Thursday, November 6, 2014

.நாணயங்கள் படுத்தும் பாடு...ம.இலெ. தங்கப்பா, சாகித்திய அக்காடமி விருதுபெற்ற எழுத்தாளர்.


எங்கே போனாலும் கையில் ஒரு சிறு துணிப்பையோடு போவது என் பழக்கம். பணப்பை, மூக்குக் கண்ணாடி, தூவல் ஆகியவற்றோடு நிறையச் சில்லறை நாணயங்களும் அதில் இருக்கும். பேருந்தில் போகும் போது பயணிகள், 4 ரூபாய் 5 ரூபாய்ச் சீட்டுக்குக் கவலைப் படாமல் 50 ரூபாய், 100 ரூபாய்த் தாள்களை நீட்டுவதையும், நடத்துநர் எல்லாருக்கும் சில்லறை கொடுக்கப் படாதபாடு படுவதையும் பார்த்துச் சரியான சில்லறை கொடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன். கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கடைக்காரர் சில்லறைக்காகப் படும் தொல்லையைக் குறைக்கவும் செய்கிறேன்.

ஆனால், இப்படிச் சில்லறை கொடுக்கும்போது அவர்கள் மகிழ்கிறார்கள். நான் படாதபாடு படுகிறேன்! எது ஒரு ரூபாய், எது இரண்டு ரூபாய், எது ஐம்பது காசு என்று கண்டுபிடிப்பது பெரிய பாடாகிவிடுகிறது. நம் அரசு ஒரே மதிப்புள்ள நாணயத்தை மிகக் குறுகிய கால இடைவெளியில் சிறிதும் பெரிதுமாய் இரண்டு மூன்று வடிவங்களில் ஏன் வெளியிடுகிறது என்பது புரியாத புதிராயிருக்கிறது! ஒரு ரூபாய் நாணயத்தை விட இரண்டு ரூபாய் நாணயம் பெரிதாயிருந்தால் சரி, சிறியதாயிருக்கிறதே. எப்பொழுதும் சிறிதாயிருந்தா லாவது பழக்கப்பட்டுப் பழக்கப் பட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் இரண்டு ரூபாய் நாணயத்திலேயே ஒன்று சிறிதா யிருக்கிறது! சிறிதாயிருக்கும் இரண்டு ரூபாய்க்கும் ஒரு ரூபாய்க்கும் எழுத்தைக் கூர்ந்து பாராமல் வேறுபாடு கண்டுபிடிக்கவே முடியாது. அதை விட மோசம், ஒரு ரூபாயிலும் சிறியது வேறு, பெரியது வேறு! சிறிய ஒரு ரூபாய்க்கும் ஐம்பது காசு நாணயத்துக்கும் வேறுபாடே தெரியவில்லை! பல முறை இரண்டு ரூபாய் என்று ஒரு ரூபாயைக் கொடுப்பதும், ஐம்பது காசுக்கு ஒரு ரூபாயைக் கொடுப்பதும், இதனால் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையே வேண்டாத உராய்வு ஏற்படுவதும் நேரம் வீணடிக்கப்படுவதும் தேவையா? இந்தப் புதிய நாணய அடிப்பு முறைக்கு எந்த உலக்கைக் கொழுந்து காரணம் என்பது தெரியவில்லை!

பழைய கால நாணயங்களில் இந்தக் குழப்பம் ஏற்பட்டதே இல்லை. அந்தக் காலத்தில் ஒரு சல்லி, இரண்டு சல்லி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டனா, நான்கணா, எட்டணா, ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தன. ஓரணாவுக்குக் குறைந்த மதிப்புடைய நாணயங்கள் செப்பு நாணயங்கள். மற்றையவை நிக்கல் (தொடக்கத்தில் ஓர் உருபா வெள்ளியில் இருந்தது). ஒவ்வொன்றுக்கும் அததற்குரிய தனி வடிவம். இப்பொழுது ஒரு ரூபாயா, இரண்டு ரூபாயா என்று கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பதுபோல் அப்பொழுது பார்க்கத் தேவையே இல்லாதிருந்தது. தொலைவிலிருந்து பார்த்தால்கூடத் தெரிந்துவிடும்.

ஓரணா வட்டமாய், விளிம் பில் வளைவு நெளிவுடன் இருக்கும். இரண்டணா வளைசதுர மாயிருக்கும். மற்றவையெல்லாம் அவை யவற்றின் மதிப்புக்குத் தகுந்தபடி சிறியவும் பெரியவுமாயிருக்கும். எந்த நிலையிலும் குழப்பம் ஏற்பட்டதேயில்லை. நம்மையெல்லாம் குழப்பி வேடிக்கை பார்க்க நம் மக்களாட்சி அரசுக்கு என்ன மன அரிப்போ தெரியவில்லை!

ம.இலெ. தங்கப்பா, சாகித்திய அக்காடமி விருதுபெற்ற எழுத்தாளர்.

HC: Aided private educational institutions are under the ambit of the RTI Act 24 Jul, 2013

RTI Foundation of India

An application was filed with the Thiagarajar College of Engineering in Madurai under the Right to Information (RTI) Act seeking to get information on the fee structure of certain courses. 

The reply to the application from the registrar of the college stated that information could not be provided as the college was a private entity rather than a public authority thus falling outside the ambit of the RTI Act. The applicant then approached the Tamil Nadu State Information Commission (SIC) following which the SIC ordered the college authorities to furnish the demanded information.

 Instead of furnishing the information, the college filed a writ petition with the Madras High Court challenging the SIC order contending that the commission didn't give sufficient chance to the college for presenting its case. It also argued that as the college received only 37% of total expenditure as aid from the State government for payment of salary to teaching and non-teaching staff, it cannot be assumed to be a public authority.

 However, the High Court referred to section 2(h) of the RTI Act and held that if the government provides any concession or grants substantial aid, whether full or partial, the aided private educational institute is deemed to be a public authority and thus falls under the purview of the transparency act.

RTI Foundation of India

UGC brings private universities under RTI Act

Published On: Fri, Mar 14th, 2014
UGC

Nagpur News.

In a decisive measure, the University Grants Commission (UGC) has brought private universities across the country under the scope of Right to Information (RTI) Act 2005. Now, the private universities would not be able to hide information regarding students’ fees, admissions, appointments of faculties and other related information. The RTI Act will be applicable to private universities once the Gazette is published. Till now, the universities coming under States and Central Government were in the ambit of RTI Act. Rashtrasant Tukdoji Maharaj Nagpur University (RTMNU) is also covered by RTI Act.

The UGC recently gave its sanction to Establishment of and Maintenance of Standards in Private Universities Regulations 2014 with some Reforms and Amendments. Once the Regulations come into force, the private universities could not refuse information sought under RTI Act.

NAAC RECOGNITION MUST:

The private universities will have to first share information about infrastructure facilities. Till now, mention of only land was done. The private universities would not be able to start any academic programme without the assessment of National Accreditation and Assessment Council (NAAC) or other Standard Institute. However, the orders of UGC and Human Resource Development Ministry regarding opening of campuses in foreign countries by private universities would not be taken back.

THESE INFORMATIONS WERE BEING HIDDEN:

1) Number of admissions of students.

2) Fees recovered from students.

3) Appointments and profiles of faculties and other staff.

4) Salaries being paid to faculties and other employees.

5) List of eligible guides for PhDs.

Commenting on the UGC decision on bringing private universities under RTI Act ambit, Ved Prakash Mishra, Vice Chancellor of Datta Meghe Medical Institute of Science, said the universities are public institutes. It means that transparency is mandatory. RTI will confirm transparency in private universities, Mishra said.

RTI REPLY FROM MHFW

ஹலோ சார் டாக்ஸி வேணுமா..? - அகவை நூறில் அசத்தும் டிரைவர்!



கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் சார்லஸ் மைக்கேல் டி-சோசா, அங்கு டாக்ஸி ஓட்டுகிறார். இதில் என்னங்க ஆச்சர்யம் என்கிறீர்களா.....மைக்கேல் டி-சோசா கடந்த மாதம் , செஞ்சுரி அடித்திருக்கிறார். அதாவது, ஒன்-டே கிரிக்கெட் மேட்ச்சிலோ அல்லது T20- போட்டியிலோ செஞ்சுரி அடிக்கவில்லை; நிஜ வாழ்க்கையில்! ஆம், கடந்த அக்டோபர் 16-ம் தேதியன்று தனது நுறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் மனிதர்.

100 வயதை தொட்டாலும் மனிதர் அசராமல் இன்னும் அசால்ட்டாக நடக்கிறார்; ஓடுகிறார்; உடற்பயிற்சி செய்கிறார்; அதைவிட முக்கியமாக, இன்னும் கார் ஓட்டுவதில் பிஸியானவராக இருக்கிறார்.

சார்லஸ் மைக்கேல் டி-சோசாவின் கதை ரொம்ப சுவாரஸ்யமானது.

பெத்லஹேமில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த ஒரு கிரேக்கக் குடும்பத்தில், 10-வது மகனாகப் பிறந்த மைக்கேல் டி-சோசா. பிரிட்டிஷ் ராணுவத்தில் டிரைவராகப் பணிபுரிந்தவர். அஸ்ஸாம், பீகார், குஜராத், டெல்லி, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களுக்கு, அன்றைய பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளுக்கு கார் டிரைவராகப் பணிபுரிந்த அனுபவம் மைக்கேலுக்கு உண்டு. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தனது டிரைவர் தொழிலை தொடர்ந்து செய்துவருகிறார்.

மைக்கேலிடம் பேசினோம். கன்னடம் கலந்த தமிழில் மழலையாகப் பேசினார். ‘‘இந்த வயசுலேயும் நான் உற்சாகமா இருக்கக் காரணம் - டிரைவிங்தான். அந்தக் காலத்தில் போர் சமயங்கள்ல , ராணுவத் தளவாடங்களுக்குள்ள ஜீப் ஓட்டுறது ரொம்பக் கஷ்டமா இருக்கும். 20 வயதில் கார் ஓட்டத்துவங்கி கிட்டத்தட்ட 80 வருஷமா கார் ஓட்டுறேன். பென்ஸ், பிஎம்டபிள்யூ, வால்வோ, ஜாகுவார், ஃபோர்டுனு எல்லா பிரபல கார்களையும் ஓட்டின அனுபவம் எனக்கு உண்டு. ஆனா, எனக்கு மேனுவல் கியர் கொண்ட கார்தான் ரொம்பப் பிடிக்கும். என் இளமைக் காலத்தில் நான் ஓட்டணும்னு நினைச்சு இப்போ வரைக்கும் ஓட்ட முடியாத கார் ஒண்ணே ஒன்னுதான்... அது - ப்ளைமவுத்!

அந்தக் காலத்தில் காமராஜர் வெச்சிருந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்போதைக்கு என்னை ரொம்பவும் கவர்ந்த கார் - சத்தியமா மாருதி ஆல்ட்டோதான்! ஆல்ட்டோவில் இருக்கும் ஹேண்ட்லிங், பிரேக்கிங் வேற எந்த கார்கள்லேயும் நல்லா இருக்கிறதா எனக்குத் தெரியலை!’’ என்று சொல்லி அதிரச் சிரித்தார் மைக்கேல்.



உலகில் இதற்கு முன்பு செஞ்சுரி அடித்த டிரைவர்கள் இருவர். ஒருவர், நியூஸிலாந்தைச் சேர்ந்த எட்வர்டு; (வயது 106) இன்னொருவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரெட் ஹேல், . இதில், எட்வர்டு இன்னும் காய்கறி வாங்க, ஷாப்பிங் செய்ய என்று தனது ஃபோர்டு காரைப் பயன்படுத்துகிறாராம். ஃப்ரெட் ஹேல், இப்போது உயிருடன் இல்லை.

சதம் அடித்த மங்களூர் மைக்கேலிடம் மாருதி ஆல்ட்டோ இருக்கிறது. பிக்அப், டிராப் போன்ற சிறு சிறு வேலைகள் செய்து வருவதாகச் சொன்னார். இப்போது, உலகில் பிழைப்புக்காக கார் ஓட்டும் சென்டனேரியன் டிரைவர் - சார்லஸ் மைக்கேல் டி-சோசா மட்டுமே.

வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்!

காய்ச்சலுக்கு ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு



காய்ச்சல் விரைவாக குணமாவதற் காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக் கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு ஏராளமா னோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஆனால் சில டாக்டர்கள் தேவை யில்லாத ஊசிகளை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள், பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக பொது சுகா தாரத்துறை (டிபிஎச்) இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:

காய்ச்சல் சீக்கிரமாக குணமாக சில டாக்டர்கள் மற்றும் பெரும் பாலான போலி டாக்டர்கள் ஸ்டீராய்டு, டைக்லோபினாக் மற்றும் பாராசிட்டமால் ஊசிகளை போடுகின்றனர். ஸ்டீராய்டு ஊசி தற்காலிகமாக காய்ச்சலை குறைக்கும். காய்ச்சலுக்கான காரணத்தை சரிசெய்யாது. அதே நேரத்தில், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

டைக்லோபினாக், காய்ச்சலுக் கான மருந்தே இல்லை. இது ஒரு வலி நிவாரணியாகும். இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போடுவ தால், சிறு நீரகம் பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் காய்ச்சலுக்கு ஸ்டீராய்டு, டைக்லோபினாக்கை ஊசி மூலம் போட்டுக் கொள்ளவோ, மாத்திரை, மருந்தாக உட்கொள்ளவோ வேண்டாம். பாராசிட்டமால் காய்ச்சலுக் கானதுதான். அதை மாத்திரை அல்லது மருந்துகளாக உட்கொள்ளலாம். மாறாக ஊசி மூலமாக செலுத்தினால் வலி அதிகமாக இருக்கும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உடலில் ஏற்படும்.

மாத்திரை, மருந்து

எனவே காய்ச்சலுக்கு டாக்டர் களிடம் செல்பவர்கள் அவரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும். அப்படியும் காய்ச்சல் குறையவில்லை என்றால், வீட்டிலேயே மிதமான சூடு உள்ள தண்ணீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், அக்குள், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் விரைவாக காய்ச்சல் குறையும்.

பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களும் தங்களுடைய சமூக பொறுப்பை உணர்ந்து, காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கை முழுவதும் மாணவனாகவே இருக்கலாம்…



ஒருவன் பிறக்கும் போது துவங்கும் வாழ்க்கை அவனது மூச்சு நிற்கும் போது முடிந்து போகிறது. அதே சமயம், ஒருவன் எப்போது வாழ்க்கையில் கற்றலை நிறுத்துகிறானோ அப்போது அவன் வளர்ச்சியும் நின்று விடும் என்பது வாழ்க்கை கூறும் தத்துவம்.

கற்பது என்பது வெறும் பள்ளி, கல்லூரிகளில் அளிக்கப்படும் படிப்பு அல்ல.. அது வாழ்க்கையில் நாம் பல்வேறு விஷயங்களைத் தேடி நாடி அறிந்து கொள்வதை குறிப்பதாகும்.

கற்றல் என்பது ஒரு தேடலில் துவங்குகிறது. ஒரு விஷயத்தை பற்றி நமக்கு சந்தேகம் எழும்போது, அது பற்றி விளக்கம் பெற தேடி அலைந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும். கற்று தெளிந்த பிறகு அதன் மீது ஏற்படும் ஆர்வம் மேற்கொண்டு அந்த துறையில் பல்வேறு விஷயங்களைக் கற்கத் தூண்டுகிறது.

கற்பது என்பது உங்களது சுய முன்னேற்றத்துக்கு உதவுவதோடு மட்டும் அல்லாமல் உங்களது அறிவினை வளர்ப்பதாகவும் இருக்கும்.

இனி படித்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று ஒரு போதும் சிந்தனையில் தோன்றக் கூடாது. படிக்க வேண்டும், நூல்களை தேடிச் சென்று படிக்க வேண்டும், ஒவ்வொரு நூலும் உங்களது சிந்தனையை ஒவ்வொரு விதத்தில் அசைத்துப் போகும். அப்போது எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தேடி இன்னும் அதிகமாக நீங்கள் கற்க வேண்டியிருக்கும்.

எனவே, ஒரு தொழிலை செய்பவராயினும், பணியாற்றுபவராயினும் உங்கள் கற்றல் திறன் தொடர்ந்து உங்களுடனேயே இருந்து கொண்டிருந்தால் தான் அது உங்களுக்கு உயர்வினை அளிக்கும்.

தேங்கிய நீரில் தான் பாசிப் பிடிக்கும் என்பது போல, ஒரே இடத்தில் தேங்கும் மனிதனின் மனதில்தான் தீய குணங்களும், சேம்பேறித்தனமும் குடிகொள்ளும்.

தமிழகத்துக்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த ஜி.யு. போப், தமிழ் மொழியின் இனிமையை ருசித்தவராகையால் தனது கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
திருக்குறள், திருவாசகம், திருவெண்பாமாலை உள்ளிட்ட பல்வேறு சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், தான் ஒரு தமிழ் அறிஞன் என்று கூட பொறித்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். ஆனால், அவரது அறிவுத் தாகம்தான் அவரை மாணவன் என்று குறிப்பிட விரும்பிற்று.

எனவே, எப்போதும் நாம் மாணவனாகவே இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றை தேடிச் சென்று பயில வேண்டும். முன்பெல்லாம் நூல்களைக் கற்க நூலகங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இணையதளம் என்ற சக்தி வந்த பிறகு, உட்கார்ந்த இடத்திலேயே பல அரிய நூல்களை வாசிக்கும் வசதி வந்துவிட்டது.

இப்போதும் இணையதளத்தில் தேவையற்ற விஷயங்களை பேசுவதை விடுத்து, புதிய விஷயங்களை தேடிப் படிப்போம்… மாணவனாகவே இருப்போம்…

NEWS TODAY 31.01.2026