Monday, January 19, 2015

அண்ணனை போல் தம்பி உடலும் தானாக பற்றி எரியும் தீ: மீண்டும் திகிலில் நெடிமொழியனுர் கிராமம்!

அண்ணனை போல் தம்பி உடலும் தானாக பற்றி எரியும் தீ: மீண்டும் திகிலில் நெடிமொழியனுர் கிராமம்!
Posted Date : 11:01 (17/01/2015)Last updated : 12:00 (17/01/2015)
விழுப்புரம்: அண்ணனை தொடந்து தம்பியின் உடலும் தானாக தீப்பற்றி எரியும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமொழியனுர் கிராமம் மீண்டும் திகிலில் உறைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனுர் கிராமத்தை சேர்ந்த கர்ணன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு மூன்று குழந்தைகள். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களில் இரண்டாம் மகன் ராகுலில் உடலில் நான்கு முறை தானாக தீப்பற்றி எரிந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையின் உடலில் தானாக தீப்பிடிப்பதற்கு அமானுஷ்ய சக்தி தான் காரணம் என்று புரளி கிளம்பியதால் கிராம மக்கள் திகிலில் வாழ்ந்து வந்தனர்.

இதை தொடர்ந்து, ராகுல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான். ராகுலை பரிசோதித்த மருத்துவகுழு, 'ஸ்பான்டேனியல் ஹியுனம் கம்பஷன்' என்ற அதிசய நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கலாம், அதனால் தான் குழந்தையின் உடல் தானாக எரிகிறது என்றனர். இந்த நோய் கடந்த 300 வருடங்களில் 200 பேருக்கு தான் வந்துள்ளது எனவும், இந்தியாவிலே இந்த குழந்தைதான் முதன்முதலில் இந்த அதிசய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஆனால் ஒருமாத முழு பரிசோதனைக்கு பின், ராகுலுக்கு எந்த நோயும் இல்லை. அதனால், குழந்தை தானாக தீப்பற்றி எரிவதற்கான காரணத்தை காவல்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று கடைசியில் மருத்துவகுழு கைவிரித்தனர். இதனால், தீப்பிடிப்பதற்கான மர்மம் விலகாமலே ராகுலில் குடும்பம் சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தது. அதன்பிறகு, கடந்த இரண்டு வருடங்களாக ராகுலின் உடல் தீப்பற்றி எரியாததால், காவல்துறையும் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன், கர்ணன் தம்பதிக்கு மேலும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது, ராகுலை தொடந்து புதிதாக பிறந்த அந்த பச்சிளம் குழந்தை உடலிலும் தானாக தீப்பற்றி எரிந்துள்ளது. குழந்தையின் கால்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், மூண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குழந்தையின் இரண்டு கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கால்களில் தீப்பிடித்துள்ளதற்கான காரணத்தை மருத்துவர்கள் உறுதிப்படுத்தாத நிலையில், மீண்டும் குழந்தையின் உடலில் தீப்பிடிக்காமல் இருக்க மருத்துவர்கள் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அண்ணனை தொடர்ந்து தம்பியின் உடலிலும் தீப்பற்றி எரிவதால், ஏற்கனவே அச்சம் விலகாத அந்த பகுதி மக்கள் தற்போது திகிலில் உறைந்துள்ளனர்.

ஆ.நந்தகுமார்

BURNINH BOY POSES CHALLENGE TO DOCTORS



திறன் அறிந்து சொல்லுக.......By மா. ஆறுமுககண்ணன்

Dinamani

ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சுக்கலையும் ஒன்று. மற்றக் கலைகளைக் கற்றுக்கொள்கிறோமோ இல்லையோ இந்தக் கலையைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வசப்பபடும்.

யாரிடம் எதைப் பேசுவது, எந்தச் சூழலில் எப்படிப் பேசுவது போன்றவை தெரிந்து பேசினாலன்றி பிழைக்க முடியாது என்ற நிலையில் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற பழமொழி.

மண்ணுக்குள் வைரம்போல எத்தனை திறமைகள் நமக்குள் மறைந்துகிடந்தாலும், அவற்றை சந்தர்ப்பம் பார்த்து பிறருக்குத் தெரியப்படுத்த பேச்சு முக்கியம். நம்மைப் பற்றி நாமே பேசாவிடில் வேறுயார்தான் பேசப் போகிறார்கள்?

நம்மைப் பற்றி நாமே பேசுவதை சிலர் சுய தம்பட்டம் என்று கூறுவார்கள். சரி, நம்மைப் பற்றியே பேசினால் சுய தம்பட்டம் என்கிறார்களே என அதைக் கைவிட்டு, பிறரைப் பற்றிப் பேசினால் புறணி பேசுகிறான் என்பார்கள். அதனால், பேசாதிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தால், அதனை ஆணவம் என்பார்கள்.

பேசிக்கொண்டேயிருந்தால் வாயாடி; அடுத்தவர் பேசும்வரை காத்திருக்காமல் முந்திக்கொண்டு பேசினால் முந்திரிக் கொட்டை; பேசுபவரின் பேச்சை அலசி ஆராய்ந்தால், எதிர்த்துப் பேசுபவன், பேச்சை ஆமோதித்தே பேசிக் கொண்டிருந்தால் ஜால்ரா.

ஆக, ஒருவரது நாக்கை வைத்து மற்றவர்கள் நாக்கு பலவிதமாகப் பேசுகிறது என்பதே உண்மை.

"பேசாத பேச்சுக்கு நீ எஜமான், பேசிய பேச்சு உனக்கு எஜமான்' என்பது பொன்மொழி. கடுகு சிந்தினால்கூட அள்ளிவிடலாம். காற்றில் விதைத்த பேச்சுகளை அள்ளுவது இயலாத காரியம்.

பேச்சுக்கு உருவமில்லை. ஆனால் ஆறடி உருவ மனிதனையும் அது நிலைகுலையச் செய்துவிடுகிறது. மென்மையான இதயத்தில் காயமேற்படுத்தவும் காயம்பட்ட இதயத்தை மயிலிறகாய் வருடிவிடவும் பேச்சுக்குத் தெரியும்.

பேச்சு - மருந்தா, விருந்தா என்பது அது பேசப்படும் விஷயத்தைப் பொறுத்தது.

பேசிப்பேசியே ஏற்படும் பிரச்னைகளுக்குப் பேசிப்பேசியே தீர்வும் காணலாம். இது விநோதமான முரண்தான்!

சிலருக்குப் பேசுவதற்கு ஏதேனுமொரு தலைப்பு கொடுத்தால் மிக அருமையாகப் பேசுவார்கள்.

பலருக்குத் தலைப்பே தேவையில்லை. பல மணி நேரம் கடந்தும் பேச்சுப் பாதையில் பயணம் செய்துகொண்டிருப்பார்கள். கேட்போருக்குத்தான், காதுகளுக்கு இயற்கை கதவைப் படைக்காமல் விட்டதே என நொந்துகொள்ளத்தோன்றும்.

பேச்சுப் பற்றிப் பேசும்போது, "நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்ற பழமொழியும் நினைவுக்கு வரும். தளும்பாத குடம் நிறைகுடமாக மட்டுமல்ல, வெறுங்குடமாகவும் இருக்கலாம்!

பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் நமது தலைவர்கள். மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

நூறு நாளிலோ, ஆறு மாதங்களிலோ மாயாஜாலம் நிகழும் எனப் பேசி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஆனால், அதன்பிறகும் பேசுகிறார்கள், தாங்கள் பேசியதை ஏன் செய்துமுடிக்க முடியவில்லை என்பதுகுறித்து.

இதனால் அவர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.

"மேடை ஏறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு; கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு' என்றார் கண்ணதாசன்.

சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்தால் ஒரு பேச்சு, அரியணை ஏறிவிட்டால் மற்றொரு பேச்சு.

இப்படி ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறிமாறி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் ஐந்தாண்டு முடிவில் பேசாமல் செயலில் காட்டிவிடுகின்றனர்.

பல பிரச்னைக்கு ஓயாத பேச்சுகள் காரணமாக இருப்பதைப்போல பேசாதிருப்பதும் பல நேரங்களில் பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடும். வாய்ப்பு கிடைத்தும் வாய் திறவாதிருப்பதும் தவறுதானே!

காதலிக்கும்போது மணிக் கணக்கில் செல்போனிலும் நேரிலும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்போரில் சிலர், திருமணத்துக்குப் பிறகு வார்த்தைகள் அனைத்தும் வற்றிப்போன மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

அதனால் "என்ன பேச?" என்றோ, "என்னத்தைப் பேசி என்ன ஆகப் போகிறது' என்றோ ஏகாந்த நிலைக்கு உள்ளாகி விடுகின்றனர்.

பலர், "பேசியதால் வந்த வினைப்பயனை அனுபவித்தவர்கள்போல, "பேசாதிருப்பதே நன்று' என்ற மெளன நிலையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். சில நேரங்களில் அவர்களையும் மீறி பேசத் தொடங்கினால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்ப விவகாரம் மற்றவர்களுக்குப் பேச்சுப்பொருளாகி விடுகிறது.

தங்களுடைய குழந்தை ஒரு வயது தாண்டியும் பேசாதிருந்தால் அதைப் பற்றிப் பேசியே பல்வேறு மருத்துவர்களை மன வருத்தத்துடன் தேடி அலையும் பெற்றோர், அதே குழந்தை சற்று வளர்ந்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டால் உடனே வாயை மூடு என திருவாய் மலர்வதைப் பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளிலும் இரவு, பகல், அதிகாலை, அந்திப்பொழுது என காலநேரம் எதுவும் பார்க்காமல் சலிப்பேயில்லாமல் பேசுகின்றனர்.

அதிலும், நான்கு பேரோ, மூன்று பேரோ சேர்ந்து பேசும் "நேரலை' நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் உண்டு.

இப்படி பல "நேரலை' பார்த்தும் நமக்கு ஒன்றும் "நேரலை' (நேரவில்லை) என்பது ஆச்சரியம்தான்! பேசிக்கொண்டேயிருக்கும் அஃறிணை தொலைக்காட்சிகள். அதன் முன் மெளனமாகவே அமர்ந்திருக்கும் உயர்திணை மக்கள்!

யாருக்கும் பயனற்ற நுனிக்கரும்பு பேச்சைவிட, அனைவரையும் நல்வழிப்படுத்தும் அடிக்கரும்பு பேச்சே எப்போதும் ஏற்றது.

Sunday, January 18, 2015

3 முதல்வர்களுடன் மகேந்திரன் அனுபவம்



நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-

"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.

என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.

நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நிலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.

ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.

"நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.

ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.

"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.

"அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி வித்யாவும் என் தந்தையின் நாடகக் குழுவில் நடித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா என்னைவிட 2 வயது மூத்தவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகியவர். ஒருபுறம் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, நாங்கள் இன்னொரு புறம் விளையாடிக் கொண்டு இருப்போம். அன்பான மூத்த சகோதரி அவர்.

எனக்கு உடன் பிறந்தவர் ராஜேந்திரா என்ற ஒரு சகோதரன் மட்டுமே. சகோதரி இல்லாத குறையைத் தீர்த்தவர் ஜெயலலிதா. படிப்பறிவும், அறிவாற்றலும் மிக்கவர். மெட்ரிகுலேஷன் பரீட்சையில் மாநிலத்தில் இரண்டாவது மாணவியாக பாஸ் செய்தார். அவருடைய `நோட்ஸ்'களை வாங்கிப் படித்ததால், நானும் மாநிலத்தில் 4-வது மாணவனாகத் தேறினேன்.

சகோதரி ஜெயலலிதா பிரபல நட்சத்திரமான பிறகு அவர் படங்களை நாங்கள் பார்த்துவிட்டு, எங்கள் கருத்துக்களைச் சொல்வோம்.

ஒருமுறை பேச்சுவாக்கில், அவருடைய முதல் படமான "வெண்ணிற ஆடை''யை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டேன். அப்போது, வெண்ணிற ஆடை 3-வது முறையாக ரிலீஸ் ஆகி `லிபர்டி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.

எனக்கு அங்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து, அப்படத்தைப் பார்க்கச் செய்து, பிறகு படத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டறிந்தார்.

கலைஞரோடு எனக்கு நெருக்கம் அவ்வளவாக இருந்தது இல்லை. எனினும், "பராசக்தி'', "திரும்பிப்பார்'' வசனங்களை பலமுறை கேட்டு ரசித்தவன்.

1989-ல், மூப்பனார் மீதிருந்த அபிமானத்தின் காரணமாக, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, முதன் முதலாக அரசியலில் இறங்கி, காங்கிரசுக்கு பிரசாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

ஊட்டியில் அரசு நடத்தும் மலர்க் கண்காட்சியில், நான் தவறாமல் நாடகம் நடத்துவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில், அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதால், நாடகம் ரத்து செய்யப்படுவதாக எனக்குத் தெரிவித்தார்கள்.

நான் அரங்குக்கு சென்று பார்த்தபோது, அங்கு அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை எதுவும் நடைபெறவில்லை. நாடகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, கலைஞருக்கு காரசாரமாக ஒரு கடிதம் எழுதினேன். "காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஒரே காரணத்துக்காக எங்கள் நாடகத்தை ரத்து செய்தது அநியாயம். கலைஞர் முதல்வராக இருக்கும்போது, என் போன்ற கலைஞர்களுக்கு அநீதி நடக்கலாமா?'' என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.

பிறகு அப்படி ஒரு கடிதம் எழுதியதையே மறந்து விட்டேன்.

ஒரு மாதம் கழித்து, கலைஞரிடம் இருந்து பதில் வந்தது. "தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உதகமண்டலம் கோடை விழாவில் தங்களின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மூலமாக விளக்கம் கேட்க கூறியுள்ளேன். இதுபோன்ற அரசு விழாக்களில் பலபேரை திருப்தி செய்ய வேண்டிய நெருக்கடி ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுவதால், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் தவறு நேர்ந்திருக்கலாம். எனினும், இதனை பெரிதாக மனதில் கொள்ள வேண்டாம். இனி இதுபோல் நடக்காது'' என்று கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார், கலைஞர். அதுமட்டுமின்றி, மற்ற அரசு விழாக்களில் நான் நாடகம் நடத்தவும் அனுமதி அளித்தார்.

என்னை ஒரு பொருட்டாக எண்ணி கலைஞர் தன் கைப்பட கடிதம் எழுதியது கண்டு நெகிழ்ந்தேன். அவர் எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

குறைகளை உடனுக்குடன் கவனிப்பதால்தான், சகல தரப்பு மக்களையும் அவர் தன் பக்கம் வைத்திருக்க முடிகிறது என்பது என் கருத்து.''

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.

PILOT WHO HIT ENGINEER WAS PULLED UP EARLIER

Pilot who hit engineer was pulled up earlier
Chennai:


Experts Call For Psychometric Tests To Ensure Safe Flying

Pilot Maniklal Sanghi, who was grounded after he hit an aircraft maintenance engineer in the cockpit of a flight at Chennai airport on Saturday , has a history of courting trouble.

Sources told TOI that an investigation was pending against him for refusing to fly a Chennai-Thiruvananthapuram flight last year.The airline, which incurred loss, planned to fine him, but he was allowed to fly.

The last time a similar incident happened on an Air India flight was in 2009 when a co-pilot and a cabin crew member came to blows in front of passengers on a Dubai-New Delhi flight. The flight attendant said the co-pilot tried to molest her.

Aviation experts and senior pilots say such instances do not just amount to embarrassment for airlines and passengers, they also make flying unsafe. They vote for a stringent periodic psychological assessment of pilots. “This will act as a deterrent. Most of the time, erring pilots use influence and continue to fly,“ said a pilot.

“Indiscipline cannot be allowed to grow. It will simmer and explode. A pilot will not be in the best frame of mind to fly after an argument or a fight. It is good that Air India replaced the pilot this time, but often managements and the aviation regulator do not take strong action,“ said air safety expert Mohan Ranganathan. He said such incidents also affected the safety rating of civil aviation in the country . Federal Aviation Administration (FAA) downgraded India's aviation safety ranking in February 2014.Ranganathan blames it on the directorate general of civil aviation (DGCA). “There have been many instances of violence by crew, but the regulator has not taken action against them. They are back at work after a brief period. And we have no proper system to assess the psychological state of pilots unlike those abroad, where medical checks include psychometric tests,“ he said.

In India, psychometric tests are done on pilots only at the time of recruitment. “Periodic medical checks are supposed to pick up unusual behaviour. There is no checklist to assess psychological issues. Doctors often run tests based on inputs from the airline about a particular pilot. Otherwise it depends on the personal assessment of the doctor. If a pilot is grumpy , he may prescribe additional checks,“ said a senior pilot with a private airline.

He said airlines should counsel pilots who display short temper or unstable behaviour. “Workplace ethics need to be followed. A pilot has a right to refuse to fly a plane after it is certified by an aircraft maintenance engineer. It should be handled as per procedure. There should be no space for arguments or personal attacks.All airlines have a system to report errors and violations,“ he said.

Saturday, January 17, 2015

Air India pilot and engineer fight inside cockpit at Chennai airport

CHENNAI: A Chennai-Delhi Air India flight was delayed by more than two hours after a pilot and an aircraft engineer had a difference of opinion which ended up in a fight inside the cockpit on Saturday. 

Sources said that the plane which had arrived from Mumbai was scheduled to take off at 9.45am to Delhi but developed a technical snag.

Though an aircraft engineer rectified the snag, the pilot was not convinced and refused to take off. This led to a difference of opinion between the pilot and the aircraft engineer which ended in a scuffle, said an Air India official.

The pilot and the engineer are injured. The aircraft is an A319, which is a relatively new plane.

The fight between the pilot and the engineer happened when the technical team went inside the cockpit to compel the pilot to take off as scheduled.

An Air India official said that pilot was changed and the plane departed by around 11.45am.

The incident would be investigated, the Air India official said.

A pilot said that pilots were authorized to reject a flight if they found it was unsafe to fly after a technical snag.igating the case.

Google launches its flight search tool in India

The Economic Times

BENGALURU: Google has finally launched its flight search tool in India, a move that has been feared by online travel aggregators for some time. The tool allows users to find and compare airfares online and book tickets directly on an airline portal or through a partner aggregator. The new feature from the search giant cuts out online travel aggregators, who provide flight information and take a cut on the tickets they sell. Google's presence in the space could reduce traffic to their portals.


Goibibo, meanwhile, has partnered with Google Flight Search to display results from its own portal along with options thrown in by Google search from airline websites, when a user keys in requirements such as destination and travel date. Experts say Google Flight Search will impact online travel agents' marketing expenses, a majority of which is spent on online marketing.

"This move by Google will start an online bidding war among the online travel aggregators," said Aloke Bajpai, cofounder and chief executive of ixigo. com, a travel metasearch engine. Ixigo offers a similar tool that aggregates flight information and directs users to airline websites for bookings. Google's venture into flight search dates back to 2010, when it acquired Massachusetts-based flight information software company ITA software for $700 million. Flight search was initially launched in the US and then in parts of Europe.

In India, Google has been testing the waters for some time now. Previously online travel agents had planned to lodge a complaint with the Competition Commission of India against the tool. Subramanya Sharma, chief marketing officer of online travel agency Cleartrip, however, didn't seem to be worried about the potential impact of Google's tool on his business. "From what we know of the Indian market, this will have limited success as difference between ticket prices on an airline's website and an OTA is marginal," Sharma said. Moreover, airline websites are not optimised for mobile and that could lead to a "degradation of experience" for people using Google flight search to book directly on airline website, he added.

NEWS TODAY 26.01.2026