Sunday, March 8, 2015

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

உத்தமவில்லன்', 'நண்பேன்டா' உடன் போட்டியிடும் 'சகாப்தம்'



ஏப்ரல் 2ம் தேதி 'உத்தமவில்லன்', 'நண்பேன்டா' ஆகிய படங்களுடன் வெளியாக இருக்கிறது சண்முக பாண்டியன் நடித்திருக்கும் 'சகாப்தம்'

விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. நாயகிகளாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நேகாவும், ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். சண்முக பாண்டியனோடு சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தேவயானி, ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிவடைந்தும் படம் எப்போது வெளியாகும் என்பதை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது ஏப்ரல் 2ம் தேதி 'சகாப்தம்' வெளியாகும் என்று கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 2ம் தேதி கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் 'உத்தம வில்லன்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நண்பேன்டா' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. அப்படங்களோடு பாக்ஸ் ஆபிஸில் மோதவிருக்கிறது 'சகாப்தம்'

அன்னமிடும் கை



சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் அந்த சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைகிறவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார் தாயம்மாள். 73 வயதாகும் தாயம்மாள், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வூதியம் மூலம் வரும் வருமானத்தில் ஓய்வெடுக்க விரும்பாத இவர், மகளிர் சுய உதவி குழு மூலம் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார். ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் கிராம மக்கள், அவ்வப்போது வரும் அலுவலக ஊழியர்களுக்கு மலிவு விலையில் அன்னம் வழங்குவதாலேயே இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

வழிகாட்டிய கல்வி

எப்போதும் இன்முகத்துடன் இருக்கும் இவர் கடந்து வந்த இன்னல்கள் ஏராளம். பசியின் கொடுமையை அறிந்ததால்தான் இப்படியொரு உணவகத்தை நடத்தி வருகிறார். திருநெல்வேலி அருகே இருக்கும் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த இவருக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. அந்த மண வாழ்க்கை எட்டு ஆண்டுகள் மட்டுமே

நீடித்தது. 1968-ல் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் ராமசாமி இறந்துவிட, நான்கு பிள்ளைகளைக் கரை சேர்ப்பதொன்றே தாயம்மாளின் வைராக்கியமாக இருந்தது. காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடம் படித்து தங்கப் பதக்கம் பெற்றார். ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சிவகங்கையில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியப் பணியில் தனி முத்திரை பதித்த தாயம்மாள், ஓய்வுக்குப் பிறகும் தனக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஓய்வுக்குப் பிறகும் வேலை

சத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பொருட்கள், இவரது சிற்றுண்டிச் சாலையின் அடையாள.

“என்ன வேணும்னு கேட்டு எடுத்துவைம்மா” என உட்கார்ந்த இடத்திலிருந்து உபசரிக்கிறார் தாயம்மாள். கையில் காசில்லை என்றாலும் கடன் சொல்லியாவது சாப்பிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் காலடி எடுத்து வைக்கும் கிராமத்தினர் இவரது கடைக்கு வைத்திருக்கும் பெயர் ‘ஆத்தா மெஸ்’.

“ஓய்வுங்கற பேர்ல வீட்ல் உட்காராம ஏதாவது செய்யணும்னுதான் இந்தக் கடையை நடத்துறேன்.எனக்கு உதவியா இருக்கற ரேவதி, மையலுக்கு உதவி செய்யும் பெண்கள்னு கூட்டா சேர்ந்து இந்தக் கடையை நடத்திட்டு இருக்கோம்” என்று சொல்லும் தாயம்மாள், எதையும் சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபிக்கிறார்.

படம்: சுப. ஜனநாயகசெல்வம்

180-வது ஆண்டுவிழா கொண்டாடும் சென்னை மருத்துவக் கல்லூரி

சென்னை மருத்துவக் கல்லூரி (கோப்புப் படம்)

சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்குவது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் (எம்எம்சி) எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி. நாட்டின் பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான இக்கல்லூரி தற்போது 180-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டையில் 1664-ம் ஆண்டு மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு இடங்களில் மாறி மாறி செயல்பட்ட அந்த மருத்துவமனை, 1772 முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே செயல்படத் தொடங்கியது. 1835 பிப்ரவரி 2-ம் தேதி மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூலை அப்போதைய கவர்னர் சர் பிரெடரிக் ஆடம் தொடங்கிவைத்தார். 1852-ல் இது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ஆக உயர்த்தப்பட்டது. 1857-ல் சென்னை பல்கலை.யுடனும், 1988-ல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யுடனும் இணைக்கப்பட்டது.

‘மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல்’ தொடங்கப்பட்டு 180 ஆண்டுகள் ஆகின்றன. 180-வது ஆண்டு விழாவை கல்லூரி நிர்வாகத்தினரும், முன்னாள் மாணவர்களும் இணைந்து 20 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறை இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:

மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டல் தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 1835-ல் மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல் தொடங்கப்பட்டபோது 4 துறைகள் மட்டுமே இருந்தன. 21 மாணவர்கள் படித்தனர். தற்போது 50-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லூரியின் 180 ஆண்டு பாரம்பரியம், சிறப்புகளை இப்போதுள்ள மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 180-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. நிறைவு விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு சுதா சேஷய்யன் கூறினார்.

மாணவர்கள் நடைபயணம்

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி யின் 180-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, பாரம்பரியம் போற்றும் நடைபயணத்தை (ஹெரிடேஜ் வாக்) கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா நேற்று காலை 8.15 மணிக்கு தொடங்கிவைத்தார். சுதா சேஷய்யன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில் 50 மருத்துவ மாணவர்கள், 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் களான டாக்டர்கள் டி.குணசாகரம், விட்டல், ராஜன் சந்தோஷம் ஆகியோர் நடைபயணத்தை வழி நடத்திச் சென்றனர். கல்லூரியின் பழைய கட்டிடங்களைப் பார்வையிட்ட படியும், அவற்றின் பாரம்பரியத்தை விளக்கியபடியும் நடைபயணம் சென்றது. கல்லூரி, மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிய பிறகு, பகல் 12 மணி அளவில் நடைபயணம் நிறைவடைந்தது.

பழைய கட்டிடங்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி யில் பிராட்ஃபீல்ட் அறுவை சிகிச்சை பிளாக் 1934-ல் கட்டப் பட்டது. இதய சிகிச்சை பிளாக், ஹேலன் டாஸ்ஸிக் அம்மையாரால் 1972-ல் திறக்கப்பட்டது. நாட்டின் முதல் நீரிழிவு நோய் சிகிச்சை மையம் டாக்டர் சாம் இ பி மோஸஸ் என்பவரால் 1953-ல் இங்கு தொடங்கப்பட்டது.

பிரபல முன்னாள் மாணவர்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - இந்தியாவின் முதல் பெண் டாக்டர்.

டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் - சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தராக 27 ஆண்டுகள் இருந்தவர். எம்எம்சி-யின் முதல் இந்திய முதல்வர்.

டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி - விஎச்எஸ் மருத்துவமனை நிறுவனர்.

டாக்டர் எம்.சி.நஞ்சுண்ட ராவ் - சுவாமி விவேகானந்தருடன் பழகியவர். அந்த காலத்தில் மயிலாப்பூர் பகுதியில் மருத்துவம் பார்த்தவர்.

டாக்டர் நடேசன், டாக்டர் டி.என்.நாயர் - இருவரும் நீதிக் கட்சியை சேர்ந்தவர்கள்.

முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்

முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்

சர்வதேச மகளிர் தினமான இன்று முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் சிப்பந்திகள் கொண்ட 4 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கியுள்ளது. இதில் 2 விமானங்கள் உள்நாட்டு வழித்தடத்திலும் மேலும் இரு விமானங்கள் சர்வதேச வழித்தடத்திலும் இயக்கப்பட்டன.

உலகிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய விமானச் சேவையை 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மீண்டும் இந்த சிறப்பு விமானச் சேவை இயக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சேவையாக மும்பை-டெல்லி வழித்தடத்திலும், டெல்லி-ஜோத்பூர்-மும்பை வழித்தடத்திலும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. சர்வதேச வழித்தடத்தில் டெல்லி-மெல்போர்ன் மற்றும் மும்பை-மஸ்கட்-மும்பை இடையில் இரு விமானங்கள் இயக்கப்பட்டன.

கடந்த 1985-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து சில்ச்சார் வழித்தடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்த அதே இரு பெண் விமானிகள் இன்று டெல்லி-மெல்போர்ன் இடையிலான விமானத்தை ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 29.01.2026