Tuesday, April 28, 2015

வெளிநாட்டில் பணிக்குச் செல்லும் நர்சுகள் உடனடியாக பெயர் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகாரத்துறை அமைச்சகத்தின் 8–4–15 தேதியிட்ட ஆணையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்களான தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் கேரள அரசின் நோர்க்கா ரூட்ஸ் மற்றும் ஓவர்சீஸ் டெவலப்மெண்ட் அண்ட் எம்ப்ளாய்மெண்ட் பிரமோஷன் கன்சல்ட்டண்ட் ஆகிய அரசு நிறுவனங்கள் மட்டும் செவிலியர்களை ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பக்ரைன், மலேசியா, லிபியா, ஜோர்டான், ஏமன், சூடான், ஆப்கனிஸ்தான்,இந்தோனேசியா, சிரியா, லெபனான், தாய்லாந்து மற்றும் ஈராக் போன்ற 18 நாடுகளுக்கு 30–4–15 முதல் வேலைவாய்ப்பினை அளிக்கலாம் என்று ஆணையிட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் செவிலியர்கள், தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உடனடியாகப் பதிவு செய்து எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் செவிலியர்களுக்கான பதிவு கட்டண விவரத்தை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் விவரங்களுக்கு, 044–22502267/ 22505886/08220634389 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

7243 நர்ஸ் பணிகள்

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் 6 ஆயிரத்து 792 இடங்கள் பெண் விண்ணப்பதாரர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு 1-7-15 தேதியில் 58 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜெனரல் நர்ஸ் (ஆண், பெண்) 3 ஆண்டு படிப்பு படித்தவர்கள், நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு நர்சஸ் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சிலில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.சி.-ஏ, எஸ்.டி. பிரிவினர் ரூ.300-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, 11-5-15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

சமையல் கியாஸ் வழிகாட்டட்டும்!

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். கப்பலில் பெண் வருகிறது என்று ஒருவன் சொன்னானாம். உடனே, அதை கேட்டுக்கொண்டிருந்த ஒருவன், ‘‘அப்படியா!, அப்படியானால் எனக்கு ஒன்று, என் சித்தப்பாவுக்கு ஒன்று’’ என்றானாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 பவுன் கொடுக்க வேண்டும் என்று முதலாமவன் சொன்னபோது, ‘‘நான் சின்ன பையன் எனக்கு தேவையில்லை. எங்கள் சித்தப்பா வயதானவர், அவருக்கும் தேவையில்லை’’ என்றானாம். அதுபோலத்தான், பலர் மானிய விலையில் கிடைக்கிறது என்றால் தங்கள் தேவைக்கு போக அதிகமாக வாங்கி, வெளிமார்க்கெட்டில் கூடுதல் பணத்திற்கு விற்கிறார்கள். சமையல் கியாஸ், உரம், பெட்ரோல்–டீசல் போன்ற எரிபொருள் ஆகியவற்றிற்கு மானியம் கொடுக்கவே கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடியை செலவழித்துள்ளது. இவ்வளவு மானியத்தை தேவையில்லாதவர்களுக்கும் போய் சேருவதை தடுத்தால், எவ்வளவோ சாலைகள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியுமே என்ற எண்ணம் நல்லோர் மனதில் எதிரொலிக்கிறது.

நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றவுடன், இவ்வாறு நெல்லுக்கு இரைக்கும் தண்ணீர் புல்லுக்கும் பாய்வதை நிறுத்தும் வகையில், தேவையற்ற மானியத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஏறத்தாழ 15 கோடி சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வீட்டு இணைப்புகள் எல்லாம் வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட வேண்டும். ஒரு சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியத்தொகையான 200 ரூபாய் நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் வகையில் ‘பகல்’ என்று அழைக்கப்படும் நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1–ந்தேதி நாட்டிலுள்ள 676 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்த எண்ணிக்கையில் 3 கோடி இணைப்புகளுக்கு மேல் குறைந்துவிட்டது. அதாவது, இவைகள் எல்லாம் போலியாக பெற்ற இணைப்புகள் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. இதன் காரணமாக வணிக ரீதியான கூடுதல் விலைக்கு விற்கப்படும் சிலிண்டரின் விற்பனை உயர்ந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களுக்கு அரசு மானியம் கிடையாது. இந்த திட்டத்தின் மூலமாக போலி இணைப்புகளை ஒழிப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம் வழங்குவதில் அடைந்த வெற்றியை தொடர்ந்து ரேஷன் பொருட்களுக்கும், மண்எண்ணைகும் அளிக்கப்படும் மானியத்தையும், நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்ற அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இதை உடனடியாக அரசு நிறைவேற்றினால், இதிலும் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மிச்சமாகும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். எனவே, அரசு இதில் தாமதமே இல்லாமல் அனைத்து மானியங்களையும் அதுபோல 100 நாள் வேலைத்திட்டம் போன்ற நலத்திட்டங்களின் பலன்களையும் பயனாளிகளுக்கு நேரடி வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும். மேலும், பிரதமரின் வேண்டுகோளின்படி, வசதி படைத்தவர்கள் மானியம் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்வந்தால், அதிலும் ஏறத்தாழ ஒரு கோடி இணைப்புகள் உடனடியாக மானிய வலையில் இருந்து வெளியே வர முடியும். இதற்கு அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும், செல்வந்தர்களும் முன்னோடியாக வழிகாட்ட வேண்டும்.

Monday, April 27, 2015

முகங்கள்: இரும்பு மனுஷிகள்


ஆண்டாண்டு காலமாகப் பெண்களை மென்மையுடன் தொடர்புபடுத்திப் பேசியே அவர்களின் திறமைகளை மழுங்கடித்துவிட்டனர். ஆனால் இதுபோன்ற கற்பிதங்களுக்குள் தொலைந்துபோகாமல் தனித்திறமையுடன் தடம் பதிக்கும் பெண்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. குதிரை மீதேறிப் போரிட்ட வீரப் பெண்களில் தொடங்கி, மங்கள்யான் திட்டப் பணிகளில் பங்களித்த பெண்கள் குழுவினர் வரை எத்தனையோ பேரை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உடலுழைப்பிலும் ஆணுக்கு நிகராகக் களமிறங்கும் பெண்கள் ஏராளம்.

வலிமையின் வழியில்

திண்டுக்கல் நேருஜி நகரைச் சேர்ந்த முருகம்மாள், பாப்பாத்தி, தனலட்சுமி மூவரும், ஆண்களுக்கு மட்டுமே சில வேலைகள் சாத்தியம் என்ற பொதுவான நினைப்பை மாற்றிக்காட்டியிருக்கிறார்கள். குழம்பை அடுப்பிலேற்றி இறக்கிவைப்பது போலத்தான் இரும்பைக் காய்ச்சி, உருக்கி வார்த்தெடுப்பதும் என்று சொல்லும் இவர்கள், வயோதிகத்தை மீறிய வலிமையுடன் இரும்புப் பட்டறையில் வேலைசெய்கிறார்கள். இவர்களின் உழைப்பில் மலர்ந்திருக்கிறது அந்த மகளிர் மட்டும் இரும்புப் பட்டறை. இவர்களே இரும்பை உருக்கி மண்வெட்டி, கடப்பாரை, சுத்தியல், அரிவாள், கூந்தளம், பிக்காச்சி, உளி உள்ளிட்ட பல்வேறு வேளாண், பண்ணை, கட்டிடக் கருவிகளைச் செய்து கொடுக்கின்றனர்.

பட்டறையில் பாடுபடுவது இந்தப் பெண்களின் வேலை. இவர்கள் தயாரிக்கும் கருவிகளை வெளியூர்களில் விற்பனை செய்வது இவர்கள் வீட்டு ஆண்களின் வேலை. தயாரிக்கப்படுகிற கருவிகளைத் தகுந்த வாடிக்கையாளர்களைத் தேடிப்பிடித்துச் சந்தைப்படுத்துவதையும் அவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். வெளியூருக்குப் போகாத நாட்களில் மட்டும் பட்டறை வேலையில் ஈடுபடுகின்றனர்.

நெஞ்சுரமே கவசம்

இந்தப் பெண்கள் அதிக வெப்பமும் வெளிச்சமும் கண்களைப் பாதிக்கும் என்ற தற்காப்பு உணர்வுகூட இல்லாமல் தீப்பொறிக்கு நடுவே அமர்ந்து வேலை செய்கிறார்கள். தனலட்சுமி பட்டறையில் நெருப்பைப் பற்றவைக்கிறார். பழுக்கக் காய்ச்சிய கடப்பாரையின் முனையைக் கூர்மையாக்க முருகம்மாளும் பாப்பாத்தியும் மாறி மாறிச் சம்மட்டியால் அடித்துக் கெட்டிப்படுத்துகின்றனர். கடின உழைப்பு மட்டுமல்ல இவர்களது பலம். வடிவமைப்பு, கருவிகளின் கூர்மை போன்ற தொழில்நுட்பத்தையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

உழைப்பே மகிழ்ச்சி

இந்தப் பெண்கள் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டாலும், இவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்கின்றனர்.

“இந்தப் பட்டறை வேலையைச் செய்யணும்னு நாங்க அவங்களை வற்புறுத்தினதில்லை. அதனால எங்களுக்கு அப்புறம், இந்த இரும்புப் பட்டறைத் தொழிலைச் செய்ய ஆளில்லை” என்கின்றனர்.

பட்டறை நெருப்பின் அளவைக் கூட்டியபடியே பேசுகிறார் முருகம்மாள்.

“பரம்பரை பரம்பரையா எங்க முன்னோருங்க இந்தத் தொழிலைத்தான் செய்தாங்க. அவங்களைப் பார்த்து வளர்ந்ததால் இந்த வேலை எங்களுக்குப் பழகிடுச்சு. சின்ன வயசுல இருந்தே வேலை செஞ்சு பழகிட்டதால உடம்புக்கு எந்த அலுப்பும் தெரியாது. ஒரு நாள் முழுக்க வேலை பார்த்தா ஆளுக்கு 500 ரூபாய்ல இருந்து 1000 ரூபாய்வரை கிடைக்கும். அறுவடை, சாகுபடி காலத்தில் மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை செய்ய நிறைய பேர் வருவாங்க. மத்த நேரத்தில் பழுது பார்க்கற வேலைங்கதான் இருக்கும்” என்று சொல்லும் முருகம்மாள், சமீப காலமாகக் கட்டிட வேலை செய்கிறவர்களிடம் இருந்து அதிக அளவில் ஆர்டர் வருவதாகச் சொல்கிறார்.

“வேலை தர்றவங்களை நம்பித்தான் எங்க பொழைப்பு ஓடுது. இரும்பைவிட உருக்கு மூலம் செய்யும் கருவிகள் நீண்ட நாள் உழைக்கும். சிலர் கடையில் மண்வெட்டி வாங்கினாலும், எங்ககிட்டே வந்துதான் கெட்டியான பூண், கைப்பிடி போட்டுப்பாங்க” என்கிறார் முருகம்மாள். சம்மட்டி பிடித்து இவர்கள் ஓங்கி யடிக்கிற அடியில் இரும்பே நெகிழ்ந்துகொடுக்கும்போது வாழ்க்கை மட்டும் வசப்படாதா என்ன? தகிக்கும் நெருப்புக்கு நடுவே ஒளிரும் இந்தப் பெண்களின் புன்னகை அதை உறுதிப்படுத்துகிறது.

படங்கள்: தங்கரெத்தினம்.

மே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்!

னைத்து மாநில மக்களின் அடைக்கலமாக சென்னை விளங்குகிறது. வேலை வாய்ப்புகளுக்காகவும், கல்விக்காகவும் சொந்த மாநிலங்களையும், ஊர்களையும் விட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இதனால் சென்னைக்குப் பலமுகங்கள் இருக்கின்றன. சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

கடந்த 2013ல் 47,54,499 பேரும், 2014ல் 47,92,949 பேரும், 2015ல் 48,28,853 பேரும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,903 பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் சென்னையின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி மாறிக் கொண்டு இருக்கிறது.

நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் விரிவாக்கம் அடைந்து அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருகின்றன. குறுகிய இடங்களில் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. வேறுவழியில்லாததால் தேனீக்களைப் போல வாழ மக்களும் பழகி கொண்டனர். பல்வேறு காரணங்களுக்கான சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு எளிதில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பத்துக்கு பத்து அறை கொண்ட இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கூட ஆயிரக்கணக்கில் வாடகைக்கு விடப்படுகிறது.

சென்னையின் முக்கியப்பகுதிகளாக விளங்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், கிண்டி, ராயபேட்டை, கீழ்ப்பாக்கம், ஆலந்தூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வாடகையை கேட்டால் பலருக்கு தலைசுற்றுகிறது.

மேலும் வி.ஐ.பி. வசிக்கும் பகுதிகளான போயஸ்கார்டன், சாலிகிராம், கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்பு பகுதிகள், கோபாலபுரம், அடையாறு போர்ட்கிளப், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை.

மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு பெட் ரூம் கொண்ட வீடுகள் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகின்றன. சிங்கிள் பெட் ரூம் வீடுகள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. வாடகை ரூபாய் இடத்துக்கு இடம், வீட்டின் உரிமையாளர் விருப்பத்துக்கு ஏற்ப வேறுபடுகின்றன. அதோடு வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு என்று தனியாக எழுதப்படாத சட்டத்தையும் சில வீட்டின் உரிமையாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

திருமணமாகதவர்களுக்கு வாடகைக்கு வீடுகளை கொடுக்க பலர் முன்வருவதில்லை. அப்படியே கொடுத்தாலும் மற்றவர்களை விட கூடுதலாக ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்படுகிறது. இதை விட சில மேன்சன்களில் பகல் கொள்ளை நடக்கிறது. ஒரே அறையை இரண்டு, மூன்று அல்லது ஐந்து பேருக்கு கொடுத்து தலா மூவாயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அந்த அறைகளுக்கு வாடகை அதிகம், வசதிகள் குறைவு. காலை நீட்டியும், புரண்டு கூட படுக்க முடியாது என்கிறார்கள் அதில் தங்கியிருந்தவர்கள்.

வாடகை வீட்டுக்கான அட்வான்ஸ் வாங்கும் போது முகம் மலரும் வீட்டின் உரிமையாளர்கள் அதன்பிறகு தங்களது சுய ரூபங்களை சிலர் வெளிகாட்ட தொடங்கி விடுகிறார்கள். வாடகைக்கு விடும் போதே இரவு 10 மணிக்கு மேல் வரக்கூடாது. உறவினர்கள் இரவில் தங்க கூடாது. அதிகம் சப்தம் போட்டு பேசக் கூடாது. குடித்து விட்டு சண்டை போடக்கூடாது, தினமும் 2 அல்லது மூன்று குடம் தான் நல்ல தண்ணீர் பிடிக்கணும், தண்ணீரை அதிகமாக செலவழிக்க கூடாது என்று கண்டிசன் போடுவதுண்டு.

இதைத்தவிர மின்கட்டணம் ஒரு யூனிட் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர்களும் இருக்கிறார்கள். இது தவிர குடிவந்து 5 அல்லது 6 மாதங்களே ஆனாலும், அதற்கு முன் வருட கணக்கில் சேர்ந்த செப்டிக் டேங் கழிவுகளை எடுக்க ஆகும் செலவுகளையும் ஆயிரம், இரண்டாயிரம் என நமது தலையிலேயே கட்டி விடுகிறார்கள். இது தவிர வீட்டை காலி செய்யும்போதும் வீட்டு அட்வான்ஸ் தொகையில் அதே காரணத்திற்காக பணத்தை பிடித்தம் செய்துகொண்டுதான்  மீதியை தருகிறார்கள்.
இப்படி வீட்டின் உரிமையாளர்கள் போடும் அத்தனை கண்டிசன்களுக்கும் கட்டுப்பட்டு குடியிருந்தாலும் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டை காலி செய்ய சொல்வது சில உரிமையாளர்களின் வாடிக்கை. இதுவும் வாடகை உயர்வுக்குத்தான். அதுவும் மே மாதங்களில்தான் வாடகையை உயர்த்துவது வீட்டு உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். காரணம், பெற்றோர்கள் பள்ளியை மாற்றுவது மற்றும் அரசு ஊழியர்கள் டிரான்ஸ்பர்கள் மே மாதங்களில் நடக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே இருப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வைக்கின்றனர்.

வீட்டை காலி செய்தவுடன் அந்த வீடு, ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை கூடுதல் வாடகைக்கு விடப்படுகிறது. தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், கிண்டி, ஆலந்தூர், வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் புரோக்கர்கள் இல்லாமல் வாடகைக்கு வீடுகள் கொடுக்கப்படுவதில்லை. புரோக்கர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகையை கமிஷனாக கொடுக்க வேண்டும். இதுவும் வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

குறைந்த சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்கள்,  இடைநிலை ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. வீட்டின் வாடகை ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் உயர்த்தப்படுவதால் வீட்டின் தேவைகளுக்காக ஒருவரும் (கணவனும்), வாடகை கொடுப்பதற்காக இன்னொருவரும் (மனைவியும்) வேலைக்கு செல்ல வேண்டிய நிலை பல குடும்பங்களில் இருக்கின்றன. சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்றால் அங்கு வேலைவாய்ப்பு என்பதே இல்லை. இதனால் வேறுவழியின்றி சென்னையில் பல நடுத்தர வர்க்கங்கள் கௌரவத்துக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். போதிய வருவாய் இல்லாததால் கடன் சுமையிலும் பல குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றன.

வாடகை வீடுகளின் பிரச்னை இது என்றால் பெண்களுக்கான தனியார் விடுதிகளில் நிலைமை பரிதாபம். முன்பதிவு ரயில் பெட்டிகளில் இருப்பதை போல அடுக்கடுக்காக படுக்கைகள் (பெட்) ஒரே அறையில் ஏற்படுத்தப்பட்டு அதில் தங்க வேண்டியதுள்ளது. அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை பசிக்காக சாப்பிட்டு வாழ்நாளை பலர் கடத்தி வருகின்றனர். தனியாக வீடு எடுத்து தங்கினால் பாதுகாப்பில்லை என்பதற்காகவே பல பெண்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

வாடகைத்தாரருக்காக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா கூறுகையில், "வீடுகளை வாடகைக்கு விடப்படும் போது 11 மாதங்கள் மட்டுமே அக்ரிமென்ட் போட முடியும். ஒப்பந்தத்தில் அடிப்படை உரிமைகள் மீறாமல் இருக்க வேண்டும். ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்க கூடாது. மூன்று மாத காலஅவகாசம் வீட்டின் உரிமையாளர், வாடகைதாரர் கொடுக்க வேண்டும். மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது. இதை மீறும் வீட்டின் உரிமையாளரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி பெறலாம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

Kerala to block nurses recruited by private agencies from May 1

Khaleej Times
The reports said that the private agents were recruiting nurses to several countries in the Middle East by taking huge commission.


Trivandrum — The government of Kerala has decided not to allow nurses recruited by private agencies to fly abroad from May 1.

A decision in this regard was taken by the Non-Resident Keralites Affairs Department in the wake of reports that several private agencies were recruiting nurses overlooking the ban imposed by the federal government on recruitment of nurses by private agencies from next month.

The reports said that the private agents were recruiting nurses to several countries in the Middle East by taking huge commission. Nurses aspiring for jobs in Kuwait are asked to pay from Rs2 million to Rs2.5million. Reports said many nurses had given the money and were being interviewed in different parts of the country.

The private agencies are canvassing nurses saying that they may find it difficult to get the selection after the government agencies take over the recruitment. They claimed that they had got permission from the protector of emigrants to recruit nurses.

However, reports said that the ministry of external affairs had directed PoEs to cancel permission if any they have given to private agencies for recruiting the nurses to foreign countries. The order signed by deputy secretary Kshijit Mohan was sent to the PoEs on April 20. Non-Resident Keralites Affairs Minister K C Joseph said that the propaganda by the private agencies was aimed at fleecing the nurses.

He said that state the government will not allow such nurses to leave the country. The federal government has brought emigration of nurses to 18 countries under ECR (immigration clearance required) category following the ban on recruitment by private agencies. These countries include UAE, Saudi Arabia, Kuwait, Oman, Bahrain, Iraq, Yemen, Jordan, Syria, Iraq, Malaysia and Thailand.

The minister said that the two Kerala government agencies, Norka Roots and Overseas Development Employment Promotion Council, that have been authorized by the federal government to recruit nurses were all set to begin the recruitments from May first week.

The state government is planning to make the recruitment of nurses by the two agencies free of cost. State Labour Minister Shibu Baby John said that the Kuwait government had agreed to make employers pay the recruitment charge. The suggestion was put forth by a team of senior officials of the two agencies that visited Kuwait recently to finalise the modalities of the recruitment. The foreign employers who wish to recruit nurses from India will have to register through the country’s e-migrate system.

India bans overseas recruitment of nurses by private agencies Daniel George, TNN | Mar 19, 2015, 03.57PM IST..TOI



CHENNAI: The central government has issued an order banning overseas recruitment of nurses by private agencies.

The government order, which will come into effect on April 30, has stated that only an authorized government agency can conduct nursing recruitments.

According to the GO issued on Wednesday, nursing recruitments to a foreign country from India can be done only through a government agency from respective states.

NORKA Roots and the Overseas Development and Employment Promotion Council (ODEPC) will be entrusted with the job in Kerala. Currently, recruitments to Saudi Arabia are done through the ODEPC.

The decision by the central government is expected to put an end to large-scale corruption and cheating by private agencies who recruit nurses from India to various foreign countries, including all the Gulf Cooperation Council (GCC) countries, after taking huge sums as bribes and commission.

Agents in Qatar, the UAE, Saudi Arabia and Bahrain allegedly take huge sums from job aspirants in collusion with their counterparts in India. Many nurses recruited by private agents lost their jobs after a few months.

Speaking to TOI over phone, the Indian ambassador to Kuwait, Sunil Jain, said: "Ever since the issue surfaced, we were trying to persuade the overseas Indian affairs ministry to ban recruitment by private agencies. The poor nurses were shelling out thousands of rupees to these unscrupulous agents who exploited them.''

The Indian embassy in Kuwait had requested the Centre to put an end to this malpractice. The Kerala government had requested the Centre to appoint a nodal government agency to conduct overseas recruitment of nurses from India to avoid large-scale corruption and cheating.

"It is a very good decision by the government. We hope that from now on these women don't pay a single penny to get a job in Kuwait and recruitments will become transparent and corruption-free," Jain added.

Welcoming the move, Indian consul general in Jeddah (Saudi Arabia) B S Mubarak said, "It is a step in the right direction and it will safeguard the interest of nurses who seek a better future abroad. It will put an end to middlemen who exploit these poor women.''

NEWS TODAY 31.01.2026