Friday, February 27, 2015

நிறுத்தங்களில் நிற்காத ரயில்

அதிவேக ரயில் பயணங்களை வழங்குவதில் சீன ரயில்வே துறையை மிஞ்ச முடியாது. தற்போது ரயில்களின் பயண நேரத்தை குறைப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

ரயில் எந்த ஸ்டேசனிலும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போதே பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழி கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு ஸ்டேசனில் ரயில் நின்று செல்ல ஐந்து நிமிடம் ஆகிறது என்றால், வழியில் 30 ஸ்டேசன்கள் இருக்கும்பட்சத்தில் 150 நிமிடங்கள் ஆகும்.

அதாவது சுமார் இரண்டரை மணி நேரம் இதன் மூலம் செலவாகும். இதை மிச்சப்படுத்தலாம் என்கிறது சீன ரயில்வே.

இந்த தொழில் நுட்பத்தின்படி ரயில் எந்த ஸ்டேசனிலும் நிற்கத் தேவையில்லை. ரயில் பெட்டியின் மேல்பாகத்தில் தனியாக ஒரு இணைப்பு பெட்டி உள்ளது. ஒரு ஸ்டேசனில் இறங்க வேண்டிய பயணிகள் அந்த பெட்டிக்கு சென்றுவிட வேண்டும்.

ஸ்டேசன் வந்ததும் மேலே உள்ள அந்த பெட்டி மட்டும் தனியாக கழன்று ஸ்டேசனில் நின்றுவிடும். அது போல ஏற வேண்டிய பயணிகள் ஸ்டேசனில் தயாராக இருக்கும் பெட்டிக்கு சென்றுவிட வேண்டும்.

ரயில் அந்த ஸ்டேசனை கடக்கிற போது ரயிலில் மேல்பகுதியில் இந்த பெட்டி இணைந்துகொள்ளும். இதற்கென சிறப்பு வடிவமைப்பை மேற்கொண்டு வருகிறது.

MCI team revisits med college to oversee progress

TRICHY: Members of the Medical Council of India (MCI) made a surprise visit to KAP Viswanatham Government Medical College (KAPVGMC) attached to Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) here on Thursday, to decide whether the college should continue having 50 additional MBBS seats.

The team, comprising Dr T S Renganath, Dr K Sivasankara Rao and Dr Thathiri Parmar, inspected the wards in MGMGH and the hostels, canteen and classrooms in KAPVGMC. The whole visit was videographed and photographed.

The state government had raised MBBS seats in KAPVGMC from 100 to 150 in 2013-14, but since then, it has been struggling to meet the MCI requirements for conducting MBBS course with 150 seats. The latest visit follows two earlier visits in May and November, 2014. In November, the MCI team had made adverse remarks about the facilities and manpower available at the college for conducting MBBS classes with 150 seats, hospital sources said. The recognition for additional seats had been pending ever since and Thursday's visit is considered crucial.

The team checked whether some of the discrepancies pointed out to the hospital authorities by the council during the last visit had been rectified.

Shortage of doctors remains one of the serious problems faced by the college and the hospital, a situation that has remained unchanged for several years now. The teams from MCI reportedly pointed out the shortage and advised the government to increase the number of faculty. In the wake of pending approvals for many medical colleges across the state, the ministry of health family welfare of Tamil Nadu had announced the appointment of new doctors. KAPVGMC was sanctioned 57 doctors, besides 27 associate professors, 17 assistant professors and 19 tutors on a permanent basis, at an approximate cost of Rs 2.98 crore per annum. However, only a few of these posts have been filled so far. Hospital staff said many qualified doctors were not interested to join government hospitals due to the workload.

At the time of the earlier visit by MCI members, TOI had reported about doctors being allegedly hired temporarily from primary health centres and government hospitals to show that the college had enough manpower.

Dr M K Muralitharan, newly-appointed dean of the college, was out of town at the time of the visit. Dr Parmar told TOI that the visit was a routine procedure for approval and accreditation of courses. However, when asked if the college satisfied the required norms, including number of faculty, she refused to comment.

டெல்லியில் மின்கட்டணம் பாதியாகக் குறைப்பு: மார்ச் 1-ம் தேதி முதல் அமல்

அர்விந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்

டெல்லியில் மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள் ளது. மேலும், மாதம் 20,000 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக் கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1-ம் தேதியிலிருந்து இந்த அறிவிப் புகள் அமலுக்கு வருகின்றன.

முதல்வர் கேஜ்ரிவால் தலை மையில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று வெளியிட்டார். இதன்படி, டெல்லி யில் மாதம் 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 401 அல்லது அதற்கு அதிகமாக யூனிட்டுகள் பயன்படுத்தும் மக்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மின் கட்டணக் குறைப்பால் மொத்தமுள்ள 45.35 லட்சம் மின் நுகர்வோரில் 36.6 லட்சம் பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிநீர் இலவசம்

குடிநீர் மாதம் ஒன்றுக்கு 20,000 லிட்டர் வரை பயன்படுத்தும் நுகர்வோர் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 20,000 லிட்டருக்கும் கூடுதலாகப் பயன் படுத்துபவர்கள் முழுக்கட் டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் 18 லட்சம் நுகர்வோர்கள் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கடந்தமுறை ஆட்சிக்கு வந்த போது மின்கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டது. மாதம் 20,000 லிட்டர் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப் பட்டது. ஆனால், அதற்குப் பிறகு டெல்லியை நிர்வகித்தவர்கள் இத்திட்டத்தைத் தொடரவில்லை. எனவே, மீண்டும் அமல்படுத்தி யுள்ளோம்.

மின் கட்டணக்குறைப்பால் கூடுதலாக மாதம் ரூ.70 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ. 1,427 கோடியும் செலவாகும். இலவச குடிநீர் விநியோகத்தால் மார்ச் மாதம் ரூ. 21 கோடியும், வரும் நிதியாண்டில் ரூ. 250 கோடி யும் கூடுதலாக செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போதைய மின் கட்டணம்

தற்போது டெல்லியில் மின்கட்டணம், 200 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு தலா ரூ.2, அதற்கு மேல் 400 யூனிட் வரை தலா ரூ. 2.97, 400-க்கு மேல் 800 யூனிட்கள் வரை ரூ.7.30 வசூலிக்கப்படுகிறது.

சலுகையால் பயனில்லை

ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:

டெல்லியில் 400 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. காரணம், அங்கு குளிர்காலத்தில் அதிகளவில் வாட்டர் ஹீட்டர்களையும், கோடைக் காலத்தில் ஏ.சி.யையும் பயன்படுத்துகின்றனர். அதனால், அவர்களுக்கு இந்தக் கட்டண சலுகையால் பலன் கிடைக்கப் போவதில்லை. இதனால், அரசுக்கு மிகப் பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படும் என தோன்றவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரை 500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்து பவர்களுக்கு அரசு கட்டண சலுகை அளித்து வருகிறது. மேலும், டெல்லியைவிட தமிழகத்தில் மின்நுகர்வு அதிகமாக உள்ளது.

ரயில்வே பட்ஜெட்: பயணிகள் அறிய வேண்டிய புதிய வசதிகள்



பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில், மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய வசதிகள் - திட்டங்களின் விவரம்:

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு

பயணிகள் இனி 60 நாட்களுக்கு பதிலாக, 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தூய்மைக்கு தனித் துறை

* தூய்மைக்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது. ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் தூய்மையை பராமரிக்கும் வகையில் தனித் துறை ஒன்று ஏற்படுத்தப்படும்.

* ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் உள்ள கழிப்பறைகளின் வசதிகளின் நிலை மேம்படுத்தப்படும். 650 ரயில் நிலையங்களில் புதிய கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* ரயில் பெட்டிகளில், சுற்றுசூழலுக்கு உகந்த கழிப்பறைகள் பொருத்தப்படும்.

* இந்த ஆண்டு இன்னும் 17,000 கழிப்பறைகள் மாற்றி அமைக்கப்படும். ஆறு மாதங்களுக்குள் நவீன தொழில்நுட்ப ரீதியான வாக்யூம் கழிப்பறைகளை கொண்டுவருமாறு ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர வடிவமைப்பை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

* படுக்கை விரிப்புகளுடன் கழிவுகளை சேகரிக்க ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பையை வழங்குவதற்கான சாத்தியகூறும் கண்டறியப்படும்.

* குளிர்சாதன வசதி இல்லாத ரயில் பெட்டிகளிலும் குப்பை தொட்டி வசதி விரிவாக்கப்படும்.

* ஒருமுறை பயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்புகளை கணிணி வழியாக பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.

ஹெல்ப்லைன்கள்:

* 24 மணி நேரமும் உதவி பெறும் வகையில் '138' எண் ஹெல்ப்லைன் வசதி.

* பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லாத வகையில் 182 எண்ணுள்ள தொலைபேசி வசதி.

5 நிமிடத்தில் பயணச் சீட்டு

* பயணச்சீட்டை எளிதாக பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை 5 நிமிடங்களில் பெறுவதற்கு 'ஆபரேஷன் 5 மினிட்ஸ்' என்ற புதிய வசதி.

* சில்லறை பெறுவதற்கான இயந்திரம், மாற்று திறனாளிகள் சலுகை கட்டணத்தில் கணினிவழியாக பயணச்சீட்டுகளை பெறுதல்.

* ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்குகளில் சேர்த்தல்.

* ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கட்டுகளை பெறுதல் அறிமுகம்.

* விரும்பிய உணவை தெரிவு செய்து பெறுவதற்கு கணினிவழி வசதியை ஏற்படுத்துதல். ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கட்டை முன்பதிவு செய்யும்போது உணவிற்கும் பதிவு செய்யும் வசதி, தரமான உணவை வழங்கம் வகையில் தெரிவுசெய்யப்பட்ட கோட்டங்களில் பிரபல முகமைகளின் சமையல் அறை கூடங்கள், குடிநீர் விநியோக இயந்திர வசதி ஆகியவை இதில் அடங்கும்.

* பயணிகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வகையில் டிக்கெட் பரிசோதனைகளுக்கு இயந்திர வசதி அளிக்கப்படும்.

* 2000 ரயில் நிலயங்களில் பொதுவான மையங்களின் வழியாக நிர்வகிக்கப்படும் ஒளிகாட்சி கட்டமைப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.

* ரயில்களின் புறப்பாடு வருகை குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி சேவை மூலம் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

* மகளிர் பாதுகாப்பிற்கு உதவும் வகையில், சில குறிப்பிட்ட முக்கிய தட ரயில் பெட்டிகளிலும் புறநகர ரயில்களிலும் மகளிர் பெட்டிகளிலும் சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

பொதுப் பெட்டிகளிலும் மொபைல் 'சார்ஜ்' வசதி

* சில குறிப்பிட்ட சதாப்தி ரயில்களில் பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* மொபைல் போன்களை 'சார்ஜ்' செய்யும் வசதி பொதுப் பெட்டிகளிலும் ஏற்படுத்தப்படும். படுக்கை வசதி பெட்டிகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

வை-ஃபை வசதி

* பி-பிரிவு ரயில் நிலையங்களில் 'வை-ஃபை' சேவை அறிமுகப்படுத்தப்படும்.

* ரயில் நிலையங்களில் தாமே நேரடியாக பயன்படுத்தும் 'லாக்கர்' வசதி ஏற்படுத்தப்படும்.

* குறிப்பிடப்பட்ட ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதி ஏற்படுத்தப்படும். மேலும், தெரிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் சேர்க்கப்படும்.

* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் உயர் அடுக்குகளுக்கு செல்ல பயணிகளுக்கு வசதியான வகையில் ஏணிப்படிகளை அமைக்குமாறு தேசிய வடிவமைப்பு துறை கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு...

* மூத்த குடிமக்களுக்கு கீழ் நிலை படுக்கை வசதி அளிக்கப்படும்.

* மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கீழ் நிலை அடுக்குகளை வழங்க உதவி அளிக்குமாறு டிக்கெட் பரிசோதனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

* பெட்டிகளின் நடுப்பகுதி மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் ஒதுக்கப்படும்.

* நகரும் படிகட்டுகள், உயர் தூக்கிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் 'பிரய்லி' வசதி ஏற்படுத்தப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தப்படும் வகையில் நுழைவாயில்கள் அகலமாக இருக்கும் வகையில் உருவாக்கப்படும்.

* பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு...

புதிய விவசாய முறைகளையும், சந்தைப்படுத்துதல் முறையைம் விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், விவசாய பயணம் (கிஸான் யாத்ரா) என்ற சிறப்பு பயண திட்டத்துக்கான ஜ.ஆர்.சி.டி.சி நடவடிக்கைகளை எடுக்கும்.

ரெயில் நிலையங்களில் ‘வைபை’ சேவை எல்லா பெட்டிகளிலும் செல்போன் ‘சார்ஜ்’ வசதி



புதுடெல்லி,

தகவல் தொழில் நுட்ப வசதிகளை வழங்குவதில் ரெயில்வேயும் தன்னை இணைத்துக்கொண்டு, பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் புதிதாக ரெயில் நிலையங்களில் ‘வைபை’ என்னும் கம்பியில்லா இணையதள வசதியை ரெயில்வே வழங்க உள்ளது.

400 ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் இந்த வசதியை பயணிகள் பெற்று பலன் அடையலாம்.

இதேபோன்று தற்போது ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் செல்போன்களை ‘சார்ஜ்’ செய்துகொள்ளும் வசதி உள்ளது. இந்த வசதி இனி சாதாரண பெட்டிகளில் (முன் பதிவு இல்லாதவை) பயணம் செய்யும் பயணிகளுக்கும் கிடைக்கும்.

அண்ணாமலைப் பல்கலை. பதிவாளராக ஜே.வசந்தகுமார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக (கூடுதல் பொறுப்பு) ஜே.வசந்தகுமார்நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகத்தைதமிழகஅரசு ஏற்றது. பின்னர் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த

2013 ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாகபொறுப்பேற்றார்.

இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக பதவி வகித்து வந்தஆர்.மீனாட்சிசுந்தரத்திற்கு வயது 58 முடிவுற்றதால் அவரை ஏப்.15-ம் தேதி பதிவாளர் பதவியிலிருந்து விடுவித்து, வணிகவியல் துறை பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து பதிவாளர் பதவிக்கு பல்கலைக்கழக

மேலாண்மைத்துறை தலைவராக இருந்த பேராசிரியர் என்.பஞ்சநதம் நியமிக்கப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனது உடல்நிலை காரணமாக பதவியை ராஜிநாமா செய்வதாக, கடிதத்தை நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிடம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் வழங்கினார். அப்போது சிண்டிகேட் கூட்டத்தில் அவரது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பதிவாளரை நியமிக்க நிர்வாகி

ஷிவ்தாஸ்மீனாவிற்கு அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பித்தது. அதனடிப்படையில் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வரும், சிண்டிகேட் உறுப்பினருமான முனைவர் பேராசிரியர் ஜே.வசந்தகுமாரை பதிவாளராக முழுக்கூடுதல் பொறுப்பு வழங்கி பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து பதிவாளராக ஜே.வசந்தகுமார் வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார்.

NEWS TODAY 29.01.2026