Friday, February 13, 2015

குழந்தையுடன் 'லிப்ட்' கேட்டார் பெண்;காரை நிறுத்தியவருக்கு 'எல்லாம் போச்!'

வேலுார்:இரவு நேரத்தில், கைக்குழந்தையுடன் பெண், 'லிப்ட்' கேட்டதால், பரிதாபப்பட்டு காரை நிறுத்தியவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி, பணம் மற்றும் மொபைல்போன்களை பறித்து ஓட்டம் பிடித்தது; இவர்களுடன் சேர்ந்து, பெண்ணும் ஓட்டம் பிடித்தார்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர், வினோத்குமார், 27; பூ வியாபாரி. இவர், நேற்று முன்தினம் வேலுாரில் இருந்து அணைக்கட்டு வழியாக ஆலங்காயத்துக்கு, காரில் புறப்பட்டார். இரவு, 9:45 மணிக்கு, ஆசனாம்பட்டு அடுத்த குறவன்கொட்டாய் அருகே உள்ள மலைப்பகுதியில், கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண், 'லிப்ட்' தருமாறு சைகை காட்டினார்.

பரிதாபப்பட்டு காரை நிறுத்திய வினோத்குமார், கீழே இறங்கியது தான் தாமதம்; உடனே, ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்து, பணம், பொருட்களை கேட்டு மிரட்டியது.

வினோத்குமார் மறுத்ததால், சரமாரியாக அடித்து உதைத்தது.பின், அவரிடம் இருந்த மொபைல்போன்கள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து, சிறிது துாரத்தில் நிறுத்தியிருந்த வேனில் தப்பியது; 'லிப்ட்' கேட்ட பெண், குழந்தையை துாக்கிக் கொண்டு கும்பலுடன் சேர்ந்து ஓட்டம் பிடித்தார். வினோத்குமார் சத்தம் போட்டும், மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. படுகாயத்துடன் மீண்டும் வேலுார் திரும்பி, வேப்பங்குப்பம் போலீசில் நள்ளிரவில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர் தினம் நாளை கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள ரோஜாப்பூக்கள் 20 பூ அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை



காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் குவிக்கப்பட்டுள்ளன. 20 பூ அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காதலர் தினம்

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் எதிர்ப்பையும் மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதனால் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் காதலர்கள் மத்தியில் பாதிரியார் வாலண்டைனுக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் தினத்தில் காதலர்கள் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வதற்காக பல்வேறு விதமான பரிசுப்பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜாப்பூ.

20 பூ ரூ.160–க்கு விற்பனை

அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் கடந்த 2 நாட்களாக குவிக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களை விட காதலர் தினத்தையொட்டி ரோஜாப்பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

பெரும்பாலான ரோஜாக்கள் ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த ரோஜாக்களில் சாதாரண ரோஜாப்பூ, தாஜ்மஹால் ரோஜாப்பூ என 2 விதமான வகைகள் இருக்கின்றன. இதில் 20 சாதாரண ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கும், 20 தாஜ்மஹால் ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.180–க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பூச்செண்டு கடைகளில்...

கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் தான் இதுவரை விற்பனை செய்யப்படுவதாகவும், காதலர் தினத்தன்று விலை சற்று உயர்ந்து காணப்படலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் அல்லாது, சென்னை நகரில் ஆங்காங்கே உள்ள பூச்செண்டு விற்பனை கடைகளிலும் பல்வேறு வண்ணங்களில் உயர்ரக ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. விற்பனை கடைகளில் உள்ள தொழிலாளர்களின் கைவண்ணங்களில் வித்தியாசமாக ரோஜாப்பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் மேலும் 50 பஸ்களின் எண்கள் மாற்றம் மாநகர போக்குவரத்து கழகம் தகவல்



சென்னை மாநகரில் மேலும் 50 பஸ்களுக்கு வழித்தட எண்கள் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.

புதிய வழித்தட எண்கள்

மாநகரில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு ஏற்படும் குழப்பத்தை போக்க மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே 15 வழித்தட எண்களை மாற்றியது. இதனைத் தொடர்ந்து நேற்று 50 வழித்தட எண்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதில் பிராட்வேயில் இருந்து வடபழனி, அய்யப்பன்தாங்கல், சாலிகிராமம் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் எண் 17–ல் இருந்து 26 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு, கிண்டி, அடையாறு உட்பட மாநகரில் உள்ள அனைத்து டிப்போக்களில் உள்ள பஸ் வழித்தட எண்களும் படிப்படியாக மாற்றப்பட இருக்கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ்கள் புறப்படும் இடம், சேரும் இடம், பழைய எண் மற்றும் புதிய எண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

--–

புறப்படும் இடம் சேரும் இடம் பழைய எண் புதிய எண்

--–

பிராட்வே அய்யப்பன்தாங்கல் 17எம் 26

பிராட்வே வடபழனி 17எம் கட் 26 கட்

பிராட்வே சாலிகிராமம் 17 எம் எக்ஸ்டன் 26 எக்ஸ்டன்

வேளச்சேரி தாம்பரம் மேற்கு எம்.21 51

வேளச்சேரி மேடவாக்கம் சந்திப்பு எம் 21 கட் 51 கட்

பிராட்வே திருமழிசை 153 53ஏ

பிராட்வே ஸ்ரீபெரும்புதூர் 553 53 பி

பிராட்வே கே.கண்ணதாசன் நகர் 7ஜி 64 கே

பிராட்வே கொடுங்கையூர் பார்வதிநகர் 7ஜி எக்ஸ்டன் 64 கே எக்ஸ்டன்

கோயம்பேடு மார்க்கெட்– தாம்பரம் எம் 70 சி 70 சி

அம்பத்தூர் ஐ.இ கிண்டி டி.வி.கே.ஐ.இ எம். 70 வி டி 70 கட்

ஆவடி சி.எம்.பி.டி. எம். 70 ஏ 77

சி.எம்.பி.டி, அய்யப்பாக்கம் 20 ஜெ 77 ஏ

வேங்கடாசலம் நகர் சி.எம்.பி.டி. எம் 70 ஏ கட் 77 கட்

கோயம்பேடு மார்க்கெட் புழல் 62 டி 77 டி

சி.எம்.பி.டி, கன்னியம்மன் நகர் 61 மே எக்ஸ்டன் 77 இ

ஜெ.ஜெ.நகர் மேற்கு கிண்டி டிவிகே ஐ.இ. ஜெ 70 77 ஜெ

சி.எம்.பி.டி. கருக்கு 20 எச் 77 கே

சி.எம்.பி.டி, கருக்கு எம் 70 எல் 77 கே

கோயம்பேடு மார்க்கெட் மதனகுப்பம் 62 இ 77 எம்

கோயம்பேடு மார்க்கெட் பூச்சி ஆத்திபேடு 61 பி கட் 77 பி

சி.எம்.பி.டி. வேப்பம்பட்டு இ.நகர் எம் 70 இ 77 வி

சி.எம்.பி.டி. கோயம்பாக்கம் 70 இ 77 வி எக்ஸ்டன்

திருவான்மியூர் தாம்பரம் ஏ 21 91

திருவான்மியூர் தாம்பரம் ஏ 21 ஏசி 91 ஏசி

திருவான்மியூர் கூடுவாஞ்சேரி வி 21 91 ஜி

திருவான்மியூர் வண்டலூர் மிருகக்காட்சிசாலை ஏ 21 வி 91 வி

திருவான்மியூர் தாம்பரம் கிழக்கு டி 51 95

சோழிங்கநல்லூர் தாம்பரம் சி 51 கட் 97 கட்

அடையார் பி.எஸ் தாம்பரம் மேற்கு சி 51 97

பிராட்வே கேளம்பாக்கம்/ சிறுசேரி 21 எச் 102/102 எஸ்

பிராட்வே செம்மாஞ்சேரி எஸ்சிபி எச் 21 102 சி

பிராட்வே கண்ணகிநகர் எஸ்சிபி டி 21 102 கே

பிராட்வே ஒட்டியம்பாக்கம் சி 21 102 எம்

பிராட்வே கோவளம் பிபி19 எக்ஸ்டன் 109

திருவான்மியூர் கோவளம் பிபி19 கட் 109 கட்

பிராட்வே ஈஞ்சம்பாக்கம் பிபி19 ஜி.எஸ். 109 சி

தாம்பரம் திருவேற்காடு 170 111

ரெட்ஹில்ஸ் கிண்டி டிவிகே ஐ.இ. சி70 113

கிண்டி டி.வி.கே. ஐ.இ பாடியநல்லூர் சி70 எக்ஸ்டன் 113 எக்ஸ்டன்

பிராட்வே ஆவடி/அரக்கம்பாக்கம் 61 பி 120 ஏ

பிராட்வே ஆவடி/கீழ்கொண்டையூர் 61 இ 120 இ

பிராட்வே கதவூர் 61 டி 120 கே

பிராட்வே ஆவடி/ கீழ்கொண்டையூர் 61 டி எக்ஸ்டன் 120 கே எக்ஸ்டன்

சி.எம்.பி.டி பட்டாபிராம் எம் 153 153

சி.எம்.பி.டி திருவள்ளூர் 596 153 ஏ

சி.எம்.பி.டி பாண்டூர் 596 ஏ 153 பி

சி.எம்.பி.டி மேப்பூர் 53 கே 153 கே

சி.எம்.பி.டி பேரம்பாக்கம் 591 ஏ 153 பி

சி.எம்.பி.டி திருவள்ளூர் 596 பி 153 டி

அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு தெற்கு ரெயில்வே அறிவிப்பு



அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

கூடுதல் ரெயில் பெட்டிகள்

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இருமார்க்கமாகவும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16723/16724) மற்றும் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(16713/16714) ஆகிய ரெயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இன்று முதல் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமரி–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் (வாரம் இருமுறை) திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12641) இன்று முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12642) வருகிற 16–ந்தேதியும் கூடுதலாக 1 முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் மில்லெனியம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில்(12645) நாளை முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12646) 17–ந்தேதியும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருமார்க்கமாகவும்...

சென்னை சென்டிரல்–பழனி இடையே இருமார்க்கமாவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22651/22652) இன்று முதல் ஜூன் 30–ந்தேதி வரை கூடுதலாக ஒரு 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்பட உள்ளது.

சென்னை சென்டிரல்–நாகர்கோவில் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12689/12690) இன்று முதல் ஜூன் 28–ந்தேதி வரை கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்படவுள்ளது.

மங்களூர்–நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16649/16650) வருகிற 20–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.

சென்னை சென்டிரல்–மைசூர் இடையே இருமார்க்கமாகவும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12007/12008) வருகிற 20–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை கூடுதலாக ஒரு ஏ.சி ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்டிரல்–காமாக்யா

சென்னை சென்டிரலில் இருந்து காமாக்யா நோக்கி செல்லும் ஏ.சி. சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (12527) நாளை மற்றும் வருகிற 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 5.20 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு காமாக்யா சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

Thursday, February 12, 2015

கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்!





கார் வைத்திருப்பவர்கள் சர்வீஸ் பிரச்னைகளைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், இந்த எலிகள் காருக்குள் குடும்பம் நடத்தி இன்ஜினுக்குள் கும்மியடிப்பது, சாதுவான கார் உரிமையாளர்களையே கோபம் கொள்ளவைத்துவிடும்.

எலிகளால் வெறும் சர்வீஸ் செலவு மட்டுமில்லை; வயர்களைக் குதறி, கனெக்ஷன்களை மாற்றி விடுவதால், சில நேரங்களில் கார்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகூட இருக்கிறது.

பொதுவாக, வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய பிரச்னையாக இருப்பது எலிகள்தான். காரணம் - கார்களின் பாடி சீலிங்குக்காகத் தயாரிக்கப்படும் பசையில் உள்ள ஒருவித கெமிக்கல் வாசனைக்கு, எலிகள் அடிமை. அந்தப் பசையின் வாடைக்கு வந்துவிடும் எலிகளால் பெரிய தலைவலி.

என்னதான் கார் பார்க்கிங்கோடு புது வீடு வாங்கி சேஃப்டியாக காரை நிறுத்தினாலும், லூட்டியாக வந்து உட்காரும் எலிகளை எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்...

1. எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் - மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். ‘மிளகு மிளகு... விலகு விலகு’ என்று எலிகள் அலர்ஜியாகப் பாடியபடியே ஓட்டம் எடுத்துவிடும். ஆனால், கார் ஓட்டி இன்ஜின் சூடாகும்போது, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டதுபோல் ஒரு வாடை வருவதைத் தடுக்க முடியாது.

2. நாட்டுப் புகையிலை என்றாலும் எலிகளுக்கு அலர்ஜியான விஷயம். புகையிலையை ஆங்காங்கே கட்டி அல்லது ஒட்டிவிடுங்கள். புகையிலை வாசனைக்கு எலி அண்டாது.

3. நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் பூச்சிகளிடமிருந்து உடைகளைப் பாதுகாக்க நாப்தலின் உருண்டைகளை வைத்திருப்பீர்களே... அதில் நான்கைந்து உருண்டைகளை இன்ஜின் பகுதியில் வைத்து விடுங்கள். இதுவும் நல்ல ஐடியா.


5. கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. அமெரிக்கத் தயாரிப்பான இந்த மெஷின் சென்னை ஜி.பி. ரோட்டில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது. ஆனால், இந்த இசை... நேரம் போகப் போக, மற்றவர்களுக்கும் எரிச்சல் தர வாய்ப்பு உண்டு.

6. கொஞ்சம் டீஸன்ட் ஆக எலிகளை எலிமினேட் செய்ய விரும்புபவர்கள், இதற்கென விற்கும் எலி வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.

7. எலிகளை விரட்ட மூக்குப் பொடியும் பெஸ்ட் ஆப்ஷன். மூக்குப் பொடியையும் தூவி எலிகளை விரட்டலாம்.

- தமிழ்

கெளதம் மேனனை சிலிர்க்கவைத்த அஜித்தின் அணுகுமுறை

'என்னை அறிந்தால்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் அஜித்

'என்னை அறிந்தால்' படம் வெளியான நாளில், தன்னிடம் நடிகர் அஜித் பேசிய விதத்தைக் கண்டு வியந்து போனாராம் இயக்குநர் கெளதம் மேனன்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது.

'துருவ நட்சத்திரம்', 'யோஹன் அத்தியாயம் ஒன்று' உள்ளிட்ட படங்கள் கைவிடப்பட்டதால் கடும் மன வேதனையில் இருந்தாராம் கெளதம் மேனன். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த வேளையில், அஜித் முன்வந்து கெளதம் மேனனுக்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்தார். அப்படி உருவானதுதான் 'என்னை அறிந்தால்'.

'என்னை அறிந்தால்' வெளியான நாளில், இயக்குநர் கெளதம் மேனன் காலையில் சென்னை காசி திரையரங்கம், அதனைத் தொடர்ந்து சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடம் படத்தை கண்டு ரசித்தார். அன்று கெளதம் மேனனுக்கு போன் செய்து அஜித் பேசியிருக்கிறார்.

அப்போது படத்தின் ரிசல்ட்டில் திருப்தியா? எனும் விதமாக அஜித்திடம் கெளதம் மேனன் கேட்டிருக்கிறார். அதற்கு, "அதை விடுங்கள்... உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா? இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என்று அஜித் கேட்டிருக்கிறார்.

மேலும் தொடர்ந்த அஜித், "படம் வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக குடும்பத்துடன் இருங்கள். எதற்கும் கவலை வேண்டாம்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம் அஜித்.

அஜித்தின் இந்த அணுகுமுறையை சற்றும் எதிர்பார்க்காத கெளதம் மேனன், 'இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்களா?' என்று நெருங்கியவர்களிடம் சிலிர்ப்புடன் கூறினாராம்.

தூக்கம் --- எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

வயதும் , தூக்கமும்
'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற தமிழ் திரைப்பட பாட்டு, அளவுக்கு அதிகமாகத் தூங்கும் பழக்கத்தின் தீமையைப் பற்றியது. ஆனால் அளவான தூக்கம் உடல் நலத்துக்கு அவசியம். மனிதர்கள் தினமும் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என்பது பற்றி தூக்கம் குறித்த பரிந்துரைகள்.

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.

ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ?

இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.

தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

வயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.

அவை:

1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.

2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.

3)தினசரி உடற்பயிற்சி

4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு

5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.

6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.

7)மின்னணுவியல் கருவிகள் ( கைத்தொலைபேசி , ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்

NEWS TODAY 28.01.2026