Saturday, February 14, 2015

மக்கள் பெருமை; மண்ணின் பெருமை!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது அமெரிக்காவையே. காரணம், இன்றைய உலகின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் அங்குதான் உள்ளன.

மேலும், கல்வியில் சிறந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகையை தாராளமாக வழங்கும் நடைமுறை உள்ள நாடும் அமெரிக்காவே!

அமெரிக்க கல்வி நிலையங்களில் 1,02,673 இந்திய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 6 % அதிகம். மும்பை நகர அமெரிக்க கான்சல் டாம் வஜ்தா கூறுகிறார்:

"இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டின் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், பல நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து பல விஷயங்களைப் பற்றி விவாதித்து, கல்வி கற்கும் நடைமுறையில் அவர்களது அறிவு வளர்ச்சியும், புதிய கோணங்களில் எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டு, தரமான கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்யும் தன்மையும் உருவாகிறது'.

அமெரிக்காவில் 1985-ஆம் ஆண்டு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஓக்லஹோமா மாநிலத்தின் ஓ.எஸ்.யு. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பிற்காக நான் அனுமதிக்கப்பட்டேன்.

எனது கல்லூரி நாள்களிலேயே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' வாரப் பத்திரிகையை நான் தவறாது படிப்பேன். சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரக நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து பல புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பதோடு, அங்கே உள்ள அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

நான் ஓக்லஹோமாவில் சேர்ந்து, பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் யு.டி.ஏ. பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தபோது என்னை சந்தித்த பல அமெரிக்கப் பேராசிரியர்களும் நான் இந்திய மாணவன் எனத் தெரிந்த பிறகு, மெட்ராஸ் பல்கலைக்கழகமா எனக் கேட்பார்கள். அதாவது, இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்ற அறிதல் எல்லாரிடமும் பரவி இருந்தது.

ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம் ஸ்டில் வாட்டல் என்ற சிறு நகரில் இருந்தது. அங்கே எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் நான் சேர்ந்தபோது எனக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை.

முதல் காலாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அடுத்த ஆண்டு படிப்பிற்கான உதவித்தொகை கிடைத்துவிடும் எனத் தெரிந்துகொண்டேன். எனக்கு அந்தக் காலாண்டுத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் கிடைத்தன.

ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக கல்வி உதவித்தொகை வழங்க நிதி இல்லை. எனவே, பக்கத்து மாநிலமான டெக்ஸாஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தால் நிதியுதவி நிச்சயம் எனக் கூறினார்கள்.

ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு செல்வது அங்கே சர்வ சாதாரணம். நான் டெக்ஸாஸ் மாநில ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்று எம்.பி.ஏ. படிப்பதற்காக மனுச் செய்துவிட்டு அந்த துறையின் தலைமைப் பேராசிரியரை சந்தித்தேன்.

எனக்கு மதிப்பெண் அதிகம் இருந்தமையால் அட்மிஷனும் கல்வி உதவித்தொகையும், பேராசிரியர் ஒருவரின் உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான் என் படிப்பைத் தொடர்ந்தேன்.

எங்கள் துறையில் நான்கு பேர் அரசின் உதவித்தொகையைப் பெற்று வந்தோம். நான் மட்டும் இந்தியன். மற்ற மூன்று பேரும் அமெரிக்கர்கள். நிதி நெருக்கடி காரணமாக, நான்கு பேருக்கான உதவித்தொகை ஒருவருக்கானதாகக் குறைக்கப்பட்டது. அது எனக்கு ஒதுக்கப்பட்டது.

மீதமுள்ள மூன்று பேருக்கும் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. இது எனக்கு சங்கடமான மனநிலையை உருவாக்கியது.

அவர்களுக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது எனக்கு கவலை அளிப்பதாக அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு அவர்கள், "இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை. நம் நான்கு பேரில் நீ அதிக மதிப்பெண் பெற்றதால் உதவித்தொகை பெறும் தகுதி உனக்கு மட்டும்தான் உண்டு என்பது எங்களுக்கு தெரியும்' என கூறியது எனக்கு இன்ப அதிர்ச்சி!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் குணாதிசயங்கள்தான் அடிப்படை என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் மிகப்பெரிய தனவந்தர்கள், வியாபாரிகள், சாதாரண வேலை செய்பவர்கள் என சமூகத்தின் எல்லா மட்டத்திலிருப்பவர்களும் நேர்மையாக நடந்து கொள்வதை நான் பார்த்தேன்.

அதிக வசதியில்லாத மாணவன் நான் என்பதால், எனது கல்வி உதவித்தொகைக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு உருவாகியது.

எனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தபோதுதான் எனக்கு தெரிய வந்தது, அந்நாட்டில் மாத வருமானம் 1,000 டாலருக்கு கீழே இருந்தால் குழந்தைகளுக்கு பள்ளிக்கூட கட்டணம் கிடையாது என்பது.

மேலும் அவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசம்; காலை உணவும், மதிய உணவும் பள்ளியிலேயே. அரசு இதைப் பற்றி எந்த விளம்பரமும் செய்து கொள்வதில்லை.

நானும் எனது மனைவியும் வாடகைக்கு வீடு தேடியபோது, ஒரு வீட்டிற்கு சென்று எல்லா இடங்களையும் பார்த்த பின்னர் அந்த வீட்டின் சொந்தக்காரர் வாடகை மாதம் 250 டாலர் எனக் கூறியதைக் கேட்ட பின், மறுநாள் வந்து முடிவை சொல்வதாகக் கூறினோம்.

அந்த தெருவிலேயே இருந்த மற்றொரு வீட்டில் உள்ள மணியை அழுத்தி அதன் சொந்தக்காரரிடம் வீட்டை காண்பிக்கச் சொன்னோம். அந்த வீட்டின் மாத வாடகை 200 டாலர் எனக் கூறினார்.

அவரிடம் "சார், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீடும் வாடகைக்கு வருகிறது. அந்த வீடு இதைவிட கொஞ்சம் சிறியது. ஆனால், வாடகை இதைவிட 50 டாலர் அதிகம் கேட்கிறார்கள்' எனக் கூறினேன் நான்.

அதற்கு, அவர், "எனக்கு அதுபற்றித் தெரியாது. ஆனால், நிச்சயம் எங்கள் வீட்டை விட ஏதேனும் ஒரு வகையில் அது சிறந்ததாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். அதனால்தான், அவர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள் என நினைக்கிறேன்' என்றார்.

அவரது பெருந்தன்மை என்னை ஆச்சரியப்பட வைத்தது. அப்படியே நமது ஊர் நிலைமையை கற்பனையில் ஓடவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லெண்ணம், நட்புறவு எதுவுமே இங்கே கிடையாது என்பதே உண்மை.

அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் மக்கள் மிக உயர்ந்த குணாதிசயங்களுடன வாழ்ந்து வருவது அவர்களுடைய கட்டுக்கோப்பான சமூக வாழ்க்கை அமைப்பை எனக்கு உணர்த்தியது.

படித்தவர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று எல்லாத் தட்டு மக்களும் நல்ல குணாதிசயங்களுடன் அங்கே உருவாகியிருப்பது அதிசயமான ஓர் அம்சம்.

அங்கே இருக்கும்போது வசதியில்லாத ஒரு மாணவனாக கடினமான கல்வி அமைப்பில் எனது கல்லூரி, பாடங்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன்.

எனது நண்பர் ஒருவர் இராக் நாட்டைச் சேர்ந்தவர். அங்கே ஷா மன்னரை எதிர்த்து உருவான போராட்டங்களால் பாதிக்கப்பட்டு அந்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறி கார் மெக்கானிக் அவர். அவரது உதவியுடன் 800 டாலர் பணத்தில் ஒரு பழைய ஃபோர்ட் காப்ரி எனும் காரை விலைக்கு வாங்கி நான் உபயோகித்து வந்தேன்.

எனது அமெரிக்க நண்பர்கள், "800 டாலரில் ஒரு காரா? அப்படிப்பட்ட காரில் ஏறி நாங்கள் அடுத்த தெருவிற்குகூட போகமாட்டோம்' என கேலி செய்வார்கள்.

ஒரு நாள் அந்த காரை நான் ஓட்டிச் சென்றபோது எஞ்சின் பகுதியில் பயங்கர சப்தம் ஏற்பட்டதால் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் வாகன பணிமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினேன். அவர் வந்து என் காரை ஸ்டார்ட் செய்து பார்த்தார்.

பின்னர் காரின் கீழே ஒரு பெரிய கருவியை இயங்க வைத்து காரை மேலே தூக்கினார். காரின் கீழே இருந்து கொண்டு அடிப் பாகத்தை ஆய்வு செய்து பின் நீண்ட கம்பியில் முறுக்கும் கருவியை நுழைத்து பல நட்டுகளை முடுக்கிவிட்டார்.

அது முடிந்த பின், என்னிடம் காரை ஓட்டிப் பாருங்கள் எனக் கூறினார். அந்த காரை நான் ஓட்டியபோது கார் சரியானது எனக்குத் தெரிந்தது.

அவரிடம் சென்று நான் "எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' எனக் கேட்டபோது, "ஒன்றுமில்லை எனக் கூறி உங்கள் காரில் சில நட்டுகள் கழண்டிருந்தன அதை முறுக்கிவிட்டேன் அவ்வளவுதான், நீங்கள் பத்திரமாக பயணம் செய்யலாம்' என மகிழ்ச்சியுடன் கூறினார். அந்த நிகழ்வு என்னை மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

ஆக, அந்தச் சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களும் நேர்மையுடன் வாழ்வதையும், இங்கே அப்படி இல்லை என்பதையும் கணக்கிலெடுத்து நமது சமூக முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதிப்பது இன்றைய அவசரத் தேவையாகிறது.

ஆனால், நம் அரசியல் தலைவர்கள் அதைச் செய்யாமல் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்ற எண்ணத்திலேயே வலம் வருவது மிகவும் வருத்தமளிக்கும் அம்சம்.



கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

Friday, February 13, 2015

இந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு?



உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இதோ தொடங்க இருக்கிறது. உலகே உற்று நோக்கும் இந்தப் போட்டிகளில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி மற்ற போட்டிகளை விட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இரு அணிகள் மோதும் போட்டியை காண ஆவலாக இருக்கிறார்கள்.
உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் 5 முறை சந்தித்து உள்ளன. இதில் 5 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், புதிய சரித்திரம் படைக்க பாகிஸ்தானும் பலப் பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன், பௌலர் மற்றும் ஆல்-ரவுண்டர் என இரு அணிகளையும் ஒரு முறை அலசிப் பார்ப்போமா..?
---------------------------------------------

 இந்தியா    
  ஷிகர் தவான்: 
              ரன் :2095   ஆவரேஜ் :42.7   ஸ்ட்ரைக்ரேட் : 89.56

  ரோகித் ஷர்மா  
             ரன் :38.90   ஆவரேஜ் : 38.90   ஸ்ட்ரைக்ரேட் :81.55
  விராட் கோலி               ரன் : 6232   ஆவரேஜ் : 51.50   ஸ்ட்ரைக்ரேட் : 90.17
  ரகானே            
           ரன் : 1376   ஆவரேஜ்  30.57    ஸ்ட்ரைக்ரேட் : 76.57
  
 ரெய்னா          
        ரன் : 5104     ஆவரேஜ் : 35.44   ஸ்ட்ரைக்ரேட் : 92.98
 டோனி    
          ரன் : 8262  ஆவரேஜ் : 52.29   ஸ்ட்ரைக்ரேட் : 88.84

  ஜடேஜா  
 
       
          ரன் : 1696   ஆவரேஜ் : 33.92    ஸ்ட்ரைக்ரேட் : 84.42    விக்கெட்: 134
 ரவிச்சந்திர அஸ்வின் 
         விக்கெட்: 120    ஆவரேஜ் :32.64
புவனேஸ்வர் குமார்                  விக்கெட்: 45  ஆவரேஜ் : 37.15
முகமது ஷமி                
            விக்கெட்: 70   ஆவரேஜ் : 26.74
 உமேஷ் யாதவ்            
        விக்கெட்: 49     ஆவரேஜ் : 36.44


பாகிஸ்தான் 

நஷீர் ஜம்ஷத்
       ரன் : 1413   ஆவரேஜ் : 33.64   ஸ்ட்ரைக்ரேட் : 76.04
அகமது ஷேஷாத்   
      ரன் : 1985   ஆவரேஜ் : 34.82  ஸ்ட்ரைக்ரேட் : 72.02
யூனிஸ் கான்
        ரன் : 7197   ஆவரேஜ்: 31.56   ஸ்ட்ரைக்ரேட் : 75.32
மிஸ்பா-உல்ஹக்       ரன்: 4772   ஆவரேஜ் : 424.99   ஸ்ட்ரைகரேட் : 73.65
ஷொகைல்
      ரன் : 309     ஆவரேஜ் :34.33   ஸ்ட்ரைக்ரேட் :79.02
உமர் அக்மல்
      ரன் : 2749   ஆவரேஜ் :35.24   ஸ்ட்ரைக்ரேட் :86.47
அப்ரிடி
      ரன் : 7948   ஆவரேஜ் : 23.58   ஸ்ட்ரைக்ரேட் : 116.79  விக்கெட்: 393
யாசிர் ஷா
     விக்கெட்: 2   ஆவரேஜ் :25.50
வகாப் ரியாஸ்      விக்கெட்: 61    ஆவரேஜ் :32.09

ஷொகைல் கான்
      விக்கெட்: 6    ஆவரேஜ் : 33.16
முகமது இர்பான்
      விக்கெட்: 57    ஆவரேஜ் : 29.92


திண்டுக்கல்: பாம்புகளை நேசித்து கல்லூரி மாணவர், பாம்பு கடித்து பலியான சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த பகுதியில் பாம்பை பார்த்தாலும்...ரஜினியைப் போல ‘பா...பாம்...பாம்பு’ என அலறுவதற்கு பதில் நவீன்குமார் என்றுதான் அலறுவார்கள். எங்கு பாம்பு இருந்தாலும் அதை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் கொண்டு விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தவர் நவீன்குமார்.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் பி.ஏ வரலாறு முதலாமாண்டு படிக்கும் இவர், தனது 10 வயதில் இருந்து பாம்புகளை பிடித்து வருபவர். 6ஆம் வகுப்பு படிக்கும்போது, பள்ளிக்குள் வந்த பாம்பை பிடித்ததுதான் இவரின் முதல் அனுபவம். அன்று முதல் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு புகுந்தால் இவரைத்தான் அலைபேசியில் அழைப்பார்கள்.

வனத்துறையும் பாம்பு பிடிக்க இவரை பயன்படுத்தி வந்தது. பாம்புகளை அதிகம் நேசிக்கும் நவீன்குமார், சில இடங்களில் அவசரப்பட்டு பொதுமக்கள் அடித்து காயப்படுத்தும் பாம்புகளை கொண்டு காயத்திற்கு மருந்துப் போட்டு, அது குணமான பின்புதான் காடுகளில் விடுவார். பாம்புகளுக்கு எலியை உணவாகக் கொடுப்பதுடன், பாம்புகளை வைத்து பலமணி நேரம் விளையாடி சாதனை படைத்திருக்கிறார்.

பாம்புகள் மீது அதிக அன்பு வைத்திருந்த நவீன், அடிபட்ட பாம்புகளுக்கு மருந்து தடவிக்கொண்டே, ‘பயப்படாதே...குணமாகிடும்...’ என ஆறுதல் சொல்வாராம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக காமாட்சிபுரம் பகுதியில் புகுந்த ராஜநாகத்தை அப்பகுதி மக்கள் அடித்து விட்டனர். அதிக காயங்களுடன் இருந்த அந்த ராஜநாகத்தை அங்கிருந்து எடுத்து வந்து தனது வீட்டில் வைத்து மருந்துப் போட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில், பையில் இருந்த பாம்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பையை திறந்தபோது, அதிக கோபத்துடன் இருந்த ராஜநாகம், அவரின் மேல் உதட்டில் கடித்தது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

கடிப்பதற்கு முதல்நாள், 'இனிமேல் பயப்படாதே... உன்னை யாரும் அடிக்கமாட்டாங்க’ என ராஜநாகத்திடம் பேசியபடியே மருந்து தடவியதை சொல்லிச் சொல்லி சோகத்தில் துடிக்கிறார்கள் அவரது உறவினர்கள்.

-ஆர்.குமரேசன்

23 வயதில் ஒரு கேப்டன்!




Posted Date : 15:14 (13/02/2015)Last updated : 15:27 (13/02/2015)


இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆக இளம் வயது வீரர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உஸ்மான் கானி.

ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பையில் விளையாடியுள்ள 76 போட்டிகளில் 50 ல் வெற்றி பெற்றுள்ளது.

1999 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பை போட்டியில் தோல்வியே காணமால் வெற்றி பெற்று வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில், காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்ளாதேஷ் அணியில் அதிகபட்சமாக 7 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இங்கிலாந்து அணி 1979, 1987 மற்றும் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி மூன்று முறையும் கோப்பையை வெல்லாமல் கோட்டை விட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 338 ரன்கள் குவித்தது. சளைக்காத இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடி 338 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன் எடுத்த அணி இங்கிலாந்துதான்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிகமுறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி நியூசிலாந்துதான். இந்த அணி 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்தான் அதிக வேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் 50 ரன்களை அவர் கடந்தார்.

உலகக் கோப்பை போட்டிக்கு மூன்றாவது முறையாக விளையாடத் தகுதி பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி, இதற்கு முன் விளையாடியுள்ள 8 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது



உலகக் கோப்பைத் தொடரில், இலங்கை அணி கனடா அணியை 36 ரன்களில் ஆல்அவுட் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக இலங்கை வீரர் லசித் மலிங்கா 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினுக்குதான் உண்டு. 1992 முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 278 ரன்களை அவர் குவித்துள்ளார்.

பெர்முடா அணிக்கு எதிராக கடந்த 2007ஆம் ஆண்டு, இந்திய அணி 413 ரன்களை குவித்தது. இதுதான் உலகக் கோப்பையில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் ஆகும்.

உலகக் கோப்பைத் தொடரில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 329 ரன்களை விரட்டி வெற்றி பெற்ற அணி அயர்லாந்து

உலகக் கோப்பைத் தொடரில் மிக விரைவாக சதமடித்த வீரர் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு 50 பந்துகளில் அவர் சதமடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சாகித் அப்ரிடி ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்
தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஒரே இடது கை பேட்ஸ்மேன் ஹாரிஸ் சொகைலிஸ்.

அண்மையில் 31 பந்துகளில் சதமடித்த டி வில்லியர்ஸ் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன்.

தென் ஆப்ரிக்க அணி மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறி மூன்று முறையும் தோல்வி கண்டுள்ளது.

யு.ஏ.இ அணியில் முகமது தாகீர், குர்ராம் கான் எனும் இரு வீரர்கள் 43 வயது நிரம்பியவர்கள்.

21 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 23 வயது ஜேசன் ஹோல்டர்தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஆவார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சளைக்காமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள அணி ஜிம்பாப்வே. தற்போது கத்துக்குட்டி அணிகள் வந்த பிறகுதான் ஜிம்பாப்வே அணி அவ்வப்போது வெற்றியை ருசிக்கிறது.

 

சிவாலய ஓட்டம்



எண்ணற்ற கோயில்களைத் தன்னகத்தே கொண்ட குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க வழிபாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது, மாசி மாதம் நடைபெறும் சிவாலய ஓட்டம் என்னும் வழிபாடாகும். சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

இவ்வாறு திருமலை என்னும் திருத்தலத்தில் தொடங்கிய ஓட்டத்தை பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக நின்று அருள் வழங்கும் சுசீந்திரத்தில் வந்து முடிக்கின்றனர். அவர்கள் ஓடிச் சென்று வணங்கும் பன்னிரு சைவத்தலங்கள் பின்வருமாறு:

திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங் கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாமை.

சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒருவரையொருவர் ஐயப்பா என்று அழைப்பதைப் போல், இவர்கள் தங்களுக்குள் கோவிந்தா என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.

சிவாலய ஓட்டத்தில் விரதம் இருப்போர் சிவபெருமானை தரிசிப்பதும் அவர்களை நேரில் காண்பதும் ஆகிய இரு தரிசனங்களும் பேரின்பம் தருவன.

அந்த நாள் ஞாபகம்: காதலைக் கொண்டாடிய அம்பிகாபதி

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய 1931-க்குப் பின்னர் அதன் ஒரே கருப்பொருளாக இருந்தது புராணம்… புராணம்… புராணம் மட்டுமே. 1934-ல் நிவாஸ் சினிடோன் படக் கம்பெனி ‘ நிவாச கல்யாணம்’ என்ற புராணப் படத்தைத் தயாரித்தது. இதுதான் மதராஸில் தயாரான முதல் பேசும்படம். இதன்பிறகு தமிழ் சினிமா மதராஸில் மட்டுமல்ல சேலத்திலும் கோவையிலும் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியது. புராணம் மெல்ல மெல்ல அதற்குப் புளிக்க ஆரம்பித்தது. அதற்கு அறிகுறியாக 1935-ல் வெளியான ‘ மேனகா’ திரைப்படம் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம்.

முதல் முழுநீளக் காதல்

மேனகா வெளியான பிறகு சமூகப் படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் ராஜா சாண்டோ போன்ற முன்னோடிகளைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் புது ரத்தம் பாய்ச்ச ஒரு அந்நியர் வந்தார். அவர் நாம் கொண்டாட வேண்டிய புண்ணியர் எல்லீஸ் ஆர். டங்கன் என்றால் அது மிகையல்ல. அவரது வருகைக்குப்பிறகு புராண, வரலாற்று படங்களில் ஒலித்து வந்த உரையாடல் தன் மொழியின் சட்டையை உரித்துப்போட்டது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டின. அவரது இயக்கத்தில் 1937-ம் ஆண்டு வெளியான ‘அம்பிகாபதி’ தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படமாக மிளிர்ந்தது. துயரக் காவியமாக அது அமைந்தபோதும் அதில் காதல் கொண்டாடப்பட்டது. பல சாதனைகள் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டன. அவற்றைக் காணும் முன் அதன் கதையைக் கேளுங்கள்.

கவிஞனும் இளவரசியும்

அது பத்தாம் நூற்றாண்டின் சோழப் பேரரசு. கலிங்கம்வரை கட்டியாண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம். அவனது அரசவையில் ரத்தினமாக மின்னியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அவரது வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்போது அவரது மகன் அம்பிகாபதி

(எம்.கே. தியாகராஜ பாகவதர்) பாட மாட்டானா!? தந்தையைப்போல் கவிதைத் தமிழில் சிறந்து விளங்கிய அந்த இளங்காளை போர்க்களத்தில் வாள் சுழற்றுவதிலும் சுத்த வீரன். கலிங்கப்போரில் தன் உயிரைக் காத்த காரணத்துக்காக அவனுக்கு வைர வாளைப் பரிசளிக்கிறார் மாமன்னன் குலோத்துங்கன். அதைக் கொண்டு தனது சகா ருத்ரசேனனோடு (பாலைய்யா) விளையாட்டுக்காக வாளைச் சுழற்றுகிறான் அம்பிகாபதி. அப்போது அவனது வீரத்தையும் அழகையும் ஒருங்கே காணும் இளவரசி அமராவதி(எம்.ஆர். சந்தான லட்சுமி) அந்தக் கணமே அவன் மீது காதல் கொள்கிறாள். வாள் வீச்சின் முடிவில் சிதறிய முத்துமாலைபோலச் சிரித்த இளவரசியைக் கண்டு அம்பிகாபதியும் காதலில் விழுகிறான். அவளைக் காண ஏங்கும்போது இளவரசியின் தோழி செய்தியுடன் வருகிறாள். அமராவதியைக் காண அந்தப்புரத்துக்கு வரும்படி அழைக்கிறாள். அம்பிகாபதியை சந்தித்துத் திரும்பிய தோழிக்கு உடம்பைப் பிடித்துவிட்டு ஒரு இளவரசி பணிவிடை செய்யும் காட்சி அதற்கு முன் இல்லை. காவலை மீறி அந்தப்புரத்துக்குள் நுழைந்ததும் முல்லைக்கொடி காற்றில் சிலுசிலுக்கும் உப்பரிகையில் இளவரசியைக் காண்கிறான் அம்பிகாபதி. அவன் தன்னைக் காண வந்துவிட்ட இன்ப அவஸ்தையோடு..

“ நீங்கள் காவலாளிகள் கண்களில் பட்டால் அபாயம் நேருமே?” என்று படபடக்கிறாள் அமராவதி.

“அவர்கள் கண்களைவிட உன் கண்களில்தான் அதிக அபாயம் இருக்கிறது!” இது அம்பிகாபதி. ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் – ஜுலியட்டும் சந்தித்துக் கொண்ட காட்சியை அப்படியே இங்கே பொருத்திவிட்டார் இயக்குநர் டங்கன். காதல் கனிரசம் சிந்திய அந்தக் காட்சியை ரசிகசிகாமணிகள் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்ததில் ஓராண்டு காலம் திரையரங்குகளில் ஓடிய சாதனை படைத்த முதல் தமிழ்த் திரைப்படமாக அம்பிகாபதி சாதனை வெற்றியைச் சந்தித்தது.

புதிய காட்சி மொழி

அம்பிகாபதியின் கனவில் அமராவதி தோன்றுகிறாள். “அமராவதி... அமராவதி...” என்று உருகிக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுகிறான் அம்பிகாபதி, இதைக் கண்டு பதறும் கம்பர், “ கனவுக்கும் நினைவுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? உன் கனவு கனவாகவே இருக்கட்டும். நினைவில் இருந்தால் அதை இப்போதே கொன்றுவிடு”

என்று எச்சரிக்கை செய்கிறார்.. “ அதற்கு என்னை நானே கொன்று கொள்வதே சரி” என்கிறான் அம்பிகாபதி.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதில் ஏதாவது அர்த்தம் உண்டோ? சக்கரவர்த்தி குலோத்துங்கனின் மகள்

எங்கே!? கவி பாடிப் பிச்சையெடுக்கும் கம்பனின் மகன் எங்கே!? அடேங்கப்பா! மகாமேருவுக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமல்லவா இருக்கிறது?” பெரிய இடத்தில் நமக்கு ஏனடா பொல்லாப்பு? அவளை மறந்துவிடடா கண்ணே!” எனக் கம்பர் மகனிடம் கெஞ்ச..” மறந்துவிடுவதா? காதலில் அவள் மாதவி, கற்பிலோ கண்ணகி. சூரியச் சந்திரர் அறிய அவளைக் காந்தர்வ திருமணம் செய்தாகிவிட்டது அப்பா” என்று அம்பிகாபதி சொல்ல, அந்தக் காட்சியில் தந்தையும் மகனும் மாறி மாறிப் பாடும் “ என்ன செய்தாய் என்னருமை மைந்த?”

என்ற புலம்பல் பாடல் அத்தனை வலியைக் கொண்டது. பின்னால் நிகழப்போகும் துன்பியல் முடிவுக்கு அதுவே முரணாக அச்சுறுத்த

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் நம்மை அழுத்தும் விதமாகக் காட்சிகளைப் படத்தொகுப்பு செய்திருப்பார் டங்கன்.

சாதனைகள் பல

காதலனும் காதலியும் சந்தித்துப் பேசும் காட்சிகளில் அதற்கு முன் தமிழ் சினிமா பார்த்திராத குளோஸ்- அப் காட்சிகளை முதல் முறையாகப் பயன்படுத்தினார் இயக்குநர். வானில் நிலவு ரம்மியமாக எரிந்துகொண்டிருக்க முதல் முறையாக அம்பிகாபதியும் அமராவதியும் ஏரிக்கரையில் சந்தித்துக் காதலைக் கொண்டாடும் பாடல் முழுவதையும் க்ளோஸ் அப்பில் கொண்டாடியிருப்பார். அவர்கள் கன்னத்துடன் கன்னம் வைத்துக் காதலில் மருகும் காட்சியும் அதுவே முதல் முறை. இத்துடன் நின்றுவிடவில்லை எல்லீஸ் ஆர் . டங்கன். படத்துக்கு டிரைலர் என்ற ஒன்றை எடிட் செய்து, ’ விரைவில் உங்கள் அபிமான டாக்கீஸ்களில் வருகிறது’ என்று முதன் முதலில் விளம்பரம் செய்தார். அதேபோல் சமஸ்கிருத வார்த்தைகளே

இல்லாமல் படத்துக்கு வசனம் எழுதிய கதை வசனக்கர்த்தா இளங்கோவனுக்கும், இசையமைப்பாளர், பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கும் முதல் முறையாகப் படத்தின் டைட்டிலில் பெயர் போடச் செய்தார். அதுவரை இல்லாத நடைமுறை அது.

இந்தப் படத்தின் மெகா வெற்றி பாகவதரை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக்கியது. காதல் கதைகளை மையப்படுத்திய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் படையெடுக்க பாதை அமைத்துக் கொடுத்தது அம்பிகாபதி. இதன்பிறகு தேவதாஸ், நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, தேன் நிலவு என்று சினிமா வண்ணம்பூசிக் கொள்ளும் வரை காதலை கவுரவம் செய்த படங்களைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் கொண்டாடுவோம்.

NEWS TODAY 28.01.2026