Wednesday, February 25, 2015

பெருமை மிகுந்த பிரதோஷம்


சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

‘நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும், சிறப்புறும் வாழ்வுதானே’

– என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்.

பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.

பிரதோஷ வரலாறு

முன்னொரு காலத்தில் மரணமில்லாத வாழ்வைத்தரும் தேவாமிர்தத்தினை பெறுதல் வேண்டி, தேவர்களும், அசுரர்களும், ஒருங்கிணைந்து திருப்பாற்கடலை கடைந்தார்கள். வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்தரமலையை மத்தாகவும் பயன்படுத்தினர். அப்போது வாசுகி பாம்பு விஷத்தை உமிழ்ந்தது. அனைவரும் அஞ்சி நடுங்கும் அளவில் பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியது. அது அனைவரையும் எரித்து துன்புறுத்தியது. இதனால் அஞ்சி ஓடிய தேவர்கள் ‘தேவதேவா! மகாதேவா! அருட்கடலே சரணம். கருணைக்குன்றே காத்தருள வேண்டும்’ என்று ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் சிவன் சன்னிதியில் ஓடி சிவனை தஞ்சமடைந்தனர்.

தேவர்களின் துயர்போக்க எண்ணிய சிவபெருமான், சுந்தரரை அனுப்பி அக்கொடிய விஷத்தை கொண்டு வரப் பணித்தார். அவர் கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி, உருட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்தார். அந்த நஞ்சினை அவர் அமுதம் போல் உண்டார். அந்த விஷம் சிவனின் உடலுக்குள் சென்றால், உலக உயிர்கள் அழிந்து விடும். அதனால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் நிறுத்திக்கொண்டார். இதனால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.

தேவர்கள் சிவனின் அனுமதியுடன் மீண்டும் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் தோன்றியது. அதை உண்டு ஆனந்தம் அடைந்தனர். அமிர்தம் உண்ட தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க, சிவபெருமான் திருநடனம் புரிய முன்வந்தார்.

சரஸ்வதி வீணை வாசித்தாள். இந்திரன் புல்லாங்குழல் ஊதினான். பிரம்மன் தாளம் போட்டார். லட்சுமி தெய்வீக பாடல்கள் பாட, திருமால் மத்தளம் வாசித்தார். தேவர்கள், முனிவர்கள், யட்சர்கள், கின்னரர்கள், திசைபாலகர்கள் முதலிய அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டனர். சிவபெருமான் உமாதேவியார் காண நந்திதேவரின் இருகொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சிவபெருமான் தேவர்களுக்கு திருநடனத் தரிசனம் கொடுத்தது சனிக்கிழமை மாலை நேரத்தில் (பிரதோஷ வேளையில்) ஆகும். எனவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் விசேஷமானதாக கருதப்படுகிறது.

விரதமுறை

பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங் களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.

மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் உண்ட தினம் கார்த்திகை மாதம் சனிக்கிழமை திரியோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும் திரியோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகாபிரதோஷம் ஆகும். மாசிமாதம் வரும் மகாசிவராத்திரிக்கு முன்னர் வரும் பிரதோஷமும், மகாபிரதோஷம் எனப்படும். அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி, திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம், கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் ஆகிய சிவதலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானது.

சனிப்பிரதோஷ வழிபாடு செய்தால் ஐந்துவருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிட்டும். மேலும் மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றால் ஏற்படும் பாவங்களை துடைத்து நன்னெறி அடைய சனி மகாபிரதோஷம் துணைபுரியும்.

Tuesday, February 24, 2015

ரயில் பயணத்தில் சில கசப்பான அனுபவங்கள்

Dinamani

அந்த விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வயதான தம்பதி இருவரும் தங்கள் இருக்கைகளைத் தேடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் பார்வை மங்கல் என்பது பார்த்தாலே தெரிந்தது.

இருக்கைகள் எதுவும் காலியாக இல்லாததால் அவர்கள் குழம்பினர். அந்தப் பெட்டியிலேயே முன்னும் பின்னும் பலமுறை அவர்கள் அலைபாய்ந்ததைக் காணச் சங்கடமாக இருந்தது.

அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட இளைஞர் ஒருவர் அவர்களது முன்பதிவுப் பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த இருக்கைகளில் வேறு யாரோ இருவர் அமர்ந்து, ஓரக் கண்ணால் பார்த்தபடி பத்திரிகை படிப்பது போல நடித்துக் கொண்டிருந்தனர்.

விசாரித்ததில் அவர்கள் இருவரும் முன்பதிவு செய்யாத பயணிகள் என்பது தெரியவந்தது. இளைஞரின் தலையீட்டால் அவர்கள் முனகிக்கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றனர். முதிய தம்பதிக்கும் அவர்களது இருக்கைகள் கிடைத்தன.

தனக்குச் சொந்தமில்லாத இருக்கைக்கே இவ்வாறு திருட்டுத்தனமாகச் செயல்படும் இவர்களும் ஒருவகையில் திருடர்களே.

இன்னொரு சம்பவமும் ரயிலில் காண நேர்ந்ததுதான். இரவு நேரம். பயண வழியில் உள்ள ஒரு நிலையத்தில் ரயில் நின்றபோது நடுத்தர வயதுள்ள நபர் ஒருவர் ஏறினார்.அவர் தனது முன்பதிவு செய்யப்பட்ட படுக்கையைத் தேடினார்.

ஆனால், அவர் தேடிய படுக்கையில் ஆனந்தமாக ஒருவர் படுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு அவரை எழுப்பத் தயக்கம். அவரோ இவரைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

பயணச்சீட்டு பரிசோதகர் வந்து ஆய்வு செய்தபோதுதான், அவரது பயணச்சீட்டு காத்திருப்புப் பட்டியலில் இருப்பது தெரியவந்தது. ஆனாலும் எந்த சங்கோஜமும் இன்றி அவர் தனக்கு உரிமையில்லாத படுக்கையில் படுத்து வந்திருக்கிறார்.

பரிசோதகர் அவரை எச்சரித்து அடுத்த ரயில்நிலையத்தில் பொதுப்பெட்டிக்கு மாறச் செய்தது தனி கதை. ஆனால், முன்பதிவு செய்த பயணி ஒருவரை அரை மணிநேரம் சிரமத்துக்கு உள்ளாக்கிய அவருக்கு என்ன தண்டனை?

இதேபோன்ற இன்னொரு நிகழ்வில் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தை ரயிலில் காண நேர்ந்தது. ரயில் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இரண்டாம் வகுப்பு படுக்கை முன்பதிவு பெட்டியில் இரு குழந்தைகளுடனும் நான்கைந்து பெட்டிகளுடனும் ஏறிய அந்தப் பெண்மணி, காலியாக இருந்த இருக்கையை ஆக்கிரமித்தார்.

பயணச்சீட்டை ஆய்வு செய்ய பரிசோதகர் வந்தபோது, அவர் முன்பதிவு செய்யாத பயணச்சீட்டைக் காட்டி, தனது தந்தை உயர்பதவியில் இருப்பதாகவும் தனக்கு உறுதியான

படுக்கை வசதியை வழங்காவிட்டால் அவரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்தார்.

பெண்மணியின் மிரட்டலால் அரண்டுபோன பயணச்சீட்டுப் பரிசோதகர், அவருக்கு உறுதியான படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய பட்ட பாட்டைக் காணவே சங்கடமாக இருந்தது.

அந்தப் பெட்டியில் வேறு ஒரு குழந்தைக்கு பதிவு செய்யப்பட்ட படுக்கையை பரிசோதகரே கெஞ்சிக் கூத்தாடி, அந்தப் பெண்மணிக்கு ஏற்பாடு செய்து தந்தார்.

முந்தைய இரு நிகழ்வுகளிலேனும் அடுத்தவர் இருக்கைக்கு ஆசைப்பட்டவர்களிடம் குற்ற உணர்வு இருந்தது. ஆனால், மூன்றாவது நிகழ்வில் கண்ட பெண்மணியிடம் பிறரது படுக்கை வசதியை அபகரிப்பது குறித்த கவலையே இல்லை.

ஏதோ இந்த மூன்று நிகழ்வுகளில் மட்டும்தான் அடுத்தவர் இருக்கைக்கு ஆசைப்படும் ஆசாமிகள் இருந்ததாக நினைத்து விடாதீர்கள்.

யாரும் அமராத இருக்கைகளை பெரும்பாலான மனிதர்கள் சொந்தம் கொண்டாட முற்படுவது பொதுவான காட்சியே. இது ஒருவகையில் நமது குடிமைப் பண்பின் சீரழிவைத் தான் வெளிப்படுத்துகிறது.

யாரும் உரிமை கோராத இருக்கையோ, இடமோ, பொருளோ எதுவாயினும் அதற்கு ஆசைப்படுவது நமது பொதுவான இயல்பாகிவிட்டது.

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் சாமானியர்கள் முதல், கல்லூரியின் சுற்றுச்சுவரை எல்லை தாண்டிக் கட்டும் செல்வந்தர் வரை பலருக்கும் இருக்கும் வியாதி இதுதான்.

நாட்டில் நடைபெறும் பல ஊழல்களுக்கும் இதே மனநிலைதான் காரணம் என்று சொல்லித் தெரிய வேண்டிதில்லை. மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், போலி தொலைபேசி நிலையமே நடத்தியிருக்கிறார்.

மற்றொரு மத்திய முன்னாள் அமைச்சர் தனது பதவிக் காலத்தில் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் ஊழல் செய்ததில் உலக சாதனை படைத்தார்.

ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றார் மகான் புத்தர். நாமோ அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுகிறோம். யாரும் பார்க்கவில்லை என்றால் அடுத்தவர் பொருளைத் தனதாக்க யாரும் வெட்கப்படுவதில்லை.

அடுத்தவர் பொருளை விரும்புபவனுக்கு கேடே விளையும் என்கிறார் திருவள்ளுவர் (குறள்: 180).

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்று எச்சரிப்பதற்காக "வெஃகாமை' என்ற தனி அதிகாரத்தையே (18) அவர் எழுதி இருக்கிறார். நாமோ அவருக்குச் சிலை அமைப்பதே போதும் என்றிருக்கிறோம்.

ரயில் பயண அனுபவங்கள், நமது குடிமைப் பண்பின் சில சோற்றுப் பதங்கள் மட்டுமே. சிறு தவறுகளிலிருந்தே மாபெரும் குற்றங்கள் ஆரம்பமாகின்றன என்பதை நாம் உணராத வரை, நமது குடிமைப் பண்பில் சீரழிவுகள் தொடரும்.

முன்பெல்லாம் கடவுள் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற இறையச்சமே தவறு செய்வதைத் தடுத்தது. இப்போது இறையச்சமும் இல்லாது போய்விட்டது; குடிமைப் பண்பும் காணாது போய்விட்டது.

இந்த நிலை மாற நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது குழந்தைகளுக்கு நாம் எத்தகைய சமுதாயத்தை வழங்கிச் செல்லப் போகிறோம்?

உறுதியானது ’சிங்கம் 3’!



ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கமர்ஷியல் ஹிட்டான படம் ‘சிங்கம்’. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ஹிட்டடித்த வேளையில் தற்போது மூன்றாம் பாகம் எடுக்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.

முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் அனுஷ்காவே ஜோடியாக நடித்ததால் இந்த படத்திலும் அவர்தான் ஹீரோயின் என்பது யாவரும் அறிந்ததே.

மேலும் முதல் இரண்டு பாகத்திலும் , 2ம் பாகத்திலும் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.

தற்போது ‘ஹைக்கூ’ மற்றும் ‘24’ படங்களில் பிசியாக நடித்து வரும் சூர்யா இப்படங்களுக்கு பிறகு ‘சிங்கம் 3’ படத்தி நடிக்க இருக்கிறார். மேலும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

NGO launches common entrance test

Return to frontpage

A non-profit organisation called Era Foundation has launched a common entrance test this year in order to make entrance tests more transparent and the admission process to deemed universities easier.

Saveetha University is one of the first in Tamil Nadu to utilise this common entrance test – called UniGAUGE – for admissions to undergraduate and postgraduate dental, and medical and engineering courses.

Mythili Bhaskaran, Vice Chancellor, Saveetha University, told the press on Saturday that the varsity decided to make the switch to improve the admission process. .

Further details on the UniGAUGE tests are available athttps://www.erafoundation- india.org/.

பென்ஷன் வாங்குபவர்கள் நேரில் வந்தாக வேண்டும் என்று துன்புறுத்த கூடாது.

புதுடெல்லி: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் உயிர்ச்சான்று சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற முடியும் என்ற நடைமுறை உள்ளது. பென்ஷன் பேமன்ட் ஆர்டர் (பீபீஓ) அல்லது ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் நேரில் வர இயலாதவர்கள் அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் கையெழுத்துடன் உயிர் சான்றிதழ் வழங்கலாம். இதை அரசு பதிவு பெற்ற மருத்துவ அலுவலரின் மருத்துவ சான்றிதழுடன் இணைத்து தபால் மூலமாக அனுப்பலாம். இந்த நடைமுறையின்படி ஓய்வூதியதாரர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் மட்டுமே அஞ்சல் மூலமாக அனுப்ப அனுமதிக்கப்படுகின்றனர். 4வது ஆண்டு அவர்கள் நேரில் ஆஜராகி உயிர்ச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், சில வங்கிகள் ஓய்வூதியர்களை பென்ஷன் பேமன்ட் ஆர்டர் உடன் நேரில் வர கட்டாயப்படுத்துவதாகவும், தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. எனவே, இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஓய்வூதியம் தொடர்பாக ஏற்கெனவே உள்ள விதிமுறை களை வங்கிகள் பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் அரசு அலுவலர் கையெழுத்து பெற்ற உயிர்ச்சான்றிதழும், ஆதாரை அடிப்படையாக கொண்ட உயிர்சான்றிதழும் சமர்ப்பிக்கும் பட்சத்தில், பென்ஷன் வாங்குபவர்கள் நேரில் வந்தாக வேண்டும் என்று துன்புறுத்த கூடாது. வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக டிஜிட்டல் பைல் சர்டிபிகேட் சேவை இருப்பதை வங்கிகள் நினைவில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கை ஒன்று அனைத்து வங்கிகளுக்கு அனுப்பியுள்ளோம்’ என்றார்.

வங்கி ஊழியர், அதிகாரிகளுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு: மாதம் இரு சனிக்கிழமை விடுமுறை

புதுடில்லி:ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

முழுநேரம் இயங்கும்:

புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.புதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் முதல், தொடர் போராட்டங்களை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது.இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜனவரி மாதம் அறிவித்த தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் கூட்டமைப்பு ஒத்தி வைத்தது. அதன்பின், இரு தரப்புக்கும் நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால், மீண்டும் தொடர் போராட்டத்தை, ஊழியர்கள் அறிவித்தனர்.

ஒப்பந்தம்:

மும்பையில் நேற்று மீண்டும் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், ஊதிய உடன்பாடு எட்டப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், வங்கிகளுக்கு ஆண்டுக்கு, 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, வங்கிகள் சனிக்கிழமை, அரை நாள் இயங்கி வந்தன.இம்முறையில் மாற்றம்ஏற்பட்டுள்ளது. மாதத்தில், முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகள், முழு நேரம் இயங்குவது; இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்படுகிறது:

வங்கி அதிகாரிகள் சங்க துணை பொதுச்செயலர் சீனிவாசன்கூறுகையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் பிற கோரிக்கைகள் தொடர்பாக, இந்திய வங்கிகள் சங்கத்துடன், 11 சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த, வேலை நிறுத்தம் கைவிடப்படுகிறது.என்றார்.

NEWS TODAY 29.01.2026