Wednesday, April 29, 2015

ரூ.20க்கு தேள்கடி மருந்து...!

காலம் மாறிப்போச்சு, வாண்டுகளுக்கு கூட வாட்ஸ் அப் கணக்கு இருக்கு. ஓட்டு ஐடி இருக்கோ இல்லையோ, பேஸ்புக் ஐடி இல்லைன்னா வேஸ்ட்டுன்னு பள்ளிக்கூட பிள்ளைகள் கமெண்ட் அடிப்பது நம்காதுகளில் அதிகம் விழுந்திருக்கும்.

என்னதான் காலம் மாறினாலும், நம்ம ஊர் நாட்டுவைத்தியத்துக்கு முன்னாடி சும்மாதான்.

''வாங்க சார்... வாங்க... இப்போ மிஸ் பண்ணிட்டீங்கன்ன... பிறகு கஷ்டப்படுவிங்க'' என்றவாறு திருச்சி, சமயபுரம் பேருந்து நிலையத்தில் ஒருவர் உயிருள்ள தேள், நண்டுவாக்காளின்னு விஷ ஜந்துக்களோடு உட்கார்ந்திருக்க, ஆச்சரியமாய் மக்கள்கூட்டம் மணிக்கணக்காய் பார்த்து நின்றார்கள்.
''நம்பிக்கையிருந்தால் இந்த நாட்டு மருந்தை வாங்குங்க சார், உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னா வாங்க, வந்து டெஸ்ட் பண்ணி பார்த்துக்கோங்க. உங்க கண் முன்னாடியே உயிருள்ள தேள், நண்டுவாக்காளி, கருந்தேள் எல்லாம் இருக்கு. கையை நீட்டுங்க, தேளை கடிக்க வைப்போம், இந்த தைலத்தை ஒரு சொட்டுவிட்டு தேள் கடிச்ச இடத்தில் விட்டால், அடுத்த நிமிடமே பட்டென வலி பறந்து போகும்.

'உயிருள்ள தேளா கொஞ்சம் காட்டுங்க' என்றால் டப்பாக்குள் இருந்த தேளை சர்வசாதாரணமாக தூக்கி காட்டுகிறார் சம்சுதீன். ''20 ரூபாய் கொடுத்து இந்த மருந்தை வாங்குறதுக்கு எவ்வளவு கேள்வி கேட்குறீங்க. ஒரு நாளாவது மருத்துவமனையில் ஏன் சார் இவ்வளவு பணம் கேட்குறீங்கனு கேட்டிருப்பீங்களா…?
இங்க பாருங்க. நான் பொய் சொல்லல. நாளைந்து மாசத்துக்கு முன்னாடி ஈரோட்டுல பத்து வயசு பள்ளிக்கூட மாணவி தேள் கடித்து பலின்னு நியூஸ் பேப்பர்ல வந்திருக்கு. அடுத்து, தஞ்சாவூர்ல 5 வயசு ஆண் குழந்தை ஸுவ்ல தேள் இருப்பதை கவனிக்காமல் அதை போட்டபோது கடிச்சி, இறந்துடிச்சின்னு போட்டிருக்கு. இப்படி பல பேர் கொடிய தேள், நண்டுவாக்காளி போன்றவை கடிச்சி இறந்திருக்காங்க.

நண்டுவாக்காளி கடித்தால் ரெண்டு நிமிசத்துல மாரடைப்பு வந்துடும். இப்படி உயிரைபறிக்கும் விஷயத்துக்கு நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கோமான்னா இல்லை. அதுக்காகத்தான் இந்த மருந்து'' என வெறும் இருபது ரூபாய்தான் என பார்வையாளர்களிடம் விளக்கிக்கொண்டிருந்த சம்சுதீன் மீது தேள்கள் சர்வசாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்க அவரிடம் பேசினோம்.
''எனக்கு சொந்த ஊர் முசிறிதான். தாத்தா காலத்தில் இருந்து தேள்கடிக்கும், உடம்பு வலிக்கும் மருத்து தயாரித்து விற்கிறோம். ஆறாவதுக்கு மேல படிப்பு ஏறல, பிறகு அப்பாக்கூட இருந்து இந்த வைத்தியத்தை கற்றுக்கொண்டேன். இப்போ எனக்கு வயசு 57, 40 வருடமாக இந்த தொழிலை செய்துக்கிட்டு வர்றேன். இந்த மருந்தை எடுத்துக்கிட்டு தமிழ்நாடு முழுக்க சுத்தியிருக்கேன். நாளு மொழி பேசுவேன். வர்றவங்க நம்ம கிட்ட சந்தேகத்தோட மருந்து வாங்கக்கூடாது. மருந்தை வாங்கிட்டு அது சரியில்லைன்னா நம்மை திட்டக்கூடாது. இதுதான் முக்கியம்.
20 ரூபாய்க்கு நான் இரண்டு விதமான மருந்து வைச்சிருக்கிறேன். ஒன்று தலைவலி, இருமல், ஜலதோசம், பல் வலி உள்ளிட்ட நோய்களை சட்டென விரட்டும் நிவாரணி. தும்பை இலை, துளசி, கருந்துளசி, மலையெறுக்குன்னு 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஒன்னா போட்டு காய்ச்சி இந்த மருந்தை தயாரிக்கிறோம். ஒரு சொட்டு மருந்தை கர்சிப் விட்டு மூக்குல வைத்தால் சும்மா ஜிவ்னு ஏறும். அடுத்த சில நொடிகளில் எல்லாம் பறந்துபோகும்.

அதேபோல் தேள், நண்டுவக்காளி உள்ளிட்ட விஷக்கடிக்கு கொடுக்கிற மருந்து. இது பதரசத்தை தண்ணியாக்கி, கூட நீர்ப்பச்சிலை போன்ற கொல்லி மலையில் கிடக்கும் பச்சிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இதை தேள் கடித்த இடத்தில் ஒரு சொட்டு விட்டு தடவிவிட்டால் போதும். சட்டென வலி பறந்துபோகும். இதுமட்டுமல்லாமல், தோள் நோய்களுக்கும், விபத்தில் புண் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
சின்ன வயசுல எங்கப்பா எனக்கு வைத்தியம் கற்றுகொடுக்கும்போது, 'பணம் காசு முக்கியமில்லை. தேள் கடிச்சி துடிக்கிற ஒருத்தன், நீ கொடுக்கிற மருந்தை போட்டபிறகு வலி நின்றபிறகு உன்னை மனசார வாழ்த்துவான் இல்லை. அதுதான் உன்னை நூறு வருஷம் வாழ வைக்கும்'னு சொன்னார். அதை பல நேரம் உணர்ந்திருக்கேன். அந்த சந்தோசத்திலதான் வாழுறேன்'' என்கிறார் சம்சுதீன்.

சி. ஆனந்தகுமார்,

படங்கள்: தே.தீட்ஷீத்

Now, a visa to Vietnam is only three days away

Planning to head to Vietnam? A visa is now only three days away, with a visa application centre for the Socialist Republic of Vietnam opening in the city on Tuesday.

Launched by VFS Global, the centre expects to take in at least 5,000 applications per year and will make it easier and more convenient for tourists as well as business persons from the State to obtain their visas, said Sonia Dhayagude, one of the head of operations of VFS Global.

“From 2011 to 2014, we have seen a 300 per cent rise in the number of Indian tourists coming to Vietnam – from 19,000 to 55,000. We want to increase this number by another 100 per cent,” said Ton Sinh Thanh, ambassador of Vietnam to India.

Indian investments in Vietnam were growing too, he said. There are at least 85 Indian projects in Vietnam valued at USD 1 billion, he said. “According to Vietnam’s data, the bilateral trade between the two countries is USD 5.5 billion, but Indian figures say it is higher, at USD 8 billion last year,” he said. The centre in Chennai will process both tourist and business visas. Application forms will cost Rs. 500 and visa fees Rs. 4,500.

All applications will continue to be assessed and processed by the Embassy of Vietnam in New Delhi. The centre will be open from 8 a.m. to 3 p.m. on weekdays. . For details, log on to:www.vfsglobal.com/Vietnam/India.

TN Dr. MGR MEDICAL UNIVERSITY 27TH CONVOCATION 30.04.2015



Medical Council of India moots raising retirement age of teachers

DNA logo

In a bid to reduce the shortage of faculty in medical colleges, the Medical Council of India (MCI) has decided to write to state medical education departments across the country, seeking their opinion about increasing the retirement age of teachersfrom 70 to 75 years.

The issue of retirement age came up in a meeting of the MCI in Delhi on Tuesday. As per the MCI norm, the retirement age of a medical teacher is 70 years. No state can exceed this bar. Maharashtra medical education department has set the retirement age as 64 years for teachers in all its state and civic-run medical colleges.

"Today's meeting proposed to increase the retirement age of a medical teacher to 75 years. But before a decision is taken in this regard, all the state medical education departments will be asked about their opinion," said Dr Kishor Taori, chairman, Teacher Eligibility and Qualification Committee, MCI.

"The aim to address the problem of some of medical colleges which are facing a shortage of teachers. Himachal Pradesh is the first state where the retirement age of teachers in private and government-run medical colleges has been fixed at 70 years."

According to MCI, in all 398 medical colleges across the country there are more than 52,000 MBBS seats. Retirement of teachers affects the number of seats to be maintained. Thus, in order to maintain an adequate ratio, state governments increase the retirement age.

"But this is not a solution to solve the manpower issue; we oppose this government decision. We have a different demand — temporary lecturers should be regularised and medical teachers should be given time-bound promotion and pay scale. If the government wants to appoint these teachers, they can appoint them after retirement. Increasing retirement age of teachers its not a good idea," said Dr Nagsen Ramraje, president, Maharashtra State Medical Teachers Association.

Tuesday, April 28, 2015

ஏழைகளுக்கு இரண்டாவது கடவுள் மருத்துவர்கள்தான்; அதில் சந்தேகமில்லை. மருத்துவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

cinema.vikatan.com

ந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவான இரண்டாவது கடவுள் உண்டு. அது மருத்துவர்கள். சமயங்களில் ஏழைகளுக்கு அவர்களே முதற்கடவுளாக மாறிவிடுவதுண்டு.
அரக்கோணத்தை அடுத்த மாடத்துக்குப்பம் பகுதியை சேர்ந்த பாண்டியன் - கோகிலா தம்பதியருக்கு அந்த அனுபவம் நிகழ்ந்தது கடந்த வாரம். 

அவர்களின் 10 மாத குழந்தை ஸ்ரீதிவ்யா, சேப்டி பின் எனப்படும் கூர்மையான ஊக்கை தவறுதலாக விழுங்கிவிட, அடுத்த 24 மணிநேரம் அவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டமாகி விட்டது. குழந்தை விழுங்கிய திறந்த நிலையிலான சேப்டி பின், குழந்தையின் இரைப்பையில் நின்ற நிலையில் இருக்க, குழந்தையின் உயிரை மீட்பது மருத்துவர்களுக்கு  பெரும் சவாலாகிவிட்டது. 

இருப்பினும் சவாலை வெற்றிகரமாக சமாளித்து சாதனையாக்கி இருக்கிறார்கள் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள். வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு புதிய முறையிலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதை சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் அரசு மருத்துவமனை மேற்கொண்ட முதல் முயற்சி என்பதும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

அறுவை சிகிச்சை செய்த சோர்வில் குழந்தை ஸ்ரீதிவ்யா கிடக்க,  அருகிலிருந்த தாய் கோகிலாவிடம் பேசி னோம்.
“ போன 24 ம் தேதி நைட்டு குழந்தைக்கு பால் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு கரண்ட் போயிடுச்சு. இருட்டில் பால் கொடுக்கக் கூடாதுன்னு இறக்கி படுக்க வெச்சிட்டு சிம்னி விளக்கை ஏத்திவெச்சிட்டு சமையலறைக்கு போனேன். கொஞ்சநேரத்துல குழந்தை அழுற சத்தம் கேட்டு ஓடிவந்தேன். வழக்கத்துக்கு மாறா அதிக சத்தத்தோடு அழுதாள். என்னன்னவோ பண்ணி சமாதானப்படுத்தியும் அழுகைய நிறுத்தலை. 

என்னவோ ஏதொன்னு பயந்து திருவள்ளுர் ஜி.எச் க்கு தூக்கிட்டு ஓடினோம். டாக்டர்கள் உடனே எக்ஸ்ரே எடுக்கச்சொன்னாங்க. அப்போதான் குழந்தை சேப்டி பின்னை விழுங்கினது தெரிஞ்சது. அலறி துடிச்சிட்டோம். 'குழந்தையை உடனே சென்னைக்கு கொண்டு போகறதுதான் பாதுகாப்பு' னு டாக்டர்கள் சொன்னாங்க. அந்த நைட்டு நேரத்துல வண்டியை பிடிச்சி பேபி ஆஸ்பிட்டலுக்கு வந்தோம். 

திரும்ப இங்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்துட்டு, டாக்டர்கள் அதை உறுதிப்படுத்திட்டு உடனே ஆபரேஷன் பண்ண ரெடியானாங்க. ஆபரேஷன் நடந்த அந்த அரை மணிநேரம் எங்களுக்கு உயிர் இல்ல. டாக்டருங்க குழந்தையை பாதுகாப்பா வெளியே கொண்டு வந்தபிறகுதான் போன உயிர் எங்களுக்கு வந்தது. டாக்டருங்க என் பிள்ளைக்கு 2 வது முறை உயிர் கொடுத்திருக்காங்க" என்றார் நா தழுதழுக்க. 

நடுஇரவில் குழந்தையை காக்கும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பேராசிரியர் எஸ்.வி செந்தில்நாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு. மருத்துவர்கள் ஜெ.முத்துக்குமரன், கிருஷ்ணன், அனிருதன், குருபிரசாத், கௌரிசங்கர் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றவர்கள்.

மருத்துவர் முத்துக்குமரனிடம் பேசினோம்.
“ ஒரு சாதனை புரிந்தோம் என்பதைவிட ஒரு குழந்தையின் உயிரை காத்துவிட்டோம் என்பதுதான் இப்போத எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. கடந்த 24 ம் தேதி இரவு குழந்தை ஸ்ரீதிவ்யாவை அழைத்துவந்தனர் அவளது பெற்றோர். அழுதபடியே இருந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அவள் சேப்டி பின்னை விழுங்கியிருந்தது தெரிந்தது. திறந்தநிலையில் இருந்த அந்த சேப்டி பின், முந்தைய முயற்சிகளின்போது தொண்டையிலிருந்து நழுவி, வயிற்றின் இரைப்பையில் ஆபத்தான இடத்தில் சிக்கிக்கொண்டிருந்தது. 

காது, மூக்கு, தொண்டை நிபுணர் மற்றும் குடல் இரைப்பை சிறப்பு மருத்துவர் உதவியை நாடினோம். ஆனால் அதில் சிக்கல் எழுந்தது. காரணம் குழந்தைகள் இப்படி விழுங்குவது சகஜமென்றாலும்,  ஸ்ரீதிவ்யா 10 மாதமே ஆன குழந்தை என்பதும், சேப்டி பின் திறந்த நிலையில் இருந்ததுமே. 

இது எங்கள் மருத்துவ குழுவுக்கு பெரும் சவாலானதாகிவிட்டது.  இப்படிப்பட்ட சமயங்களில் ஓஸ்கோபி (o'scopy) எனப்படும் வழக்கமான முறையில் டியூப்பை தொண்டை வழியே செலுத்தி விழுங்கிய பொருளை எடுப்போம். ஆனால் 10 மாத குழந்தையிடம் அதை முயற்சித்தால் திறந்த நிலையில் இருக்கும் சேப்டி பின், அருகிலுள்ள உறுப்புகளை கிழித்து இரத்தக் கசிவு ஏற்பட்டு குழந்தை உயிரிழக்கும் அபாயமுள்ளது. 

அதே சமயம் 10 மாத குழந்தை என்பதால் எந்த அளவிற்கு டியூப்பை உள்ளே செலுத்த முடியும் என்பதில் சந்தேகம் இருந்தது. அதனால் அந்த முடிவை கைவிட்டு எங்கள் மருத்துவ குழு தீவிரமாக கலந்தாலோசித்தது.
அதன்பிறகுதான் சிஸ்டோஸ்கோப்பி என்ற புதிய முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். இந்த முறையில்  அறுவை ( cystoscopy) சிகிச்சை செய்வது இந்த மருத்துவமனைக்கு இதுதான் முதன்முறை. முடிவெடுத்தபின் கொஞ்சமும் தாமதிக்காமல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். சிஸ்டோஸ்கோபி முறையில் வயிற்றின் குறுக்கே கிழித்து அதன் வழியே இரைப்பையில் 5 மிமீ அளவுக்கு சிறு ஓட்டை ஏற்படுத்தினோம். குழந்தை இரவு முதல் எதுவும் உண்ணாமல் இருந்ததால் இரைப்பை சுருங்கி பின் இறுக்கமான நிலையில் சிக்கியிருந்தது. 

ஒருவகையில் உணவு எடுக்காமல் இருந்ததும் இம்மாதிரி சமயங்களில் சாதகமான ஒன்றுதான். அந்த ஓட்டை வழியே சிஸ்டோஸ்கோபி கருவியிலேயே பிரத்யேகமாக இணைக்கப்பட்ட மெல்லிய சிறு குழாய் வழியாக குழந்தையின் இரைப்பைக்குள் துளித்துளியாக சலைன் திரவம் செலுத்தினோம். 

இதனால் குழந்தையின் இரைப்பை சற்று விரி வடைந்து, சிஸ்டோஸ்கோபிக் கருவி பின்னை இயல்பாக கவ்விப்பிடிக்க வசதியாக இருந்தது. இருப்பினும் உச்சகட்டமாக வேறு எந்த உறுப்பு களுக்கும் பாதிப்பின்றி கருவியின் மூலம் பின்னை எடுக்கும் முயற்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. 

கிட்டதட்ட 45 நிமிட போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக சிஸ்டோஸ்கோபிக் கருவி, சேப்டி பின்னை லாவகமாக பிடித்துக்கொண்டது. அதை பாதுகாப்பாக வெளியே எடுத்தோம். அந்த 45 நிமி டங்களும் எங்கள் மருத்துவக்குழுவிற்கு பரபரப் பாக கழிந்தது. இப்போது குழந்தை நலமாக இருக்கிறாள். கொஞ்சம் ஓய்வுக்குப்பிறகு அவள் சகஜமாகிவிடுவாள்" என்று சொல்லி முடித்தார்.

பேபி ஆஸ்பிடல் என்று அழைக்கப்படுகிற அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நிகழ்த்தப் பட்ட இந்த அறுவை சிகிச்சை, தனியார் மருத்து வமனையில் செய்யப்பட்டிருந்தால் அதற்கான விலை கணிசமாக இருந்திருக்கலாம். 

"பொதுவாக குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களது சுபாவம் இயல்புக்கு மாறானது. பெற்றோர்கள் அதை எளிதில் புரிந்துகொள்ளவேண்டும். வீடு களில் குழந்தைகளின் கைகளில் எட்டும் அள வுக்கு பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண் டும். துருத்தி தெரிகிற, தன்னை ஈர்க்கிற பொருட்கள் அது நல்லதோ கெட்டதோ எதுவானாலும் அதை பார்க்கவும், தொடவும் அவர்கள் விரும்புவார்கள். அதனால் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளின் மீதான கவனம் பெற்றோரிடம்தான் கூடுதலாக இருக்கவேண்டும். இல்லையேல் இம்மாதிரி அனுபவத்தை பெறநேரிடும்” என எச்சரித்து பேசுகிறார் மருத்துவமனையின் பதிவாளர் மருத்துவர் சீனிவாசன்

ஏழைகளுக்கு இரண்டாவது கடவுள் மருத்துவர்கள்தான்; அதில் சந்தேகமில்லை. மருத்துவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
- எஸ். கிருபாகரன்

வரதட்சணை பெற்றவரை பாராட்டிய ஊர்மக்கள்!

ன்றைய திருமண சந்தையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து  கொடுக்க, லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய சமூக நிர்பந்தம் நிலவுகிறது. தங்களது பொருளாதார சூழலில், அதை நிறைவேற்ற முடியாது என நினைக்கும் பெற்றோர்கள், பெண் சிசுக்கொலை புரியும் அவலம் இந்த நிமிடம் வரை நிகழந்து கொண்டுதான் இருக்கிறது. 

பெண் சிசுக்கொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆண்கள் கூட, வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வதில்லை என்பதுதான் கூடுதல் அவலம்.

‘சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்புவோர், அதற்கான முயற்சியை முதலில் தங்களிடமிருந்து துவங்க வேண்டும்’ என்ற அடிப்படை சிந்தனை, பெரும்பாலான சமூக ஆர்வலர்களிடம் காணப்படுவதில்லை. 

ஆனால், இதற்கு விதிவிலக்காக தனது திருமணத்தையே சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக பயன்படுத்தி இருக்கிறார் அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டம் பர்வாலா கிராமத்தைச் சேர்ந்த சுதேந்திரா ஆசாத்.

ஆசிரியரான இவருக்கு, கடந்த வாரம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் பெண் வீட்டாரிடம் அவர் தனக்கு வரதட்சணை வேண்டும் என கேட்டபோது, பெண் வீட்டார் அதிர்ந்தனர். ஆனால், வரதட்சணையாக அவர் கேட்ட பொருள் என்னவென்று தெரிந்ததும் அவரை உச்சிமுகர்ந்தனர் பெண்வீட்டாரும் அந்த ஊர் மக்களும். ஆமாம், தனது திருமணத்தில் பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணையாக அவர் பெற்றது 1,000 மரக்கன்றுகள். 

அதை தனது ஊரிலும், மணமகள் அனிதா ஊரிலும் நடவு செய்து தங்கள் கிராமத்தை பசுமையாக்க முடிவு செய்திருக்கிறார். திருமணத்தின் போது வழக்கமாக ஏழுமுறை அக்னியை வலம் வருவார்கள். ஆனால், இவர், பெண் சிசுக்கொலையை கண்டிக்கும் விதமாக, தனது மனைவியுடன் எட்டாவது முறையாக வலம் வந்தார்.
மாற்றம் என்பது மனிதரிடமிருந்து உருவாவதுதானே.. 

பாராட்டுக்கள் சுதேந்திரா ஆசாத்!

- ஆர்.குமரேசன்

Convicted doctors and staff released on bail in Trichy

TRICHY: The principal district judge court suspended the one-year jail term of two doctors and a staff of Joseph Eye Hospital in Trichy and released them on bail pending disposal of the appeal on Friday.

The three — director Dr C A Nelson Jesudasan, chief administrative officer Christopher Jesudasan, medical officer of Perambalur Dr B Ashok- of Joseph Eye Hospital in Trichy had been sentenced to one-year imprisonment by chief judicial magistrate (CJM), Trichy on Wednesday in a case related to the loss of vision to 66 villagers in Villupuram district on July 20, 2008. The court acquitted three doctors and a lab technician from the case.

On hearing an appeal petition filed by the three, principal district judge (in-charge) R Poornima suspended the conviction of the three men and released them on bail on Friday. The appeal was pending before the court. The three were subsequently released from Trichy central prison on Friday.

Joseph Eye Hospital also went on strike on Saturday under the instruction of the Indian Medical Association (IMA), Trichy chapter, which raised its concern about the insecurity of the doctors and the private hospitals.

Meanwhile, Human Rights Protection Centre, Trichy which took up vision loss case in support of the victims was planning to go for an appeal seeking increase in quantum of the sentence. Advocate S Vanchinathan told TOI, "We are discussing going for an appeal to increase the term of conviction and for sentence of imprisonment to those who were acquitted from the case, because all of them are responsible for the vision loss."

NEWS TODAY 31.01.2026