Friday, April 3, 2015

ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்க புதிய தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

 

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் ‘‘பென்சன் பைலட் ஸ்கீம்’ என்ற திட்டத்தின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்றிதழ், வேறு வேலைக்கு சேர்ந்த சான்றிதழ், வேறு வேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம் அல்லது திருமணம் ஆகாததற்கான சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வூதியதாரர் நேரிலும் ஆஜராகலாம்.

நோய் உட்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றிதழை பெறமுடியாமல் போய்விட்டால், அவர்களை வீட்டிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ அந்த வங்கி அலுவலர் நேரில் சென்று சந்தித்துவிட்டு வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம்.

புதிய மாற்றங்கள்

இந்த ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, ஓய்வூதியம் வழங்குவதை எளிமைப்படுத்துவது குறித்து அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட வாரியாக ஓய்வூதியம் வழங்கு அலுவலங்களிலும், ஓய்வூதியம் அளிப்பதை கண்டறிவதற்கான மென்பொருள் மற்றும் தகவல் மையம் இணைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், அவர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பது, ஓய்வூதியத்தை தாமதமில்லாமல் வழங்குவது போன்றவற்றுக்காக ஓய்வூதியதாரரின் ஆதார் எண் இணைப்பு போன்ற சில உயிரி தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்கள்

அதன்படி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரும் இம்மாதம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய வாழ்வுச் சான்றிதழ் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட முறையில் கூடுதல் தகவல்கள், தேவையான சான்றிதழ்கள் போன்றவற்றை ஓய்வூதியம் வழங்கு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவை அரசு அதிகாரியால் சான்றொப்பம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜூலை மாதம் நேரிலும் ஆஜராகலாம்.

மேலும், பொதுத்துறை வங்கிகள் திட்டம் என்ற பி.எஸ்.பி. திட்டத்தின்படி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தேவையான சான்றிதழ்களை நவம்பர் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வங்கிப் பிரிவில் வழங்க வேண்டும். இந்த கூடுதல் தகவல்களை ஓய்வூதியம் வழங்கு அலுவலகத்துக்கு வங்கி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

என்னென்ன தகவல்கள்?

இது ஒருமுறை செய்யப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காத விவரங்களை, அவை கிடைத்த பிறகு சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் கூடுதல் தகவல்களை கொடுப்பது பற்றிய தகவல்களை பத்திரிகை செய்தியாக கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் வெளியிட வேண்டும்.

கூடுதல் தகவல்கள் பற்றிய விவரங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், வங்கிகளின் அறிவிப்புப் பலகையில் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 2, 2015

Indian-origin Singaporean nurse to be given achievement award



An Indian-origin nurse here will receive an international achievement award for her work in the healthcare sector of women and refugees, becoming the first Singaporean to get the prestigious biennial prize.

Dr Subadhra Devi Rai, a nurse and a senior lecturer at the School of Health Sciences (Nursing) at Nanyang Polytechnic in Singapore, will be bestowed by this year's International Achievement Award by the Florence Nightingale International Foundation.

Rai was selected as the recipient of the award for her outstanding work in the health of women and refugees.The International Achievement Award will be presented to Rai at a conference in Seoul on June 21.

FNIF is the International Council of Nurses (ICN) premier foundation. Its purpose is to support the advancement of nursing education, research and services.

The award recognises Rai's work in the health of women and refugees, and is the first time a Singaporean will be awarded the biennial award since its introduction in 1999.

Speaking to the media today, Rai said she felt "honoured and humbled to receive this recognition" and hopes that this award sends a "powerful message to other nurses to serve beyond the healthcare setting".

"Without a strong understanding and awareness of the people you are helping, there would be a mismatch between the support rendered and what is needed," Rai was quoted as saying by the local media.

Her area of interest focuses on issues such as gender-based violence, sexual health and the reintegration of refugees. Over the years, she had been volunteering and working with different organisations to help and raise policy awareness for these issues.

The NYP lecturer decided to go into teaching when she realised that the younger generation is the key to a better nursing industry in the future.

"Being in this position allows me to inculcate in my students what is it actually is to be a nurse," she said, adding that she wants to initiate change in the nursing profession by instilling pride of being a nurse in students.

Rai hopes that with this award, she can inspire her colleagues to aspire more, and that the "sky's the limit".

HRD Ministry rejects media report of UGC being scrapped

The Ministry of Human Resource Development (MHRD) has rejected media reports of the University Grants Commission (UGC) being scrapped.

Describing the news report as incorrect and uncalled for, the ministry in a statement said on Wednesday that it has constituted a committee of experienced and credible academicians to recommend the restructuring and strengthening of the UGC for attaining even better performance to meet the desired objective.

It said that the committee headed by Dr. Hari Gautam has submitted their report to the Secretary (Higher Education).

It said that the report is yet to be examined.

It said that the mandate given to the committee was to analyse, review and recommend to the ministry, the architecture required for the restructuring process.

"No such decision on the UGC getting scrapped has been taken and the recommendations are yet to be understood and analysed before any decision is taken in the matter. The UGC has been created by an Act of the Parliament and cannot be unilaterally scrapped," the MHRD statement said.


பணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்!



வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விதம்விதமாக ஏமாற்றும் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இதுமாதிரியான ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கி, தப்பித்து வந்திருக்கிறார் சூரியகுமார். இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவத்தை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!

“படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காத காரணத்தினால் நம்பிக்கை இழந்திருந்த எனக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்புக் கான அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது. நம்பகத்தன்மையான வேலைவாய்ப்பு வலைதளத்தில் விளம்பரம் வந்திருந்ததால், அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு பிரபல தொழிற்சாலையில் மனிதவள மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். எனக்கு வேலை கிடைக்க உதவுவதாகவும், வேலை கிடைத்தப்பின் நான் அவருக்கு 2 லட்சம் ருபாய்த் தரும்படியும் கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடி மிகவும் அவதிப் பட்டதால், பணம் கொடுத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாதபோதும் வேறு வழி இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.



இரண்டு லட்சம் பணம்!

அவர் சொன்ன பெயரில் நிஜமாகவே ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே, ஒரு மின்னஞ்சலில் இருந்து என்னைத் தொடர்புகொண்டனர். தொலைபேசி மூலம் இன்டர்வியூ நடத்தப்பட்டது. அந்த இன்டர்வியூவிலேயே துறை சார்ந்த கேள்விகளை கேட்டு என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.

சில நாள் கழித்து, நான் அந்த இன்டர்வியூவில் தேர்ச்சியும் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், நேரில் பார்க்காமல் வேலைக்கான அப்பாயின் மென்ட் ஆர்டரை தரமுடியாது என்பதால் என்னை டெல்லிக்கு அழைத்தனர். டெல்லியில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் பேசியபடி பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர்.

கடைசி நேரத்தில்..!

டெல்லியில் அந்த நிறுவனத்தின் வாசலில் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நிறுவனத்துக்குள் என்னை வரச் சொல்லாமல், வெளியில் சந்தித்ததால் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் வழங்குவதாகச் சொல்லியிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் என் மின்னஞ்சலுக்கு வந்தது. பேசியபடி பணத்தைத் தர டெல்லியிலுள்ள ஒரு இடத்துக்கு வரும்படி அழைத்தனர். என் சந்தேகம் வலுவடைந்ததால், முதல் வேலையாக செல்போனை அணைத்து விட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.

சிக்கியவர்கள் பலர்!

ஒரு மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தகவலின்படி, அந்த மோசடிக் கும்பல் 12 பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளதாகச் செய்தி கிடைத்தது. டெல்லியில் என்னைச் சந்தித்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அந்த மோசடிக் கும்பலைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டார். அவரும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அதே மோசடிக் கும்பலிடம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அதே மோசடிக் கும்பல் தொடர்ந்து இதேபோன்ற நூதன மோசடி வேலைகளில் ஈடுபட்டு வேலை தேடும் பட்டதாரி களின் வாழ்கையில் விளையாடி வருகின்றனர். வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இதுமாதிரியான மோசடிக் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் இருந்து பட்டதாரிகளைக் காக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் முடித்தார் சூரியகுமார்.



இளைஞர்கள் கவனிக்க!

இதுபோன்ற நூதனமான வேலை மோசடியில் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள ஆலோசகர் கே.ஜாபர் அலியிடம் பேசினோம்.

“ஒரு இளைஞன் பணம் கொடுத்து வேலை வாங்க முடிவெடுத்துவிட்டால், அவன் ஏமாறத் தயாராகிவிட்டான் என்று அர்த்தம். தனது திறமையை, அறிவைக் கொண்டுதான் வேலையைத் தனதாக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற காரியங்களில் இளைஞர்கள் இறங்கவே கூடாது.

இன்றைய இளைஞர்கள் பலவிதமான நூதன வேலை மோசடிகளைக் கவனிக்க வேண்டும்.

ஏமாற்றும் விதம்!

1. இல்லாத நிறுவனம், அங்கு வேலை செய்யாதவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

2. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள், இல்லாத வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

3. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இவர்கள் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்கள் சொன்னபடி வேலையையும் வாங்கித் தருவார்கள். ஆனால், அந்த வேலையானது ஓரிரு மாதங்கள்கூட இருக்காது அல்லது அங்கு ஓரிரு மாதங்கள்கூட ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.

4. பணம் வாங்கிப் பயிற்சி தந்துவிட்டு, அதன்பிறகு வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

5. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர் கள் வேலை கொடுப்பதாகத் தரும் வாக்குறுதி. இவர்கள், “நாங்கள் புதிதாக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. மீதித் தொகையை இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக வேலை நிரந்தரமாகும்” என்பார்கள். இவர்களின் ஒரேநோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்.

முதலில், எந்தவொரு நிறுவனமும் ஆட்களை நேரில் பார்க்காமல் தொலைபேசி இன்டர்வியூ எடுத்து பணியாளர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அதுபோல, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் மையம் அமைத்து அங்குதான் தேர்வு செய்வார் களே தவிர, பொது இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து இன்டர்வியூ நடத்த மாட்டார்கள். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் எம்பிஏ முடிக்கும் மாணவர்களில் 15% பேர் மட்டுமே உடனடியாக வேலை செய்வதற்குத் தகுதியானவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மீதி இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குத்தான் ஏமாற்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை!

வேலைக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களில் பெரும்பாலும் சமூகத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தால், ஏதேனும் ஒருவேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, பணம் கொடுத்தாவது பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முனைவதுதான். இன்றைய நிலையில் தரமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் திறமையாளனை தவறவிடுவதே கிடையாது. அதே சமயம், தானாகத் தேடிப் போய்த் திறமையாளர் களை அழைத்து வருவதும் கிடையாது. அதனால், அதிக சம்பளம், பிரபலமான நிறுவனம் என்று மட்டும் வேலை தேடாமல் ஆரம்பத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு சில ஆண்டு களுக்குப் பிறகு அதிக சம்பளத்துக்காக வேலையை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இதை விடுத்து பணத்தைக் கொடுத்து வேலைக்குச் சேர முயற்சித்தால், வேலையில்லா பட்டதாரியாகவே நிற்கவேண்டும். தவிர, பணத்தைத் தந்து வேலை வாங்கும் பணியாளரிடம் சுயமதிப்பு என்பதும், தன்னம்பிக்கை என்பதும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில் வேலையிலாகட்டும், பொது வாழ்க்கையில் ஆகட்டும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளவே முடியாது” என்றார்.

மோசடி நிறுவனங்கள் தீவிரமாக வலைவிரித்து அலையும் இந்தக் காலத்தில் எச்சரிக்கை அவசியம் இளைஞர்களே!

விசாரித்த பிறகு களமிறங்குங்கள்!

வேலை வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி நிறுவனங்கள் பற்றி சைபர் கிரைம் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இன்றைய நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.இதைக் களைவதற்கான நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதுமாதிரியான மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல், இன்றைய இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து வேலைக்குச் செல்லலாம் என்கிற மனநிலைக்கு வரவேண்டாம்.

இன்றைய நிலையில் பேருந்துகள், ரயில் வண்டிகள் எனப் பல இடங்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்க்கிறோம். இதைப் பார்த்ததும் நாம் நம்பிவிடுகிறோமா என்ன? அதுபோல, நம்பகத்தன்மையான வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்த்தாலும் அதுகுறித்து முழுமையாக விசாரித்து, அதில் உண்மைத்தன்மை இருக்கும்போது அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வேலைகான வாய்ப்புகளை அந்தந்த நிறுவனங்களின் வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்களா என்பதையும் பார்ப்பது அவசியமாகும். மேலும், வேலை மோசடி குறித்த புகார்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள மத்திய க்ரைம் குற்றப்பிரிவு கிளையை அணுகலாம்” என்றனர்.

செ.கார்த்திகேயன்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக ஒப்பாரி போராட்டம்: இந்து அமைப்புகள் முடிவு!

cinema.vikatan.com

சென்னை: தி.க. சார்பில் நடக்கவிருக்கும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அம்பேத்கர் பிறந்த நாளான 14ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்திருந்தார். இதில் கலந்து கொண்டு தாலியை அகற்ற விரும்பும் பெண்கள் செல்போன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள செல்போன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி இந்து அமைப்புகளின் பெண்களை திரட்டி, நூதன முறையில் எதிர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி, பெரியார் திடல் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'தாலி அகற்றுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் சட்டம் இயற்றக் கூடாது!'

cinema.vikatan.com

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அண்மையில் தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த வாரம் இயற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்றாக, வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியையும், மாட்டுக்கறி விருந்தையும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் திராவிடர் கழகம் நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருசிலரிடம் நாம் கருத்து கேட்டோம்.


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ''நாடு எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெண்களும் பலவழிகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வறுமை, வேலை வாய்ப்பு என நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. தாலியை அகற்றுபவர்களைப் பிற்போக்குவாதிகள் என்றே சொல்வேன். பொதுவாக இந்து மதத்தில், தாலி உணர்வோடும், உயிரோடும் மதிக்கப்படுகிறது என்பது ஒரு மருத்துவராக எனக்கு நன்றாகத் தெரியும். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தது முதல் இன்று ஹைடெக் மருத்துவம் வரை என் அனுபவத்தில் பலரையும் பார்த்திருக்கிறேன்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களைத் தாலியை கழட்டச் சொன்னால்கூட அவர்கள், ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டே பின்புதான், தாலியைக் கழட்டித் தருகிறார்கள். மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது யாரும் சொல்லிக்கொடுத்தோ இத்தகைய செயலை எவரும் செய்யமாட்டார்கள். பெண்களுக்கு தாலியின் நம்பிக்கை அவர்களுடைய உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கிறது. பெண்கள் இனத்தை, உணர்வை யாரும் இழிவுபடுத்த முடியாது. இத்தகைய செயல் தமிழ்ப் பெண்களுக்கு அவசியமில்லாத ஒன்று. இயற்கையைப் புறந்தள்ளுவதோடு, இதற்காக தமிழ் மக்கள் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.



கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.ராஜா,''என்னைப் பொறுத்தவரை தாலி அகற்றுவது என்பது வேறு அர்த்தத்தைக் கொண்டது. உணவு முறை, பழக்கவழக்கம், சீதோஷ்ண நிலை போன்றவற்றால் ஒவ்வொரு நாட்டிலும் உணவு வகைகள் வேறுபடுகின்றன. எந்த ஒரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட உணவைத்தான் உண்ணவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுவது கிடையாது. ராஜஸ்தானில் ஒட்டகப்பால் குடிக்கிறான். தமிழகத்தில் பசு, எருமை போன்றவற்றின் பால் சாப்பிடுகிறான்.

நில அமைப்பு, தட்பவெப்பம், இயற்கைச் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு இது எல்லாம் பொருந்தாது. மாட்டு இறைச்சியை சிலர், தாழ்வாகவும் இழிவாகவும் நினைக்கிறார்கள். ஆனால் லண்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் மாட்டு இறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிலர், ஆட்டிறைச்சி, மாட்டு இறைச்சியை ஒதுக்கிவிட்டு கோழிக்கறியைச் சாப்பிடுகின்றனர். சமூக உணர்வுகள் மாறி வருகிறபோதிலும் மத நம்பிக்கைகளை வைத்து கட்டாயப்படுத்தக் கூடாது. சட்டம் போட்டு இயற்றக் கூடாது'' என்றார்.

என்னதான் நாடுதான் முன்னேறினாலும், பெண்கள் புதுமையை விரும்பினாலும் இதுபோன்ற தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்பதே பொதுவான கருத்தாகும்.

- ஜெ.பிரகாஷ்

பற்றெல்லாம் பற்றல்ல...

By அ. அறிவுநம்பி

பற்று. இந்தச் சொல் மூன்றே எழுத்துகளால் உருவாகியிருக்கலாம். ஆனால், அது தரும் பொருள் வானளவு பெரியது. இச்சொல்லினுடைய அடர்த்தியான அர்த்தம் புரியாததால்தான் மிகமிகச் சாதாரணமான ஆசை, விருப்பம், வேட்கை, தேவை, இச்சை, பிரியம் போன்றவற்றையும் பற்று எனத் தவறாகக் கருதுகின்றனர். கணவன் மனைவியிடம் காட்டும் அன்போ, பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் பாசமோ, மாணவர் தம் ஆசிரியரிடம் காட்டும் குருபக்தியோ பற்றாகாது.

உண்மையான பற்று எது? இலக்கு ஒன்றைப் பற்றிக் கொண்டு தன்னலம் மறந்து, தன் சுற்றம் துறந்து, தன்னையே மறந்து நிற்பதுவே.

மனிதர்களின் பற்றுகள் பலவகையாக அமையக்கூடும். அவற்றுள் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவை முதன்மையானவை. அதனாலேதான் பாரதி "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்று நிரல்படுத்திப் பாடம் தந்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பற்றுகள் பொலிவுடன், அணுக்க உணர்வுடன் மேற்கொள்ளப் பெற்றன.

எங்கோ, கண்காணாத வட்டாரத்தில் தன் இன மக்கள் அன்றாடம் காயம்படுகின்றனர் எனக் கேட்டறிந்தவுடன் கரும்புத் தோட்டத்துத் தமிழர்க்காகப் பாப் புனைந்தவன் பாரதி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' என்பது வள்ளுவவழி.

தன் இனமக்களின் அழிவுகளைக் கண்டு இனப்பற்று மீதூரத் தீக்குளித்தவர்களை எப்படிப் போற்றுவது? இன்னும் ஒரு படி மேலே போய்த் "தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இவ்வுலகை அழிக்கவும் முன்வருவோம்' என்ற முழக்கம் எழுந்தது இந்த மண்ணில்தானே!

தன் சுகம், குடும்ப வளம், உறவினர் நலம் போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டு விடுதலைப் பற்றைத் தன் மனம், மொழி, மெய் எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்ட தியாகிகள் பலர்.

வருமானந்தரும் வழக்குரைஞர் பதவியை உதறிவிட்டு மக்கள் நலனுக்காகச் சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன் போன்றோரின் அருஞ்செயல்கள் அவர்களின் தேசப்பற்றை எடுத்தோதும்.

காலம் அவ்வப்போது மாற்றங்களை தரும். அவை நல்ல மாற்றங்களாக அமையின், உலகிற்குப் பயன் கிடைக்கும். மாறிப்போனால் மக்களின் வாழ்வியல் நெறி சிதிலமடையும். இந்தச் சேதாரம் எல்லாக் கூறுகளிலும் ஏற்படும். இன்றைய பற்றுகளை உற்றுநோக்கினால் பலவற்றை இனங்காண முடியும்.

லால் பகதூர் சாத்திரி அமைச்சராக ஆகும் முன் கட்சிப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். கட்சிக் கூட்டங்களில் அவர் பேசுவதற்காக அந்தக் காலத்தில் அவருக்கு வழங்கப்பெற்ற மாத ஊதியம் ஐம்பது ரூபாய்.

ஒருமுறை மாதத்தின் கடைசி நாள்களில் திடீர்ச் செலவு ஏற்பட்டு அவர் திண்டாடியபோது, அவருடைய மனைவி ஐந்து ரூபாயை அவரிடம் நீட்டி, "கடந்த மாதம் மிகவும்

கடினப்பட்டு மாதச் சம்பளத்தில் இந்த ரூபாயை மிச்சம் பிடித்தேன்' என்று கூறியபோது மனைவியை அவர் பாராட்ட முன் வரவில்லை.

உடனடியாக "என்னுடைய மாதச் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் நாற்பத்தைந்து ரூபாயாக மாற்றிக் கொள்ளுங்கள்' எனக் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பினார். தன் இல்ல வசதியைவிடக் கட்சிப் பற்றைக் கருதிய சிலர் வாழ்ந்தனர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.

இன்றும் அரசியலில் ஒரு பற்று உண்டு. அதன்பெயர் நாற்காலிப் பற்று. இதையடைய அரசியல்வாதிகள் கொள்கைகளைக் காற்றில் விடுகின்றனர். அரசியல் நெறிகளை அடமானம் வைக்கின்றனர். போற்றிக்கொண்டிருந்த கட்சித் தலைமைகளைத் தூற்றி நிற்கின்றனர்.

"இலக்கு' என்பது "வருமானம் தரும் பதவி' என்பதால் பகையை நட்பாக்கிக் கொள்ளவும், நட்பைப் பகையாக்கிக் கொள்ளவும், இவர்கள் தயங்குவதேயில்லை. இது சுயநலப் பற்றாகும்.

அரசியல் உலகைப் போலவே பிற உலகிலும் சில உண்டு. நடிகர், நடிகை, விளையாட்டு வீரர் போன்றாரின் திறமைகளைப் புகழுவது என்பது சரி. அவர்களை இறைவன் நிலைக்கு உயர்த்துவதும் கோயில் கட்டுவதும் எப்படி உவப்பானதாகும்? உறுதியற்றவை இப்பற்றுகள்.

எப்படி ஒரு நடிகரின் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் முன்னொட்டாக்கும் இரசிகன் அந்த நடிகரின் "கட் அவுட்' எனப்படும் ஓட்டுமர உருவுக்குப் பாலாபிடேகம் செய்கிறான். அந்த நடிகரின் படம் சரியாக ஓடவில்லை என்றால் வேறொரு நடிகரின் பெயரைச் சூட்டிக் கொள்வதும், சுவரொட்டி ஒட்டுவதும் என அந்த இரசிகன் மாறிக் கொள்கிறான்.

ஒரே உணவகத்தில் உணவு உண்டு வந்த ஒருவர் அதே ஊரில் புதியதாக வந்த கடையில் நல்ல உணவு கிடைக்கும்போது கடையை மாற்றிக் கொள்ளுவதைப் போன்றது இது. இது நிலையற்ற பற்று.

இன்றைக்குக் கட்சி மாறுபவர்களின் கொடி வண்ணம், துண்டு வண்ணம், சட்டை வண்ணங்களை அலசினால் அவர்களின் சாயம் வெளுத்துவிடும். தனக்குப் பிடிக்காத ஒரு குறிப்பிட்டவண்ண ஆடையைக் கட்சி அல்லது இயக்கம் அல்லது அமைப்பின் கட்டுப்பாட்டுக்காக அணிபவர்கள் பலர். வேறு வழியில்லாமல் அந்த வண்ணத் துணிகளை அவர்கள் அணிய வேண்டியதாகிறது. மனம் ஒன்றாப் பற்று இது.

தந்தை ஒருவர் தன் மகனையோ மகளையோ நன்கு படிக்கவைப்பதும், நல்லவிதமாக வளர்த்து வருவதும் பற்றாகா. அவை அவரின் கடமைகள். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' என்பது சங்கப் பா வரி.

முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்பித் தந்தையை இழந்த ஒருத்தி இரண்டாம் நாள் கணவனை அனுப்பி அவனையும் இழக்கிறாள். கவலையில் சிக்காமல் அந்த மங்கை அடுத்த கட்டமாகத் தனக்குத் துணையாக எஞ்சியுள்ள மகனையும் மூன்றாம் நாள் போர்க் களத்துக்கு அனுப்பும்போதுதான் நாட்டின் மீதான அவளின் பற்று வெளிப்படுகிறது.

அண்மையில் தென் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது. மணமகனின் தம்பி அயல் நாட்டில் பணிபுரிகிறார். அவரிடம் வயது

முதிர்ந்த உறவினர் ஒருவர் "நம்ம நாட்டுக்கு எப்பப்பா வருவ படிச்ச படிப்புக்கேத்த வேலை இங்கயும் கெடைக்குமே' எனக் கேட்டார். "ஒங்க நாட்டைக் குப்பைல போடுங்க' இது

அந்த இளைஞரின் விடை.

பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் குடும்ப நண்பர் அந்த இளைஞர் முன்பாக "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்காக நீ என்ன செய்தாய்' என்று யோசி எனக் கென்னடி சொல்லியிருக்கிறார் என ஒரு கருத்தைப் பரிமாறினார்.

இதற்கு அந்த இளைஞர் தந்த பதிலிது: "இந்த நாடு எனக்கு எதுவும் செய்யவில்லை நானும் அதற்கு எதுவும் செய்யவில்லை. எனவே இதுக்கும் அதுக்கும் சரியாய்ப் போயிற்று'.

வெளிநாடுகளில் பணிபெற்றுக் குடும்பம் நடத்துபவர்களில் பலபேர் தங்கள் மகளின் திருமணத்திற்கு வரன்தேடும்போது மட்டும் தாய் நாட்டைத் திரும்பிப் பார்க்கின்றனர்.

அதே வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதே நடப்பியல்.

இங்கே வருந்தத்தக்க செய்தி எதுவென்றால் அவர்களின் மகள்கள் அந்தந்த அயல்நாடுகளிலே வாழ்க்கைபெற நினைக்கிறார்களே தவிரத் தாய் நாட்டிற்குத் திரும்ப ஆசைப்படவில்லை. பூர்வீகம், பாரம்பரியம், சொந்த ஊர், உறவின் முறை என்ற சொற்கள் யாவும் இன்று செல்லாக் காசுகளாக, உள்ளீடற்றவையாகக் காணப்படுகின்றன. திசை மாறிய பற்று இது.

பக்தி உலகிலும் வேரற்ற பற்றுகள் தென்படுகின்றன. இறைவனின் திருவடிப் பேறே தன் பற்று என முடிவு செய்தவர் காரைக்காலம்மையார். இதற்காகத் தன் இளமைக் கோலத்தைத் துறந்தவர். வாழ்வு நலத்தை இழந்தவர். பேயுருவாக அமர்ந்து ஈசனில் கரைந்தவர்.

இன்றைய நிலைக்கு வரலாம். மூன்று பெரிய ஆலயங்களில் கள ஆய்வு செய்தபோது ஆய்ந்து பெற்ற முடிவுகள் இங்கே பதிவாகின்றன. கோயிலுக்கு வருபவர்களில் அறுபது விழுக்காட்டினர் மட்டுமே மெய்யன்பர்கள். இருபது விழுக்காட்டினர் கோயிலுக்கு வருவதை ஒரு பகட்டு நாகரிகமாகக் கொண்டவர்கள்.

குழுக்களாக வருபவர்களில் பாதிப்பேர் பிறருக்குத் துணையாக வந்தவர்கள் என்பதையும் இதிலடக்க வேண்டும். மீதி இருபது விழுக்காட்டினர் பொய்யான பக்தியால் ஆலயத்திற்கு வருவோர். இது போலிப்பற்று.

நின்று உயரத்துடிக்கும் ஒரு முல்லைக்கொடி காற்றில் அலைந்து தவிக்கும்போது பக்கத்தில் இருக்கும் கள்ளிச்செடியில்கூடப் பற்றிப் படரும். அறிவுடைய மனிதர்கள் அப்படிச் செய்யலாமா? இவ்வுலகில் இருவகைப் பற்றுகள் உள.

முதலாவது, மெய்யை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு, தூய்மை நிறைந்ததாக, உண்மை மாறாமல் அமையும் முறையானபற்று. இது குன்றின் மீது செதுக்கப்பட்ட உருவங்களைப் போன்றது. காற்றின், மழையின், வெயிலின் வீச்சுகளால் அவை கலங்குவதில்லை.

இரண்டாவது, பொய்யை அடிநாதமாகக் கொண்டு, போலித்தனத்தை மூலமாக்கிக் கொள்ளும் விளம்பரப் பற்றுகள். இவை நீர்க்குமிழிகள் போன்றவை. இவை பார்க்க அழகாகத் தோன்றும் அடுக்கடுக்காய் வரும். ஆனால், நிலைப்புத் தன்மை இல்லாதவை.

இந்த இருவகையில் எந்தப் பற்றைப் பற்றிக் கொள்ளப் போகிறது உங்கள் பற்று?

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...