Thursday, September 14, 2017

அடேங்கப்பா ‘அவேர்னஸ் அப்பா’- சிலிர்க்க வைக்கும் சிவசுப்பிரமணியம்!

Published : 14 Sep 2017 09:56 IST

கா.சு.வேலாயுதன்



சிவசுப்பிரமணியம்


சிவசுப்பிரமணியத்தின் பிரச்சார வாகனம்

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில், மக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி அவர் தென்படுவார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு, புதுச் சேரியின் பிற முக்கிய நகரங்களிலும் அநேகம் பேர் இந்த ‘அவேர்னஸ் அப்பா’வை பார்த்திருக்கலாம். அண்மையில் ஒருநாள் நாமும் அப்படித்தான் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் அவரைப் பார்த்தோம்.

அவரது மொபெட் முழுக்க, ’கண் தானம் செய்யுங்கள்.. ரத்த தானம் செய்வோம்.. புற்றுநோய்க்கு உதவ முடி தானம் செய்வீர்..’ என ஏகத்துக்கும் விழிப்புணர்வு வாசகங்கள். அவரது சட்டை, பேன்ட், தொப்பி அனைத்திலும் இதே போன்ற வாசகங்கள் இருக்கவும் நாம் அவரைச் சற்றே வித்தியாசமாகப் பார்த்தோம்.

எதுவும் எனதில்லை

அவ்வளவுதான்.. சம்மனே இல்லாமல் அவரே ஆஜரானார். ”என்ன சார் ஒரு மாதிரியா பாக்கறீங்க, அது ஒண்ணுமில்லீங்க.. ‘கண் தானம், உடல் தானம், கூந்தல் தானம், உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய் யுங்க’ன்னு ஆளாளுக்கு எப்படியெப்படியோ பிரச்சாரம் செய்வாங்க. அதையேதான் நான் இப்படி என்னோட நடை, உடை, வாகனம் என அனைத்திலும் வித்தியாசமான முறையில பிரச்சாரம் செஞ்சுட்டுத் திரியறேன்!” என்று கடகடத்தவர், தொடர்ந்தும் தானே பேசினார்.

”இப்படி வாசகங்கள் பிரின்ட் செஞ்ச சட்டை பேன்ட் மட்டும் எங்கிட்ட 10 செட் இருக்கு. அதோட, நான் சாப்பிடுற தட்டு, தண்ணி டம்ளர், போர்வை, விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்கள், உடல் உறுப்பு தானம் செய்யுறதுக்கான விண்ணப்பங்கள் எல்லாமே இந்தப் பெட்டிக்குள்ளதான் இருக்கு. இப்போதைக்கு எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்தப் பெட்டி மட்டும்தான். இந்தப் பெட்டி, இதுக்குள்ள இருக்கும் பொருட்கள், இந்த மொபெட், அட, இந்த செல்போன்கூட நான் வாங்கினது இல்லீங்க; எல்லாமே என்னோட பிரச்சாரத்தை பார்த்துட்டு மத்தவங்களா வாங்கித் தந்தது.

அவேர்னஸ் அப்பா

இதா.. இந்த நேரச் சாப்பாட்டையே எடுத்துக்குங்க. இப்ப நீங்க சாப்பாடு வாங்கிக் குடுத்தா எனக்கு உணவு வழங்கியவங்க லிஸ்ட்ல நீங்க 1,261-வது நபரா வருவீங்க. அத அப்படியே ‘வாட்ஸ் அப்’லயும் போட்டுருவேன். பெட்ரோல் பங்க்ல இலவசமா பெட்ரோல் அடிச்சா, அவங்க பேரையும் ‘வாட்ஸ் அப்’ல போட்டுருவேன்.” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிவசுப்பிரமணியம் என்ற இந்த அவேர்னஸ் அப்பா !

‘அவேர்னஸ் அப்பா’ என்று கொங்கு இளைஞர்களால் கொண்டாடப்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், சிறுவயதிலேயே பிழைப்புக்காக திருப்பூர் வந்தவர். தொடக்கத்தில், திருப்பூரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர், பிறகு 20 ஆண்டுகள் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதால் இயலாதவர்களுக்கு உதவும் சுபாவம் இவருக்குள் இயல்பாகவே இருந்தது.

2007-ல் புறப்பட்டோம்

கடந்த 20 ஆண்டுகளில் 27 முறை ரத்த தானம் செய்திருக்கும் 58 வயது சிவசுப்பிரமணியம் தன்னைப் பற்றிப் பேசுகையில், “என்னோட மூன்று பெண் பிள்ளைகளையும் கட்டிக்குடுத்து 4 பேத்திகளும் வந்தாச்சு. இப்படியே இருந்து என்ன செய்ய.. நானும் என் மனைவியும் ராணுவ வீரர்களுக்காக உடல் உறுப்பு தானம் செய்தவங்க. அதையே பிரச்சாரம் பண்ணி மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்னுதான் 2007-ல் நானும் அவளும் புறப்பட்டோம்.

அந்த சமயத்துல, ஒருத்தர் எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்தார். டெய்லர் ஒருத்தர் இந்த மாதிரி டிரெஸ் தைச்சுக் கொடுத்தார். பனியன் பிரிண்டிங் வெச்சிருக்கிறவர், இந்த வாசகங்களை டிரெஸ்ஸில் பிரிண்ட் பண் ணிக் கொடுத்தார். நாங்க பிரச்சாரத்தை ஆரம்பிச்சோம். இடையில், நுரையீரல் புற்று நோயால பாதிக்கப்பட்ட எம் மனைவி ஜானகி 3 வருஷம் முன்னே என்ன விட்டுப் போயிட்டா. அவளோட கண்களை மட்டும்தான் தானமா கொடுக்க முடிஞ்சுது” என்று வேதனையை வெளிப்படுத்தியவர், தற்போதைய தனது பிரச்சார பயணம் குறித்தும் பேசினார்.


வண்டி போன போக்குல..

“வண்டி போன போக்குல ஊர், ஊரா போறேன். போலியோ பாதிப்பு, மது அருந்துவதால், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பத்தியெல்லாம் விழிப்புணர்வு நோட்டீஸ் களைக் கொடுக்கிறேன். கண் தான, உடல் தான, உடல் உறுப்பு தான விண்ணப்பங்களையும் கேக்குறவங்களுக்குக் கொடுப்பேன். அனைவரும் ஏன் உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம் செய்யவேண்டும் என்பது குறித்தும் பிரச்சாரம் செய்வேன்.

முன்பு, நடந்தே செல்வேன். அப்புறம் சைக்கிள் கிடைச்சுது. ஒரு வருஷமாத்தான் இதோ இந்த மொபெட்ல போறேன். தமிழகம், புதுச்சேரியில் என்னோட வண்டி போகாத மாவட்டமே இருக்காது. போற இடங்கள்ல, ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் பார்ப்பேன். பல இடங்கள்ல அவங்களே என்னோட பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி வழியனுப்பியும் வெச்சிருக்காங்க.

பயணத்துல பெருசா திட்டமிடலெல்லாம் இருக்காது. கிடைக்கிற இடத்துல தங்கிக்குவேன். பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருந்தா அங்கேயும் அனுமதி கேட்டுப் படுத்துக்குவேன். எதுவும் கிடைக்கலியா.. இருக்கவே இருக்கு பிளாட்பாரம்!” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினார் சிவசுப்பிரமணியம். அவரிடம் ஒரு வேளை சாப்பாட்டுக்கான ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு நாமும் நகர்ந்தோம்.

அடுத்த சில நிமிடங்களில், ‘இன்று மதிய உணவு அளித்தவர்’ என நமது பெயரைக் குறிப்பிட்டு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ் செய்தியை தட்டி விட்டிருந்தார் வித்தியாசமான இந்த அவேர்னஸ் அப்பா!
தேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள்

Published : 14 Sep 2017 09:54 IST

மு.செல்லா




ஓவியம்: வெங்கி


எப்படி இழந்தோம்

என்பது தெரியாமலேயே


தொலைந்து போய்விட்டன

அந்த இனிய நாட்கள்.

கணக்கன் தோட்டத்து

உப்புநீரில் குளித்தால்

மேனி கருக்குமென்ற

அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி

வியாபாரி தோட்டத்து

நன்னீர் கிணறு அதிர

குதித்தாடிய ஈர நாட்கள்...

ஓடைநீர் ஊற்றில் சிக்கிய

உறுமீனுக்காய்த் துள்ளி

விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப்

பீற்றிக்கொண்ட நாட்கள்...

கவட்டைக் கொம்பொடிய

நுங்கு மட்டை வண்டியுருட்டி

சக நண்பர்களுடன்

தோற்றும் ஜெயித்தும்

விளையாடிய நாட்கள்...

மொட்டுவிட்ட

தட்டாஞ்செடிகளில்

பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை

காத்துக் கிடந்து

நாவூறப் பறித்து

ருசித்த நாட்கள்...

நினைத்தாலே நினைவுகளில்

ஈரம் சுரக்கும்

பிள்ளைப் பிராய நாட்களை

தொலைத்துவிட்டு

*கைகளை விரித்தபடி

ஓடிவரும் குழந்தைகளை

வெறுமை பூசிய நாட்களால்

வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம்

இப்போது!

மருத்துவர்கள் ஆவதற்காக மட்டுமா மாணவர்கள் போராடுகிறார்கள்?

Published : 14 Sep 2017 09:05 IST

தங்க. ஜெயராமன்





நீட் தேர்வை விலக்கிக்கொண்டால் தாங்களும் மருத்துவர்களாகிவிடலாம் என்ற தன்னலச் சிந்தனையில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்றே ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. மருத்துவர்களுக்குப் பொதுவாகவே இருக்கும் சமூக அந்தஸ்து என்ற மாயை மாணவ சமுதாயத்தைக் கவர்ந்திருக்கிறது என்றும் நினைத்து சமூகவியலின் கற்பனை நுட்பங்களில் இறங்கக் கூடாது. மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நீட் தேர்வின் புள்ளிவிவரங்களை வைத்து அது செய்யவிருக்கும் நன்மைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுத்தேர்வில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு மதிப்பெண்கள் பெற்ற மாணவி மற்றொரு போட்டித் தேர்வு எழுதித் தன் தகுதியை மூதலிக்க வேண்டுமென்றால் மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டுத்தான் போகும். நீட் தேர்வு அந்த மாணவிக்கு வைத்த தேர்வு அல்ல. அவர் அதற்கு முன்பே எழுதிய பொதுத்தேர்வின் முடிவை நிராகரிப்பதற்காக வைத்த தேர்வு.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தப்போகிறோம், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை உருவாக்குவோம் என்பதெல்லாம் புண்பட்ட நியாய உணர்வின் குமுறலுக்கிடையில் எடுபடாது. நீட் தேர்வு இருந்தால் எத்தனை பேருக்கு, அது இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று அந்த உணர்வு எண்ணிக்கொண்டிருக்காது. யாருக்குக் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்று வகைப்படுத்திப் பார்க்காது. ஏறிக் கடந்துவிடலாம் என்று நம்பியிருந்த ஏணியை யாரோ தட்டிவிட்டது போன்ற ஏமாற்றம். மாணவர்கள் கேட்பது மனதுக்கு மட்டுமே தெரிந்த நியாயம். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் பள்ளிச் சிறுமிகள் சாலையில் அமர்ந்து நியாயம் கேட்கிறார்கள். அவர்களின் நியாய உணர்வு எப்படியோ புண்பட்டுள்ளது என்று சொல்லாமல் இதை வேறு எப்படிச் சொல்ல முடியும்? இளைஞர்களுக்கு லட்சிய வேகம் குறைந்துவருகிறது என்று கவலைப்பட்டவர்கள் விழிதிறந்து பார்க்க வேண்டிய தருணம்.


நூற்றுக்கணக்கில் பள்ளிச் சிறுமிகளே போராட்டம் நடத்துவதைப் பார்க்கும்போது நான் பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வருகிறது. எங்கள் பள்ளியின் மாணவர்கள் ஆயிரத்துக்கும்மேல். ஆனால், மாணவிகளின் எண்ணிக்கை முப்பது என்ற அளவில் இருந்தது. இதுவே அப்போது பெரிய எண்ணிக்கை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இன்று எந்த வகுப்பை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். ஆக, இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், கல்வியை எப்படிக் கணிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கல்வி அறிவைத் தேடும் வழியாக மட்டுமல்ல, தங்களைக் கட்டிவைத்திருக்கும் சமுதாயத்தின் பழந்தளைகளை உடைத்து மேலெழும்ப உதவும் ஒரே சாதனமாகக் கல்வியை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த விடுதலை முயற்சிக்கு நீட் தேர்வு ஒரு தடை என்ற அச்சம் அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

இது மாணவர்களின் சூட்டிப்பு

மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையில் கல்வி சிக்கிக்கொண்டது. அந்தப் பின்னணியில்தான் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது என்றும் ஆட்சியாளர்கள் காரணம் கற்பிக்கலாம். அரசியல் தொடர்பில்லாமலேயே கல்விப் பிரச்சினைகளில் தமிழக மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். 1970 என்று நினைவு. கல்லூரிகளில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்குமாறு அப்போதைய தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தேன். அன்றைய மாணவர்கள், கல்வியாளர்கள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. தமிழில் போதுமான தரமான பாடநூல்கள் அப்போது இல்லை என்பதால் ஆங்கிலமும் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து. சிதம்பரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பெரிய ஊர்வலம் ஒன்றை நாங்களே நடத்திச்சென்று அந்தத் திட்டத்தை எதிர்த்தோம். ஊர்வலத்துக்காக நாங்கள் எந்த முயற்சியும் செய்து கூட்டம் சேர்க்கவில்லை. தமிழக மாணவர்களின் சூட்டிப்பை நாம் என்றைக்குமே குறைத்து மதிப்பிடக் கூடாது.

நீட் தேர்வு மருத்துவப் படிப்புக்குத் திட்டமிடுபவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டியதல்ல என்பதைக் கல்வியாளர்கள் ஏற்பார்கள். சில ஆயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு பற்றியது என்று நாம் இதனை எளிமைப்படுத்தி ஒதுக்கிவிட முடியாது. நீட் தேர்வு இப்போதே கச்சிதமாகத் தனது நோக்கத்தைச் சாதித்துக்கொண்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக, அல்லது அந்த ஆதர்ச பாடத்திட்டத்தை நோக்கிச் செல்வதாக எல்லா மாநிலப் பாடத்திட்டங்களும் புனரமைக்கப் படும்.

நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற சூழல் விரைவிலேயே உருவாகும். நமது சந்ததியினரின் சிந்தனை வளத்தைத் தான் நிர்ணயிக்கும் இலக்கு நோக்கித் திருப்பவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவிலான அதிகார மையத்துக்கு இதை விடச் சிறந்த சாதனம் வேறென்ன வேண்டும்? கல்வித்திட்டமும் (curriculum), அதன் நோக்கத்தை அடைய உதவும் பாடத்திட்டமும் (syllabus) கற்பிக்கும் முறையும் கற்கும் முறையும் தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும், கேள்வித்தாளின் வடிவமைப்பும்-- எல்லாமே எட்டாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்துவிடும். இப்படி, ஒரு தேர்வை நோக்கியே பயணிக்கும் கல்விமுறையை கல்வியாளர்கள் ஏற்பார்களா? எந்த மட்டத்திலும் ஒரு மாற்று முறையை, மாற்றுக் கல்வித்திட்டத்தை மாணவர்களிடையே சோதித்துப்பார்க்க சுதந்திரம் தராத கல்வி முறையை என்னவென்று சொல்லலாம்? எதிர்ப்பையும் ஆதரவையும் தன்னை நோக்கியே ஈர்த்துக்கொண்டு நீட் தேர்வு தானே கல்வி பற்றிய சிந்தனையின் மையமாகிவிட்டதல்லவா? அதற்கு உருவாகும் எதிர்ப்பும் கல்விச்சிந்தனையை நீட் தேர்வின் மீது மையங்கொள்ளச் செய்யும் விந்தையாக மாறியது.

கலைப் பாடங்களின் இடம் என்ன?

மற்ற பாடங்களை விரும்பிப் படிப்பவர்களை நாங்களா தடுக்கிறோம் என்பார்கள் நீட் ஆதரவாளர்கள். மாணவர்களின் மனத்தளவிலேயே “இதைத் தவிர வேறு எதைப் படிப்பது?” என்று நீட் பாடங்கள் பரிசீலனைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையாகி ஒரு போலியான உயர்ச்சியைப் பிடித்துவிடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவ்வப்போது தேவைப்படும் திறன்களும், பொருள் சார்ந்ததல்லாத இதர தேவைகளும் உண்டு. அதற்கான மனிதவளமும் வேண்டும் என்பது மறந்துபோனது போலாயிற்று. ஏற்கெனவே, இங்கு மொழி, அரசியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்களும் மற்றவையும் கல்வித்திட்டத்தில் அவற்றுக்கு உரிய இடத்தைச் சுருக்கிக்கொண்டன. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் இவற்றை மேலும் ஒதுக்கிவிடும். பிறகு நாட்டின் மனிதவள மேம்பாடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். நீட் தேர்வை மருத்துவப் படிப்பு என்ற எல்லைக்குள் மட்டுமே விவாதிப்பது பொருந்தாது. பள்ளிக் கல்வியின் தளத்தை முழுதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் நீட் தேர்வு நமது மனிதவள முயற்சிகளை எப்படித் திசை மாற்றும் என்பதையும் கவனிக்க வேண்டும். மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு மட்டுமே போராடவில்லை.

-தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
இப்போதுதான் ஜன்னலோர இருக்கை கிடைத்தது

Published : 14 Sep 2017 09:14 IST




குழந்தைகளுக்கும் ஜன்னலோர இருக்கைகளுக்கும் என்றுமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு குடும்பம் ரயிலிலோ பேருந்திலோ ஏறினால், உட்கார்வதற்கு இருக்கைகள் இருந்தால் அங்கே குழந்தைகள்தான் முதலில் ஓடிப்போய் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொள்ளும். எனினும், குழந்தைகளுக்கு ஜன்னலோர இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் அளவுக்குப் பெரியவர்கள் ஒன்றும் ஜன்னலோரத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர்கள் அல்ல என்பதை தினந்தோறும் ரயிலிலும் பேருந்துகளிலும் பார்க்கலாம்.

குழந்தைப் பருவத்தில் நம்மிடம் பல ஆர்வங்கள், ஈடுபாடுகள் இருக்கும். அவற்றில் பலவற்றுக்கும் நாம் விடைகொடுக்கும் நிலையை ‘முதிர்ச்சி அடைதல்’ என்கிறோம். அதுவரை குழந்தைத்தனம் என்பது ரசிக்கக்கூடிய விஷயமாகவும் அதற்குப் பிறகு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் மாறுகிறது. அப்போது அதை வேறு ஒரு சொல்லால், அதாவது ‘சிறுபிள்ளைத்தனம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். ஆனால், நமக்குள் உள்ள குழந்தை, நமக்கு எத்தனை வயதானாலும் விடாப்பிடியாக நமக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதன் அடையாளங்களுள் ஒன்று ஜன்னலோர இருக்கை மீதான காதல். ஆகவே, ‘உலகளாவிய பண்பாக’ இருப்பதால் ஜன்னலோர இருக்கைக்கான போராட்டத்துக்கு ‘பெரிய மனுசத்தன’ அடையாளம் ஏற்பட்டுவிட்டது.


ஜன்னலோர இருக்கை மீதான நமது காதலை, ஏக்கத்தை நம்முள் இருக்கும் குழந்தையின் அடையாளமாக மட்டுமே சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னலோர இருக்கையின் நாட்டத்தை வீட்டின் ஜன்னலிலிருந்தே தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். வீட்டின் ஜன்னலோ பேருந்து, ரயில்களின் ஜன்னலோ காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மனிதர்களின் தேவை எப்போதும் தோற்றத்தில் தென்படுவதை, எளிய நடைமுறைப் பயன்பாட்டைத் தாண்டியதாகவும் இருக்கிறது.

ஜன்னல் தரும் விடுதலை

நாடோடியாகத் திரிந்த மனிதர்கள் ஒரு இடத்தைத் தம்முடையதாக ஆக்கிக்கொண்டு அந்த இடத்தின் மீதான தம் உடைமையுணர்வின் அடையாளமாகவும் தமது பாதுகாப்பின் அடையாளமாகவும் வீடு கட்டிக்கொண்டாலும்கூட தம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருந்துகொண்டு சூழ உள்ள உலகைத் தரிசித்துக்கொள்ள, அடைத்துவைக்கப்பட்ட உணர்வைத் தவிர்த்துக்கொள்ள, அடைப்புக்குள்ளும் ஒரு விடுதலையுணர்வை அனுபவிக்க அவர்கள் உருவாக்கிக்கொண்டவைதான் ஜன்னல்கள்!

ஒரே இடத்துக்குள் இருந்தாலும் சரி ‘நகரும் இடமான’ வாகனங்களுக்குள் இருந்தாலும் சரி ஜன்னல்கள் இல்லையென்றால் அவற்றுக்குப் பெயர் ‘சிறை’. சிறைக்குள் இருப்பவருக்கு ஜன்னல் கொடுக்கும் ஆசுவாசத்தை ஆல்பெர் காம்யு தன் ‘அந்நியன்’ நாவலில் அழகாக விவரித்திருப்பார். ஆகவேதான், மூச்சு முட்டும் நம் சிறு உலகத்திலிருந்து அது வீடோ, பயணமோ ஜன்னல்கள் மீட்டெடுக்கின்றன. ஆனால், இன்று அதிவிரைவான நகரமயமாதலின் விளைவாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் இடைவெளியற்ற வீடுகள், அதனால் ஜன்னல்கள் இல்லாத நிலை, அப்படியே இருந்தாலும் அடுத்த வீட்டுச் சுவர் நம் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும் நிலை. ஜன்னல்களை நம் நகரங்கள் இழந்துகொண்டிருக்கின்றன. காற்றோட்டமான ஜன்னல் என்பது பெரும்பாலும் வசதிபடைத்தோரின் விஷயமாகிவிட்டது.

ஜன்னல்களை அடைத்த கைபேசிகள்

இன்னும் பேருந்து, ரயில்களின் ஜன்னல்கள் அடைபடவில்லை. ஆயினும், ஜன்னல் இருக்கை கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமாகவும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் கைபேசி வருடல்களில் நாம் நம்மை இழக்க, பயணநேர ஜன்னல்கள் என்பவை இன்று காற்றோட்டத்துக்கு மட்டுமே என்றாகிவிடுகின்றன. மெய்யுலகில் மெய்நிகர் உலகால் ஜன்னல்களை இழந்துகொண்டிருக்கிறோம். ரயில் பயணத்தில் புத்தகம் படிப்பதையே மகா குற்றம் என்பார் கி.ரா. புத்தகம் படித்தால்கூட பரவாயில்லை என்று தோன்றும்படி இன்று கைபேசிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம், ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டும்.

பேருந்தில் ஒரு குழந்தைக்கு ஜன்னலோர இருக்கை கிடைப்பது பற்றி முகுந்த் நாகராஜன் அழகான கவிதையொன்று எழுதியிருப்பார்:

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

குழந்தை இப்படியெல்லாம் தன் ஜன்னல் சீட் மகிழ்ச்சியைக் கவிதையாக வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழலாம். குழந்தையால் வெளிப்படுத்த முடிகிறதோ இல்லையோ வீடு நெருங்கிவிட்டது என்பதைவிட ஜன்னல் சீட் கிடைத்துவிட்டதில்தான் குழந்தை அதிக மகிழ்ச்சி கொள்ளும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த மகிழ்ச்சியைத்தான் கவிஞர் தன் புகைப்படக் கருவியால் படம் பிடித்திருக்கிறார். கருவி கவிஞருடையது என்றாலும் மகிழ்ச்சி குழந்தையுடையதுதான். அதாவது, பேருந்தில் இடம் கிடைத்த குழந்தையுடையதும், கவிஞருக்குள் இருக்கும் குழந்தையுடையதுமான மகிழ்ச்சி.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தை

Published : 14 Sep 2017 08:27 IST

புவனேஸ்வரம்

மது, செல்போன், புடவை, கொலுசு வாங்க தனது 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற தந்தையை போலீஸார் கைது செய்துள் ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் முகி. இவரது மனைவி சுகுடி. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். மூன்றாவதாக கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் சுகுடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார் பலராம். தகவல் அறிந்த போலீஸார் பலராம் முகியை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து பத்ராக் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பலராம் முகிக்கு நிரந்தர வருமானம் இல்லை. அத்துடன் குடிப்பழக்கமும் உள்ளவர். அதனால் 11 மாத ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தில் ரூ.2 ஆயிரத்தில் செல்போன், மகளுக்கு ரூ.1,500-ல் வெள்ளி கொலுசு, மனைவிக்கு புடவை ஆகியவற்றை வாங்கி உள்ளார். மீதி பணத்தில் மது வாங்கி உள்ளார். இதுகுறித்து பலராமின் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

குழந்தையை விற்க பலராமின் மைத்துனர் பாலியாதான் உதவி செய்துள்ளார். இவர் அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். சோம்நாத் சேத்தி என்பவர் அரசு ஓட்டுநராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய 24 வயது மகன் கடந்த 2012-ம் ஆண்டு இறந்துள்ளார். ஒரே மகனை பறி கொடுத்த சோகத்தில் சோம்நாத் சேத்தியின் மனைவி மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

ஆண் குழந்தையைத் தத்தெடுத்தால் அவருடைய மனநிலை மாற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். அதை அறிந்த பாலியா, பலராமிடம் பேசி குழந்தையை விற்க ஏற்பாடு செய்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீஸ் கண்காணிப்பாளர் அனுப் சாகு கூறினார்.- ஏஎன்ஐ
ரவுடிகளும், சமூக விரோதிகளும் ஊழியர்களாக நியமனம்: சுங்கச் சாவடிகள் முறையாக இயங்குவதில்லை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

Published : 14 Sep 2017 09:22 IST

மதுரை
தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் சுங்கச் சாவடி பணியாளர்களாக நியமனம் செய்கின்றனர். அவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டைவாய்த்தலை முதல் குளித்தலை வரை சாலையில் இருபுறமும் மணல் லாரிகள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், திருப்பராய்த்துறை, மனவாசி சுங்க மையங்களில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ‘சேலம் செல்லும் வழியில் திண்டுக்கல் - கரூர் சாலையில் அரவக்குறிச்சி சுங்க மையத்தில் அடையாள அட்டை கேட்டு தன்னை 20 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைத்ததாகவும், தனது காரில் தேசிய கொடி பறக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதி என முத்திரை இடம் பெற்றுள்ளது. இருப்பினும் தன்னிடம் அடையாள அட்டை கேட்டதாகவும்’ நீதிபதி கே.கே.சசிதரன் தெரிவித்தார்.

பின்னர், தேசிய நெடுஞ்சாலை குழுமத்தின் தலைமை பொது மேலாளர் மற்றும் கரூர்- திண்டுக்கல் சுங்க மையங்களை நிர்வகித்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டின் (டிகே) எக்ஸ்பிரஸ்வேஸ் மதுகான் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொது மேலாளர், அரவக்குறிச்சி சுங்கச் சாவடி பொறுப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ‘தமிழகத்தில் சுங்க மையங்களில் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலத்தவர்கள். அவர்களுக்கு தமிழ் மொழி தெரிவதில்லை. சுங்க மையங்களில் நீதிபதியையே நிறுத்தும்போது, சாதாரண மக்களின் நிலைமை பரிதாபகரமானது.

நடவடிக்கை எடுப்பதில்லை

இந்த விதிமீறல் தொடர்பாக சுங்க மைய ஒப்பந்ததாரர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை குழுமம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் சுங்க மையங்கள் முறையாக செயல்படுவதில்லை. கேரளாவில் சுங்க மையங்களில் முறைகேடு நடந்தபோது மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்த உதாரணம் உள்ளது.

தமிழகத்தில் சுங்க மையங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி வழியில்லை. நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்சன் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்கு செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும்.
எஞ்சிய 40 சதவீத தொகை பங்குசந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.
 புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
பழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கென தனி கணக்கீடு உள்ளது.
புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனை பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவு 100 சிறிய பேருந்துகள் 2 மாதங்களில் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

Published : 14 Sep 2017 09:42 IST

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மாதங்களில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடிவடைந்துள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லாத பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் சுமார் 200 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5, அதற்கு மேல் ரூ.6, ரூ.8 ரூ.9 என வசூலிக்கப்படுகிறது.

இந்த பேருந்துகளில் 27 பேர் அமர்ந்து செல்லலாம். இந்த பேருந்துகள் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து மேலும், 100 சிறிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தினமும் ரூ. 3,500 வசூல்

சென்னையில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஆட்டோ மற்றும் கால்டாக்சியை நம்பியிருந்த மக்கள், தற்போது சிறிய பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். சிறிய பேருந்துகள் மூலம் தினமும் தலா ரூ.3,500 வசூலாகிறது.

இதற்கான பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் பெற உதவியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக 100 சிறிய பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான வழித்தடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 20 சிறிய பேருந்துகள் இயக்கப்படும். உட்புறம், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 80 சிறிய பேருந்துகளும் அடுத்த 2 மாதங்களில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழைகளுக்கு சேவை செய்யவே சிறப்பு நேர்காணல் மூலம் மருத்துவ மாணவர் தேர்வு: சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் விளக்கம்

Published : 14 Sep 2017 09:20 IST


வ.செந்தில்குமார்

வேலூர்




வேலூர் சிஎம்சி மருத்துவமனை. - படம்: விஎம். மணிநாதன்


அன்ன புலிமூட்

ஏழைகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள மருத்துவ மாணவர்களை தேர்வு செய்யவே எங்களுக்கு அனுமதியளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளோம் என்று சிஎம்சி முதல்வர் அன்ன புலிமூட் தெரிவித்தார்.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, ‘நீட்’ தேர்வின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளது. ‘நீட்’ தேர்வுடன் தாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களை மட்டுமே சேர்ப்போம் என்று வலியுறுத்தியுள்ளது.

100 மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓரிடத்தை மட்டும் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கீடு செய்து அதன்படி, மும்பையைச் சேர்ந்த சித்தாந்த் நாயர் என்ற ஒரே மாணவரை சேர்த்துள்ளது.

இதுகுறித்து, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி முதல்வர் அன்ன புலிமூட் கூறும்போது, ‘ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே எங்கள் கல்லூரியின் நிறுவனர் (ஐடா ஸ்கடர்) அமெரிக்காவில் இருந்து இங்கு மருத்துவமனையையும் கல்லூரியையும் தொடங்கினார். அவரது எண்ணங்களை இதுவரை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

எங்கள் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக கூடுதல் நிதிச் சுமையை கொடுப்பதில்லை. எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டு கட்டணம் ரூ.3,000, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ.400, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கு ரூ.500 மட்டுமே வசூலிக்கிறோம்.

இங்கு, கிறிஸ்துவர்கள் மட்டும்தான் படிக்கிறார்கள் என்பது தவறானது. ஆண்டுதோறும் 15 இதரப் பிரிவினரையும் சேர்க்கிறோம். தென்னிந்தியாவில் அதிக மிஷனரிகள் இருப்பதால் கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர்.

‘நீட்’ தேர்வின் மூலம் வரும் சிறந்த மாணவர்களில் சேவை மனப்பான்மையுள்ள மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, சிறப்பு நேர்காணல் நடத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மாணவர் சேர்க்கை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் விதிகளை மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பலமுறை கூறியுள்ளனர்’ என்றார்.
பதிவுத்தபாலில் அனுப்பாத நோட்டீசை அரசு ஊழியர்கள் பெறக்கூடாது : 'ஜாக்டோ- ஜியோ' அறிவுரை

பதிவு செய்த நாள்13செப்
2017
23:21

தேனி: 'பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக் கொள்ளக் கூடாது', என ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.7 முதல் ஜாக்டோ-, ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.செப்.8ல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அரசு சார்பில் 17ஏ (விளக்கம் கேட்கும் குறிப்பாணை) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த நோட்டீசை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வருவாய்த் துறை, வளர்ச்சித் துறை, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேசிய, மாவட்ட 'ஜாக்டோ ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள், விளக்க குறிப்பாணை நோட்டீசை தலைமை ஆசிரியரிடம் இருந்தோ, உயரதிகாரிகளிடம் இருந்தோ பெறக் கூடாது. முறைப்படி பதிவுத் தபாலில் மட்டுமே பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.இதனால் அவர்களுக்கு நோட்டீஸ் தருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் ஒட்ட அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட செய்திகள்

ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது


ஒப்பந்த தொழிலாளிக்கு மீண்டும் பணி வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி மண்டல சுகாதார ஆய்வாளர் மற்றும் அவருடைய உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 14, 2017, 07:45 AM

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட 18, 19 மற்றும் 20–வது வார்டு சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலன் (வயது 42).

19–வது வார்டு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வந்த சரவணன் என்ற தொழிலாளி, ஒழுங்காக வேலை செய்யவில்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கும்படி சுகாதார ஆய்வாளர் பாலனிடம் கோரினார். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்கிறேன் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சுகாதார ஆய்வாளரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சரவணனிடம் கொடுத்து அதை சுகாதார ஆய்வாளர் பாலனிடம் லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அந்த பணத்துடன் மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்ற சரவணன், அலுவலகத்துக்கு வெளியே நின்றபடி பாலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாலன், தனது உதவியாளர் லட்சுமிபதி(40)யை அனுப்பிவைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறினார்.

இதையடுத்து சுகாதார ஆய்வாளர் பாலனின் உதவியாளர் லட்சுமிபதி வெளியே வந்து சரவணனிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கிச் சென்று பாலனிடம் கொடுத்தார்.

இவற்றை அங்கு மறைந்து நின்று கண்காணித்துக்கொண்டு இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் விஸ்வநாத் ஜெயன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சுகாதார ஆய்வாளர் பாலன் மற்றும் அவரது உதவியாளர் லட்சுமிபதி 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியதாக கைதான பாலன், சுதந்திர தின விழாவின் போது சென்னை மாநகராட்சியின் சிறந்த சுகாதார ஆய்வாளர் என்ற விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலையங்கம்

தமிழ்நாட்டில் ‘நவோதயா’ பள்ளிக்கூடங்கள்



1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது.

செப்டம்பர் 14 2017, 03:00 AM
1986–ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் முட்டி மோதிக்கொண்டு, நவோதயா பள்ளிக்கூடங்கள் திறக்காத ஒரு நிலைக்கு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இப்போது ஒரு விடையை அளித்துள்ளது. அப்போதைய புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசாங் கத்தின் உதவியுடன், மாவட்டத்திற்கு ஒரு ஜவகர் நவோதயா பள்ளிக்கூடம் தொடங்கப்படவேண்டும். இந்த பள்ளிக் கூடங்கள் உண்டு, உறைவிடப் பள்ளிக்கூடங்களாக இருக்கும். ஆண், பெண் இருபாலாரும் கல்வி கற்கக்கூடிய இந்த பள்ளிக்கூடங்களில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை கல்வி கற்றுக்கொடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கான இடஒதுக்கீடு தவிர,

75 சதவீதம் இடஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும். முழுக்க முழுக்க இலவசமான இந்த பள்ளிக்கூடங்களில் 9 முதல் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கல்விவசதி, விடுதி வசதிக்காக மாதம் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த நவோதயா பள்ளிக் கூடங்கள் தொடங்க மாவட்டந்தோறும் மாநில அரசுகள் 30 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். மத்திய அரசாங்கம்

3 ஆண்டுகளுக்குள் ரூ.20 கோடி வழங்கி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி கல்வி கற்றுக் கொடுக்கப்படும். இந்த பள்ளிக்கூடங்களில் மும்மொழி பாடத்திட்டம் அடிப்படையில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தமிழக அரசு இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால், தொடக்கம் முதலே நவோதயா பள்ளிக் கூடங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட அனுமதிக்க வில்லை. இந்தியா முழுவதிலும், தமிழ்நாட்டை தவிர, எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில், தமிழ்நாட்டிலும் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்

கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்கப்படவேண்டும். இதற்காக தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசு 8 வாரத்திற்குள்

முடிவெடுக்கவேண்டும். மத்திய அரசாங்கம் உயர்நீதி மன்றத்திலேயே எழுத்துப்பூர்வமாக இந்த பள்ளிக்கூடங் களில் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று உறுதி அளித் திருக்கிறது. 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்புவரை தமிழ் கட்டாய மொழியாக கற்றுக்கொடுக்கப்படும். 11, 12–ம் வகுப்புகளில் விருப்பமொழியாக தமிழ் கற்றுக்கொடுக் கப்படும். உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருக்கிறது. பொதுவாக நவோதயா பள்ளிக்கூடங்களில் உயர்தரகல்வி கற்றுக்கொடுக்கப் படுகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் மருத்து வக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள 598 நவோதயா பள்ளிக்கூடங்களில் படித்த 14 ஆயிரத்து 183 பேர் ‘நீட்’ தேர்வு எழுதியநிலையில், 11 ஆயிரத்து 875 பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களில் 5 பேர்தான் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டும் பிளஸ்–2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்த நிலையில் கூட 30 பேர்தான் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தி வேண்டாம் என்று ஒருபக்கம் சொன்னாலும், பாரத இந்தி பிரசார சபா நடத்தும் இந்தி படிப்புகளில், தென்மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்குவதில் அரசியலை கலந்துவிடாமல், படிக்கப்போகும் மாணவர்கள், அவர் களை படிக்கவைக்கும் பெற்றோர்களின் கருத்துகளை அறிந்து, இதுபற்றி ஒரு திட்டவட்டமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
உலக செய்திகள்

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 மாணவர்கள் 2 வார்டன்கள் பலியாகியுள்ளனர்.
செப்டம்பர் 14, 2017, 08:43 AM

கோலாலம்பூர்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளனர். பள்ளியின் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து இது என்று மலேசிய தீ அணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

DINAKARAN
2017-09-14@ 00:22:10




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் அதிபராக இருந்த டோனி டான் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். சிங்கப்பூரில் அதிபராவது என்பது கெடுபிடிகள் நிறைந்தது என்ற நிலையில் தற்போது மலாய் இனத்தை சேர்ந்தவர்களே தேர்தலில் போட்டியிடலாம் எனவும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப்(63) உள்பட 5 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தொழிலதிபர்கள் முகமது சலே மரிக்கான் மற்றும் பரீத் கான் ஆகிய இருவரின் மனுக்கள், தகுதிக்கு குறைந்தபட்ச தேவையான 2 விதிமுறைகளில் ஒன்றை பூர்த்தி செய்யாததால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த 2 போட்டியாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மலாய் இனத்தை சேர்ந்த ஹலீமா யாகோப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை சந்திக்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவருக்கு இன்று இஸ்தானாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 8வது அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப் தனது வெற்றி குறித்து கூறுகையில், ‘`நான் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்வேன்’’ என்றார். ஹலீமாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சேலம் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் இருந்து நடிகையின் படம் நீக்கம்
2017-09-14@ 00:58:27




ஓமலூர்: ஓமலூர் அருகே ஒரு பெண்ணின் ரேஷன் கார்டில் நடிகை காஜல் அகர்வால் படம் இடம் பெற்றது. காஜல் படத்துக்கு மேல் சம்பந்தப்பட்ட பெண்ணின் படத்தை அதிகாரிகள் ஒட்டினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமம் ஆர்சி செட்டிப்பட்டி கோமாளி வட்டம் என்னும் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சரோஜாவுக்கு கடந்த 11ம் தேதி ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. அதில், அவரது புகைப்படத்துக்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இருந்தது.

இதுகுறித்த செய்தி, நாளிதழ்களில் நேற்று வெளியானது. இதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் நேற்று, சரோஜாவுக்கு வழங்கப்பட்டு ஸ்மார்ட் கார்டினை வாங்கி விசாரித்தார். பின்னர், அந்த கார்டை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மையத்தில் கொடுத்து நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் மறைக்கப்பட்டு, அதற்கு மேல் தற்காலிகமாக சரோஜாவின் புகைப்படத்தை அச்சிட்டு மீண்டும் அவரிடம் வழங்கப்பட்டது.
275 கி.மீ., தூரம் லாரியை ஓட்டி வந்த போதை டிரைவர்பெரும் விபத்து தவிர்ப்பு
பதிவு செய்த நாள்14செப்
2017
01:40

திருமங்கலம், நான்கு வழிச்சாலையில் 25 டன் எடையுள்ள 500 சிமென்ட் மூடைகளுடன் 14 சக்கரம் கொண்ட டைலர் லாரியை 275 கி.மீ., துாரம் போதையில் ஓட்டி வந்ததாக டிரைவர் சுவாமிநாதன்,37, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலியை சேர்ந்த இவர், நேற்று அதிகாலை அரியலுார் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் இருந்து 25 டன் எடையுள்ள 500 மூடைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லம் புறப்பட்டார். இந்த லாரி 14 வீல் கொண்ட டைலர் வகை லாரி.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: லாரி ஓட்டத்தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் சுவாமி
நாதன் போதை ஏறும் வகை குடித்தார். இந்த லாரி பெரும்பாலான பயணத்தை நான்கு வழிச்சாலையிலேயே கடந்துள்ளது. 

கட்டுப்பாடு இழந்த நிலையில் லாரி மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசார், திருமங்கலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல்
கொடுத்தனர். அவர் சக போலீசாருடன் லாரியை விரட்டி ராஜபாளையம் ரோட்டில் மடக்கினார். அப்போதும் சுவாமிநாதன் போதையில் நிதானமின்றி காணப்பட்டார். அவரை கைது செய்தோம்.

டிரைவர் போதைக்கும், அவர் லாரி ஓட்டிய வேகத்திற்கும், லாரியின் வலுவான கட்டமைப்பிற்கும் எதிரே ஏதாவது வாகனம் சிக்கியிருந்தால் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கும். அவரது
ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.
லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மல்லையா

பதிவு செய்த நாள்14செப்
2017
07:01




லண்டன்: மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று(செப்.,14) ஆஜராகிறார்.

பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமறைவாக லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையா ஆஜராக உள்ளார்.
சிங்கப்பூருக்கு முதல் பெண் அதிபர்

பதிவு செய்த நாள்
செப் 13,2017 21:45




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக, ஹலிமா யாகப், 63, போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டார்.

ஆசிய நாடான சிங்கப்பூரில், அதிபர் பதவிக்கான தேர்தல், இந்த மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் முறையாக, இந்தத் தேர்தலில், மலாய் பிரிவினர் மட்டுமே போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம், 55 லட்சம் மக்கள் தொகை உடைய சிங்கப்பூரின் அதிபர் பதவிக்கு, மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் சாலேஹ் மரிகன், பாரித் கான் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, முஸ்லிம் மலாய் பிரிவைச் சேர்ந்த, ஹலிமா யாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகரான யாகப், நாட்டின் முதல் பெண் அதிபராகி உள்ளார். தேர்தல் நடத்தப்படாமலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகவலைதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் வெளுத்து கட்டியது மழை
பதிவு செய்த நாள்13செப்
2017
23:21

அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டையில் நேற்று அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. இதில் பூக்கடை பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அருகில் உள்ள தெருக்களில் வெள்ளம் தேங்கியது. பஜார்களில் உள்ள பிரதான மெயின் வாறுகால்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை நீர் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கி, வெள்ளக் காடாக உள்ளது. 

இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்தவுடன் பூக்கடை பஜார் பகுதிகளில் அதிக அளவில் மழை வெள்ளம் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இப்பகுதிகளில் உள்ள வாறுகால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகாசி: சிவகாசியில் கடந்த ஒருவாரமாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் நிலங்களை உழவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் சிவகாசி நகர், திருத்தங்கல், கிராமப்புறங்களில் சாரல் மழை பெய்தது. இரவு வரை மழை நீடித்தது. விட்டு விட்டு மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ஒரு வாரமாக தொடர் மழையின் எதிரொலியாக
பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் விருதுநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.
ராமநாதபுரத்தில் ரூ.200 க்கு அலைபேசி : அலைமோதிய மக்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்13செப்
2017
22:53

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு அலைபேசி வழங்கிய கடையை நோக்கி மக்கள் திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.ராமநாதபுரம் சாலைத்தெருவில் 'சென்னை மொபைல் போன் ஷோரூம்' நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சலுகையாக 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு போன் வழங்குவதாக அறிவிக்கபட்டது. இதனால் நேற்று காலை 8:00 மணியிலிருந்தே அந்த கடையை நோக்கி மக்கள் படை எடுக்க துவங்கினர். ஒரு சிலருக்கு 200 ரூபாய்க்கு அலைபேசி வழங்கப்
பட்டது. இந்த தகவல் நகர் முழுவதும் பரவிய தால், அந்தப்பகுதியில் அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால் சாலை தெருவில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

கூட்டத்தினை சமாளிக்க முடியாத நிறுவனத்தினர் கடையை அடைத்து விட்டனர். கடைக்காரர்களால் டோக்கன் பெற்றவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் கடை திறக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மருத்துவமனை ஊழியர்கள் போராடினால் நடவடிக்கை
பதிவு செய்த நாள்13செப்
2017
22:15

சென்னை: 'மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறது. உயர் நீதிமன்ற தடை, அரசு எச்சரிக்கையையும் மீறி, போராட்டம் நடக்கிறது.

இதில், சுகாதாரத் துறை ஊழியர்கள் பங்கேற்கவும், அவசர கால விடுப்பு தவிர, விடுமுறை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''ஊழியர்களுக்கு அவசரகால விடுப்பு தவிர, பிற விடுப்புகள் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல், தமிழக அரசுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கோவையில் வலுவிழக்கும் போராட்டம் : பணிக்கு திரும்பிய 2,000 ஆசிரியர்கள்

பதிவு செய்த நாள்13செப்
2017
22:00


கோவை: போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, நடவடிக்கை எடுக்கும் பணிகள் தீவிரமடைவதால், கோவை மாவட்டத்தில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணிக்கு திரும்பியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 11ம் தேதியில் இருந்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. காலாண்டுத் தேர்வு நடப்பதால், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் நீதிமன்றம் தடையை மீறியும், போராட்டங்கள் நடப்பதால், நேற்று, கல்வித் துறை சார்பில், ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'வினியோகிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 5,162 ஆசிரியர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அளித்து, 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் உள்ளோரின் சான்றிதழ்களின், உண்மைத் தன்மையை ஆய்வு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி மாணவர்களை கொண்டு தேர்வு நடப்பதால், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இதனால், போராட்ட களத்தில் பங்கெடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, சரிய துவங்கிஉள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், ''மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், படிப்படியாக பள்ளிக்கு திரும்புகின்றனர்.குறிப்பாக, 7ம் தேதி, 5,162 ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய நிலவரப்படி, தொடக்கக் கல்வித் துறையில், 2,242 பேர்; உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 758 பேர் மட்டுமே விடுப்பு எடுத்து உள்ளனர்,'' என்றார்.
உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
பதிவு செய்த நாள்13செப்
2017
23:32

போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. இங்கு பள்ளிகளில், மாணவர் வருகையை பதிவேட்டில் குறிக்கும் போது, மாணவர்கள், 'உள்ளேன் ஐயா' என, கூறுவது வழக்கம். இனி, உள்ளேன் ஐயாவுக்கு பதிலாக, 'ஜெய்ஹிந்த்' என, கூறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

வரும், நவ., 1 முதல், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அதற்கு முன், சத்னா மாவட்டத்தில், அக். 1 முதல் இது சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. ''ஜெய்ஹிந்த் என்று கூறுவதன் மூலம், மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஏற்படுத்தலாம். இது அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வார்த்தை,'' என, ம.பி., பள்ளிக்கல்வி அமைச்சர் விஜய் ஜா தெரிவித்தார்.அதே நேரத்தில், அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விமர்சித்து வருகின்றன.

'வங்கி துறையில் 5 ஆண்டுகளில் 30 சதவீத வேலை இழப்பு ஏற்படும்'

பதிவு செய்த நாள்13செப்
2017
22:44


புதுடில்லி: 'இயந்திரமயமாக்கல் அதிகரிப்பால், வங்கித் துறையில், அடுத்த,
ஐந்தாண்டுகளில், 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிட்டி குரூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல்
அதிகாரி, விக்ரம் பண்டிட், ஓரிகான் என்ற முதலீட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளார். 

சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:

இயந்திரமயமாக்கல் மற்றும் செயற்கை அறிவு
சார் மேம்பாட்டால், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பலர் வேலையை இழக்க நேர்ந்தது. தற்போது தான், அந்தத் துறை, அதில் இருந்து மீண்டு வருகிறது.

வங்கி சேவையில், இயந்திரமயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால், வங்கிகளின் செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பொறுப்புகள் மைய அலுவலகத்தில் குவிக்கப்படாமல், பகிர்ந்து அளிக்கப்படும்.
'பேக் ஆபிஸ்' எனப்படும், பின்புல பணிகள் எல்லாம் கணினி
மயமாகி விடும். இதுபோன்று பல முன்னேற்றங்கள் ஏற்படுவதால், வங்கித் துறையில், அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, என்றார்.
14.5 மீட்டர் நீளமுள்ள பஸ் சென்னைக்கு இயக்கம்
பதிவு செய்த நாள்13செப்
2017
22:32




பெங்களூரு: நாட்டின் மிக நீளமான, 'ஐராவத் கிளப் கிளாஸ்' பஸ், பெங்களூரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பெங்களூரு விதான் சவுதா முன்பகுதியில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, போக்குவரத்து துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா, உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போக்குவரத்து துறை அதிகாரிகள், வெள்ளை கொடி காட்டி, 23 பஸ்களை துவக்கி வைத்தனர். நாட்டிலேயே மிகவும் நீளமான பஸ் இதுவாகும். இதன் நீளம், 14.5 மீட்டர். இதில், 51 இருக்கைகள் உள்ளன. ஒரு பஸ்சின் விலை, 1.07 கோடி ரூபாய். இப்பஸ்சில், மூன்று 'டிவி, ஏசி', ஒவ்வொரு இருக்கையிலும், 'சார்ஜிங்', ஆட்டோ கியர் டிரான்ஸ்மிஷன், 410 குதிரை சக்தி இன்ஜின் ஆகிய வசதிகள் உள்ளன. முதற்கட்டமாக, இந்த பஸ்கள், பெங்களூரிலிருந்து சென்னை, மைசூரு, விராஜ்பேட்டை, மடிகேரி, கோழிக்கோடு, விஜயவாடா, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மங்களூரு - மும்பை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படவுள்ளன.

போக்குவரத்து துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா கூறுகையில், ''நாட்டிலேயே மிக நீளமான பஸ்கள் வைத்துள்ள மாநிலம் என்ற பெருமை, கர்நாடகத்துக்கு கிடைத்துள்ளது. மிகச்சிறந்த போக்குவரத்து சேவை வழங்கும் மாநிலங்களில், முன்னணியில் உள்ளது,'' என்றார்.
ஓ.பி.சி., வருமான உச்ச வரம்பு அதிகரிப்பு

பதிவு செய்த நாள்13செப்
2017
22:23

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோருக்கு, அரசின் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெறுவதற்கான, வருமான உச்சவரம்பு, எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குழந்தைகள், அந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற, அவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது என்ற விதிமுறை அமலில் இருந்தது.

இந்த உச்ச வரம்பை, எட்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி, மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதற்கான, முறையான அரசாணை நேற்று வெளியானது. இதன் மூலம், எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் பெறும், ஓ.பி.சி., பிரிவினரின் குழந்தைகள், அந்த பிரிவின் கீழ், இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெறலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும் 'ஆதார்' கட்டாயம்?

பதிவு செய்த நாள்14செப்
2017
05:36




புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயமாக்கப்பட உள்ளது.

ஆதார்:

வங்கி, 'காஸ்' மானியம், பான் கார்டு, சிம் கார்டு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'சமூக நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு, டிச., 31க்குள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பரிந்துரை:

இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களுக்கு, ஆதாரை கட்டாயமாக்கும்படி, அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி, மத்திய வெளியுறவுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை திருமணம் செய்யும் இந்திய பெண்களில் சிலர், கணவரால் கைவிடப்படுதல், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது.

இந்திய பெண்கள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்தை பதிவு செய்ய, ஆதாரை கட்டாயமாக்கும்படி, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலமாக, குற்றச்செயல்களில் ஈடுபடும், வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
'நீட்' போராட்டம்: ரூ.5,000 அபராதம்

பதிவு செய்த நாள்14செப்
2017
04:47




'நீட்' நுழைவு தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டும் விதமாக செயல்பட்ட, மாணவ - மாணவியருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்க, போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கு எதிராக, மாணவர்களை வலுக்கட்டாயமாக போராடச் செய்து, கலவரத்தை துாண்டிய, மாணவ - மாணவியருக்கு, சம்மன் அனுப்பி உள்ளோம். நேரில் ஆஜராக தவறினால், தலா, 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஆறு மாதத்திற்கான நன்னடத்தை பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்; அதில், இரண்டு பேர் ஜாமின் கையெழுத்து போட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -




SMART CARD WITH KAJALS PICTURE

MEDICAL COUNCIL OF INDIA

Nature of crime no ground to deny parole or furlough: SC

Dhananjay Mahapatra| TNN | Updated: Sep 13, 2017, 06:40 IST



NEW DELHI: The Supreme Court has ruled that a convict's nature and not the nature of his crime was the determining factor for grant of parole, which formed part of the reformative scheme to help convicts maintain links with family and society to re-enter a normal life after the jail term.

Though it denied parole to 1993 serial train bomb blasts case convict Asfaq, the SC examined the Central Parole Rules, 1955, and said the 62-year-old provisions were archaic and sketchy and needed thorough recasting. It suggested utilising modern research in criminology, which provided methods to study the nature of convicts and their possibility of committing crime during short-term release under parole or furlough.

Parole can be granted many times to a convict undergoing short-term imprisonment and each parole period may extend up to one month. On the other hand, furloughs are for a maximum period of 14 days granted a limited number of times to a convict facing long-jail term.

Discussing the necessity of granting convicts parole or furlough as the case may be, a bench of Justices A K Sikri and Ashok Bhushan said on Monday, "Convicts too must breathe fresh air for at least some time provided they maintain good conduct consistently during incarceration and show a tendency to reform themselves and become good citizens."

Justice Sikri, writing the judgment for the bench, said, "The most important ground is that a prisoner should be allowed to maintain family and social ties. For this purpose, he has to come out for some time so that he is able to maintain his family and social impact. This reason finds justification in one of the objectives behind sentence and punishment, namely reformation of the convict.

"When we recognise reformation as one of the objectives, it provides justification for letting of even life convicts for short periods on parole, in order to afford opportunities to such convicts not only to solve their personal and family problems but also to maintain their link with society. Another objective which this theory underlines is that even such convicts have a right to breathe fresh air, albeit for periods."

The court said many convicts relapsed into crime because they left prison without a strong support network in the family and society and no prospects of employment. "When offenders revert to criminal activity upon release, they frequently do so because they lack hope of merging into society as accepted citizens," it said.

At the same time, the court said public interest should be an important consideration for authorities in deciding whether a convict deserved parole or furlough. "Public interest also demands that those who are habitual offenders and may have tendency to commit crime again after release on parole or having the tendency to become threat to law and order of society should not be released on parole," it said.

TOP COMMENTIts such travesty of justice with such verdicts that would lead even terrorist with horrific criminal acts could walk out of jail on parole.Deshpremi Indian
"Not all people in prison are appropriate for grant of furlough or parole. Obviously, society must isolate those who show patterns of preying upon victims.

"Yet, administrators ought to encourage those offenders who demonstrate a commitment to reconcile with society and whose behaviour shows that they aspire to live as law-abiding citizens. Thus, parole programme should be used as a tool to shape such adjustments," the court added.
mAadhaar can be shown as ID proof in trains

Siddharth Prabhakar| TNN | Sep 13, 2017, 19:12 IST

CHENNAI: The railway ministry has decided to permit mAadhaar as one of the prescribed proofs of identity for rail travel purpose in any reserved class.

mAadhaar is a mobile app launched by UIDAI on which a person can download his or her Aadhaar card. It can be done only on the mobile number to which the Aadhaar has been linked.

For showing mAadhaar, the person has to open the app and enter his or her password.

mAadhaar, when shown by the passenger on his or her mobile after entering the password, will be accepted as proof of identity for undertaking journey in any reserved class.


Government asks 1,222 NGOs to validate bank accounts

Neeraj Chauhan| TNN | Sep 14, 2017, 04:11 IST


NEW DELHI: The ministry of home affairs has asked 1,222 NGOs which received foreign funds to validate their foreign contribution bank accounts or face penal action under Foreign Contribution Regulation Act (FCRA), 2010.

Some of the organisations which have been warned by MHA through a circular include - Sri Ramakrishna Math, Ramakrishna Mission, Indore Cancer Foundation Charitable Trust, Coimbatore Christian Charitable Trust, Delhi School of Social Work Society, Hindu Anath Ashram, Madani Darut Tarbiyat, Rehmat E Alam Hospital Trust Anantanag, Rotary Club of Mumbai Midwest, JK Trust (Bombay), Goonj, Madina Education and Charitable Society, Nagaland Bible College, Indian Institute for Nature and Environment Study.

In its circular, the ministry said all NGOs registered under the Foreign Contribution Regulation Act (FCRA) should receive foreign donations in a single designated bank account.

However, it is seen that a number of such organisations have not validated their foreign contribution designated accounts, causing problems for the banks to comply with the FCRA provisions that they (banks) report to the central government within 48 hours of such receipt or utilisation of foreign contribution, the circular read.

These associations are required to validate their foreign designated accounts and also the utilisation accounts immediately and send the details, including the bank branch, code, account number, IFSC etc through FC 6 form which is available on https://fcraonline.nic.in, the circular said.

"Non-compliance may lead to penal actions as per FCRA 2010," it said.

The centre had sent a notice to the NGOs earlier on updating their bank account.

The Modi government, which has tightened the rules for NGOs, has already cancelled registration of more than 10,000 non-governmental organisations in the last three years for alleged non-filing of annual returns as mandated in the FCRA.

In addition, renewals of more than 1,300 NGOs have been denied or they were closed in recent past for allegedly violating various provisions of the FCRA.

The home ministry has also asked nearly 6,000 NGOs to open their accounts in banks having core banking facilities and furnish details for real-time access to security agencies in case of any discrepancy.

The move was initiated after it was detected that many NGOs have their bank accounts in cooperative banks or state government-owned apex banks or banks which do not have core banking facilities.


TOP COMMENTNGO business is a den of corruption.Sudhip Kumar Sen
In November, 2016, the government had directed more than 11,000 NGOs to file applications for renewal of registration by February 28, 2017.

Of the above, 3,500 NGOs have filed applications for renewal and hence the registration of more than 7,000 NGOs were deemed expired due to non-filing of renewal applications.

Currently around 22,000 FCRA registered NGOs are operating in the country.

CBSE orders psychometric test of all school staff

Sumaiya Yousuf| TNN | Updated: Sep 14, 2017, 04:07 IST

HIGHLIGHTS

CBSE’s guidelines

Conduct psychometry tests of all staff in 2 months and install CCTV cameras at all vulnerable areas in school

Ensure support staff are employed only from authorized agencies, train them to safeguard kids
Access to school by outsiders should be controlled, visitors must be monitored

Representative image.

BHOPAL: Breaking its silence five days after the murder of a child at Ryan International School in Gurugram, the CBSE on Wednesday announced that the onus of safety of students on campus lies solely with school authorities.

The CBSE said this in response to a Supreme Court query in the aftermath of the Gurugram school murder. On Wednesday, the board sent a circular on 'safety of children' to its affiliated schools, giving them two months to complete psychometric evaluation of all staff — teachers, non-teaching employees, sweepers, bus drivers and conductors included.

"Owing to increasing incidents involving safety and well-being of school children, the onus for safety and security of children on campus shall solely lie upon the school authorities," says the circular, adding: "It is the fundamental right of a child to engage and study in an environment where he/she feels safe and is free from any form of physical or emotional abuse or harassment."

The official word from CBSE will assuage parents jolted by the Ryan School murder. What may prove tough for schools is the mandatory psychometric evaluation.

"Schools must get psychometric evaluation done for all the staff employed. Such verification and evaluation for non-teaching staff — such as bus drivers, conductors, peons and other support staff — may be done very carefully and in a detailed manner," the CBSE said.

TOP COMMENT  Initiative is very nice but CBSE must ensure it's implementation in true spirit. Chances of fake psychometric test certificates issued by medical authorities should not happen. CBSE MUST ENSURE THAT ... Read MoreRavindra

Deputy secretary (affiliation) Jaiprakash Chaturvedi has asked schools to strive to promote better understanding among teachers and staff on "laws protecting the safety, security and interests of students". The latest rules require all schools to devise means to "take immediate remedial and punitive action against such violations." "The staff members should also be educated to recognize their protective obligation toward students and to ensure safety and well-being of children in schools," the circular says.

The HRD ministry's guidelines regarding preventive mechanisms and procedures to ensure safety of children in schools must be followed seriously, it adds, pointing out that the board has issued instructions from time to time to implement and sensitize schools to ensure safety of students during school time and while in transit. "These exhaustive provisions are required to be strictly followed by every school affiliated with CBSE to ensure complete safety of schoolchildren in school. In addition, the school authorities may immediately take strict measures to enhance the security of children in schools," the board said.
Govt plans to hire retired teachers who aren't yet 75

Anuja Jaiswal| TNN | Updated: Sep 14, 2017, 06:16 IST

HIGHLIGHTS

Union HRD minister said on Wednesday that the Centre is considering bringing back retired teachers not more than 75 years old.

The minister said the government was considering this in order to bring back good faculty members 
to streamline education.

Union HRD minister Prakash Javadekar. (Photo: PTI)

AGRA: Union HRD minister Prakash Javadekar in a meeting via video-conferencewith authorities of 42 universities across India said on Wednesday that the Centre is considering bringing back retired teachers not more than 75 years old and with "good teaching record" to fill in the large number of vacancies in centrally funded institutions and universities.

The minister, who confirmed the development to TOI, announced this while addressing officials of various universities and institutions. He said these retired teachers could be hired provided their teaching record is good and they are medically fit and that "they stick to academics, not getting into administration".

Javadekar said the government was considering this in order to bring back good faculty members to streamline education and tackle the backlog.

He also suggested that good research scholars from reputed foreign universities, too, could be given teaching assignments in India. He directed all vice-chancellors to bring down vacancies to 10%. He assured all help from the government for this initiative and said it should be the quality of teaching that attracts more attendance in classrooms rather than just physical facilities.

Incidentally, Javadekar had recently announced a major recruitment drive across campuses as new central universities have 53.28% vacancies, followed by NITs with 47%.

TOP COMMENTpeople are losing jobs due to your tax policies and many graduates have no vaccany coz of fake skill development programme. employ young blood, people who are almost at their grave will teach student... Read MoreSuneet

According to Aligarh Muslim University registrar Javed Akhtar, one of the participants in the discussion, AMU alone has 20% vacancies, with 55 of the 195 sanctioned posts for professors lying vacant. Besides, posts for 110 associate professors and 160 assistant professors are vacant against the sanctioned strength of 390 and 1,040 respectively.

Among central universities, the central university of Haryana, according to HRD records, is reeling under 75.11% vacancies as on April 1, 2017, while in the same period Delhi University recorded a total of 54.75% vacancies against permanent positions.
50% of UK’s visitor visas given to Chinese, Indians

TNN | Sep 14, 2017, 05:18 IST

HIGHLIGHTS

Of the total 26.3 lakh UK visas issued during last FY, 20.38 lakh or 77% were for visitors alone.
As many as 4.14 lakh Indians obtained visitor visas, a rise of 10% from the previous FY.
By comparison, those granted to the Chinese, excluding from Hong Kong, rose 24% to 5.36 lakh.


Representative image.

MUMBAI: Visitor visas constituted the bulk of total visas granted by the UK to nationalities in non-European Economic Area (EEA) during financial year ended June 30, 2017. Nearly 50% of visitors were from China and India.

Of the total 26.3 lakh visas issued by the UK during this period, 20.38 lakh or 77% were for visitors alone. The aggregate number of visitor visas reflected a rise of 8% over the previous year ended June 30, 2016. Of the 20.38 lakh visitor visas, Chinese were allotted 26% and Indians 20%. The primary visa categories include visitor, work and study.

According to the UK's home office, as many as 4.14 lakh Indians obtained visitor visas, a rise of 10% from the previous corresponding period. By comparison, those granted to the Chinese, excluding from Hong Kong, rose 24% to 5.36 lakh.

Aside from visitor visas, the most common ones granted to non-EEA nationals include study visas (excluding for short-term courses). During the year ended June 2017, 2.13 lakh such visas were granted, a 4% increase over the previous year.

Visas granted to the three largest non-EEA student nationalities saw an increase too. Chinese students were issued 82,200 visas, a rise of 17% from the previous financial year; Americans 14,400 visas, up just 1% and Indians 11,700, an almost 10% rise, states the UK's home office.

The EEA brings together the Europena Union countries and a few others such as Iceland, Liechtenstein, Norway and Switzerland into a single market—allowing for free movement of people.

Thus, the UK home office statistics on visas include only non-EEA countries. The official statement, though, explains that some non-EEA nationalities such as Americans do not normally require a visa to visit the UK. Consequently, the number of visitor visas granted is much lower than the total number of arrivals.

While Brexit may change the scenario, the number of visas issued to skilled workers remained fairly constant during the 12-month period ended June 30, 2017, compared with the corresponding period in the earlier year. There was an insignificant decline of 1.25% to 92,805 from 93,935.

The earlier trend continued, with Indian nationals accounting for nearly 58% (or 53,366) of the total skilled work visas granted. US nationals were the next largest group with 9,144 Tier-II visas granted to them or 10% of the total in this category.

In the previous corresponding year, Indians had obtained 53,548 Tier-II visas or 57% of the total visas in this category, whereas Americans with 10,019 were issued 11% of these visas.

Work visas across all categories, which include Tier-I (unskilled), youth mobility and temporary ones saw a marginal decline of 2% from 1.66 lakh visas in June 2016 to 1.63 lakh visas.

The impact of Brexit has shown some signs with EU nationals gradually migrating out of the UK. Latest available figures for a 12-month period up to March 2017 show that the net migration or the difference between the number of people entering and leaving the UK, was 2.46 lakh, a decrease of 81,000 from the previous year.

LATEST COMMENTgood push to tourism in UK.Ravie

According to a Uniten Kingdon-based immigration counsel, the government's initial aim was to bring the net migration to below one lakh people a year. However, there has been internal discontent on this issue and the industry fears a brain drain should this happen.

"Indian workers are largely in the skilled category. Further, several of them are on company secondments. It is too early to tell what will be the impact of Brexit on them," says this expert.
Mayiladuthurai express’ no-show upsets passengers

tnn | Sep 11, 2017, 00:25 IST

Trichy: Passengers from the Trichy railway division have appealed to the railway authorities to restart the Mayiladuthurai - Trichy - Mayiladuthurai express (Train No 16233/16234) which has been often cancellated between various sections for more than five months on this section on account of line block and maintenance works. Commuters alleged that despite good patronage for the train, railway authorities were purposely suspending the train in an attempt to cancel it completely.

Mayiladuthurai is on the main line section between Trichy and Villupuram. Three major A-grade stations Mayiladuthurai, Kumbakonam and Thanjavur lie on this section. Even with limited operation of trains, about 40,000 passengers use this section daily for their travel needs, commuters says.Quite often, this express has been cancelled between any two destinations since the first week of April 2017, stating to facilitate engineering works, said A Giri, member of Divisional Rail Users Consultative Committee and vice-president of Thanjavur District Rail Users' Association.

Meanwhile, the Southern Railway has again announced cancellation of the train between Thanjavur - Trichy - Thanjavur from September 10 to 30, for a period of 21 days, he said.

"When the line block and maintenance works were a regular affair, why is it that the officials are disturbing only this section for a long time. For the last five months this has been the case. Because of this, commuters were put to great hardship. Hence, the services of this train may be operated up to Thiruverumbur, instead of cancelling at Thanjavur itself," he suggested.
High court appoints official to block 'Blue Whale'

L Saravanan| TNN | Updated: Sep 13, 2017, 09:31 IST

HIGHLIGHTS

Justices K K Sasidharan and G R Swaminathan took up the issue suo motu as a PIL and passed the orders on Tuesday.

The Court directed the Centre to order internet service providers to remove all the links being circulated on social media platforms.


Representative image

MADURAI: The Madurai bench of the Madras high court on Tuesday directed the central and state governments to bring `over the top' (OTT) service providers into the legal framework of India to check the `Blue Whale' menace. Appropriate steps should be taken immediately to make all OTT services and service providers comply with Indian laws and to provide the required information to law enforcing agencies, it said and asked the Tamil Nadu government to appoint a nodal officer to ensure implementation of the order.

Methods must be devised to ensure that those OTTs which could not be brought within such framework are not accessible in India. OTT is a term used for the delivery of film and TV content via internet without requiring users to subscribe to a traditional cable or satellite service, it said.

Justices K K Sasidharan and G R Swaminathan took up the issue suo motu as a PIL and passed the orders on Tuesday . It said, "Protecting the society is the joint responsibility of the ser vice providers, content providers, lawmakers, society , family and the community at large and of course the users of internet themselves. Court cannot remain mute spectators when the society is faced with such a social menace. Hence, the case is disposed of with directions to the central and state governments."

"Technology companies and websites follow the laws of their respective jurisdiction and as such, they do not provide data and information, in spite of making a request for it by the law enforcing agencies in India on account of violation of India laws," the bench said. "The government must consider amending relevant rules and regulations applicable to Indian subsidiaries and websites making it compulsorily amenable to Indian laws." The Centre should direct internet service providers to take due diligence to remove all the links and hashtags presently being circulated on social media platforms and also in dark net with URLslinks related to the Blue Whale game and to furnish information regarding downloadsaccess to suspicious links.

The state shall designate forthwith vigilance and anti-corruption joint director Dr S Murugan as the nodal officer in terms of Rule 4 of the Information Technology (Procedure and Safeguards for Blocking for Access of Information by Public) Rules, 2009, who must ensure implementation of the order blocking the website and removing links.

The school and higher education secretaries shall take active steps to ensure educational institutions sensitise and "warn students as well as parents not only about this Blue Whale challenge game but also the lurking dangers" in the digital world, the bench said.
Salem woman gets PDS card with Kajal Agarwal’s photo

TNN | Updated: Sep 14, 2017, 00:39 IST

Coimbatore: Saroja Periyathambi, a 64-year-old resident of Kaamalapuram in Omalur taluk, Salem district, was taken aback when she saw the picture of a pretty young woman on her PDS smart card that she collected from the local ration shop on Tuesday.

"When I collected the card I did not notice the photo. When I came home, I saw the photo was of a young woman and not mine. My grandchildren and relatives told me the photo was that of actor Kajal Agarwal. We went to the shop and informed them about this," Saroja said. Also, her date of birth was misprinted on the card.

Arul Prakash, district supplies officer (incharge) of Omalur taluk, told TOI that he got to know about the error through the new media. "I immediately went to the village and met Saroja. I ensured that she received the corrected card within an hour. This was probably due to a mistake in uploading the information into the system," he told TOI. The collector has issued a show cause notice against Arul Prakash and the employee at the ration shop. "The woman in charge of entering the data is a physically disabled person and is only class 8 pass," he said.

An official said the data entry process is done in a browsing centre. "Someone must have downloaded Kajal Aggarwal's image and the employee would have scanned Saroja's image and saved it in downloads. There is a possibility that the mix-up happened while renaming the image," said the official. "But to not know the difference between a 64-year-old woman and a popular young actress is unforgivable," said an official.

Meanwhile, this goof invited harsh criticism from various quarters. PMK leader Ramadoss said this was not the first time such incidents had surfaced and slammed the negligence of the government staff. Other opposition leaders said that since this is an important process that involved data entry into software, only educated people should be used for the job.

Sources told TOI that this was not the first such complaint. "In Omalur alone there have been 24 complaints so far. If people around Saroja had not informed the media, this would also have been hushed up and she would have been made to run from pillar to post to get the correction done," said an official.
Government instructs Tamil Nadu Veterinary and Animal Sciences University to freeze recruitment drive

Ram Sundaram| TNN | Sep 13, 2017, 11:01 IST



Representative image

CHENNAI: On allegations of favouritism in a recent recruitment drive, the state animal husbandry department has instructed Tamil Nadu Veterinary and Animal Sciences University (Tanuvas) not to proceed with appointments to key posts.

The fresh allegations in regard to appointments to the posts of dean, registrar, directors and estate officer cropped up while the Madras high court is hearing a case pertaining to selection of 49 assistant professors for various departments.

Hours before the interview to fill these vacant posts was scheduled on September 5, the varsity received instructions to put the process on hold. The decision came on a complaint by retired director of centre for animal studies, Tanuvas, P I Ganesan.

Ganesan said Tanuvas VC S Thilagar conducted the recruitment in a hasty manner without giving equal opportunity to all eligible candidates. Applications for vacant government posts usually close 30 days from the publication of an advertisement.But in the case of estate officer recruitment process, the university left only 12 days, including six government holidays, before starting the process, Ganesan said.

Estate officer is a technical post on par with the post of dean and director of the varsity. The post had been vacant for nearly four years and S Kuppusamy , who is of the cadre of executive engineer, held additional charge of the post.

Though university statute prescribes that the post be filled by direct recruitment or deputation, the varsity sent out a circular (a copy of which is available with TOI) restricting consideration for this post to university employees he said.

Ganesan filed a PIL in the high court against this and stated that the university assured that all eligible candidates would be considered."It published the advertisement on August 23 and gave [candidates] only 12 days' time," Ganesan said.

He alleged that the university is bending the rules to favour Kuppusamy for the post. "Besides this there are several pending graft charges against Thilagar and he should not be allowed to continue with recruitment process across grades," Ganesan said in his complaint.

In response, the animal welfare department instructed the VC not only to stop the selection process, but also not to call for fresh tenders, sources said.

Despite repeated attempts, VC Thilagar was not available for comment.
Teachers strike is a reason for TN students’ poor NEET performance, Madras HC says

Sureshkumar| TNN | Updated: Sep 13, 2017, 14:36 IST

HIGHLIGHTS

Madras high court pulls up striking teachers in Tamil Nadu

The court says strikes by teachers are also a primary reason for students' low marks in NEET

The court directs the government to file a report by September 18


Madras high court

CHENNAI: Censuring government teachers who are boycotting classes as part of their protest along with other state government employees demanding implementation of the Seventh Pay Commission recommendations, Justice N Kirubakaran of the Madras high court on Wednesday said such boycotts and strikes by teachers were also a primary reason for government school students' low marks in NEET.

"Only five government school students from the state have managed to secure medical seats. Protesting teachers should feel ashamed of this fact. They should know their responsibility. Such persons cannot involve in strikes," Justice Kirubakaran said.

The judge then directed the government to file a report by September 18 explaining the steps taken to bring the protests to an end.

Justice Kirubakaran made the observations while hearing a plea moved by advocate A P Suryaprakasam seeking a direction to the government to form an expert committee to urgently and effectively advise and prepare student community who have scored low marks in NEET and to provide psychological and moral support to face the reality.

TOP COMMENTTN has a serious problem with corruption, OBC reservations to ridiculous levels. Their opposition to NEET only says that they want an easy way to get medical seats. I hope the central govt does not b... Read MoreEland Kumar

The petitioner submitted that student community is not only in a state of shock but also have the feeling of let down by the state and central governments.

It will be therefore appropriate and need of the hour that those state syllabus students who have lost the opportunity of joining medical colleges along with the future aspiring students should be given counselling by their erstwhile class teachers or any other school authorities to prevent tragedies like medical aspirant S Anitha's suicide.
Southern Railway revises timings of Silambu Express, a few other trains

J Arockiaraj| TNN | Sep 13, 2017, 19:34 IST


(Representative image)

MADURAI: Southern Railwayhas announced revision of the timings of Chennai Egmore - Sengottai Silambu Express, starting September 15.

The revision of timings is applicable on the Manamadurai -Sengottai section.

Due to this change, the timings of a couple of passenger trains operating on the section are to be revised to accommodate new schedule of Silambu Express, starting September 15.

According to statement from railways, train number 16181 Chennai Egmore - Sengottai (Bi-weekly) Silambu Express will start from Manamadurai at 5.10am, instead of the present timing of 5.40am.

The train will reach Sengottai at 9.20am as per revised timing against the existing arrival time of 10.10am.

Subsequently some of the passenger train timings are revised.

Train number 56801 Tirunelveli - Sengottai passenger will leave Tirunelveli at 7.25am, instead of 6.55am. The train will reach Sengottai at 9.45am, instead of 9.25am.

Train number 56796 Sengottai - Tirunelveli passenger will leave Sengottai at 6.35am against the present departure timing of 6.45am and arrive at Tirunelveli at 8.40am, instead of at 8.45am.

Train number 76838 Virudhunagar - Karaikudi passenger will leave Virudhunagar at 6.45am as per revised timing against the existing timing of 6.25am. The train will reach Karaikudi at 9.35am. (There is no change in the arrival time at Karaikudi.)

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...