Saturday, May 16, 2015

HC upholds sweepers’ claim to Junior Assistant post

Observing that a person cannot be denied appointment as Junior Assistant because he expressed his willingness to work as a sweeper, the Madras High Court has set aside Government Orders and directed the authorities that he shall be appointed to the post if there was a vacancy in the future.

Petitioners C.R. Murugan and V. Babu, who were appointed as sweepers in the Tamil Nadu Motor Vehicle Maintenance Department on compassionate grounds in 2008, had said that they would not claim appointment to the post of Junior Assistant on compassionate basis.

Since their representation to department officials seeking appointment as Junior Assistants in December last year were rejected, they had moved the High Court seeking to quash the Government Orders.

The Special Government Pleader, V. Jayaprakash Narayanan, submitted that they had expressed their willingness to work as sweepers on compassionate grounds and wouldn’t claim appointment to the post of Junior Assistants and that was the only reason to reject their representations.

Senior counsel for the petitioner, M. Kalyanasundaram, contended that the petitioners couldn’t be denied appointment whenever it arose, especially when they possessed the required qualification.

On hearing both sides in both the cases, Justice D. Hariparanthaman set aside the two G.O.s in separate orders and said that they shall be appointed as Junior Assistants. “However, it is made clear that the petitioner’s claim should be considered, after considering the claim of petitioners who are in the waiting list prior to the petitioner,” the judge said.



Court sets aside two Government Orders

வெளிநாடு இந்தியர்களுக்கு ஜூலை 9ல் இன்ஜி., கவுன்சிலிங்

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அண்ணா பல்கலையில் பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் கவுன்சிலிங் நடக்கிறது.

அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றில், 11 பி.டெக்., மற்றும் 20 பி.இ., படிப்புகள் உள்ளன. இவற்றில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பிள்ளைகள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலை பெயரில், 200 அமெரிக்க டாலருக்கான 'டிடி' எடுத்து, 'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்; ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம். பின், வெளிநாட்டினருக்கு ஜூலை 8ம் தேதியும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூலை 9ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கும். பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான படிப்பில் பாடங்களின், 'கட் - ஆப்' அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும். தேர்வாகும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள சர்வதேச மாணவர் (துலிப்), மாணவியர் (லேவண்டர்) விடுதிகளில் தங்குமிடம் உண்டு; சர்வதேச உணவு விடுதியில், உணவு வசதியும் உண்டு. கட்டணம், தகுதி, தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் குறித்த கூடுதல் விவரங்களை, https:/www.annauniv.edu/cia/adm.php என்ற அண்ணா பல்கலையின், அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விழுப்புரம், திருவாரூர் மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யின் இறுதி அனுமதி சமீபத்தில் கிடைத்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகள் உட்பட, ஒன்பது கல்லூரிகளில், அவ்வப்போது, கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெறப்பட்டன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டும். இதில், சேலம், தூத்துக்குடி, திருச்சி, செங்கல்பட்டு மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில், இந்த ஆண்டு கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., அனுமதி கிடைத்து விட்டது. சென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில், ஏற்கனவே பெறப்பட்ட கூடுதல் இடங்களில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க, எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தி, அறிக்கையை சமர்ப்பித்தாலும், இன்னும் முறையான அனுமதி கிடைக்கவில்லை. எம்.பி.பி.எஸ்., 'கவுன்சிலிங்' அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்குள் அனுமதி கிடைக்குமா என்ற, கேள்வி எழுகிறது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எந்த சிக்கலும் இன்றி, ஏற்கனவே அனுமதித்த கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். சில நாட்களில், இதற்கான அனுமதி கிடைத்து விடும்' என்றார்.

- நமது நிருபர் -

Friday, May 15, 2015

Finally, CMCH Gets MCI Nod To Continue MBBS Course

COIMBATORE: Following an appeal by the State government, the Medical Council of India (MCI), has finally agreed to continue recognition for Coimbatore Medical College Hospital (CMCH) for the existing 150 MBBS seats for the approaching academic year.

CMCH Dean, A Edwin Joe said that MCI’s executive committee which met on Wednesday, decided to accept the compliance report submitted by the college this March to continue the recognition.

Earlier, the MCI had recommended to the Centre to discontinue recognition for CMCH to offer MBBS degree for the academic year 2015-16.

In response to the hospital’s request to increase the undergraduate strength from 150 to 250, a four-member MCI team inspected the institution in January. The assessors report was submitted to the executive committee of the council for consideration.

The committee had pointed out 20 deficiencies, and reasons to reject the proposal to increase the number of seats. In addition to this, the recognition for awarding 150 UG seats was also not supported in the committee’s report.

The Ministry of Health and Family Welfare had sought a personal hearing with the college Dean Edwin Joe. Following this, the dean submitted the arguments on behalf of the Tamil Nadu Directorate of Medical Education on March 13. The MOH had taken up the justification and sent a letter to the MCI.

In the compliance report, it was mentioned that even though the hospital lacked the infrastructure demanded for 250 seats, there was no deficiency preventing MCI from giving permission for the existing 150 seats except for staff shortage (13 per cent).

Clarifying on this, the Dean told Express that during the day of inspection more than four per cent staff were on leave and according to MCI norms less than 10 per cent staff shortage was permissible for 150 seats.

Once the other deficiencies pointed out by MCI are rectified with the help of State and Central Government funds, we will approach for increase in MBBS admissions, he added.

The college management also said that CMCH was added to the list of medical institutions for All India Online UG Counselling’ 15 and 15 percent of its MBBS seats (22) were handed over to MOH and the remaining seats would be filled by the State.

இன்ஜி., கவுன்சிலிங்கில் சாதிக்க மதுரையில் இன்று தினமலர் நிகழ்ச்சி

மதுரை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலை நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்று பயனுள்ள படிப்புகளை தேர்வு செய்வதற்கு ஆலோசனை வழங்கும் தினமலர் நாளிதழின் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி மதுரையில் இன்று (மே 15) நடக்கிறது. பசுமலை மன்னர் கல்லுாரியில் மாலை 4 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் சென்னை இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜி., கல்லுாரி உடன் இணைந்து(பவர்டு பை) வழங்குகிறது. மாணவர்கள் அண்ணா பல்கலை நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்று எவ்வாறு சாதிக்கலாம் என்பது குறித்து அண்ணா பல்கலை நுழைவுத் தேர்வு மைய இயக்குனர் ராஜேந்திர பூபதி பேசுகிறார்.

மாணவர்களின் 'கட் ஆப்'

மதிப்பெண்ணிற்கு ஏற்ப பலன் தரும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி, தரமான கல்லுாரிகள் எவை, எந்த பாடப் பிரிவுகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன உட்பட பல்வேறு ஆலோசனைகளை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வழங்குகிறார். கவுன்சிலிங் தொடர்பாக மாணவர்களின் அனைத்து கேள்விக்கும் நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும். சிறந்த ஐந்து கேள்விகள் கேட்கும் மாணவர்களுக்கு 'பென்டிரைவ்'கள் பரிசளிக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் 50 மாணவர்களுக்கு இலவச இன்ஜி., படிப்புக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். 1000 மாணவர்கள் இலவச ரோபோட்டிக் வொர்க்ஷாப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்களுக்கு 'உங்களால் முடியும்' புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம். பயன்தரும் உயர் கல்வியை தேர்வுசெய்ய வாருங்கள் மாணவர்களே! பங்கேற்று பயனடையுங்கள்.

அவதி: சிவகங்கையில் ஸ்கேன் இன்றி நோயாளிகள்... மனித உயிர்களுடன் விளையாடும் நிர்வாகம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் உள், வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். விபத்து, அடிதடி, வயிறு கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகளில் சிக்குவோருக்கு தேவையான துரித சிகிச்சை இங்கு கிடைப்பதில்லை. காரணம் பாதிப்பை உடனே கண்டறிய உதவும் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் வசதியில்லை. சி.டி., எடுக்க நேரு பஜாரிலுள்ள பழைய மருத்துவமனை வளாகத்திற்கு அனுப்புகின்றனர். இதற்கு தயங்குவோரை மதுரைக்கு அனுப்புகின்றனர். போகும் வழியில் ஒரு சிலர் ஆபத்தை சந்திக்கின்றனர். இவற்றை தடுக்க, தற்போது எக்ஸ்ரே பிரிவு செயல்படும் இடத்தில் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் வசதியை ஏற்படுத்திட கட்டடம் சீரமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கையை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு அனுப்பியது.

ஓராண்டுக்கு மேலாகியும் கிடப்பில் உள்ளது. இதனால் நோயாளிகள் தொடர்ந்து பாதிக்கப் படுகின்றனர். மருத்துவக் கல்லூரி யில் டாக்டர்களால் பரிந்துரைக்கப் படும் நோயாளிகள் பழைய மருத்துவமனைக்கு சென்று, சி.டி., எடுத்து வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. உடனடி சிகிச்சை, ஆபத்தை தடுக்க, மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் எம்.ஆர்.ஐ., சி.டி., வசதியை ஏற்படுத்த வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுகின்றனர். மருத்துவ நிர்வாகம் கூறுகையில், ஒரே வளாகத்தில் இரண்டையும் ஏற்படுத்துவதற்கான கட்டட வசதியை ஏற்பாடு செய்து, அதற்கான அறிக்கையை தமிழ்நாடு மருத்துவக் கழக கார்ப்பரேஷனுக்கு அனுப்பி யுள்ளோம். அவர்கள் ஸ்கேன் இயந்திரங்களை வாங்கி ஒப்படைக்க வேண்டும். பழைய மருத்துவமனை வளாகத்திலுள்ள பழைய சி.டி., ஸ்கேன் மெஷினை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.

மதுரை விமான நிலையத்தில் நெரிசல் தவிர்க்கப்படுமா: பயணிகள் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க வெளிநாடு, உள்நாடு பயணிகளுக்கு தனித்தனி நுழைவு பாதைகள் அமைக்க விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க ஏதுவாக ரூ.135 கோடியில் அமைக்கப்பட்ட டெர்மினல் 2011ல் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது கொழும்பு, துபாய்க்கும், சென்னை, மும்பை உட்பட நாட்டின் பிற பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொழும்புக்கு ஒரு நாளைக்கு இரண்டு, துபாய்க்கு ஒரு விமானம் இயங்குகிறது. தென் மாவட்டத்தினர் ஏராளமானோர் துபாய் உட்பட மேற்கு ஆசியா நாடுகளில் பணிபுரிகின்றனர். மதுரையிலிருந்து துபாய்க்கு விமானம் இயக்கப்பட்டதற்கு பிறகு, தினமும் சராசரியாக 150 பேர் சென்று வருகின்றனர். கொழும்பு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதே அளவு உள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு செல்ல தனித்தனி பாதைகள் இல்லை. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் ஒரே வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் காலதாமதமாவதுடன் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளதால்,
பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் செல்வதற்கு என்று உள்ள தனிப்பாதையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இடவசதியின்மை, விமான நிறுவனங்களில் ஊழியர்கள் இல்லாதது போன்றவற்றை இதற்கு காரணங்களாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக விமானத்தில் ஏறி அமரும் வகையில் மூன்று ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன. அவற்றையும் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குனர் குல்தீப் சிங் கூறியதாவது: பாதுகாப்பு அம்சங்கள் உட்பட பல விஷயங்களை ஆராய்ந்து விமான போக்கு வரத்து ஆணையம் ஒப்புதல் கொடுத்ததும் சர்வதேச கார்கோ சேவை துவக்கப்படும். ஏரோபிரிட்ஜ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது மதுரையிலிருந்து செல்லும் பயணிகள் நெரிசலின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

MBBS/BDS application portal to reopen

MBBS/BDS application portal to reopen  TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...