போக்குவரத்து அதிகாரிகள் அல்லது போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும்போது, செல்போனில் இருந்து அந்த லைசென்சை பதிவு இறக்கம் செய்து காட்டிக்கொள்ளலாம். அதுவே செல்லுபடியாகத்தக்கது என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இப்போது இணையதள உலகத்தில் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, இதுபோன்ற வசதிகளை பயன்படுத்தாமல், இன்னும் பழைய காலமுறைக்கு செல்லச்சொல்வது விந்தையாக இருக்கிறது. ரெயில் டிக்கெட், விமான டிக்கெட் எல்லாவற்றையுமே செல்போனில் பதிவுசெய்து அதை காட்டினால்போதும் என்ற காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுபோன்ற முறைகளை பயன்படுத்தவேண்டுமே தவிர, ஒரிஜினல் லைசென்சை எப்போதும் கையில் வைத்துக்கொள் என்றால் நிச்சயமாக சாத்தியமில்லை. மேலும் மழைகாலங்களில் இந்த லைசென்சு மழையில் நனைந்து சேதமடைய வாய்ப்பிருக்கிறது. இதுபோல தொலைந்துபோனாலும் போலீசில் புகார் செய்தாலும், ஒரு மாதம் கழித்தபிறகுதான் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை தருவார்கள். பின்னர் அதை வைத்துத்தான் டூப்ளிகேட் லைசென்சு வாங்க வழிவகை இருக்கும். இன்றைய இணையதள உலகில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, ‘பிரிண்ட் அவுட்’ எடுத்துத்தான் பயன்படுத்தி கொண்டிருக்க, அதுவே எல்லா தஸ்தாவேஜுகளுக்கும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல நிறுவனங்களில் டிரைவர்களின் ஒரிஜினல் லைசென்சை வாங்கிக்கொண்டுதான் வேலைகொடுக்கிறார்கள். அவர்களுக்கும் இது பாதிப்பு. வாகன ஓட்டிகளை இன்னலுக்குள்ளாக்கும் இந்த உத்தரவு, தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.








Wednesday, August 30, 2017

மருத்துவ மாணவர்கள் தவிப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
00:53

காரைக்குடி: ''நீட் தேர்ச்சி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தும் மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியாமல் சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தவிக்கின்றனர். தமிழக அரசின் மெத்தனத்தால் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு தள்ளி போனது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரி மற்றும்பல்கலைகளில் படித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ''நீட் தேர்வு தேர்ச்சி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்'' என உத்தரவிட்டதை தொடர்ந்து, அவசரமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று இடம் கிடைத்து சேர்க்கைக்கு செல்லும்போது, இடப்பெயர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி மருத்துவ கல்லுாரிகள் கூறி வருகின்றன.சான்றிதழுக்காக மாணவர்கள் அணுகும்போது, ''இளங்கலை முடித்த பிறகே, இடப்பெயர்ச்சி சான்றிதழ் வழங்க முடியும் என்ற நடைமுறை உள்ளது,'' எனக் கூறி பல்கலை மற்றும் கல்லுாரி நிர்வாகங்கள் திருப்பி அனுப்புகின்றன. 

இதனால், எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் இடம் கிடைத்தும் அதில் சேர முடியாமல் மாணவர்கள் அவதிப்  படுகின்றனர்.
மாணவர் ஒருவர் கூறும்போது, கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 முடித்தவுடன் இடப் பெயர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்து கல்லுாரி களில் சேர்ந்தோம். தற்போது நீட் தேர்ச்சி அடிப்படையில் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது. மருத்து கல்லுாரியில் சேர சென்றபோது, பயின்ற கல்லுாரி, பல்கலையிலிருந்து இடப்பெயர்ச்சி சான்றிதழ் வாங்கி வரும்படி கூறுகின்றனர். அவர்கள், மாற்று சான்றிதழ் மட்டுமே தர முடியும் என கூறுகின்றனர். 

தமிழக அரசு இதில் தலையிட்டு 'இடப்பெயர்ச்சி சான்றிதழ் தேவை இல்லை' என அறிவிக்க வேண்டும், என்றார்.
1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது
பதிவு செய்த நாள்29ஆக
2017
22:54

புதுடில்லி: 'ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 - 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, புழக்கத்தில் உள்ளன. இதையடுத்து, புதிதாக, 50 - 200 ரூபாய் நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாதென, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

இதற்கிடையே, விரைவில் புதிய, 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்ற வதந்தி பரவியது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க் வெளியிட்ட அறிவிப்பில், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், 1,000 ரூபாய் நோட்டு, இனி புழக்கத்தில் வராது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

5,200 med seats in TN deemed univs vacant
TNN | Updated: Aug 30, 2017, 00:06 IST

Chennai: With more than 5,200 MBBS/BDS seats left vacant across several deemed universities after three rounds of centralised counselling by the Directorate-General of Health Services (DGHS), the Supreme Court on Monday increased the time for admissions by a week to September 7.

Directorate also sent the rank list drawn up nearly 50,000 NEET qualified candidates as the apex court had said it should maintain the 1:10 ratio. In case of deficit, the universities can draw more names from the larger NEET list.

"As long as the seat which has fallen vacant, the ratio is maintained at 1:10, we do not perceive any difficulty. If the 1:10 ratio is not sufficient, the DGHS is granted liberty to get into the larger NEET list," said the order issued by a three bench judge headed by Chief Justice of India Dipak Misra.

This year, the SC made NEET mandatory for all medical and dental admissions. It also said that the admission for students to deemed universities will be done based on the NEET-based rank list drawn up by the DGHS. "This time we conducted counselling simultaneously for all India quota seats in government colleges and for deemed universities. Many students who locked deemed universities as their option did join them in all the three rounds probably because they got admissions elsewhere or felt it was too expensive," said a senior official in DGHS.

On Monday, the DGHS announced that there were 5,226 seats vacant in colleges across the country, including 947 in the state. The central body conducted two rounds of counselling and one mop-up session. While across the country there was a 30% reduction in seats, only 20% seats were taken from colleges in Tamil Nadu.

Sree Balaji Medical College had 206 or the 250 seats vacant. While 42 seats from the management quota were taken away, the seats in NRI quota remained untouched. At the ACS Medical College 146 of the 150 seats were vacant. While four seats from the management quota were taken, here too seats in NRI quota remained untouched. There were 130 in Meenakshi Medical College, 127 seats in Chettinad Medical College and Research Institute, 98 seats in SRM medical college, 76 seats in Sri Ramachandra University and 77 seats in Saveetha Medical College.

Most colleges said they would call for applications from interested candidates. "Rank list will be drawn from the applicants. Toppers whose names all figure in all India merit are eligible to apply," a senior official from Sri Ramachandra University said.


‘Schools force students to attend MGR function, blame govt’

TNN | Updated: Aug 30, 2017, 00:09 IST


Chennai: Hundreds of students will be missing out on classes today, to instead languish at the VGP grounds at Kanchipuram through the day. Several schoolsthat come under Kanchipuram district, have been allegedly forced to bring their students to the venue to partake in the state-sponsored MGR centenary functions. In a move viewed as a show of strength by the state, the government order has mandated that schools make attending the function compulsory for all students of classes X, XI & XII on Wednesday. Schools will be taking students to the venue, where they will attend the function where AIADMK party cadres and followers of the late MGR will also be present.



Parents of students received a text message in this regard on Tuesday, from the respective schools asking to send their ward for the programme. "Tomorrow (30.08.17, Wednesday) MGR centenary function will be held in VGP Ground. As per a government order, students from X, XI & XII must participate in the function. Students' reporting time is 7.30 am at school. No need to bring bag & lunch. After the function is over we will send the students home," read the message received by a parent whose son studies at a private school in Urapakkam. "Many party cadres who attend the meeting may come in a drunken state to the function, so safety is a big concern for us. We have not even been intimated of what time to go pick up our wards as the meeting could go on till late hours. Though we raised the issue with schools, female students haven't been exempted from attending the it," said a parent.



However, some schools in the district said they had received no such instruction to partake in the function. "Until 5 pm on Tuesday we did not receive any instruction to attend any programme. We have tests going on currently, so we can't afford to cancel lessons and take students to the venue even if we are asked to do it," said a teacher of a franchise school. While parents and schools have little choice in the matter but to send students to celebrate a functio, department officials could not be reached for a response in this regard.
Cops to punish motorists who don’t carry original licence

TNN | Aug 30, 2017, 00:14 IST

Chennai: After the Tamil Nadu government made it mandatory for drivers to carry their original licences from September 1, the city police stated that those motorists who do not carry original driving licenses will be prosecuted.

In a press release, police said the Supreme Court Committee on Road Safety has also instructed all states to cancel the driving licences of motorists involved in certain violations. Referring to various sections of the Motor Vehicle act, the police said Section 181 of the MVAct 1988, describes the punishment for driving a vehicle without valid driving licence. People driving a vehicle without valid driving licences are liable to be punished with imprisonment for a term which may extend to three months, or with fine which may go up to Rs 500, or with both.

The release said as per Section 3 of the MV Act 1988, it is mandatory that no person shall drive the motor vehicle in any public place unless he holds an effective driving licence issued to him authorizing him to drive the vehicle.

Section 130 of MV Act 1988, states that the driver of a motor vehicle in any public place shall, on the demand of any police officer in uniform, produce his licence for examination by any police official.

Earlier transport minister M R Vijayabaskar has said as many as 9,500 driving licences have been suspended for alleged violations, such as over-speeding, signal jumping and drunk driving. The minister said road accidents during January- July this year had reduced. It has fallen by 3,244, compared to the same period last year. The number of deaths has reduced by 309, he added.
வீட்டிலேயே பரிசோதனைகள் செய்துகொள்ளலாமா?

2017-08-24@ 12:39:40




நன்றி குங்குமம் டாக்டர்

டாக்டர் எனக்கொரு டவுட்டு

வீட்டில் இருந்தபடியே முதியவர்கள் சுவாசக் கோளாறை சரி செய்யும் கருவி, சுகர் மானிட்டர், பி.பி. பரிசோதனை, இன்சுலின் ஊசி போடுதல் போன்றவற்றைமுதியவர்கள் வீட்டிலேயே செய்யலாமா? அதனால் ஆபத்து ஏதேனும் உண்டா?சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணன்.

‘‘இன்றைய வாழ்க்கை முறையில், முதியவர்கள் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைக் கவனித்து கொள்ளக்கூட யாரும் இருப்பது இல்லை. முக்கியமாக, வயதானவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதை நன்றாக தெரிந்தவர்கள் அவர்களுடன் இருப்பது மிகவும் குறைவு.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் அடிப்படை மருத்துவ பரிசோதனைகளான ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லதுதான். ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் செயற்கை சுவாச கருவியை உபயோகிக்கலாம். அதேபோன்று நீரிழிவு நோயாளிகள் சுகர் மானிட்டர் மூலம் குளுக்கோஸ் அளவை பரிசோதித்துக் கொள்வதும், தாங்களாகவே இன்சுலின் ஊசி போட்டு கொள்வதும் பாதுகாப்பானதுதான். ஆபத்து ஒன்றும் இல்லை.

சிகிச்சைக்காக வரும் முதியவர்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவும், சுகர் மற்றும் பி,பி. பரிசோதனை செய்வதையும், செயற்கை சுவாச கருவி உபயோகப்படுத்துதலையும் பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துகிறோம். அது மட்டுமல்லாமல் இன்சுலின் போன்ற மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக உபயோகிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறோம்.

எனவே, முதியவர்கள் வீட்டிலேயே சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. குழப்பம் எதுவும் வேண்டியது இல்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவதும், மருத்துவருடன் தொடர்பில் இருப்பதும் இதில் முக்கியமானது என்பதை முதியவர்கள் மறக்க வேண்டாம்.’’

- விஜயகுமார்
கிழக்கு தாம்பரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
2017-08-30@ 01:25:12




தாம்பரம் : கிழக்கு தாம்பரத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், கணபதி நகர், சுத்தானந்த பாரதி தெருவை சேர்ந்தவர் ரவி சம்பத். இவரது மகன் ஸ்ரீராம் (30). இவர், திருவான்மியூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அருண் (32). இவர், சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீராம் தனது வீட்டை பூட்டிவிட்டு சூளைமேட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அருண், நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. மேலும், மர்மநபர்கள் ராம் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர், தமிழிசையை குறித்து அவதூறு பேச்சு நாஞ்சில் சம்பத் மீது குவியும் வழக்குகள்
DINAKARAN

2017-08-30@ 00:17:04




* கைதுக்கு அஞ்சி தப்பி ஓட்டம்
* வாயை அடக்க வேண்டும் என பாஜ எச்சரிக்கை

சென்னை : பிரதமர், தமிழிசையை குறித்து அவதூறு பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்குகள் குவிகின்றன. இதனால், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில், அவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது,” புதைப்பதற்கு இடம் தேடி அலையும் பிணங்கள் கூட அவரை ஏற்றுக்கொள்ளாது. வாயாலேயே வடை சுடுகின்ற பெருமாட்டியால் ஒரு நாயுக்கும் பிரயோஜனம் இல்லை” என்றும் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழக பாஜ தலைவர் தமிழிசை குறித்து நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நேற்று முன்தினம் இரவு பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டில் இல்லை.

இந்நிலையில் அவர் டி.டி.வி. தினகரனை சந்தித்து விட்டு பட்டினப்பாக்கம் அருகே உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் உணவு அருந்திக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதை சற்றும் எதிர்பார்க்காத நாஞ்சில் சம்பத் உடனே காரில் ஏறி தப்ப முயன்றார். இருந்தபோதும் அவர் பாஜவினரிடம் சிக்கி கொண்டார். அப்போது பாஜவினர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாஞ்சில் சம்பவத்தை மீட்டனர். இதைத் தொடர்ந்து பாஜவினர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், அவதூறாக பேசியது, பொது தளங்களில் ஆபாசமாக பேசியது, பெண்களை இழிவுப்படுத்தி பேசியது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாஞ்சில் சம்பத்தை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து நாஞ்சில் சம்பத் தற்போது வீட்டில் தங்காமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அஇஅதிமுக (அம்மா) அணியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
மத்திய அரசு அறிவிப்பு மருத்துவமனை அறை வாடகைக்கு வரிவிலக்கு

2017-08-30@ 01:26:08





புதுடெல்லி : மருத்துவமனை அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜிஎஸ்டியின் கீழ், 1000 ரூபாய்க்கு குறைவான அறை வாடகைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரையில் 12 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதேபோல 2500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய் வரையில் 18 சதவிகிதமும் 7500 ரூபாய்க்கு மேல் 28 சதவிகிதமும் அறை வாடகையில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். கூடுதல் படுக்கைகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து வசூலிக்கப்படும் மொத்த கட்டணத்திற்கு இந்த ஜிஎஸ்டி விதிக்கப்படும். அறையின் தரம் உயர்த்தப்பட்டு, வாடகை வேறாக இருந்தாலும், உண்மையான கட்டணத்தின் அடிப்படையிலேயே இந்த வரிவிதிப்பு இருக்கும்.

உண்மையான கட்டணம் ₹7,000ஆக இருந்து தரம் உயர்த்தப்பட்டதற்கு ₹10,000 வசூலிக்கப்பட்டாலும், பத்தாயிரத்திற்கே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். எந்த இடத்தில் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த கட்டணத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். பல்வேறு காலநிலைகளுக்கு பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும், எந்த நேரத்தில் அந்த அறையை வாடகைக்கு எடுக்கிறோமோ, அந்த நேரத்தின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி பொருந்தும். மருத்துவமனைகளில் அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் செப். 23ல் வாக்குப்பதிவு: மலாய் இனத்தவர் மட்டுமே போட்டி
DINAKARAN


2017-08-29@ 01:52:26




சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், அடுத்த மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. சிங்கப்பூர் அதிபராக உள்ள டோனி டான் கெங்யாம் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிகிறது. புதிய அதிபருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு சுழற்சி முறையில் எல்லா பிரிவினருக்கும் அதிபர் பதவி வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இந்நாட்டின் அடுத்த அதிபர் மலாய் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதிபர் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப், தொழிலதிபர் முகமது சல்லா மாரிகான் மற்றும் பரித்கான் கைம்கான் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

இவர்கள் அனைவருமே மலாய் இனத்தை சேர்ந்தவர்கள். இத்தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒரே வேட்பாளர் மட்டும் போட்டியிட்டால், வேட்புமனு தாக்கல் செய்யப்படும் செப்டம்பர் 13ம் தேதியே அவர் அதிபராக அறிவிக்கப்படுவார். இத்தேர்தலில் ஹலிமா வெற்றி பெற்றால் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார். அதேபோல், தேர்தலில் வெற்றி பெறுபவர் சிங்கப்பூரின் 2வது மலாய் இன அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...