Thursday, March 19, 2015

MCI orders faculty surveillance to rein in doctors

HYDERABAD: It would be no longer easy for teaching staff in medical colleges to take up lucrative private practice on the city outskirts by leaving the campus before the stipulated 4 pm deadline.

With many medical teaching staffers in both Andhra Pradesh and Telangana known to leave by noon for their private clinics, the Medical Council of India has now made it mandatory for all medical colleges to switch over to Radio Frequency Identification (RFID) system.RFID is a fool-proof system under which the regulator of medical education seeks to create a database of all teaching staff by integrating their Aadhaar cards, photographs and fingerprints. "There would be sensors to track the movement of faculty members of all medical colleges. Each of them would have a high-end computer system installed and connected to a central server stationed at MCI headquarters," said Dr K Ramesh Reddy , MCI member.

Dr Ramesh Reddy , a member of MCI sub-committee on RFID system, said that the new surveillance system on faculty members is mandatory for both private and government sector colleges.

Most importantly , it would be equally difficult for private medical colleges to resort to the dubious practice of recruiting ghost faculty for a day at the time of annual Medical Council of India (MCI) inspection, a common phenomenon witnessed across majority of 33 private medical colleges including 15 in Telangana.

"The new surveillance system would create havoc in our functioning if it is implemented as due to shortage of qualified faculty members, we are forced to hire ghost faculty from outside. Their services remain only on paper," said a dean of a private medical college, on conditions of anonymity .

It is estimated that private medical colleges in the two states are faced with 60% faculty shortage for their postgraduate, specialty and super-specialty seats, but they continue to escape MCI's radar due to poor monitoring.However, the scene in government medical colleges is said to be comparatively better.

Speaking to TOI, a senior office bearer of state medical council said that private medical colleges find the 1:1 (one professor for one student) norm fixed by MCI for postgraduate and specialty course seats difficult, compelling them to hire the services of ghost faculty , who actually exist but never teach.

Even in government medical colleges, it is pointed out that they too often resort to hoodwinking MCI by largescale transfers of teachers from one government medical college to another just before inspection, only to be repatriated to their parent institution after inspection.

Interestingly , in its notification on RIFD system addressed to all deans principals of medical colleges and released on Tuesday , MCI's deputy secretary Ashok K Harit acknowledged that a previous attempt to implement the faculty surveillance system did not work out.

சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவோம்

ஒருகாலத்தில் செல்வசெழிப்புக்கு எடுத்துக்காட்டாக சிட்டுக் குருவிகளைத்தான் சொல்வார்கள். எங்கு சிட்டுக்குருவிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கு விவசாயம் செழித்தோங்குகிறது என்பார்கள். பொதுவாக காகமும், சிட்டுக்குருவியும் மனிதர்கள் வாழும் பகுதிகளில்தான் அதிகம் இருக்கும். மக்களை சார்ந்தே இதன் வாழ்க்கையும் இருக்கும். சிட்டுக்குருவிகள் அடர்ந்த காடுகளிலோ, மலைகளிலோ, மனித நடமாட்டம் இல்லாத இடங்களிலோ பெரும்பாலும் காணப்படுவதில்லை. வீடுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிலும் குறிப்பாக, உணவு தானியங்கள் சிதறிக்கிடக்கும் இடங்களில்தான் அதிகமாக வசிக்கும். மனிதர்களோடு பழகாவிட்டாலும், மனித நடமாட்டம் இருக்கும் இடத்தில்தான் அதிகமாக காணப்படும். இந்த செல்லக்குருவிகள் பயிர்களில் உள்ள கதிர்களை கொத்துவது கிடையாது. வீணாக கிடக்கும் உணவு தானியங்கள், சின்னஞ்சிறு பூச்சிகளைத்தான் கொத்தி தின்னும். மென்மையான இதயம் கொண்ட சிட்டுக்குருவிகள், வீடுகளில் ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டு, தத்தி தத்தி நடந்துவந்து கீழே கிடக்கும் உணவு தானியங்கள், சிதறிக்கிடக்கும் உணவுப்பொருட்களை கொத்தி கொத்தி உண்ணும் அழகை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். அவ்வப்போது வீடுகளில் சிந்திக்கிடக்கும் தண்ணீரையும், பாத்திரங்களில் உள்ள தண்ணீரையும் போய் குடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் இல்லையென்றால், சிட்டுக்குருவி இல்லை. மைனா, லவ் பேர்ட்ஸ், கிளி, கோழி போல வீடுகளில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க முடியாது என்றாலும், தானாகவே வீடுகளில் உயரமான இடங்களில் வைக்கோல், சிறு சிறு குச்சிகள், கந்தல் துணிகளை வைத்து கூடு கட்டி குடியிருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவி இனம் அழிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், நவீன வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்ட எந்தவித வசதியும் இல்லை. அவைகளுக்கான உணவுப்பொருட்கள் வீடுகளில் சிந்திக் கிடப்பதுமில்லை, யாரும் போடுவதும் இல்லை. தண்ணீரும் கிடைப்பதில்லை. மேலும், இந்த சிட்டுக்குருவிகள் மின்சார விசிறியில் சிக்கியும் உயிரிழந்துவிடுகிறது. செல்போன் டவரில் இருந்து வெளியாகும் காந்த கதிர்களை சிட்டுக் குருவிகளின் மென்மையான இதயம் தாங்கமுடியாமல் நின்றுவிடுகிறது. எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை என்னவென்றால், செக்ஸ் பலத்துக்கு ‘சிட்டுக்குருவி லேகியம்’ என்று இந்த சிறு பறவைகளை கொன்று தயாரிக்கிறார்கள். அழிந்துவரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற ‘உலக சிட்டுக்குருவி தினம்’ நாளை 20–ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இனத்தை காப்பாற்றுவது மக்களிடம் தான் இருக்கிறது. ஓரிரண்டு சிட்டுக்குருவிகள் தென்படும்போது சிறிது தானியத்தை 2 நாட்கள் தொடர்ந்து போட்டால் வரத் தொடங்கிவிடும். பல இடங்களில் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற பறவை ஆர்வலர்கள் சிறிய மண்பானை குடுவைகளை வீடுகளில் வைப்பதை எல்லோரும் பின்பற்றலாம். கோடைகாலத்தில் இதுபோன்ற பறவைகளுக்காக வீடுகளில் உயரமான இடத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால் சிட்டுக் குருவிகளுக்கு புத்துயிர் கொடுக்கமுடியும். கோடையில் மக்களுக்காக தண்ணீர் பந்தல்களை வைக்க அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் முற்படும் போது, வாயில்லா இந்த ஜீவன்களுக்கும் தண்ணீர் வழங்கினால், இந்த உயிர்களையும் காப்பாற்றலாமே!

சென்னையில் இந்திய கால்நடைகளை நேசிக்கும் இயக்கம், இதற்காக பொதுமக்களுக்கு ஆங்காங்கு வைக்க குவளைகள் வழங்கியது. இதுபோல, சென்னை மாநகராட்சி ஆணையராக ராஜேஷ் லக்கானி இருந்தபோது, மாநகராட்சி பூங்காக்களில் சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்காக மரங்களில் அவைகளுடைய கூடுகள்போல வைத்து, உணவு தானியங்கள் போடுவதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் வசதி செய்ய முயற்சி எடுத்தார். அவர் மாற்றப்பட்டபோது, அந்த முயற்சியும் நின்றுபோனது. அவரை பின்பற்றி, சென்னை உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள், செயல் அதிகாரிகள் பூங்காக்களில் இந்த வசதிகளை செய்துகொடுத்தால், பொதுமக்களும் ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். ‘சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவோம்’, செல்ல பறவைகளுக்கு வாழ்வு கொடுப்போம்.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது; மாணவர் சேர்க்கை நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி விவகாரம்

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்று தொழிலாளர் காப்புறுதி திட்ட கழகம் (இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன்) கடந்த ஜனவரி மாதம் 5–ந் தேதி அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், மருத்துவ கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க இ.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதம் 10–ந் தேதி சென்னை வந்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மத்திய இணை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயாவிடம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனு கொடுத்தனர்.

தமிழக அரசு கடிதம்

இந்த பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 11–ந் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், ‘‘இ.எஸ்.ஐ. நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவும், அங்கு மேலும் மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த கடினமான முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் அதிர்ச்சியை போக்குவதற்காக சென்னை மற்றும் கோவையில் இயங்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசின் நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சரை ஏற்க செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

மூடப்படாது

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்குமா? என்றும், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்ன ஆகும்? என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் மூடப்படாது என்றும், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய துணை மருத்துவ ஆணையர் டாக்டர் விவேக் ஹண்டா, சென்னை, பெங்களூரு, கொல்கத்தாவில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளின் முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மாணவர் சேர்க்கை நடைபெறும்

இந்த கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஆணையை வரவேற்கிறோம். மாணவர்களின் நலன் கருதி மருத்துவ கல்லூரி தொடர்பான நிலைப்பாட்டை மீண்டும் பரிசீலனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த கல்வி ஆண்டு 2015–16–க்கான மாணவர் சேர்க்கைக்கான மத்திய மற்றும் மாநில அளவிலான ஒதுக்கீடுகள் தொடர்பான விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வானதி சீனிவாசன்

இந்த தகவலை சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன் நேற்று தெரிவித்தார். இதையடுத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.

இந்த நல்ல முடிவை எடுத்த மத்திய அரசுக்கும், மகிழ்ச்சியுடன் தெரிவித்த வானதி சீனிவாசனுக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்

பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

கணிதம்–விலங்கியல் தேர்வு

பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 5–ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ–மாணவிகள் எழுதி வருகிறார்கள்.

பிளஸ்–2 தேர்வுகள் இம்மாதம் 31–ந் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.

எளிதாக இருந்தது

எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பிரீத்திகா, பிரியங்கா ஆகியோர் கூறியதாவது:–

கணித தேர்வு வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் எளிமையாக இருந்தது.

தவறான வினா?

10 மதிப்பெண் பிரிவில் 58–வது வினாவில் கழித்தல் குறியீடு போடுவதற்கு பதிலாக கூட்டல் குறியீடு போடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இதே வினா கழித்தல் குறியீடுடன் உள்ளது.

வினாத்தாளை பார்த்ததும் 58–வது கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளதோ என்று நினைக்க தோன்றியது. பிளஸ் போட்டு விடை அளிக்கலாமா? அல்லது மைனஸ் போட்டு விடை அளிக்கலாமா? என்று குழப்பமாக இருந்தது. சில மாணவர்கள் கேள்வியில் கேட்கப்பட்டபடி பிளஸ் போட்டு விடை அளித்துள்ளனர். சிலர் மைனஸ் போட்டு விடை அளித்துள்ளனர். எது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து கணித ஆசிரியர் கூறும்போது, இந்த கேள்வி முழுக்க முழுக்க சரியானதுதான். கணிதத்தை மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களுக்கு இந்த கேள்வி குழப்பமாக இருக்கலாம். ஆனால் புரிந்து படித்த மாணவர்களுக்கு இது மிக எளிதானதாகும் என்று தெரிவித்தார்.

தேர்வு துறை

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

பிளஸ்–2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரியானதுதான். குறிப்பாக பிரச்சினை கிளப்பிய 58–வது கேள்வி குறித்து நாங்கள் பல கணித ஆசிரியர்களிடம் கேட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் சரியானதுதான் என்று கூறுகிறார்கள். மைனஸ் போட்டும் கேள்வி கேட்கலாம், பிளஸ் போட்டும் கேள்வி கேட்கலாம். எனவே இந்த கேள்வி சரியானதுதான். கருணை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் கேள்வியே எழவில்லை.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

விலங்கியல்

நுங்கம்பாக்கத்தில் உள்ள கிரசென்ட் பள்ளியை சேர்ந்த மாணவிகள் கீர்த்திகா சந்திரசேகர், ஆப்ரின், சுமையா மற்றும் சபா ஆகியோர் விலங்கியல் தேர்வு குறித்து கூறியதாவது:–

விலங்கியல் தேர்வு வினாக்கள் எளிதாகத்தான் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், 3 மதிப்பெண் வினாக்கள் ஆகியவை மிகவும் எளிதாக இருந்தது. விலங்கியல் வினாக்களை பொறுத்தமட்டில் திரும்ப, திரும்ப கேட்கப்பட்ட வினாக்கள் இல்லாமல் கடந்த ஆண்டுகளில் கேட்கப்படாத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள கேள்விகள் கேட்காமல் பெரும்பாலான வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. நாங்கள் 5 மதிப்பெண் வினாவாக எதிர்பார்த்த சில வினாக்கள் 10 மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்தமாக வினாக்கள் எளிதாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேவைதானா தடை?

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே குஜராத்தில் நடைமுறையில் இருக்கும் சட்டம்தான் இது. ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட சில பாரதிய ஜனதா கட்சி அரசாளும் மாநிலங்களும்கூட இதே கருத்தைத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க. இறங்கியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அரசைச் சாடுகின்றன.

நான்கு வயது நிரம்பாத ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை ஏற்கெனவே சட்டம் தடை செய்திருக்கிறது. கறவை மாடுகளைக் கொல்வதிலும் சில நிபந்தனைகளை வைத்திருக்கிறது. தற்போதைய சட்டத்தின்படி, மகாராஷ்டிரம், ஹரியாணாவில் மாட்டிறைச்சியை விற்றாலும், வைத்திருந்தாலும் குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனை என்பதுதான் எதிர்ப்பைக் கிளப்பி இருக்கிறது.

உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு (சுமார் 20 லட்சம் டன்) இந்தியாதான். இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 2011-இல் 1.9 பில்லியன் டாலரிலிருந்து 2013-இல் 3.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இப்போது சுமார் 5 பில்லியன் டாலராகி இருக்கக்கூடும்.

இந்தியாவின் 48% தோல் ஏற்றுமதி தமிழ்நாடு மூலம் நடைபெறுகிறது. இதில் 30% தோல் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடங்களில் பாதிப்பு கணிசமாக இருக்கும்.

மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வதன் நோக்கம் - பசுக்கள் கொல்லப்படுவதை முழுமையாகத் தடுப்பதற்காகத்தான். பசுவதை என்பது காந்தி காலத்திலிருந்தே மிகப்பெரும் விவாதமாக இருந்து வருகிறது. பசுவதை கூடாது என்பதை ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரமா, பசுவதைத் தடுப்பா என்பதில் பின்னதுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு முதல்நாள் பசுவதைத் தடுப்பு மாநாடு நடத்தப்படுவதை வழக்கமாக்கி இருந்தார் காந்தியடிகள் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நமது அரசியல் சட்டத்தின் 48-ஆவது பிரிவான அரசுக்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறையில் பசுவதைத் தடுப்பு என்பதும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பசுக்களும் விவசாயத்திற்கு பயன்படும் ஏனைய கால்நடைகளும் கொல்லப்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பசுவதைத் தடுப்பு இடம் பெற்றிருந்தது என்பது மட்டுமல்ல, நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பசுமைப் புரட்சிக்கும், வெண்மைப் புரட்சிக்கும் பதிலாக இறைச்சி ஏற்றுமதியை ஊக்குவித்து "சிவப்புப் புரட்சி' (பிங்க் ரெவல்யூஷன்) செய்து கொண்டிருக்கிறது என்று சாடியிருந்தார். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி பா.ஜ.க. பசுவதைத் தடை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைத் தடை மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்பதுதான் உண்மை. அந்தக் கருத்துடன் நாம் உடன்படாமலிருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தை பா.ஜ.க. இந்தப் பிரச்னையில் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மிருகங்களின் வதைக்குத் தடை விதித்திருக்கின்றன. யூத மதத்துக்கு எதிரானது என்பதால் இஸ்ரேலில் குதிரை மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கம்யூனிஸ நாடான கியூபாவில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஏதோ இந்தியாவில் மட்டுமே மத நம்பிக்கையின் அடிப்படையில் பசுவதையும், மாட்டிறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூக்குரலிடுவது அர்த்தமற்றது.

மாமிசத்துக்கான நீர்த் தேவை மிக அதிகம். ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்திக்கு செலவாகும் தண்ணீர் 15,415 லிட்டர். ஆட்டிறைச்சிக்கு 8,763, பன்றி இறைச்சிக்கு 5,988 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. தாவர உணவுகளுக்கான நீர்த் தேவை, ஒரு கிலோ பருப்பு உற்பத்திக்கு அதிகபட்சமாக 4,000 லிட்டர்தான். மற்ற காய்கறிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவை. நீர்த் தேவை குறித்த விழிப்புணர்வு மூலம் மக்களை சைவ உணவுக்கு மாற்றுவது இயலும். ஆனால், சட்டம் போட்டு மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக ஆடு, கோழியை விடுத்து, வெறும் மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வது பயனற்றது.

அடிமாடுகள் லாரிகளிலும், படகுகளிலும் மிக மோசமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றன. வலியில்லாமல் கொல்லும் முறை கையாளப்படுவதில்லை. நோய் இல்லா மாடுகளின் இறைச்சி என்று சான்று வழங்குவதில் பெரும் ஊழல், முறைகேடுகள் உள்ளன. இத்தனை இருந்தபோதிலும், மாட்டிறைச்சி நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

இந்நிலையில், இத்தனை பேரையும் பகைத்துக் கொண்டு இத்தகைய சட்டம் கொண்டு வருவது அவசியம்தானா என்பதை வாக்குவங்கியை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இப்போதைக்கு இல்லை என்றாலும், பிறகு நிச்சயமாக ஏற்படலாம். கொள்கைக்காக அரசியலும், ஆட்சி அதிகாரமுமா, இல்லை, ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்கையா என்று பா.ஜ.க.வினர் திருப்பிக் கேட்டால் அதற்கு நம்மிடம் பதில் இல்லை.

Wednesday, March 18, 2015

வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு

வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் விடுமுறை என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள் கலக்கம் அடைந்தனர். மார்ச் 28–ந்தேதி சனிக்கிழமை ராம நவமி விடுமுறை, 29–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை 30–ந்தேதி திங்கட்கிழமை செயல்படும். 31–ந்தேதி செவ்வாய்க்கிழமை நடப்பு நிதியாண்டிற்கான இறுதி நாள் என்பதால் விடுமுறை எனவும், ஏப்ரல் 1–ந்தேதி அடுத்த நிதியாண்டிற்கான முதல் நாள் என்பதால் கணக்குகளை தொடங்கும் பணிகளை மேற்கொள்வதால் அன்று விடுமுறை எனவும் தகவல் பரவியது.

ஏப்ரல் 2–ந்தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி வங்கி விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி விடுமுறை. 4–ந்தேதி வங்கி அரை நாள் மட்டும் செயல்படும். 5–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை என 7 நாட்கள் வங்கி பணிகள் முடங்கும் என்று தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி கூட்டமைப்பு தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:–

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திற்கும் 3 நாட்கள் மட்டும் தொடர் விடுமுறையாகும். ஏப்ரல், 1, 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் வங்கி சேவை நடைபெறாது. ஏ.டி.எம்., இன்டர்நெட் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1–ந்தேதி வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறும். நடப்பு நிதியாண்டின் கணக்குகள் முடிக்கப்பட்டு வரும் நிதியாண்டின் கணக்குகள் தொடங்குவது தொடர்பான பணிகளில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுவதால் அன்று விடுமுறையாகும்.

2–ந்தேதி மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 3–ந்தேதி புனித வெள்ளி என்பதால் விடுமுறை. தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படாது. மார்ச் 31–ந்தேதி நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் வங்கிகள் செயல்படும். மார்ச் 28–ந்தேதி ராம நவமி பண்டிகைக்கு தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் முழுமையாக நிரப்பி தேவையை சமாளிக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!


ப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம். 

அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...

பொறுமை... பணம்! 


குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள். 

அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி, இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பும் வராது.
அத்தியாவசியமா, ஆடம்பரமா..? 

அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி, ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும். 

பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!
வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள்.  செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக்  காட்டுங் கள். 

அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது, ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான புரிதலை உண்டு பண்ணும். 

குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்! தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக் கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கிடைக்கும். 

நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர் இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும். இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும். 

பாக்கெட் மணி கொடுங்கள்! 


குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். 30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம், அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது. 

சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!


குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.
மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.

சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்! 

- ஜெ.எம். ஜனனி

 

NEWS TODAY 25.07.2026