Tuesday, January 13, 2015

மேடையேற எது தகுதி?

Return to frontpage

தருண் தேஜ்பால். 2013-ல் ஆண்டு ஊடகங்களில் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் அதிகம் அடிபட்ட பெயர்களில் ஒன்று. தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர், உடன் பணிபுரிந்த பெண் ஊழியர் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியரானார்.

ஊரில் நடக்கிற ஊழல்களை அம்பலப்படுத்துகிற பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு பெண் ஊழியரால் பதிவுசெய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதவியும் அதிகாரமும் எந்த அளவுக்குப் பாயும் என்பதையும் உணர்த்தியது.

தான் குற்றவாளி அல்ல என்று தருண் தேஜ்பால் தொடர்ந்து வலியுறுத்தினாலும் அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் இன்னும் அவரை விடுவிக்கவில்லை. பிணையில்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர்?

இப்படியொரு நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குத் தருண் தேஜ்பால் சிறப்பு அழைப்பாளராக வந்து சென்றிருக்கிறார். ஏற்கெனவே ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய விழாவில் தருண் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற இருந்தார். ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பவே அந்த விழாவில் தருண் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் தருண் தேஜ்பால் கலந்துகொண்டதற்குக் குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட யாரும் பதிவுசெய்யவில்லை என்பது எதன் வெளிப்பாடு?

பொதுவாக இதுபோன்ற பாலியல் குற்றங்களில் தவறு செய்ததாகக் குறிப்பிடப்படுகிற ஆணைவிட, அந்த ஆண் மேல் குற்றம் சுமத்திய பெண்ணே குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறாள். இது போன்ற வழக்குகளில் ஆரம்ப நாட்களில் ஆண் மீது காட்டப்படுகிற கோபமும் ஆவேசமும் அதற்கடுத்து வரும் நாட்களில் மறைந்து விடுகின்றன.

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண், அது குறித்த எந்த அவமானமும் குற்ற உணர்வும் இல்லாமல் நிமிர்ந்த நெஞ்சுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிகிறது. அதே வழக்கில் தொடர்புடைய பெண், ‘இவள் களங்கமானவள், ஒரு ஆணின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டவள்’ என்ற அடையாளத்தில் இருந்து இதேபோல் புன்னகையுடன் கடந்து வந்துவிட முடிகிறதா? அதற்கான சாத்தியங்களை இந்தச் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறதா?

இங்கே தருண் தேஜ்பால் குற்றவாளியா, இல்லையா என்பதல்ல விவாதம். அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இருந்தாலும் பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு ஆண் எந்தவிதத் தயக்கமும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்ள முடிகிறதென்றால், இங்கே நிலவும் சூழலை என்னவென்று சொல்வது?

எந்த வித எதிர்ப்பும் புறக்கணிப்பும் இல்லாமல் அந்த ஆண் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள முடிகிறது என்றால், வழக்கில் தொடர்புடைய அந்தப் பெண் முன்வைத்த குற்றச்சாட்டும் அதனால் அவள் அடைந்த அவமானமும் வேதனையும் இழப்பும் ஒன்றுமில்லை என்பதுபோல் ஆகாதா?

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கோபத்தைக் காட்டிக் கொதித் தெழும் மக்களின் அறச்சீற்றம், அப்படியொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், புத்தக வெளியீடு போன்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்குபெறும்போது எங்கே போனது?

நாடு முழுக்கப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண், இங்கே இத்தகைய மேடை, மரியாதை பெற அனுமதிப்பது, அந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்குச் செய்கிற அநீதியாகாதா? சட்டமும் நீதியும் என்னவோ செய்யட்டும், எங்கள் பார்வையில் அவர் குற்றவாளியல்ல என்று அந்த ஆணுக்குத் தரும் மறைமுக ஆதரவாகாதா? இத்தகைய குற்றத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றிய செய்தியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

மறுபக்கம்

இந்தக் கேள்விகளுக்கு மாற்றுத் தரப்பும் உள்ளது. குற்றம் எத்தகையதாக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கவே கூடாதா? அவர் தனக்கு விருப்பமுடைய விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக் கூடாதா? இப்படி ஒருவரை முற்றிலுமாக நிராகரிப்பது, மானுடப் பொது தர்மத்துக்கு ஏற்றதா?

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாகும் அரசியல்வாதிகளுக்கு, நாம் இதே அளவுகோலைப் பயன்படுத்திவிட முடியுமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

வாரிசு சான்றிதழ் ஏன்? எதற்கு?

வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. ஒருவருக்குப் பிறகு அவரது பிள்ளைகள், மனைவி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வாரிசாக இருக்கலாம்.

இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.

ஏன் வேண்டும்?

அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார். முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.

சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது. நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.

இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும். வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.

ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன. எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது

ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை. தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை

யாரெல்லாம் வாரிசுகள்?

ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள். இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

இறங்குரிமை சான்றிதழ்

இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.

ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது. அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .

நடைமுறை என்ன?

இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம். இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.

வித்தியாசமான தலைப்பில் கவுண்டமணியின் புதிய படம்!

'வாய்மை' படத்தில் கவுண்டமணி.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

பின்னர் ' வாய்மை ', ‘49 ஓ’ என்ற படங்களின் மூலம் கவுண்டமணி மீண்டும் நடிக்கவந்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்க கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த கணபதி பாலமுருகன் இந்தப் படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தும் கேரவனை வாடகைக்கு விடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்கிறார் .

சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணத்தின் சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயராம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜெ. சண்முகம் இப்படத்தைத் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

Singapore broadband speed now world's 10th fastest, says Akamai



SINGAPORE - Singapore has leapt past more than 10 global nations in broadband speed, coming in 10th in speed ranking for the first time.

The position was attained after it recorded an average connection speed of 12.2 Mbps in the third quarter of last year, according to the latest study by US-based Internet specialist Akamai Technologies released on Friday.

This represents an 18 per cent jump in speed from the second quarter of last year, when the Republic recorded an average connection speed was 10.4Mbps and had a global ranking of 21st.

South Korea (25.3 Mbps) maintained its pole position globally, with Hong Kong (16.3 Mbps) coming in second, followed by Japan (15 Mbps) and Switzerland (14.5 Mbps), according to Akamai.

These four economies have consistently dominated the top four spots globally for their surfing speeds.

Akamai tracks global users' connection speeds from handling more than two trillion requests for online content daily. Most of the world's Web content goes through its computers.

Exclusive Singapore Skyscraper: Specially Built ‘Sky Garages’ For Cars Provide Ultimate Convenience

The Inquisitr
Car on balcony
The all-new luxurious residential skyscraper in Singapore, The Hamilton Scotts, is so luxurious that it offers car owners space in a specially adapted “sky garage” adjacent to their apartments for their car or cars.

As A Geeky World reported recently, the Hamilton Scotts, a 30-story, 56-unit building, features a glass elevator shaft that lifts cars into condo units and parks them, behind a glass wall, next to the living room.

Despite the hefty price tag to own or rent such an apartment — which offers tens of thousands of square meters of living space for those who can afford it — the designers had a big problem: parking.

The dedicated team of architects and engineers then came up with a solution to the parking problem.

“It’s done in such a way that it’s a museum showcase, it’s just not a car park,” CEO of real estate development firm, KOP Properties said.

Apart from the so-called “sky garages,” Hamilton Scotts also offers other high-end features, such as a luxury gym, conference rooms, jacuzzis, and an outdoor pool.

But the price tag, as mentioned before, is hefty, to say the least; a single unit can cost anywhere between $9.4 million to $23.5 million, while renting an apartment there would set you back around $11,000 monthly.

So how does one actually drive their Ferrari or Bentley virtually into their living room?

Well, the system seems complex but is actually simple enough. When a resident enters the building, they drive their car straight into a glass elevator shaft. The elevator raises the vehicle up to the condo and parks it within a glass enclosure that is visible from the living room.

As well as the obvious convenience factor, the unique design allows owners of expensive cars to showcase their supercars instead of hiding them away in basement garages. Hamilton Scotts is the first building in the world to offer such an amazing parking solution

தினமலர் செய்தி


எழுத்துப்பிழை, பெயர் மாற்றம் சரி செய்து தராதது போன்ற காரணங்களால், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியத்தில் இணைய முடியாமல், தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.53 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.நாடு முழுவதும், கடந்த 1ம் தேதி, சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானியம், அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நேரடி மானிய திட்டத்தில் இணைய, துவக்கத்தில் ஆதார் அட்டை இருந்தால், இரண்டு; ஆதார் அட்டை இல்லை என்றால், இரண்டு என, நான்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதை பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு புத்தக நகல், கடைசியாக சமையல் காஸ் வாங்கிய ரசீது, ஆதார் அட்டை நகலுடன், ஏஜன்சி மற்றும் வங்கியில், தனித்தனியே வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கிய விண்ணப்பம், காஸ் ஏஜன்சி மற்றும் வங்கிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில், ஒன்றாக இணைக்கும் போது, விண்ணப்பதாரர் பெயரில் பிழை இருந்தால், 'விண்ணப்பம் ஏற்கப்படவில்லை' என, அவருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது


.இதுகுறித்து,வாடிக்கையாளர், வங்கி, ஏஜன்சி என, இருதரப்பிலும் கேட்டபோது, காஸ் ரசீதில், வாடிக்கையாளர் பெயர் பிழையாக உள்ளதே, இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.இதை சரி செய்து தருமாறு, வாடிக்கையாளர், ஏஜன்சி ஊழியர்களிடம், கேட்டால், அவ்வாறு செய்யாமல், அவர்கள் மக்களை அலைக்கழித்து வருகின்றனர். மேலும், ஒருவர் பெயரில் உள்ள காஸ் இணைப்பை, மற்றொருவர் பெயருக்கு மாற்ற கோரி, தகுந்தசான்றுகளுடன் அளிக்கப்படும் விண்ணப்பமும்,

எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், நேரடி மானிய திட்டத்தில், இணைய முடியாமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:காஸ் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பத்தில், பெயர், பிழை இல்லாமல் எழுதி தரப்பட்டது. ஏஜன்சி ஊழியர்கள், அதை தவறாக,'டைப்' செய்துள்ளனர். ஆனால், நேரடி மானிய திட்டத்தில் இணைய, குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், பிழையை சரி செய்து கொடுக்க, ஏஜன்சிகள் மறுக்கின்றன .இவ்வாறு, அவர்கள் கூறினர்


.இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எழுத்துப்பிழை, பெயர் மாற்றம் போன்றவற்றால், நேரடி மானிய திட்ட, வழக்கமான பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், வரும் 20ம் தேதிக்கு பின், இவை சரி செய்து கொடுக்கப்படும்' என்றார்.- நமது நிருபர்

Blogger told to pay Singapore prime minister’s legal cost


SINGAPORE, Jan 12 — A Singapore court today ordered a local activist to pay US$22,000 (RM78,400) in legal costs to Prime Minister Lee Hsien Loong, who had won a defamation suit against him.

 Roy Ngerng is also expected separately to pay thousands more in damages to Lee, who sued the blogger for libel after he accused the Singapore leader of misappropriating state pension funds. Lee’s press secretary Chang Li Lin said in a statement that a High Court judge at a hearing on Monday ordered Ngerng to pay the prime minister US$22,000. “This amount is for the legal fees and related expenses incurred up to the conclusion of the application for summary judgement,” the statement said.

 The High Court ruled in a summary judgement last November that Ngerng, a former government employee, had defamed Lee in his blog. It was the first such ruling in the city-state over a purely online article.

 Ngerng, who writes a blog called Heart Truths, was seeking a trial to defend himself but High Court Judge Lee Seiu Kin ruled there was “no triable defence against the plaintiff’s claim” and issued the judgement. No dates have yet been set for the subsequent hearings to determine damages payable to Lee, his press secretary said. But in general, such civil suits are launched in the High Court when the value of claims is above S$250,000 (RM665,700). 

Ngerng had already admitted that his May 15, 2014 blog accusing the prime minister, who is also chairman of state investment fund GIC, of misusing the Central Provident Fund (CPF) was false and without foundation. He offered S$5,000 (RM13,300) as compensation to Lee, who rejected the amount. GIC is a sovereign wealth fund that manages more than US$100 billion of the city-state’s foreign reserves.

 The CPF is the state pension scheme. Ngerng on today said in a statement he was merely questioning what he deemed was a “lack of transparency” in how the pension funds were being managed. “I did not say anything that is defamatory or against the law,” he said. “It is my right to... be able to speak freely, as enshrined under the constitution.” After he was sued by Lee, Ngerng, who has also led public protests over the CPF issue, was fired from his government hospital job for administrative reasons which he did not contest. In June he successfully raised more than S$112,000 through crowd funding in order to fight the case, with over 4,000 people contributing cash.

 Singapore has consistently ranked high in surveys as one of the world’s least corrupt countries, but rights groups say its leaders have used financially ruinous defamation suits to silence critics and political opponents. Media firms like Bloomberg, The Economist and the Financial Times as well as local opposition figures have previously paid damages and aapologized to Singapore leaders for publishing articles found to be defamatory. Singaporean leaders maintain that the lawsuits are necessary to protect their reputations from unfounded allegations. —
 

NEWS TODAY 25.01.2026