Wednesday, September 27, 2017

Police probing forgery case against 2 nurses

Marksheets tampered with: complainant

The Egmore police are investigating a case filed against two government hospital nurses for allegedly forging their mark sheets and joining work in 2014.
According to the police, the complaint was filed by S. Baby Vasumathi, former director and superintendent, Institute of Obstetrics and Gyanaecology and Government Hospital for Women and Children, Egmore, against Ajantha Rani, a staff nurse at the hospital, and R. Poonkodi, who was working at the same hospital and is now working at the Rajiv Gandhi Government General Hospital.
Ajanta Rani and Poonkodi joined as staff nurses. During the certificate verification, the original higher secondary marks submitted by the duo were found to be forged.

Withhold salary to Revenue Secy. and Collector, HC tells State govt.

‘They should get paid only after they disburse rental arrears for Taluk office’

In an unusual order, the Madras High Court has directed the State government not to pay the Revenue Secretary, the Tiruvallur Collector and the Madhavaram Tahsildar their salary until they disburse the rental arrears for the Madhavaram Taluk office and enter into a lease agreement with the landlord.
Justice S. Vaidyanathan directed the High Court Registry to ensure that a copy of his order reaches the Chief Secretary by Wednesday, since the payment of salary to government servants is due on Thursday in view of the subsequent bank holidays from Friday to Monday on account of Ayudha Puja and Gandhi Jayanti.
Disposing of a writ petition filed by 67-year-old Farida Shaukath, the judge said that the State government officials had ‘grabbed’ her immovable property in 2009 for establishing a Taluk office, and had been occupying it since then, without entering into a lease deed and paying the rent properly.
According to the petitioner, the officials had occupied the property after agreeing to pay a monthly rent of Rs. 1.2 lakh, besides promising to enter into a lease agreement in due course.
She accused the officers of subsequently going back on their commitment and disputing the agreed quantum of rent.
Official apathy
Stating that the Revenue department officials had cited a report by the Public Works department, which had fixed the rent at Rs. 98,925 a month, Ms. Shaukath said that even that amount was not being paid, forcing her to file the case in 2012. The rent, up to May 2016, was paid only after the court passed interim orders.
Taking a serious note of the official apathy towards the landlord, and her being made to run from pillar to post to establish her right, the judge said that the actions of the officials of not entering into a lease agreement till date and not paying arrears of rent since May 2016 were nothing but ‘perfunctory’.
30-day deadline
Ordering that the arrears should be paid and that the lease agreement should be signed within 30 days, Justice Vaidyanathan said, “Till such time... all the three respondents shall not draw any salary and the government shall not disburse their salary to them. After clearing of the arrears of rent and after entering into the lease agreement, as directed above, the entire salary, including the salary arrears, shall be disbursed to the respondents.”
“This court makes it clear that the person who is holding the post in the cadre of the first respondent (Revenue Secretary) should ensure that the subordinates do their work assigned to them promptly, and if any issue arises, the same is brought to the attention of the first respondent by them, pursuant to which, the concerned staff (sic) should be shown the door and the Chief Secretary to the Government of the State of Tamil Nadu shall take necessary steps in that regard,” the judge added.


Vehicles not safe at Velachery station

Risky space:Commuters say a number of thefts have taken place at the Velachery railway station due to the absence of parking attendants.S. R. Raghunathan  

No parking contractor for more than nine months; bicycles prime targets

Commuters who park their vehicles at the Velachery railway station are still waiting for a parking contractor to be appointed by Southern Railway.
It has been more than nine months since the railway station had a parking contractor. Train users visiting the railway station on two-wheelers and cycles are parking their vehicles with a sense of apprehension that their vehicles are not safe.
More than 50,000 persons use the railway station and the parking yard located on the north side is predominantly used by the commuters for parking their vehicles. With the railway station having no parking contractor to take care of the sprawling parking yard, it has become easy for anti-social elements to steal vehicles. Particularly, bi-cycles have become prime targets for the offenders, as it is hard to identify them and can be easily taken away.
M. Ramesh, a resident of Kathiravan Nagar in Velachery, parked his new bicycle at the parking yard on Sunday and on returning from his workplace in the evening, was shocked to find no trace of his cycle. He rued that even if any complaint was lodged with the station master, no steps were being taken.
Several railway stations on the Mass Rapid Transit System remain without parking contractors, resulting in commuters facing severe hardships. Moreover, with the Velachery railway station being used as a multi-modal hub, the commuters want Southern Railway to take steps at the earliest to appoint a railway contractor.
A senior official of the Southern Railway said tenders had been called for parking contractors at the Chepauk, Mundagakanni Amman, Indira Nagar and Triplicane railway stations. At the Velachery railway station, parking contractors are not evincing any interest in the parking tender called earlier, he added.

Banaras Hindu University orders probe by ex-judge

Taking no chances:Security personnel deployed at the BHU on Tuesday.Anand Singh  

Divisional Commissioner report is said to indict administration’s handling of molestation complaint

The Banaras Hindu University on Tuesday formed a high-power inquiry committee headed by a retired judge to probe the incident of lathicharge on protesting students and arson in the campus, which left several students, journalists and policemen injured.
Meanwhile, Varanasi Divisional Commissioner Nitin Gokarn in his probe report submitted to the government is said to have blamed the BHU administration for not handling the incident, particularly the complaint of the molestation victim, in a sensitive manner and indicted the varsity for not taking timely action. The report submitted to Chief Secretary Rajiv Kumar, however, has not been made public.
CM Yogi Adityanath had ordered the Divisional Commissioner and Varanasi ADG Vishwajit Mahapatra to probe the incident that took place on Saturday night.
BHU Vice-Chancellor Girish Chandra Tripathi said an inquiry committee headed by retired Allahabad High Court judge Justice V.K. Dikshit had been formed to probe the incident.
Mr. Tripathi said the committee would shed light on ‘all aspects’ of the incident. “Whatever the recommendations of the committee, the University will take action on it,” he said. He said he would comment on the commissioner’s report after reading it. Amid speculation that the government had ordered a judicial probe, UP Minister Shrikant Sharma said only two existing probes stood in the BHU case — one by the ADG-Divisional Commissioner and the other by the DM of Varanasi.
Former guest lecturer stabs woman associate professor in Madurai Kamaraj University

J Arockiaraj| TNN | Sep 26, 2017, 16:01 IST




MADURAI: A former guest lecturer in the department of journalism and science communication at MaduraiKamaraj University stabbed the head of the department several times as he was aggrieved over not being recruited for the job in this academic year.

The injured head of the department has been identified as S Jenefa, who is an associate professor. She was admitted to a private hospital where her condition was said to stable.

The accused, Jothimurugan, 34, of Kulamangalam, was working as a guest lecturer in the department last year. He was teaching practical classes on photography and layout designing. However, his contract was not renewed due to his poor performance last year.

The guest lecturers are selected by the department based on requirement. Jothimurugan had approached department again requesting him to be reappointed. However, last Friday, the department conducted an interview and selected two people as guest lecturers.

Jothimurugan came to the department on Tuesday morning and met head of department Jenefa in her chamber. He drew a knife and stabbed her multiple times.

He quietly left her chamber but remained on the campus.

Hearing Jenefa's screams, students came to help her. She was rushed to a primary health care centre at Nagamalai Pudukottai. Later, she was shifted to a private hospital in Madurai.

Students caught hold of Jothimurugan and handed him over the Nagamalai Pudukottai police who reached the spot after being informed about the murder attempt. The police registered a case.

TOP COMMENTThe quality of education is becoming worst in the recent times, partly because of the reservation policy and partly because the hope to get white collar job if somehow get the degree. Many scholars r... Read MoreMani

MKU vice-chancellor P P Chellathurai visited Jenefa in the hospital.

Addressing reporters later, Chellathurai said it was a shocking incident. "A head of department can't provide jobs for all applicants, and there are certain norms and requirements from candidates for appointment. The university will take some precautionary measures for the safety of the teaching and non-teaching staff," he said.
Southern Railway to run special trains between Tambaram and Sengottai in October

Siddharth Prabhakar| TNN | Sep 26, 2017, 20:14 IST

(

CHENNAI: Southern Railway has announced Tambaram-Sengottai-Tambaram special fare trains which will run almost every day in October.

No 06069 Tambaram - Sengottai special fare trainwill leave Tambaram at 6am on October 2, 4, 5, 6, 7, 9, 11, 12, 13, 14, 16, 18, 19, 20, 21, 23, 25, 26, 27, 28 and 30. The train will reach Sengottai at 6pm the same day.

No 06070 Sengottai - Tambaram special fare special train will leave Sengottai at 6am on October 3, 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15, 17, 19, 20, 21, 22, 24, 26, 27, 28, 29 and 31. The train will reach Tambaram at 7pm the same day.

The train will consist of one AC chair car, six second class chair car and seven general second class coaches.

LATEST COMMENTI wish the fare is passenger fare o that it caters for the BPL. It will also lessen the burden on the road transport.Gopalarathnam Krishna Prasad

It will stop at Chengalpet, Melmaruvathur, Villupuram, Vriddhachalam, Ariyalur, Srirangam, Trichy, Pudukottai, Karaikkudi, Manamadurai, Aruppukkottai, Virudhunagar, Sivakasi, Srivilliputtur, Rajapalayam, Sankarankovil, Kadayanallur and Tenkasi.

Advance reservations will start at 8am on September 27.
Doc caught on camera demanding bribe; govt initiates inquiry

TNN | Updated: Sep 26, 2017, 23:43 IST

Chennai: The state health department has initiated an inquiry into graft charges against the director of Regional Institute of Ophthalmology after a video of him demanding a bribe of Rs 500 to issue a disability certificate to a person with partial blindness.

On Tuesday, citizen action group Arappor Iyakkam released a video of Dr K Sridhar demanding bribe from one of its volunteers. The volunteer, a mechanical engineer who did not wish to be named, suffered from a degenerative eye condition. He was directed by the collectorate in Thiruvarur to get the disability certificate from Chennai as the unit concerned did not have the infrastructure to test his condition.

"Two years ago, when I needed a disability certificate, I was referred to Dr Sridhar. He, in turn, had asked me to meet him at his private clinic in Kolathur, where he used a government seal and asked me to pay Rs 1,000," the youth told TOI. This time, when he was referred, he was better prepared. The video, shot a week ago, shows the doctor signing the youngster's paper and then demanding Rs 500. "I have been cheated by six other people in the past who said they would pay later," the doctor said in the footage.

State health secretary J Radhakrishnan said a two member committee comprising deputy director Dr R Geetha and Kilpauk medical college dean Dr Vasanthamani Palanisamy will hold an inquiry. "
Perarivalan not allowed to meet anyone except kin

TNN | Updated: Sep 26, 2017, 23:47 IST

Vellore: A G Perarivalan, a life convict in Rajiv Gandhi assassination case, has been restricted from meeting anyone expect his family members.

Extending his first spell of ordinary leave from August 24 to September 24 by 30 days, the government has laid down conditions to restrict him from meeting anyone outside his family.

According to the conditions, Perarivalan shall not meet or contact any person other than his family members, he should not give interviews or share any information through social media or participate in any meeting or function. He has to reside at his house and sign daily in police record.

If he violates the condition, the extended ordinary leave till October 24 would cease immediately and he would be asked to surrender before the Superintendent of Prisons of Vellore Central Prison for Men.

However, there was no restriction for Perarivalan to meet his friends and politicians when he was granted 30 days leave on August 24. Hence, the leaders of political parties and fraternity from film industry such as actor Sathyaraj and hundreds of friends, neighbours beelined to his house. It made difficult for police engaged in escort for Perarivalan to control the visitors.
Authorities seal two buildings deviating from approved plan in Chennai

Yogesh Kabirdoss| TNN | Sep 27, 2017, 00:05 IST




CHENNAI: Two under construction buildings were sealed by the Chennai Metropolitan Development Authority (CMDA) on Tuesday for violating the planning permission at George Townand Royapettah. The two buildings situated at Thambu Chetty Street in George Town area and West Cott Road at Royapettah had constructed an additional floor deviating from the approved plan, official sources said.

According to the sources, the construction at George Town had an extra floor, while the builder had obtained permission only for a ground plus one floor from the Greater Chennai Corporation. The CMDA has been earmarked 30 streets in the George Town area for initiating action against the violators, who were carrying out constructions beyond the approved plan. The building at Royapettah had eight floors even as permission was given only for constructing seven floors, sources added.
மர்மக் காய்ச்சலை ஏன் துப்பறியக் கூடாது?

Published : 25 Sep 2017 09:27 IST

அழகிய பெரியவன்





டெங்குவிலிருந்து சற்றே மீண்ட பிறகு இதை எழுதுகிறேன். ஐந்து நாட்களாக அந்தக் காய்ச்சல் என்னைப் படுக்கையில் முடக்கிவிட்டது. இன்னமும்கூட, ’மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்ற நிலைதான். குளிருடன் கூடிய கடும் காய்ச்சல், இருமலும் சளியும், தலைவலி, உடல்வலி, கடும் சோர்வு,உடல் நடுக்கம். இவற்றுடன் தொடரும் அச்ச உணர்வு. நோயாளிகளிடத்தில் மிகுந்த கனிவு காட்டக்கூடிய என் மருத்துவ நண்பர் ஒருவரிடத்தில் சிகிச்சை பெற்றேன்.

முதல் ரத்தப் பரிசோதனையின்போதே, ரத்தத் தட்டுகள் ஒரு லட்சத்து இருபது ஆயிரமாகக் குறைந்திருப்பது தெரியவந்தது (இயல்பளவு:1,00,000-4,00,000 கன மில்லி மீட்டர்). திரவ உணவுகளோடு மருந்துகளை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கச் சொன்ன மருத்துவர், பயப்பட வேண்டாம் என்றார். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால் தினமும் ரத்தப் பரிசோதனை அவசியம் என்று சொல்லிவிட்டார்.

பாதிப்பின் வீச்சு

சிகிச்சைக்குச் சென்ற நான்கைந்து நாட்களிலும் மருத்துவமனையில் காய்ச்சலோடு வந்து நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பார்க்க முடிந்தது. ரத்தப் பரிசோதனை நிலையங்களிலும் இதே காட்சிதான். எங்கள் சிறு நகரில் இருக்கின்ற ஆறேழு தனி மருத்துவ நிலையங்களிலும் இதே எண்ணிக்கையிலான நோயாளிகளின் கூட்டம். அவர்களில் முக்கால் சதவிகிதம் பேருக்குக் காய்ச்சல். அரசு பொது மருத்துவமனைகளிலோ சுற்றுப்பக்க கிராமங்களிலிருந்து காய்ச்சலுடன் மக்கள் வந்தபடியே இருக்கிறார்கள்.

குடியேற்றத்திலிருந்து என்னை நலம் விசாரிக்க வந்திருந்த தம்பி, அங்கும் அரசு மருத்துவமனையிலும், தனி மருத்துவ நிலையங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் அலைமோதுகிறது என்றார். வேலூர் நண்பர் லிங்கம், “எங்கள் தெருவில் என்னைத் தவிர எல்லாருக்கும் காய்ச்சல்” என்றார். இவை மக்களிடமிருந்து கிடைத்திடும் களத் தகவல்கள். அரசாங்கப் புள்ளி விவரங்களல்ல!

சிகிச்சைக்கு வருகிறவர்களில் பெரும்பகுதியினர் குழந்தைகளும் பெண்களும் 50 வயதைக் கடந்தவர்களும்தான். நான் வாழும் சிறு நகரத்திலும், அருகாமை நகரங்களிலுமே இந்த நிலைமை என்றால் தமிழகம் முழுக்க என்ன நிலைமை இருக்கும் என்று கண்களை மூடிக்கொண்டேன். டெங்கு காய்ச்சலால் பாதிப்புடன் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளின் முன்னால் மரண பயத்தோடு நின்று கொண்டிருக்கும் மக்களின் பெருந்திரள் கூட்டம் மனச் சித்திரமாக வந்து நடுங்கச்செய்தது.

படுக்கையில் சாய்ந்தபடி தொலைக்காட்சி் சேனல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது டெங்கு காய்ச்சல் பற்றிய செய்திகள் பரவலாக வந்தபடியே இருந்தன. குறிப்பாக கொங்கு மாவட்டங்களில் மிக அதிகமாகப் பரவியிருப்பதாக ஒரு சேனல் சொன்னது. சில சேனல்களும் நாளேடுகளும் மிகுந்த அரசக் கடமை உணர்வோடு ‘மர்மக் காய்ச்சல்’ என்றே டெங்கு காய்ச்சலைக் குறிப்பிட்டன. ஆனால் டெங்கு குறித்த செய்திகள் இல்லாமல் அண்மையில் நாளேடுகளைப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை.

அச்சுறுத்தும் தரவுகள்

தமிழகத்தில் தற்போது அதிக அளவில் டெங்கு பரவியிருக்கிறது.கடந்த ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 1,200 டெங்கு நோயாளிகள் சிகிச்சை எடுத்திருப்பதாக சில நாளேடுகள் தெரிவிக்கின்றன. ஆண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும் எனத் தெரியாது.ஆனால் நமக்குக் கிடைத்திடும் புள்ளிவிவரங்கள் உண்மையை மறைத்துக் காட்டப்படுபவை. மக்கள் பீதியடைந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ண ஆலோசனையின்படி வடிவமைக்கப்படுபவை.

ஆனால் புள்ளிவிவரங்களை எவ்வளவுதான் குறைத்துச் சொன்னாலும் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் நிற்கிறது என்பதை மறைக்க முடியவில்லை. எல்லாச் செய்திகளும் நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்வது இதைத்தான். 2008-2012 வரையிலான ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 22,584 டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவர்களில் 40 பேர் இறந்திருப்பதாகவும் (தென் இந்தியாவில் 245 பேர்) தேசிய நோய்க்கடத்தி நோய்த் தடுப்பு திட்ட அறிக்கை சொல்கிறது. நடப்பு ஆண்டு கணக்கு நமக்கு கிடைக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் கூட எங்கள் சிறு நகரத்தில் மூன்று டெங்கு மரணங்கள் நிகழ்ந்ததை நாளேடுகள் கூறின. இப்படி அவ்வப்போது நாம் படித்தவற்றிலிருந்து ஒரு கணக்கை நாமே போட்டு உண்மை நிலையை அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் தொடக்கத்தில் பருவகாலங்களின் போது மட்டும் வருகின்ற இறப்பு விகிதம் இல்லாத நோயாக அறியப்பட்ட டெங்கு, அண்மை ஆண்டுகளில் ரத்தக்கசிவு காய்ச்சல் நோயாக உருவெடுத்திருக்கிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்புகின்ற நன்னீரில் வளரும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிக அளவில் பெருகுவதற்கு பருவநிலை மாற்றங்கள் மட்டுமின்றி மனிதச் செயல்பாடுகளும், அரசின் நிதானப்போக்கும் தான் காரணம்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்க்கைச் சூழல்போலக்கூட இப்போது இல்லை.வேலை இல்லை என்றால் எங்கள் சிறுநகர, கிராமப்புற மக்கள் மும்பை, விஜயவாடா, கொச்சி, பெங்களூரு என்று மிகச் சாதாரணமாகப் போய் வருகிறார்கள். எந்த ஊர் நோய்ப் பரவல் என்றெல்லாம் வேலைக்குப்போகும் மக்களுக்குத் தெரியாது. அந்தந்த ஊர்களில் கிடைக்கும் வருவாயோடு நோய்களையும் சொந்த ஊருக்குக் கொண்டு வருகிறார்கள்.

பொது இடங்களை ஆக்கிரமிப்பது இப்போது ஒரு பொதுவான மனப்போக்கு. புதுவீடு கட்டினால் கழிவு நீர்க்கால்வாய் மீதுதான் வாசல். நீர்நிலைகளை சின்னாபின்னப்படுத்தியாயிற்று. மழை பெய்தால் வெள்ளநீர் போவதற்கும் வழியில்லை. கழிவு நீர் போவதற்கும் வழியில்லை. போக்கிடம் ஏதுமின்றி, வீடற்ற ஏதிலிபோல் பரிதவித்து அங்கங்கே தங்கும் நீரில் கொசு வளர்கிறது.

கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள், நெகிழிக் குவளைகள் கொசு பெருக மற்றொரு முக்கிய காரணம். பொது உணர்வற்று வீசி எறியப்படும் நெகிழிப் பொருட்களும், தமிழ் நாட்டைத் திறந்த வெளி மதுபானக்கூடமாகப் பாவித்திடும் நமது ‘குடிமக்கள்’ வீசியெறியும் பிளாஸ்டிக் குவளைகளும், காலி மதுக் குப்பிகளும் மழை நீரால் நிரம்பி கொசு வளர இடம் தருகின்றன.

உணரப்படாத வலி

வெறுமனே நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கச் சொல்லிவிட்டால் டெங்கு ஒழிந்துவிடுமா? கொசுவை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? நன்னீரில் வளரும் டெங்கு பரப்பிக் கொசுக்கள் பெருகுவதற்கு இன்று பெருமளவு காரணமாக இருக்கும் பிளாஸ்டிக்கை ஏன் அரசு முற்றிலுமாகவோ,பாதியளவிலோ தடை செய்யக் கூடாது? குப்பைகளை அப்புறப்படுத்துவதிலும் கால்வாய்களையும் நீர்நிலைகளையும் தூர்வாருவதிலும் என்ன சுணக்கம்? மழைக் காலங்களைத் தொடர்ந்து ஊர்கள் தோறும் டெங்கு மருத்துவ முகாம்களை ஏன் நடத்துவதில்லை? 

இவையெல்லாம் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களிடத்தில் இன்று எழும் கேள்விகள்.

குரல் நலிந்திருக்கும் நோயாளிகளின் இக்கேள்விகள் எவையும் அரசின் காதுகளில் போய் விழுந்ததாகத் தெரியவில்லை. ஊடக விவாதங்களிலும்கூட இவை எதிரொலிப்பதில்லை.அங்கு கண்ணீர் வடியும் கதைகளுக்குப் பதிலாய் நெய்வடியும் கதைகளே பரப்பப்படுகின்றன. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற வார்த்தைகளையே இன்னும் எத்தனை நாளைக்கு தூசு தட்டிச் தூசு தட்டிச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

நான் சிகிச்சைக்குப் போனபோது தன் அம்மாவை அணைத்து பிடித்தபடி நோயால் கதறி அழும் சிறுமி ஒருத்தியைப் பார்த்தேன். இப்படி தமிழகம் முழுக்கவும் எத்தனைப் பிஞ்சுகளின் அழுகைகள்? எத்தனை ஓலங்கள்? ’ஈசனு’க்கு அடி விழுந்தால் மட்டும் நாட்டு மக்களுக்கு வலிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு அடி விழுந்தாலோ ஈசனுக்கு வலிக்கக் கூடாது! என்ன நியதி?

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்று அறங்கூறிச் சென்றிருக்கிறான் வள்ளுவன். அவன் சொல்லும் கண்ணீரில் நோயாளிகளின் கண்ணீரும் சேர்ந்திருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்!

- அழகிய பெரியவன்,

கவிஞர், எழுத்தாளர்.
கோரக்பூர் சம்பவம் கற்றுத்தரும் பாடம்!

Published : 26 Sep 2017 10:10 IST

பிரியங்கா சதுர்வேதி, உம்மன் சி. குரியன்




உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டதால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், பிஹாரின் லக்னோவில் ‘அப்செர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தர பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் உரையாற்றினார். உத்தர பிரதேசத்தின் சுகாதார அமைப்பு ‘ஐசியூ’வில் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர், நிலைமையைச் சரிசெய்ய முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அந்தச் செய்தி உள்ளூர் ஊடகங்களில் மட்டும்தான் இடம்பெற்றது. உண்மை இதுதான்: உத்தர பிரதேசத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட கடுமையான மூளைக்காய்ச்சல் பாதிப்புகளுக்காகச் (ஏஇஎஸ்) சிகிச்சை பெற்றுவந்த பல குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

வெளிச்சத்துக்கு வந்த விபரீதம்

800 படுக்கைகள் கொண்ட பி.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, கோரக்பூருக்கும் அண்டை மாவட்டங்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனை ஆகும். 300 கிலோ மீட்டர் சுற்றளவில் சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட ஒரே மருத்துவமனை அதுதான். 2016 செப்டம்பர் 4-ல் மட்டும் அந்த மருத்துவமனையில் 224 குழந்தைகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இது தேசிய அளவில் பெரிய செய்தியாக ஆகவில்லை. அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்தான் முக்கியக் காரணம் என்பது தெரியவராதிருந்தால், தேசிய அளவிலான ஊடகங்களும் கொள்கை நிபுணர்களும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்றைக்கு விவாதித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதுதான்.

உத்தர பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில் 1978 முதல் 2007 வரைம் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவந்திருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் சிகிச்சைக்கு என்று சிறப்பு வார்டுகளை அமைத்ததுடன், சிறப்பு மருத்துவர்களையும் நியமித்தன. 2010-ல் ஒரு லட்சம் பேரில் 1.9% என்று இருந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பு 2012-ல் 0.5%-ஆகக் குறைந்தது. அதேசமயம், கடுமையான மூளைக்காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் குறையவே இல்லை.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் 2006-லிருந்து தடுப்பூசித் திட்டங்களை மத்திய அரசு நடத்திவருகிறது. 2011-ல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசித் திட்டமானது அனைவருக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தில் (யு.ஐ.பி.) சேர்க்கப்பட்டது. 2013-ல் உள்நாட்டுத் தடுப்பூசிக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில், விலை காரணமாக சீனத் தயாரிப்பு மருந்துகள் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றன. அனைவருக்குமான நோய்த் தடுப்புத் திட்டத்தின்படி, ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்காக இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், நான்கில் மூன்று குழந்தகளுக்கு மட்டும்தான் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழ் வெளியிட்டிருக்கும் தகவலில் தெரியவருகிறது.

என்ன செய்ய வேண்டும்?

மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், இந்தப் பாதிப்பு குறித்தும் அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்தும் வீடுதோறும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வது மிக அவசியம். கோரக்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கழிவுநீரால் மாசுபட்ட தண்ணீர் மூலம் இந்த வைரஸ் பரவியிருப்பது தெரியவந்திருக்கிறது. துப்புரவுப் பணிகள், கொசு ஒழிப்பு, திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, சுத்தமான குடிநீர் வசதி போன்றவற்றால் இந்த ஆபத்தைத் தவிர்க்க முடியும். மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு உத்தர பிரதேச அரசு அதிகபட்ச நிதி ஒதுக்க வேண்டும். கோரக்பூரில் மருத்துவ வசதிக் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். குறைந்த செலவில் அரசு – தனியார் கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் பலன்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மரணத்தில் ‘ஸ்க்ரப் டைஃபஸ்’ எனப்படும் உடலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும் ஒருவகை நச்சுக்காய்ச்சலுக்கும் தொடர்பு இருப்பதாக, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்படுத்தப்படாத நிதி

இதற்கெல்லாம் பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். துரதிருஷ்டவசமாக, தொற்றுநோய்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 68% மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது என்றும், அதில் மிகக் குறைந்த சதவீதம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரத் துறையில் செலவிடப்படும் தொகையைப் பொறுத்தவரை உத்தர பிரதேச அரசு மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சி தருகிறது. 2015-16-ல் மட்டும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய ஊரகச் சுகாதாரத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 58% மட்டுமே உத்தர பிரதேச அரசால் செலவிடப்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மழைக் காலங்களில் மூளைக்காய்ச்சல் தொற்று அதிகரிக்கிறது. நெல் பயிரிடப்படும் பகுதிகளில் அறுவடைக்கு முந்தைய காலத்திலும் இந்தப் பாதிப்பு அதிகரிக்கிறது. வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதிகளிலும் இந்தத் தொற்று அதிகம் காணப்படுகிறது. மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் பிற மாநிலங்களிடமிருந்து உத்தர பிரதேச அரசு நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

‘தி இந்து’ (ஆங்கிலம்)

தமிழில்: வெ.சந்திரமோகன்
தேசிய விருது கொடுத்தால் வாங்க மாட்டேன்: விஜய் சேதுபதி

Published : 26 Sep 2017 12:08 IST




‘கருப்பன்’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி

தேசிய விருது கொடுத்தால் அதைவாங்க மாட்டேன் என்று 'கருப்பன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருப்பன்'. செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது:

மனித வாழ்க்கையின் அழகும் ஆரம்பமும் முடிவும் அன்பு தான். முன்பின் தெரியாத கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழும் போது வரும் அன்பு தான் வாழ்க்கையின் ஆதாரமும் கூட. அதை அழகாக சொல்லியிருப்பது தான் 'கருப்பன்'. என் மனைவியாயக தான்யா மிக அழகாக நடித்திருக்கிறார்.

'விக்ரம் வேதா' வெளியாகும் போது, ஒரு டென்ஷன் பரபரப்பு இருந்தது. அதற்குக் காரணம் மக்கள் எதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான். இப்படத்தின் தலைப்பிலிருந்து படத்தினுள் பேசப்பட்டிருக்கும் விஷயம் அனைத்துமே நம் மண் சார்ந்து மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய படம். விழாக்கால விடுமுறையில் வெளியாகும் எனது முதல் படம் 'கருப்பன்'

எதார்த்தமான படங்களை விட கமர்ஷியல் படங்களில் நடிப்பது கடினம். 10 பேரை அடிக்கும் போது வரும் முகபாவனை மிகவும் கடினமானது. எதார்த்தமாக நடிப்பது மிகவும் எளிது. கமர்ஷியல் படங்களை தரம் பிரிப்பது பார்ப்பதில் உடன்பாடில்லை. வசூல் ரீதியாக எந்தப் படங்கள் எல்லாம் மக்களிடையே வரவேற்பைப் பெறுகிறதோ, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கிறதோ அவை அனைத்துமே கமர்ஷியல் படங்கள் தான்.

நான் செய்யும் படங்கள் மட்டுமே சரி என்று பேசியதில்லை. அனைத்து விதமான படங்களும் வர வேண்டும். அவையும் கொண்டாடப்பட வேண்டும். என்னிடம் வரும் கதை சுவாரசியமாக சொல்லப்பட்டு இருக்கிறதா என்று தான் பார்க்கிறேன். நடிகருக்காக மட்டுமே எந்தொரு படமும் ஓடாது என்பதை முழுமையாக நம்புகிறேன். முதல் நாள் முதல் காட்சி முதல் 10 நிமிடங்கள் மட்டுமே நடிகருக்காக இருக்கும், அதற்குப் பிறகு கதை என்ன சொல்கிறது என்பதற்குள் போய்விடுவார்கள். அந்த வேலையை இயக்குநர் பன்னீர்செல்வம் இப்படத்தில் அருமையாக சொல்லியிருக்கிறார்.

விஜய் சேதுபதி என்பவன் பெரிய ஆளெல்லாம் இல்லை. அவனும் ஒரு சாதாரணமான ஆள் தான். அவனுக்கும் மசாலா படம் செய்ய வேண்டும், அவன் அடித்தாலும் 10 பேர் பறக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. பல படங்களில் சிறு கதாபாத்திரம் வரும் போது தவிர்த்து விடுகிறேன். முடிந்தவரை தவிர்த்துவிடுகிறேன், ஆனால் அதையும் மீறி வரும் போது நடித்துவிடுகிறேன்.

ஜல்லிகட்டைப் பற்றி பொதுமக்களே நிறைய பேசியிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது போராட்டம் நடைபெற்றது. அதைப் பற்றி எதையும் பேசவில்லை. அப்போராட்டத்திற்கு நன்றி மட்டுமே தெரிவித்திருக்கிறோம்.

மத்திய அரசு தேசிய விருதுக் கொடுத்தால் வாங்க மாட்டேன். ஏனென்றால் நாம் நசுக்கப்பட்டுக் கொண்டுத்தான் இருக்கிறோம். ரயில் டிக்கெட்டில் நமது மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம், நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இந்திய ஜனநாயகத்தில் அரசியலுக்கு வருவதற்கான அத்தனை உரிமையும் இருக்கிறது. மக்களின் மீது அன்பும் அக்கறையும் இருந்தால் ரஜினி சார் மற்றும் கமல் சார் என்றில்லை யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் வரலாமா, வரக்கூடாதா என்ற பேச்சில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் பற்றிய சிந்தனை, எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் இருக்கிற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

தியாகராஜன் குமாரராஜா மாதிரியான இயக்குநரோடு படம் பண்ணுவது ஒரு அனுபவம். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நடிகனாக வளர்வேன் என நினைக்கிறேன். தியாகராஜன் குமாரராஜாவோடு வேலை செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க?
By சரோஜினி | Published on : 26th September 2017 06:04 PM |




'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே...
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ '

'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின்’ அடவுகளுக்காக கவிஞர் வாலி பிரயோகித்த சொற்கள். காவிய மாதவியைப் போலவே நடிகை மாதவியும் கூட பரதத்தில் சிறந்த ஆளுமை கொண்டவர் என்பதோடு பெயரும் பொருத்தமாக இருப்பதால் இவரையும் அப்படிக் குறிப்பிடுவதில் குற்றமெதுவும் இருக்க வாய்ப்பில்லை.

80 களில் ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, எல்லாம் பாலிவுட்டுக்குச் சென்றதும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் அம்பிகா, ராதா, ராதிகா, பானுப்ரியா கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அம்பிகா, ராதாவுக்கும், பானுப்ரியாவுக்கும் முன்பு சில காலம் தென்னிந்தியத் திரைப்படங்களில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடிகைகளில் மாதவியும் ஒருவர். முதன்முதலில் தமிழில் அவர் அறிமுகமான திரைப்படம் கமலின் சொந்தத் தயாரிப்பான ராஜபார்வை. அதில் கமலும், மாதவியும் இடம்பெற்ற;

‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதே’

-பாடல் இப்போதும் பலரது ஹிட்லிஸ்டில் டாப் டென் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார்களோடு மாதவி நடித்த திரைப்படங்கள்...

தமிழில் ரஜினியோடு விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், தம்பிக்கு எந்த ஊரு, கர்ஜனை, தில்லு முல்லு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல ‘இன்சாப் கெளன் கரேங்கா’ உட்பட இந்தியிலும் ரஜினியுடன் பல படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். கமலுடனும் காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம், சட்டம், ஏக் துஜே கேலியே, எல்லாம் இன்ப மயம், ராஜ பார்வை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். திரையுலகில் மாதவி அறிமுகமானது முதல் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அந்த 17 வருடங்களில் கிட்டத்தட்ட 300 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி தவிர ஒரிய மொழிப்படங்களிலும் மாதவி நடித்திருக்கிறார். 80 முதல் 90 வரையிலான காலகட்டங்களில் இத்தனை மொழிகளிலும் நடித்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் மாதவி உலகம் முழுக்கச் சென்று வழங்கிக் கொண்டு வெகு பிஸியான கலைஞராக இருந்தார்.

பிறந்தது ஆந்திராவில்...

பழைய ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த மாதவியின் அப்பா பெயர் கோவிந்த ஸ்வாமி, அம்மா பெயர் சசிரேகா. இவருக்கு கீர்த்தி குமாரி என்றொரு சகோதரியும், தனஞ்செயன் என்றொரு சகோதரரும் உண்டு. மிகச் சிறு வயதிலேயே உமா மகேஸ்வரியிடம் பரதம் கற்றுக் கொண்ட மாதவி, நாட்டுப்புற நடனத்தை மிஸ்டர் பட் என்பவரிடம் கற்றுக் கொண்டார்.

மாதவி, ஹைதராபத்திலுள்ள ஸ்டான்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பழைய மாணவிகளில் ஒருவர்.

திரையுலகப் பிரவேஷம்...

ஒரு நடன நிகழ்ச்சியின் போது தெலுங்குத் திரையுலக பிரம்மாக்களில் ஒருவரான இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் தாசரி நாராயணராவின் கண்களில் மாதவி படவே, அவரது அருமையான பாவங்களால் ஈர்க்கப்பட்ட தாசரி தனது தயாரிப்பில் நரசிம்ம ராஜூ(விட்டலாச்சார்யா படங்களின் ஏகதேச நாயகன்), மோகன்பாபு நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த தூர்பு படமாரா (கிழக்கு, மேற்கு) எனும் படத்தில் மாதவியை நாயகியாக்கினார். இப்படித்தான் தொடங்கியது மாதவியின் திரையுலகப் பயணம். அதன் பிறகு அவரால் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி தொடர்ந்து 17 வருடங்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒரியா எனப் பன்மொழிகளில் பிஸியான நடிகையாகத் திகழ்ந்தார்.

மாதவியின் கணவர் ரால்ப் ஜெய்தீப் ஷர்மா (கணவரின் அம்மா ஜெர்மனி, அப்பா பஞ்சாபி)



தனது திருமணம் குறித்து மாதவி பேசியதிலிருந்து...

‘என்னுடையது வீட்டினர் பார்த்து செய்து வைத்த அரேஞ்டு மேரேஜ். எங்களுடைய ஸ்வாமிஜி ராமா மற்றும் எனது பெற்றோர்கள் தேடிக் கண்டடைந்த வரன் தான் என் கணவர். திருமணத்திற்கு முன்பு நாங்கள் ஒருமுறை மட்டுமே தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தோம். பிறகு ஏர்போர்ட்டில் வைத்து அவரை ஒருமுறை சந்தித்த போது அவர் எனக்கு நிச்சயதார்த்த மோதிரத்தைப் பரிசளித்தார். சந்தித்த ஒரே வாரத்தில் 1996 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினத்தன்று எங்களுக்குத் திருமணமானது.

ஆயிற்று 17 வருடங்கள்... என் ஸ்வாமிஜியும், பெற்றோரும் எனக்காக மிகச்சிறந்த கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று இப்போது உணர்கிறேன். என் கணவர் என்னைப் பூப்போல பார்த்துக் கொள்கிறார். சிறு வயதிலிருந்தே நான் என் பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான், அது என் திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருக்க வேண்டுமென்பது மட்டுமே! அதுவே என் வாழ்க்கையில் நடந்தது.

பேஸ்புக்கைத் தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடா!
By DIN | Published on : 26th September 2017 06:25 PM |




பீஜிங்: பிரபல சமூக வலை தளங்களான பேஸ்புக், டிவிட்டரைத் தொடர்ந்து தற்பொழுது செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்புக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உலகில் இணைய தள கண்காணிப்பு அதிக அளவில் இருக்கும் நாடுகளில் சீனா முதலிடத்திலுள்ளது. அரசுக்கு எதிரான எந்த விதமான செய்திகளையும் அங்கே நீங்கள் சுதந்திரமாகப் பகிர முடியாது. இதன் காரணமாக 2009-ஆம் ஆண்டில் இருந்தே அங்கே பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகிளின் எல்லா விதமான சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் மேப்புகள் உள்ளிட்ட அனைத்துமே தடை செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்ட்டாகிராமும் தடை செய்யப்பட்டு உள்ளது..

இந்த தடை வரிசையில் தற்பொழுது செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ் - அப்பும் சேர்ந்துள்ளது. இந்த சேவையில் பரிமாறப்படும் தகவல்களை முழுவதும் யாரும் காண முடியாத வகையில் 'என்க்ரிப்ஷன்' செய்யப்படுவதால் இது தொடர்பாக சர்ச்சை இருந்து வந்தது. அதனால் முதலில் வாட்ஸ்-அப் வழியாக சாதாரண செய்திகள் தவிர படங்கள், விடியோக்கள் மற்றும் இதர கோப்புகள் எதையும் அனுப்ப முடியாமல் இருந்தது. தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வாட்ஸ் - அப்பின் இயக்கம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது

ஒரு சில பகுதிகளில் ஒரு சில பேருக்கு வாட்ஸ் - அப் பயன்பாட்டில் இருந்தாலும் அதுவும்முழு வேகத்தில் இல்லாமல் மிகவும் மெதுவாக உள்ளது என்று கூறப்படுகிறது.

வாட்ஸ் - அப்பின் இடத்தினை தற்பொழுது மற்றொரு செய்தி பரிமாற்ற செயலியான வீசாட் பிடித்துள்ளது. ஆனால் வீசாட்டானது பயனாளர்களின் தகவல்களை சீன அரசாங்கத் துறைகளையோடு பகிர்ந்து கொள்கிறது என்று ஒரு தகவல் சில இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றிலும் அரசியல்


By ஆர். வேல்முருகன்  |   Published on : 26th September 2017 01:16 AM  
தமிழகத்தில் எந்த நல்ல காரியம் நடைபெற்றாலும் அதற்கு அரசியல் சாயம் பூசாத, அரசியல்வாதியே இல்லை என்றாகிவிட்டது.
பிற மாநிலங்களில் நிலை இவ்வாறு இல்லை. அவர்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் மாநில நலன் என்று வரும்போது அது உச்சநீதிமன்றமாக இருந்தாலும் கவலையில்லை, கூட்டாக எதிர்க்கின்றனர். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் அதிக அளவில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகளில் அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தைக்கூட திராவிடக் கட்சிகளால் புதுப்பிக்க முடியவில்லை என்பது வேதனை தரும் உண்மை. 
தமிழகத்தைப் பொருத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தன. மத்திய அரசிடம் அப்போது மிரட்டிக் கேட்டிருந்தால் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றிருக்க முடியும். 
தேவையான அமைச்சகத்தைக் கேட்டு மிரட்டிய அரசியல் கட்சிகள் தேவையான மக்கள் நலத் திட்டங்களைக் கேட்டு மிரட்டாததன் காரணம் தெரியவில்லை.
காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட அணைகளைத் தான் இப்போதும் பெற்றிருக்கிறோம். அதன்பின் எத்தனை அணைகளைக் கட்டியிருக்கிறோம்? என்னென்ன மத்திய அரசின் திட்டங்களைப் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறோம்? நாட்டிலுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வரையில் எத்தனை முறை பள்ளிப் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம்? புதிதாகத் தொழில் தொடங்க எத்தனை பேருக்கு அனுமதி தந்திருக்கிறோம்? எத்தனை கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்திருக்கிறோம்? எத்தனை பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம் - இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்?
பட்டுப் புழு கூட தான் வாழும் நாளில் பட்டுக் கூடு கட்டி வாழ்ந்து தன் பெயரைக் காலம் முழுவதும் நிலைத்து நிற்கச் செய்கிறது. வாழும் காலத்தில் தேனீ தேனைச் சேகரிக்கிறது. 
ஆனால் வாழும் காலத்தில் தன்னுடைய சொந்த மாநிலத்துக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெட்ட பெயரை உருவாக்காமல் இருந்திருக்கலாம் அரசியல்வாதிகளான அமைச்சர்கள்.
ஆட்சியைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அரசியல்வாதிகள் வந்துவிட்டதன் வெளிப்பாடுதான் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதிகளில் தங்கி சுகங்களை அனுபவிப்பது. இவர்கள் சொந்தக் காசு செலவு செய்து அங்கு செல்வார்களா?
இப்போதைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்னை தண்ணீர். இதற்காகத் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கலாம். இதற்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டங்களைத் தீட்டலாம். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றலாம். சிறுவாணி மற்றும் பவானி அணை நீர், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம், முல்லைப் பெரியாறு பாசனத் திட்டங்களில் கேரளத்துடனான கருத்து வேறுபாடுகளைக் களையப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க முயற்சிக்கலாம். 
காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இவற்றில் எல்லாம் உடனடியாக முடிவு எட்டப்படாது. ஆனால் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு அவர்கள் கேட்பதைக் கொடுத்து நமக்குத் தேவையானதைப் பெறலாம்.
கேரளத்துக்குத் தேவை மின்சாரமும் காய்கறிகளும். அவற்றைக் கூடுதலாகக் கொடுத்துத் தேவையான தண்ணீரைப் பெற முயற்சிக்கலாம். இதேபோல கர்நாடகம், ஆந்திரத்தின் தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல முயற்சிக்கலாம்.
மத்திய அரசில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் இதற்கான முயற்சிகளை மாநில நலன் கருதி மேற்கொண்டிருந்தால் ஒரு வேளை இந்தப் பிரச்னைகளே இல்லாமல் போயிருக்கலாம். 
ஆனால் யாருமே மாநில நலனைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது வேதனை தரும் உண்மை. அனைத்து அமைச்சர்களுமே தத்தமது கட்சி, தங்களது சொந்த நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டனர் என்பது கண்கூடு.
இதுவரை தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த மிகப் பெரிய ஆளுமையான ஜெயலலிதா மறைந்துவிட்டார். பொதுவாழ்வில் பொன்விழா கண்ட கருணாநிதியால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. 
ஜெயலலிதா மறைந்தபோது மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியதும், கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க அ.தி.மு.க.வின் தம்பிதுரை சென்றதும் தமிழகத்திலும் ஆரோக்கிய அரசியல் வளரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது.
எப்படியாவது தாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துத்தான் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். அவ்வாறு செயல்படும் அரசியல்வாதிகளின் பெயர் வரலாற்றில் என்றும் நன்றாக நிலைத்து நிற்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கேரள மீனவர்களை இத்தாலியக் கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றபோது அம்மாநிலமே கொதித்தது. இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அங்குள்ள அரசியல் கட்சியினர் பாரபட்சமின்றித் தங்கள் மீனவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
அரசியல்வாதிகளே நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள். ஆனால் மாநில நலன் என்று வரும்போது அதற்கு முக்கியத்துவம் தாருங்கள். அப்போதுதான் வருங்காலம் உங்களை வாழ்த்தும். இல்லையேல் பத்தோடு பதினொன்று என்ற நிலையில்தான் உங்களைப் பற்றிய பதிவுகளும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலக செய்திகள்

அமெரிக்கா வருவதற்கு 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு



அமெரிக்கா வருவதற்கு வடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாட்டு பயணிகளுக்கு தடை ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு

செப்டம்பர் 26, 2017, 04:15 AM
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக்கொண்டதும் அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த வகையில் ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு 90 நாட்கள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். இது அங்கு பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்ததுடன், கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த நிலையில், 6 நாடுகள் மீதான தற்காலிக தடை தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் டிரம்ப் புதிய தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், ஏற்கனவே உள்ள தடை பட்டியலில் இருந்து சூடான் நீக்கப்படுவதாகவும், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 3 நாடுகள் சேர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், வடகொரியா, வெனிசுலா, சாத் ஆகிய 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவானது அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தடை உத்தரவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள டிரம்ப், “அமெரிக்காவை பாதுகாப்பான நாடாக்குவதே என்னுடைய முதல் இலக்கு. தடை விதிக்கப்பட்டு உள்ள அந்த 8 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதித்தால் நாம் பாதுகாப்புடன் இருக்க முடியாது” என குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை



அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை

செப்டம்பர் 27, 2017, 04:45 AM
ஹூஸ்டன்,

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துள்ளார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்.

இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் சார்பில், மியாமி அருகே அமைந்துள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

இதில் 50 மில்லியன் டாலரை ரொக்கமாகவும், மீதி 150 மில்லியன் டாலரை 3¼ லட்சம் சதுர அடி நிலமாகவும் வழங்கி உள்ளனர்.

இந்த நன்கொடையை பயன்படுத்தி அந்த பல்கலைக்கழகம், ஒரு பிராந்திய வளாகத்தை தொடங்கும்.

அதன்மூலம் இந்தியாவில் இருந்து வருகிற டாக்டர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றதாகும் என டாக்டர் கிரண் பட்டேல் கூறினார்.

மேலும் புளோரிடா மாகாணத்தில் உலகத்தரம் வாய்ந்த சுகாதாரத்தை உருவாக்கவும் இவர்களது நன்கொடை பக்கபலமாக அமையும்.

இந்தப் பல்கலைக்கழகம், ஆண்டுக்கு 250 டாக்டர்களை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்லவி பட்டேல் கூறும்போது, “நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடனான எங்களது கூட்டு ஆயிரக்கணக்கான டாக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா குணம் அடைவதற்காக மாணவர்களுக்கு அலகு குத்தியது ஏன்? தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்



ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவர் குணமடைய வேண்டி 20 மாணவர்களுக்கு அலகு குத்திய சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

செப்டம்பர் 27, 2017, 05:30 AM
புதுடெல்லி

நோட்டீஸ்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவர் குணமடைய வேண்டி சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் 20 மாணவர்களை கட்டாயப்படுத்தி அலகு குத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

வன்முறை செயல்

கடந்த ஆண்டு (2016) அக்டோபர் மாதம் 3-ந் தேதி ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, சென்னை ஆர்.கே.நகரில் 20 மாணவர்களை கட்டாயப்படுத்தி, 2 மீட்டர் நீள அலகுகளை அவர்களது கன்னங்களில் குத்தி வேண்டுதல் செய்யும் சடங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை.

எங்களுக்கு கிடைத்துள்ள புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 7-ந் தேதி தமிழக அதிகாரிகளிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

போலீஸ் கமிஷனர் பதில்

இதற்கு பதில் அளித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மாணவர்கள் பெற்றோர்களின் சம்மதத்துக்கு பிறகே பிரார்த்தனையில் பங்கேற்றனர். சம்பவத்தின்போது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்து இருந்தார்.

பெற்றோர் சம்மதத்தின் பேரிலேயே இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது என்று கூறினாலும் மாணவர்களின் கன்னங்களில் இரண்டு மீட்டர் நீள இரும்பு அலகுகளை குத்தும் இந்த குற்றச்செயல் எந்த அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகிறது என்பது புரியவில்லை. இதனை வேடிக்கை பார்த்த போலீசாருக்கு வெறுமனே எச்சரிக்கை விடுத்தது மிகவும் குறைந்த அளவிலான நடவடிக்கையாகும்.

வழக்குப்பதிவு

எனவே, இதுகுறித்து அலகுகளை குத்தியவர்கள் மீது வடசென்னை போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதுதவிர, தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரும் இதுபோன்ற சடங்குகளை தடுத்து நிறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொலுசு அணிந்த சரஸ்வதி


* நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.

செப்டம்பர் 26, 2017, 07:00 AM

* நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள்.

* சிருங்கேரியில் சரஸ்வதி கோவிலில் ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் சரஸ்வதிதேவியை தரிசனம் செய்யலாம்.

* வேதாரண்யம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியை கண்டு வழிபடலாம்.

* கர்நாடக மாநிலம் பேலூர் என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நடனமாடும் கோலத்தில் காட்சி தரும் சரஸ்வதியை கண்ணார கண்டு மகிழலாம்.

வெளிநாடுகளில் கலைவாணி

* ஜப்பானியர்கள் ‘பென்டென்’ என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார்.

* இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த பூஜைக்கு ‘கலஞ்சன்’ என்று பெயர்.

* விஜயதசமி நாளில் பாலித்தீவில் ‘தம்பாத் ஸரிம்’ என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

தொகுப்பு: நெ.ராமன், சென்னை.
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க வேண்டியது அவசியம்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி


“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அ.தி.மு.க.வை மக்கள் மறந்து விட்டனர்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

செப்டம்பர் 27, 2017, 05:00 AM
சென்னை,

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“நான் அரசியலுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். இது முக்கியமான பயணம் என்பதால் அதற்கான நிலைப்பாடுகள், திட்டங்கள் குறித்து பெரியவர்களிடமும், அனுபவஸ்தர்களிடமும், எனது நண்பர்களிடமும் ஆலோசித்து வருகிறேன். எனது நற்பணி இயக்க தொண்டர்களிடத்திலும் கலந்து பேசுகிறேன். இந்த ஆய்வுகள் முடிந்த பிறகு அறிவிப்பேன்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஒரு முதல்வராக அவரை பார்க்காமல் சாதாரண பெண்ணாக பார்த்தலும் கூட அந்த பெண்மணியின் மரணத்தில் நிறைய ரகசியங்களும், குழப்பங்களும் இருப்பதாக கூறுகின்றனர். அவரது மரணம் சர்ச்சைக்குரியதுதான்.

எனவே ஜெயலலிதா மரணம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்ய வேண்டியது அவசியம். என்னை பின்னால் இருந்து யாரோ இயக்குவதாக சொல்வதில் உண்மை இல்லை. என்னை யாரும் இயக்க முடியாது. நான் யாருடைய பின்னாலும் செல்ல மாட்டேன். மற்றவர்களோடு சேர்ந்துதான் நடப்பேன். எல்லோரும் ஒன்றாக ஒரே இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஊழலை ஒழிப்பதற்காகவே அரசியலுக்கு வர விரும்புகிறேன். ஊழலை ஒழித்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். ஊழலை ஒழிக்காமல் வேறு எந்த பணிகளையும் செய்ய முடியாது. எனது கட்சி மக்களுக்கானது. மக்கள் நலனும் அவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கொள்கையாக இருக்கும். சாதிய விளையாட்டுகள் இருக்காது.

அ.தி.மு.க.வை மக்கள் மறந்து பல நாட்கள் ஆகி விட்டது. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம் கொள்கைகளில் இருக்கும் நல்ல விஷயங்களை நானும் எடுத்து பயன்படுத்திக் கொள்வேன். ஆனாலும் தனி கட்சி தொடங்குவதுதான் எனது நோக்கமாக இருக்கிறது. ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நான் அரசியலில் ஈடுபடப்போவதை தெரிவித்து விட்டேன். அவரும் எப்போது முடிவு செய்தீர்கள் என்று கேட்டார். ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து விட்டதாக கூறினேன்.

விஜய் அரசியலுக்கு வந்தால் போட்டியாக இருப்பாரா? என்று கேட்கப்படுகிறது. இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான விமர்சனங்கள் வைக்கப்படும். வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். தம்பி விஜய்யும் அதுபோல் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை”.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
மாநில செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்



பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு வந்தார்.

செப்டம்பர் 27, 2017, 04:45 AM
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் ஒருசேர குரல் கொடுத்து வந்தன. டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து, முதல்-அமைச்சர் மீதான ஆதரவை திரும்ப பெறுவதாக அழுத்தம் தந்தனர்.

எனவே கவர்னர் என்ன முடிவு எடுப்பார்? என அனைவரும் யோசித்து கொண்டிருந்த நேரத்தில், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அடுத்தடுத்து ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு கடந்த மாதம் 19-ந் தேதி சென்னைக்கு கவர்னர் வந்தார்.

தீர்ப்பை எதிர்நோக்கி...

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு வழங்கும் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும், அதுவரை குடகு சொகுசு விடுதியில் இருந்து சென்னைக்கு வரமாட்டோம் என்றும் டி.டி.வி.தினகரன் அணியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திட்டவட்டமாக உள்ளனர். எனவே சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு என்னவாகும்? என்ற பரபரப்பு அடுத்ததாக தொற்றிக்கொண்டது.

கவர்னர் பற்றி கருத்து

இந்த எல்லா பரபரப்புகளையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று கூறியதெல்லாம் பொய்’ என்றும், ‘ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை’ எனவும் கூறி ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அளித்த பேட்டியில், ‘ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை’ என்றும், ‘சிகிச்சையின்போது ஆஸ்பத்திரிக்கு வந்த கவர்னரை நோக்கி ஜெயலலிதா கட்டை விரலை காட்டியதாக கூறுவதும் பொய்’ என்றும் குறிப்பிட்டார். தீபக் தெரிவித்த தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில் கடந்த 21-ந் தேதி நாக்பூருக்கு புறப்பட்டு சென்ற தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மும்பை வழியாக சென்னைக்கு நேற்று காலை 11.50 மணிக்கு விமானம் மூலம் வந்தார். தற்போது தீபக் குற்றச்சாட்டு கூறிய நிலையில், கவர்னரின் சென்னை வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலையங்கம்

சந்தேகங்களுக்கு தெளிவு பிறக்கட்டும்



இதுவரையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தலைவர்கள் சிகிச்சைபெற்றபோது அவர்களது உடல்நிலை தொடர்பான தகவல்களெல்லாம் மக்களுக்கு தெரியும் வகையில், ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.

செப்டம்பர் 27 2017, 03:00 AM

இதுவரையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தலைவர்கள் சிகிச்சைபெற்றபோது அவர்களது உடல்நிலை தொடர்பான தகவல்களெல்லாம் மக்களுக்கு தெரியும் வகையில், ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது. எம்.ஜி.ஆர். ‘புரூக்ளின்’ மருத்துவமனையில் இருந்தபோதுகூட, அவர் வழக்கமாக அணியும் தொப்பி, கருப்பு கண்ணாடி இல்லாமல், பெரிய ‘பவர்கிளாஸ்’ அணிந்து ஆஸ்பத்திரி உடையோடு படுக்கையில் அமர்ந்திருக்கும் படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியே வந்தன. ஆனால், ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதியிலிருந்து அவர் உயிரைநீத்த டிசம்பர் 5–ந்தேதி வரை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் எப்படி இருந்தார்?, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ற விவரங்களெல்லாம் முழுமையாக மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார், கையெழுத்திட்டு பத்திரிகைக்குறிப்பு அனுப்பினார் என்றெல்லாம் வெளிவந்ததேதவிர, அதுதொடர்பான எந்த படமும் வெளியே வரவில்லை. அவ்வப்போது இட்லி சாப்பிட்டார், தயிர்சாதம் சாப்பிட்டார், ஆப்பிளை நசித்து சாப்பிட்டார் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி கசியவிடப்பட்டது.

இந்தநிலையில், அவர் மரணம் அடைந்தபிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உடல்நலக்குறைவு தொடர்பாக அரசியல் அரங்கில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று 2 அணிகளாக பிரிந்திருந்த நேரத்தில்கூட ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இந்த 2 அணிகளும் இணைந்தபிறகு அதை நிறைவேற்றும்வகையில், 17.8.2017 அன்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதற்குப்பிறகும் பல செய்திகள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகத்தை கிளப்பி வெளிவந்தன. சிலதினங்களுக்கு முன்பு திடீரென்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், ஒரு பெரிய அணுகுண்டை தூக்கிப்போட்டார். ‘‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று ஏதேதோ பொய் சொன்னோம். ஆனால், உண்மையிலேயே அதை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனும், திவாகரன் மகன் ஜெய் ஆனந்தும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ படம் எங்களிடம் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன், தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து ஜெயலலிதா வார்டுக்கு மாற்றப்பட்டபிறகு நைட்டி அணிந்துகொண்டு டி.வி. பார்க்கும் வீடியோ இருக்கிறது. இந்த வீடியோவை சசிகலாதான் எடுத்தார். தேர்தல் நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்று கூறினார். இத்தகைய சூழ்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போது ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கும்வகையில் இந்த கமி‌ஷன் அறிக்கை இருக்கவேண்டும். வழக்கமாக இதுபோன்ற கமி‌ஷனின் பதவிகாலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். இந்த விசாரணை கமி‌ஷன் குறிப்பிட்ட காலத்துக்குள், தன் விசாரணையை முடித்து அறிக்கை தருவதற்கு அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசும், சம்பந்தப்பட்டவர்களும் வழங்கவேண்டும். முழுமையான அளவில், ஆழமாக விசாரணை செய்து எங்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்று கூறும் மக்களுக்கு, இந்த அறிக்கையே பதிலாக அமையட்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு ஒரு தெளிவுபிறக்கட்டும்.
மாநில செய்திகள்

சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் 2 அமைச்சர்களின் அறிவிப்பால் பரபரப்பு


சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் அறிவித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 27, 2017, 06:00 AM
சென்னை,

ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தது வரையில் நடந்தது என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட நாள் தொடங்கி, அவர் மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி வரையில் டாக்டர்கள் தவிர யாரும் அவரை நேரடியாக பார்க்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.

இதனால் டாக்டர்கள் தவிர்த்து வேறு யாரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்களா, பார்க்க அனுமதி அளிக்கப்பட்டதா என்பது குறித்த மர்ம முடிச்சு அவிழாமல் இருந்து வருகிறது.

இதனால் ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றியும், மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்ததால், இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வம், இணைப்புக்கு இதை ஒரு நிபந்தனையாக வைத்தார்.

அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 17-ந் தேதி, சென்னை கோட்டையில் நிருபர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது அவர், “பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த பல்வேறு செய்திகள் ஊடகங் களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

அதை செயல்படுத்தும் விதமாக, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நேற்று முன்தினம் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்த்ததாக கூறி உள்ளனர்.

சென்னையில் நேற்று கீழ்ப்பாக்கம் கூட்டுறவு பதிவாளர் சங்க அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, அந்த துறைக்கான அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நீங்கள் நேரடியாக அவரை பார்த்தீர் களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நான் உள்பட எல்லா அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம்” என பதில் அளித்தார்.

இதே போன்று டெல்லியில் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற பின்னர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், “ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை பார்த்தது குறித்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துகளை கூறி வருகிறார்களே, நீங்கள் அவரை பார்த்தீர்களா, இல்லையா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, நாங்கள் (அமைச்சர்கள்) தினமும் அங்கு செல்வோம். ஒரு முறை அவரை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றும்போது நான் அவரை பார்த்தேன். அப்போது என்னுடன் சில அமைச்சர்கள் இருந்தனர். மற்ற அமைச்சர்கள் சொல்வது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறினார்.

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவை பார்த்தோம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், நிலோபர் கபிலும் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப தடை

2017-09-26@ 11:36:19




பெய்ஜிங்: வாட்ஸ் ஆப் மூலம் செய்தி மற்றும் வீடியோ பரிமாற்றம் செய்ய சீன அரசு தடை விதித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் வீடியோ பரிமாற்றம் கடந்த ஜூலை மாதமே சீனாவில் தடை செய்யப்பட்டது. தற்போது வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகளுக்கும் சீன அரசு தடை விதித்துள்ளது.
பாஸ்போட்டில் உள்ள புகைப்படத்தை விட நேரில் இளமையாக தோன்றியதால் பெண் பாடகி கைது
2017-09-26@ 17:31:08




நியூயார்க்: நடாலியா ஜென்கிவ் என்ற பெண் பாடகி துருக்கி சென்றுவிட்டு திரும்பியபோது நியூயார்க் விமான நிலையத்தில் அவரது பாஸ்போட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதிலிருந்த புகைப்படத்தை விட நேரில் நடாலியா இளமையாக தோன்றியதால் அவர் வேறுஒருவரின் பாஸ்போட்டை வைத்து மோசடி செய்துவிட்டதாக கூறி அவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். பின்னர் உண்மை அறிந்து நடாலியாவை அதிகாரிகள் விடுவித்தனர்.

மேலும் இது தனது அழகுக்கு கிடைத்த வித்யாசமான அங்கீகாரம் என நடாலியா கூறியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பிறகு நடாலியாவுடன் செல்பி எடுக்கவும் ஆட்டோகிராப் பெறவும் ஆர்வம் காட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாடகி நடாலியா ஜென்கிவ் உக்ரேன் நாட்டை சேர்ந்தவர், இவரின் வயது 41 என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் ஜோடிக்கு கல்லூரியில் தடை

2017-09-27@ 00:03:57




கோவை: கோவையை சேர்ந்த சாந்தினி மெகபூப் ஜான். கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் சுதேஷ். இவர்கள் இருவரும் குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி இருவரும் கலப்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனைதொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. கல்லூரிக்குள் நுழைய இவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும், சிறப்பு அனுமதியின் பெயரில் கட்டணமின்றி படித்து வந்ததால், தற்போது முழு கல்வி கட்டணத்தையும் செலுத்தி தேர்வு மட்டும் எழுத அனுமதிப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறுவதாக கூறி, காதல் ஜோடிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர். பிளஸ்-2 வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதால் இலவச கட்டணமில்லா கல்வி அளித்து வந்த கல்லூரி நிர்வாகம் கல்வியில் ஆர்வமுள்ள தங்களை கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஏற்காட்டில் 2வது நாளாக விடிய, விடிய கனமழை: 150 அடி உயரத்தில் இருந்து 80 டன் ராட்சத பாறை உருண்டது

2017-09-27@ 00:04:28




சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் 150 அடி உயரத்தில் இருந்து 80 டன் எடை கொண்ட ராட்சத பாறை உருண்டு சாலையோரத்தில் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் அப்போது மக்கள் நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், அந்த பாறையை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். 2 நாளில் பாறை முழுவதும் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்லும் ரோட்டில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ₹2.80 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதன் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்க

NEWS TODAY 30.12.2025