Wednesday, February 11, 2015

Union health ministry demands explanation over dental appointments

Union ministry of health and family welfare has pulled up the Dental Council of India (DCI) over invalid appointments of its members while seeking an urgent reply in the matter.

Recently, the DCI had appointed at least 55 to 60 members under section 3(d) and (e) of the Dentist Act, 1948 in which a notification with the health ministry is mandatory.

"It has come to the notice of the ministry that DCI has been issuing notifications for other categories of the Dentist Act, 1948, especially u/s 3(d) and (e)without consulting the central government in the matter. In this connection, attention is invited to the provisions under chapter II of the Dentist Act, 1948, which empowers the central government to constitute the council. The membership to the council is valid only if he/she is appointed by the central government by an order or notification. The practice of DCI of not sending names of the selected/nominated candidates for notification by the government, therefore, is not correct in view of the statuary provision," said Sudhir Kumar, under secretary, health ministry in a letter to the DCI.

The DCI is constituted by an act of Parliament - The Dentists Act 1948 (XVI of 1948) - with a view to regulate the dental education, dental profession and dental ethics thereto came into existence in March 1949.







"Any violation of statutes is illegal. Illegal persons are enlisted by the council just to settle some personal score," said Dr J.M. Jeyaraj, former member of the DCI.

He said: "Upon unearthing the gross violations, the government has written to DCI that membership is invalid without notification and nominations and elections have to be done as per statutes and regulations. If the DCI remains defiant, the government will be forced to deal with an iron hand into large-scale corruption in DCI with arrests and raids that could sully its image."

The council elects from the members its president, vicepresident and members of the executive committee. The elected president and the vice-president are the ex-officio chairman and vice chairman of the executive committee. The executive committee is the governing body of DCI dealing with all procedural, financial and day-to-day activities and affairs of the council.

When contacted, DCI president Dr Dibyendu Mazumder said: "I have already verbally replied to the health ministry about the matter. There was a court order in which the court allowed to include members without notification in one case. I will be replying to the ministry soon on the issue."

Experts in the dental field claim that the court order was for a case 20 years ago which doesn't mean that DCI has got the power to include names without central government notification and in violation of nomination.


Read more at: http://indiatoday.intoday.in/story/union-health-ministry-demands-explanation-over-dental-appointments/1/417759.html

Tuesday, February 10, 2015

போலீசுக்கு துணிச்சல்

logo

சில தினங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்திலேயே நடந்த ஒரு கொலை மிகவும் பயங்கரமான சம்பவமாக இருந்தது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் கைதியாக இருந்த வரதன் என்பவர் கோர்ட்டில் விசாரணைக்காக கையில் விலங்கு போடப்பட்டு, ஒரு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகளின் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டார். கோர்ட்டு வளாகத்துக்குள் அவரை அழைத்துக்கொண்டு போகும்போது முதலில் 2 பேர்களும், அதைத்தொடர்ந்து மேலும் சிலரும் அந்த கைதியை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதில் மிகவும் கண்டிக்கத்தகுந்த செயல் என்றால், அந்த கைதியின் பாதுகாப்புக்காக கைகளில் துப்பாக்கியோடு இருந்த போலீஸ் ஏட்டுவும், ரிவால்வார் வைத்திருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டரும், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல மிகவும் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதுதான். அவர்களின் பணியே அந்த கைதியை பாதுகாப்பாக ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கும், மீண்டும் கோர்ட்டில் இருந்து ஜெயிலுக்கும் கொண்டுபோவதுதான். ஆனால், தங்கள் கடமையை ஆற்றுவதற்கு முயற்சிசெய்யாமல், ஓடி ஒளிந்தார்கள் என்றால், தமிழக போலீசாருக்கு துணிச்சல் ஊட்டும் பயிற்சிகளை அளிக்கும் வகையில், புதிய திட்டங்களை வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

இவ்வளவுக்கும் பழிக்கு பழிவாங்கும் முன்விரோதம் காரணமாக, இந்த கைதியின் உயிருக்கு ஆபத்து என்று ஏற்கனவே உளவுப்பிரிவு எச்சரித்து இருக்கிறது. அப்படியிருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. கையில் துப்பாக்கி கொடுத்திருப்பது எதற்காக என்றே தெரியாத போலீசாரை பாதுகாப்புக்காக மேல் அதிகாரிகள் அனுப்பியிருக்கிறார்கள். கோர்ட்டு வளாகங்களில் கைதிகளை கொலை செய்வது தொடர்கதையாகிவிட்டது. பழைய காலங்களில் இதுபோல கோர்ட்டில் கொலை செய்தவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். இவ்வாறு என்கவுண்டரில் போலீசார் சுட்டதால் கொஞ்சகாலத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் கோர்ட்டு வளாகங்களில் நடக்காமல் இருந்தது.

பூந்தமல்லி கோர்ட்டில் நடந்த இந்த சம்பவம், எதிர்காலத்தில் இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவேண்டுமானால், என்னென்ன நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்? என்பதை பகிரங்கப்படுத்திவிட்டது. முதலில் போலீசாருக்கு காக்கி உடை உடலில் அணிந்தவுடன் எத்தகைய அளவில் தைரியமாக தங்கள் கடமையை ஆற்றவேண்டும் என்ற பயிற்சியை அளிக்கவேண்டும். மேலும், எளிதில் கையாளக்கூடிய நவீனரக துப்பாக்கிகளை வழங்கவேண்டும். இன்னும் தமிழக போலீசாருக்கு பழையகாலத்தில் உள்ள 410 மஸ்கட் ரக துப்பாக்கிதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கையில் தூக்கிக்கொண்டு வருவதற்கும், இதுபோன்ற சம்பவங்களில் தோளில் வைத்து சுடுவதற்கும் நிச்சயமாக சிரமம்தான். எனவே, வெளிநாடுகளில் வழங்கப்பட்டுள்ளதுபோல, நவீனரக துப்பாக்கிகள் வழங்கப்படவேண்டும். வேலைக்கு தேர்வானபோது அளிக்கப்படும் பயிற்சிகளில் துணிச்சலை ஊட்டும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அடிக்கடி துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பயிற்சி கொடுத்து, யார் குறிதவறாமல் மின்னல் வேகத்தில் கையில் எடுத்து சுடுகிறார்களோ, அவர்களையே முக்கிய பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தவேண்டும். மேலும், போலீசாருக்கும் ஒரு குறை இருக்கிறது. முன்பெல்லாம் என்கவுண்டரில் இதுபோல குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் போலீசார் வீரமிக்கவர்களாக கருதப்பட்டு, மேல் அதிகாரிகளாலும், சமுதாயத்தாலும் பாராட்டுப்பெற்று வந்தனர். ஆனால், இப்போதோ உடனடியாக விசாரணை என்ற பெயரில் வெகுகாலத்துக்கு துறை ரீதியாகவும், வழக்குகளுக்காக கோர்ட்டுகளுக்கும் அலையவேண்டிய நிலை இருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்தாலேபோதும், வீரம் தானாக வரும் என்கிறார்கள் போலீசார்.

அடுத்த ஆண்டில் மகாமகத் திருவிழா: மந்த கதியில் குடந்தை மகாமகப் பணிகள்- அரசு நிர்வாகங்களுக்கு வலுக்கும் கோரிக்கைகள்

Return to frontpage




தென்னகத்து கும்பமேளா என்று அழைக்கப்படும் கும்பகோணம் மகாமக திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ல் வருகிறது. அதற்கு முன்பாக இளைய மகாமகம் வரும் மார்ச் 4-ல் நடக்கவிருக்கும் நிலையில், மகாமக பணிகள் மந்தமாக நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.

மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 69 திருக்கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டும் இன்னமும் பெரும்பாலான கோயில்களில் பணிகள் ஆரம்பிக்கவில்லை. நகருக் குள் உள்ள 36 குளங்களில் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் தூர்வார வும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. நகருக்குள் ஓடும் திறந்த வெளிச் சாக்கடைகளும் கழிவுநீர் கால்வாய்களாகிப்போன சுகாதாரச் சந்துகளும் பொது சுகாதாரத்துக்கு சவால்விடுகின்றன.

பொதுக் கழிப்பிடங்களில் பெரும் பாலானவை பராமரிப்பின்றி மூடிக் கிடக்கின்றன. மகாமகத்தின்போது இங்குள்ள வைணவ கோயில் உற்சவ மூர்த்திகள் காவிரி கரையின் படித்துறைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். இந்தப் படித் துறைகளும் சிதிலமடைந்து தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.

அரசு தலைமை மருத்துவ மனையையும் கருப்பூர் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் உயர்மட்டப் பாலம் அமைப் பது, அரசலாற்றில் உச்சிப்பிள்ளை யார் கோயில் அருகேயுள்ள பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றுவது இவ்விரண்டு கோரிக் கைகளும் முதல்வர் கவனத்துக்குப் போன பிறகும் கண்டுகொள்ளப் படவில்லை.

இது குறித்துப் பேசிய விஸ்வ இந்து பரிஷத்தின் நகரத் தலைவர் கண்ணன், ‘‘மகாமகத்துக்காக கடந்த ஓராண்டாக ஆலோசனைக் கூட்டங்களை போடுகிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால், உருப்படியாக எந்தப் பணியும் நடக்கவில்லை. முடிந்த வரை காலம் கடத்திவிட்டு கடைசி நேரத்தில் தரமற்ற வகையில் பணிகளை செய்து மக்கள் பணத்தை வீணடிக்கப் போகிறார்கள்’’ என்கிறார்.

கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்ய நாராயணன், ‘‘மகாமகத்துக்கு இம்முறை சுமார் ஒரு கோடி பேர் வருவார்கள். கும்பகோணம் - விருத்தாசலம் புதிய ரயில் பாதை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இதுவரை ஐந்து முறை சந்தித்துப் பேசிவிட்டோம். எந்தப் பயனும் இல்லை’’ என்கிறார்.

நகராட்சி தலைவர் ரத்னாவுக்காக பேசிய அவரது கணவர் சேகர், ‘‘பாலங்கள், சாலைகள், தெருவிளக்கு கள் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக அரசு ரூ.43.73 கோடி வழங்கி இருக்கிறது. ஐந்து குளங்களை தூர்வாரு வதற்காக சிட்டி யூனியன் வங்கி ரூ.1.35 கோடி அளித்துள்ளது. இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’’ என்றார்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் மகாமக பணிகள் குறித்து பேசியபோது, ‘‘அனைத்துத் துறைகளின் சார்பில் ரூ.200 கோடிக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.70 கோடிக்கான பணிகளை தொடங்கி விட்டோம். இன்னும் மூன்று மாதத்துக்குள் மகாமக பணிகள் ஒரு வடிவத்துக்கு வந்துவிடும்’’ என்றார்.

துணிவே தொழில்: விற்பனை செய்தலே தாரக மந்திரம்...byஅஸ்பயர் கே.சுவாமிநாதன்



நிறைய சிந்தனை, பலருடன் ஆலோசனை, நீண்ட நெடிய ஆராய்ச்சி ஆகியவற்றுக்குப் பிறகு நீங்கள் விரும்பிய தொழிலைத் தொடங்கிவிட்டீர்கள். வெறும் வாய்மொழி விளம்பரத்தில் தொடங்கி இன்று பிரலமான தயாரிப்பாக இருந்தாலும் உங்கள் தொழிலை விரிவாக்க இது போதாது.

இது போட்டிகள் நிறைந்த உலகம். உங்களது தயாரிப்பைப் போன்று குறைந்தபட்சம் நான்கு பேராவது தயாரிப்புகளை அளிப்பர். இத்தகைய சூழலில் உங்களது தயாரிப்புக்கு ஒரு தனித்தன்மை தேவைப்படுகிறது. பொருள் தரமாக இருந்தாலும், அது வாடிக்கையாளர் மனதில் பதிவதற்கு விளம்பரம் அவசியம்.

ஒரு ரூபாய் ஷாம்பு பாக்கெட் விற்பனை செய்வதற்கு கோடிக் கணக்கில் விளம்பரம் செய்கின்றனர். 50 காசு மதிப்புடைய பாக்கை விற்கவும் விளம்பரம் தேவைப் படுகிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன?

உங்கள் தயாரிப்பை தொடர்ந்து வாடிக்கையாளர் மனதில் இருத்துவதற்கு விளம்பரம் அவசியம். பொருள் தரமாக இருப்பது மட்டும் போதாது, அது தரமாக உள்ளது என்பதை தொடர்ந்து விளம்பரம் மூலம் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படி விளம்பர போட்டி மூலம் பொருள்கள் பிரபலமாகிவரும் வேளையில் மக்கள் வாய் மூலமான விளம்பரமே போதும் என நீங்கள் காத்திருக்கக் கூடாது. எனவே விளம்பர திட்டங்களை வகுக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.

இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வந்துள்ளன. குறைந்த செலவில் இவற்றின் மூலமும் வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பெறச் செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு நிறுவனத்துக்கு உயிர் நாடியே சந்தைப் பிரிவுதான். எந்த ஒரு புதிய நிறுவனத்துக்கும் தயாரிப்புகள் புதிய தாக இருக்க வேண்டும் என்பதோடு மிகச் சிறப்பான சந்தைப்படுத்துதலும் அவசியம்.

வாடிக்கையாளர்களின் நாடியை பிடித்து அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே போட்டிகளைச் சமாளிக்க முடியும். சந்தைப்படுத்துதல் மட்டும்தான் உங்கள் தொழிலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

மிகச் சிறந்த தயாரிப்பு லட்சக்கணக்கில் வருவாயை ஈட்டும் என்று யூகித்துவிடாதீர்கள். தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், அதை சிறப்பாக சந்தைப்படுத்த (marketing) வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். மிகச் சிறந்த தயாரிப்புகள் மிகச் சிறந்த சந்தை உத்திகளின் மூலம்தான் வெற்றி பெறுகின்றன. இதற்குத்தான் விளம்பரம் அவசியமாகிறது.

சந்தைப்படுத்தியதற்குப் பிறகு பொருள் விற்பனை (sales) மிகவும் அவசியம். நான் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளிலும் இளம் தொழில்முனைவோர் பலரும் கேட்கும் கேள்வி இதுதான்.

இவ்வளவு படித்துவிட்டு விற்பனையில் இறங்குவதா? என்பதே.

பெரும்பாலானவர்கள் விற்பனை என்பது உண்மையை பலமடங்கு சித்தரித்து கூறி வாடிக்கையாளர்களை பொருள்கள் வாங்க வைப்பது என்று நினைக்கின்றனர். ஆனால் இதுமாதிரியான விற்பனை உத்தியை ஒருபோதும் பின்பற்றக் கூடாது.

இதுபோன்ற குறுக்கு வழி உத்திகள் விரைவிலேயே உங்கள் தொழிலை காணாமல் செய்துவிடும். உங்கள் தயாரிப்பை விற்பனை செய்ய நீங்களே தயங்கினால் அவற்றை நீங்கள் உங்கள் அலுவலகத்திலேயே வைத்திருக்க வேண்டியதுதான்.

பன்னாட்டு நிறுவனங்களின் தலை மைப் பொறுப்பிலிருக்கும் பெரும் பாலானவர்கள் ஆரம்ப காலத்தில் விற்பனையில் ஈடுபட்டவர்கள்தான். ஐஐஎம் போன்ற நிர்வாகவியல் கல்வி மையங்களில் முதுகலை நிர்வாகவியல் பட்டம் பெற்று பெரிய நிறுவனங்களில் நிர்வாகவியல் பயிற்சியாளராக சேருவோர் குறைந்தபட்சம் 3 மாதங்களாவது குக்கிராமங்களில் விற்பனை பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர்.

பொருள்களை சந்தைப்படுத்தி விற்பனையை முடுக்கி விட வேண்டும். உங்களது பொருள் சிறப்பாக இருக்கும்போது அதை விற்பனை செய்ய நீங்கள் தயங்குவதில் அர்த்தமில்லையே?

விற்பனை என்பது பரஸ்பர பலனளிக்கும் விஷயம். வாங்குபவரும் விற்பவரும் பலனடைய வேண்டும். உங்களது தயாரிப்பு மூலம் வாடிக்கையாளரது நம்பிக்கையை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உள்ளார்ந்த விஷயமாகக் கருத வேண்டும்.

உங்கள் பொருள் மூலம் வாடிக்கையாளரது வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறீர்கள், அதன் மூலம் புதிய தொழில்முனை வோரை உருவாக்குகிறீர்கள் என நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இல்லாமல் தொழில் செய்யும் எந்த தொழில்முனைவோரும் வெற்றி பெற்றது கிடையாது.

இந்த சிந்தனையை அனைத்து பயிற்சியாளர்கள், ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகளிடமும் ஆழமாக விதைக்க வேண்டும். இதன் மூலம்தான் உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரம் வேரூன்றும். இதன் மூலம் பொருள்கள் விற்பனை அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள் மத்தி யில் நம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த நம்பிக்கைதான் உங்கள் தயாரிப்பை பல காலம் வாழ வைக்கும்.

அஸ்பயர் கே.சுவாமிநாதன்

2003: சறுக்கிவிட்ட பதற்றம்

உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியினர். படம்: வி.வி. கிருஷ்ணன்

மார்ச் 1-ம் தேதியன்று நடந்த அந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. டாஸை வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது. சயீத் அன்வர் 101 ரன் அடித்தார். யூனிஸ் கான் (32), யூசுஃப் (25) ஆகியோரின் உதவியுடன் ஸ்கோர் வலுவான நிலையை எட்டியது.

கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியின் முன் பதற்ற மாக அமர்ந்திருக்க, சச்சினும் சேவாகும் களமிறங்கினார்கள். வழக்கமாக சேவாக்தான் முதல் பந்தை எதிர்கொள்வார். அன்று அவரை மறுமுனைக்கு அனுப்பி விட்டு சச்சின் ஆடத் தயாரானார்.

அதிரடியாக ஆடும் எண்ணம் சச்சின் மனதில் இல்லை. முதல் பத்து ஓவர்களில் பெரிய சேதம் இல்லாமல் பார்த்துக்கொள்வ துடன் ரன் விகிதமும் ரொம்பவும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் வியூகம்.

முதல் இரண்டு பந்துகளில் ரன் வர வில்லை. மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி. அடுத்து ஒரு ரன். கடைசிப் பந்தில் சேவாக் ஒரு பவுண்டரி. முதல் ஓவரில் 9 ரன்கள். இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.

அடுத்த ஓவர்தான் போட்டியின் திருப்புமுனை. பதற்றத்துடன் வைட் பால் போட்டு ஓவரைத் தொடங்கிய ஷோயிப் அக்தரின் நான்காவது பந்து நன்கு எகிறி வந்தது. ஆனால் ஆஃப் ஸ்டெம் புக்கு வெளியே வந்தது. அதைப் பார்த்த சச்சின் வேகமாக எதிர் வினை ஆற்றினார். துல்லியமான தருணத்தில் பந்தை எதிர்கொண்டு அப்பர் கட் அடித்தார். பந்து தேர்ட் மேன் திசையில் எல்லைக் கோட்டைத் தாண்டிப் பறந்தது. அடுத்து ஒரு நான்கு. அதை அடுத்து ஒரு நான்கு.

அக்தரின் முதல் ஓவரில் 18 ரன்கள் அரங்கம் அதிர்ந் தது. அதன் பிறகு சச்சினைத் தடுக்க முடியவில்லை. வேகமாக வும் நேர்த்தியாகவும் பந்துகளைப் பதம்பார்த்தார். சேவக் விரைவில் ஆட்டமிழந்தார் (21). கங்கூலி முதல் பந்திலேயே வெளியேறி னார். கைஃப் (60 பந்துகளில் 35) நெடு நேரம் தாக்குப் பிடித்தார். மிக அருமையான சச்சினின் இன்னிங்ஸ் (75 பந்துகளில் 98) முடிவுக்கு வந்தபோது ஸ்கோர் 177-4. ஓவர்கள் 27.4. இன்னும் 22.2 ஓவர்களில் 97 ரன் அடிக்க வேண்டும்.

அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இதே பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி யில் சச்சின் 136 ரன் அடித்து ஆட்டமிழந்தபோது இன்னும் 20க்கும் குறைவான ரன்களை அடிக்க முடியாமல் மற்றவர்கள் ஆட்டமிழந்தார்கள். அதுபோலவே இப்போதும் ஆகிவிடுமா என்னும் அச்சம் சூழ்ந்தது.

ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. நல்ல தொடக்கத்தை வெற்றியாக மாற்றும் கலை இந்தியாவுக்குக் கைவந்திருந்தது. திராவிடும் (44) யுவராஜும் (50) ஆட்டமிழக்காமல் அணியைப் பத்திரமாகக் கரைசேர்த்தார்கள். இந்திய ரசிகர்கள் கோப்பையே கைக்கு வந்ததுபோலக் குதித்தார் கள். “மற்ற போட்டிகள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, பாகிஸ் தானை வென்றதே போதும்” என்று இந்திய ரசிகர் ஒருவர் சொன்னதைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஆனால் இந்தியா அப்படி விட்டு விடவில்லை. சூப்பர் சிக்ஸில் கவன மாக ஆடி மூன்று போட்டிகளை யும் வென்று அரையிறுதிக்குச் சென்றது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப் பாக ஆடியது. சச்சின் (97), சேவாக் (66), கங்கூலி (48) ஆகியோரின் ஆட்டத்தால் 292 ரன் எடுத்தது.

வேகப் பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்து வீச்சால் 23 ஓவர் களில் 109 ரன்னுக்கு இலங்கை யைச் சுருட்டியது. அதன் பிறகு நடந்த போட்டியில் நியூஸிலாந்தை 45.1 ஓவரில் 146 ரன்னுக்குச் சுருட்டியது. அரை இறுதியில் கென்யாவை எளிதாக வீழ்த்தியது.

தோற்றது ஏன்?

இப்படிப் பந்து வீச்சு, மட்டை வீச்சு இரண்டிலும் பிரகாசித்து இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இந்தியா வாய்ப்பைத் தவறவிட்டது.

அதற்கு முக்கியக் காரணம் ஆஸ்திரேலியாவின் ஆட்டம். குறிப்பாக அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் ஆட்டம். ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 140 ரன் எடுத்தார். அடுத்த காரணம் இந்தியாவின் பதற்றம். நன்றாக வீசிக்கொண்டிருந்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடரிலேயே மோசமாக இறுதிப் போட்டியில் வீசினார்கள். உச்சகட்ட சவாலில் ஆக மோசமாகப் பந்து வீசினார்கள்.

கங்கூலி என்னென்னமோ செய்துபார்த்தார். மொத்தம் எட்டுப் பேர் பந்து வீசினார்கள். ஹர்பஜன் சிங் மட்டுமே 2 விக்கெட் எடுத்தார். ஆடம் கில்கிறிஸ்ட் (57), மேத்யூ ஹைடன் (37), ரிக்கி பாண்டிங் (ஆட்டமிழக்காமல் 140), டேமியன் மார்ட்டின் (ஆட்டமிழக்காமல் 88) ஆகியோர் இந்தியப் பந்து வீச்சை நார் நாராகக் கிழித்தார்கள். ஸ்கோர் 359-2.

பதற்றம் மட்டை வீச்சிலும் தொடர்ந்தது. முதல் ஓவரில் க்லென் மெக்ரா பந்தில் நேர்த்தி யான ஒரு பவுண்டரி அடித்த சச்சின் அடுத்த பந்தை ஹுக் செய்ய முயல, பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு மெக்ராவிடமே கேட்சாக மாறியது. இந்தியர்களின் நம்பிக்கை சரிந்தது.

சேவாக் (82), திராவிட் (44), கங்கூலி (24), யுவராஜ் (24) என்று மற்றவர்கள் போராடினாலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் 7க்கு மேல் இருந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் அது அது ஏற ஏற இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இறங்கிக்கொண்டேபோனது. 39.2 ஓவர்களில் 234 ரன் எடுத்து இந்தியா ஆட்டமிழந்தது. 125 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் கனவு சிதைந்தது.

தொடர் முழுவதும் இருந்த கட்டுக்கோப்பும் முனைப்பும் கடைசிக் கட்டத்தில் சிதறியதால் இந்தியா தோற்றது. இறுதிப் போட்டி குறித்த பதற்றம் நோபாலுடன் தொடங்கிய ஜாகீரின் முதல் ஓவரிலேயே தெரிந்தது. அந்த ஓவரில் அவர் பத்துப் பந்துகள் வீசினார்.

நல்ல பந்து வீச்சையே சிதற அடிக்கும் ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் பதற்றமும் பிழைகளும் மலிந்த பந்து வீச்சைச் சும்மா விடுவார்களா? போராடி உச்சம் தொட்ட இந்தியா பதற்றத்தில் கோப்பையைத் தவறவிட்டது.

கென்யா ஏற்படுத்திய ஆச்சரியம்

2003 போட்டிகளில் ஆச்சரியம் ஏற்படுத்திய அணி கென்யா. பலவீனமான அணிகள் தம்மை எதிர்த்து ஆடும் வலுவான அணிகளின் ரன் விகிதத்தைக் கணிசமாகக் கூட்டிக்கொள்ளவே பயன்படும் என்பதே இதுபோன்ற தொடர்களின் நிலைமை. கென்யாவும் அப்படிப்பட்ட அணிதான். ஆனால் அது வலுவான அணிகளுக்குக் கடும் அதிர்ச்சியைத் தந்தது.

தென்னாப்பிரிக்காவுடன் தோற்ற கென்யாவுக்கு கனடாவுடனான போட்டியில் வெற்றி கிடைத்தது. நியூஸிலாந்து போட்டியில் தற்செயலாக வெற்றி கிடைத்தது. நைரோபியில் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து அங்கே ஆட வர மாட்டோம் என்று நியூஸிலாந்து அறிவித்ததால் கென்யா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இலங்கையுடனான போட்டியில் கென்யா இலங்கையை 157 ரன்னுக்குள் சுருட்டி 53 ரன் வித்தியாசத்தில் வென்றது உண்மையிலேயே ஆச்சரியமான திருப்பமாக அமைந்தது. பிறகு பங்களாதேஷை வென்று நான்கு வெற்றிகளுடன் சூப்பர் சிக்ஸுக்குள் நுழைந்தது. வலுவான தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

சூப்பர் சிக்ஸில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தாங்கள் ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்றன. ஜிம்பாப்வே மூன்றிலும் தோற்றது. தலா ஒரு வெற்றி பெற்ற இலங்கை, நியூஸிலாந்து, கென்யா அணிகளில் ரன் விகித அடிப்படையில் கென்யா அரை இறுதிக்கு முன்னேறியது. அங்கே இந்தியாவிடம் தோற்றாலும் அரை இறுதிக்கு வந்த பெருமிதத்துடன் வெளியேறியது.

முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணச்சீட்டு பெற்றவர்கள் பயணம்: பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் - தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவு

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் சாதாரண பயணச் சீட்டு பெற்றவர்களை பயணம் செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.21 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஈக்காட்டு தாங்கல் பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறிருந்ததாவது:

நான் என்னுடைய குடும்பத்தினருடன் அகமதாபாத் செல்வதற்காக கடந்த 24.12.2012 அன்று முன் பதிவு பயணச்சீட்டு எடுத்திருந்தேன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய குடும்பத்தினர் ஏழு பேருக்கு இருக்கை ஒதுக்கப் பட்டு இருந்தது. ஆனால் பயணத்தின் போது முன்பதிவு பெட்டியில் முன்பதிவு பயணச்சீட்டு பெறாதவர்களும் பயணம் செய்தனர்.இந்த புகாரை பயணச்சீட்டு கண்காணிப்பு அதிகாரியிடம்(டிடிஆர்) தெரிவிக்க முடிவு செய்தோம். ஆனால் டிடிஆர் வரவில்லை.

இதனால் பெரும் சிரமம் ஏற்பட் டது. 72 பேர் பயணம் செய்ய வேண்டிய முன்பதிவு பெட்டியில் சுமார் 172 பேர் பயணம் செய்தார்கள். தெற்கு ரயில்வேயின் சேவை குறைபாடே இதற்கு காரணம்.

ஆகவே, முன்பதிவு பயணச் சீட்டுக்கு நாங்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1,271 தொகையை 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். அதேபோல் சேவை குறைபாட்டுக்கு ரூ.77 ஆயிரத்தை 7 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தெற்கு ரயில்வே சார்பில் எழுத்து மூலமாக தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், “பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி டிக்கெட்டுகளை சரிபார்ப்பதும், முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைத் தடுப்பதும் ரயில்வே துறையின் சொந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகும். பயணச்சீட்டு சரிபார்ப்பு அதிகாரி பயணிகளுடைய டிக்கெட்டுகளில் கையெழுத்து போடுவது நிர்வாக காரணத்துக்காகத்தானே தவிர அது ஒரு சேவை அல்ல. ஆதலால் புகார்தாரர் டிடிஆர் வர வில்லை என்பதை குற்றமாக சொல்லியிருப்பதை புகாராக எடுத்துக்கொள்ள கூடாது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை சென்னை(வடக்கு ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் ஜெயபாலன், உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரணை செய்து கடந்த மாதம் 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

புகார்தாரர் சேதுராமன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெற்கு ரயில்வேயிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக ரயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக மன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் சேவை குறைபாடு செய்துள்ளனர் என தெரியவருகிறது.

இதன் காரணமாக பயணி சேதுராமனுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ.21 ஆயிரத்தை இழப்பீடாகவும், வழக்கு செலவாக ரூ. 3 ஆயிரமும் வழங்க வேண்டும். அதேபோல் சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தைவிட முன்பதிவு பயணச்சீட்டுக்காக கூடுதலாக செலுத்திய ரூ.1,271-யை 9 சதவீத வட்டியுடன் தரவேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடக்கம்



மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

ரெயில் சேவை தொடக்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பகத் கீ கோத்தி (ஜோத்பூர்) என்ற இடத்திற்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபாகர்பிரபு டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி நேற்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் கொடி அசைத்தார். இதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளாரங்கராஜன், கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ராஜ்புரோகித், மன்னார்குடி நகரசபை தலைவர் சுதாஅன்புச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் உதயகுமாரிதமிழ்க்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை யொட்டி மன்னார்குடியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 6 மணி அளவில் ஜோத்பூர் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நாளை (புதன்கிழமை) இரவு 11.45 மணி அளவில் ஜோத்பூர் சென்றடையும்.

இந்த ரெயில் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கல், சிராலா, தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், பெத்தபல்லி, ராமகுண்டம், சிற்பூர்காகநகர், பெல்லர்ஷா, நாக்பூர், இட்ராசி, ஹபிப் கன்ட்ஜ், போபால், சுஜல்பூர், உஜ்ஜையினி, நாக்டா, பவானிமன்டி, கோட்டா, சவாய்மதேபூர், துர்காபூரா, ஜெய்பூர், புளேரா, மக்ரானா, தேகானா, மெர்டாரோடு, கோட்டன், ராய்காபக்பேலஸ் ஆகிய இடங்கள் வழியாக ஜோத்பூர் செல்கிறது.

வாராந்திர எக்ஸ்பிரஸ்

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 11.30 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி அளவில் சென்னை சென்றடையும். அங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 6 மணி அளவில் ஜோத்பூர் சென்றடையும்.

அதுபோல் வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் ஜோத்பூரில் இருந்து புறப்படும். பின்னர் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை வந்தடையும் ரெயில், மாலை 6 மணி அளவில் மன்னார்குடி வரும்.

எக்ஸ்பிரஸ் ரெயில் குறித்து திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மஞ்சுளாரங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரட்டை வழிப்பாதை

இந்த ரெயிலில் 6 பொதுப் பெட்டிகள், 6 முன்பதிவு பெட்டிகள், 2 பெண்கள் பெட்டிகள் உள்பட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இன்று 8 ரெயில்களை ரெயில்வே மந்திரி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் 2 தமிழ்நாட்டை சேர்ந்த ரெயிலாகும். அதில் ஒன்று மன்னார்குடி-ஜோத்பூர் ரெயில் ஆகும்.

பொன்மலை-தஞ்சாவூர் இடையே இரட்டை வழிப்பாதை பணிக்கு நேற்றுமுன்தினம் பூஜை போடப்பட்டது. வரும் மகாமக திருவிழாவுக்குள் திருக்காட்டுப்பள்ளி- பூதலூர் வரை இரட்டை வழிப்பாதை நிறைவு பெற்று விடும். பூதலூரில் இருந்து திருச்சி வரை பெரிய பாலங்கள் கட்ட வேண்டி இருப்பதால் இந்த இரட்டை வழிப்பாதை பணிகள் 18 மாதத்திற்குள் நிறைவடையும். மன்னார்குடி -பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் ஆகிய ரெயில்வே திட்டங்கள் ரெயில்வே கட்டுமான துறையிடம் உள்ளது. ரெயில்வே பட்ஜெட் வந்த பிறகுதான் இதுபற்றி முழுமையாக தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in 5 yrs

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in  5 yrs  Ethics Board Says Non-Med Practitioners Can’t File Appeals  Rema.Nagarajan@tim...