Saturday, January 17, 2015

Hyderabad HC rejects MCI's plea to amend PG Medical Education Regulation

Hyderabad HC rejects MCI's plea to amend PG Medical Education Regulation

A plea challenging the Medical Council of India (MCI)’s action to amend the Post Graduate Medical Education Regulations 2000 and deleting the MD (Biochemistry) discipline from the eligibility criteria for admission to the super-specialty Doctor of Medicine (DM) in Endocrinology course has been rejected by the Hyderabad High Court.

Upon hearing the case, a division bench comprising Justice Ramesh Ranganathan and Justice M Satyanarayana Murthy dismissed a petition filed by Dr P Harsha Vardhana and others, challenging the action of the MCI.

Earlier, the MCI had amended the Post Graduate Medical Regulation by a notification dated 17th April, in the year 2013. As per the new amendment, the MCI has deleted the MD (Biochemistry) course as eligible criteria for taking admission into further super-specialty DM course.

According to the petitioner, it is contended that deletion of MD (Biochemistry) would deny them the opportunity to undertake any super speciality course. It is viewed that the regulations were in place for more than 13 years and now the MCI has no reason to delete the course. “The MCI did not assign any reason for its deletion. This will deny us opportunity to take admission in to further DM super specialty courses,” opined a source.

As per the MCI submission to the court, the MD (Biochemistry) course was among the prescribed educational qualifications for admission into the super specialty courses of DM Clinical Hematology, Immunology and Medical Genetics. And it has deleted this course as it is not regarded as an eligible criterion for super specialty DM Endocrinology.

After examining views from both the petitioner and MCI, the bench held that the petitioners’ contention that the amendment to the regulations had resulted in their being denied an opportunity to undertake DM (Endocrinology) course by itself, would not justify striking down statutory regulations which are otherwise valid.

Further, the bench also observed that the MCI is central body and whatever rules lay down by it will have uniform standards for medical education across all the universities throughout the country.

Accordingly the HC has ruled that the petitioners and others some of whom are doing their post-graduation in biochemistry in Telangana and Andhra Pradesh cannot claim to hold a different stand.

Friday, January 16, 2015

உலக நாடுகளில் அதிக விடுமுறை கொண்ட நாடு இந்தியா!

ChennaiOnline

மும்பை,ஜன.16 (டி.என்.எஸ்) உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்திய ஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் விடுமுறை தின பட்டியல் பின்வருமாறு:

இந்தியா - 21
பிலிப்பைன்ஸ் - 18
சீனா, ஹாங்காங் - 17
தாய்லாந்து - 16
மலேசியா, வியட்நாம் - 15
இந்தோனேசியா - 14
தைவான், தென்கொரியா - 13
சிங்கப்பூர் - 11
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - 10
செர்பியா, ஜெர்மனி - 9
பிரிட்டன், ஸ்பெயின் - 8
மெக்ஸிகோ - 7

ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா, ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளை கொண்டு கணக்கிட்டால் இன்னும் அதிகமாக கூட வரலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி?

Return to frontpage

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால் இப்படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் ஒரே தேதியில் வெளியானது. இன்று (ஜனவரி 16) இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

இதுவரை தயாரான தமிழ்ப் படங்களைவிட 'ஐ' படத்தின் பட்ஜெட் அதிகம் (சுமார் ரூ.100 கோடி என்கிறார்கள்.) என்பதால் எந்த அளவுக்கு வசூல் இருக்கும் என்பதை பல்வேறு தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் அனைத்து மொழிகளையும் சேர்த்து சுமார் 5000-க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 200 திரையங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஐ'.

ஷங்கர், விக்ரம் உள்ளிட்ட மொத்த படக் குழுவினரும் இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தியதால் பிரம்மாண்டமான முதல் நாள் வசூல் கிடைத்திருக்கிறது என்கிறது திரையுலக வட்டாரம்.

தமிழில் முதல் நாளில் மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். அதில் நிகர வசூல் ரூ.8 கோடி. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டையும் சேர்த்து ரூ.7.5 கோடி வசூலாகி இருக்கிறதாம். கேரளாவில் எவ்வளவு வசூல் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியதா என்றால், 'இல்லை' என்றே சொல்லலாம். படம் பார்த்தவர்கள் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் கொண்டாடுகிறார்களே தவிர, இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை அமைப்பில் புதுமை என்று எதுவுமே இல்லை என்றே சொல்கின்றனர்.

திரையரங்குக்குச் சென்று ரசிக்கக் கூடிய சாமானிய ரசிகர்கள் திருப்தி அடையும் அம்சங்கள் இருப்பினும், ஷங்கர் படத்துக்கே உரிய 'ரிப்பீட் ஆடியன்ஸ்' என்ற மேஜிக்கை 'ஐ' கைப்பற்றவில்லை.

விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. பலரும் சுஜாதா இல்லாதது ஷங்கர் படங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு 'ஐ' ஓர் உதாரணம் என்று கருத்து பதிந்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் 'ஐ' படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. விக்ரமின் ரசிகர்களிடம் மட்டுமே 'ஐ'க்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. பலரின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.

விக்ரமின் திறமையையும், மேக்கிங்கையும் சிலாகிக்கும் இணைய விமர்சகர்கள் பலர், திரைக்கதையையும் வசனத்தையும் கழுவியூற்றி வருகின்றனர். குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் இயக்குநரின் பொறுப்பற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் அடிக்கோடிட்டுள்ளனர்.

ஆந்திராவில் வசூல் ரீதியில் முதல் நாள் பெரியளவில் இருந்தாலும், அங்கு படம் பார்த்த சினிமா ஆர்வலர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் "இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பில்டப்" என்கிற ரீதியில் கருத்து பதிந்து வருகிறார்கள்.

இது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும். ஆனால், திங்கட்கிழமைதான் இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.

தமிழில் U/A சான்றிதழுடன் வெளியாகி இருப்பதால், தமிழக அரசுக்கு 30% வரி கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா, கேரளா, இந்தி, வெளிநாடு ஆகிய இடங்களில் விநியோகஸ்தர்கள் மூலம் வெளியாகி இருப்பதால் வரும் நாட்களில்தான் தயாரிப்பாளரின் வருவாய் நிலவரம் என்று தெரிய வரும்.

ஐ - முதல் காட்சி முதல் பார்வை



பிரம்மாண்டத்தாலும், காட்சி அமைப்புகளிலும் ரசிகர்களைக் கவரும் இயக்குநர் ஷங்கர், 'ஐ' படத்தில் காதல் உணர்வையும், பழிவாங்கும் படலத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

உடல் வலிமையோடு இருக்கும் ஒருவனை ஒரு கும்பலே சேர்ந்து உருக்குலைக்கிறது. அவன் மனவலிமையோடு திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்...? இதுதான் 'ஐ'-யின் ஒன்லைன். இதில், உடலை அறுவறுப்பாக உருக்குலைத்தல் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. உடல் அழகுக்கும் காதலுக்கும் இடையிலான 'தொடர்பு'ம் இங்கே மையமாக்கப்படுகிறது.

'ஐ' ட்ரெய்லரில் வரும் காட்சி நினைவிருக்கலாம். 'யார் நீ? என்னைக் கொல்லப் போறியா? கெடுக்கப் போறியா?' என அழுதபடி கேட்பார் ஏமி ஜாக்சன். 'அதுக்கும் மேல' என்று சொல்வார் 'கூனன்' விக்ரம். இதுவே ஆரம்ப காட்சிகளில் இடம்பெற்றபோது, திரையரங்கில் ரசிகர்களின் சலசலப்பு குறைந்து, கொஞ்சம் சீரியஸாக நிமிர்ந்தபடி கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.

அதன்பின் விரியும் ஃப்ளாஷ்பேக்கில், விரிந்த மார்புடன் இளைஞன் லிங்கேசனாக விக்ரம் தோன்றும்போது விசில் சீட்களில் இருந்து மெர்சலின் விளைவால் பறந்தது விசில் சத்தம்.

விக்ரம் என்ட்ரி மெர்சல் என்றால், ஏமி ஜாக்சன் வருகை அதுக்கும் மேலே. ஏமி - விக்ரம் காதல் அத்தியாங்களில் எல்லாம் ரசிகர்களிடம் குதூகலம் பொங்குவதைப் பார்க்க முடிந்தது.

ஒரு காட்சியில் ஏமி வருவதைப் பார்த்து மயங்கி விழுந்தது, விக்ரம் மட்டுமல்ல... ரசிகர்களும்தான். அப்போதுதான், இந்தப் படத்துக்கு யு/ஏ வழங்கியதன் காரணங்களுள் ஒன்று நமக்கு விளங்கியது.

பாடிபில்டர்களைத் துவைத்து எடுக்கும் முதல் சண்டைக் காட்சியில் வீசிய அனலுக்குக் காரணம், அக்காட்சி அமைக்கப்பட்ட விதமா? ரசிகர்கள் அதற்கு அரங்கில் அளித்த வரவேற்பா..? இப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய கொண்டாட்ட வன்முறை அது. ஆனால், எப்படா 'இடைவேளை' என்று ஏக்கம் ரசிகர்கள் பலருக்கும் தொத்திக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.

இடைவேளைக்குப் பின்னர், கேன்டீனில் ரசிகர்கள் நடத்து ஸ்டேண்டிங் வட்டமேஜை மாநாடுகள் சிலவற்றில் காதுகொடுத்தபோது, இதுக்கும் மேல ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், முக்கியமான வில்லன் இவர்தான் என்று தெரியவரும்போது "நாமதாம் எப்பவோ கண்டுபிடிச்சிட்டோம் மாப்ளே" என்ற பக்கத்து சீட்டில் இருந்த இளைஞர் தனது தோழரிடம் உரைத்தது, அவர்களிடன் இடைவேளை மாநாட்டு விவாதத்தின் வீரியத்தைப் பறைசாற்றியது.

படம் கொஞ்சம் நீளம் என்றாலும்கூட, கடைசி 45 நிமிடங்கள் வேகமாக நகர்ந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு மெர்சலானுபவத்தைத் தந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இடையில், பவர் ஸ்டார் என்ட்ரியில் சந்தானத்தின் வழக்கமான கலாய்ப்பினால் ரசிகர்கள் கிச்சுகிச்சுமூட்டப்பட்டனர். மற்றபடி, விக்ரம் - சந்தானம் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

கூனன், பாடி பில்டர், விளம்பர மாடல் என மாறி மாறி ரசிகர்களை வியப்பூட்டும் விக்ரம், உடல் ரீதியினால வேறுபாடுகளையும், குரல் வழியிலான வித்தியாசத்தியும் புகுத்தி கச்சிதமாக உழைத்தும் நடித்தும் படம் முழுவதுமே "'ஐ' அம்" தான் என்று நிரூபித்திருக்கிறார். விக்ரமுக்கு திரையரங்கில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை, அவரது விடாமுயற்சிக்கும் காத்திருப்புக்கும் கிடைத்த பலனாகவே பார்க்க முடிந்தது.

ஏமி ஜாக்சனுக்கும் இது முக்கியமான படம்தான். இவரால் ரசிகர்கள் எந்த அளவுக்கு குதூகலம் அடைந்தார்களோ, அந்த அளவுக்கு பாராட்டைப் பெறவும் ஏமி தவறவில்லை. வசனத்துக்கான உதட்டு அசைவுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துவதுடன், மிகை இல்லாத சரியான நடிப்பால் கவர்ந்திழுக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கலை இயக்குநர் முத்துராஜ், இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலானோரின் பங்களிப்பு 'ஐ'-யை உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

ஆயிலா ஆயிலா, மெர்சலாயிட்டேன், பூக்களே, என்னோடு நீ இருந்தால் என பாடல்கள் அனைத்துமே ஷங்கரின் வழக்கமான சுவை குறையாத பொங்கல் படையலாக தியேட்டரில் ரசிக்கப்பட்டது.

ஆனால், ஏற்கெனவே பல படங்களில் காட்டப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கான காரணப் பின்னணிகள், காதல் மிகத் தொடங்கும் காட்சிகள் எல்லாம் அவ்வப்போது அலுப்பூட்டவும் தவறவில்லை. படத்தில் காட்டப்படும் அறுவெறுப்பான அம்சங்களும்கூட இப்படம் பெரியவர்களுக்கு உரியது என்பதைச் சொல்லின.

உபேன் பட்டேல், சுரேஷ் கோபி, ராம் குமார், ஒஜாஸ் ரஜனி முதலானோர் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் மீது ரசிகர்கள் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை.

படத்தின் நீளம், யூகிக்க முடிந்த கதைப் போக்கு, வசனங்களின் பங்களிப்பு முதலான குறைகள் அடுக்கப்பட்டாலும், விக்ரமின் மிரட்டலும், அதற்குக் காரணகர்த்தா ஷங்கரின் டீட்டெயிலிங் உடனான இயக்கமும், காதல் கண்களுடன் கூடிய 'ஃபிலிம் மேக்கிங்'கான ஐ-க்கு ஓர் 'ஓ...' போட வைக்கிறது.

படம் முடிந்ததும் ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது கிடைத்த பாயின்ட்ஸ்:

அதிகம் பகிரப்பட்டவை: "மெர்சலாயிட்டேன்", "அதுக்கும் மேல", "விக்ரம், ஷங்கர் கிரேட்"!

ஓரளவு சொல்லப்பட்டவை: "தமிழ் சினிமாவை அடுத்த ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்கப்பா!"

மிகச் சிலர் குறிப்பிட்டவை: "ஒரு தடவை பார்க்கலாம்!"

ஆக, முதல் காட்சியில் ரசிகர்கள் உணர்த்திருயிருப்பது... ‘ஐ’-யைத் தவறேல்!

FLIGHT FARES DIP TO ALMOST PAR WITH SECOND AC TRAIN TICKETS

Wednesday, January 14, 2015

Electronic card for OMR, ECR toll

Perungudi toll plaza on Rajiv Gandhi Salai. File photo.

In a few months, you will experience cashless travel, using a single prepaid electronic card to pass through the toll plazas on Rajiv Gandhi Salai (OMR) and East Coast Road (ECR) from Chennai to Puducherry. The OMR has five toll plazas and the ECR six. Sources in the Tamil Nadu Road Development Company (TNRDC) said that tenders would soon be floated for such an electronic toll collection system that would be installed on one lane at each of the plazas.

“This will help reduce waiting time and cut down on fuel wastage. This system would be more useful for heavy and commercial vehicles that traverse these roads frequently. They can purchase prepaid cards from our plazas or online,” an official explained.

Each time when money was debited from the card, the bank would send a text message to the registered mobile phone that would also help track its movement. On an average, the ECR witnesses 7,000 vehicles a day during weekdays and 11, 000 on weekends.

The traffic pattern on the OMR is quite the opposite: during weekdays, the road is utilised by over one lakh vehicles a day and on weekends, this number reduces by more than half. The electronic card is also likely to be used on the Outer Ring Road from Vandalur to Nemilichery, once tolling commences on the 30-km corridor. Meanwhile, the deadline of January 31, 2015 for implementing electronic toll collection (ETC) systems on the toll plazas on the National Highways is nearing.

According to V. Chinna Reddy, Chief General Manager (Technical), National Highways Authority of India (Chennai region), counters are likely to be opened soon to sell these Radio Frequency Identity (RFID) cards.

Tuesday, January 13, 2015

சர்க்கஸில் ஒரு பொசிஷனிங் வித்தை!

Return to frontpage

நம் நாட்டில் சினிமாதான் 1960 70ம் ஆண்டுகளில் முக்கிய பொழுதுபோக்காகத் திகழ்ந்தது. சாதாரணமாகச் சிறுவர் சிறுமியரைச் சினிமாக்களுக்கு அழைத்துப் போகும் வழக்கம் கிடையாது. கிரேட் ஈஸ்டர்ன் சர்க்கஸ், கமலா த்ரீ ரிங் சர்க்கஸ் போன்ற கம்பெனிகள் ஊர் ஊராக வருவார்கள். மூன்று நான்கு வாரங்கள் காட்சிகள் நடத்துவார்கள். சிறுவர் சிறுமியர் இதற்காகவே காத்திருப்பார்கள். கூட்டம் அலைமோதும்.

யானைகள் கால்பந்து விளையாடும்; ரிங் மாஸ்டர் சவுக்கைச் சொடுக்குவார். சிங்கங்கள் சாதுவாகச் சொன்னதைக் கேட்கும்: குரங்குகள் சைக்கிளில் வித்தைகள் காட்டும்: விளக்கை அணைப்பார்கள். சர்க்கஸ் அரங்கம் முழுக்கக் கும்மிருட்டு. ஒரு பெரிய உருண்டைக்குள் மட்டும் கலர் கலராய் விளக்குகள் கண் சிமிட்டும். ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த உருண்டைக்குள் நுழைவார். அதற்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவார். நம் நெஞ்சு படபடக்கும். ட்ரப்பீஸ் விளையாட்டும் இப்படித்தான். அந்தரத்தில் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாவிப் பிடிப்பார்கள். மாஜிக் காட்டுபவர் வருவார். காலி தொப்பியைக் காட்டுவார். “சூ மந்திரக் காளி” என்று என்று சொல்லுவார். காலி தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டி குதித்துவரும். இவை அனைத்துக்கும் மேலாகச் சர்க்கஸ் கோமாளிகள். உருவத்தில் குள்ளமாக இருக்கும் இவர்கள் சகலகலா வல்லவர்கள். இவர் களைப் பார்த்தாலே அரங்கம் அதிரும்.

டி.வி.-யின் வரவு

1980 - களில் சமுதாய வாழ்க் கையில் முக்கிய மாற்றங்கள் வந்தன. தொலைக்காட்சியும், கம்ப் யூட்டரும், பொழுதுபோக்கைத் தேடி நாம் போகவேண்டிய தேவை இல்லாமல், அவற்றை நம் வீடுகளுக்குக் கொண்டுவந்தன. அம்மா, அப்பாக்கள் வீடுகளில் தொலைக்காட்சிகளில் சினிமாக்கள், சீரியல்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சிறுவர் சிறுமியருக்குக் கார்ட்டூன்கள், கிரிக்கெட் மாட்ச்கள்.

கம்ப்யூட்டர்,செல்போன்கள் ஆகிய கருவிகளில் பெரியவர்கள் ஈ மெயில், மெஸேஜிங், வெப் ஸர்ஃபிங் என்று நேரம் செலவிடுகிறார்கள். சிறுவர் சிறுமியரை வீடியோ கேம்ஸ் கட்டிப்போட்டு வைக்கின்றன. ஆகவே, குழந்தைகளுக்கு சர்க்கஸ் பார்க்கும் ஈடுபாடு குறைந்துவிட்டது.

மிருகங்களை பயன்படுத்த எதிர்ப்பு

சர்க்க்கஸில் மிருகங்களைக் கொடு மைப்படுத்துவதாகச் சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், மிருகங்களை வைத்துச் செய்யும் விளையாட்டுகளின்மீது அரசாங்க, நீதிமன்றக் கட்டுப்பாடுகள் வந்தன. இந்த வரைமுறைகளால், மிருகங்கள் பங்கெடுக்கும் விளை யாட்டுக்கள் சுவாரஸ்யம் இழந்தன. மக்கள் சர்க்கஸுக்கு வர இந்த விளையாட்டுக்கள் முக்கிய காரணம். வீட்டுக்கே வந்த பொழுதுபோக்குகள், ஷோக்களின் சுவாரஸ்யக் குறைவு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால், சர்க்கஸுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சர்க்கஸ் கம்பெனிகளின் கதை இதுதான். நம் நாட்டைப்போலவே, கனடா நாட்டிலும் சர்க்கஸ் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. பல பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. பிரம்மாண்ட டென்ட்கள், நூற்றுக்கணக்கான கலைஞர்கள், மிருகக் காட்சிசாலை போல் வகை வகையான மிருகங்கள், பறவைகள் என ஏகப்பட்ட வசதிகளோடு இந்தக் கம்பெனிகள் இயங்கின. இந்தக் கம்பெனிகள் தவிர, ஏகப்பட்ட கழைக் கூத்தாடிக் குழுவினர் இருந்தார்கள். இவர்கள் இருபது, முப்பது கலைஞர்கள், ஓரிரு மிருகங்கள் ஆகியவற்றோடு செயல்பட்டார்கள். சர்க்கஸ் கம்பெனிகள் டென்ட் போட்டு ஷோக்கள் நடத்துவார்கள்: கழைக் கூத்தாடிகள் தெருவுக்குத் தெரு சர்க்கஸ் வித்தைகள் காட்டுவார்கள். ஏராளமான மக்கள் கூடிப் பார்த்து ரசிப்பார்கள். டாலர்களை அள்ளி வீசுவார்கள். இதனால், சர்க்கஸ்காரர்களுக்கும், கழைக்கூத்தாடிகளுக்கும் நல்ல வருமானமும், மக்களிடையே மதிப்பும் இருந்தது.

சூப்பர் ஸ்டார்கை லாலிபெர்ட்டே (Guy Laliberte) என்னும் சிறுவனுக்கு சர்க்கஸில் பயங்கர ஈடுபாடு. தன் பள்ளி நாட்களிலேயே ஒரு கழைக் கூத்தாடிகள் கம்பெனியில் சேர்ந்தான். சகலகலா வல்லவன் ஆனான். அக்கார்டியன் (Accordion) என்னும் இசைக்கருவியைப் பிரமாதமாக வாசிப்பான். இரண்டு கால்களிலும் நீளமான மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு நடப்பான், வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து, அந்த நெருப்பை ஸ்டைலாக ஊதுவான். விரைவில், கனடா நாட்டு சர்க்கஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனான்.

1980 - களில், நம் ஊரைப்போலவே, கனடாவிலும் மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. கழைக்கூத்தாடிகளின் ஷோ, சர்க்கஸ் ஆகியவற்றைப் பார்த்த ஆண், பெண். குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ் ஆகிய மாற்றுப் பொழுது போக்குகளுக்கு மாறிவிட்டார்கள்.

சர்க்கஸ் கம்பெனிகள் மூடல்

சர்க்கஸ் கம்பெனிகளில் ஏராள மானோரால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. பிஸினஸை மூடினார்கள். இருந்தவர்களுக்குள், போட்டி கடுமையானது. எதிராளியை ஜெயிக்கப் பல யுக்திகளைக் கையாண்டார்கள். சர்க்கஸ் நடத்தும் டென்ட்களை அதிகச் செலவில் ஜோடித்தார்கள். மக்களை ஈர்க்கும் அம்சமான ஜோக்கர்களின் காமெடியை அதிகமாக்கினார்கள். டிக்கெட் விலையைக் குறைத்தார்கள். ஏற்கெனவே சரிந்துகொண்டிருந்த வருமானம் இன்னும் குறைந்தது. பெரிய நிறுவனங்களே தள்ளாடும் போது, கழைக் கூத்தாடிகள் வறுமையின் எல்லைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டனர்.

லாலிபெர்ட்டேக்கு வேலை போனது. வேறு குழுக்களில் வேலை தேடினார். தொழிலே நொடிக்கும்போது யார் வேலை தருவார்கள்? எல்லாக் கதவுகளும் மூடிவிட்டன. லாலிபெர்ட்டேக்குத் தெரிந்த ஒரே வேலை சர்க்கஸ்தான். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

காரணம் என்ன?

சர்க்கஸ் தொழிலின் சரிவுக்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ச்சியே செய்தார். சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம் மிருக விளையாட்டுக்கள், வீர தீர ஆட்டங்கள், கோமாளிகளின் காமெடி. 1980 வரை சர்க்கஸ் கம்பெனிகளும், கழைக் கூத்தாடிகளும் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆகவே, பிசினஸ் லாபகரமாக நடந்தது.

1980-களில், தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இந்தப் பின்புலத்தை முழுமையாக மாற்றிவிட்டன. அன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் சோப் ஆப்பராக்கள் (Soap Operas) என்று அழைக்கப்பட்டன. இவற்றை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்கள். அதாவது, மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கதைகளை மையமாகக்கொண்ட பொழுதுபோக்கு.

மாற்று யோசனை

குழந்தைகள் மட்டுமல்லாமல், முழுக் குடும்பமும் பார்ப்பதாகத் தன் ஷோ அமையவேண்டும். என்ன செய்யலாம்? லாலிபெர்ட்டே மூளையில் இப்போது வெட்டியது ஒரு மின்னல். சாதாரணமாக சர்க்க்கஸில், டரப்பீஸ், மிருக விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் காமெடி, மாஜிக் காட்சிகள் போன்ற பல ஐட்டங்கள் இருக்கும். ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் சம்பந்தம் இருக்காது.

சர்க்கஸ் காட்சிகளோடு, ஜனரஞ் சகமான தொலைக்காட்சி சீரியல்களைக் கலந்தால்....விளையாட்டு வீரர்கள், கோமாளிகள் பங்கெடுக்கும் சீரியலின் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு என்று சர்க்கஸ் பற்றிய புதிய பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் உருவாக்கினால்.....

1985-ம் ஆண்டில் லாலிபெர்ட்டே தன் கனவை நனவாக்கினார். Cirque du Soleil (பிரெஞ்ச் வார்த்தை. சூரிய சர்க்கஸ் என்று அர்த்தம்.) என்னும் சர்க்கஸ் கம்பெனி தொடங்கினார். தன் சர்க்கஸ் காட்சிகளை வலுவான கதையமைப்புக்கொண்ட நாடகங்களாக உருவாக்கினார். சர்க்கஸ் விளையாட்டுக்கள் இந்த நாடகங்களில் நடக்கும் சம்பவங்களாக வரும். கோமாளிகளின் ஜோக்குகளும் கதையோடு ஒன்றியவையாக இருக்கும்.

9 கோடி ரசிகர்கள்

லாலிபெர்ட்டேயின் சர்க்கஸ் கம்பெனி தொடங்கி 30 வருடங்களாகிவிட்டன. இன்று 40 நாடுகளைச் சேர்ந்த 5020 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

கடந்த முப்பது வருடங்களில், அன்டார்ட்டிக்கா தவிர்த்த அத்தனை கண்டங்களிலும், 271 நகரங்களில் இதுவரை நடந்த ஷோக்களை ரசித்திருப்பவர்கள் 9 கோடி பேருக்கும் மேல். வருட வருமானம் 850 மில்லியன் டாலர்கள். லாலிபெர்ட்டேயின் தனிப்பட்ட சொத்து 1800 மில்லியன் டாலர்கள்.

வெற்றி இலக்கணம்

உலகத்தில் இருக்கும் எல்லா சர்க்கஸ் கம்பெனிகளும் நஷ்டத்தில் தள்ளாடும்போது, லாலிபெர்ட்டே மட்டும் ஜெயித்தது எப்படி? சர்க்கஸ் என்றால், கலைஞர்கள், மிருகங்கள் விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் ஆகியவைதாம் என்று நம் எல்லோர் மனங்களிலும் ஒரு பிம்பம் படிந்தி ருக்கிறது. சர்க்கஸ் கம்பெனிகளும், இந்த பிம்பத்தை உடைக்கத் துணிச்சல் இல்லாமல், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகிறார்கள். லாலிபெர்ட்டே, சர்க்கஸ் என்னும், பிஸினஸின் இலக் கணத்தையே உடைத்தார். புதிய பொசிஷனிங் கண்டார். தேடி வந்தது வரலாறு காணாத வெற்றி!

slvmoorthy@gmail.com

NEWS TODAY 25.01.2026