Thursday, September 14, 2017

ராமநாதபுரத்தில் ரூ.200 க்கு அலைபேசி : அலைமோதிய மக்கள் கூட்டம்

பதிவு செய்த நாள்13செப்
2017
22:53

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு அலைபேசி வழங்கிய கடையை நோக்கி மக்கள் திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.ராமநாதபுரம் சாலைத்தெருவில் 'சென்னை மொபைல் போன் ஷோரூம்' நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சலுகையாக 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு போன் வழங்குவதாக அறிவிக்கபட்டது. இதனால் நேற்று காலை 8:00 மணியிலிருந்தே அந்த கடையை நோக்கி மக்கள் படை எடுக்க துவங்கினர். ஒரு சிலருக்கு 200 ரூபாய்க்கு அலைபேசி வழங்கப்
பட்டது. இந்த தகவல் நகர் முழுவதும் பரவிய தால், அந்தப்பகுதியில் அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால் சாலை தெருவில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

கூட்டத்தினை சமாளிக்க முடியாத நிறுவனத்தினர் கடையை அடைத்து விட்டனர். கடைக்காரர்களால் டோக்கன் பெற்றவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் கடை திறக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...