Sunday, October 11, 2015

யுஜிசி வழங்கும் எஸ்.டி. மாணவர்களுக்கான பெல்லோஷிப்



எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பயிலும் 750 எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான, தேசிய உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேர வகுப்பில் எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அறிவியல், மனிதவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவை தனது ஆராய்ச்சிப் படிப்பில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: எம்.பில்., படிப்பவர்களுக்கு ரூ. 25,000 மற்றும் பிஎச்.டி., படிப்பவர்களுக்கு ரூ.28,000.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23

மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

விருதுநகரில் 100-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய முதியவர்

Dinamani





விருதுநகரில் 4 தலைமுறையை கண்ட முதியவர் 100-வது பிறந்த நாளை தனது குடும்பத்தினர், பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் ஆகியவைகளால் வாழ்நாள் 50 வயது முதல், 60 வயதாக சுருங்கி வருகிறது. மேலும், 40 வயது தொடக்கத்திலேயே சர்க்கரை உள்பட பல்வேறு நோயால் அவதிப்படும் நிலையுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடான உணவு பழக்கம், நடைபயிற்சி ஆகியவைகளால் 100-வயது தொடக்க விழாவை மகிழ்ச்சியுடன் முதியவர் பேரன், பேத்திகளுடன் கொண்டாடியுள்ளார்.

விருதுநகரில் உள்ள இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எ.நடராஜன்(100). வியாபார சங்கத்தின் நிர்வாகியாகவும், பருப்பு வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பன்னீர்ராஜன்(68), ஜெயக்கர்(66), ராமநாதன்(64), தயானந்தம்(62) என 4 மகன்களும், தனலட்சுமி(60) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து சென்னை, விருதுநகர், ஈரோடு, அமெரிக்கா, கலிபோர்னியா போன்ற இடங்களில் தனித்தனியாக வசித்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.எ.நடராஜனும், அவரது மனைவி பரமேஸ்வரி(88) ஆகிய 2 பேர் மட்டும் மேற்குறிப்பிட்ட இடத்தில் வசித்து வருகின்றனர். தற்போது, இவருக்கு 100-வது வயது தொடங்கியுள்ளது. இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது மகன்கள் தனியார் அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு முன்னதாக தங்களது குடும்பத்தினர், சம்பந்திகள், மாமனார் மற்றும் மைத்துனர், பங்காளி நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும் அழைப்பிதல் அனுப்பியிருந்தனர். இதையடுத்து 4 தலைமுறையை கண்ட உறவினர்கள் மற்றும் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என 69 பேருடன் தனது 100-வது வயது தொடக்க விழாவை முதியவர் சிறப்பாக கொண்டாடினார்.

இது குறித்து அவரது 3-வது மகனும், கூட்டுறவு துறையில் ஓய்வு பெற்ற அதிகாரியுமான ராமநாதன்(66) கூறுகையில், தந்தையும், தாயாரும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழவும், எவ்வித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக தனியாக வசித்து வருகின்றனர். அவர்களது தேவைகளையும் அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வார்கள். நாள்தோறும் காலையில் 2 கி.மீ தூரம் நடைபயிற்சி செய்து, ஊருக்கு வெளியே சென்று குளியலை முடித்து வருவார். எப்போதும் போல் கட்டுப்பாடன சைவ உணவும், இதுவரையில் மழை நீரையே பருகியும் வருகிறார். கால்பந்து விளையாட்டு வீரர். எவ்விதமான கெட்ட பழக்கம் இல்லாத நிலையில் கதராடையை மட்டும் அணிவார். அதோடு, காந்தி, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கி பழகியவர். எனது தந்தை கட்டிய வீட்டையும் காமராஜர் முதல்வராக இருந்த போது திறந்து வைத்துள்ளார். மேலும், அப்போது இருந்த வண்ணக்கலர் வாக்கு பெட்டிகள் வைத்த தேர்தல் முதல், வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்திய ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மனநலம் காப்போம்


Dinamani


By க. சண்முகவேலாயுதம்

First Published : 10 October 2015 01:42 AM IST


ஆடையைக் கிழித்துக் கொண்டு, சாலையில் கூச்சலிட்டு, தலைவிரி கோலமாகக் கல்லெடுத்து எறிபவர் மட்டுமே மனநலம் பாதித்தவரல்லர். வாழ்வில் ஏற்படும் எத்தனை எத்தனையோ தொல்லைகள், மன அழுத்தங்கள், துன்பங்களால் பாதிக்கப்பட்டு தங்களது விருப்பங்கள் நிறைவேறாமல் போகும்போது, மனமுடைந்து விபரீதமாக நடந்து கொள்வோரும் மனநலம் பாதித்தவரே ஆவர்.
வெளித் தோற்றத்தைக் கொண்டு இவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று கணிக்க முடியாது. மனநலம் பாதித்தவர்களைத் தனிநபர் நோயாக மட்டும் கருதாமல், ஒரு சமூகப் பிரச்னையாகக் கருத வேண்டியிருக்கிறது.
மனநலம் பாதிப்பு (Mental Health Problems) என்பது உள - சமூகரீதியான வேதனையான நிலையாகும். இப்பிரச்னை அதிக நபர்களைப் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
மன நோய்க்குக் காரணம் பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை என்ற தவறான அபிப்ராயம் இன்றளவும் இருந்து வருவது வருந்தத்தக்கது. மன நோய் உள்ளவர்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லி ஒதுக்குவதும், உறவினர் என்று சொல்லக் கூச்சப்படுவதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
மனநலம் பாதித்தவர்கள் இழைக்கும் வன்முறைகளைவிட அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்குப் பலியாவது குறைந்தபட்சம் 14 மடங்கு அதிகமானதாக உள்ளது என்று ஆய்வுகள் உணர்த்துகின்றன.
பெண்கள், குழந்தைகள், சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் மீது இழைக்கப்படும் அநீதிகள், அவர்கள் மனநலத்தைப் படிப்படியாகப் பாதிப்படையச் செய்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 45 கோடி மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10 - 15 சதவீதம் பேர் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடல்நலத்தைப் போல, மனநலத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் நாட்டில் மன நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்புக்கான காரணங்கள்: குடும்பப் பிரச்னை, பாலியல் பிரச்னை, வேலையில்லா நிலை, மரபியல் பிரச்னை, ஏமாற்றம், தோல்வி, சந்தேகம், போட்டி, பொறாமை, போதைப் பழக்கம் போன்றவையாகும்.
மனநலப் பாதிப்பால் சோகம், தொடர் தலைவலி, பசியின்மை, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு, பயம், விபரீதக் கற்பனை, நம்பிக்கையற்ற, எதிர்மறையான எண்ணங்கள், குற்ற உணர்வு, தற்கொலை எண்ணம் ஆகியவை தோன்றும்.
உடல் நலம் பாதித்தால் உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்லத் தயங்கும் நிலைதான் காணப்படுகிறது.
அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குள்பட்டோரே அதிகம். ஒரு வயது குழந்தைக்குக்கூட மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் உணர்த்துகின்றன.
மன நோய் உள்ளவர்கள் சமூகத்தின் ஓர் அங்கமாக உயிர் வாழ்வதற்கு உரிமை உண்டு. சமுதாயப் பராமரிப்பு மையங்கள், இடைக்காலத் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை அரசு அமைக்க வேண்டும்.
தற்கொலை என்பது குற்றச் செயல்பாடு அல்ல, தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு மனநலச் சிகிச்சை அளிக்க வேண்டும். மனித உரிமை சார்ந்த அணுகுமுறையை புதிய மனநலச் சட்டம் மேற்கொண்டுள்ளது.
மனநல நோயாளிகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் மின்சார அதிர்ச்சி சிகிச்சை அளிப்பது, சங்கிலியால் பிணைத்தல், தலையை மொட்டை அடித்தல் போன்ற மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் புதிய மனநலச் சட்டம் தடை விதிக்கிறது. அங்கீகாரமற்ற மனநலச் சேவை மையம் நடத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
தனி நபருக்கான சிகிச்சையை, அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
1992-ஆம் ஆண்டு முதல் உலக மனநல மருத்துவக் கூட்டமைப்பின் சார்பில், அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாண்புடன் மனநலம் காப்போம் (Dignity in Mental Health) என்பது 2015-ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் மையக் கருத்தாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மனநலம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். மனநலப் பாதிப்பும் உடல் நலப் பாதிப்பைப் போலத்தான். மதுவோ, போதைப் பொருளோ மனக் கவலைக்கு ஏற்ற மருந்தாகாது. எனவே, அவற்றைத் தவிர்ப்போம். மற்றவர்களுடன் பேசி மகிழுவோம்.
மனம் வெறுமையாக இருப்பதுபோல் இருந்தால் மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளில் இறங்குவோம். திரைப்படம், விளையாட்டு, உடற்பயிற்சி, இசை, புத்தகம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுவோம். தனிமையைத் தவிர்த்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.
பொதுவாக, மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. மனநலம் பாதித்த ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவையானது அவரை எந்த நிலையிலும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பனே என உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு கூறுகிறார்.
ஆரம்பக் கட்டத்திலேயே மனநலச் சேவை கிடைக்கப் பெற்றால் பெரும்பாலானவர்களுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும். நோய் வந்தபின் தடுக்காமல் வருமுன் காப்பதே சிறந்தது.
இன்று உலக மனநல தினம்.




Saturday, October 10, 2015

Govt move earns 74 unclaimed MBBS seats for Tamil Nadu students..TOI

CHENNAI: A smart move by Tamil Nadu government has not only prevented 74 MBBS seats lying unclaimed in All India Quota going waste, but also ensured that all of them were allotted to students from Tamil Nadu by the state government.

This windfall of more than 70 seats came Tamil Nadu's way, after the Centre's director-general of health services failed to complete online counselling for seats under its disposal, and Medical Council of India (MCI) published a list of surrendered seats under the All India Quota on September 1.

All states and colleges are supposed to earmark 15% of their sanctioned strength for All India Quota, to be allowed by DGHS on the basis of All India Pre-Medical Test (AIPMT) conducted by CBSE. If any of these All India Quota seats are not filled in three counselling sessions as laid down by the Supreme Court, they would be considered as surrendered/leftover seats and the state government concerned would be free to allot to its own students.

This year, however, after noticing that more than 70 seats are lying unallotted in All India Quota pool, Tamil Nadu government moved the Supreme Court and obtained an order granting one week to hold counselling and allot these seats. Hours before allotments were done on October 4 and 5, a single judge allowed a petition filed by a candidate who had secured 12,485th rank in the AIPMT and directed state authorities to fill the seats on the basis of merit list prepared by CBSE for All India Quota.

Health secretary and selection committee of directorate of medical education then filed the present appeal. Advocate-general of Tamil Nadu submitted that the singe judge erred in passing the impugned order, as it would not be possible for the state to take up the CBSE list and grant admission, as students were from different states and their reservation status was not in public domain. Also, the petitioner-candidate ranked 12,485 in AIPMT was at least 7,717 ranks below the last person allotted MBBS seats in Tamil Nadu.

On Wednesday, a division bench of Justice Satish K Agnihotri and Justice K K Sasidharan allowed the state appeal, saying, "the state of Tamil Nadu moved the Supreme Court to extend the deadline for completing the admission process by filling the seats surrendered by DGHC. The Supreme Court granted permission to complete the process. The state is, therefore, entitled to make admission from the state list and fill the vacant seats."

Though it is the prerogative of DGHS to conduct online counselling before the last date of September 30 and fill the seats, no such exercise was conducted, the judges said. "Since no such allotment was made before the cutoff date prescribed for completing admission, Tamil Nadu moved the Supreme Court to extend the deadline," the judges said, setting aside the single judge order and permitting the state government to fill the surrendered All India Quota seats by October 7, as directed by the apex court.

"Tamil Nadu government's initiative in approaching the Supreme Court helped all states to utilize the unallotted left over seats of All India Quota to their own students. It also prevented several hundred seats from going waste," special government pleader (education) D Krishnakumar told TOI.

வாழை உற்பத்தியில், ‘‘உலகின் முதல் இடத்தில் தமிழ்நாடு’’

ஒரு ஒளிமயமான இடத்தை நோக்கி தமிழ்நாடு பயணிக்கும் மகிழ்ச்சியான செய்தி அனைவரின் காதிலும் தேன் வந்து பாய்வதுபோல இருக்கிறது. அதில் ஒன்றாக வாழை உற்பத்தி திகழ்கிறது. உலகிலேயே வாழை உற்பத்தியில் இந்தியாதான் முதல்இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2 கோடியே 91 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 90 லட்சம் டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வாழை சாகுபடி, விளைச்சல் அளவு, வாழை சாகுபடி பரப்பு போன்றவை உயர்ந்துகொண்டேயிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தேனி, திருச்சி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

பொதுவாக ‘‘வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்’’ என்பார்கள். ஆனால், கவனமாக விவசாய பணிகளை கவனித்தால் வாழை வாழத்தான் வைக்கும், தாழவிடாது என்பதுதான் இப்போதைய விவசாயிகளின் எண்ணமாகும். மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத்துறைகள் தமிழ்நாட்டு வாழைசாகுபடியில் இன்னும் தீவிர கவனம் செலுத்தினால், உலகிலேயே வாழை உற்பத்தியில் முதல்இடத்துக்கு அடுத்து சில ஆண்டுகளில் தமிழ்நாட்டை கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக வாழை சாகுபடி என்று நினைத்தாலே தட்பவெப்ப நிலையோடு, தண்ணீர் வசதி அதிகமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் விவசாயிகளுக்கு இருக்கிறது. ஆனால், இருக்கும் சொற்ப நீரைக்கொண்டு சொட்டு நீர் பாசனம், இயற்கை வேளாண்மை முறைகள், வித்தியாசமான அதிக விளைச்சல் தரும் ரகங்கள் சாகுபடி, இஸ்ரேல் நாட்டில் பயன்படுத்தும் வேளாண்முறைகள், வாழை சாகுபடிக்கு தேவையான நிதி உதவி போன்றவற்றை அளித்தால், தமிழ்நாட்டில் வாழை உற்பத்தி அபரிமிதமாக பெருகும் என்கிறார், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பரசுராமன்.

வாழையில் அறுவடைக்கு பின்பு ஏற்படும் இழப்புதான் தமிழ்நாட்டில் 40 சதவீதமாக இருக்கிறது. சீக்கிரம் அழுகும் பொருளான வாழையை ஒரே சீராக பழுக்கவைக்கும் வசதிகளும், குளிர்சாதன கிடங்குகளும் சாகுபடி செய்யும் இடங்களின் அருகாமையில் அமைக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி அதிகம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 150 கண்டெய்னர்கள் மூலமாகத்தான் வாழை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் 500 கண்டெய்னர்களுக்கு மேல் ஏற்றுமதி நடந்துவிட்டது. வாழையைப் பொறுத்தமட்டில் பழங்கள் மட்டுமல்ல, அதில் உள்ள எதையுமே தூக்கிப்போட்டுவிடமுடியாது. இலை, தண்டு, பூ, நார் என்று ஒவ்வொரு பாகத்துக்கும் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில்தான் வாழையில் பல ரகங்கள் இருக்கின்றன. நாட்டுப்பழம், மோரீஸ், மலைப்பழம், கசலி, நேந்திரம், கற்பூரவல்லி, மொந்தான், பூவன், பேயன், ரஸ்தாளி, செவ்வாழை என்று வாழைப்பழங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலும், பழமாக மட்டுமல்லாமல், அதைக்கொண்டு ஜூஸ், ஒயின், அல்வா, மில்க்ஷேக், சாக்லெட், ஐஸ்கிரீம் என்று பல பொருட்களை தயாரிக்க முடியும். எனவே, வாழை சாகுபடியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பதப்படுத்துவதற்கான வசதி, ஏற்றுமதி செய்வதற்கான வசதி, உபபொருட்களை தயாரிப்பதற்கான வசதிகளை உருவாக்க இதை ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுத்த மத்திய அரசாங்கம் உதவவேண்டும். அதை மாநில அரசு வலியுறுத்தவேண்டும்.
http://www.dailythanthi.com/Thalayangam

Friday, October 9, 2015

தேசிய பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்க்கும்: மோடிக்கு முதல்வர் கடிதம்



தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்க்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஏற்கனவே மத்திய அரசு அறிமுகப்படுத்த முயன்றது. அப்போது தமிழக அரசு அதை கடுமையாக எதிர்த்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் அறிவிப்பை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அப்போதைய பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

கடந்தாண்டு ஜூன் 3-ம் தேதி தங்களை நான் சந்தித்து அளித்த மனுவிலும் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில், தற்போது பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தமிழக மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே வெளிப்படையான கொள்கை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருந்த போது நகர்ப்புற வசதிபடைத்த மாணவர்களுக்கே சாதகமாக இருந்தது. கிராமப்புற மற்றும் எழை மாணவர்களால் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை.

இதை கவனத்துடன் பரிசீலித்த தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. இதனால். கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

முதுநிலை மருத்துவ படிப்புகளை பொறுத்தவரை, மாணவர் சேர்க்கையின் போது, கிராமங்களில் குறிப்பாக மலை மற்றும் பழங்குடியின பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதுதவிர, தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் முடிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி, மருத்துவ நிபுணர்கள் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழக அரசின் மாணவர்கள் சேர்க்கை கொள்கை மற்றும் சமூக -பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளையும் செல்லாததாக்கிவிடும்.

எனவே எங்கள் கடும் எதிர்ப்பையும் தாண்டி, தேசிய நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த முயற்சித்தால், அதை தடுக்க தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கும்.

தமிழகம் சார்பில் மத்திய அரசின் மறுபரிசீலனை மனுவிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்.

எனவே தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்துவது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதுடன், மருத்துவ கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை கொள்கையையும் பாதிக்கும் என்பதால் தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு


கோப்புப் படம்


தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் கன மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை மட்டுமே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...