Friday, January 9, 2015

Students turning their back to dental courses, many seats lying vacant

NAGPUR: Admission process and fee structure has apparently hit the number of students opting for Bachelor of Dental Surgery (BDS) course. This is evident from the fact that of the 50 undergraduate seats at Government Dental College (GDCH), only 33 were filled this year. Besides this, 15 BDS seats in the college have continued to remain vacant for the past four years.

Sources said that students are reluctant to opt for BDS seat in a private college as they have to pay fees for the four-year course at the admission time. This leaves them with no option to shift to GDC in case they happen to get a seat in subsequent rounds of admission. Besides, many students to get admission to MBBS course during later rounds of admission leave the GDC seat.

"We have been writing about these problems to the state directorate of medical education and research (DMER) several times suggesting that we be allowed to take in students who wish to take admission here later. Otherwise all these seats go vacant. They officials have told us they are helpless following Supreme Court order saying that the admission procedure needs to be completed by September 30 which is exactly when the central admission procedure as well as that of the state ends," said Dr Vaibhav Karemore, an assistant professor and the PRO of the college.

GDC had 30 undergraduate seats till four years ago, which increased to 40 in 2010 and to 50 in 2012. Like all other nationally accredited institutions, 15% seats here are reserved for admissions via All India Pre Dental Entrance Examination (AIPDEE). In the last four years, the number of seats filled in the college has been 33, 34, 37 and 36 respectively.

The faculty members have come up with probable solutions for this tricky situation. It includes suggestions like shifting the centralized rounds to an earlier date, not allowing the private colleges to take the entire fees in one go but rather take fees for one semester at a time like government institutions do and making the students fill status retention forms.

Out of the 50 undergraduate seats at Government Dental College (GDC), only 33 have been filled this year. Over the last four years, around 15 Bachelor of Dental Surgery (BDS) seats in the college remain vacant every year. This is due the structure of the admission procedure, and the private colleges taking the entire four years' worth of fees during the admission among other reasons.

Even after a couple of months of getting admitted to the college, people leave their seats if they get shifted to a better institution or get an MBBS seat during the subsequent rounds of admission. Also, those who wish to shift to GDC from the private institutions in these rounds can't do so as they have already paid the hefty fees.


Source: TOI Nagpur

SC raps UGC over physical verification of deemed universities

Logo

The Supreme Court today rapped the University Grant Commission (UGC) for going into "slumber" over conducting physical verification of infrastructure and faculty strength of deemed universities, which were black- listed by a Committee appointed by the Centre.

"Why are you moving on in a snail's pace," a bench of Justices Dipak Misra and Vikramajit Sen observed when it was told that the UGC has not yet submitted the report on seven such universities to the Centre.

"UGC is not waking up. You are a statutory body but unfortunately you are not doing your statutory duty," the bench said and added that "there is a need for you to come out of the slumber".

The remarks were made when Additional Solicitor General Maninder Singh, appearing for UGC was trying to explain the circumstances for the delay by submitting that there was a need to modify the apex court order as the commission cannot go the way P N Tandon Committee made categorisation of the deemed universities like "A", "B" and "C" depending on the fulfilment of criteria.

The UGC said it can only do the inspection and after seeking response of such universities, place the report with the Centre which has to express its view before the apex court.

Taking note of the submission of UGC, Centre and other stakeholders, the bench asked the Commission to comply by its September 26, 2014 direction on seven such universities and Gurukul Kangra Vishwavidyalay within four weeks on phyisical verification.

It said in next one week, the Ministry of Human Resources Development will place its view in the apex court, which posted the matter for hearing on February 23.

The bench said the same order will be there for the rest of the 34 such universities whose physical verification has been conducted and have been found to meet the criteria of being termed as deemed universities.

தன் விவரமா, வாழ்க்கைப் போக்கா? - ஆங்கிலம் அறிவோமே

Return to frontpage

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி “அவர் ரொம்ப shrewd’’ என்று பேசிக் கொள்கிறார்களா? அப்படியானால் நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நிறைய presence of mind இருக்கிறது. புத்திசாலித்தனம், விழிப்புணர்வு இரண்டும் கொண்டவர் நீங்கள்.

ஆனால் நீங்கள் ஒரு பெண்மணியாக இருந்து யாராவது உங்களை shrew என்று கூறினால் (முன்பு குறிப்பிட்ட வார்த்தையின் கடைசி எழுத்து இல்லை என்பதைக் கவனியுங்கள்) “ரொம்ப தாங்க்ஸ்’’ என்று அசட்டுத்தனமாகச் சொல்லி விடாதீர்கள். அது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கும் வார்த்தை. கொஞ்சம் ராட்சசத்தனமான, எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் பெண்மணியைத்தான் shrew என்பார்கள்.

Shrewd, shrew ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடும்போது விநாயகரின் வாகனமும் நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதைக் கூற முடியுமா? விடையைப் பிறகு உறுதி செய்து கொள்ளலாம்.

வித்தியாசம்

இளைஞர்கள் பலருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உண்டாகி இருக்கக் கூடிய ஒரு சந்தேகம் இது. Bio-data, C.V, Resume ஆகிய மூன்றும் ஒன்றுதானா? அப்படியில்லை என்றால் அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்?

Bio-data என்பது Biographical data என்பதன் சுருக்கம். இதில் தன்னைப் பற்றிய விவரங்களை ஒருவர் பதிவுசெய்து கொள்வார். பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி, நாடு போன்ற விவரங்களும் இவற்றைத் தொடர்ந்து கல்வி மற்றும் பணி தகுதிகள் ஆகியவை வருட வாரியாகவும் இடம் பெறும். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாம் அளிப்பதெல்லாம் bio-dataதான். என்ன, அச்சிட்ட தாள்களில் தேவைப்படும் விவரங்களைக் கேட்கிறார்கள், நிரப்புகிறோம், அவ்வளவுதான்.

C.V என்பதன் விரிவு Curriculum Vitae. இவை லத்தீன் வார்த்தைகள். “வாழ்க்கைப் போக்கு’’ (Course of life) என்பது இதன் பொருள்.

Resume என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் summary என்பதாகும்.

பொதுவாக C.V என்பதும் Resume என்பதும் ஒன்றுதான். ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு.

Resume என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள குறிப்புகள் ஏதோ மூன்றாவது மனிதரைப்பற்றி விவரிப்பதுபோல் இருக்கும். (Has secured first rank, Has participated in the cultural events என்பதுபோல).

C.V என்பது தேவைக்கேற்ப அதிகப் பக்கங்களைக் கொண்டதாக அமையலாம். நான்கு பக்கங்கள்கூட இருக்கலாம். கல்வி, பணி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் விவரிக்கப்படும்.

எப்போது C.V.? எப்போது Resume?

C.V என்பது உங்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கப் பயன்படுகிறது. Resume என்பது குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் என்பதை உணர்த்தும் முயற்சி.

வீட்டிலும் சிங்கம்

விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. மூஞ்சூறுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை? Shrew என்பதுதான். (Rat, Mouse ஆகியவை எலியைக் குறிக்கின்றன).

பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன? கார்ட்டூனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

கார்ட்டூனுக்கான ஐடியாவை உருவாக்கியபோது நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது. அதைக் கொஞ்சம் மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே.

தன் அலுவலகச் சகாக்களிடம் ஒருவர் “நான் valiant, valorous, intrepid, audacious’’ என்றாராம். அதைக் கேட்ட ஒருவர், “சார் நீங்க ஆபீஸிலே சிங்கம்தான், வீட்ல எப்படி?’’ என்றாராம். அதற்கு அவர் “வீட்டிலும் நான் சிங்கம்தான்’’ என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ஆனால் என் மனைவி துர்க்கை. என்மேலே உட்கார்ந்து அதிகாரம் பண்ணுவாங்க’’ என்றாராம். (அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொண்ட நான்கு ஆங்கில வார்த்தைகளும் துணிவைக் குறிக்கின்றன என்பதை இந்நேரம் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்).

சிவபெருமானின் வாகனம் எது? உங்கள் விடையை ஆங்கிலத்தில் கூற வேண்டும்..

பசுவும் எருமையும்

அதற்கு முன்னால் Cow என்றால் என்ன? Buffalo என்றால் என்ன? Ox என்றால் என்ன? Bull என்றால் என்ன? Bullock என்றால் என்ன? சொல்லுங்கள். (இப்போது சிலருக்குச் சின்னதாக ஒரு குழப்பம் வந்திருக்கலாம் கடைசி மூன்றில் எது சிவனின் வாகனம் என்று).

முதலில் cow என்றால் எது என்பதைத் தெரிந்து கொண்டுவிடுவோம். இதென்ன அசட்டுத்தனம், cow என்றால் பசுமாடுதானே என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். வளர்ச்சி முழுமையடைந்துவிட்ட பல பெரிய பெண் விலங்குகளை cow என்று குறிப்பிடுவதுண்டு. வளர்ச்சியடைந்த பெண் யானை, பெண் திமிங்கிலம் ஆகியவற்றையும்கூட cow என்பதுண்டு. சந்தேகம் எதற்கு என்பதற்காக cow elephant, cow whale என்றும் சிலர் கூறுவார்கள்.



Buffalo என்றால் எருமை.

எருது என்றால் என்ன? உங்கள் பதில் Ox என்பதா? Bull என்பதா? அல்லது இரண்டு வார்த்தைகளும் சரிதான் என்பதா? (குழப்பம் அடைபவர்கள் கவலைப்பட வேண்டாம். சின்ன வயதில் எருமையை ஆண் என்றும் பசுவைப் பெண் என்றும் அப்பாவித்தனமாக எண்ணியவர்கள் உண்டு. அப்படிக் கூடவா இருப்பார்கள் என்று கேட்காதீர்கள்.

Ox என்றால் மாடு. மாட்டு வண்டியில் பூட்டப்படுவது oxதான். (Ox என்பதன் பன்மை Oxen). ஆஸ்திரேலியாவில் (இந்தியாவிலும் கூடத்தான்) இதை bullock என்பார்கள். Bullock cart என்றால் மாட்டு வண்டி. நிலத்தை உழப் பயன்படும் எருது என்பதும் oxதான்.

பெரும்பாலும் ox எனும் விலங்கின் இனப்பெருக்கச் சக்தியை மருத்துவத்தின் மூலம் நீக்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமாம்.

Bull என்பது காளை. Bison என்றும் கூறுவார்கள். ஸ்பெயினில் புகழ்பெற்ற Bull fighting என்ற விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? ஜல்லிக்கட்டும்தான். ஆகச் சிவனின் வாகனம் bullதான்.

இன்னமும் விளங்காதவர்கள் ‘ஆ’ என அலறலாம். அல்லது ‘கோ’ என்று கண்ணீர் விடலாம். ஆனால் ஆ, கோ என்ற தமிழ் வார்த்தைகள் பசுவை மட்டும் குறிக்கிறதா? அல்லது பால் தரும் விலங்கு எதையும் குறிக்கிறதா என்று கேட்டுவிடாதீர்கள்.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் நாகரிகமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

மற்ற கட்சித் தலைவர்களை விமர் சிக்கும்போது கட்டுப்பாட்டுடன், கண்ணியமாக, நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், பேச்சும், நடவடிக்கையும் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் கட்சித் தலைவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அறிவுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், அதிமுக செயலருமான கே.ஜி. உதயகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் அக்கட்சியினர் 14-3-2014 அன்று குழித்துறையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறினர்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களியக்காவிளை காவல் ஆய்வாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு விவரம்:

அரசியல் கட்சித் தலைவர் பிரசாரத்துக்கு வந்த இடத்தில், இயற்கை உபாதை காரணமாக ஆய்வு மாளிகையில் 20 நிமிடங்கள் இருந்திருக்கிறார். இதை விதிமீறல் என்று சொல்ல முடியாது. வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க முடிகிறது. எனவே, விளம்பரம் மற்றும் அங்கீகாரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

தனி நபரின் விருப்பு, வெறுப்புக்கான இடமாக தமிழக அரசியல் மாறியிருக்கிறது. ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை தரக்குறைவாகப் பேசுதல், வெறுக்கத்தக்க வகையில் எழுதுதல், பொய் வழக்கு போடுதல், அரசியல் கொலைகள் மற்றும் தாக்குதல் ஆகியவை வேதனை அளிக்கிறது.

எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக கருதுகின்றனர். பதவி இழக்கும் முதல்வர் புதிய முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் போகாமல் இருப்பது, சட்டப்பேரவைக்கு போய் ஜனநாயகக் கடமை ஆற்றாமல் இருப்பது எல்லாம் துரதிருஷ்டவசமானது.

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வதில்லை. அரசு விழாக்களில் ஒன்றாக பங்கேற்பதும் கிடையாது.

ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா ஆகிய பெரும் தலைவர்கள் காலத்து அரசியல் மலையேறிவிட்டது. 1970-க்குப் பிறகு எதிரி மனப்பான்மை அரசியல்தான் இருக்கிறது. மேடையில், ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரைப் பற்றியோ அவர்களின் தலைவர்களைப் பற்றியோ அவதூறாகப் பேசினால், அதை அக்கட்சித் தலைவரே ரசித்துக் கேட்கிறார். யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த நடை முறைதான் இப்போது இருக்கிறது.

ஆபாசமாக, அறுவறுக்கத்தக்க, வெட்கப்படத்தக்க வகையில் குற்றச்சாட்டுகள் கூறுவதால், அரசியல் நாகரிகம் காற்றில் பறந்துவிட்டது. அந்தக் காலத்து தன்மையான அரசியல் இப்போது இல்லை.

இதனால், ஜனநாயகம், நாடு மற்றும் மக்கள்தான் பாதிக்கப் படுகின்றனர். பெரும்பாலான கட்சிகளில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் நண்பர்கள்தான் அக்கட்சியின் உயர் பதவிக்கு வருகின்றனர். கட்சிகளுக்கிடையே இருந்த வெறுப்பு அரசியல், இப்போது ஒரு கட்சிக்குள்ளேயே வந்துவிட்டது.

அதிகாரத்துக்கும், பதவிக்கும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. கடந்த மாதம் ஒரு கட்சியில் நடந்த மோதலை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஜனநாயகம் முறையாக இயங்குவதற்கு கட்சியின் உயர்நிலைத் தலைவர்களின் பங்கு மிக முக்கியம். அவர்கள் வழிகாட்டுதலே நாகரிகமான அரசியலுக்கு வழி வகுக்கும். நாடாளுமன்ற ஜனநாயகம் அரசியல் கட்சிகளை (எம்பிக்கள், எம்எல்ஏக்கள்) சார்ந்துள்ளது.

எனவே, அவர்களது நடவடிக்கைகள், பேச்சுகள் எல்லாம் ஜனநாயகத்துக்கு முத்திரை பதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்ற கட்சியையோ, அதன் தலைவர் களையோ விமர்சிக்கும் போது கட்டுப் பாட்டுடன், கண்ணியமாக, நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களது நடவடிக் கைகள் மற்றும் பேச்சுகள் தொண் டர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற வழக்கை தவிர்க்க முடியாது.

முன்னாள் முதல்வரை விமர்சித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கட்டுரை வெளியானபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் இலங்கை அரசை கண்டித்தனர்.

இதையடுத்து, அந்தக் கட்டு ரையை நீக்கியதுடன், இந்திய பிரதமர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வரிடம் இலங்கை அரசு மன்னிப்பும் கேட்டது. இந்தப் போக்கு தொடர வேண்டும்.

அவ்வாறு தொடர்ந்தால், எந்தச் சூழ்நிலையிலும் இதுபோன்ற வழக்கு தொடரப்படமாட்டாது. இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Keywords: அரசியல்வாதிகள், விமர்சனங்கள், நாகரிகம், மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றம் அறிவுரை

TN lawyer sent to jail for criticizing Jaya case judge

Jan 09 2015 : The Times of India (Chennai)

TN lawyer sent to jail for criticizing Jaya case judge

Bosco Dominique

Cuddalore:

A lawyer was on Wednesday awarded a sevenday jail term for pasting posters condemning the judge who convicted AIADMK leader and former Tamil Nadu chief minister J Jayalalithaa in the disproportionate assets case. The lawyer, T Thangakolanjinathan, is a member of the AIADMK advocates' wing in Cuddalore district.

District munsif-cum-judicial magistrate in Tittakudi, S Uthamaraj, found the 50year-old advocate, practising in the same court, guilty of displaying posters containing objectionable comments.

The judge also sentenced him to another seven days in jail for disfigurement of public places. The two sentences would run concurrently. Thangakolanjinathan expressed regret for his actions.

The Tittakudi police sent him to the Cuddalore central prison. Twoweeks after the verdict in the assets case, Thangako lanjinathan put up posters in public places in Tittakudi, criticizing Bengaluru special court judge John Michael Cunha for convicting and sentencing Jayalalithaa to four years of imprisonment and slapping a penalty of `100 crore on her.

Cunha had also sentenced Sasikalaa, Ilavarasi and V N Sudhakaran to four years' imprisonment and fined them `10 crore each.

The posters also carried the names of minister for commercial taxes and registration M C Sampath and MPs A Arunmozhidevan and A Navaneethakrishnan. It cre ated a flutter in the region and the Tittakudi police booked the advocate under Section 3 (penalty for disfigurement by objectionable advertisements) and Section 4 (penalty for unauthorized disfigure ment by advertisements) of the Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959, after the Tittakudi village administrative officer lodged a complaint. Police arrested Thangakolanjinathan and later released him on bail.

AIADMK leaders and workers launched a series of protests after Jayalalaithaa's conviction. The judiciary reacted sharply and pulled up the protesters. In one such action in December last year, the Madras high court directed the Vellore corporation to apologize to Cunha for passing a resolution criticizing Jayalalithaa's conviction. Chief Justice Sanjay Kishan Kaul and Justice M Sathyanarayanan asked the civic body to publish an apology in newspapers and send copies to Cunha along with a copy of the court order. DMK's senior counsel P Wilson filed a public interest litigation pointing out that the resolution passed by the corporation brought disrepute to the judiciary in general.

Samathur town panchayat near Pollachi in Coimbatore district, which too had passed a similar resolution, told the court it had recalled the resolution. The bench directed the government to issue orders to cancel the controversial resolution after Wilson pointed out that the local body had no power to withdraw resolutions and only the government could do so. The court has posted the matter to February 9 for further hearing.

சென்னையில் 38-ஆவது புத்தகக் காட்சி இன்று தொடக்கம்



தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், சென்னையில் 38-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை மாலை தொடங்குகிறது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மொத்தம் 13 நாள்களுக்கு இந்தப் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி தலைமை வகிக்கிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கண்காட்சியைத் தொடக்கி வைக்க உள்ளார். விழாவில் விருதுகளை வழங்கி காவல்துறை ஐ.ஜி க.வன்னியபெருமாள் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

விருதுகள்: சிறந்த பதிப்பாளருக்கான க.கணபதி விருது பி.ரத்தின நாயக்கர் அண்டு சன்ஸூக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ச.மெய்யப்பன் விருது, ஜெயம் புக் சென்டர் ஆர்.ராஜ் ஆனந்த்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது நெல்லை ஆ.கணபதிக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது ஸ்ரீகுமார் வர்மாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது இ.கே.தி.சிவக்குமாருக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி சு.செல்லப்பனார் விருது சிலம்பொலி செல்லப்பனுக்கும், பபாசியின் சிறந்த நூலகர் விருது புதுவை மத்திய பல்கலைக்கழக முதன்மை நூலகர் ஆர்.சம்யுக்தா ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளன.

5 லட்சம் புத்தகங்கள்: 700 அரங்குகளில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன.

இந்தப் புத்தகக் காட்சிக்காகவே பல்வேறு தலைப்புகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களைப் பதிப்பாளர்கள் பதிப்பித்து உள்ளனர்.

கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்துப் பிரிவு புத்தகங்களும் இந்தக் காட்சியில் இடம்பெறுகின்றன.

அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், மற்ற நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் 9 மணி வரையும் காட்சி நடைபெறும்.

காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகும். 12 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை.

புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாள் மாலையும் பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

10 சதவீதம் கழிவு: புத்தகக் காட்சியில் வாங்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு.



நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 38-ஆவது புத்தகக் காட்சி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில் புத்தகங்களை அடுக்கும் பணியில் ஈடுபடும் பதிப்பாளர்கள்.

வழிகாட்டும் வாசிப்புப் பழக்கம்

Dinamani

அறிவுக் கண்களைத் திறக்கும் திறவுகோல் தலைசிறந்த நூல்கள்'தாம் என்றார் ஓர் அறிஞர். ஆனால், அந்தத் திறவுகோலைப் பெறுவதற்கான வழி என்ன என்பதைப் பற்றிய தீவிர சிந்தனைக்கான நேரம் இது.

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை? அவர்களுக்கு வாசிப்பதில் ஈடுபாடு ஏற்பட நாம் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பது பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பதுதான் மிகப்பெரிய சோகம்.

இன்றைக்கு தெருவிலோ, அடுக்குமாடிக் குடியிருப்பிலோ பிள்ளைகள் விளையாடும் ஓசை கேட்டால், கட்டாயம் மின்சாரம் போய்விட்டது என்பதைச் சொல்லாமலே பலரும் தெரிந்து கொள்வர்.

காரணம், வீட்டில் மின்சாரம் இல்லை என்றால்தான் பிள்ளைகளை வெளியே பார்க்க முடிகிறது. மின்சாரம் இருக்கும்வரை வீட்டுக்குள் கணினியிலோ, தொலைக்காட்சியிலோ, ஐபேடிலோ, செல்லிடைப் பேசியிலோதான் அவர்கள் நேரம் கரைந்துகொண்டு இருக்கிறது.

அந்த நேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் ஏற்படுத்தினால் இந்த நிலைமை ஏற்படாது.

இன்றைய சிறுவர்களிடத்தில், பள்ளிப்பாட நூல்களைப் படிப்பதைத் தவிர, மற்ற நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லை; அதைப் பெற்றோர் ஊக்கப்படுத்துவதும் இல்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.

அப்படியே நேரம் கிடைத்தாலும் அதை, இன்றைய தொழில்நுட்பம் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுகிறது. இதனால், ஏற்படப்போகும் ஆபத்தையும் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை; காரணம், அவர்களும் இன்றைய "கைக்குள் உலகம்' என்னும் தொழில்நுட்பத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர்.

கணினிமயம், தொழில்நுட்பம், "கைக்குள் உலகம்' என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதன் மூலம் உபயோகமான விஷயங்களை நாம் தேடிப் பயனடைகிறோமா என்று பார்த்தால், மிகவும் குறைவாகவே இருக்கும்.

"சாட்டிங்' போன்ற வெட்டிப் பேச்சிலும், "ப்ரெüசிங்' என்கிற தேவையற்ற பொழுதுபோக்கிலும்தான் கழிக்கிறோமே தவிர, பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள மிகவும் சிலருக்குத்தான் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

கணினி, செல்லிடைப்பேசி போன்றவை வாழ்க்கையை சுலபமாக்குகின்றன என்பது உண்மை. ஆனால், புத்தகத்தைப்போல செழுமையாக்குகின்றனவா என்பதுதான் கேள்வி.

விழா என்று வந்துவிட்டால் மரியாதை செய்கிறேன் என்ற பெயரில், சால்வைகளைப் போர்த்தி மகிழ்கின்றனர்.

அப்படி மரியாதை செய்ய வேண்டும் என்றால், தலைசிறந்த அறிஞர்களின் நூல்களைப் பரிசளித்தால், வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சில அமைப்புகள் இப்படி புத்தகங்கள் கொடுத்துப் பாராட்டுவதை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. அது பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டால்தான் சிறந்த நூல்கள் வெளிவரும் - பலராலும் வாசிக்கப்படும்.

திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் புத்தகங்களைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொள்வது வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க உதவும்.

பிறந்த நாளுக்குக் குழந்தைகளுக்கு சிறந்த நூல்களைப் பரிசளித்து மகிழும் வழக்கத்தை உருவாக்கிவிட்டால், பெற்றோர் இல்லாதபோது அச்சிறந்த நூல் அப்பிள்ளைகளுக்கு நல்ல வழித்துணையாக - வழிகாட்டியாக அமையும்.

தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய பிள்ளைகளுக்கு படிக்கும் பழக்கத்தை அவர்களது மனத்தில் விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருடையதுதான்.

"some books should be tasted, some devoured, but only a few should be chewed and digested thoroughly'' - அதாவது "சில புத்தகங்களை ருசிக்கலாம், சில புத்தகங்களை விழுங்கலாம், ஆனால், வெகு சில புத்தகங்களை மட்டும்தான் ரசித்துப் புசித்துச் சுவைத்து முழுமையாக ஜீரணம் செய்யலாம்' என்று நூல்களை வகைப்படுத்துகிறார் ஃபிரான்சிஸ் பேகன் (ஊழ்ஹய்ஸ்ரீண்ள் ஆஹஸ்ரீர்ய்) என்ற ஆங்கிலேய அறிஞர்.

இவ்வாறு மூன்று வகையான நூல்களும், சென்னையில் தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வரப்போகின்றன.

இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? எதை நம் பிள்ளைகளுக்குப் பரிசளித்து மகிழப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

ரசித்து, ருசித்து, ஜீரணிக்கப்பட வேண்டிய நூல்களை இன்றைக்கு பல பதிப்பகங்கள் வெளிக்கொண்டு வந்தாலும், விழுங்க வேண்டிய நூல்கள்தான் புத்தகக் கண்காட்சியை பெருமளவில் அலங்கரிக்கின்றன.

அதனால், வாசகர்களே.., பெற்றோரே... ஜீரணிக்கும் நூல்களையே தேடிப்பிடியுங்கள் - அதையே படியுங்கள் - அதையே பரிசளித்து மகிழுங்கள்.

குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.

நல்ல புத்தகங்களை இளைய தலைமுறை வாசிக்கத் தொடங்கினால், நல்ல சமுதாயம் தானாகவே மலரும்!

NEWS TODAY 25.01.2026